Reading view

ஒரு பழைய திமுக எம்எல்ஏ

அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.

அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.

அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.

அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.

அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.

1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.

அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.

அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.

ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது.  பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.

பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.

எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்

1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.

1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.

பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.

மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

ஒரு பழைய திமுக எம்எல்ஏ

அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.

அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.

அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.

அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.

அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.

பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.

1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.

அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.

அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.

ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது.  பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.

பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.

எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்

1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.

1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.

பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.

மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:

  •  

பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள்

ஸ்ரீனிவாச கோபாலன் அழிசி பதிப்பகத்தை நடத்துகிறார். இத்தனை இளைஞர் என்று இப்போதுதான் – அவரது புகைப்படத்தைத் தேடும்போதுதான் – தெரிந்தது.

இன்று புழக்கத்தில் இல்லாத பழைய புத்தகங்கள் பலவற்றையும் வெளியிட்டிருக்கிறார் – படித்திருக்கிறீர்களா? உட்பட. அதற்கு ஒரு இரண்டாம் பாகம் இருக்கிறது என்று அவர் மூலம்தான் கேள்விப்பட்டேன். அடுத்த முறை இந்தியா போகும்போது அவரை சந்தித்து புத்தகத்தை வாங்க் வேண்டும். க.நா.சு. வின் பல புத்தகங்களை பதித்திருக்கிறார்.

பெண்ணெழுத்து – க.நா.சு.வின் மதிப்புரைகள் என்று அவர் தொகுத்த ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. க.நா.சு. பெண்ணெழுத்து என்றெல்லாம் பார்க்க வாய்ப்பே இல்லை, என்னைப் போல ஒரு convenient shortcut ஆகத்தான் பெண்ணெழுத்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள்

முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், க.நா.சு. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

  •