ஏழு கவிதைகள் சொல்வனம் By:குமரேசன் கிருஷ்ணன் 11 May 2025 at 12:40 இரவு வானத்தில் தனித்துப் பறக்கிறது பறவை. வானம் தனித்திருக்கும் பறவை தனித்திருக்கும் தனித்திருக்கும் இரண்டின் சந்திப்பிலும் தனிமையிருக்கும் தனிமையின் கரங்களில் வானம் புகும் பறவை புகும் இங்கு யாவுமே உட்புகும்