இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின்...
வேலை என்பது அனைவருக்கும் பொதுவானதுதானே? ஆனால் அந்த ஒரே வேலைக்கு ஆண் கிளம்புவதும் பெண் கிளம்புவதும் ஒரே மாதிரியான சூழலில் அமைவதில்லை. ‘சமைத்துக் கிளம்புவதற்கும் சாப்பிட்டுக் கிளம்புவதற்கும் இடைப்பட்ட இடைவெளி, வரவேற்பறைக்கும் அடுக்களைக்கும் இடையேயான...
செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள் – அ. குமரேசன் “எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடக்குது. நேத்து வரைக்கும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டுப் போன சேரிக்காரனுங்க இப்ப தோள்ல போட்டுக்கிட்டு வர்றானுங்க.” 1950களிலும் 60களிலும் இந்தப் பேச்சைத் தமிழ்நாட்டின் பல…
இன்று(டிச 10) மனித உரிமைகள் தினம். ஒரு மனிதன் மனிதனாகப் பிறந்ததனாலேயே அடையும் அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத உரிமைகளே மனித உரிமைகள் எனலாம்.
· உயிர் வாழும் உரிமை
· சட்டத்தின் முன் சமமாகக் கருதப்படுவதற்கான உரிமை
· நீதி கோரும் உரிமை
· மதம் சார்ந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் உரிமை
· நடமாட்டத்திற்கான உரிமை
· சமமான வேலைக்கு சமமான ஊதியம் கோருதல்
· பாலியல் சமத்துவம்
· குழந்தைகள் நலம்
ஆகிய பல்வேறு அடிப்படை உரிமைகளின் தொகுப்பே மனித உரிமைகள். சட்ட அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றவாளியென்று தீர்மானிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் என மனிதர்கள் எந்நிலையில் இருந்தாலும் மேற்சொன்ன உரிமைகள் அவர்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகளைப் பேணுவதில் இருக்கும் அடிப்படையான சிக்கலே இதில் பெறுனர் உதிரி மனிதனாகவோ அல்லது பலவீனமான கூட்டமாகவோ இருப்பதும், இவற்றை உறுதி செய்ய வேண்டிய இடத்தில் அரசு/சமூகம்/நிறுவனங்கள் போன்ற பலமான அமைப்புகள் இருப்பதும்தான். குறிப்பாக காவல் துறை, ராணுவம் போன்ற வன்முறையை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளுக்கும் எளிய மனிதர்களுக்குமான ஊடாட்டங்கள் எல்லாமே மனித உரிமை மீறலுக்கான களமாக அமைந்துவிடுவதைப் பார்க்க முடிகிறது.
அதே நேரம் தனிமனிதர்களும் கூட்டமாகச் சேர்ந்து தாக்கத் துவங்கினாலும் அங்கும் மாட்டிக் கொள்ளும் பலவீனரின் உயிர், உடைமை, கண்ணியம் ஆகியவை காணாமல் போய் விடக் கூடும். திருடுகையில் மாட்டியவர்கள், திருடர்களாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகத்துக்கு உட்பட்டவர்கள் என எத்தனையோ உயிர்கள் இது போன்ற கூட்டு வீரத்தினால் பலியாகியுள்ளதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன? தன் கோபம் செல்லுபடியாகக் கூடியவர்களிடம், எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருப்பவனிடம் வீரத்தைக் காட்டுவது இழுக்கு என்கிறது நம் தமிழ்மறை. ’செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான்’ எனும் குறளை மனிதர்கள் அனைவரும் பின்பற்றினாலே போதும், மனித உரிமை மீறல்கள் அற்ற சமுதாயம் உருவாகிவிடும்.
2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தினத்திற்குரிய கருப்பொருளாக “நமது உரிமைகள், நமது எதிர்காலம் – இக்கணமே” என்பதனை ஐநா அறிவித்துள்ளது.