Reading view

கற்கண்டு ஆயுதம் – Crime Novel

மேகாவும் செல்வியும் நெருங்கிய தோழிகள். தினமும் இருவரும் போனில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பவர்கள். செல்வி இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகி அமெரிக்காவிற்கு பறக்க இருப்பவள்.

மேகாவின் அப்பா ஆதித் உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர். எதிர்காலத்தில் மனிதனுக்கு வரவிருக்கும் நோய்களை மரபணு மூலம் சரிசெய்யும் நான்-வோலடைல் மெமரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் சில சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். ஆதித்தின் உதவியாளர் பிரசாத். மேகாவை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

அன்றைக்கு மேகாவிற்கு போன் செய்த செல்வியின் குரல் நடுக்கத்தில் இருந்தது. மேகாவை உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாள் செல்வி. அங்கே சென்ற அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் இருக்கும் அறிகுறிகள் இப்போது தனக்கு இருப்பதாகவும் கூறி மேகாவை திடுக்கிட வைத்தாள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை எனவும் செல்வி புலம்ப, மெடிக்கல் கிட்டை வைத்து மேகா செக் செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. ஷாப்பிங் போவதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் மேகாவிற்கு தெரிந்த கைனகாலஜிஸ்ட்டிடம் செல்கின்றனர்.

செல்வியைப் பரிசோதித்த டாக்டர், அவளின் உடலில் எந்த விதமான கருவளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அவள் கன்சீவ்வாக இருப்பதை உறுதி செய்கிறார். டாக்டர் பேசிக்கொண்டே போக, செல்வி அப்படியே மயங்கி கோமா நிலைக்குச் செல்கிறாள்.

இதையறிந்த மேகாவின் அப்பா ஆதித், மருத்துவத் துறையில் தான் கண்டுபிடித்த ராக்கெட் கேண்டி ஆயுதம் என அழைக்கப்படும், மரபணு சிகிச்சை மூலம் செல்வியை குணப்படுத்த முன்வருகிறார். ஆனால் மருத்துவ முறைப்படி, நடைமுறைக்கு வராத டிரீட்மெண்ட்டை பேஷண்ட்டிற்கு கொடுக்க கூடாது.

அதே சமயம் வேறு இடத்தில்..

போலீஸ் இன்பார்மர் என்ற போர்வையில், தனக்கு வேண்டாத எதிரிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு, அண்டர் கிரௌண்ட்டில் தாதாவாக வாழ்ந்துகொண்டிருந்த சிக்கந்தரை சந்திக்க வந்திருந்தார் ஏ.சி. நமோ நாராயணன்.

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஏ.சி. வழக்கமாக பிரதமரும், ஜனாதிபதியும் வரும் இடங்களில் பாதுகாப்பு காரணமாக ரவுடிகளை சிறையில் அடைத்து வைப்பதைக் கூறிய அவர், இந்த முறை சமூக விரோதிகள் லிஸ்டில் சிக்கந்தர் பெயரும் இருப்பதாகக் கூறுகிறார். தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும், மூன்று நாட்கள் மட்டும் சிறையில் இருக்கும்படி கேட்கிறார் ஏ.சி. ஒரு வழியாக சம்மதிக்கிறான் அவன்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு ஒரு போன் வருகிறது, பேசியது ஒரு பெண்.  தன்னுடைய பெயர் தன்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், தனக்கு வேண்டாத ஒருவனைக் கொலை செய்யும் வேலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். முன்பணமாக பேசிய மொத்தப் பணமான பத்து லட்சத்தையும் உடனே தர முன்வருகிறாள்.

யோசித்த சிக்கந்தர், தன்யாவின் வேலையை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். அடுத்த நாள் அவன் போலீசில் சரணடைய வேண்டி இருப்பதால், தன்னுடைய சகாவான போஸிடம் அந்த வேலையை மாற்றிக் கொடுக்கிறான் சிக்கந்தர். தன்யா சொன்ன ஆளை முடிக்கச் செல்கிறான் போஸ். ஒரு வழியாக அந்த போட்டோவில் இருந்த ஆளைக் கண்டுபிடிக்கிறான். போஸ் கொல்ல வேண்டியது ஆதித்தின் உதவியாளர் பிரசாத்.

யாரந்த தன்யா..? அவளுக்கும் பிரசாத்திற்கும் என்ன சம்பந்தம்..? கோமாவில் இருந்து செல்வி உயிர் தப்பினாளா..? செல்வியின் இந்த நிலைக்கு யார் காரணம்..? ராக்கி கேண்டி வெப்பன் என்பது என்ன..? ஆதித்-பிரசாத்தின் சுயரூபம் என்ன..?

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=86

  •  

டிசம்பர் இரவுகள் – Crime Novel

வேலை விஷயமாக ஏர்போர்ட் செல்ல இருந்த அண்ணன் பார்த்திபனை எழுப்புவதற்காக மாடியில் இருக்கும் அவனது அறைக்குச் செல்கிறாள் மேகலா.  ஆனால் ஏற்கனவே எழுந்திருந்த பார்த்திபன், பணத்தைக் கொண்டு வருவதாகவும், விஷயம் வெளியே தெரிய வேண்டாம் எனவும் போனில் யாருடனோ பயத்தில் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனியின் ஓனரான கங்காதருக்கு மூன்று வாரிசுகள். முதல் மனைவிக்கு பிறந்தவன் பார்த்திபன், இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள் – ஜீவா, மேகலா.

பார்த்திபனின் பேச்சை இண்டர்காமில் ஒட்டுக்கேட்ட மேகலா, போனில் ப்ளாக்மெயிலர் சொன்ன இடத்திற்குத் தன்னுடைய காதலன் பிரகாஷை அனுப்புகிறாள். பிரகாஷ்-மேகலா இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் ஆறு மாதங்களாகத் தங்கள் காதலை வளர்த்து வருபவர்கள்.

பார்த்திபனுக்கு முன்னமே அந்த ஹோட்டலுக்குச் சென்ற பிரகாஷ், ப்ளாக்மெயிலருக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அதே சமயம் பார்த்திபனும் அங்கு வந்து சேர, கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தச் செல்கிறான். நீண்ட நேரமாகியும் பார்த்திபன் வெளியே வராததால், பார்க்கிங் இடத்திற்கே செல்கிறான் பிரகாஷ்.

அங்கே கழுத்தில் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் பார்த்திபன். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவேக்கும், கோகுல்நாத்தும் SOC பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் விவேக் அந்த விஷயத்தை கவனித்தான். காரைத் திறந்தவுடன் உள்ளே இருந்து ஒரு பெர்ஃபியூம் நறுமணம் வீசிக்கொண்டிருந்தது.

அனைத்து பூக்களையும் கொண்டு செய்த வாசமாக அது இருந்தது. மேலும் அங்கு கிடைத்த சேறு படிந்த பூட்ஸ் தடயங்கள் மிகவும் பெரிய அளவில் வித்தியாசமாக இருந்தது. கேஸ் இவ்வாறாக போய்க்கொண்டிருக்க, வேலைக்குச் சென்ற தன்னுடைய பெண் தேவியை நாலு நாட்களாக காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷனிற்கு வருகிறார் ரிடையர்டு ஆர்மிமேன் ஜலபதிராவ்.

தேவி வேலை பார்த்துக்கொண்டிருந்த இடம், “கங்காதர் ஃபெர்டிலைசர்” கம்பெனி. நேரடியாக விசாரணையை கம்பெனியில் ஆரம்பித்த விவேக், உரக்கிடங்கில் இருந்து ஒரு பெண்ணின் பர்ஸைக் கண்டுபிடிக்கிறான். அந்தப் பர்ஸ் தேவியுடையது என கண்டுபிடிக்கப்பட, மேற்கொண்டு போலீஸ் நாய் சீஸரை வரவழைத்து தேடலைத் தொடங்குகிறான் விவேக்.

சீஸர் பர்ஸை மோப்பம் பிடித்துவிட்டு காட்டுக்குள் ஓடி, ஒரு கட்டத்தில் ஓய்ந்து நிற்கிறது. அங்கே மண்ணில் காலால் பிராண்டி போலீசை அழைக்க, தோண்டிப் பார்த்தால் அழுகிய நிலையில் தேவியின் பிணம் கிடைக்கிறது.

தேவியின் கொலைக்கு பார்த்திபன் காரணமாக இருந்து, தேவிக்கு நெருக்கமானவர்கள் பார்த்திபனைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேஸ் நகர்ந்துகொண்டிருக்க, ஜலபதிராவ் வீட்டிற்கு விசாரணைக்குச் செல்கிறான் விவேக். தேவியின் மரணத்தைப் பற்றித் துப்பு துலங்க அங்கே  சென்றவனுக்குக் காத்திருந்தது ஒரு அதிர்ச்சி.

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜலபதிராவ், கேன்சரால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அவரின் மனைவி, மேலும் பித்துப் பிடித்து அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தேவியின் தங்கை அர்ச்சனா என குடும்பமே மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இதற்கிடையில் பார்த்திபனுக்கு வந்த மாதிரியே இன்னொரு போன் கால் ஜீவாவிற்கு வர, அவனும் பயந்து போய் யாருக்கும் தெரியாமல் பணத்துடன் வெளியே செல்ல, இதைக் கண்டுபிடித்த மேகலா, விவேக்கிற்கு விஷயத்தைச் சொல்கிறாள்.

ஆனால் விவேக் செல்வதற்கு முன்னமே பார்த்திபன் கொலை செய்யப்பட்டதைப் போலவே ஜீவாவும் கொலை செய்யப்படுகிறான். மேலும் ஜீவாவின் காரிலும் அதே பெர்ஃபியூம் நறுமணம். அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் ஒரு லெட்டர் இருக்க, அதில் தேவியின் ஆவி என்ற பெயரில் கடிதம் ஓடியிருந்தது.

அடுத்தது நீ.. என தேவியின் ஆவி என்ற பெயரில் ஒரு லெட்டர் மேகலாவிற்கும் வந்திருக்க..

தேவியைக் கொலை செய்தது யார்..? தேவியின் ஆவி என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் கேஸை திசைதிருப்புவதற்காகவா..? போலீசிடம் இருந்து ஜலபதிராவ் மறைக்கும் உண்மை என்ன..? குற்றவாளி பிடிபட்டானா..? மேலும் தெரிந்துகொள்ள வாசியுங்கள் டிசம்பர் இரவுகள்..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=319

  •