ஐவர் – தமிழின் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள்
நாவலில் அல்புனைவுத் தன்மைகள் அதிகம் உள்ளன. டிவிட்டர் நாவல் வந்து விட்டது. சென்ற வருட புக்கர் பரிசை வென்றது முழு உருவக நாவல். யுத்திகளில் பல மாறுதல்கள் செய்து நூல்கள் வருகின்றன. போரா சுங் அபத்தவியலை மையமாகக் கொண்ட சிறுகதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டார். ரெபெக்கா யாரோஸ் காதல்கதையையும் பான்டஸியையும் இணைத்து Romantasy என்ற புதுவகைமையை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார். நம்மைச் சுற்றி ஏராளமான மாறுதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.