Reading view

தீச்சொல் நிகண்டு

  தீச்சொல் நிகண்டு நாஞ்சில் நாடன் கும்பமுனி கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி எழுதினால் அவர் சங்கி என உலகம் தூற்றும் அல்லால் பூமாரி பொழியும் என்பதுவும் அறிவார். 1919-ம் ஆண்டில் பிறந்த நாகப்பட்டினம் சந்திரசேகரன் வசந்த கோகிலம் என்பது பாடகியின் முழுப்பெயர். இரிஞ்ஞாலைக்குடா, கோபாலபுரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்தவர். காசநோய் வந்து, 1951-ல் … Continue reading

  •  

முரண்கள் – நாஞ்சில்நாடனும் நானும்

By Funky Ronin (மோகன் சுப்ரமணியன்/ஆனந்த் உன்னத்) October 13, 2024 கல்லூரியில் முதல் வருடம் இரண்டாம் பருவம். செமஸ்டருக்கு முன் நடக்கும் தேர்வு. ForTran பாடம். எந்த கேள்விக்கு பதில் எழுத துவங்கலாம் என்று தேடிப் பார்த்ததில் 10 மதிப்பெண்கள் கொண்ட ஒரு கேள்வி கவனத்தை ஈர்த்தது. மற்றவையெல்லாம் வெறும் கேள்விகள். இது நிரல் எழுத வேண்டிய … Continue reading

  •  

நாஞ்சில் நாடன் சொல்வனம் கவிதைகள்

ஊடக வெளிச்சம் புறநானூற்றின் உரிமைத் தமிழ்க்குடிதிருக்குறளின் பட்டாக்காரன்காப்பியங்களை திரைக் காவியம் செய்தவன்கம்பனில் காமரசங்கள் பிழிந்தவன்அறிவது மிகவும் அவசியம் எனஊடகங்களின் உயர்தரச் செய்திகள் இமயத் தாரகை ஆம்னிஶ்ரீயின்ஐந்தாம் கணவன் ஆண்குறி நீளம்மூன்றே அங்குலம்! 2.பிரபஞ்ச காவலன் ஆத்மார்த்த மயன்காமம் துய்த்த காரிகைக் கணக்குஐந்நூற்று ஒன்றென அறிவீரா நீர்? ம.பி.க. கட்சி வேட்பாளர்அறிவித்த சொத்து மதிப்பு66,343 கோடி என்பது … Continue reading

  •  

வறுத்த பயிறு முளைக்குமா?

  ”சரியாப் போச்சு. உமக்கு நம்ம சிஷ்யப்பிள்ளை நாஞ்சில்நாடன் சங்கதி தெரியாது போலிருக்கு!’’ “அவன் வெள்ளாளன்ங்கிறதுனாலதானே பாட்டா, சிஷ்யப்பிள்ளைண்ணு சாதி சேத்து சொல்லுகேரு. உமக்கிது நியாயமா, தர்மமா, அறமா?” “ஓ! அப்பிடி வாறேரா? சரி! இனி சிஷ்யன். போருமா? ”அவனுக்கு என்னாச்சு?” “அவன் ஒரு கிருத்திருமம் பிடிச்ச பய. மருந்துக்கு மோளச் சொன்னா மண்ணுலே மோளுவான். … Continue reading

  •  

அரக்கரும் குரக்கினமும்!

”வீராணமங்கலத்திலே செல்லப்பன் இருந்தாம்லா?” எந்த செல்லப்பன் என்று அவசர அடியாக நினைவுக்கு வரவில்லை. அந்த சின்ன ஊரில் ஏழு செல்லப்பன் உண்டும். நெட்டை செல்லப்பன், கட்டைச் செல்லப்பன், வெள்ளைச் செல்லப்பன், காக்கா செல்லப்பன், நொண்டிச் செல்லப்பன், மொட்டைச் செல்லப்பன், கள்ளச் செல்லப்பன் என. எந்த செல்லப்பனைச் சொல்கிறார் என யோசித்தான். ”அதாம்போ பகவதியம்மைக்கு மாப்பிள்ளை!” பகவதியம்மையும் … Continue reading

  •  

ஓடும் தேர் நிலையும் நிற்கும்!

ஓடும் தேர் நிலையும் நிற்கும்! நாஞ்சில் நாடன் வாசித்த புத்தகங்களையும், பருவ இதழ்களையும், பிறிதோர் காலத்துத் தேவைப்படும் எனக் கருதியவற்றை மாற்றி வைப்பான். தேவைப்படாது எனக் கண்டவற்றைத் தனியாக அடுக்கி வைப்பான். இனி எத்தனை காலம் மிச்சம் இருக்கிறது? இன்றுவரை 27,823 நாட்கள் வாழ்ந்தாயிற்று. எஞ்சிய நாட்களை சித்திரகுப்த நயினார் அறிவாரா? தென்திசைக் காவலன் அறிவானா? … Continue reading

  •  

ஈயார் தேட்டை

’’நம்ம நாஞ்சிநாடன் பெய வீட்டுக்கு  எதுத்த வீடுதானே பப்படக்காரி பாக்கியத்துக்க வீடு… பத்து பப்படம் வாங்கி குடுத்து விடுண்ணா செய்வான் கேட்டேரா? “ என்றார் கும்பமுனி. ”நீரு சொன்னா செய்ய மாட்டாளா பின்னே? என்ன ஒரு எளவுண்ணா ஒடனே பப்படம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நாலடியார், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யப்பிரபந்தம், கம்பராமாயாணம் இங்கெல்லாம் … Continue reading

  •