முதல்வினா- அனங்கன்
இந்தியர்களாகிய நம்மில் ‘வேதம்’ என்ற சொல்லை கேள்விப்படாதவர்கள் மிகச் சிறிய அளவில் தான் இருப்பார்கள். நேர்நிலையாகவோ எதிர்நிலையாகவோ வேதம் என்பதை அறிகிறவர்கள் எவ்வளவு பேர் அதை மேலும் அறிய முற்பட்டிருப்பார்கள் என்று தெரியாது. சொற்பொழிவுகள் அறைகுறை தத்துவ நூல்கள் மூலம் அறிபவர்கள் வேதங்கள் முக்திக்கான வழிமுறை மற்றும் நல்லொழுக்கங்கள் ஆகியவற்றால் ஆனது என்று நினைக்கிறார்கள். ஒருமுறை எனது நண்பர் வேதத்தில் முக்தியை பற்றி என்ன சொல்லிருக்கிறது என்று கேட்டார். வேதங்கள் {முக்தி} விடுதலையைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னேன். அவரால் அதை நம்பமுடியவில்லை. நீங்கள் இன்னும் ஆழ்ந்து வாசித்துப்பாருங்கள் எங்காவது சொல்லப்பட்டிருக்கும். வேதத்தில் சொல்லப்படாத கருத்து எவ்வாறு இத்தனை பெரிய அளவில் வளர்ந்திருக்க முடியும் என்று வாதிட்டார். இதே எண்ணம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் வேதம் சொல்வது அவற்றை அல்ல.