திசை காட்டும் நட்சத்திரங்கள் வழி தவறச் செய்துவிட்டதால்
வதைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஜீவன்களின்
குருதியாலும் கண்ணீராலும் நிரம்பி
அலையடிக்கும் இச் செங்கடலுக்குள்
எப்போதும் போல இக் கணத்திலும்
மிகச் சாதுவாகவே நகர்கின்றன பெருந்திமிங்கிலங்கள்