Reading view

தீமையைச் சுடு – Crime Novel

ஆபிசில் இருந்து வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி  அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அன்று அவருடைய நெருங்கிய நண்பர் மைக்கேல்ராஜின் ஒரே பெண்ணான ஜெனிஃபருக்கு நிச்சயதார்த்தம்.

கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு மற்றும் மருமகள் ப்ரியம்வதாவுடன் அனைவரும் குடும்பத்துடன் நேரத்திற்கு நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு கிளம்பி காரில் ஏறிய நேரம் வீட்டில் தொலைபேசி அழைக்கிறது.

டெல்லியில் இருந்து கமிஷனரிடம் அவசரமாகப் பேச அழைப்பு வந்திருப்பதாக வேலைக்காரி வள்ளியம்மை கூற, கமிஷனர் காரில் இருந்து மீண்டும் வீட்டிற்குள் சென்று ரிசீவரை எடுக்கிறார். அதில் மர்ம நபர் ஒருவன் பேசுகிறான். டெல்லியில் இருந்து பேசுவதாகச் சொன்னால் தான் உடனே உங்களிடம் பேச முடியும் என்று பொய் சொன்னதாகச் சொன்ன அவன், சித்தர் பாடல் ஒன்றைப் பாடி விட்டு போனை வைத்துவிடுகிறான்.

ஒருவழியாக நிச்சயதார்த்தம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தது  கமிஷனர் குடும்பம். ஆனால் கமிஷனரின் மனதிலோ வீட்டிற்கு திரும்பும் வரையிலும் அந்த சித்தர் பாடலே ஒலித்துக் கொண்டிருந்தது. ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்ற எண்ணம் அவருக்கு வலுப்பட்டுக் கொண்டே இருக்க, நள்ளிரவில் அவருக்கு ஒரு போன் வருகிறது.

மைக்கேல்ராஜ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விஷயம் கனகசபாபதியை எட்ட அதிர்ந்தார் அவர். உடனே அனைவரும் குடும்பத்துடன் மைக்கேல்ராஜின் வீட்டிற்குச் செல்ல, அங்கே மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்கின்றனர்.

அதேசமயம்..

தஞ்சையை அடுத்த ராஜகம்பீரம் என்ற ஊருக்கு புகழ்பெற்ற நாடி ஜோதிடர் ஜலகண்டரைப் பார்ப்பதற்காக வெற்றிவேல் என்பவன் வருகிறான். அவனை குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி ஜலகண்டர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். வண்டியில் போகும் வழியில் வெற்றிவேலின் பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்.

நாடி பிடித்து பார்த்து அவர்களுக்கேற்ற ஏடு எடுத்து பார்த்து, அதில் குறிப்பிட்டுள்ள சித்தர் பாடலை வைத்து, நமக்கான பரிகாரத்தை ஜலகண்டர் கண்டுபிடித்து சொல்வதாக நாடி ஜோதிடத்தின் பெருமைகளை வெற்றி வேலுக்கு எடுத்து சொல்கிறான் வண்டிக்காரன் பொன்னுசாமி.

வெற்றிவேலின் பிரச்சனைகளை ஜலகண்டர் அவனிடம் அப்படியே கூற, அசந்து போன அவன் அதை சரிசெய்ய பரிகாரம் கேட்க, ஏடு எடுக்க உள்ளே செல்கிறார் ஜலகண்டர். அதே சமயம் அவர் பின்னே சென்ற வெற்றிவேல் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்கிறான்.

மைக்கேல்ராஜூம் அவன் குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்த போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, கொலைக்கான மோட்டிவ்வை தேட யத்தனிக்கையில் மைக்கேல்ராஜ் எழுதியிருந்த கடிதம் கனகசபாபதியை வந்து சேர்கிறது.

அடுத்ததாக சம்பந்தமே இல்லாமல், புகழ்பெற்ற அமிர்தா குளிர்பான நிறுவனர் யோகானந்த் அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வைத்து கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் மாதத்தில் இரண்டு முறையாவது நாடி ஜோதிடர் ஜலகண்டரை சந்திப்பதற்கு யோகானந்த் வருவது தெரிய வருகிறது.

மைக்கேல்ராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தின் தற்கொலையின் பின்னணி என்ன..? மைக்கேல்ராஜ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது என்ன..? வெற்றிவேல் யார்..? ஜலகண்டர், யோகானந்த் கொலைகளுக்கான மோட்டிவ் என்ன..? போனில் கமிஷனரிடம் சித்தர் பாடலைப் பாடியது யார்..? குற்றவாளி யார்..?

Casting : போலீஸ் கமிஷனர் கனகசபாபதி, மனைவி சிவகாமி, மகன் பிரபு, மருமகள் ப்ரியம்வதா, வேலைக்காரி வள்ளியம்மை, கனகசபாபதியின் நண்பன் மைக்கேல்ராஜ், மகள் ஜெனிஃபர், மர்ம நபர் வெற்றிவேல், குதிரை வண்டிக்காரன் பொன்னுசாமி, நாடி ஜோதிடர் ஜலகண்டர், அமிர்தா குளிர்பான ஓனர் யோகானந்த்.

  •