Reading view

பி ற் ப க ல்

சிறைச்சாலையின் பெரிய கறுப்பு இரும்புக் கதவுகளின் குறுகலான ஜன்னலைவிடச் சற்றுப் பெரிதான அடைப்புவழியே வெளிவந்ததும் பச்சன் சிங் உள்ளே பார்த்தான். மூடிக் கொண்டிருக்கும் கதவிடுக்கின் வழியே உள்ளே வராந்தாவில் இவன் வெளியே போகிறதைப் பார்த்தபடி சமையலுக்கு உதவி செய்யும் ரூப் தல்வார் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. பத்துவருடங்கள் பழகிய இடத்தைவிட்டுப் போகும்போது ஏற்படும் மனத்தவிப்பில் அவனால் எதையும் சரியாக யோசிக்க முடியவில்லை. மிக நெருங்கிய மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக வந்து நினைவைப் பின்னிழுத்தன. அவர்கள் உறவினர்கள் போலாகிவிட்டனர்.

கதவுகளுக்கு சற்றுத்தள்ளி வெளியே நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த சிறைக்காவலன் இளித்தான். “முபாரக் ஹோ”(வாழ்த்துக்கள்). பச்சன் சிங் கையில் வைத்திருந்த பத்து ரூபாயைக் கொடுத்தான், இப்போது அவன் புன்னகைத்தான். பிச்சை எடுத்தே பழகிய கைகள். முன்னால் பரந்துகிடந்த வெட்டவெளிப் பொட்டலில் சூரிய ஒளி மிக அதிகமாக இருந்ததால் கண்கள் கூசின. நிறம் மங்கிய செம்மண் நிலத்தில் சிறிது தூரத்திற்கு புல் பூண்டு கூட இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. வெய்யிலின் சூடு முகத்தில் எரிந்தது. சற்றுத் தள்ளி நின்ற ஒரே வேப்ப மரத்தடிக்குச் சென்றான். ‘அப்பாட’ என்றிருந்தது. மரத்தடியில் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்த கிழவி அவனைப் பார்த்தாள். இரண்டு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டான்.

யாரையுமே காணவில்லை. பரோலில் வெளிவரும் நாட்களில் கூட்டமாக இருக்கும். கிழவி அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள் போல் சொன்னாள் ”இன்னைக்கு மூணு மணிக்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள்”. பின்னர் சற்றுத் தயங்கியபடி குரலைத் தணித்துக் கொண்டு கேட்டாள் “இப்பத்தான் வெளியே விட்டாங்களா?” “ஹூம்” என்று தலையசைத்தான்.

என்ன செய்வது? தன்வீர் சிங் ஏன் வரவில்லை?. கிழவியைப் பார்த்துச் சொல்வதுபோல் “வர்ரேன்” என்று சொல்லிவிட்டு துணிப்பையை தோளில் போட்டு நிலக்கடலையைக் கொறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். மெயின்ரோடு சற்று தூரத்தில் தெரிந்தாலும் நடக்க நடக்க போய்க்கொண்டே இருந்தது.

அம்மா உயிரோடிருந்தால் இந்தக் கிழவிபோல் இருப்பாளோ? இவளைவிட வயது அதிகம். தன்வீர் சிங் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அவ்வப்போது சுற்றும்முற்றும் பார்த்தான். யாரையுமே காணவில்லை. வெய்யில் தலையிலும் முகத்திலும் உக்கிரமாக எரித்தது.

சிறைக்கூண்டுக்குள் வெக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் வெய்யில் முகத்திலோ உடம்பிலோ விழாது. வெகுதூரம் நடக்கக் கஷ்டமாக இருந்தது. நடக்கிற பழக்கம் விட்டு ரொம்ப வருஷங்களாகி விட்டது. ஆறு கிலோமீட்டர் நடந்து வாராவாரம் சினிமா பார்த்தவன். இப்போது சுத்தமாக நடக்கமுடியவில்லை. எங்கே போவது? என்று யோசித்தான். அம்மா போன வருடம் வரை இருநதாள். வீட்டிற்குப் போகலாம். அங்கிருந்து பல வருடங்களாகி விட்டன. அது யாரோ வேறொருவருடைய வீடுபோல் நினைவில் நின்றது. வேறு வழியில்லை. அங்கேதான் போகவேண்டும்.

சித்திமகன் தன்வீர் சிங் பக்கத்து வீடான இவன் வீட்டிலும் இருக்கிறான். சின்னதாக இரண்டு அறைகள்தான். “நீ வரும்வரை” என்று அவன் சொன்னது தெளிவாக நினைவு வந்தது. அவன் தன்னைக் கண்டு பயப்படக்கூடும். இருந்தாலும் பாசம் உள்ளவன். முடிந்தபோதெல்லாம் சிறைக்கு வந்து பார்ப்பான். கையைவிட்டுப் போகாதிருந்த மீதி நிலத்தில் விவசாயம் பார்த்தான். அது கட்டுபடியாகாததால் மற்ற நேரங்களில் டிரைவர் வேலை, சுண்ணாம்பு அடிப்பது, பைப் ரிப்பேர் என்று ஏதாவது செய்து பிழைத்துக் கொண்டிருந்தான்.

மெயின் ரோட்டில் இரைச்சல் காதை அடைத்தது. கார்களும் பஸ்களும், ஆட்டோக்களுமாக சாலையை நிறைத்து வழிந்து போய்க்கொண்டிருந்தன. உலகத்திலே தன்னந்தனியாக விட்டதுபோல் உணர்ந்தான். இடப்பக்கம் திரும்பி பஸ்ஸ்டாண்டை நோக்கி நடந்தான். எல்லோரும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தனர். பஸ் ஸ்டாண்டிலும் கூட்டமாக இருந்தது. நடக்க வலுவில்லையோ? எல்லோர் கைகளிலும் மினுங்கும் தோல்பைகள், சின்ன பிரிஃப்கேஸ்கள். இப்போது யாரும் துணிமூட்டையைத் தூக்குவதில்லையோ?. அது தோளை அழுத்தியது.

ஒரு வழியாக பஸ்பிடித்து கிராமத்திற்கு வர இரண்டு மணி நேரத்துக்கு மேலானது. தெருவுக்குள் ஒன்றிரண்டு பெண்கள் இவனைக் கண்டதும் முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு பார்த்தார்கள். அடையாளம் தெரிந்ததோ இல்லையோ? அவனது வீட்டை தூரத்திலிருந்து கவனித்தான். மிக மோசமான நிலையில் இருந்தது. சுவர்களில் காரை பெயர்ந்தும் வெள்ளையடிக்காமலும், இது ஒரு வீடா? சிறையில் புதுசாக இல்லாவிட்டாலும் சுத்தமாக இருக்கும். அரசாங்கச் செலவில் ரிப்பேர் பார்ப்பார்கள். வீட்டை நினைத்து வெறுப்பாக இருந்தது. இனி இதில்தான் இருக்கவேண்டும். யாராவது சிமெண்ட் பூசி ரிப்பேர் பார்க்கக்கூடாதா? தன்வீர் சிங் மேல் கோபம் வந்தது. அவனுக்கென்ன வருமானம் என்று யோசித்த போது அவனும் பாவம் என்ன செய்வான் என்று தோன்றியது.  நிலையான வருமானம் கிடையாது. அவன் வீடும் இடிந்து விழுவது மாதிரிதான் இருக்கிறது. அவன் ஒருவன் தான் நெருங்கிய சொந்தக்காரன்.

லொடலொட என்று ஆடிக் கிடந்த கதவைத்தள்ளித் திறந்து உள்ளெ நுழைந்தான். யாரும் வீட்டில் இல்லை. ஒரு தரைவிரிப்பும் கால் உடைந்து போன ஒரு நாற்காலியும் தண்ணீர்க் குடமொன்றும் இருந்தன. வெளியே வந்து குட்டித்திண்ணையில் உட்கார்ந்தான். வீட்டை ரிப்பேர் பார்ப்பது அப்புறம். அடுத்தவேளைச் சாப்பாடு? தன்வீர் சிங் எத்தனை நாளுக்குப் போடுவான். சிறையில் சம்பாதித்த பணத்திலிருந்து கொடுக்க வேண்டியதுதான். அது எத்தனை நாளுக்குத் தாங்குமோ? சிறையில் மணியடித்தால் தட்டைத்தூக்கிக் கொண்டு போகலாம். இப்போது எங்கே போவது?

படிப்பு மண்டையில் ஏறாததால் எட்டாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்கூடம் போகவில்லை. வாடகைக்கு டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தான். பிறகு கடனுக்கு டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தான்.

வெளியில் போயிருந்த தன்வீர் சிங்கின் மனைவி அவசரம் அவசரமாக வந்தாள். அவனைப் பார்த்து திடுக்கிட்டு விருட்டென்று முந்தானையால் மூடிக் கொண்டாள். “நமஸ்தேஜி. அவங்க உங்களைப் பார்க்கத்தான் போனாங்க இன்னும் வரலை. உங்களைப் பார்க்கலையா?

“இல்லை” என்று தலையசைத்தான்.

“அப்ப திரும்பி வந்திட்ருப்பாங்க. நான் ‘சாய்’ போட்டு வரேன்” சொல்லிவிட்டு அடுத்திருந்த அறைக்குள் போனாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். அவன் தங்கை இப்படி பெரிய பெண்ணாக அழகாக இருந்திருக்கக் கூடும். சின்ன வயதில் கண்மண் தெரியாத கோபத்தில் அப்படிச் செய்துவிட்டான். அவர்களுக்குப் பதின்மூன்று வயதிருக்கும். இப்போது நினைத்தாலும் துக்கம் மனதைக் கவ்வியது. நினைந்து நினைந்து வருந்தி மனதில் கல்லில் செதுக்கியது போலாகி விட்டது.

சிறையில் அவனும் என்னென்னவொ செய்தான். அவனுக்கும் ஏதேதோ நிகழ்ந்தது. சட்டப்படி அதெற்கெல்லாம் தண்டனை கொடுத்தால் அவன் வெளியே வந்திருக்கவே முடியாது.

அசதியாகயிருந்தது. உள்ளே போய் விரிப்பில் படுத்துத் தலையை மடித்த வலது கையில் வைத்தபடி கண் அசந்தான். சோனம் ‘சாய் கொண்டுவந்து அவனைப் பார்த்துவிட்டு திரும்பிப் போனாள்.

தன்வீர் சிங் வந்திருக்க வேண்டும். “ப்ச்சன் சிங் வந்துவிட்டானா?” சோனத்திடம் அவன் கேட்டது இவன் காதிலும் விழுந்தது. அசந்து தூங்கியிருந்தான். மேலெல்லாம் வேர்த்திருந்தது. பக்கத்தில் வைத்திருந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.

உள்ளே வந்த தன்வீர் வருத்த்ததுடன் களைத்துப் போன குரலில் சொன்னான் “நமஸ்தேஜி.. பஸ் கிடைக்காமல் போய்ச்சேர நேரமாகிவிட்டது. அதற்குள் நீங்க கிளம்பீட்டீங்க. சிறைக்காவலன் சொன்னான்” அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அவனைத் தேடி வரவும் ஆள் இருக்கிறது. சீக்கிரம் வந்தும் என்ன செய்வது? ஒன்றுமில்லை” விரக்தியில் அவன் பேசுவதைப் புரிந்துகொண்டு தன்வீர் இதமாக தொடங்கினான் “இருந்தாலும்…..” தொடர முடியவில்லை. தன்வீர் சிங் சோனத்தைக் கூப்பிட்டுக் கேட்டான் “சாப்பாடு தயார் பண்ணிட்டியா? …. ஒன்றே முக்காலாகிவிட்டது. எனக்கும் பசிக்கிறது.”

“நீங்க குளிச்சிட்டு வந்திருங்க”என்று தன்வீர் சொன்னதும் பச்சன் சிங் குளிக்கப் போனான்.

சாப்பிடும் போது பச்சன் வீட்டைக் கவனித்தான். எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. மனைவி நச்சரித்திருப்பாள். சோனம் அழகாகத்தான் இருந்தாள். கைகளில் வளையல்கள் குலுங்கின. அவள் வரும்போதெல்லாம் ஏதோவொரு வாசனை வந்தது. சாப்பிடும் போது நடு நடுவில் பெருமூச்சு விட்டான். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?”

“ஒரு பொண்ணு இரண்டு பையன்கள். மூத்தவன் ஏழாவது இன்னொரு பையனும் பொண்ணும் மூன்றாவது. இரட்டைப் பிள்ளைகள்”

“உன் அண்ணன் மான்சிங் எங்கே?”

“அவன் பாம்பே போய்ட்டான். அங்கெ நல்ல சம்பாத்தியம். ஆனா பிள்ளைகள் இல்ல” வருத்தப்பட்டான். பிள்ளைகள் பிறப்பது கடவுள் கொடுக்கும் வரம்… வச்சு வளக்றது ரொம்பக் கஷ்டம்.” சடக்கென்று. நிறுத்திக் கொண்டான்.

சற்று நேரம் அமைதி நிலவியது. பிறகு தன்வீர் சொன்னான் ”ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் கடைவரைக்கும் போய்ட்டு வர்ரென்”.

”கடைவேற வச்சிருக்கயா?” என்று ஆச்சரியத்துடன் பச்சன்சிங் பார்ப்பதைப் புரிந்து கொண்டு தொடர்ந்தான். “இந்தக் கிராமத்ல என்ன கடை. எல்லோரும் அப்படியே சொல்லி பழக்கம் ஆயிடிச்சு. தெருக்கடைசியில கூரை போட்டு டெய்லரிங் மெஷின் வச்சிருக்கேன். கூட ஒரு சின்னப் பையன் இருக்கான்…. ஹூம்”… பெருமூச்சுவிட்டுத்தொடர்ந்தான் “ பன்டி இறந்து போய்ட்டான்ல அவன் பையன்” ஏதோ அரைகுறையாய் கேள்விப்பட்டிருந்தான் .

“பன்டி எப்படி இறந்தான்?”

”யாரோட  பைக்கையோ எடுத்திட்டு மெயின் ரோட்ல போயிருக்கான். லாரிக்காரன் அடிச்சிட்டுப் போய்ட்டான். லைசென்ஸ் இல்லாததால கேஸும் ஒண்ணும் ஆகல. ஒரு பைசா கிடைக்கல”.

பச்சன்சிங்கிற்கு என்னவோ போலிருந்தது. சிறைக்குப் போவதற்கு முன்னால் இருவரும் ஒன்றாக அலைந்தவர்கள்.

“அவன் பெண்டாட்டி?”

“இன்னொருத்தன் கூட இருக்கா. எப்பவாவது இந்தப்பக்கம் வருவா. பன்டியப் பத்திப் பேச்செடுத்தாலே ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிருவா.”

“பையன் எங்க இருக்கான்?”

“அவகூடத்தான்”

ஜீரணிக்க முடியவில்லை எதையும். பன்டி பெண்களைப் பற்றிக் கறாறாக பேசுவான். ஆண்கள் எப்படியிருந்தலும் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். அவன் மனைவியும் பிள்ளையும் யார் வீட்டிலோ?” தலைவிதி. உலகமே தலைகீழாக மாறிவிட்டது. பத்துவருடத்துக்குள்.

தன்வீர் தொடர்ந்தான் “அவ பாவம் என்ன செய்வா? தனியா இருக்கிற பொம்பளைய யாரு விடுவா? சாப்பாட்டுக்கு…? சரி நான் இதோ வர்ரேன்” அவன் வெளியே போய்விட்டான்.

இரண்டு நாட்களுக்குள் கிராமத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. தெருவில் நடந்தால் எல்லோரும் அவனையே பார்த்தாலும் யாரும் பேசவில்லை. முகங்கள் தெரிந்த மாதிரியிருந்தாலும் சரியாக இனங்காண முடியவில்லை. மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. நான் ரொம்ப நல்லவன் என்று எல்லோரிடமும் சொல்லவேண்டும். ஆனால் சொல்லமுடியவில்லை.

தன்வீரின் குழந்தைகள் மூன்றும் அவனிடம் ஒட்டிக் கொண்டனர். அவர்களிடம் பேசும் போதும் விளையாடும் போதும் மனம் லேசானது. ஒன்றிரண்டு முறை தன்னை அறியாமலேயே புன்னகைத்தான். குழந்தைகளின் ஸ்பரிசம் இவ்வளவு மென்மையாக இருக்குமா? தங்கைகள் கையில் ராக்கி கட்டியது நினைவு வந்தது. கைகள் மிகமென்மையாக இருந்திருக்கும். இப்போதும். பெண்களின் கைகள் எப்பவும் மென்மையாக இருக்குமாம். இன்னும் தொட்டதில்லை. சிறையில் ‘ஆஸாராம்’ என்ற ஹரியானா பயில்வான் முதல்முறை அவன் கையைப்பிடித்து பெண்களின் கைபோல இருப்பதாகச் சொன்னான். பச்சன் சிங்குக்கு அப்போது வயது பதினெட்டு.

சிலநாட்கள் வீட்டை நினைத்து இவன் அழும்போது கன்னத்தையும் தலையையும் ஆஸாராம் வருடிக் கொடுத்தான். பச்சன் சிங்குக்கு இதமாக, ஆறுதலாக இருந்தது. கைதிகளை உலவவிடும் போது இவனை அழைத்து பிரியாணி கொடுத்தான். கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பலகாரம் கொடுத்தான். சில நாட்கள் கழித்து ஜெயிலரிடம் சொல்லி தன் கூண்டுக்குள்ளேயே பச்சன் சிங்கையும் வைத்துக் கொண்டான். ஆஸாராமை நினைத்தால் அழுகை வந்தது. அவனைப் போல் அமைதி கொடுத்தவன் யாருமில்லை. விடுதலையாகி வரும் போதும் அவ்வளவு பெரிய பயில்வான் சின்னக் குழந்தை போல அழுதான். சிறுவனுக்காக இவ்வளவு பெரிய ஆள் அழுவதை எல்லோரும் பார்த்தார்கள். சிலர் ஆறுதல் சொன்னார்கள் சிலர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தனர். இவனுக்கும் கண்ணீர் முட்டியது. அடக்கிக்கொண்டான். நடந்ததை எல்லாம் யாரிடமும் சொல்லமுடியாது. இன்பமும் துன்பமும் சேர்ந்தே வந்தன. சேர்ந்தே போய்விடுமா?

பதினைந்து வருடங்களுக்கு முன் இரு தங்கைகளும் குடும்பத்தின் மானத்தைக் கப்பலேற்றி விட்டார்கள். பதினெட்டு வயது கிஷனுடன் கோயிலுக்குப் போனவர்கள் மூன்று நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்கள். பையன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். இருவரையும் பார்க்கப் பார்க்க பச்சன் சிங்குக்குக் கோபம் ஏறிக் கொண்டே இருந்தது. ஒரு கிறுக்கனைப் போல் தலையில் கிர்ரென்று ஏதோ ஏறியது. சிறுவனாக இருந்தாலும் முடிந்தமட்டும் தங்கைகளைக் கன்னத்திலும் கைகளிலும் அடித்தான். அவ்வப்போது உதைத்தான். அப்பா வந்தபிறகு ரகளை அதிகமாகிவிட்டது. அப்பாவும் சித்தப்பாவும் தொடர்ந்து கத்திக் கூப்பாடு போட்டனர். அம்மாவையும் சித்தியையும் விட்டு விட்டு மாறி மாறி அடித்து உதைத்துக் கொண்டிருந்தனர். வீட்டைச்சுற்றி ஓரே கூட்டம். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவன் காதில் எல்லாம் விழுந்தாலும் எதுவும் பதியவில்லை. அவனும் அப்பாவும் சித்தப்பாவும் கெட்ட வார்த்தைகளை கூவிக் கொண்டு, தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டு உள்ளே போய்த் தங்கைகளை உதைத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே கட்டுப்பாட்டை மீறிப் போய்க்கொண்டிருந்தது.

இரு தங்கைகளையும் அப்பா ஒரு சிறிய அறையில் பூட்டி வைத்துவிட்டார். இதே அறைதான். இப்போது வேறு அறையாகத் தோன்றியது. அன்று கலகலத்த வீடும் குடும்பமும் இன்று இல்லை. பெண்கள் ஒப்பாரி வைத்துபோல் அழுது கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு ஏற்பட்ட களங்கம் எப்படிப் போகும்? மற்றப் பெண்களுக்குத் திருமணம் வாய்க்குமா? யார்யாரோ என்னவெல்லாமோ கேட்டார்கள். இனிமேல் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பார்களே? வன்மம் அவனுக்குள் தீயாக எரிந்து கொண்டிருந்தது. அது தணிய வழியில்லை. அப்பாவும் சித்தப்பாவுமே தங்கைகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சரியாகச் சாப்பிடவில்லை. தூங்கவும் இல்லை. திடீரென்று அடிகளும் அழுகையும் ஓலமும் கேட்டன. மூன்றாம்நாள் ராத்திரி பதினொருமணிக்கு அப்பா அவனைக் கூப்பிட்டார். சித்தப்பாவையும் அவனையும் இரண்டு பெண் தங்கைகளின் கை கால்களைப் பிடித்துக் கொள்ளச் சொல்லி கயிறு வைத்துக் கட்டினார். இரண்டு பெண்களும் சாப்பாடு தண்ணீரில்லாமல் அழக்கூடச் சக்தியின்றி முனகினர். கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. பயத்திலும் வெட்கத்திலும் கூனிக் குறுகி முடிந்தமட்டும் அரைமயக்கத்தில் இரைஞ்சினர். “இனிமே பண்ணமாட்டோம்ப்பா…அப்பா ஒரு தடவை மன்னிச்சிடுங்க …சாச்சா இனிமே பண்ணமாட்டோம்.. வீட்டைவிட்டே வெளியே போமாட்டோம். பர்தா (முகத்திரை) போட்டுட்ருப்போம். கட்டிப் போட்டிருந்தாலும் துடித்துத் துள்ளின பிள்ளைகளை கட்டுப்படுத்த குடியவில்லை. அவனும் ஏதோ ஒரு வெறியில் அழுத்திப் பிடித்தான். சித்தப்பாவும் கால்களை அழுத்திப் பிடித்தார். அப்பா போய் அரிவாளை எடுத்து வந்தார். தங்கைகள் ஓ வென்று அலறினர். மூச்சிரைக்க அப்பாவும் இருவரைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவனிடம் சொன்னார் “கழுத்தை அறு” அவ்வளவு நேரம் அடக்கிப்பிடித்த் வெறியும் கோபமும் அவனிடம் ஜிவ்வென்று ஏறியது. அறுத்ததும் ரத்தம் கழுத்திலிருந்து சளசளவென்று கொப்பளித்து, உடல் துடிக்கத் துடிக்க வெளியேறியது.

அந்த நேரத்திலும் தங்கைகளின் கைகள் மிருதுவாகத்தான் இருந்திருக்கும். அப்போது அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து இற்று விழத்தயாராக இருக்கும் கரையான் அரித்துப் போட்ட இதே அறைதான். இப்போது ரத்தக்கறை இல்லை. ஆனால் மனதில் புழுவாக தான் செய்த குற்றம் அரித்துக் கொண்டிருந்தது.

பச்சன் சிங் பாயிலிருந்து எழுந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். இந்த அறையும் அடுத்த அறையும் குடும்பத்துக்குள் இருக்கிறது. மற்றதெல்லாம் கேஸிலும் மற்றச் செலவுகளிலும் கரைந்து விற்றாகிவிட்டது.

பத்தாண்டுகளுக்கு மேல் ஆஸாராமும் போலிஸும், ஜெயிலர்களும் அவனை என்னென்னவோ பாடாய்ப் படுத்தினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி.

இரண்டு வாரம் போயிருக்கும் பச்சன்சிங்கிற்கு காய்ச்சல் வந்தது விடவேயில்லை. இடைவிடாத வலி. நேராக உட்கார முடியவில்லை. ஆசனவாயில் புண். பரவிவிட்டிருந்தது. டாக்டர் சிறையில் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்தார். டாக்டர் வேறு ஏதோ கேட்க முனைந்தபோது கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பிறகு அவர் எதுவும் கேட்கவில்லை.

இன்னொரு நாள் டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது டாக்டரின் வயதான உதவியாளன் இவன் முதுகுக்குப் பின்னால் அவரிடம் சொன்னது காதில் விழுந்தது. “குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றிவிட்டான். பூராப் பழியையும் தானே ஏற்றுக் கொண்டான். இப்போதுதான் விடுதலையாகி வந்திருக்கிறான்.

பச்சன் சிங்குக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. உடம்பு வலி, காய்ச்சல், நோய், தீராத மன உளைச்சல், சிதிலமடைந்த வீடு, நிம்மதியின்றிச் செத்துப் போன அம்மா, அப்பா, சித்தப்பா, தங்கைகள். சிறையில் தான் பட்ட அவமானங்கள், கொடுமைகள். மானம் என்றால் என்ன என்பது இப்போது அவனுக்குப் புரிவது மாதிரி இருந்தது. இத்தனைபேர் அனுபவித்த துயரங்களை தவிர்த்திருக்கலாமோ? டாக்டரின் உதவியாளனுக்கு அது தெரிய வாய்ப்பில்லை.

000

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

The post பி ற் ப க ல் first appeared on Nadukal.

  •  

ஸ்டிரைக்

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பனியையும் குளிரையும் ஊடறுத்துக் கொண்டு செல்கின்ற...

The post ஸ்டிரைக் appeared first on சிறுகதைகள்.

  •  

கீசக வதம் - வந்தேனே தந்தனத்தான் சொல்லி வந்தேனே

புரிசை கண்ணப்பத் தம்பிரான் சம்பந்தன் 
படம்: செ .அபிலாஷினி

***

//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்தக் குழுவில் சில அதிர்ச்சியான தகவல்களை பார்த்தேன் அதில் ஒன்று காலாவதியான பால் பாக்கெட் மனசாட்சியே இல்லாமல் இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள் அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும். 

வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம் இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.  

அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை  வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும்.  குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம் 

இப்படிக்கு உங்களில் ஒருவன் 

டாக்டர் ஏ.கா. பாண்டியன்//


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் என்று சொல்லிகொள்கிற டாக்டர் ஏகாபா அவர்களேங்!

//காலாவதியான பால் பாக்கெட்// 

என்று இந்தப் படத்தைத்தானே சொல்கிறீர்கள். 

என்ன சார் காமெடி பண்றீங்க. 

ஒரு கட்சியோட மாநிலச் செயலாளரா இருந்தா பால் பாக்கெட் எப்படி இருக்கும்னு கூடத் தெரியாத அளவுக்கா மக்கள் கிட்டேந்து அந்நியப்பட்டு மரத்து உச்சீலபோய் உக்காந்துக்குவீங்க. 

சரி அது கெடக்கட்டும். 

பால் லிட்டர்ல வருமா கிராம்ல வருமா டாக்டர் சார்.

கன்பூசிங்கா இருக்கா. இருங்க ஈசியா உங்களுக்குப் பிரியிறாப்பல கேக்கறேன். 

பால் திரவப் பொருளா திடப் பொருளா ஏ. கா. பாண்டியன் அய்யா.

இதுவும் கன்பூசியஸிங்கா இருந்தா இன்னும் சொலவமா கேக்கறேன்

பால் தண்ணியா இருக்குமா சட்டி மாதிரி கெட்டியா இருக்குமா 

இப்ப புரிஞ்சிருச்சா. பால் திரவப் பொருள். எனவே அது லிட்டரில்தான் வரும். ஒரு லிட்டருக்குக் கொறைஞ்சா பால் அளவு ml என்று குறிப்பிடப்படும். 

மேல இருக்கற படத்துல ml போடல இல்லையா. 

னுதான போட்டிருக்கு. னா கிராம் கரெக்டா. 

வேணா கீய இருக்கிற பட்த்த கூடொ பாத்துக்குங்க. பால ml னும். தெடமா இருக்கிற வெண்ணெய gm கிராம்னும் குறிப்பிட்டிருக்கு ஆவின்.

அப்ப இது பால் இல்லே. கரீட்டா.

வேற என்னவா இருக்கும்னு யோசிங்க. 

எங்கையாச்சும் பால் 275 ரூவாய்க்கு விக்குமா. அப்படிக் கொள்ளையோ கொள்ளை அடிச்சு விக்கிற ஆட்சி நடத்தற கட்சியோடஎழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணில இருக்குமா. 

சே சே இருக்காதில்ல. 

அப்ப இது என்னவா இருக்கும். அதுக்குப் படிக்கணும் டாக்டர் சார். 

நாலு பேரைக் கட்சிக் கொடி போட்ட கார்ல தூக்கிப் போட்டுக்கினு வந்து, ‘டாய் பூய் கடைய மூடு கடைய மூடுனு சவுண்டு விட்டு ரவுசு பண்ணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேரைக் கெடுக்காமஜெண்டிலா வந்து விலைப் பட்டியலைக் கேட்டு வாங்கிக்கிட்டுப் போயி உக்காந்து ஸ்டடி பண்ணியிருந்தா. இந்தக் கடைல 275 ரூவாய்க்கு விக்கிற பொருள் ரெண்டே ரெண்டுதான்னு தெரிஞ்சிருக்கும். அந்த ரெண்டும் பாலில்லேனும் புரிஞ்சிருக்கும். 

275 ரூவா அய்ட்டம் இன்னா இன்னானு பாப்பமா. 

ஒண்ணு பனீர்இன்னோண்ணு சமையல் வெண்ணெய். 

//இந்த வளாகத்தில் திடீரென்று ஒரு பால் கிடைத்திறந்து//

 2018ல ஊடு வாங்கினு, ஆறு வருசமா இங்கியே டேரா போட்டு உக்காந்திருக்கற எங்களப்போய், ரெண்டு மாசம் முன்ன ஊடு வாங்கினு வந்த, நீங்க சொல்ரீங்க திடீர்னு பால் கிடைத்திறந்துனு. உங்களுக்கே இது நியாயமா படுதா. 

கி.ராஜநாராயணனைப் படிச்சிருந்தா கிடைனா இன்னான்னு தெரியும். உருப்படாத ஜெண்ட்லி ராஜோட சேந்தா என்னாத்தத் தெரியும். இது கடை. டாக்டர்னு போட்டுக்கினா பத்தாது பாஸ். அட்லீஸ்ட் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமையாச்சும் எழுதத் தெரியணும். ஓ. ஒருவேளை நீங்க ஊசி போடற டாக்டரோ. அப்படி இருந்தா ரியலி ஐயாம் சாரி. 

இதுவரைக்கும் இந்த ஜெண்ட்லி ராஜ் இந்த வளாகத்துல என்னென்ன பொய்கேஸ யார் யார் மேல போட்டு இந்த அசோசியேஷனையே ஆரம்பிக்கவிடாமTNHBமெய்ண்ட்டனன்ஸை நலச்சங்கத்துக்கு ஹேண்டோவரே பண்ணவிடாமயுடிலிடி ப்ளாக் அசோசியேஷன் கைக்கு வந்துடாம இருக்க எவ்ளோ அநியாயம் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருந்தாப்பலனு உங்குளுக்கு எதாச்சும் தெரியுமா. முறையா தேர்ந்தெடுக்கப்பட்ட அசோசியேஷனுக்குப் போகவேண்டிய பொதுச் சொத்து போயிடாமஜெண்ட்லி ராஜ்ங்கற ஒரு ஆள் கைக்குப் போறதுதான் ஜனநாயகமா சமூகநீதியா. 

ஜெண்ட்லி ராஜ்ங்கற அந்த ஆள் பண்ணிக்கிட்டு இருக்கற பல உருட்டுகள்ல ஒண்ணுதான் இதுனே தெரியாம,. கண்னைத் தொரந்துக்கினே போய்க் கசுந்தடிச்சு தொபுகடீல்னு உழுந்திருக்கீங்க பாவம்.

//அதில் இவ்வளவு மோசமான பால் பாக்கெட்டை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்// 

கிராம்ல இருக்கற பால் பாக்கெட்டைத்தானே சொல்றீங்க. அம்பேத்கர் பாவம் சார் அழுதுடுவாருஇதுக்கா பாடுபட்டோம்னு. 

தொல் திருமா சார் இந்த டாக்டர் ஏ. கா. பாண்டியன் மாதிரி நாலு மாநிலச் செயலாளர்கள்இருந்தா போதும் திரும்பி வரவே முடியாத தூரத்துல உங்களை எங்கையோ கொண்டுபோய் விட்டுடுவாங்க.

//அதையும் இவர்கள் வாங்கி பெற்றுக் கொண்டு வயதானவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் போனால் யார் அதற்கு பதில் கூறுவது சங்கம் நடத்துபவர்கள் இதை கருத்தில் கொண்டு அந்த கடையை மூட வேண்டும் உயிர்ச்சேதம் அதிகமாக நடந்துவிட்டால் பிறகு இவர்களை யார் காப்பாற்ற முடியும்.// 

தத்துப்பித்துனு இன்னா தமிழ் இது. 

உங்க எம்பி ரவிக்குமார் மாதிரி, மிஷேல் ஃபூக்கோ எடுவர்டோ கலியானோவைப் பத்தியெல்லாம் தமிழ்ல எழுதற அறிவுஜீவி இருக்கற கட்சில இருந்துக்கிட்டுடாக்டர்னு வேற போட்டுக்கிட்டு இப்படியாங்க கன்றாவியா தமிழ் எழுதுவீங்க ஜெண்ட்லி ராஜ் மாதிரி;கிரய பத்திரத்தைக் கிரைம் பத்திரம்னு எழுதற ரிடையர்டு ஜட்ஜ் ஜீவானந்தம் மாதிரி.

அமைச்சர் மனோ தங்கராஜ் சார் பாருங்க உங்க ஆவின் பாலை எதோ கள்ளச்சாராயம் ரேஞ்சுல உயிர்ச்சேதம் தயிர்சாதம்னு பின்னி எடுக்கறார். நீங்க இவர் மேல நடவடிக்கை எடுக்கலைனா ஊர்ல ஒரு பய ஆவின் பாலைக் குடிக்கமாட்டான். சொல்லிட்டேன்.

//வளாகத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் காலாவதியான பாலை குடித்து மடிவதற்கா நாம் இங்கு வீடு வாங்கி வந்தோம்// 

மான்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களே இப்ப உங்க ஏரியாலையும் பூந்து விளையாடறாரு பாருங்க டாக்டர் ஏகாபா. 

இந்த 1500 குடியிருப்பு வளாகத்தைத் தெறந்து ஆறேகால் வருஷமாகியும் இன்னும் ஆயிரம் வீடுங்ககூட வித்தபாடில்லை. இப்ப வித்துக்கிட்டு இருக்கிறதே  2018லையே வீடு வாங்கின எங்களுக்குக் கார் பார்க்கிங் குடுக்காம, அல்வா குடுத்துட்டு இந்த ஏ.கா. பாண்டியன் மாதிரி போனமாசம் அதுக்கு முந்தின மாசம் வீடு வாங்கறவங்களுக்கெல்லாம்அநீதியா பார்க்கிங்கோட தூக்கிக் குடுத்து வீடுங்களைத்  தள்ளிவிடறதாலதான்’ இவ்வளவாவது வித்துக்கிட்டு இருக்கு.. அதனாலதான் டகால்டியா இதோ குலுக்கல் அதோ குலுக்கல்னு தள்ளிப் போட்டுக்கிட்டே விட்டுங்களை கார் பார்க்கிங்கோட வித்துக்கிட்டு இருக்கீங்க. கோர்ட்டுக்குப் போய் மொத்தத்துக்கும் ஸ்டே வாங்காம எங்களுக்கு கார் பார்க்கிங் கிடைக்காது. நோ ப்ராப்ளம். நம்ப பஞ்சாயத்தைத் தனியா வெச்சுக்குவோம். 

விக்கிற ஊட்டுக்கும் மடிவதற்கானு ஊரைக்கூட்டி ஒப்பாரி வெச்சு இங்க வீடே வாங்காதீங்கனு மொத்தமா சூனியம் வெக்கறாரு பாருங்க டாக்டர் ஏ கா பாண்டியன் சார். தோழமைச் சுட்டலா திருமா கிட்டக் கொஞ்சம் சொல்லிவைங்கஇது மாதிரி உங்க ஆட்கள் நமக்கே சேம் சைடு கோல் போடறது நல்லா இல்லேன்னு. 

//இந்த அவல நிலையை யார் கண்டிப்பது இதற்கு நாம் ஓரணியில் நின்று அந்த பால் விற்பனை நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்தி அதை மூடிவிட வேண்டும் அதற்கு உங்களுடைய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.// 

அலைகடலென திரண்டு வாரீர்னு ஜாதி மத கார்ட்டையெல்லாம் காடி ஜெண்ட்லி ராஜ் கூட்டின கூட்டத்துக்கு ஒம்போது பேர்தான் வந்தாய்ங்க. 

இவுரு அறைகூவுற முற்றுகைப் போராட்டத்துக்கெல்லாம் வெளில இருந்து ஆளைக் கொண்டாந்து இறக்கினாதான் உண்டு. ரெண்டு மாசம் முன்ன வீட்டை வாங்கி, அதையும் 15 நாள் முன்ன வாடகைக்கு விட்டுட்டுவளாகத்துக்கு சம்பந்தமே இல்லாம வெளிய எங்கையோ இருக்கற ஆளு, காட்ல இருக்கற ஒரிஜினல் சிறுத்தையாவே இருந்தாலும் உள்ள வந்து முற்றுகைப் போராட்டம் செய்வோம்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லையா அமைச்சர் முத்துசாமி சார். 

பாத்துக்குங்க திருமா சார். நிச்சயமா இந்த மாதிர் ஆளுங்களாலதான் உங்கக் கட்சிப் பேரு கெட்டுப் போயிடுது. ஊதற சங்கை ஊதிட்டேன். அப்பறம் உங்க இஷ்டம்.

அரவிந்த் ரமேஷ் எம் எல் ஏ சார். கேரண்ட்டியா சொல்றேன், 1500 வீடுகள் இருக்கற ஏரியா இது. கிட்டத்தட்ட சின்ன ஊருனேகூட சொல்லலாம். இந்த பாண்டியன் அடிக்கிற கூத்தைக் கண்டுக்காம வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தீங்கன்னாஅடுத்த தேர்தல்லஉங்கக் கூட்டணிக்கு, எண்னி பத்து ஓட்டாவது விழுமாங்கறது சந்தேகம். ஏற்கெனவே, உங்க ஆளே ஒண்ணு, உங்க போலீஸ் கிட்டேந்தே தலைமறைவா இருக்கு. உங்களுக்குத் தெரியாததில்லே பாத்துக்குங்க.

//அது மட்டுமல்ல ஞாயிற்றுக்கிழமை காலை எம் ஐ ஜி குடியிருப்பில் லிஃப்ட் தடைபட்டு போய் அதில் நான்கு நபர்கள் மாட்டிக்கொண்டு நான்கு மணி நேரம் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்//

லிஃப்ட்ல இருந்து தள்ளாடிக்கிட்டே நேரா ஹாஸ்பிடலுக்குப் போயிருந்தா அட்மிட் பண்ணி கேசாகி ஃபைனில்ல கட்டியிருந்திருக்கணும். 

வீக்கெண்டுனு ஏழெட்டு பேர் குடிச்சி கும்மாளம் போட்டுட்டு லிஃப்ட்டுல ஏறி லிஃப்ட்டு ரிப்பேராயிடுச்சினு லிஃப்ட் உள்ள மோதி குதிச்சிலிஃப்ட்டையே ஒடுக்காக்கிட்டாங்க. போட்டோ போதுமா இல்ல போதைல தள்ளாடிக்கிட்டெ வெளிய வரகோனேகாரங்க எடுத்த வீடியோ வேணுமா.

ஜெண்ட்லி ராஜ் கிறுக்கிக் குடுத்ததுல அடில பேரைப் போட்டுக்கிட்டு ஜோக்கராகிட்டீங்கனு இப்பையாச்சும் உங்களுக்கு உறைக்குதா டாக்டர் ஏ கா சமூகநீதி சார்.  

//இப்படி பல தவறுகள் குளறுபடிகள் நடந்து கொண்டிருக்கிறது இந்த சங்கத்தால் நாம் இதையெல்லாம் கடந்து போய் விட முடியாது இதற்கு ஒரு மாற்று வழி செய்தே ஆக வேண்டும் இதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் வாருங்கள் நமது உரிமையை  வென்று எடுக்க உயிர் பாதுகாப்பு முக்கியம் காலாவதியான பாலை குடித்துவிட்டு முதியவர்கள் படுமோச நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்களானால் என்றால் நாம் ஒவ்வொருவரும் அதுக்கு பொறுப்பாக வேண்டும்.  குழந்தைகள் முதியவர்கள் அனைவரும் பாதிக்கப்படக்கூடாது ஒன்றுபடுவோம் போராடுவோம் 

இப்படிக்கு உங்களில் ஒருவன் 

டாக்டர் ஏ.கா. பாண்டியன்//

ஏன் சார் எங்கிட்ட போன்ல நாப்பது நிமிஷம் பேசும்போது நீங்க எதோ பத்திரிகைக்கு இணை ஆசிரியர்னு சொல்லிக்கிட்டீங்களே,

பத்திரிகைக்கு ஆசிரியரா இருக்கறவங்ககாற்புள்ளி முற்றுப்புள்ளி கூட வைக்காமஒரு வாக்கியத்தைக்கூட ஒழுங்கா எழுதத் தெரியாம இவ்வளவு திராபையாவா தமிழ் எழுதுவாங்க.

இல்லே, பத்திரிகை ஆசிரியர்ங்கறதும் ஒருவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சில மாநிலச் செயலாளரா இருக்கறேன்னு விசிட்டிங் கார்டையே காட்டாம சும்மா வாயால சொல்லிக்கிறா மாதிரிதானா. 

அதுசரி. உங்க விசிட்டிங் கார்டைக் கேட்டா திருமா கார்டை எடுத்து நீட்டறீங்களாமே ஏன் சார் உங்களுக்குனு ஒரு விசிடிங்கார்டு கூட வெச்சிக்காத அளவுக்கு நீங்க அவ்வளவு அடக்கமானவரா இல்லே உங்க விசிட்டிங்கார்டே திருமாங்கற பேர் மட்டும்தானா. 

//எனக்கு அன்பான வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்//

உங்களுக்கு இங்க யாரைத் தெரியும்எத்தனைப் பேரைத் தெரியும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க பாப்போம்.

திருமாவளவன் பேரைக் கெடுக்காம கொஞ்சம் சும்மா இருங்க டாக்டர் ஏ.கா. பாண்டியன் சார்.

08.08.2024

.

பெறுநர்:          மாண்புமிகு அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் 

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் 

Dr. K. Gopal IAS., Additional Chief Secretary to Government

Thiru R. Yesudoss Kennedy, Additional Secretary to Government

நகல்கள்:        1. மாண்புமிகு முதலமைச்சர்தமிழ்நாடு (CM Cell)

                          2. மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி 

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை 

3. திரு. அரவிந்த் ரமேஷ் MLA

சோழிங்கநல்லூர்

                         4. திரு. தொல். திருமாவளவன், MP 

                     5. திரு. ரவிக்குமார் MP 

                     6. Dr S. Vineeth, IAS., Managing Director, Aavin 

                         7. Police Commissioner, Chennai

 





  •  

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின் மூலமாகச் செய்யும்போது அவர் காலத்தின் குரலாக மாறிவிடுகிறார்.

The post திரைகடலுக்கு அப்பால் 7: 1984 appeared first on அரூ.

  •  

சிதைவுகள்

ஒரு சிறுமியின் அம்மாவோ பாட்டியோ, அவளை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, மிட்டாய், பலகாரம், ஐஸ்கிரீம் எனப் பிடித்த அனைத்தையும் வாங்கித் தருகிறார். அதனைச் சாப்பிட்டுக் கொண்டே போகும் போது, ஒரு கட்டிடத்தினுள் சிறுமியை அழைத்துச்...

The post சிதைவுகள் first appeared on Her Stories.

  •  

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும்...

The post ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே first appeared on Her Stories.

  •