Reading view

சொல்வனம் கவிதைகள் சிறப்பிதழ்

நுண்ணுணர்வும் கற்பனை விரிவும் உள்ள இலக்கியவாசகர்கள் எப்போதுமே பற்றிக்கொள்ளக் காத்திருக்கும் சருகு போன்றவர்கள். அப்படி சிலரையேனும் இந்த இதழின் கவிதைகள் ஈர்த்தால், அதன் வாயிலாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் அவர்கள் தொடர்ந்து பயணிக்கும் வாய்ப்பு அமைந்தால் சொல்வனத்தின் இந்த முயற்சி சிறு பலனை எட்டியது என்று கொள்ளலாம். இது இரு இதழ்களால் மட்டுமே சாத்தியமாகக்கூடுவதல்ல, தொடர் முயற்சிகள் வாயிலாகவே அடையக்கூடுவது.
  •  

கரானா – மறையும் சுவடுகள் – ஹிந்துஸ்தானி இசை உலகம்

சிறுவனான சந்திரகாந்தின் பயிற்சியிலிருந்து கதை முஸ்தபாவின் நாட்குறிப்புக்குள் சென்று சேரும் இடம் கரானாவின் வரலாற்றை சொல்லத் தொடங்கும் இடம். ஜாபர் கான் என்பவர் யார்? அவரது இசையின் தொடக்கம் என்ன எனும் கேள்விகளிலிருந்து கரானாவின் ஆரம்ப காலங்களுக்குள் கதை செல்கிறது. சுதந்திரத்துக்கு முன்னான காலத்தில் அமைந்திருப்பதால் வரலாற்றின் சிறு பின்னல்களும் கதையினூடாகச் சொல்லப்படுகிறது. நம் கவனத்தைச் சிதறடிக்கக்கூடிய வகையில் வரலாற்றுப் பாடம் இல்லை. அது இந்த நாவலின் வேகத்துக்கு உதவியிருக்கிறது என்றாலும் நாவலின் பலகீனமும் இதுதான். பல தலைமுறைகளின் கதையைச் சொல்ல முற்படும்போது நாம் கால மாற்றத்தையும், மனிதர்களின் எழுச்சி வீழ்ச்சிகளை மட்டும் எதிர்பார்ப்பதில்லை.
  •  

பாட்ரிசியா  கவாலி கவிதைகள்

இழக்கப்பட்டது திருப்பியளிக்கப்பட்டு விட்டது எனக்கு தொலைவாயுள்ளது எனக்கருகில் உள்ளது இன்று. இங்கிருக்கிறாயா நீ, எப்படி இருந்தாலும் நீ, எனக்கு பொருட்டல்ல இன்று. இன்று சப்தங்களின் பொங்கும் சுருள்களைத் தணிவித்துக் கலந்திடும் இனிமையான கவிகை மாடத்திற்குள் பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
  •  

தமிழ்க் கவிதை சில குறிப்புகள்

வீரை வெளியனாரின் புறநானூற்றுக் கவிதையில் வேட்டுவப் பெண் ஒருத்தியின் நடைத் தயக்கம் நுட்பமாகப் பதிவாகியிருக்கிறது. முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பிணைந்த பந்தலின் கீழ், யானை வேட்டுவன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான், அருகே பெண்மானைத் தழுவி விளையாடி அயர்ந்திருக்கிறது ஆண்மான். அவற்றின் புணர்ச்சி நிலையைக் கண்ட வேட்டுவன் மனைவி, தன் கணவன் உறக்கம் நீங்கி எழக் கூடும் என்று அஞ்சியும், கலைமான் பிணைமானை விட்டு அகன்று விடும் என்று அஞ்சியும் மனையிடத்தே நடமாடாமல் ஒதுங்கி நிற்கிறாள்
  •  

ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்

மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில் மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில் பறவையின் பாடல் இசையை சொல்லுகையில் வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்

💾

💾

💾

  •  

இஸுரு சாமர சோமவீர கவிதைகள்

உடைந்த சிறகுடைய பளிங்கு வெண்மை நிறம் மங்கிய தேவ தூதனாகிறேன் தெய்வங்களே மறந்து போன வெப்பவலயத் தோட்டமொன்றில்
  •  

இரண்டாம் அடுக்கு பிழைத்தல் விதிகள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழலைக் கணக்கில் கொண்டால், அந்தக் காலத்தின் குரங்குகளுக்கு, இன்றிருக்கும் மனித இனம் என்பது இந்த A2B கூண்டில் உள்ள எலிகள் போலத்தான். இல்லையா? இன்று இருக்கும் மனிதனை, அந்தக் குரங்குகள் எதிர்கொண்டிருந்தால், மனித இனம் இனவிருத்திக்கான வாய்ப்பின்றி அழிந்து போயிருக்கும், இல்லையா? ஒருவகையில், மனித இனத்தின் ஆண்களை புத்திசாலிகள் எனலாம். செயற்கையாகக் கருத்தரிக்கும் இடத்திற்கு  நகரும் வரை, அக்காலக் குரங்குகளுடன் இணைந்து பல்கிப் பெறுகி பொறுத்திருந்ததை,  வேறெப்படித்தான் சொல்வது? இப்படி யோசித்துப் பார்.
  •  

கண்ணீரில் சிரித்து வாழ்தல்

நகைச்சுவைக்காக மட்டுமே படைக்கப்படாத படைப்புகளில், நகைச்சுவை என்பது ஒரு கம்பீரமான விருந்தில் அழைப்பில்லாமல் நுழையும் விருந்தாளியைப் போன்றது - ஓரளவு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அது ஒரு வகையில் அவசியமானதாகவே இருக்கிறது. இது ஒரு பதற்றமான சூழலில் ஒரு பாத்திரம் நேரம் காலம் புரியாமல் வைக்கும் சங்கடமான குறிப்பாகவோ, அல்லது கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் சூழ்நிலையின் நகைமுரணாகவோ இருக்கலாம்
  •  

மெய்கண்டவன்

மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
  •  

சமூக உணர்ச்சிக் கற்றல்

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது ஆடை, கேளிக்கைகள், விளையாட்டு, உணவு இரசனை சார்ந்தது மட்டும் அல்ல. நாம் கற்கும் முறைகளில் கூட மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கற்கும் முறை, என்ன கற்கிறோம், எதைக் கற்கிறோம், எப்போது கற்கிறோம் என்பது தொடங்கி எல்லாவற்றிலுமே மாறுதல்கள். அதிலும் இப்போது பள்ளியில் படிக்கிற குழந்தைகளின் மனதில் அரசு இயந்திரங்களால் உருவான அச்சமும் நிலவுகிறது.
  •  

சகுனம்

எனக்கு முன்னால், நடைபாதையில்,ஓர் இளம் ஜோடி. அந்த இளைஞன் பேசிக் கொண்டிருந்தான். அவன் நல்ல உயரம். அவளுடைய நீண்ட கழுத்து.. வட்டமான கழுத்து, அவன் உதடுகளால் அதை எட்ட முடியவில்லை. அவன் என்ன சொல்கிறானென்று அவள் கவனிக்கவில்லை. பஸ் இன்னும் கொஞ்சம் முன்னால் நின்றிருக்கலாம். அவர்களால் இன்னும் கொஞ்சம் இந்தப் பக்கம் நகர்ந்திருக்க முடியும். அப்படியிருந்திருந்தால், அவன் என்ன பேசினான் என்பதை நானும் கேட்டிருக்க முடியும்
  •  

வ. அதியமான் கவிதைகள்

உன்னிடம் இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன என்னிடமும் இரண்டு உள்ளங்கைகள் இருக்கின்றன குறுக்கும் நெடுக்குமாய் கோர்த்து உயர தூக்கிப் பிடித்திருக்கும் நான்கு உள்ளங்கைகள் போதாதா?
  •  

ஊழிப் பெருவெள்ளம்  

ஒரு கட்டத்தில் எங்களுக்கு இந்த இரவே கடைசி என்றுதான் தோன்றியது. மழை நின்றுவிட்டபோதும் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் நின்றுகொணடிருந்த தண்ணீர்த் தொட்டி இப்போது பாதிக்குமேல் மூழ்கியிருந்தது. “நாம செத்துடுவமா சுகு” என்று கேட்டு கார்த்திக் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு திடீரென்று என் தோள்களைப் பற்றிக்கொண்டுக் குலுங்கி அழுதான்
  •  

குறிச்சொற்களின்* கவிதைகள்

ஒரு அனுப்பப்படாத செய்தியில் வரப் போகும் அந்தப் புதுப் பிரபஞ்சம் நிலவுகள் அதன் வரைவு நகல்கள் கருந்துளைகள் ரத்து செய்யும் மாற்றங்கள் மட்டும் எப்போதும் மாறுவதில்லை
  •  

முகம் அலம்பும் பூனை

மறுநாள் ஞயிற்றுக்கிழமை என்றாலும் கூட அதிகாலையிலயே எழுந்து பூனைக்கு முன்னால் பற்பொடியை தட்டி ஒரு பேப்பரில் வைத்துவிட்டு மூவரும் அமர்ந்திருந்தோம். பூனை பேப்பரில் வெள்ளையாக இருந்த பற்பொடியை எதோ உணவுப்பொருள் என்று நினைத்து மோந்து பார்த்துவிட்டு நெல் மூட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்து கொண்டது. “பூனை நம்மளப் பார்த்து பயப்படுது.” என்றான் பெரிய அண்ணன். அவன் அவ்வாறு சொன்னதும் எல்லாரும் மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தோம். ஒன்பது மணி ஆகியும் பூனை பல் துலக்கவே இல்லை. நெல் முட்டைகளுக்கு இடையில் சென்று ஒழிந்துகொண்டு வெளியே வரவும் இல்லை.
  •  

ஒளியும் விழியும்

ஆழ்ந்த உறக்கத்தில் சங்கினுள் அடங்கும் கடலைப் போல நிலவினுள் சுருண்டு விழிக்கிறேன். உடைந்த கண்ணாடிச் சில்லென, நிலவை மனதில் அளக்கிறேன்.
  •  

செ.புனிதஜோதி கவிதைகள்

வழிநெடுங்கிலும் காயங்கள் ..,. காயங்கள் மீது மின்மினியென பறந்து கொண்டிருக்கின்றன… நிறைவேறிய நிறைவேறா பல கனவுகள்….
  •  

செல்வசங்கரன் கவிதைகள்

ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கிளம்பிக் கொண்டிருக்க மலையே இறங்கி வந்து கைகளில் என்னை ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட எதுவும் மாறாதென்று தோன்றியது
  •  

ந.சிவநேசன் கவிதைகள்

நல்லவனாக மாறும் கெட்டவனின் சாகசம் நல்லவனாக இருந்து நல்லவனாக மடிபவனின் வாளை விடவும் கூர்மையாயிருக்கிறது
  •