Reading view

சட்டநாதக் கரையாளர்: திருச்சி ஜெயில்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். இந்தியா போவதே ததிங்கிணத்தோம் ஆகிவிட்டது, அதனால் வாங்க முடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் புத்தகங்களை வாங்கும் வித்தை இன்னும் கைவரவில்லை.

சித்ரா பாலசுப்ரமணியனின் ஒரு முகநூல் பதிவில் ஒரு புண்ணியவான் (பெயர் மறந்துவிட்டது!) இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது என்று சுட்டி கொடுத்திருந்தார். அவரும் சித்ராவும் வாழ்க!

கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தேசபக்தர். விடுதலைக்கு முன்பும் பின்பும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது. அவர் 1967-இல் இறந்துவிட்டதாகவும் படித்தேன், பிற்காலத்தில் அதிமுகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானதாகவும் படித்தேன். எது சரியோ தெரியவில்லை. ஒரு வேளை இரண்டு சட்டநாதக் கரையாளர்கள் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

கரையாளர் என்பது கோனார் ஜாதியில் ஒரு உட்பிரிவு என்று தோன்றுகிறது. இல்லை கோனார் ஜாதியில் புழங்கும் பெயராக மட்டும் இருக்கலாம்.

கரையாளர் 1910 வாக்கில் பிறந்திருக்கிறார். தென்காசிக்காரர். 1937-இல் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். பின்னாளில் செங்கோட்டை தமிழகத்தோடுதான் இருக்க வேண்டும் என்று போராடினாராம்.

புத்தகம் முதல் பக்கத்திலேயே களைகட்டுகிறது. 1937 தேர்தலில் இவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. ராஜாஜியுடன் 1936-இல் நேர்காணல். ராஜாஜி கேட்பதெல்லாம் சிறை செல்லத் தயாரா என்பதுதான். கரையாளரின் வார்த்தைகளில் – (சட்டசபை செல்வது) ஜெயிலுக்கு செல்வது முதல் படி!

1940 டிசம்பரில் சத்யாகிரகம். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்காத குறைதான். ஆறு மாத தண்டனை.

புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். பிரதானப் பகுதியாக இருப்பது சிறையில் இருந்த பிற அரசியல் கைதிகளின் கோட்டுச்சித்திரங்கள். கூட இருந்தவர்கள் பலரும் அன்றைய தமிழக காங்கிரஸ் பெரிய தலைகள். ராஜாஜி, சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீபிரகாசா, வி.வி. கிரி, பி.எஸ். குமாரசாமி ராஜா, சர்தார் வேதரத்தினம், அவினாசிலிங்கம் செட்டியார், தினமணி ஆசிரியராக இருந்த டி.எஸ். சொக்கலிங்கம், மட்டப்பாறை வெங்கடராமய்யர் என்று பலர்.

இவரை முதலில் வேலூர் சிறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அங்கே அப்போது என்.ஜி. ரங்கா, முத்துராமலிங்கத் தேவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி ஆஸ்பத்திரியில். சத்தியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு பூசணிக்காயை விட்டால் வேறு காய்கறியே கண்ணில் படாதா என்று அலுத்துக் கொள்வாராம்.

ஒரு பகுதியில் சிறையின் அன்றாட வாழ்க்கையை மிக சாதாரணமாக விவரிக்கிறார். உதாரணமாக கமான் செய்வது என்றால் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது. சில நாட்களிலேயே இவரை திருச்சி சிறைக்கு கமான் செய்துவிட்டார்கள். ராஜாஜி போன்று பல முறை சிறை சென்றவர்கள் கறுப்பு குல்லாய் என்று அழைக்கப்படுவார்களாம். இவர் கறுப்பு குல்லாய் அல்லர். திருச்சி சிறையில் இவரது எண் 154. யார் நம்பர் 1? ராஜாஜிதான்! ஸ்ரீனிவாசராவ் என்பவர் ஆர்க்காடு பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தவராம். பிரமாதமாக சமைப்பாராம். 1932-இல் அவர் சிறையில் இருந்தபோது நன்னடத்தைக்காக அவரது தண்டனை சில நாட்கள்  குறைக்கப்பட்டிருக்கிறது. பிற கைதிகளின் வேண்டுகோளால் குறைக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு அவர் பொங்கல் அன்று சமைத்துப் போட்டிருக்கிறார்! ஒரு முறை வி.வி. கிரியின் நாலு வயதுக் குழந்தை அவரை விட்டுப் போகமாட்டேன் என்று அழுதுகொண்டே சிறைக்குள்ளே வந்துவிட்டதாம்!

சுப்பராயனைப் பற்றிய விவரிப்பு அபாரம். சுப்பராயன் ஜமீந்தார். முதல் முறை சிறை. அவருக்கு சிறைக்கஷ்டமெல்லாம் அதிகமாகவே உணர்ந்தார், கோடைக்கு ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போய் வருபவர் திருச்சியின் உஷ்ணத்தை அதிகமாகவே உணர்ந்தார் என்கிறார். கிரிக்கெட்டில் பயங்கர ஈடுபாடாம். சிறையில் யாரோ ஒரு வானொலி பெட்டி வாங்கி கொடுத்திருக்கிறார்கள், ரஞ்சி கோப்பை பந்தயம் ஒன்றில் சென்னை அணி தோற்பதைக் கேட்டு கண்ணீர் விடாத குறையாம். சுப்பராயன்தான் இந்தப் புத்தகத்துக்கு முகவுரை எழுதி இருக்கிறார்.

அடுத்த பகுதியாக சிறையின் நடைமுறைகளை விவரிக்கிறார். தண்ணீர் கஷ்டம், யாரையும் சுலபத்தில் சந்திக்க முடியாத நிலை, பாம்புத் தொல்லை, மூட்டைப்பூச்சி தொந்தரவு (ராஜாஜி முன்னின்று மருந்து அடித்து இந்தத் தொல்லையைக் குறைத்திருக்கிறார்) என்று பலவும் மிக சாதாரணமாக விவரிக்கப்படுவது poignant ஆக இருக்கிறது.

புத்தகத்தில் பல தலைவர்களின் கோட்டுச்சித்திரங்கள் இருக்கின்றன. Charming! இந்தப் பதிவில் இருக்கும் கரையாளரின் புகைப்படமும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

சட்டநாதக் கரையாளர்: திருச்சி ஜெயில்

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். இந்தியா போவதே ததிங்கிணத்தோம் ஆகிவிட்டது, அதனால் வாங்க முடியவில்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டு தமிழ் புத்தகங்களை வாங்கும் வித்தை இன்னும் கைவரவில்லை.

சித்ரா பாலசுப்ரமணியனின் ஒரு முகநூல் பதிவில் ஒரு புண்ணியவான் (பெயர் மறந்துவிட்டது!) இந்தப் புத்தகம் இணையத்தில் கிடைக்கிறது என்று சுட்டி கொடுத்திருந்தார். அவரும் சித்ராவும் வாழ்க!

கரையாளர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தேசபக்தர். விடுதலைக்கு முன்பும் பின்பும் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இன்று அவர் பெயரில் ஒரு கல்லூரி நடக்கிறது. அவர் 1967-இல் இறந்துவிட்டதாகவும் படித்தேன், பிற்காலத்தில் அதிமுகவில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானதாகவும் படித்தேன். எது சரியோ தெரியவில்லை. ஒரு வேளை இரண்டு சட்டநாதக் கரையாளர்கள் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

கரையாளர் என்பது கோனார் ஜாதியில் ஒரு உட்பிரிவு என்று தோன்றுகிறது. இல்லை கோனார் ஜாதியில் புழங்கும் பெயராக மட்டும் இருக்கலாம்.

கரையாளர் 1910 வாக்கில் பிறந்திருக்கிறார். தென்காசிக்காரர். 1937-இல் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கிறார். பின்னாளில் செங்கோட்டை தமிழகத்தோடுதான் இருக்க வேண்டும் என்று போராடினாராம்.

புத்தகம் முதல் பக்கத்திலேயே களைகட்டுகிறது. 1937 தேர்தலில் இவர் நிற்க வாய்ப்பிருக்கிறது. ராஜாஜியுடன் 1936-இல் நேர்காணல். ராஜாஜி கேட்பதெல்லாம் சிறை செல்லத் தயாரா என்பதுதான். கரையாளரின் வார்த்தைகளில் – (சட்டசபை செல்வது) ஜெயிலுக்கு செல்வது முதல் படி!

1940 டிசம்பரில் சத்யாகிரகம். என்னை சிறையில் அடையுங்கள் என்று கேட்காத குறைதான். ஆறு மாத தண்டனை.

புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். பிரதானப் பகுதியாக இருப்பது சிறையில் இருந்த பிற அரசியல் கைதிகளின் கோட்டுச்சித்திரங்கள். கூட இருந்தவர்கள் பலரும் அன்றைய தமிழக காங்கிரஸ் பெரிய தலைகள். ராஜாஜி, சுப்பராயன், டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீபிரகாசா, வி.வி. கிரி, பி.எஸ். குமாரசாமி ராஜா, சர்தார் வேதரத்தினம், அவினாசிலிங்கம் செட்டியார், தினமணி ஆசிரியராக இருந்த டி.எஸ். சொக்கலிங்கம், மட்டப்பாறை வெங்கடராமய்யர் என்று பலர்.

இவரை முதலில் வேலூர் சிறைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். அங்கே அப்போது என்.ஜி. ரங்கா, முத்துராமலிங்கத் தேவர் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சத்தியமூர்த்தி ஆஸ்பத்திரியில். சத்தியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு பூசணிக்காயை விட்டால் வேறு காய்கறியே கண்ணில் படாதா என்று அலுத்துக் கொள்வாராம்.

ஒரு பகுதியில் சிறையின் அன்றாட வாழ்க்கையை மிக சாதாரணமாக விவரிக்கிறார். உதாரணமாக கமான் செய்வது என்றால் ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது. சில நாட்களிலேயே இவரை திருச்சி சிறைக்கு கமான் செய்துவிட்டார்கள். ராஜாஜி போன்று பல முறை சிறை சென்றவர்கள் கறுப்பு குல்லாய் என்று அழைக்கப்படுவார்களாம். இவர் கறுப்பு குல்லாய் அல்லர். திருச்சி சிறையில் இவரது எண் 154. யார் நம்பர் 1? ராஜாஜிதான்! ஸ்ரீனிவாசராவ் என்பவர் ஆர்க்காடு பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்தவராம். பிரமாதமாக சமைப்பாராம். 1932-இல் அவர் சிறையில் இருந்தபோது நன்னடத்தைக்காக அவரது தண்டனை சில நாட்கள்  குறைக்கப்பட்டிருக்கிறது. பிற கைதிகளின் வேண்டுகோளால் குறைக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு அவர் பொங்கல் அன்று சமைத்துப் போட்டிருக்கிறார்! ஒரு முறை வி.வி. கிரியின் நாலு வயதுக் குழந்தை அவரை விட்டுப் போகமாட்டேன் என்று அழுதுகொண்டே சிறைக்குள்ளே வந்துவிட்டதாம்!

சுப்பராயனைப் பற்றிய விவரிப்பு அபாரம். சுப்பராயன் ஜமீந்தார். முதல் முறை சிறை. அவருக்கு சிறைக்கஷ்டமெல்லாம் அதிகமாகவே உணர்ந்தார், கோடைக்கு ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் போய் வருபவர் திருச்சியின் உஷ்ணத்தை அதிகமாகவே உணர்ந்தார் என்கிறார். கிரிக்கெட்டில் பயங்கர ஈடுபாடாம். சிறையில் யாரோ ஒரு வானொலி பெட்டி வாங்கி கொடுத்திருக்கிறார்கள், ரஞ்சி கோப்பை பந்தயம் ஒன்றில் சென்னை அணி தோற்பதைக் கேட்டு கண்ணீர் விடாத குறையாம். சுப்பராயன்தான் இந்தப் புத்தகத்துக்கு முகவுரை எழுதி இருக்கிறார்.

அடுத்த பகுதியாக சிறையின் நடைமுறைகளை விவரிக்கிறார். தண்ணீர் கஷ்டம், யாரையும் சுலபத்தில் சந்திக்க முடியாத நிலை, பாம்புத் தொல்லை, மூட்டைப்பூச்சி தொந்தரவு (ராஜாஜி முன்னின்று மருந்து அடித்து இந்தத் தொல்லையைக் குறைத்திருக்கிறார்) என்று பலவும் மிக சாதாரணமாக விவரிக்கப்படுவது poignant ஆக இருக்கிறது.

புத்தகத்தில் பல தலைவர்களின் கோட்டுச்சித்திரங்கள் இருக்கின்றன. Charming! இந்தப் பதிவில் இருக்கும் கரையாளரின் புகைப்படமும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விடுதலைப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:

  •