அதிகாரத்தைக் கண்டும் விலக மறுக்கும் உண்மைகள் – இ.பா.சிந்தன்
1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்சில் லூமியர் சகோதரர்கள் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒரு காட்சியில் இரயில் வருவதைப் பார்த்து, பார்வையாளர்கள் அஞ்சி நடுங்கியதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதைக் காட்டியபோது, அவர்கள் திரையைத் தாண்டி வந்துவிடுவார்களோ என்று ஒருவிதக் குழப்பத்துடனே பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே காலகட்டத்தில் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்து ஒலிபரப்பத் தொடங்கியபோது, யாரோ நேரடியாகக் காற்று வழியாகத் தங்களுடன் பேசுவதாக மக்கள் நினைத்தனர். […]