Reading view

கற்கண்டு ஆயுதம் – Crime Novel

மேகாவும் செல்வியும் நெருங்கிய தோழிகள். தினமும் இருவரும் போனில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பவர்கள். செல்வி இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் ஆகி அமெரிக்காவிற்கு பறக்க இருப்பவள்.

மேகாவின் அப்பா ஆதித் உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளர். எதிர்காலத்தில் மனிதனுக்கு வரவிருக்கும் நோய்களை மரபணு மூலம் சரிசெய்யும் நான்-வோலடைல் மெமரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் சில சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பவர். ஆதித்தின் உதவியாளர் பிரசாத். மேகாவை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருப்பவன்.

அன்றைக்கு மேகாவிற்கு போன் செய்த செல்வியின் குரல் நடுக்கத்தில் இருந்தது. மேகாவை உடனே தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாள் செல்வி. அங்கே சென்ற அவளுக்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சி. தனக்கு நாள் தள்ளி போயிருப்பதாகவும், கர்ப்ப காலத்தில் இருக்கும் அறிகுறிகள் இப்போது தனக்கு இருப்பதாகவும் கூறி மேகாவை திடுக்கிட வைத்தாள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனவும், இது எப்படி நடந்தது எனத் தெரியவில்லை எனவும் செல்வி புலம்ப, மெடிக்கல் கிட்டை வைத்து மேகா செக் செய்ய ரிசல்ட் பாசிட்டிவ்வாக வருகிறது. ஷாப்பிங் போவதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் மேகாவிற்கு தெரிந்த கைனகாலஜிஸ்ட்டிடம் செல்கின்றனர்.

செல்வியைப் பரிசோதித்த டாக்டர், அவளின் உடலில் எந்த விதமான கருவளர்ச்சிக்கான அறிகுறியும் இல்லை. ஆனால் அவள் கன்சீவ்வாக இருப்பதை உறுதி செய்கிறார். டாக்டர் பேசிக்கொண்டே போக, செல்வி அப்படியே மயங்கி கோமா நிலைக்குச் செல்கிறாள்.

இதையறிந்த மேகாவின் அப்பா ஆதித், மருத்துவத் துறையில் தான் கண்டுபிடித்த ராக்கெட் கேண்டி ஆயுதம் என அழைக்கப்படும், மரபணு சிகிச்சை மூலம் செல்வியை குணப்படுத்த முன்வருகிறார். ஆனால் மருத்துவ முறைப்படி, நடைமுறைக்கு வராத டிரீட்மெண்ட்டை பேஷண்ட்டிற்கு கொடுக்க கூடாது.

அதே சமயம் வேறு இடத்தில்..

போலீஸ் இன்பார்மர் என்ற போர்வையில், தனக்கு வேண்டாத எதிரிகளைப் போலீசிடம் பிடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டு, அண்டர் கிரௌண்ட்டில் தாதாவாக வாழ்ந்துகொண்டிருந்த சிக்கந்தரை சந்திக்க வந்திருந்தார் ஏ.சி. நமோ நாராயணன்.

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ஏ.சி. வழக்கமாக பிரதமரும், ஜனாதிபதியும் வரும் இடங்களில் பாதுகாப்பு காரணமாக ரவுடிகளை சிறையில் அடைத்து வைப்பதைக் கூறிய அவர், இந்த முறை சமூக விரோதிகள் லிஸ்டில் சிக்கந்தர் பெயரும் இருப்பதாகக் கூறுகிறார். தவறுதலாக இது நடந்துவிட்டதாகவும், மூன்று நாட்கள் மட்டும் சிறையில் இருக்கும்படி கேட்கிறார் ஏ.சி. ஒரு வழியாக சம்மதிக்கிறான் அவன்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு ஒரு போன் வருகிறது, பேசியது ஒரு பெண்.  தன்னுடைய பெயர் தன்யா என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், தனக்கு வேண்டாத ஒருவனைக் கொலை செய்யும் வேலையை அவனிடம் ஒப்படைக்கிறாள். முன்பணமாக பேசிய மொத்தப் பணமான பத்து லட்சத்தையும் உடனே தர முன்வருகிறாள்.

யோசித்த சிக்கந்தர், தன்யாவின் வேலையை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொள்கிறான். அடுத்த நாள் அவன் போலீசில் சரணடைய வேண்டி இருப்பதால், தன்னுடைய சகாவான போஸிடம் அந்த வேலையை மாற்றிக் கொடுக்கிறான் சிக்கந்தர். தன்யா சொன்ன ஆளை முடிக்கச் செல்கிறான் போஸ். ஒரு வழியாக அந்த போட்டோவில் இருந்த ஆளைக் கண்டுபிடிக்கிறான். போஸ் கொல்ல வேண்டியது ஆதித்தின் உதவியாளர் பிரசாத்.

யாரந்த தன்யா..? அவளுக்கும் பிரசாத்திற்கும் என்ன சம்பந்தம்..? கோமாவில் இருந்து செல்வி உயிர் தப்பினாளா..? செல்வியின் இந்த நிலைக்கு யார் காரணம்..? ராக்கி கேண்டி வெப்பன் என்பது என்ன..? ஆதித்-பிரசாத்தின் சுயரூபம் என்ன..?

want to buy : https://noveljunction.com/BookInfo.aspx?bookRefId=86

  •