காதலெனும் திசைமானி
சிவதனுசு
உடைபட்டது.
மழையில் கண்ணீர்த்துளியாய்
நின்று இசைத்துக்கொண்டிருந்தான்.
ஆம்
கேள்விகளை நோக்கி
பாடலாகப் பெருகுகிறான் அவன்
பழி பாவங்களை நோக்கி
சிறு புன்னகையாய் பெருகுகிறான் அவன்
கண்ணீரை நோக்கி
கண்ணீராகவே பெருகுகிறான் அவன்.
பேதையாய் ஆகி நிற்பவளே
காதலின் அழைப்புகள்
ஆழங்களில் பிறக்கிறது