Reading view

தேடினாலும் கிடைக்காது – Crime Novel

(இந்தக் கதை நடக்கும் காலக்கட்டம் (1980’s) என்பதால் சில விஷயங்கள் இந்தக் காலக்கட்டத்திற்குப் பொருந்தாததாக இருக்கலாம்.)

யோகேஷும் நீரஜாவும் புதுமணத் தம்பதிகள். இருவரும் தங்கள் ட்ரிப்பை முடித்துவிட்டு, நீலகிரியின் ரிச்சி ரிசார்ட்டிலிருந்து கிளம்பியபோது நேரம் மதியத்தைத் தாண்டியிருந்தது. அன்றைக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், யோகேஷ் காரை ஜாக்கிரதையாக கையாண்டான்.

நீரஜா காரில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வர, திடீரென காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் யோகேஷ். பார்த்தால் அங்கே லிப்ட் கேட்டு நின்றிருந்தான் யோகேஷின் கல்லூரி கால நண்பன் சேதுபதி. காரில் அவனை ஏற்றிக்கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டபடி மூவரும் பயணத்தை தொடர்கின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக கொஞ்ச நேரத்திலேயே காரின் டயர் பஞ்சர் ஆகிறது.

வானம் இருட்டிக்கொண்டு வர, மூவரும் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சேதுபதி தான்  மெக்கானிக்கை அழைத்து வருவதாகச் சொல்லிச் செல்கிறான். இதற்கிடையே தங்களுக்காக காத்திருக்கும் அப்பா கேசவ்விடம், டயர் பஞ்சர் விஷயத்தை போனில் சொல்லச் சொல்லி நீரஜா கூற, போன் நம்பரை வாங்கிச் செல்கிறான் சேது.

ஆனால் கதையின் திருப்புமுனையாக, கேசவ்விற்கு போன் செய்த சேது, யோகேஷையும் நீரஜாவையும் தான் கடத்தி உள்ளதாகக் கூறுகிறான். மேலும்  பணம் 5 லட்ச ரூபாயை யாருக்கும் தெரியாமல், அவன் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து வைக்காவிட்டால், அன்று இரவே இருவரையும் கொன்று விடுவதாகவும் மர்ம நபரைப் போல பேசி மிரட்டுகிறான்.

கேசவ்விற்கு பேசிவிட்டு அடுத்ததாக தன்னுடைய நண்பன் கதிரவனுக்கு போன் செய்த சேது, திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு அவனைத் தயார் படுத்துகிறான். நீண்ட நேரம் ஆகியும் தன்னுடைய மகளும், மருமகனும் வந்து சேராததால் ஏற்கனவே அயர்ந்து போயிருந்த கேசவ், பணத்தை சேது சொன்ன இடத்தில் வைக்கிறார்.

அடுத்ததாக மெக்கானிக் உடன் திரும்பிய சேது, காரை சரி செய்த பிறகு, மூவரும் இரவு ஹோட்டலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறான். அடுத்த நாள் காலையில் யோகேஷும் நீரஜாவும் வீட்டிற்குச் சென்ற பிறகு, மர்ம நபர் மிரட்டிய விஷயம் இருவருக்கும் தெரியவர, கேசவ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸ் நண்பனை உதவிக்கு அழைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் தனபால் உடனே கேசவ் வீட்டிற்கு வந்து, நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்ட பிறகு, விசாரணையைத் தொடங்குகிறார். முதலில் கேசவ்வின் ஆபீஸில் இருந்து விசாரணையைத் தொடங்க, அங்கே பெரிய பதவியில் இருந்த பத்மநாபன் மேல் போலீசின் சந்தேகப்புள்ளி விழுகிறது.

காரணம், திடீரென 15 நாட்கள் முறையாக விண்ணப்பிக்காமல் லீவ் எடுத்தது தான். ஆனால் வெகு சீக்கிரமே கேஸின் கோணம் மாற, போலீஸின் பார்வை சேதுபதியின் மேல் விழுகிறது. ஒரு வழியாக சேதுவின் வீட்டை போலீஸ் அடைந்த போலீசிற்கு காத்திருந்தது அதிர்ச்சி சம்பவம்.

அங்கே பூட்டப்பட்டிருந்த வீட்டில், சேதுபதி இறந்து கிடந்தான். சேதுபதியின் நண்பர்களை லிஸ்ட் எடுத்து போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்க…

தப்பானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனரா..? சேதுபதியைக் கொலை செய்தது யார்..? யோகேஷ்-நீரஜாவை வைத்து சேதுபதி மிரட்டியது எதற்கு..? கேசவ் வைத்த பணத்தை எடுத்துச் சென்ற சேதுவின் நண்பன் கதிரவனின் திட்டம் என்ன..?

உங்களை மிரட்ட வரும் தேடினாலும் கிடைக்காது..!

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=387

  •