Reading view

ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு

ரவி அவர்களின் “குமிழி” நாவலை முன் வைத்து…

Kumizhi – Ravi Swiss

ப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… என்றெல்லாம் அவர்கள் கனவுகள் கண்டார்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் அந்தக் கனவுகளை எல்லாம் அப்படியே சிதறடித்து, அம்மா, அப்பா, அக்கா… தங்கை என்று எல்லோரையும் தூக்கி எறிந்து விட்டு ஓடும் தைரியம் எங்கள் நாட்டில் எத்தனையோ ஆயிரம் இளைஞர்களிடம் வந்தது.

பாடசாலைக்குப் போன பிள்ளைகள் பசியோடு வீடு திரும்புவார்கள் என்று அன்போடும் அவதியோடும் சமைத்து வைத்து விட்டுக் காத்திருந்த அம்மாமாரையெல்லாம் சைக்கிளையும் புத்தகப் பையையும் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பி ஏமாற்றிய தைரியம் அது. அக்காமாருடனும் தங்கைமாருடனும் சண்டை பிடித்து, அடம் பிடித்து, அன்பைப் பொழிந்து… வாழ்ந்து விட்டு ஒரு பொழுதில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்ட பயங்கரத் தைரியம் அது.

ஈழத்தில் எத்தனையோ ஆயிரம் குடும்பங்களில் இது நடந்திருக்கிறது. அது வலியாக, தாள முடியாத சோகத்தின் சுமையாக ஒட்டுமொத்தக் குடும்பத்தையே ஆட்டிப் படைத்திருக்கிறது. வாட்டி வதைத்திருக்கிறது.

2000 ஆண்டளவில் ஜெயரூபன் மைக்கேல் பிலிப் என்பவர் ‘ஜடாயு‘ என்றொரு சிறுகதையை எழுதியிருந்தார். ‘ஜடாயு‘ மீன்பிடித் தொழிலைச் சீவனமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. கல்லூரி விடுமுறைநாட்களில், எடுபிடியாகக் கடலுக்குப் போய் உழைத்து, ஐந்தோ பத்தோ தாயிடம் கொடுக்கும் அவர்களது அன்பு மகன், அம்மாவையும் அப்பாவையும் அக்காவையும் விட்டு விட்டு போராடப் போய் விடுகிறான். பாடசாலைக்குப் போனவனின் சைக்கிளும் புத்தகப்பையும்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தன. கைவிளக்குப் போல இருந்த ஒற்றை மகன் சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்ட ஏமாற்றத்திலும் ஏக்கத்திலும், மனதாலும் உடலாலும் சாய்ந்து போன அவனது தந்தை அவனை மீண்டும் காணாமலே இறந்து போய் விடுகிறார்.

அப்படியொரு பெருந் துயரை தனது குடும்பத்துக்குக் கொடுத்து, அவர்களையெல்லாம் தவிக்க விட்டு விட்டு ஓடி, அலைக்கழிந்து, மீண்டு திரும்பிய ஒருவரின் கதைதான் குமிழி.

‘குமிழி‘ என்ற பெயர் அழகு. அதற்குக் கதாசிரியர் ரவி அவர்கள் சொல்லும்  விளக்கமும் அழகு. ஆனால் அது துயரம் தோய்ந்த ஒருவித ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கின்ற அழகு.

ரவி ஈழத்தின் வடபுலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1986இலிருந்து சுவிசில் வாழ்ந்து வருகிறார். 1989 இலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் மனிதம் என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டதன் மூலமும் வேறு பல இலக்கியச் செயற்பாடுகள், சமூகநலச் செயற்பாடுகள் மூலமும் நன்கு அறியப்பட்டவர். 1995இல் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ என்றதொரு அழகிய கவிதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.

PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பில் இணைந்து, செயற்பட்டுக் கொண்டிருந்த இவர் ஆயுதப் பயிற்சிக்காக, தான் இணைந்த அந்த அமைப்பின் வழிகாட்டலில் இந்தியா வரை பெரும் கனவுடன் சென்றவர். அங்கு பின்தளத்தில் கண்ட, எதிர்கொண்ட கொடுமைகளையும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்களையும் அச்சத்தையும் உயிர்தப்பினால் போதுமென்றான நிலையையும் இந்தக் ‘குமிழி‘ நாவலில் பதிவு செய்துள்ளார். பதிவு செய்துள்ளார் என்று சொல்வதை விட 2020ம் ஆண்டு வரை, 35 ஆண்டுகளாகத் தன்னோடு காவித் திரிந்த அந்த ஆதங்கம், ஏமாற்றம், கோபம், வேதனை… எல்லாவற்றையும் இந்நாவலின் மூலம் இறக்கி வைத்திருக்கிறார். முழுமையாக இறக்கி வைக்க முடியாது போயிருந்தாலும் இந்நாவலின் மூலம் அவர் கண்டிப்பாக ஒருவித விடுதலை உணர்வைப் பெற்றிருப்பார்.

நாவலில் ரவி தானாக நின்று தன்னிலையிலும் வேறொருவராகத் தள்ளி நின்று படர்க்கையிலும் கதையைச் சொல்கிறார். கதை ஒரு பயங்கரக் கனவுடன் ஆரம்பிக்கிறது. சுவிசின் அழகிய மலைகளுக்கூடாகத் தொடரும் கதையை ரவி தனக்கேயுரிய கவித்துவமான வரிகளால் அழகாக நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்துக்குத்தான் அந்த அழகும் பசுமையும். அதன் பின் கதை நெடுகிலும் ஒரு வித கோபமும் சோகமும் தவிப்பும் நெருடல்களும் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் உள்ளது.

ஆரம்பத்தில் ரவி கண்ட கனவும் அதில் வரும் சவுக்கம் கொட்டனும் அந்த மரணபயமும் ஆழ்மனதில் உறங்கியிருக்கும் ஏதோ ஒரு பயங்கரம் நாவலினுள்ளே புதைந்துள்ளது என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது.

ரவியின் அப்பா ஒரு ஆசிரியர். மனிதநேயம் மிக்க ஆசிரியர். பாடசாலையில் பிள்ளைகள் யாராவது காற்சட்டையை அழுக்காக்கி விட்டால் கிணற்றடிக்கு கூட்டிச் சென்று அவர்களைக் கழுவி விடுமளவுக்கு அன்பும் அக்கறையும் நிறைந்தவர். பிள்ளைகள் பசியோடு இருப்பதைக் கண்டால் உணவு வாங்கிக் கொடுக்கவும் அவர் தயங்குவதில்லை. பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மூலிகைச்செடிவளர்ப்பு, ஆயுர்வேத மருத்துவம், வீட்டு முற்றத்தில் பெருவிருட்சமாக வளர்ந்திருந்த வேப்பமரத்தின் பூக்கள், இலைகள், பட்டைகள்… போன்றவற்றிலிருந்தும் மூலிகைச் செடிகளிலிருந்தும் மருந்துகள், குளிகைகள் தயாரிப்பது, மருந்துக்கடையை நடாத்துவது, சாஸ்திரம் பார்ப்பது… என்று எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தவர்.

அவரது இயக்கம் 1970 இல் நின்று போயிற்று. சாதாரணமாக யாழ் வாழ் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் இருக்கக் கூடிய பிரச்சனைகளும் தேவைகளும்  ரவியின் குடும்பத்திலும் இருந்தன. தந்தையில்லாத அந்தக் குடும்பம் சிறீமா காலத்துப் பஞ்சத்தோடு போராடியபடியே வாழத் தொடங்கியது. ஆறு சகோதரர்கள். அவர்களில் திருமணமாகாத அக்காமாரும் அடக்கம். சீதனம் கொடுத்தால்தான் பெண்பிள்ளைகளைக் கரைசேர்க்க முடியும் என்ற எங்கள் யாழ்ப்பாண வாழ்க்கை முறைமைக்கு மத்தியில் அம்மாவுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ரவிதான். ரவி படித்துப் பட்டம் பெற்றுக் குடும்பத்தைத் தாங்குவான் என்பது அம்மாவின் பெருங்கனவு.

ரவியும் அந்தக் கனவுடன்தான் மொறட்டுவப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தார். இரண்டு வருடங்கள்தான். ஒரு கட்டடக்கலைஞனாக வெளியே வரவேண்டியவரின் கனவு, வேட்கை எல்லாவற்றையும் 1986 ஜூலைக் கலவரம் சுக்கு நூறாய் உடைத்துப் போட்டது. சொந்த நாட்டிலேயே அகதியாகி, கப்பலில் ஊர் வந்து சேர்ந்தார்.

அதன் பின்னான காலத்தில் இயக்கம்-போராட்டம்-விடுதலை என்றொரு புதியபாதையை அவர் தேர்ந்தெடுத்தார்.

தான் ஒரு கட்டடக்கலைஞனாகி தனது உழைப்பில் குடும்பத்தைத் தாங்குவது, சகோதரிகளுக்கு சீதனம் கொடுத்து திருமணத்தை நடாத்தி வைப்பது… போன்றவற்றிற்கான சாத்தியங்களை விட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் தன் போன்ற எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என்பதை ரவி முழுமையாக நம்பினார். கட்டிடக்கலைஞனாகும் கனவை உடைத்துப் போட்ட ஜூலைக்கலவரத்தினால் மனதில் ஏற்பட்டிருந்த விசனமும் இன்னும் பலவும் அந்த நம்பிக்கையுடன் சேர்ந்து அவரை அந்தத் துணிச்சலான முடிவை எடுக்க வைத்தன.

அதை ரவி இப்படிக் குறிப்பிடுகிறார்.

படிப்பு, குடும்பச்சுமை எனக் காய்ந்து போன வரப்பில் சிறு ஓடையாக ஓடிக் கொண்டிருந்த என் பால்ய கால வாழ்வை மடைமாற்றி புதிய பாதையில் திறந்து விட்டேன். துணிச்சலா, அப்பாவித்தனமா, விடுதலை வேட்கையா எதுவோ தெரியாது. புலனாகாத அந்தப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பரவினேன் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை. (அத்தியாயம்:1, பக்கம்:12)

அத்தான் வேலை செய்யும் கடையில், ஒருவரிடம் கடிதத்தைக் கொடுத்து வீட்டில் கொடுக்கச் சொல்லிவிட்டு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டார்.

ல்லைவெளி தாண்டிச் சென்று கடலில், வள்ளத்தில் பின்தளம் என்னும் இந்தியாவை நோக்கிச் செல்லும் அந்தக் கடற்பயணம் சவால் நிறைந்த பெரும் ஆபத்தான பயணம். பழுதடைந்த மோட்டார்கள், ஆழ்கடல், அலை, நேவி, ரோந்து… என்று பலவற்றைக் கடந்து ரவியும் இன்னும் பதினெட்டுப் பேரும் ‘மண்ணுக்காய் உழைக்கச் செல்கிறோம்‘ என்ற அர்ப்பணிப்பு மனநிலையுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் இந்தியக்கரையில் கால் வைக்கிறார்கள். அவர்களில் ரவியின் நண்பர்களான யோகன், பாலன் இருவரும்  அடக்கம். முதல்நாளே சாப்பாடு கிடைக்கவில்லை. வெறும் தண்ணீரைக் குடித்து விட்டு பயண அலுப்புத் தீரத் தூங்கி விடுகிறார்கள்.

அதன் பின்னான இயக்க(கழக) நடைமுறைகளில், ஒரு மொட்டைமாடிக் கட்டிடத்தில் ரவி, யோகன், பாலன் மூவரும் ரகு, ஆனந்தன், கரன் ஆகிறார்கள்.

அங்கிருந்து ஒரு நடுநிசியில் எல்ப் ரக ட்றக் வண்டியில் ‘பி‘ முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். முகாம் பற்றிய பெரியதும் சிறியதுமான பல கற்பனைகளை வளர்த்த படி ரகு ஆகி விட்ட ரவி முகாமை வந்தடைந்தான். தலையில் தொப்பி, கட்டைக் காற்சட்டை, பெனியனுடன் எஸ்.எம்.ஜீ  போன்ற ஆயுதம் தாங்கிய இருவர் சம்பிரதாய முறைப்படி எல்லோரையும் நோட்டம் பார்த்து, பரியரைத் திறந்து உள்ளே போக விடுகிறார்கள்.

சுமார் பத்துக் கொட்டில்கள் வரை  ஒரு சவுக்கம் காட்டுக்குள் ஒளிந்திருந்தன. நடுவிலே ஒரு பெரிய வெளி. அந்தக் கொட்டில்களுக்குள் ஏற்கெனவே பயிற்சிக்கென வந்தவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஊரிலிருந்த பொழுது கழகத்தின் அரசியற் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ரவியே, பின் தளப்பயிற்சிக்கென் அனுப்பி வைத்த இந்திரன், சந்திரன் ஆகியோரும் இருந்தார்கள்.

அடுத்தநாளே முகாம் ஒழுங்கு விதிகள் இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன. முதல் நாளைய இரவின் இருட்டில் ‘எஸ்.எம்.ஜீ‘ என்று ரவி நினைத்த ஆயுதம் வெறும் சவுக்கம் கொட்டனாக இருந்தது. அந்தச் சவுக்கம் கொட்டனை வைத்துக் கொண்டுதான் சென்றிக் காவலாளிகள் கூட அங்கு காவலுக்கு நின்றார்கள். ஆயுதங்களைப் படங்களாக மட்டும் கொப்பிகளில் பிஸ்ரல், ஏகே-47, எஸ்எல்ஆர், எல்எம்ஜீ, ஆர்பிஜி…  என்று கீறிவைத்துப் பாடமெடுத்தார்கள். பின்தளப் பயிற்சிகளும் சவுக்கம் கொட்டன்களுடன்தான் அங்கு நடந்தன.

எல்லாமாக 320 பேர் வரை அங்கிருந்தார்கள். பயிற்சிகள் புழுதியிலும் வெயிலிலும் தொடர்ந்தன. சாப்பாடு ஒரு சிறைச்சாலையில் கிடைக்கும் சாப்பாடு போல எல்லோருக்கும் கிடைத்தது. முகாம் முழுக்க ஏதோவொரு அவிழ்க்க முடியாத புதிர் மெளனித்திருந்தது. மனம் விட்டுப் பேசவோ ஏன், எதற்கு, எப்படி என்று கேட்கவோ முடியாத ஒருவித அந்தரமான சூழ்நிலையை ரவியால் உணர முடிந்தது.

தொடர்ந்த நாட்களில் புதிதாக முகாமுக்கு வந்தவர்களும் சென்றிக்கு நிற்கும் வேலையைச் செய்யப் பணிக்கப் பட்டார்கள். முகாமின் முன்வாசலிலும் பின் வாசலிலும் இருக்கும் உயரமான பரண்களில் மேலேயும் கீழேயுமாக இருவர் நின்று காவல் புரிவார்கள். முகாமின் மற்றைய மூலைப்பகுதிகளிலும் நான்கு பக்க வியூகம் இருக்கும். சக தோழர் ஒருவர் இவர்களைக் கண்காணித்த படியே திரிவார். அவர்கள் எல்லோருக்குமான ஆயுதங்கள் சவுக்கம் கொட்டன்கள்தான்.

அன்று அதிகாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை ரவியின் முறை. முன் வாசல் பரணின் மேலே ரவி. கீழே, இலங்கையில் தீயணைப்புப்படையில் வேலை செய்த பரம். சவுக்கம் தோப்பை மூடியிருந்த இருள், அதற்குள் நிலவிய பேரமைதி எல்லாமே முதல்நாள் காவல் என்பதால் ரவியை அச்சுறுத்த முனைந்து கொண்டிருந்தன.

திடீரென, காற்றும் உறைந்து போகிற அந்தப் பேரமைதியைக் கிழித்துக் கொண்டு சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல் அது. நரம்புகளைக் கைப்பிடியாய்ப் பிடித்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்த அந்த ஒலி இப்போ ரவிக்குக் கேட்டது. மனிதர்களின் ஒலி இப்படிக் குரூரமாகவும் ஒலிக்க முடியுமென்பதை அன்றுதான் ரவி உணர்ந்தான். அங்கிருந்து ஒரே உரப்பல் ஒலிகளும் உங்களுக்கு அண்ணா இல்லையா… தம்பி இல்லையா என்ற நடுங்கி எழும் ஈனக்குரலும் அதைச் சிதைக்கும் அதட்டல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. சவுக்கம் தோப்பின் அமைதி உடைந்து சின்னா பின்னமாகியது. ரவிக்குப் பதட்டமும் என்ன நடக்கிறது என்று தெரியாத திகைப்பும். பரம் மயங்கி வீழ்ந்து விட்டான்.

இந்தச் சம்பவம் ரவியைப் பெரிதும் பாதித்தது. ரவி மனதளவில் நொருங்கிப் போனான். அடுத்தநாள் பயிற்சிக்கு வெளியில் போகும் போது சத்தம் வந்த இடத்தை உற்று நோக்கினான். ஒரு சிறு கொட்டில் அங்கு ஒளிந்திருந்தது.

அதன் பின் ஒருநாள் உமா மகேஷ்வரன் அங்கு, அந்த முகாமுக்கு வந்தார். அந்த நாள் அந்தக் கொட்டில் காணாமல் போயிருந்தது. வேய்ந்திருந்த கிடுகுகள் மட்டும் முகாமின் முன்வாசல் வழியில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உமா மகேஸ்வரன் போன பின், அடுத்தநாள் மீண்டும் அக்கொட்டில் அந்த இடத்தில் முளைத்திருந்தது.

ரவியின் மனதில் அமைதியின்மையும் சந்தேகமும் தலை விரித்தாடின. எந்த உண்மையையும் அங்கிருக்கும் யாரிடமும் கேட்டு அறியவோ, தெளியவோ, வெளிப்படையாகப் பேசவோ முடியாதபடி ‘இராணுவ இரகசியம்‘ என்றதொரு பெருஞ்சுவர் ஒவ்வொருவரையும் தடுத்து நிறுத்தியது. எல்லோரும் அச்சம் கலந்த மெளனத்துடன் அங்கு உலவினார்கள்.

தொடர்ந்த நாட்களலும் அந்த விசாரணைக் கொட்டிலுக்குள் யாராவது ‘புலிகளின் உளவாளி‘, ‘காட்டிக் கொடுத்து விட்டான்‘, ‘துரோகி‘ என்பதான அடைமொழிகளுடன் உளன்றியில் தலைகீழாகத் தொங்கினார்கள். விசாரணை என்ற பெயரில் உடலில் சதையைக் கீறி உள்ளே மிளகாய்த்தூள் வைக்கப்பட்டார்கள். செத்தல் மிளகாய்ச்சாக்கால் முகத்தை மூடிக் கட்டப்பட்டார்கள். உயிர் போகும் வரை சவுக்கம் கொட்டனால் அடித்து நொருக்கப் பட்டார்கள். எதிர்த்துக் கதைப்பவர்களும் ஏன், எதற்கு, எப்படி? என்று கேள்வி கேட்பவர்களும் அதே உளன்றியில் தொங்கிச் சிதைந்தார்கள். அந்த முகாமிலிருந்து தப்பியோட முனைந்தவர்களில் ஒருவர் கூடத் தப்பாது இழுத்து வரப்பட்டு எல்லோர் முன்னிலையிலும் வைத்து உடல் கிழிந்து, உயிர் பிரியும் வரை அடித்து, உதைத்துக் குதறப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்கள் அந்தச் சவுக்கம் காட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டார்கள். பின்னர் பொறுப்பாளர்கள், உளவுப்படை என்ற பெயர்களில் அராஜகம் செய்து கொண்டிருந்தவர்களால் “அவனைக் காணவில்லை. தப்பியோடி விட்டான்“ என்று இலகுவாகச் சொல்லப் பட்டார்கள்.

ஈழவிடுதலை, மண்ணின் விடுதலை, சோசலிசதமிழீழம்… என்ற கனவுகளோடு வந்தவர்கள் அந்த முகாமுக்குள் அடிமைகள் போலவும் குற்றம் புரிந்தவர்கள் போலவும் கைதிகள் போலவும் சற்றேனும் சுதந்திரம் அற்றவர்களாய் நடாத்தப்பட்டார்கள். அவர்களுக்கான வெளியுறவுத் தொடர்பு என்பது அறவே இல்லாமற் செய்யப்பட்டிருந்தது.

“எதற்காக இங்கு வந்திருக்கிறேன்?“ என்று தன்னையே தான் கேள்வி கேட்டுச் சோர்ந்து போகும் ரவியை கழகம் பற்றிய உற்சாகமான செய்திகளை வழங்கும் ‘தமிழீழத்தின் குரல் வானொலி‘ தான் மீண்டும் மீண்டுமாய் உற்சாகப்படுத்தி, போராளியாக மாற்றிக் கொண்டிருந்தது.

முகாம் வாழ்க்கை பல மாதங்களைக் கடந்து விட்டிருந்தது. ரவிக்கு நெஞ்சுச்சளி, இருமல் போன்ற உபாதைகள் வரத் தொடங்கியிருந்தன.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கழகத்தின் தொலைத்தொடர்புப் பயிற்சிக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் படலம் ஆரம்பமானது. அந்தப் பயிற்சிக்காக ரவி இருந்த இந்தப் ‘பி‘ முகாமிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நால்வரில் ஆனந்தன், டாக்குத்தன், சிங்கப்பூர் உட்பட ரவியும் ஒரு ஆள்.

உண்மையில் ரவி படித்திருந்தது தான், நெஞ்சை உறைய வைக்கும் கொடூரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த அந்த முகாமிலிருந்து வெளியேறும் பெரும் வாய்ப்பை ரவிக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. குறைந்த பட்சம் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர்களைத்தான் அந்த வேலைக்கு அவர்கள் தேர்வு செய்தார்கள். அதன் பின்னான போராட்ட வாழ்க்கை ரவிக்கு சற்று நம்பிக்கையைக் கொடுத்தது.

தஞ்சாவூரிலிருந்த ஒரந்தராயன்குடிக்காடு என்ற இடத்தில் கழகத்தின் தொலைத்தொடர்பு முகாம் இருந்தது. தென்னந்தோப்புகள், வீடுகள், ஆறு… என்பவற்றிற்கிடையே இருந்த அந்த முகாம், சவுக்கம் காட்டுடன் ஒப்பிடும் போது ஒரு ஐந்து நட்சத்திர விடுதி போன்றதான பிரமையை ரவிக்குக் கொடுத்தது. 40பேர் அங்கு வேலையில் இருந்தார்கள். சுவையான சாப்பாடு, தென்னைமர நிழலில் ஓய்வு, ஆற்றுக் குளிப்பு, கிராமியவாசனை, கலகலப்பு… என அந்த வசதியான வாழ்க்கையும் வகுப்புகளும் அந்நியோன்யமான, மனந்திறந்த உரையாடல்களும் ரவிக்குப் புத்துணர்ச்சியைக் கொடுத்தன. ரவி அங்கு ‘ஜோன்‘ ஆக மாறியிருந்தான்.

ஏறக்குறைய நாங்கள் மறந்து போய்க்கொண்டிருக்கிற Morse Code பயிற்சியும் அங்கு ரவிக்குக் கிடைத்தது. வேற்று மனிதர்களுடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்தன. Morse Code செய்திப் பரிமாற்றத்திற்கு ஆங்கிலம் கண்டிப்பாகத்  தெரிந்திருக்க வேண்டுமென்பதால் பெண் தோழர்களுக்கு ஆங்கில வகுப்பெடுக்கும் வாய்ப்பும் பெண்தோழர்களின் முகாமுக்குப் போவதற்கான அனுமதியும் கூட ரவிக்குக் கிடைத்தன. அங்கிருந்த பத்துப் பெண்களுக்கும் ஒவ்வொரு கதை இருந்தாலும் அவர்களில் ஒருத்தியான மாலிக்கும் ரவிக்கும் இடையில் காதலும் முகிழ்த்தது. கண்களால் மட்டும் பேசிக் கொண்ட காதல் அது.

தொடர்ந்த நாட்களில் புதுக்கோட்டையிலிருந்த சுடுதல் பயிற்சிக்கான முகாமில் துப்பாக்கியால் சுடும் பயிற்சிகளும் கிடைத்தன. ஆயுதங்களைப் பார்க்கவும் தொட்டுணரவும் முடிந்த அந்தப் பொழுதில் தான் முழுமை பெற்றுவிட்டதான உணர்வு ரவிக்கு வந்தது. இருவாரகால இராணுவப்பயிற்சியை முடித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் புறப்படும் போது ரவி மட்டுமல்ல பயிற்சி எடுத்த எல்லோருமே தாம் போராளிகளாக முழுமைபெற்று விட்டதாக உணர்ந்தார்கள். அந்த உற்சாகத்துடன்தான் தொலைத்தொடர்பு முகாமுக்குத் திரும்பினார்கள்.

ஒரு சிலநாட்கள்தான் கடந்திருக்கும். எல்லா உற்சாகத்தையும் தகர்த்தெறியும் செய்தியொன்று முகாமுக்குள் பரவியது. “விடுதலைப்புலிகளின் பிரச்சார எழுத்துப்பிரதிகளை மதில்களில் ஒட்டிக்கொண்டிருந்த ஆறு இளைஞர்கள் சுழிபுரத்தில் வைத்து கழகத்தின்(PLOTE) உளவுப்படையால் கைதுசெய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார்கள்.“ ரவி அதிர்ந்து போனான். அவனால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது எதிர்காலம் என்னவாக இருக்கும்? எமது இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது? ஏன் எதையுமே அவர்களுடன் வெளிப்படையாகப் பேசமுடியாதிருக்கிறது?  என்று பல கேள்விகள் ரவியின் மனதில் எழுந்து, அவனை அலைக்கழித்தன.

அதன் பின்னான சந்ததியார் பிரச்சனை, தொடர்ந்த உட்பூசல்கள்… எல்லாமே கழகம் தமிழீழத்தை வென்று தரும் என்ற நம்பிக்கையை உடைத்தெறிந்தன. இறுதியில்,  உயிர்தப்பினால் போதும் என்ற நிலையில் சொல்லாத காதல், போராளிக் கனவு… எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்கு ஓடி விட ரவி தீர்மானித்தான். பொறுப்பாளர்கள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தைத் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டு அராஜகம் புரிந்தவர்கள் மத்தியில் நேசம் மிகுந்தவர்களும் இருந்தார்கள். ரவி ஊர் வந்து சேர்ந்தான்.

ஊரிலும் ரவியின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கவில்லை. ‘தப்பியோடியவன்‘ என்ற பெயரில், இணைந்து கொண்ட  PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) அமைப்பினாலேயே தேடப்பட்டுக் கொண்டிருந்தான்.

இந்த நிலையிலும் ரவி தப்பிப் பிழைத்து, சுவிசுக்கு வந்து சேர்ந்து விட்டது பெரும் அதிசயம். ரவியின், எதையும் ஆழ்ந்து, அறிவார்ந்து நோக்கும் தன்மை, தன்னம்பிக்கை, உறுதி… போன்றவை அந்த அதிசயத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இந் நாவல் ஓகஸ்ட் 2020 இல் விடியல் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 220 பக்கங்களையும் 0 இலிருந்து 30 வரையான அத்தியாயங்களையும் கொண்ட இந்நாவலுக்கு விடியல் பதிப்பகத்தினால் பதிப்புரையும் ரவி அவர்களால் என்னுரையும் எழுதப் பட்டுள்ளன. அட்டைப்படம் ரவியின் மகள் ஆரதியினால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான படத்தை அவரது இன்னொரு மகளான நிறமி எடுத்துள்ளார். ISBN:978-81-89867-24-5

இதில் 71 பக்கங்களுக்கு அந்த ‘பி‘ முகாம் வாழ்க்கை பற்றி, விபரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பதினொரு அத்தியாயங்கள். ரவியின் தேர்ந்த எழுத்திக்களினூடு, ‘பி‘ முகாமும் அதைச் சுற்றியுள்ள சவுக்கம் தோப்பும் அங்கு நடைபெறும் அராஜகங்களும் வாசகரின் மனங்களில் காட்சிப்படிமங்களாகப் பதிந்து விடுகின்றன. உளன்றியில் தலைகீழாகத் தொங்கிச் சிதறிச் சின்னா பின்னமாகுவோர் ஒருவித அதிர்வையும் அச்சத்தையும் ஏற்படுத்தி மனசை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறர்கள்.

‘எனது கதையையே எழுதுகிறேன்‘ என்றும் இந்த நம்பிக்கைகளையெல்லாம் பின்தளம் கிளிசலாக்கியது. உயிர் தப்பி ஊர் வந்து சேர்தலே வாழ்வின் மிகப்பெரும் பாக்கியமாகிப் போனது. (அத்தியாயம்:1, பக்கம்:12)

என்றும் ஆரம்பத்திலேயே ரவி குறிப்பிட்டு விட்டதால், இந்த ‘பி‘ முகாம் வாழ்க்கையிலிருந்து ரவி தப்பி விட்டார் என்பது வாசகர்களுக்குத் தெரிகிறது. இருந்தாலும் அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை. ‘எப்படித் தப்பினார்?‘‘ என்ற கேள்வி கதை நெடுகிலும் கூடவே வந்து கொண்டிருக்கிறது.

நாவலில் ஊருப்பட்ட கதை மாந்தர்கள். அது ஒரு நாவலுக்குப் பலமா பலவீனமா என்று தெரியவில்லை. ஆனால் இந்நாவல் ஒரு உண்மையின் சாட்சி. வெளியிலிருந்து பார்க்கும் பார்வையாளனின் எழுத்தாக இல்லாமல் உள்ளிருந்து பார்த்தும் அநுபவித்தும் நொந்து, வெந்து போன ஒருவனின் வாக்குமூலம். அப்படிப் பார்க்கும் போது அத்தனை மாந்தர்களும் கதைக்குத் தேவையானவர்கள் தான்.

பின்தளம் என்னும் இந்தியாவில், ரவி போகுமிடமெல்லாம் வேம்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வேம்புகள் ஒவ்வொன்றும் ரவியை அணைக்கின்றனவா, உறுத்துகின்றனவா அல்லது ஏங்க வைக்கின்றனவா என்பது தெரியவில்லை. ஆனால் அவை ஒரு தாயைப் போல ரவியை வாஞ்சையுடன் நோக்குகின்றன. ஒரு குறியீடு போல நம்பிக்கையின் ஒளிர் போல ரவியை உற்சாகப்படுத்துகின்றன. சைபர் அத்தியாயத்தில் கூட ரவியின் சுவிஸ் வீட்டினுள்ளே அறையின் மூலையில் ஒரு வேப்பங்கன்று அசையாமல் நிற்கிறது.

இந் நாவலின் மூன்றாவது அத்தியாயம் ஒரு வேம்பு கதைப்பது போலப் படர்க்கையில் அமைந்துள்ளது. ரவியின் வீட்டு முன்றலில் வானத்துக்கும் தரைக்குமாய் தோகை விரித்திருந்த அந்த வேம்பு ரவியின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. ஆத்மார்த்தமாக ஒன்றியிருப்பது.  அது சொல்லும் அந்தக் கதை உணர்வு பூர்வமானது. மனசைத் தொடுவது. குறிப்பாக ரவியின் அம்மாவின் உணர்வலைகளையும் மகன் போராடப் போய் விடுவானோ என்ற அச்சத்தையும் தவிப்பையும் வேம்பினூடாக ரவி விபரிக்கும் விதம் அற்புதமானது. ஆனாலும் இந்த அத்தியாயம் நாவலின் அமைப்பைக் குழப்புவது போலவே தோன்றுகிறது. இதை வேம்பு கதை சொல்வது போல இல்லாமல் வேம்புக்கும் தனக்குமான பிணைப்பை ரவியே சொல்வது போல அமைத்திருந்தால் ஒரு வேளை இன்னும் பொருத்தமாகவும் அழகாகவும் இருந்திருக்கலாம்.

போராட என்று எமது நாட்டு இளைஞர்கள் வீட்டை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் போன போதும் அதன் பின்னான காலங்களிலும் எல்லோரையும் விட துயரில் தோய்ந்து மனம் நைந்து போனவர்கள் அம்மாமார்கள் தான். அவர்களது சோகத்தை எழுத்தில் வடிக்க யாரிடமும் வார்த்தைகளில்லை. கதை நெடுகிலும் அம்மாவைப் பற்றிய அந்தச் சோகம் இழைந்தோடிக் கொண்டேயிருக்கிறது.

ரவியின் ‘செட்டை கழற்றிய நாங்கள்‘ கவிதைத் தொகுப்பில் தோய்ந்து போயிருந்த சோகத்துக்கு இருப்பை இடம் பெயர்த்து சுவிசுக்கு மாற்றி விட்டு, அங்கு விருப்போடு அமர முடியாது தவிப்பதுதான் காரணம் என்று எண்ணத் தோன்றியது. இந் நாவல் அந்தச் சோகத்துக்கு அது மட்டும் காரணமல்ல என்பதை உணர்த்தி நிற்கிறது.

ரவியின் சுவிஸ் வாழ்க்கையைக் கூறும் முதலாவது அத்தியாயம் வாசகர்களைக் கண்டிப்பாகக் கவர்ந்திருக்கும். துயரும் அழகும் நம்பிக்கையும்… என்று  உணர்வோடொன்றியதொரு அத்தியாயம் அது.

அதிலே, மனதுக்கு மிகவும் நெருக்கமாக உணரும் படியாக ரவி கூறுகிறார்,

மலையுச்சியொன்றில் சுற்றுலா விடுதியில்  முதல் வேலை கிடைத்தது. வேலையும் அறையும் எனது உலகமாகியது. தனிமையில் இருந்தேன். அப்படியென்றும் இல்லை. அறையில் ஒரு பாடல் என்னுடன் சகவாசம் செய்தது. அப்போதெல்லாம் சி.டி இல்லாத காலம். கசற் இல் இரண்டு பக்கமும் இந்த ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தேன். அதன் ஒலியை உதறி விடுகிற போது ‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா..‘ என்று அது பாடலாகிக் கொண்டிருக்கும். அதைக் கேட்டுக் கொண்டே நான் உறங்கிப் போன நாட்கள் பல. இன்றும் கூட அந்தப் பாடலைக் கேட்டால் நான் பழசாகி விடுகிறேன்.

மேலும் அழகாகத் தொடர்கிறார்,

மும்முனை என்று நேரடி மொழிபெயர்ப்பில் அழைக்கப்படுகிற அந்த முடிவில் ஒரு பெரிய பாறைக்கல் இருக்கிறது. உலகம் முடிகிற இடமாக அது தோன்றவில்லை. உலகம் உனக்காக விரிந்தே இருக்கின்றது என்பதாக அது பசுமை மேவிய இளங்காற்றை உயிர்ச்சுவாசத்திடம் தூதுவிட்டு வருடிக் கொண்டிருக்கும். அதில் நான் குந்தியிருக்கிற போது காலடியின் கீழ் பெரும் பள்ளமாகப் பதிந்திருக்கிற சரிவு ஓர் பச்சை ஏணை போலக் குழிவாகி மறுமுனை மலையுச்சியில் முடிந்திருக்கும். அந்த ஏணைக்குள் நீல ஏரி உறங்கிக் கொண்டிருக்கும். சுற்றிவர மலைகளதும் அது விரித்துப் போட்டிருக்கிற மலையடிவார மடிப்புகளினதும் பிடிக்குள் மரக்கூட்டங்களிடையே அழித்தழித்து நிறங்களால் வரையும் முகில்களைக் கண்டு இரசிக்கிற குழந்தையாய்ப் போவேன். (அத்தியாயம்:1 பக்கம்:13)

இதைப் போல நாவலில் பல உள்ளன. ரவியின் இயற்கையை ரசிக்கும் தன்மையும்  அதைக் கவித்துமாக வெளிப்படுத்தும் மொழிநடையும் எளிமையான வார்த்தைப் பிரயோகங்களும் சமயத்தில் எள்ளல் கலந்த எழுத்துக்களும்… என்று அவை சுவாரஸ்யமாகவும் பிரமிப்பூட்டுபவையாகவும் வியக்க வைக்கின்றன. இருந்தாலும் இந்த முதலாவது அத்தியாயம் நாவலோடு பொருந்தியும் பொருந்தாமலும் நிற்பது போன்றதான ஒரு பிரமையையும் தோற்றுவிக்கின்றது. சற்று மெருகேற்றினால் இதுவே ஒரு அழகிய தனிச் சிறுகதையாகப் பரிணமித்திருக்கலாம்.

மற்றும் 35 ஆண்டுகாலமாகத் தன்னோடு கொண்டு திரிந்ததை கொரோனா காலத்தில் தொகுத்து நூலுருவாக்கி முடித்த அவசரம் ஆங்காங்கு நூலில் தெரிகிறது. ரவிக்கு உள்ள எழுத்தாற்றலுக்கும் எத்தனையோ நூல்களைத் தொகுத்த அனுபவத்துக்கும், ரவி இன்னும் கொஞ்சம் நேரமெடுத்துச் செயற்பட்டிருந்தால் நாவலின் அமைப்பு இன்னும் அழகாகவும் நேர்த்தியாகவும் அற்புதமாக அமைந்திருக்கும்.

இந்த நேரத்தில் தவிர்க்க முடியாமல் ஒரு விடயம் ஞாபகத்தில் வந்து கொண்டேயிருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலை இயக்கங்கள் பல தோன்றின. அவை கையெழுத்துப் பிரதிகளாகவும் அச்சுப்பிரதிகளாகவும் பலவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டன. வீடுவீடாகக் கொண்டு சென்று அவைகளை ஒரு ரூபா, இரண்டு ரூபா என்று விற்றன. அப்போதெல்லாம் அவர்கள் எந்த இயக்கத்திலிருந்து வருகிறார்கள் என்று நாங்கள் பார்க்கவேயில்லை. எங்கள் பிள்ளைகள், எங்கள் அண்ணமார், எங்கள் தம்பிமார், எங்களுக்குச் சுதந்திரத் தமிழீழம் எடுத்துத் தரப் புறப்பட்டிருக்கிறார்கள்… என்றுதான் அன்போடும் புனிதத்தோடும் அவர்களை நோக்கினோம். மிகுந்த மனநிறைவோடு அவைகளை வாங்கிப் படித்தோம்.

இப்போது எஞ்சியிருப்பது ஏமாற்றமும் வேதனையும் தான்!

சந்திரவதனா
18.01.2025

  •  

சிந்தனையில் என் பைரவி-20 💙🖤

FB_IMG_1748865248373.jpgஅத்தியாயம் 20

"என்னடி மணி ஒன்பது ஆகுது. இன்னும் உன்னை கூட்டிட்டு போறதுக்கு உங்க டிரைவர் வர காணோம்?"

"இல்லடி! நான் இன்னைக்கு முக்கியமான பிராக்டிகல் படிக்கணும் அப்படின்னு எங்கப்பாகிட்ட அழுது கூத்தாடி இங்கயே தங்கறதுக்கு பர்மிஷன் வாங்கி இருக்கேன் டி."

"ஹே வாவ் சூப்பர்ல!! அது சரி என்ன பிராக்டிகல்?? அப்படி எல்லாம் படிக்கிறதுக்கு ஒன்னும் இல்லையே? என்கிட்ட சொல்லவே இல்ல?"

"இல்ல சடனா எடுத்த முடிவுதான். "

"எனக்காக தங்க போறியா?? எங்க அண்ணனுக்காகவா??அப்போதிலிருந்து வாசலையே...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-18 💙🖤

FB_IMG_1748586519524.jpgஅத்தியாயம் 18

வேகமாக ஓடிவந்த பைரவி மூச்சு வாங்கி கிரவுண்டு ஓரத்தில் நின்றவளுக்கு கண்களில் புதிதாக கண்ணீர் வந்துவிட்டது. அது ராணியை ஏமாற்றுகிறோமோ என்றுதான்.

ஆம் ராணியிடம் போய் கூறிவிட்டு தான் வந்துருக்கிறாள். இவளுக்காவது கவன சிதறல் வருவதாவது.. ரித்தேஷை பற்றியே கேட்டுக்கொண்டு வந்தவளுக்கு மேலும் அவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அவனை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க வேண்டும் என்ற உந்துதலினால் அவள் இப்படியே ராணியை கழட்டி விட்டு விட்டு ஓடி வந்து விட்டாள். நமக்கு பிடித்த...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-17 💙🖤

FB_IMG_1748586519524.jpgஅத்தியாயம் 17

"மச்சான்.. மச்சான்.. டேய்ய் ரித்தேஷ்."

"ப்ச் என்னடா??"

"இப்படி கரடி மாதிரி கத்திட்டு இருக்கேன். நீ காதுலையே வாங்காம என்னடா பாத்துட்டு இருக்க??"

"கரடி தானே கத்துதுன்னு கண்டுக்கல டா."

"கொழுப்பா??.. டேய்ய் டேய்ய்ய் அங்க அப்படி என்னடா பாக்குற??"

என்று ரித்தேஷ் பார்வை செல்லும் இடத்தை எட்டி அவனது தோழனும் பார்த்தான்.

"ஆத்தி இவன் கண்ணுக்கு மட்டும் எப்புடி தான் லட்டா புள்ளைங்க மாட்டுதோ?"

"டேய்ய் அவ எந்த டிபார்ட்மென்ட்?? அவள பத்தி ஒன் ஹாவர்ல...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-16 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 16

அப்படியே கார்த்திக் பைரவியின் உறவில் விலகல்கள், விரிசல்கள் விரிவடைந்து கொண்டே சென்றன. ஆனால் பைரவிக்கு கார்த்தி மேலான ஆழ் மனசில் பதுங்கி இருந்த காதலினால் ஏதேனும் காரணம் சொல்லி கார்த்தியிடமே அவள் நாட்கள் வந்து முடியும்.

அஃது அவனுக்கு இன்பத்தை தரும் விதமாக இருக்காது ஏனென்றால் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்துக் கொண்டு அவனை அருவருப்பாக பார்த்துக் கொண்டு நிற்பாள். அவன் முகம் வாடும் போதெல்லாம் இவள் உள்ளுக்குள் சந்தோஷப்படுவாள். ஆனால் உண்மையில் இவள் சந்தோஷப்படவே...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-11 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 11

பைரவி, ராணி இருவரும் பாத்தாவது பொதுத் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தார்கள். எப்போதும் போல எட்டு மணிக்கு ராணி சந்திரா வீட்டிலிருந்து வாகனம் வர அவள் கிளம்பிவிடுவாள். இங்கயே சாப்பிட்டு செல்லட்டும் என்று அதற்கு முன்பே பைரவி இரவு உணவை செய்து சாப்பிட வைத்துவிடுவாள்.

"ஹே வாவ் ராணி இது கூட நல்ல ஐடியாவா இருக்குல்ல."

"எது டி??" வாயில் ரவா தோசையை அடக்கிக்கொண்டு பேசினாள்.

"இந்த செய்யுள் புரியாம படிக்க கஷ்டமா இருக்குன்னு எவ்வளவு நாள் புலம்பிட்டே இருந்தேன்...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-10 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 10

வாய் முழுக்கு பொரி உருண்டையை அடக்கி கொண்டு கன்னங்கள் உப்பி கூறியவளை ஓடிச்சென்று கன்னத்தோடு கடித்துவைதான் ராஜேஷ்.

"அய்யோ பாப்பா எனக்கு தோணல பாரேன்." என்றவன் நிம்மதியில் தன் தங்கையை முத்திட்டான்.

"கார்த்தி என்ன முழிச்சுக்கிட்டு இருக்க போ போயி நலங்கு வச்சு மாலை போடு."

அங்கிருந்த அனைவருக்கும் சந்தோஷம் தான். இது யாருக்கும் தோணவில்லையே.. ஒன்றாக வளர்ந்த பிள்ளைகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்!!

இன்னும் முழித்துக் கொண்டிருந்த கார்த்திக்கின் கையைப்...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-9 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 9

கார்த்திக்கும், பைரவிக்குமான நேசம் இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.. யாருமற்ற அனாதையாக ராஜேஷ் நிற்கும்பொழுது அவன் கையிலிருந்த ரோஜா குவியலான பைரவியை தான் கார்த்தியின் கண்கள் முதலில் வருடியது. இதுவரை எந்த பிள்ளையும் தூக்காத, தூக்கத் தெரியாத கார்த்திக்கு பைரவியை தூக்க கைகள் பரபரத்தது ஆனால் எப்படி கேட்க என்று தெரியவில்லை.

"டேய்ய் கொஞ்ச நேரம் பாப்பாவ என்கிட்ட தாயே நான் வச்சிருக்கேன்."

"போடா இவ என்னோட பாப்பா."

"ஹ்க்கும்!"

உதட்டை பிதுக்கி அழுகும் நிலையில்...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-8 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 8

கார்த்திக் கதவை தட்ட அவசியமே இல்லாது அவன் மனையால் திறந்துபோட்டுக் கொண்டு சோபாவில் வௌவால் போல தலைகீழாக படுத்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, உள்ளே வந்து பார்த்தவனுக்கு மூச்சு முட்டியது. தலை நிறைய பூ வைத்துக்கொண்டு வழக்கமாக வீட்டில் அணியும் நயிட்டி தான் அழுங்கிய நிலையிலும் கார்த்தி கண்களுக்கு தேவதை பெண்ணவள்..

அன்றொரு நாள் பள்ளி இறுதி நாள் கொண்டாடத்திற்கு நட்புகளின் தொந்தரவால் புடவை அணிந்திருந்தாள் அதுவும் முதன் முதலில்!!

"என்ன புடவைலாம்??"...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-3 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 3

ரித்தேஷ், திருவண்ணாமலை ஆளுங்கட்சி அமைச்சர் மகன்.. அப்பா அரசியல் என்று மக்கள் பணியில் இருக்க.. மகன், 'மது மாது உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு' என்று எந்நேரமும் இன்பத்தில் மிதக்க அரவணைக்க வேண்டிய அன்னை உயிருடன் இல்லையே!.

ஆடி கார் அவன் சொல்படி கேட்டு சாலையில் வளைந்து நெளிந்து பறந்தது..

"ரித்தேஷ்!!"

"சொல்லு பைரவி.."

"உனக்கு கோவமே இல்லையா என்மேல."

"கோவம் இல்லன்னு சொல்ல மாட்டேன் ஆனா வருத்தம் தான் அதைவிட அதிகமா இருக்கு."...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-2 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 2

பைரவிக்கும் ராஜேஷுக்கும் ஏழு வருடங்கள் வயது வித்தியாசம் இருந்தாலும் சில நேரங்களில் நண்பர்களாக தான் இருப்பார்கள். அதைத் தாண்டி ராஜேஷை பைரவி அண்ணன் என்று அழைத்ததே இல்லை எப்பொழுதும் அவளுக்கு வாடா போடா தான்.. தப்பித்தவறி என்றாவது ஒருநாள் அண்ணா என்று அழைத்தாலும், "என்னாடி எதும் வேணுமா" என்று கலாய்த்து விட்டு செல்வான். அதேபோன்று பல நேரங்களில் ராஜேஷ் பைரவியை பாப்பா என்று தான் அழைப்பான்.. சில நேரங்களில் சேட்டைக்காரியை டி என்று செல்லம்...

Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-1 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 1

அரக்கு நிற கூரைபுடவையில், தலை முதல் கால் வரை பச்சை கல் பதித்த 'குந்தன் வகை' ஆபரணம் பூட்டி சர்வ அலங்காரத்துடன், தனக்கு எதிரே எரிந்துகொண்டிருக்கும் ஓம குண்டதுக்கு இணையாக தன் மனம் ஏறிய கண்கள் மையுடன் கண்ணீரால் பள பளக்க அமர்ந்திருந்தாள் அவள்!!

தமிழ்நாட்டின் பக்தியில் முக்தி பெரும் மாவட்டமான திருவண்ணாமலை அருகே இருக்கும் மண்டபத்தில் தான் திருமண வைப்போகம் நடந்துகொண்டு இருக்கிறது.. அன்னை தந்தை இல்லாதவருக்கு அந்த அருணாச்சலனே எல்லாமுமாக...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-7 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 7

"ஆத்தா உள்ள வரலாமா??"

"ஹான் வாங்க பாட்டி."

வாசலில் ஒரு வயதான பெண் பூக்கூடையுடன் தயங்கி நிற்க அவரை இன் முகமாக உள்ளே அழைத்தாள் ராணி.

"என்ன பாட்டி நீங்க அனுமதிலாம் கேட்டுகிட்டு."

"ஏன் பாட்டி இப்புடி பாக்குறீங்க??"

" பாக்க நல்ல மகாலட்சுமி கனக்கா எங்க ராஜேஷ்க்கு தோதா தான் இருக்க.. உன்ன நாங்க சின்ன புள்ளையிலிருந்து இங்க ஓடி ஆடி ராஜேஷ் வீட்ல விளையாடுற புள்ளையா பார்த்து இருக்கோம். ஆனா பெருசா பழகுனது இல்ல.. பணக்கார வீட்டு பிள்ளை எப்படி இருப்பியோன்னு...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-6 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 6

"மச்சி ட்ரீட் வைடா."

"ம்ம்!! எங்க போகலாம் சொல்லுடா??"

"அய்ய்ய் ட்ரீட்டா அப்போ நான் சொல்றேன் நான் சொல்றேன். பைரவி பர்த்டே அன்னைக்கு ஒரு ஹோட்டல் போனோம்ல சும்மா மாசா இருந்துச்சே. கிளி புரோட்டா, கறி தோசை, அந்த நல்லி எலும்பு குருமா செம்ம டேஸ்ட். எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும் அங்க பக்கத்துலயே இஞ்சி டீ அதுவும் அந்த டவரா செட்டுல வச்சு வாவ்வ்வ்வ் ட்ரீட் ன்னா அது தான்."

சொல்லும் அவளை தலையில் அடித்துக் கொண்டு ராஜேஷ் பார்த்தாலும் அவன் பார்வை என்னவோ சற்று...


Read more
  •  

நாவல்: சில விவாதங்கள்

(24.2.2024 & 25.2.2024 ஆகிய தேதிகளில் எழுத்தாளர் பா. வெங்கடேசன் ஏலகிரியில் ஏற்பாடு செய்த ‘புரவி’ கூடுகையில் நாவல் அமர்வுக்காக எழுதிய கட்டுரை. இந்த கட்டுரை அகழ் இணைய இதழில் வெளியானது. மொழிபெயர்ப்பாளர் சுபத்ரா மெய்ப்பு நோக்கி அளித்தார். நன்றி. 'புரவி' கூடுகை சார்ந்து சில அவதானிப்புகளை எழுத வேண்டும். ஏலகிரியின் அரவமற்ற சுற்றத்தில் நல்லுணவுடன் நட்பார்ந்த சூழலில் இரண்டு நாட்கள் தீவிர விவாதங்கள் நடைபெற்றன. விஷ்ணுபுரம் காவிய முகாம்களில் கிடைக்கும் அதே விதமான தீவிர அனுபவம். உணவு இடைவேளைகளில், தேநீர் குடிக்க, காலை கடைகளில் என அலுக்காமல் உரையாடினோம். மயிலன், ஷஹிதா, தூயனுடன் ஊர் திரும்பும் பயணத்தின் போதும் பேச்சு தொடர்ந்தது.  சனிக்கிழமை இரவு உறங்கமுடியாமல் மண்டை முழுக்க சிந்தனைகள் முண்டிக்கொண்டிருந்தன.  மூளை நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது. அமைதிப்படுத்தி வசத்திற்குள் கொண்டுவருவதற்குள் பெரும்பாடு ஆனது. பா.வெவுடன் நிறைய உரையாடும் வாய்ப்பு கிடைத்தது நல்ல கற்றல் அனுபவம். புனைவு குறித்தும் இலக்கியம் குறித்தும் அவர் கொண்டுள்ள பார்வைகளில் இருந்து என்னுடையவை வேறென்றாலும் எனக்குள் விவாதித்துக்கொள்ள, எனது புரிதல்களை பரிசீலினை செய்துகொள்ள, கூர்தீட்டி கொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அமர்வுகளில் 15 எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள் என்றால் பார்வையாளர்களில் அதே எண்ணிக்கையில் எழுத்தாளர்கள் பங்கு பெற்றார்கள். இலக்கியத்தின் மீதான நம்பிக்கையே ஒன்றிணைக்கும் ஆற்றல்.  வெகு மக்களுக்கான இலக்கிய விழாக்களின் நோக்கம் வேறு. அவற்றில் அரிதாகவே புதியவற்றை நாம் கண்டடைய முடியும். இத்தகைய கூடுகைகளே அடிக்கடி நிகழ வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் 'யாவரும்' ஜீவ கரிகாலன் இரண்டு 'ஐந்திணை' கூடுகைகளை ஒருங்கிணைத்தார். சமகால எழுத்தாளர்கள் கூடி சமகால தொகுப்புக்கள் குறித்து உரையாடினோம். இவை தொடர வேண்டும்.  )





நாவல் எனும் இலக்கிய வடிவத்தை எப்படிப் புரிந்துகொண்டுள்ளேன், நாவலின் தனித்தன்மை என எவற்றைச் சுட்ட முடியும், நாவல் எழுதுவதில் உள்ள சிக்கல்கள் அல்லது சவால்கள் எவை, எனது நாவலின் வடிவத்தை நான் எப்படி வந்தடைந்தேன்? இக்கேள்விகளை எதிர்கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். 


நாவல் எனும் அடையாளம் மிகவும் பொதுப்படையானது. நாவல்கள் என நான் பள்ளிக் காலத்தில் வாசித்தவை தேவன், கல்கி மற்றும் சாவியின் படைப்புகள்தான். பி.வி. தம்பி எழுதிய ‘கிருஷ்ணப் பருந்து’ நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சி மலர்’ ஆகியவற்றை வாசித்தேன். இதழ்களில் தொடர்களாக வந்தவை. ஓவியங்களும் இடம்பெறும். அவற்றை மொத்தமாக பைண்டு செய்து வைத்திருந்தார்கள். இந்திரா சௌந்தரராஜனை பாக்கெட் நாவலில் வாசித்திருக்கிறேன். தொடர்களாக இல்லாமல் மிகச் சுமாரான தாள்களில் மலிவான விலையில் ஒரு பயணத்தில் வாசிக்க ஏதுவான வடிவில் வெளிவந்த கதைகளை பாக்கெட் நாவல் என்றார்கள். இவற்றை வாசித்து வந்தவன் தற்செயலாக சுந்தர ராமசாமியின் ‘ஜெ. ஜெ. சில குறிப்புகளை’ வாசிக்க நேர்ந்த போது மிகுந்த குழப்பம் உண்டானது. ஏனெனில் அதையும் நாவல் என்றே குறிப்பிட்டார்கள். பதின்ம வயதில் முதல்முறை வாசித்த போது அந்நாவல் சுத்தமாகப் பிடிபடவில்லை. ஆனால் வாசிக்காமல் வீசிவிட முடியாத வசீகரமும் கொண்டதாக இருந்தது. 


அதற்கு முன் வாசித்தவற்றுக்கும் ஜெ ஜெ சில குறிப்புகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என்பது ஜெ ஜெ பக்க எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எளிதாக வாசிக்க முடியாததாக இருந்தது. அடுத்து என்ன என ஏங்க வைக்கும் சுவாரசியமில்லை. இவையெல்லாவற்றையும் விட உலோகப் பரப்பை இரம்பம் அறுக்கும்போது ஏற்படும் கூச்சம்போல ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. அதன் பகடி என்னைச் சீண்டியது.     


 ஜெ. ஜெ. சில குறிப்புகள் வாசிப்பதற்கு முன் வாசித்தவற்றை நாவல்கள் எனச் சொல்ல முடியாது என்பதை இப்போது உணர்கிறேன்.  அவற்றைத் தொடர்கதைகள் எனச் சுட்ட இவை தொடர்களாக அக்கால இதழ்களில் வெளிவந்தன என்பது மட்டும் காரணம் அல்ல. தொடர்கதைகள் முதன்மையாக வாசகரை ‘அடுத்து என்ன’ எனும் ஊகத்தில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டவை. இன்றைய இணையத் தொடர்களின் முன்மாதிரி எனச் சொல்லலாம். சுவாரசியமே அதன் முக்கிய இயல்பும் நோக்கமும்.  நல்ல நேரக் கொல்லிகள் அல்லது சுய உய்வுக்கான புனைவு நூல்கள்- இவைதான் இளமைக் கால வாசிப்பை நிரப்பியவை. 


நான் வாசித்த தொடக்ககால நாவல்கள் அனைத்துமே என்னுள் ஆழ்ந்த அமைதியின்மையை, நிலைகுலைவை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் வாசித்த ஒவ்வொரு பிரதியும் முதல் காதலின் கள்ளமின்மையுடனும் அதே படபடப்புடனும், வாசிக்க முடிந்தது. இது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டிய இயல்பு என்றே நம்புகிறேன். எனினும் ‘நிலைகுலைவு’ என்பது என்னுள் நேர்ந்த எதிர்வினை. முற்றிலும் அகவயமானது. அதை அளவுகோலாகவோ தகுதியாகவோ கொள்ள முடியாது. வேறு ஒருவருக்கு இந்த நிலைகுலைவு எளிய கதைகளின் வழியே சினிமாவின் உணர்ச்சிப்பூர்வமான ஏதோ ஒரு காட்சி வழியாகக் கூட ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும், அதே நிலைகுலைவை இப்போது மீண்டும் அடைவேனா எனச் சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம்: இந்த நிலைகுலைவு ஏதும் அதிர்ச்சி மதிப்பீட்டினால் ஏற்பட்டதல்ல, மாறாக அறிதலால் நேர்ந்தது. நாம் நன்கறிந்த ஆனால் எதிர்கொள்ளத் தயங்கும் ஏதோ ஒரு பகுதியை நம்முள் அடையாளம் காண்பதால் நேர்வதாக இருந்தது என்பதே அதற்கு முந்தைய வெகுமக்கள் ரசனை வாசிப்பிலிருந்து முக்கியமான வேறுபாடாக இருந்தது. 


சுவாரசியமான நாவல்களை அல்ல, ‘ஈடுபடுத்தும்’ நாவல்களை வாசிக்க விரும்புகிறேன்.  சுவாரசியமான நாவலுக்கும் ஈடுபடுத்தும் நாவலுக்கும் இடையே வேறுபாடுள்ளதாக எண்ணுகிறேன். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவருவதையொட்டி அந்நாவல் குறித்துப் பேச முடியுமா என்றொரு நண்பர் கேட்டதன் பேரில் மறுவாசிப்பு செய்ய முயன்று தோற்றேன். பொன்னியின் செல்வன் எனும் சுவாரசியமான நாவல் எவ்விதத்திலும் என்னுள் ஈடுபாட்டை உருவாக்கவில்லை. தி.ஜாவின் ‘மோக முள்ளை’ சமீபத்தில் வாசிக்கும் போது பெரிதாகப் பேசப்பட்ட பாபு யமுனா உறவுச் சிடுக்குகள் மங்கி, கலைக்கும் கலைஞனுக்குமான உறவு குறித்து நாவல் எழுப்பும் விவாதங்கள் முக்கியமானதாகத் தென்பட்டது. மோகமுள் தொடராக வெளிவந்ததுதான், ஆனால் அது தொடர்கதையல்ல. ‘சுவாரசியமான’ நாவல்கள் திருப்பங்களை நம்பிச் செயல்படுபவை. வியப்புணர்வே அதன் மூலதனம். திருப்பங்களும் வியப்புணர்வும் முதல் வாசிப்பில் நமக்குப் புதிதாக இருக்கும். இவற்றை அறிந்தபிறகும் நாடிச்செல்வோமா? இவற்றைத் தாண்டி ஏதாவது கிடைக்குமா? சமீபத்திய உதாரணத்தைச் சொல்வதென்றால், எப்போதும் புத்தகக் கண்காட்சியில் அதிகமாக விற்கும் நூல்களில் ஒன்று கல்கியின் பொன்னியின் செல்வன். அத்தகைய ‘கல்ட்’ ஸ்டேட்டஸ் அதற்கு உண்டு. முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரும் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்னரும் மிக அதிகமாக அச்சாகி விற்பனையானது. சுருக்கப் பதிப்புகள் வெளியாகின. இந்தாண்டு சுத்தமாக விற்பனையாகவில்லை எனும் செய்தி வருகிறது. ஏனெனில் அது புதிதாக இல்லை. ‘மோக முள்’ எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் திரைப்படமாக வந்துவிட்டது, ஆனால் அதன் முன்னும் பின்னும் விற்பனையைப் பாதிக்கவில்லை. அதற்கான வாசகர்களால் மீண்டும் மீண்டும் கண்டடையப்படுகிறது. எப்போதும் ‘புதிதாகவே’ இருக்கிறது.  இலக்கியம் காலாதீத கேள்விகளை சமகாலச் சட்டகத்திற்குள் பேச வேண்டும் என்பதே என் வரையறை. நடராஜரின் வடிவமான ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியைக்கொண்டு இதை நான் விளக்கிக்கொள்வேன். ஒரு கால் அகாலத்தில் விண்ணைத் துளைத்திருக்க இன்னோரு கால் நிலையாகத் தரையில் படர்ந்திருக்க ஆடும் நடனத்தில் ஈசனின் உடலே காலங்களை இணைக்கும் ஊடகம். இரண்டு கால்களும் தரையில் பாவ ஆடுவது எவரும் செய்யக்கூடியதே, இரண்டு கால்களும் அந்தரத்தில் என்பது அறிவீனம். மேலும் ஒரு படைப்பு ‘தற்கால’த்திற்கு எதிர்வினை ஆற்றுகிறதா ‘நிகழ்கால’ப் பொருத்தப்பாடு கொண்டதா என்பதை கவனிக்க வேண்டும். Contemporary மற்றும் Present ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு முக்கியம். தற்காலச் சிக்கலை எழுதுவதாலேயே ஒரு நாவல் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டதாக ஆக முடியாது. தற்காலச் சிக்கலிலிருந்து வாழ்க்கையின் அடிப்படை வினாக்களை நோக்கி நாவல் செல்கிறதா? தன்னுடைய சொந்த பதிலைத் தேட முடிகிறதா? தற்காலச் சிக்கல்கள் என்பது காலாதீத கேள்விகளை அணுகுவதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே. கில்காமேஷும், சிலப்பதிகாரமும், மகாபாரதமும் தற்காலச் சிக்கல்களை நேரடியாகப் பேசுபவையல்ல, மரணம் குறித்தும் நீதி குறித்தும் அறம் குறித்தும் ஆதாரமான கேள்விகளைத் தொடுபவை என்பதாலேயே எப்போதும் நிகழ்காலப் பொருத்தபாடு கொண்டவையாகத் திகழ்கின்றன. 



யுவன் சந்திரசேகருடைய உருவகத்தைக் கடன் வாங்குவதாக இருந்தால், சுவாரசியமான நாவல் தொந்தரவற்ற பயணத்துணைவர் போல. இருட்டில் அவர் பாட்டுக்கும் தன் வழியில் செல்வார். அவரோடு நமக்கு எந்த உரையாடலும் இருக்காது. வேறொரு சமகால உதாரணம் சொல்லலாம் என்றால் திருப்பங்கள் நிறைந்த இணையத் தொடர்கள் போல. தொடர்ந்து பார்க்க இயலும். முடிந்ததும் மனதில் சிறு சலனம் கூட ஏற்படுத்தாமல் புகையுருபோல மறைந்துவிடும். ஆனால் ‘ஈடுபடுத்தும்’ படைப்பு வாசிப்பவரின் உள்ளத்தைக் கோருவது. ஒரு புதிய சிந்தனையைக் கிளர்த்துவதாக இருக்கலாம், உணர்வுத் தளத்தில் நம்மைப் பிணைப்பதாக இருக்கலாம், வாழ்வைப் பற்றி/ மனிதர்களைப் பற்றி ஏதோ ஒரு ஞானத்தை/ அறிதலை அளிப்பதாக இருக்கலாம். அக அடுக்குமானத்தில் சிறு குலைவையாவது ஏற்படுத்தும். திருப்பங்களும் திகில்களும் திரைக்கதைத்தன்மைகளும் கொண்ட விறுவிறுப்பான கதைகள்  சில வரையறைகளுக்குள் இயங்குபவை. எதை அழுத்தினால் எது வரும் என்பதில் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் இடையே தெளிவான ஒப்பந்தம் உண்டு. ஜார்ஜ் ஆர்வெல் தனது 1984 நாவலில் பல்ப் நாவல்களை உருவாக்கும் இயந்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். இன்றைய சூழலிலிருந்து சொல்வதானால், ஒரு ஏ.ஐ செயலியால் எளிதில் உருவாக்கத்தக்க கதைகள். இன்றைய எழுத்தாளருக்கு முன் இருக்கும் சவால்கள் என்பவை ஏ.ஜயால் எழுதத்தக்க கதையை எழதாமல் இருப்பது, உடனடியாக சினிமாவாக மாற்றமுடியாத வகையில் எழுதுவது, மேடையில் சுருக்கமாகச் சொல்ல இயலாத வகையில் எழுதுவது ஆகியவையே என எனக்கு தோன்றுகிறது.


‘ஈடுபடுத்துதல்’ நிகழ வேண்டுமென்றால் நாவலுக்கும் வாசகராக நமக்கும் பொதுவான சில கரிசனங்கள் இருக்க வேண்டும் அல்லது புதியதான ஏதோ ஒன்றை நமக்களிக்கப்போகிறது எனும் நம்பிக்கை வேண்டும். தொடக்கத்தில் ஏற்பும் எதிர்ப்புமாக இந்தக் கரிசனங்கள் சார்ந்து நம் பார்வைகளிருக்கும். ஆனால் காலப்போக்கில் இணக்கமும் ஏற்புமுடைய இலக்கிய ஆக்கங்களையே மனம் நாடும். கருத்துலகு உருவாவதற்கு முன்பான வாசிப்பிற்கும் பின்பான வாசிப்பிற்கும் இடையேயான வேறுபாடு என இதைச் சொல்லலாம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் பலவற்றையும் சென்று முட்டி மோதிப் பார்ப்போம். காலப்போக்கில் நுட்பங்களையும் ஆழங்களையும் தேடத் தொடங்குவோம். அத்தகைய பயணத்தில் புனைவு அலுக்கத்தொடங்கும். மேலும் மேலுமென செல்லுந்தோறும் நம்மை ஈடுபடுத்தி வாசிக்க வைக்கும் ஆக்கங்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஒரு கட்டத்தில் புனைவின் மீதான ஆர்வத்தை இழப்போம்‌. நம்மைத் தூண்டும், கிளர்த்தும் சிந்தனைகளை புனைவுக்கு வெளியே புனைவற்ற நூல்களில் தேடத் தொடங்குவோம். நம்மை அசைக்கும் வாழ்வுகளை வாழ்க்கை சரிதைகளில் கண்டெடுப்போம். ‘சத்திய சோதனை’ எந்த ஒரு நவீன நாவலுக்கும் குறைந்தது அல்ல. அபாரமான புனைவுத் தருணங்களால் நிரம்பியது. வாசிப்புக்கான நேரம் குறையக் குறைய மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து வாசிக்க தொடங்குவோம். முழு கவசவுடையுடன் இலக்கியப் பிரதிக்கு முன் சென்று நிற்றல் என்பது இதுதான். இது சரியா தவறா என்பது அல்ல, ஆனால் பெரும்பாலான படைப்பாளிகள்/ வாசகர்கள் இந்தச் சலிப்பை ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்கொள்வார்கள். அத்தகைய சூழலில்  நமக்குச் சவாலாக இருக்கும் ஆக்கங்களை வாசிக்கவே விரும்புவோம். அல்லது ஒரு சுற்று சுற்றிவிட்டு வெள்ளந்தி வாசிப்பிற்குத் திரும்ப முயற்சிப்போம்‌. ஆனால் அது அத்தனை சுலபமல்ல. கற்பதை விட கற்றதைக் கைவிடுவது மிகக் கடினம். சவாலான ஆக்கங்களைப் பற்றிச் சொல்லும் போது, என்னளவில் இந்தச் சவால் என்பது புழக்கத்திலிருக்கும் ஒன்றைச் சிக்கலான சுழல் மொழியில் எழுதுவது அல்ல. பேசுபொருளுக்கும் வடிவத்திற்கும் இணக்கமிருப்பதாக  நம்புகிறேன். எளிமையான பேசுபொருளை சிடுக்கான மொழியில் சொல்லும்போது கடும் ஏமாற்றத்தை உணர்கிறேன். எது எளிமை எது சிக்கலானது என்பது அகவயமானதுதான். சுருக்கி ஒற்றைத் தரப்பாகச் சொல்வது எளிமையானது, பல்வேறு குரல்களின் வழி வெவ்வேறு அடுக்குகளை உருவாக்குவதுதான் உண்மையில் சவாலானது. எஸ்.ரா நாவல் குறித்து எழுதிய ஒரு நூலுக்கு ‘நாவலெனும் சிம்பொனி’ எனப் பெயரிட்டிருந்தார். மிகப் பொருத்தமான சொல்.  சிம்பொனியில் பிரக்ஞைப்பூர்வமாக ‘ஒத்திசைவின்மையை’ உருவாக்கவும் செய்யலாம். அப்படி உருவாக்கும் போது அது வேறொரு ஒத்திசைவாக இருக்க முடியும். ஒத்திசைவின்மையாகத் தோன்றும் இசையை மீளுருவாக்கம் செய்ய முடிந்தால் அது நாமறியாத வேறொரு ஒத்திசைவுதான். பெருநாவல்களை மீள மீள வாசிக்கும்போது அவை நமக்கு ஒவ்வொரு முறையும் புதிய ஒன்றை எப்படி அளிக்கின்றன? இசைக்கோர்வையில் வெவ்வேறு தனிச்சரடுகளை மட்டும் கூர்ந்து கேட்பது போலத்தான். நாவலின் வடிவத்தைப் பற்றிப் பேசும்போது பிற உரைநடை புனைவு வடிவங்களுடன் ஒப்பிடாமல் பேச இயலாது. குறுங்கதையைப் பற்றிய வரையறையை வாசித்த போது ஒரு ஜியார்ஜியோ மேக்னனல்லி ‘நாவலென்பது நாற்பது வரிகளும் சில கியூபிக் மீட்டர் காற்றும். காற்று நீக்கப்பட்ட நாவலே குறுங்கதை’ என்றொரு சுவாரசியமான விளக்கத்தை அளித்தார். க.நா.சு சிறுகதை எனும் வடிவம் பற்றி எழுதும் போது கதை என்பதை ஒரு அடிப்படை அலகு என விளக்குகிறார். செங்கலைப் போல. கதையைக் கொண்டு செய்யுள் வனையலாம், கவிதை எழுதலாம், குறுங்கதை எழுதலாம், சிறுகதையாக்கலாம், நாவலாக வளர்க்கலாம். எந்தக் கதை சிறுகதையாகிறது, எது நாவலாகிறது? என்பது எனக்கொரு சுவாரசியமான கேள்வி. எந்தக் கதையும் நாவலாக முடியும் என்பதே மேலளிக்கப்பட்ட மேற்கோள்கள் வழி நான் புரிந்து கொள்வது‌. உதாரணமாக லிடியா டேவிஸின் ‘குழந்தை’ எனும் குறுங்கதையை எடுத்துக்கொள்ளலாம்.


 அவள் குழந்தையின் மீது குனிந்து படிந்திருந்தாள். அவளால் அவளை விட்டுச்செல்ல முடியாது. ஒரு மேசையின் மீது குழந்தை அசைவின்றி கிடத்திவைக்கப்பட்டிருந்தது. அவள்  குழந்தையை இன்னுமொரு புகைப்படம் எடுக்க விரும்பினாள், கடைசி புகைப்படமாக இருக்கக்கூடும். உயிருடனிருக்கும்போது,  புகைப்படத்திற்கு  அசையாமல் அமர்ந்திருக்க குழந்தையால் ஒருபோதும்  இயலாது. அவள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொள்கிறாள் "நான் கேமராவை எடுத்து வருகிறேன்" குழந்தையிடம் "அசையாதே" என சொல்வது போல.   



குறுங்கதை தருணங்களை கைப்பற்ற முடிபவை. கதைமாந்தர்களோ அவர்களின் தனித்தன்மைகளோ முக்கியமல்ல. மேற்சொன்ன கதையில் அம்மா மரணமடைந்த குழந்தையை மேசையில் கிடத்துகிறாள் எனும் தருணம் மட்டுமே பதிவாகிறது. அந்த அம்மா யார், அவர் எப்படி பட்டவர், அந்தக் குழந்தை எப்படி இறந்தது இவை எதுவும் நமக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இவற்றைப் பேசும் போது சிறுகதையாக உருமாற்றமடைகிறது. சிறுகதைகளில் தருணங்களுக்கு இன்ன இயல்புடைய கதைமாந்தரின் எதிர்வினையும் பேசப்படுகிறது. நாவல்கள் தருணங்களின் காரண காரியத்தையும் கதைமாந்தரின் எதிர்வினையின் காரண காரியத்தையும் விரித்தெடுக்கத்தொடங்குகின்றன. 


ஒற்றைக் கதைமாந்தரை மையப்படுத்தி ஒரு காலகட்டத்தில் நிகழும் கதையை சிறுகதை எனப் பொதுவாகச் சொன்னால் பெரிய காலகட்டத்தில் பல்வேறு கதைமாந்தர்களின் ஊடாட்டத்துடன் நிகழ்வதை நாவல் எனச் சொல்லலாம். குறுங்கதைக்கு கவிதைக்குரிய கச்சிதம் முக்கியம். ஒரு சொல் மிகையாகக்கூடாது. சிறுகதையில் தேவையில்லாத வரிக்கு இடமில்லை. நாவலைப் பொருத்தவரை பெயருடன் ஒரு கதைமாந்தர் அறிமுகப்படுத்தப்பட்டால் அவர் வெறுமே வந்து செல்பவராக இருக்கக்கூடாது. ஆலய கும்பாபிஷேகங்களில் பிராண பிரதிஷ்டை எனும் சடங்கு உண்டு. வழிபாட்டுக்குரிய விக்கிரகங்களுக்கு உயிர்கொடுத்தல் எனச் சொல்லலாம். நாவலில் ஒருவருக்குப் பெயரிட்டுவிட்டோம் என்றால் அவருக்கு உயிர்கொடுத்துவிட்டோம் என்றே பொருள். இவையெல்லாம் பொதுப் புரிதல்கள் மட்டுமே. நாவலுக்குரிய விரிதலும் அடுக்குகளும் கொண்ட சிறுகதைகள் புதுமைப்பித்தன் தொடங்கி சுரேஷ் பிரதீப் வரை பலரால் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ ‘கரைந்த நிழல்கள்’ போன்ற நாவல்களில் ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய கச்சிதம் கொண்டவை. மரபுகளும் விதிகளும் மீறப்படுவதற்குதான். என்னளவில் நாவல் என்பது பிரம்மாண்ட வாழ்வின் நுண்மைகளை இலக்கியவாதி கைப்பிடி ஆற்று மணலைக்கொண்டு பிரதியெடுத்துக் கட்ட முயலும் சிற்றில். குறுங்கதை கோட்டுச்சித்திரமெனில் சிறுகதை தாளில் வரையப்படும் இருபரிமாண வர்ண சித்திரம் என்றால் நாவல் முப்பரிமாணம் கொண்டது. சிறுகதைக்கும் நாவலுக்கும் இடைப்பட்ட குறுநாவல் என்றொரு வடிவம் உள்ளது. குறுநாவல் என்பது நாவல்தான், ஆனால் அளவில் சிறியது. நாவலுக்கான ஒப்பீட்டு அளவுகோல் என்பது வாழ்க்கைதான்.  இலக்கியத்தின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்ன்மைக்குமான சான்று. இயற்கையின் சீர்மையைப் பிரதியெடுக்கலாம் அல்லது சீர்மையின்மையை பிரதியெடுக்க முயலலாம். 



குறுங்கதைகள் மின்னல் வெட்டில் ஒளி பாய்ச்சும் தன்மை கொண்டவை. அல்லது இருளில் சுடரும் மின்மினி. சிறுகதைகள் நீருக்கடியில் நீந்திக் கடக்கும் வண்ண மீன் எனில் நாவல் நிதானமாக அசைபோட்டபடி பால் கொடுக்கும் பசு எனச் சொல்லலாம்.  எத்தனைக்கு எத்தனை நாவலாசிரியர் வாழ்வனுபவங்களை மேய்ந்து அவற்றை அசைபோடுகிறாரோ அத்தனைக்கு அத்தனை அது பாலின் தரத்தில் வெளிப்படும். வாழ்வனுபவங்களை தத்துவமாக சாரப்படுத்தி கலையின் சட்டகத்திற்குள் அளிப்பதே நாவல் எனும் கலைவடிவம். ஜெயமோகன் நாவலை தத்துவத்தின் கலைவடிவம் எனக் குறிப்பிடுகிறார். எழுத்தாளருக்கு மெய்யியல் மரபுகளின் பரிச்சயம் கூடுதல் பலம்தான். அவற்றைக் கற்று நாவலில் எழுதிப் பரிசீலித்துப் பார்ப்பது என்பதொருவகை. ‘மெய்யியலிலிருந்து கலைக்கு’ என இதை சொல்லலாம். இதற்கு நேரெதிராக வாழ்வனுபவங்களின் ஊடாக, கற்பனையின் ஊடாக முறையான மெய்யியல் பயிற்சியின்றியே கூட எழுத்தாளர் தனக்குள் இயங்கும் மெய்யியல் தளத்தைக் கண்டுகொள்ள முடியும். உலகின் ஆக புராதனமான காவியமாகக் கருதப்படும் ‘கில்காமேஷை’ இன்று வாசித்தால் அங்கிருந்து கடந்தாண்டு தமிழில் வெளியான ‘பவதுக்கம்’ வரை ஒரு கோடு போட முடியும்‌ என தோன்றுகிறது. இருத்தலியல் பிரதியாக கில்காமேஷை வாசிக்க இடமுண்டு. கில்காமேஷை எழுதியவருக்கு இருத்தலியல் என்றால் என்ன எனத் தெரிய வேண்டியதில்லை. மெய்யியல் பரிச்சயம் விமர்சகருக்கும் வாசகருக்கும் சில கூடுதல் சாளரங்களை திறந்து வைக்கக்கூடும். கில்காமேஷ் தனது ஆடிப்பிம்பம் போலிருந்த உற்ற நண்பனை இழக்கிறான். அங்கிருந்து வாழ்வு குறித்தும் மரணம் குறித்தும் மரணமற்ற பெருவாழ்வு குறித்தும் பதைப்புடன் சிந்திக்கிறான். அதுவே அந்தக் காப்பியத்தின் அடிநாதம். ‘ஏன்’ எனும் கேள்வியை எதிர்கொள்வதே மெய்யியலின் வேலை.  மெய்யியல் மரபுகள் ‘ஏன்களை’ முறைப்படுத்துகின்றன. அவற்றுக்கான விடைகளை தர்க்கப்பூர்வமாக முன்வைக்கின்றன. மெய்யியல் பரிச்சயம் ஏதுமற்ற நிலையில் கூட நாம் ‘ஏன்களை’ எதிர்கொள்கிறோம். அவற்றுக்கு நம்மால் முடிந்த வகையில் விடைகாண முயற்சிக்கிறோம். வாழ்வு குறித்தான மெய்யியல் நோக்கு  (Philosophical outlook) இல்லாத மனிதரே இருக்க முடியாது என நம்புகிறேன். ‘வாழ்க்கைன்னா.‘ ‘வாழ்க்கைங்கிறது..’ என அனுபவங்களின் ஊடாக வெவ்வேறு மனிதருக்கு வெவ்வேறு பருவத்தில் வெவ்வேறு நோக்குகள் புலப்படும். எழுத்தாளரால் அவற்றைத் தொகுத்து வெளிப்படுத்த முடியும். அதற்கான மொழியும் கற்பனையும் அவருக்கு இருக்கிறது. எழுத்தாளருக்கு முதன்மையாக இருக்க வேண்டியது வாழ்வனுபவ சேகரமா கற்பனைத் திறனா எனக்கேட்டால், கற்பனைத் திறனே எனச் சொல்வேன். அனுபவங்கள் பலருக்கும் சாத்தியமாகக்கூடியது. கற்பனைத் திறனே கலைஞர்களின் தனித்தன்மையை உருவாக்குகிறது. அனுபவங்களையும் கற்பனைகளின் வழி உருவாக்க முடியும். ‘பிறராதல்’ என்பதே இலக்கியத்தின் அடிப்படை. 


மெய்யியல் அடித்தளம் நாவலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை ஒரு உதாரணம் கொண்டு சொல்ல முடிகிறதா எனப் பார்க்கிறேன். என் நோக்கில் நான் வாசித்த மிகச் சிறந்த இந்திய மொழி நாவல்களில் ஒன்றென பைரப்பாவின் ‘குடும்பம் சிதைகிறது’ நாவலைச் சொல்வேன். தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ துறை சார்ந்த நாவல் எனும் வகையில் எனக்கு முன்னோடி ஆக்கமும் கூட. இத்தகைய இந்திய நாவல்களை வாசிக்கையில் முதன்மையாகத் தோன்றியது அவற்றின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திய மெய்யியல். க. நா.சு வின் ‘பொய் தேவு’ தொடங்கி மீறல் எழுத்து எனக் கொண்டாடப்படும் கரிச்சான் குஞ்சுவின் ‘பசித்த மானுடம் , மகத்தான காதல் கதையாகக் கொண்டாடப்படும் தி.ஜாவின் ‘மோகமுள்’ ‘நளபாகம்’, நபகோவின் லோலிடாவின் சாயலில் முறையற்ற காமத்தைப் பேசத் தொடங்கி அதை உன்னதமாக்க முயலும் லாசராவின் ‘அபிதா’, எதிலும் பொருத்திக்கொள்ள முடியாத கணேசனின் வாழ்வைச் சொல்லும் காஷ்யபனின் ‘அசடு’ என முன்னோடிகள் பெரும்பாலானோரின் நாவல்களில் இந்திய மெய்யியல், அதிலும் குறிப்பாக அத்வைத வேதாந்தம் மிக முக்கியச் சரடாக உள்ளதை உணர முடிந்தது. உலகத்தில் உள்ள எதையும் அத்வைத வேதாந்தத்தில் விளக்கிவிடலாம் என்கிற அபாயமும் உண்டுதான். நவீனத்துவ அழகியலுக்கு மாற்றாக அத்வைத வேதாந்தத்திலிருந்துதான் நாம் முழுமை நோக்கு எனும் அழகியலை ஏற்றுக்கொள்கிறோம். காஃப்காவை விட தால்ஸ்தாயின் அழகியலே இந்திய மொழிகளிலில் செல்வாக்கு செலுத்தியது எனச் சொல்லலாம். ப. சிங்காரத்தின் நாவல்கள் ஏன் எழுதப்பட்ட காலத்தில் கவனிக்கப்படவில்லை என்பதை ஒருவாறு புரிந்துகொள்ள முடிகிறது. அது அன்றைய காலகட்டத்தில் பிரதான போக்காக இருந்த அத்வைத வேதாந்த அழகியல் முன்வைத்த கலையமைதி, முழுமை நோக்கு ஆகியவற்றுக்கு மாறான வேறொரு அழகியல் கொண்டது. க. நா. சு புதுமைப்பித்தனை எப்படி எதிர்கொண்டார் என்பதைக் கவனித்தால் இது விளங்கும்‌. ‘கபாடபுரம்’ போன்ற ஒரு கதை குறித்து அவருக்குப் பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை ‘அன்று இரவு’ கதையை காமா சோமாவென எழுதப்பட்டது என்கிறார். அத்வைத வேதாந்த அழகியல் உருவாக்கிய கோணமே தமிழ் நவீன இலக்கியத்தின் மைய அழகியலாக இருந்தது. வாழ்வின் பொருள், வாழ்வில் முழுமை மற்றும் ஒருமை சார்ந்த தேடல்கள் வழி அத்வைத வேதாந்தத்தை நோக்கிச் சென்றனர் எனச் சொல்ல முடியும். எண்பதுகளில் இந்தக் கோணம் சவாலுக்கு உள்ளாகிறது. ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற அதே கதைக்களத்தை எழுதிய எம். எஸ். கல்யாண சுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ நாவலை வாசித்தால் சிங்காரத்தின் நாவலைவிட ஒருமை கூடியது புலப்படும். புயலிலே ஒரு தோணியில் பாண்டியனின் சாகச அதி நாயகத்தனம் இன்று வாசிக்கும் போது பொருத்தமற்ற கற்பனையாகப் படுகிறது. அத்தகைய தொந்திரவு ஏதும் ‘இருபது வருடங்கள்’ வாசிக்கும்போது நமக்கு ஏற்படுவதில்லை. எண்பதுகளில் வேதாந்த அழகியலுக்கு வெளியே வேறுவிதமான‌ தேடல் நிகழத் தொடங்குகிறது. முழுமையும் கலையமைதியும் பின்னுக்குச் செல்கிறது. ஒழுங்குக்கு மாறாக பித்தும் சந்நதமும் இலக்கிய வெளிப்பாட்டின் அளவுகோலாக மாறுகிறது. தமிழ்க் கவிதைகளில் பிரமிளின் வருகையிலிருந்து ஏற்பட்ட மாற்றம் இது என யூகிக்கலாம். தமிழ் உரைநடை இலக்கியம் எப்போதும் கவிதையின் வால் பிடித்தே முன்நகர்கிறது என எனக்கு தோன்றுவதுண்டு. ஜெ ஜெ சில குறிப்புகள் அத்திசையில் நிகழ்ந்த மிக முக்கியமான முயற்சி. சிங்காரத்தின் நாவல்கள் அத்வைத வேதாந்த அழகியலுக்கு மாற்றாக தமிழ் சித்தர் மரபிலிருந்து வேரெடுப்பதாகச் சொல்ல முடியும்‌. புயலிலே ஒரு தோணியில் வரும் மதுக்கூட உரையாடலும் இருண்ட பகடிப் பகுதிகளுமே அதை முன்னோடிப் படைப்பாக ஆக்குகின்றன. புதிய அலையின் முகமாக அவரை ஆக்கின. நாட்டார் மரபைத் தமிழிலக்கியம் தனது அடித்தளமாகக் கொள்ளத் தொடங்கியதற்கான பாதையை முதலில் உருவாக்கியவர் கி.ரா. ஏறத்தாழ இதே காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் பின் நவீனத்துவக் கோட்பாட்டு விவாதங்களும் தமிழிற்கு அறிமுகமாகி பெரும் விவாதங்களை ஏற்படுத்துகிறது. 90 களில் தொடங்கிய புதிய தமிழ் நாவல் மரபு ஒரு வகையில் சிங்காரத்திற்கும் கிராவிற்கும் கடன்பட்டுள்ளது எனச் சொல்லத் தோன்றுகிறது. இவர்கள் இருவரின் பாணிகளின் இடையீட்டில்தான் தனக்கான பாதையை உருவாக்கிக்கொண்டது எனச் சொல்லத் தோன்றுகிறது. எழுத்தாளர் சீரற்ற வாழ்விலிருந்து ஒருவித ஒழுங்கை கண்டடைந்து சொல்பவராக மட்டும் இருந்த ஒரு காலம் சென்று, எழுத்தாளர் என்பவர் தன் பிரக்ஞையை இழந்து தெய்வ நிலைக்குச் சென்று வாக்குகளை அருளி மீளும் ‘சாமி கொண்டாடியாகவும்’ இருக்க முடியும் என்பதை நவீன இலக்கியம் கண்டுகொண்டது. கவிதையில் பாரதி ஒரு சேர இவ்விரு தளங்களிலும் இயங்கியவன். ஆகவேதான் அவன் முன்னோடி.  மெய்யியல் அடித்தளத்திற்கும் நாவலுக்கும் இடையேயான உறவை இப்படியாகப் புரிந்து கொள்கிறேன். இலக்கியப் போக்குகள் காலாவதியாகும், இதுதான் இப்போது புதுப்போக்கு என்றெல்லாம் சொல்லப்படுவதில் எனக்குப் பெரிய ஏற்பும் நம்பிக்கையும் இல்லை. இலக்கியம் என்பது எந்த அளவிற்குத் தனது காலத்தின் போக்குகளைப் பிரதிபலிக்க முயல்கிறதோ அதேயளவு தனிமனிதனின் தேடலுக்கான கலை வடிவமாகவும் திகழ்கிறது. இந்தப் போக்குகள் குறித்த உரையாடல்கள் ஒருவித தொகுக்கும் முறை மட்டுமே. எழுதுவதற்கான ஆணையோ வழிகாட்டியோ அல்ல. எழுத்தாளராக நான் ஒரு‌ கதையை எழுத விரும்புகிறேன். எழுதும்போதே நான் நவீனத்துவ கதையை அல்லது பின்நவீனத்துவ கதையை எழுத‌போகிறேன் எனச் சொல்வது எனக்கு ஏற்புடையதல்ல. எந்தத் தொகுப்பு முறையும் முழுமையானதல்ல. விதிவிலக்குகளும் விடுபடல்களும் கொண்டதே.   


சோமு முதலியெனும் ஒருவனின் வாழ்வை முழுமையாகச் சொல்லும் ‘பொய் தேவு’ போலவும் இருக்கலாம் தலைமுறைகளின் கதையைச் சொல்லும் பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக்கொன்றை’ போலவும் இருக்கலாம் அல்லது ஒரு இனக்குழுவின் நூற்றாண்டு கால வரலாறை சொல்லும் கி.ராவின் ‘கோபல்ல கிராமமாகவும்’ இருக்கலாம். நாவல்களின் முதன்மைப் பாத்திரம் எவராகவும் இருக்கலாம். காப்பியங்களின் நாயகன் அறமெனில் நவீன நாவலின் நாயகன் காலம்தான் என எனக்குத் தோன்றுவதுண்டு. காலப்பேருருவைச் சென்று முட்டி நிற்பதே நாவலின் நோக்கம். குறுங்கதைகளிலும் சிறுகதைகளிலும் காலம் குறுகியதாக வெளிப்படுகிறது.‌ நாவலில் விளக்கிலிருந்து வெளிப்பட்ட பூதம் போல பிரம்மாண்டமாகத் தனது ஆகிருதியை வெளிப்படுத்துகிறது காலம். பெரு நாவல்கள் மட்டும் அல்ல, அளவில் சிறிய நாவல்களின் வழியேவும் இந்த தரிசனத்தை அடைய முடியும். உதாரணமாக அலெக்ஸாண்டர் பாரிக்கோஸின் ‘பட்டு’. அறுபது எழுபது பக்கங்கள் நீளும் நாவல். பெரிதாக நிகழ்வுகள் என ஏதுமற்ற, ஒரே மாதிரியான சொற்களே மீண்டும் மீண்டும் வரும்வகையிலான படைப்பு. எனக்கது நாவல்தான். இன்னொரு உதாரணம் சொல்லலாம் என்றால் க. அரவிந்தனின் “சீர்மை” 50 பக்கங்கள் கொண்ட ஆக்கம்தான். ஆனால் அதையும் நான் நாவல் என்றே கருதுகிறேன். 


     தகவல்களை அறிந்துகொள்ள நான் நாவல்களை வாசிப்பதில்லை. ஆவணப்படுத்துவது நாவல்களின் முதன்மை நோக்கமல்ல என்பதே என் நம்பிக்கை. அடிப்படையில் நாவலென்பது கதைதான். கதைகளுக்கு என்ன நோக்கமிருக்க முடியும்? படிப்பினைகள் என தான் நம்புபவற்றை சுவாரசியமாகப் பொதிந்து கொடுப்பதற்கு ஏதுவான வடிவம். நிகழ்காலத்திலிருந்தும் வாழும் உலகத்திலிருந்தும் தப்பித்து இளைப்பாற நிகருலக வாசம் வேண்டியே அநேகமாக கதைகள் வாசிக்கிறோம். மாற்றங்களைக் கனவு காணும் உரிமை மட்டுமே நாவலுக்கு உண்டு. இலக்கிய வடிவங்களில் நாவல்  பரவலாக வாசிக்கப்பட அதன் ஆழ்த்தும் தன்மையே முதன்மைக் காரணம். உரைநடை வடிவங்களில் சிறுகதை/ குறுங்கதைக்கும் நாவலுக்கும் வேறுவேறு இயல்புகள் தேவையாக உள்ளது. சிறுகதை/ குறுங்கதையில் தகிப்பை இறக்கிவைத்து அதைக் கடத்தும் முனைப்பே முதன்மையானது. நாவலில் உச்சத்தை ஒத்திப்போடுவதே முதன்மை உத்தி.  நாவலில் தகவல்களும் புற விவரணைகளும் இரண்டு விதமாகப் பயன்படலாம். ‘மோகமுள்ளில்’ பாயும் காவிரி நதி மட்டுமல்ல, பாபுவுக்குளோடும் காமமாக, பிரவாகிக்கும் சங்கீதமாக உருமாற்றம் அடைந்தபடியே உள்ளது. கதைக்குள் வரும் விவரணை எனக்கு மேலதிகமாக எதையோ அளிக்கிறது. அகத்தைச் சுட்டுவதற்கு புறத்தை விவரிப்பதற்கு நமக்கு ஈராயிர ஆண்டு மரபுள்ளது. இயல்புவாத எழுத்துக்களில் இன்னோரு வகையும் உண்டு. பூமணியின் ‘வெக்கை’  நாவலை வாசித்த போது அவர் சித்தரிக்கும் நிலப்பரப்பில் வாழ்ந்த அனுபவத்தை அளிக்கிறது. 


‘ஈடுபடுத்தும்’ நாவல்களின் மற்றுமொரு முக்கியமான இயல்பு அதில் நமக்குக் கிடைக்கும் ‘ஆழ்த்தும்’ அனுபவம். ‘‘ஆழ்த்தும் அனுபவம்’ அளவில் பெரிய நாவல்களில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அளவில் சிறிய நாவல்கள் ‘ஆழ்த்துதலை’ நிகழ்த்துவது சிரமம் ஆனால் ‘எஞ்சுதல்’ அவற்றில் நிகழ்வதை உணர்ந்திருக்கிறேன். ‘எஞ்சுதல்’ சிறுகதையின் இயல்பு எனச் சொல்லலாம். ஓரு அசவுகரியமான நினைவுகூரல் போல, காய்ச்சலில் படிந்திருக்கும் நா கசப்பு போல, வைரஸ் தாக்குதலுக்குப் பின்பான நோயெதிரணுக்கள் போல ஏதோ ஒன்று ‘எஞ்சுகிறது’. சிறுகதைத்தன்மை கொண்ட நாவலுக்கு மிகச்சிறந்த உதாரணம் தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’. 


சில சிறுகதைகள் எழுதி முடித்த பின் அவை தொகுப்பாக வெளிவருவதற்கு முன்னரே நாவல் எழுதத் தொடங்கினேன்.  என்னை இயக்கும் கேள்விகளில் ஒன்று, மனிதர்களை மதிப்பிட நமக்கு பயன்பாடு சாராது வேறு அளவுகோல் உண்டா?  தனது வளர்ப்பு மகனுக்கு ஆட்டிஸ நிலை என   குடும்ப நண்பர் மனம் நொந்திருந்த ஒரு தருணத்தில் சட்டென உடைந்து போய் ‘இதுக்கு இவன தத்தெடுத்திருக்காமலேயே  இருந்திருக்கலாம்’ என்றார். இந்த ஓருவரி என்னுள் எதையெதையோ கிளர்த்தியது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவு, அதிலும் ஏதோ ஒரு குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எத்தகைய உறவு உள்ளது? நாவல் என்பது தூரத்துத் துளிவெளிச்சத்தை நோக்கிய பயணமாகவே எனக்கு அர்த்தப்படுகிறது. செல்திசை மட்டுமே தெரிந்த சாகசப் பயணம். இருட்டில் துழாவித் துழாவிச் செல்லும்போது எழுத்தாளரும் புதிது புதிதாக எதையோ கண்டடைகிறார். சிறுகதையில் வெளிச்சம் ஓரளவு துல்லியமாகப் புலப்பட்டுவிடும். ‘ஒற்றனில்’ மொத்த நாவலையும் வரைபடமாக வைத்திருக்கும் பிராவோ எனும் எழுத்தாளர் பற்றிய சித்திரத்தை அசோகமித்திரன் அளித்திருப்பார். பிராவோவின் திட்டமிடல் தியாகராஜனுக்கு மிரட்சியளிப்பதாக இருக்கும். தன்னம்பிக்கையை இழப்பார். பிராவோவை பிற்காலத்தில் சந்திக்கும்போது அவர் அந்த நாவலை முடிக்கவில்லை என்பதை அறிந்துகொள்வார். பிராவோவால் ஒருநாளும் அந்த நாவலை முடிக்க முடியாது. நாவல் எழுதுவதின் கிளர்ச்சி என்பதே அதிலுள்ள திட்டமற்ற தன்மைதான் என எனக்கு தோன்றுவதுண்டு. உள்ளுணர்வின் வழிதடத்தில் நடப்பது. நாவல் எழுதுவதை அதீதமாக மர்மப்படுத்துவதாக தோன்றக்கூடும். நாமறிந்த ஒருவரைப்பற்றி எழுத தொடங்கும்போது நாம் உத்தேசிக்காத வேறொருவரின் சாயல்களும் இயல்புகளும், தொடர்பேயற்ற வேறொருவரின் உருவமும் படிவதை எப்படி விளங்கிக்கொள்வது? இவை எல்லாவற்றுக்கும் மூளை நரம்பியலில் ஏதேனும் விளக்கங்கள் இருக்கலாம்‌. நாவல் எழுத மிகவும் தேவைப்படும் இயல்பு என்பது விடாமுயற்சி, பொறுமை, மிக முக்கியமாக ஒழுக்கம்‌. நாவல் எழுதுவது என்பது வேறொரு உலகத்தில் வாழ்வது. என்ன வேலையிலிருந்தாலும் உள்ளுக்குள் இன்னொரு சரடில் நாவல் குறித்தும் கதை மாந்தர்கள் குறித்தும் ஏதோ ஒரு சரடு அறுபடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். நாவல் எழுதும் காலகட்டத்தில் உறங்கும் முன்னர் கடைசி எண்ணமாகவும் எழும்போது தோன்றும் முதல் எண்ணமாகவும் நாவலே இருக்கும். நூறு சொற்களோ இருநூறு சொற்களோ எழுத அதற்கு முந்தி எழுதியவற்றை மீள வாசிக்க வேண்டும்.  நாவல் எழுதுவதென்பது எட்டு விக்கெட் இழந்தபின் ஐந்தாம் நாள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி ஆட்டத்தை சமன் செய்ய முயல்வது போல.  சிறுகதை அம்பு எய்தல் போல, இலக்கைத் துளைக்கும் துல்லியமே அதன் முக்கிய இயல்பு, நாவல் ஈட்டி எறிதல் போல. அம்புக்கு வில்லை விட்டு வெளியேறுவதற்கான விசையளித்தால் போதும். ஈட்டி எறிதலுக்கு நாமும் கூடவே ஓடிவரவேண்டும். எத்தனை தொலைவிலிருந்து, எத்தனை வேகமாக, எவ்வளவு விசையுடன் ஒடிவருகிறோம் என்பதைப் பொருத்து ஈட்டி எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது முடிவாகிறது. எத்தனைக்கு எத்தனை நம்மால் நாம் எழுதும் நாவலுக்குள் ஆழ முடிகிறதோ, எத்தனைக்கு எத்தனை நமது நினைவுகள் கூர்மையடைகிறதோ அத்தனைக்கு அத்தனை நாவல் செம்மையடையும். 


நாவலின் முதல் வரி எழுதப்படும் முன்னரே அதன் தலைப்பு ‘நீலகண்டம்’ என தோன்றியது.  ‘நீலகண்டம்’ ஓரு பெரும் படிமமாக என்னுள் வளர்ந்தது. சமூகம், மானம், கவுரவம் என நாமாக உருவாக்கிக்கொண்ட வரையறைகள் ஒரு பக்கமும் நமது சுயமைய நோக்கு, ஆழ்மன இச்சைகள் மறுபக்கமும் நம்மை அழுத்துகின்றன. நீலகண்டம் நூலை உறவுச் சிக்கல்களைப் பேசும் நேர்கோட்டு கதையாகத்தான் நூறு பக்கங்கள் வரை எழுதியிருந்தேன். ஆனால் அதிலொரு போதாமையை உணர்ந்தேன். நாவலை மீண்டும் தொடர்வதற்கு முன் நான் வாசித்த சில நாவல்கள், வடிவம் குறித்த எனது பார்வையின் மீது தாக்கம் செலுத்தின. ஜஸ்டின் கார்டனரின் ‘சோஃபியின் உலகம்’ பதின்ம வயதினருக்கு மேற்கத்திய மெய்யியலை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். மரியா வர்க்கோஸ் லோஸாவின் ‘ஆண்ட் ஜீலியா அன்ட் ஹெர் ஸ்கிரிப்ட் ரைட்டர்’ வானொலி நாடக கதாசிரியரின் நாடகங்களையும் கதைசொல்லியின் காதல்கதையையும் பிணைந்து சொல்லும் கதை வடிவம் கொண்டது. மிக்கைல் புல்ககோவின் ‘மாஸ்டர் அன்ட் மார்க்கரீட்டா’ நாவலில் சாத்தானின் குழாம் ரஷ்ய இலக்கியச் சூழலை எதிர்கொள்வதைப் பற்றி இருண்ட நகைச்சுவைப் பகுதிகள் கொண்ட  நாவல். இம்மூன்று நாவல்களும் புனைவுக்குள் யதார்த்தத்துக்கும் மீயதார்த்தத் தளத்திற்குமிடையேயான கோட்டை‌ அழித்தன. ஒருவித மயக்கத்தை விளைவித்தன. தமிழில் சொல்வதானால், எம்‌. வி. வெங்கட்ராமின் ‘காதுகள்’ நாவலையும் சொல்ல வேண்டும். காதுகள் உளவியல் நோய்நிலையின் வெளிப்பாடு என்பது ஒரு வாசிப்பு. ஆனால் மாற்று யதார்த்த தள நாவலாக வாசிக்க முடியும். குண்டலினி தியான பயிற்சியுள்ள வாசகராக இருந்தால் இந்த நாவலை குண்டலினி கோளாறின் விரும்பத்தகாத விளைவு என வாசிக்க இடமுண்டு. புனைவின் ஓரு துளி யதார்த்த வாழ்வில் சிந்தினால் எப்படியிருக்கும்? புனைவென்பது யதார்த்தம் அல்ல.‌ வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து ஒருவித ஒழுங்கை கற்பனை செய்கிறது. பெரும்பாலும் நாம் வாழும் வாழ்வின் அதே தர்க்கங்களைப் பயன்படுத்தி கதைகளைக் கட்டமைக்கிறோம். வேறு தர்க்கங்களைக் கொண்டு கதை சமைத்தால் எப்படி இருக்கும்? அதி இயற்கை தர்க்கங்களை, அதிமானுட ஒழுங்கிலிருந்தும் கதைகளை உருவாக்க முடியும். அல்லது இவையாவும் முயங்கும் தளத்திலிருந்து கதைகளை எழுத முடியும். நீலகண்டம் ‘ஒரு’ சாதி மீறி திருமணம் செய்து கொண்ட தம்பதியினரின் ‘ஒரு’ தத்தெடுக்கப்பட்டு ஆட்டிஸ நிலையில் உள்ள குழந்தையின் கதையைச் சொல்வதாகத்தான் இருந்தது. ஆனால் இலக்கியம் என்பது ‘குறிப்பிட்ட’ ஒன்றைப் பற்றி ஆராய்வதன் வழி மானுடப் பொதுத்தன்மையைக் குறித்து எதையோ கண்டடைய வேண்டும். வருவைப் பற்றிய கதை வரு எனும் தனியொரு ஜீவனின் கதையாக இருப்பது போலவே அவளைப் போன்ற பல ஜீவன்களின் பிரதிநிதிகளின் கதையாகவும் ஆகிறது.  என்னைத் தொந்திரவு செய்யும் கேள்வியை வெவ்வேறு தளங்களில் எதிர்கொள்ள முடியும் என மேற்சொன்ன மூன்று நாவல்கள் எனக்கு உணர்த்தியதாக தோன்றியது. நாவலை மீண்டும் தொடங்கும்போது வேறொரு இடத்திலிருந்து தொடங்கினேன். விக்கிரமாதித்தியன் வேதாளத்திற்கு இடையேயான உரையாடலாகப் பரிணாமம் கொண்டது. நாவல் என்ன விதமாக வாசிக்கப்பட்டது, வாசகரைச் சென்று சேர்ந்ததா என்பது குறித்தெல்லாம் சொல்வதற்கு ஏதுமில்லை. என்னை உந்திய ஒரு கேள்வியை எனக்குச் சரி எனப் பட்ட வடிவத்தில் நேர்மையாகப் பின்தொடர்ந்து எழுதிப்பார்த்த முயற்சியே நீலகண்டம்.   நாவலுக்கு ஆய்வு செய்வது பற்றி எனக்குச் சில கருத்துக்கள் உள்ளன. எழுத்தாளர் வரலாற்று அறிஞனாக ஆக வேண்டியதில்லை என்றே நம்புகிறேன். ஆய்வு செய்து விட்டுத்தான் நாவலை எழுதப்போகிறேன் என்றால் எழுதவே முடியாது. ஏனெனில் அறிதலுக்கு எல்லையில்லை. அப்படி தங்களையும் தங்கள் நாவல்களையும் தொலைத்த பலரை நான் அறிவேன். மேலும் இத்தகைய ஆய்வு வழி திரட்டப்பட்ட தகவல்களை எங்கே எந்த அளவு எவ்விதம் பயன்படுத்துவது எனும் போதத்தை நாவலாசிரியராக நாம் இழந்துவிடக்கூடாது.  வெளியுலகம் அறியாத தகவலை எப்படியாவது சொல்லியே ஆக வேண்டும் ‌எனும் துடிப்பை வெற்றி கொள்வது அத்தனை எளிதல்ல. ஆகவே ஆய்வென்பது இரண்டு விதமாக இருக்கலாம், ஒரு துறை சார்ந்து தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருக்கலாம். எழுதும்போது நாவலுக்குத் தேவையான தகவல் உள்ளேயே ஒருங்கமைந்துவிடும். ஆயுர்வேதம் குறித்தோ காந்தி குறித்தோ என்னால் சட்டென ஒரு புனைவை பெரிய ஆய்வின்றி எழுதிவிட முடியும். ஏனெனில் ஆண்டுக்கணக்கான தொடர் வாசிப்பு இத்துறைகள் சார்ந்து எனக்கு உண்டு. இன்னொரு‌ வகையில், கதையை எழுதத் தொடங்கி அதற்கு என்ன தேவையோ அதை மட்டும் வாசித்து நம்பகமான உலகை உருவாக்க அத்தகவலைப் பயன்படுத்துவது. 


இந்தக் கட்டுரையை நாவல் குறித்து நான் கொண்டுள்ள அபிப்ராயங்களின் விவாதமாகக் காணலாம். வாசிக்க வேண்டிய நாவல்களின் பட்டியல் அல்ல. வாசித்த நாவல்களின் பட்டியலும் அல்ல. நல்ல நாவல்கள் என நான் கருதும் பட்டியலும் அல்ல. நாவல் குறித்த விவாதத்திற்கு ஏதுவான உதாரணங்கள் மட்டுமே. சிறுகதை ஒப்புநோக்க நாவலை விட எழுத சவாலான வடிவம் என்பதே என் எண்ணம். ஆனால் வாசகப் பங்கேற்புக்கு வழிவகுக்கக்கூடிய வடிவம் நாவலாகவே இருக்க முடியும். 



    



  •  

சிந்தனையில் என் பைரவி-5 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 5

"ஹலோ சார்."

"சொல்லுங்க யங் மேன்!!"

"ஒரு உதவி வேணும் சார்??"

"திறமைக்கே உதவியா?? என்ன பண்ணனும் சொல்லு மேன்."

"நான் காதலிக்கிறேன் சார்.. அந்த பொண்ணும் காதலிக்குது.. ஆனா எப்போதும் போல வசதி, ஜாதி எங்க காதலுக்கு குறுக்க நிக்குது.. அந்த பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க.. 'நீங்க வரலைன்னா என்ன பிணமா தான் பார்ப்பீங்க'ன்னு மெசேஜ் அனுப்பி வச்சுருக்கா ஒரே பதட்டமா இருக்கு. "

"பார்ரா விரைப்பா இருக்குற ஆனா காதலிக்கலாம் செஞ்சுருக்க?? இதுக்கு...


Read more
  •  

சிந்தனையில் என் பைரவி-4 💙🖤

GridArt_20250418_103802512.jpgஅத்தியாயம் 4

கார்த்திக், பைரவி திருமணம் முடிந்து இன்றோடு நாற்பது நாட்கள் கடந்துவிட்டது. இருவருக்குள்ளும் எந்தவித முன்னேற்றங்களும் இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது. திருமணம் முடிந்த இரண்டு நாளில், ஒரு நாள் இரவு கசங்கிய சட்டையுமாக முகத்தில் மண்டிய களைப்பில் அப்படியே வந்து படுத்து கொண்டான் ராஜேஷ்.

அதைப் பார்த்தவளுக்கோ, "டேய் வெறும் வயித்துல படுக்காத வரேன் இரு" இவளின் அதிகார குரலில் சிங்கம் மானுக்கு சலாம் போடுவதுபோல் உடனே மண்டை ஆட்டும்...


Read more
  •