இந்தக் கண்களா ? மனம் வேறெங்கோ இருந்தால், கண்ணில் படுபவை அனைத்தையும் நாம் பார்ப்பதில்லையே. அப்போது மனமா ? மனம் பார்க்கிறது அல்லது பார்க்கவில்லை என்பது நமக்குத் தெரிகிறதே. அப்போது வேறொரு ஆற்றல் இந்த மனதையும் கவனிக்கிறது
இந்த நினைவு என்பது விசித்திரமானது. மாறிக்கொண்டே இருப்பது. யாருக்குமே தன்னுடைய முகத்தை பிசகின்றி நினைவு படுத்திக் கொள்ள முடியாது. அது தவிர ஒருவரோடு பழகியவர்கள் நினைவில் அவர் இருப்பதற்கும், அவரை சந்திக்காதவர்கள் நினைப்பில் அவர் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.