Reading view

இராஜகுமாரனின் மன விசாரங்கள்

தந்தைக்குரிய பொறுப்புகளுடன் அவனுக்கு கல்வி கற்கவும், மற்றும் தேவைகளையும்  கவனித்துச் செய்தார்.  என் தாய் அவனுக்கு அதே போலத் தானே தாயாக இருந்து வருகிறாள். நாங்கள் அனைவரும் சகோதரர்கள் தானே, ஏன் இந்த முடிவு? அரச குலமே ஒரு நல்ல மகனை இழந்து விட்டதே.   ஏன் இப்படி செய்தான்?  அப்படி என்ன துக்கம் அல்லது கவலை?  தலை கனம் தாங்க முடியாமல் இந்த கேள்விகளால் தவித்த ஹர்ஷன், ராஜ பவனத்துக்கு போகாமல் அங்கேயே அமர்ந்து விட்டான்
  •  

ஹர்ஷ சரித்திரம்

ராஜ்யஸ்ரீ  தன் தோழிகளுடன் மணமகளுக்கான அலங்காரங்களுடன் தயாராக நின்றாள்.  சந்த்யா கால சிவப்பை ஒத்த தலையை மூடியிருந்த குங்கட்- முகத்திரை.  எதையும் குறிப்பாக பார்க்காமல், சற்றே தலை குனிந்து இருந்தவளை மணமகன் நெருங்கினான். வெட்கம் அவள் முகத்தின் அழகை தூக்கி காட்டியது. சந்தனத்தால் செய்த கொடி போன்ற உடல், சௌந்தர்யமே உருவாகி வந்தவள் போல, உவமைகளுக்கு அப்பால் நின்றவளாக, வசந்த ஹ்ருதயம் – மன்மதனின் சகா வசந்தன் – அவன் முன்னால் வந்து மன்மதனுக்கு உதவி செய்வதாக செய்தி- அவன் தானே வந்து மேற்பார்வையிடுவது போல இருந்ததாம்.
  •  

தகுதியின்றியும் ஒரு சிலர் ராஜ பதவிகளுக்கு வந்து விடுகிறார்கள்

அதன் பின் ஜ்யேஷ்டா  ஆடி மாத க்ருத்திகா நக்ஷத்திரத்தில், பஹுல பக்ஷ ( தேய் பிறை) துவாதசி திதி முடியவும், ப்ரதோஷம் ஆரம்பித்து விட்ட நிலையில், இரவின் ஆரம்பத்தில்,  திடுமென அந்த:புரத்தில் கோலாஹலமான சப்தம் எழுந்தது.  பரபரப்புடன் யசோவதியின் நெருங்கிய தாத்ரி, சுபாத்ரீ என்ற பெயருடையவள், அரசனிடம் வந்து வணங்கி, ‘தேவ! அதிர்ஷ்ட வசமாக, உங்கள் இளைய மகன் பிறந்து நலமாக  இருக்கிறான்’ என்றாள். செய்தி சொன்ன அவளுக்கு அரசன் பலவிதமாக பரிசுப் பொருட்கள் கொடுத்தான்.
  •