Reading view

 உயிர்வளி

கையில் வைத்திருந்த ரெக்ஸின் பையின் ஜிப்பை திறந்தபடி “அப்ப நீங்க என்னை வேத்து மனுஷனாத்தான் பாக்கறீங்களா? என்கிட்டே பணம் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லறீங்க, எங்கியோ காட்டுல உழவுமாடு மாதிரி வேலை செய்துக்கிட்டிருந்தவனுக்கு நீங்க தான் கூடவே தங்கவைச்சு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுத்தீங்க, அந்தக் கடனை நான் எப்படி தீர்க்கறது?
  •  

விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம்

தெற்கு மெக்சிகோவின் யுகடான் (Yucatan)  தீபகற்பத்தின் மையத்தில், அடர்ந்த காடுகள் பழங்கால நாகரிகங்களின் ரகசியங்களை கிசுகிசுக்கின்றன. அங்கே ஒரு நவீன தேடல் உருவாகிக் கொண்டிருந்தது. Louis May Ku என்ற கலைஞர், மாயா ப்ளூ எனப்படும் புதிரான ஒரு வண்ணத்தின் மர்மத்தால் ஈர்க்கப்படுகிறார். காலத்தையும், வானிலையையும், இன்றைய வேதியியலையும் வென்று இன்றும் நிலைத்திருக்கும் இவ்வண்ணம், மாயா நாகரீகத்தின் சுவரோவியங்கள், பானைகள் மற்றும் புனித பொருட்களில் பளபளப்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய அறிவு வரலாற்றில் தொலைந்து போயிருந்தது.
  •  

முஷ்ட்டி மாலிஷ்

ரத்தி பாய்க்கு வாக்குச்சாவடிக்கு போக வேண்டும். புதிய மந்திரி அவளுடைய ஜாதிக்காரன். இப்போது அவளுடைய கடன் வட்டியோடு அடைக்கப்பட்டுவிடும். கங்கா பாயும் சந்தோஷமாக அவருடைய கிராமத்தில் நெல் அறுவடை செய்து புடைத்துக் கொண்டிருப்பாள். தயவு செய்து மயக்கத்தாலான இந்த போர்வையை என் மேலிருந்து அகற்றி விடுங்கள்.
  •  

நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்

நுண்ணுயிரிகளின் வாழ்க்கை மற்றும் மருத்துவத்தில் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய நமது புரிதலை இந்த மூன்று முன்னோடி நுண்ணுயிரியலாளர்களின் பங்களிப்புகள் வெகுவாக மாற்றியமைத்தன.  பாக்டீரியோ பேஜ்களின் ஆரம்பகால கண்டுபிடிப்பு முதல் நுண்ணுயிரெதிர்ப்பி-எதிர்ப்பு நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் நவீன பயன்பாடு வரை, இம்மூவரின் பணி புதிய தலைமுறை அறிவியலாளர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. 
  •  

ஆதித்ய ஸ்ரீநிவாஸ் கவிதைகள்

அன்னையே மீண்டும் உன்னிடம் கையேந்தி நிற்கிறேன் ஓவியமாய் விரிந்துள்ள இரவும் பகலும்தான் எத்தனை எத்தனை அழகு கபாலத்தில் படிந்த தடித்த கசடுகள் அகமெல்லாம் நிரம்பிவிட்டுள்ளது சுடரேற்றும் வளைக்கரங்கள் விரித்தெடுக்கிறது கடலெங்கும் பெருவானமொன்றை ஏனோ கட்டங்கள் சதுரங்கள் வரைவதில் என் இசையின் காலங்கள் கழிகிறது.
  •  

தெப்பம்

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தினுசில் கொலு வைக்கப்படும். சில பொம்மைகள் எல்லா வீடுகளிலும் இடம்பெறும் என்றாலும், ஏதோவொரு விதத்தில் அவைகள் வேறுபடும். மாக்கல், மரச்சொப்பு, பீங்கான், ரோஸ்வுட் என்று விதம்விதமான சொப்புகள் கணேசன் வீட்டில் இடம்பெறும். ராகவையங்கார் வீட்டின் பெரியகூடம் அவர்களது பொம்மைகளுக்குக் காணாது என்றால் லலிதாம்பா மாமி வீட்டின் கொலு சிறியதாக இருந்தாலும், காரமான சுண்டல் பெருங்கூட்டத்தை ஈர்க்கும்
  •  

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

பிஸ்மில்லா கான் தனது வாரணாசி வேர்களுடன் ஆழமான பிணைப்பை வைத்திருந்தார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் உட்பட, வெளிநாடுகளில் தங்குவதற்கான பல அழைப்புகள் அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, "கங்கை அமெரிக்காவில் பாய முடியுமா?" என்று கேட்டுப் பதிலளித்தார். இந்த வார்த்தைகள் அவரது பிறந்த இடம் மற்றும் புனித நகரமான வாரணாசியின் கலாச்சார பாரம்பரியத்திற்கான அவரின் நிலையான பக்தியை வெளிப்படுத்தின. எவ்வளவு உயர்ந்த புகழைப் பெற்றாலும், அவரது இசையின் ஆழமும், மனதின் நிலைத்தன்மையும் வாரணாசியோடு இணைந்தே இருந்தன.
  •  

துகள் வாழ்வுக்குள் மாய உச்சி

மிகப் பெரிய எழுத்தாளர்கள் கூட, பல சமயம் இசையைக் களமாகக் கொண்டு எழுதும் போது அடிப்படை புரிதல் கூட இல்லாமல், தங்கள் கற்பனைகளை மட்டுமே முதலாகக் கொண்டு கதைகள் புனைவதை நிறையவே பார்க்கலாம். அந்தக் கற்பனைகளை இசை தெரிந்தவர்கள் படித்தால் நகைப்பே மிஞ்சும். இன்னும் சில கதைகளில் எதற்கு வம்பென்று இசை நுணுக்கங்கள் பக்கமே செல்லாமல் கதை நகரும். சுரேஷின் ஆழ்ந்த இசை ஈடுபாட்டால், இத்தகு குறைகள் இல்லாமல் நாவலொன்றைப் படிப்பதே பெரும் ஆசுவாசத்தைக் கொடுத்தது.
  •  

வாங்-ஃபோவின் மீட்சி

விடியலைத் தன் சக்தியாகக் கொண்டிருந்த, மாலை வெளிச்சத்தைக் கைப்பற்றத் தெரிந்திருந்த அந்த முதியவரின் பக்கத்தில் நடப்பதற்கு லிங் பிறந்திருக்கவில்லை. அவன் தந்தை தங்க வியாபாரி; தாய், மரகத வியாபாரியின் ஒரே மகள். அவள் ஆண் குழந்தையாகப் பிறக்காததற்காக அவளது தந்தை சபித்துவிட்டு தன்னுடைய சொத்துக்களையும் உரிமைகளையும் அவளுக்கே விட்டுச் சென்றிருந்தார்.
  •  

புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.)

சுய மேற்பார்வை கற்றல்' இன்றைய நிலையில் நன்றாகத்தான் வேலை செய்கிறது - ஆனால் ஒன்றே ஒன்று மட்டும்தான் அவற்றிற்குப் புரிகிறது: வார்த்தைகள் கொண்ட கோப்பை முழுமையாக விளக்கிச் சொல்லி, விலாவாரியாக வக்கணையாகக் கேள்வி கேட்டால் ஏதோ சொன்னதை ஓரளவப் புரிந்து பதிலளிக்கும். அல்லது ஒரேயொரு அசையா புகைப்படத்தைக் காட்டினால் அந்தப் படத்தை ஏதோ புரிந்து கொள்ளும்.
  •  

விளக்கேற்றுபவன்

அந்த நேரத்தில் முற்றத்தில் சிவராசனின் சைக்கிளைக் காணமுடியாது. அவர் வேளைக்கே, அப்பா எழும்புவதற்கு முன்னராக எழுந்து, பின் வளவிற்குள் இருக்கும் இரண்டு மாமரங்களிலும் கொப்புகளை உலுப்பி மாங்காய்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுவார். முத்தலும் பிஞ்சும் என்று அங்கே ஒன்றும் இருக்காது. பின் வளவைப் போய்ப் பார்த்தால் மாமரக் கொப்புகள் முறிந்து காணப்படும்.
  •