Reading view

மணிப்பூர்: மனிதநேயத்தின் மரண ஓலம்

இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.

தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு.
இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள்.
மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர்.
18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான்.
இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது.
வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர்.




இந்திய பெருநிலத்தை இணைக்கும் காப்பியமான மகாபாரதத்தில், 'மணிபூரம்' பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. அர்ஜுனனின் தீர்த்தயாத்திரை பாதையில் மணிபுரம் பற்றியும், நாகர்களும் பற்றியும் வருகின்றது. அவன் நாகர்களின் இளவரசியை மணந்து பப்ருவாஹனன் எனும் பிள்ளை பிறப்பதும், அந்தப் பிள்ளை. தந்தையை கொல்வான் என்கிற விதி கொண்டவனாகவும் முன்கூட்டியே அறியப்படுகிறான். கிட்டத்தட்ட, கிரேக்க தொன்மத்தில் ஈடிபஸுக்கு வாய்த்த அதே தீர்க்கதரிசனம்தான்.

தொன்மங்களில் வரும் மணிபூரம் இன்றைய ஒடிஷாவில் இடம்பெறும் பகுதியா, அல்லது வடகிழக்கு பகுதியா என்கிற வரலாற்று சர்ச்சைகள் உண்டு.
இயற்கையாக அமைந்த லோக்தாக் நன்னீர் ஏரியும், இம்பால் நதியும், சிறு ஆறுகளும், கூப்ரு மலையும், குன்றுகளும் சூழ்ந்த பள்ளதாக்கு இன்றைய மேதி (Meitei) இன மக்களின் வாழ்விடம். மேதி மக்களின் தொன்மங்களில் கூப்ரு ஒரு முக்கிய கடவுள்.
மேதிக்களிடையே சனமாஹிஸம் எனும் நாட்டார் சமயமும் பிரபலமாக இருந்தது. கங்க்ளா கோட்டை கொண்டு ஒரு சாம்ராஜ்யமும் அமைத்திருந்தனர்.
18ம் நூற்றாண்டில் சாந்திதாஸ் கோஸ்வாமியின் "பிஜோய் பாஞ்சாலி' காவியம், இந்த நிலத்தை மகாபாரத மணிபூரத்துடன் தொடர்புபடுத்தி, மேதி இன அரசர்கள், அர்ஜுணன் வழி வந்தவர்கள் என்கிறது. அதைத் தொடர்ந்து மேதி அரசர்களும் வைணவ சமயத்தை தழுவுகின்றனர். பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கையகப்படுத்தும்வரை அது மணிப்பூர் சமஸ்தானம்தான்.
இதற்கிடையே பர்மிய ஆக்கிரமிப்பையும், மங்கோலிய படையெடுப்பையும் எதிர்கொண்டது இந்த பள்ளதாக்கு. இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்ணணியில், மணிப்பூர் சமஸ்தானம் பர்மாவிலிருந்து பிரிந்து இந்திய யூனியன் பிரதேசத்தோடு இணைந்து கொண்டது.
வடகிழக்கு மலைப்பிரதேசங்கள், பர்மிய பிரதேசம் (இன்றைய மியான்மர்), வங்கதேசம் (இன்றைய மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த நிலம்) என்று பல இடங்களில் கிட்டத்தட்ட 50 வகை இனக் குழுக்கள் உள்ளடக்கிய மக்களை 'குக்கி' மக்கள் என்றழைக்கின்றனர்.
"இது என் நிலம்" என்று ஆர்பரிப்புடன் கூவும் பூர்வ குடியினரை, சற்றே வளர்ந்த நாகரிக மக்களான மாயர்கள் அடிமைப்படுத்தி செல்வதை, 'அபோகலிப்டோ' திரைப்படத்தில் பார்க்கலாம். திரைப்படத்தின் முடிவில் ஐரோப்பியரின் கப்பல் (ஸ்பானியர்கள்) அமெரிக்க கடற்கரையை வந்தடையும் காட்சி வரும். ஐரோப்பிய காலனியாதிக்கம் அந்த நிலத்தின் பெரும் அரசுகளை நிர்மூலமாக்கி, பூர்வகுடிகளை பெருமளவில் அழித்த பின்னாள் வரலாறு அந்தக் காட்சியின் வழியே நமக்கு காட்டப்படுகிறது.
பழங்குடி இன மக்களுக்கான ஆகப் பெரும் பிரச்னையே அவர்கள் நாகரிக வளர்ச்சியில் நிலமுடையவர்களாக பரிணமிக்க விடாமல், வளர்ந்த நாகரிக மக்கள் அழுத்தம் கொடுப்பதுதான். காடுகளை பாதுகாக்கும் அளவிற்கான முக்கியத்துவத்தை, அந்தக் காடுகளில் உறையும் குடிகளுக்கு அளிக்க நவீன அரசுகள் முற்படுவதில்லை.
பிரிட்டிஷாரின் காலனியாதிக்க காலத்தில், குக்கி இன மக்கள் ஆங்கிலேய அரசுடன் போரிட்டு, தோற்றதும், மெது மெதுவே, கிறிஸ்துவ மிஷனரிகளின் வருகையால், கிறிஸ்துவ மதத்தை தழுவுகின்றனர்.
சுதந்திர இந்தியாவின் பெரினியல் பிரச்னைகளில் ஒன்றான எல்லைப்புற அகதிகள் பிரச்னையும் மணிப்பூர் பள்ளதாக்கை இம்சிக்கின்றது. குக்கி பழங்குடியினரின் பல நெருங்கிய இனங்கள் மியான்மரிலிருந்து, இந்திய நிலங்களுக்கு புலம்பெயர, மலையக மக்களுக்கும், பள்ளதாக்கு மக்களுக்கும் இடையே பெரும் விரிசலை உண்டு பண்ணிவிட்டது. இதில் மத வேற்றுமையும் ஓர் அடிநாதமாக இணைய, தற்போதைய கலவர சூழல் வெடித்து கிளம்பியிருக்கிறது.
மனித இனத்தின் தொடக்கத்தில் இருந்தே, ஆண் மையச் சமூகமான நாம், பெண்களை மூன்று தளங்களில் இருத்தி வருகிறோம்.
தாய் என தொழும் பக்தி பொங்கும் இடம்.
பொன், மண், பொருள், பணியாள் போல உடைமைகளில் ஒன்றாக பெண்ணையும் கருதுவது.
மூன்றாவதாக தன்னுடைய சந்ததியை பெருக்கி தரும் இன்றியமையாத கருவி.
சக மனிதராக பெண்களை நிறுத்தி இயல்பானதொரு குடிமைச் சமூகமாக பழகிவருவது மிகவும் அரிது. அதிலும், போர்கள், சண்டைகள் என வரும்போது பெண்களை அபகரிப்பது, வண்புணர்வு செய்வது, கொடுமைப் படுத்துவது ஒரு யுத்த உக்தியாகவே நம் சமூகங்களில் நிகழ்ந்து வருகிறது.
அண்மையில் இணையத்தில் பரவிய வீடியோவில் குக்கி இன பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, பொதுவெளியில் மானபங்கபடுத்தி, வண்புணர்ச்சி செய்கின்றனர் மேதி இன கொடுங்கோலர குழு, எத்தகைய மானுட அவலம் இது. இந்த கோரச் செயலில் ஈடுபட்ட மனிதர்கள், அதை படமெடுத்தவர்கள், அதை பரப்பிவிட்டவர்கள் என எத்தனை ஈனப்பிறவிகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என பேரதிர்ச்சியாக இருந்தது.
இந்த கோர வீடியோக் காட்சிகளைக் கண்ட பலருடைய எதிர்வினைகளும், அந்த பேரதிர்ச்சியைக் கடந்து, இந்த அவமானத்தை எப்படி அரசியல் தரப்பில் வைத்து ஆதாயம் சேர்ப்பது என்ற முனைப்பில் இருந்தன.
இன்றைய சோஷியல் மீடியாவின் மாபெரும் துயரம் இப்படி அடிப்படை மானுடப் பண்புகளைத் துறந்து, இணைய வெளியின் வீச்சிற்கு நம்மை நாமே பலி கொடுப்பதுதான்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், ஒரு தாய்க்கு மகனாகவோ, ஒரு பெண்ணிற்கு இணையராகவோ, அல்லது ஒரு பெண்ணிற்கு தந்தையாகவோ இருக்கப்பட்ட எவரொருவரும், அந்த இரு பெண்களுக்கு நேர்ந்த கொடுமைக்கென, பொறுப்பேற்று தலைகுனிந்து நிற்க வேண்டும்.
தங்களுக்கான கலாச்சாரம், நிலம், மொழி, மதம் என குழுவாக ஏற்றுக் கொண்டு வாழ்வது இந்த பூமியில் முக்கியமானதுதான். அதன் முரண்களும், பெறுதல்களும், இழப்புகளும் அலசி தீர்க்கப்பட வேண்டியது, மனிதநேயம் பரப்பும் விரிந்த குடையின் கீழ்தான்.
பிறரை பலி கொள்ளும் வேற்றுமை நெருப்பில் குளிர்காய முனைவோரயும், அந்த நெருப்பு உட்செரித்துப் போகும் காலம் வாராமல் போகாது.


உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •