எர்ல் ஸ்டான்லி கார்ட்னர் எழுதிய பெர்ரி மேசன் கதைகள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தன. 1970-இல் அவர் இறக்கும்போது 20-ஆம் நூற்றாண்டின் அதிகப் புத்தக விற்பனை அவர் புத்தகங்கள்தானாம். சிறு வயதில் விழுந்து விழுந்து படித்திருக்கிறேன். டைம் பாஸ் புத்தகங்கள். கிட்டத்தட்ட நூறு பெர்ரி மேசன் புத்தகங்கள் இருக்கலாம். எல்லா புத்தகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். சில படிக்க சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் படித்த ஐந்தாவது நிமிஷம் மறந்தும் போய்விடும்.
எனக்கு பெர்ரி மேசன் கதைகளை விட டோனல்ட் லாம் துப்பறியும் கதைகள் பிடிக்கும். லாம் முன்னாள் வக்கீல், இன்னாள் துப்பறிபவன். பெர்த்தா கூல் நடத்தும் துப்பறியும் நிறுவனத்தில் பணி புரிகிறான், அதன் முக்கியத் துப்பறிவாளன் அவனே. சட்டத்தை வளைக்கத் தெரிந்தவன். எனக்குப் பிடித்தவை அப்படி ஒரு சட்ட நுணுக்கத்தை விளக்கி லாம் எப்படி சட்டத்தை வளைக்கிறான் என்று விவரிக்கும் கதைகளே. ஆனால் இவற்றை pulp fiction என்றுதான் வகைப்படுத்த வேண்டும்.
இருபது இருபத்தைந்து நாவல்கள் இருக்கும். அத்தனையும் படிக்கும் பொறுமை எல்லாம் இருபது இருபத்தைந்து வயதோடு போய்விட்டது. ChatGPT-யிடம் சிறந்த டோனல்ட் லாம் நாவல்கள் எவை என்று கேட்டேன், அது தந்த பட்டியல்:
Bigger They Come (1939). முதல் நாவல். லாம் வேலையும் பணமும் இல்லாமல் தவிக்கும்போது பெர்த்தா கூல் உதவி செய்கிறாள், அவளுடைய நிறுவனத்தில் சேர்கிறான். அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் குற்றம் புரிந்துவிட்டு வேறு மாகாணத்தில் பிடிபட்டால் அவனை குற்றம் புரிந்த மாகாணத்திற்கு திரும்பிக் கொண்டு வருவதில் சில முறைமைகள் இருக்கின்றன. Rules of Extradition. தானே கொலையாளி என்று ஒத்துக் கொண்டாலும் அவனை தண்டிக்க முடியாதபடி extradition சட்டத்தில் இருக்கும் ஒரு ஓட்டையை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் புத்தகம் வெளியானதற்குப் பிறகு இந்த ஓட்டையை அடைக்க சட்டமே மாற்றப்பட்டதாம்.
The Count of Nine (1958) சுமாரான நாவல். இந்த முறை ஒரு கொலை, ஒரே மாதிரியான இரண்டு புத்தர் சிலைகள். நாலு பக்கத்துக்கு ஒரு முறை டோனல்ட் அதிபுத்திசாலி என்று யாராவது சொல்கிறார்கள். பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடலாம்.
Double or Quits (1941) கொஞ்சம் இழுவை. ஆனாலும் படிக்கலாம். இந்த முறை ஒரு மருத்துவரின் மரணம். அவரது மனைவியின் நகைகள் திருடு போய்விட்டன, அவற்றை கண்டுபிடிக்க லாமை நியமிக்கிறார், அடுத்த நாளே இறந்து போய்விடுகிறார்.
The Knife Slipped (2016) கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள். இதில் பெர்த்தாவுக்கு கொஞ்சம் பெரிய ரோல்.
Turn on the Heat (1940), Spill the Jackpot (1941), Top of the Heap (1952) எல்லாம் தண்டம்.
ChatGPT-க்கும் எனக்கும் ரசனையில் கணிசமான வித்தியாசம் இருக்கிறது! அதனால் ChatGPT பரிந்துரைத்த Some Women Won’t Wait (1960), The Knife Slipped (2016) புத்தகத்தை தேடக் கூட இல்லை. இவற்றில் Knife Slipped கார்ட்னர் 1930களிலேயே எழுதிய நாவல். ஆனால் பிரதியைக் கண்டுபிடித்து தூசி தட்டி 2016-இல்தான் பதித்திருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர கொஞ்சம் படிக்கக் கூடியவை
Beware the Curves (1956) நாவல் இன்னொரு ஓட்டையை விவரிக்கிறது. அமெரிக்க சட்டப்படி பொதுவாக கொலைக்கு காலவரம்பு (statute of limitations) கிடையாதாம். ஆனால் திட்டமிடப்படாத கொலைக்கு (manslaughter) காலவரம்பு உண்டாம். லாம் கொஞ்சம் அஜால்குஜால் வேலை பார்த்து அரசு தரப்பு வக்கீலை இது திட்டமிடப்படாத கொலை என்று ஒத்துக் கொள்ள வைக்கிறார். பிறகு காலவரம்பு கடந்துவிட்டது என்று சுட்டிக்காட்டி தன் கட்சிக்காரரை விடுவிக்கிறார்.
Up For Grabs (1964)-இல் கரு கொஞ்சம் சுவாரசியமானது. இன்ஷூரன்சை ஏமாற்றும் இரட்டை வாழ்க்கை வில்லன்; தன் காரை இடித்ததாகச் சொல்லப்படுபவனும் அவனேதான்!
மற்றவற்றில்
Give ‘Em the Ax (1944) இழுவைதான். ஆனாலும் படிக்கலாம். லாம் கொஞ்சம் சைட் அடிக்கும் ஒரு பெண்ணின் அபார்ட்மெண்டில் ஒரு பிணம். கடைசியில் சம்பந்தம் இல்லாத ஒரு பாத்திரம்தான் கொலையாளி என்று முடித்துவிடுகிறார்.
Gold Comes in Bricks (1940) போன்ற கதைகள் எல்லாம் டைம் பாஸ்.
கார்ட்னர் எழுதியவற்றில் எனக்கு இன்னும் பிடித்தவை லெஸ்டர் லெய்த் (Lester Leith) கதைகள். லெஸ்டர் திருடர்களிடம் திருடுபவன். அவனை உள்ளே தள்ள போலீஸ் முயன்று கொண்டிருக்கிறது. அவனிடம் உளவறிய ஒரு போலீஸ்காரனை அவனிடம் பட்லராக வேலை செய்ய அனுப்பி இருக்கிறது. இந்த சட்டகத்தை வைத்துக் கொண்டு ஜாலியாக கதைகள் எழுதி இருக்கிறார். Monkey Murder Case போன்றவற்றை சொல்லலாம். பல கதைகள் எழுதி இருந்தாலும் இவை இப்போது கிடைப்பது அரிதுதான். எலரி க்வீன் தொகுத்த ஒரு புத்தகம் – Amazing Adventures of Lester Leith – மட்டுமே இன்னும் கிடைக்கிறது. இதே சட்டகத்தில் வேறு பாத்திரங்களை வைத்து Kid Clips.a Coupon போன்ற சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். சில pulp கதைகளையும் (எட் ஜெங்கின்ஸ் கதைக) எழுதி இருக்கிறார், சகிக்க முடியாதவை.
கார்ட்னர் பதின்ம வயதிலேயே டைம் பாஸ் என்ற அளவில்தான் இருந்தார். இப்போது மீள்வாசிப்பெல்லாம் நாஸ்டால்ஜியாவால்தான். தவிர்த்துவிடலாம். ஒரே ஒரு புத்தகம் முயற்சித்துப் பார்ப்பதென்றால் Bigger They Come புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்.
அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.
அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.
அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.
அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.
அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.
பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.
1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.
அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.
அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.
ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது. பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.
பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.
எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்
1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.
1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.
பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.
மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
அரங்கண்ணலை இன்று வெகு சிலருக்கே நினைவிருக்கும். திமுகவின் முக்கியத் தலைவர்களோடு வெகு நெருக்கமாக இருந்தவர், அண்ணாவுக்கு மூத்த மகன் ஸ்தானத்தில், கருணாநிதிக்கு தம்பி மாதிரி இருந்தவர். ஆனால் பெரிய பதவி எதுவும் வகிக்கவில்லை. குடிசைமாற்று வாரியத் தலைவராக இருந்ததுதான் அவருக்குக் கிடைத்த பெரிய பதவி.
அரங்கண்ணல் திரைப்படத் தயாரிப்பாளர். பூவா தலையா, அனுபவி ராஜா அனுபவி என்று சில படங்களதி தயாரித்திருக்கிறார். பாலசந்தரின் கல்லூரிக் கால நண்பர். மரோ சரித்ராவும் இவர் தயாரித்ததுதானா என்று நினைவில்லை.
அரங்கண்ணல் தன் சுயசரிதையை நினைவுகள் என்ற பேரில் எழுதி இருக்கிறார். எழுபது வரைக்குமாவது – எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்படும் வரைக்குமாவது – அது உண்மையாகத்தான் தெரிகிறது. அதற்குப் பிறகு கொஞ்சம் பூசி மெழுகி இருக்கிறார்தான்.
அரங்கண்ணல் கோனார் ஜாதியில் பிறந்தவர். பெரிய மிராசுதார் இல்லைதான், ஆனால் வசதியான குடும்பம். இவரைப் பெரிய படிப்பு வைக்க வேண்டும் என்று வீட்டாருக்கு ஆசை. பள்ளிக்காலத்தில் தமிழ்ப்பேச்சு, கட்டுரை என்று சில பரிசுகள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதி பள்ளியில் இவருக்கு சீனியர். 12-13 வயதில் காங்கிரஸ்தான் இவரை ஈர்த்திருக்கிறது. ஆனால் கருணாநிதி பள்ளிக் காலத்திலேயே ஹீரோ போலிருக்கிறது. மெதுமெதுவாக கருணாநிதியால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். இளம் வயதிலேயே திராவிடக் கழகத்திற்காக மும்முரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். அங்கங்கே மாநாடு, கூட்டம், மாணவர் மாநாடு என்று அலைந்திருக்கிறார். கருணாநிதியும் இவரை ஊக்குவித்திருக்கிறார்.
அன்றைய திராவிடக் கழகத் தலைவர்களில் அய்யாவும் (ஈ.வெ.ரா.) அண்ணாவும்தான் நாயகர்கள். அவர்களை சந்திக்க வேண்டும், கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும், பேச வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை. அண்ணா இரண்டு மூன்று முறை கூட்டத்தில் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வரவில்லை. ஆனால் வந்தபோது மனதில் இருந்த வருத்தம் எல்லாம் போய்விட்டதாம்.
பள்ளிப் படிப்பு முடிந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம்தான் அன்று திராவிட இயக்க சார்புடைய மாணவர்களுக்கு வசதியாம். பின்னால் சபாநாயகராக இருந்த மதியழகன் அங்கே அறிவிக்கப்படாத திராவிட இயக்கத் தலைவர். அரசியலில் ஆர்வம் இல்லாத பாலசந்தர் இவருக்கு சீனியர், அவர் அறையில் நிறைய அரட்டை அடிப்பாராம். அங்கே ஒரு முறை மாணவர்களுக்கும் ஊராருக்கும் ஏற்பட்ட சண்டையை விவரிக்கிறார், மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சம் திமிர் அருமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அய்யாவின் பத்திரிகையில் வேலை. (ஈ.வெ.கி. சம்பத் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாம், பிறகு பட்டப்படிப்பு வரைக்கும் போயிருக்கிறார். ஈ.வெ.ரா.வுக்கு ரொம்ப கோபமாம்) அய்யா திருமணம் என்று அறிவித்தபிறகு ஏறக்குறைய அழுதிருக்கிறார். கிழவர்கள் இளைஞிகளை மணக்கக் கூடாது என்று அய்யா பேசிய பேச்சை எடுத்து அய்யாவின் பத்திரிகையில் போட்டிருக்கிறார்.ராஜினாமா செய்ததை அய்யா சுலபத்தில் ஏற்கவில்லை. ஆனால் பிடித்த பிடியை விடவில்லை. காஞ்சிபுரம் போய்விட்டார்.
1946-இல் மதுரையில் திராவிடர் கழக மாநாடு நடக்க ஏற்பாடுகள். அங்கே பயங்கர அடிதடியாம். வைத்தியநாத ஐயர் தூண்டுதலால் திராவிடக் கழகத்தினர் மீது கடுமையான தாக்குதல் நடந்ததாம்.
அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகையின் பொறுப்பு இவர் மீது விழுந்திருக்கிறது. எட்டு ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டு அண்ணா மெச்சும்படி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அண்ணாவின் குடும்பத்தினரும் மிகவும் பாசமாக இருந்திருக்கிறார்க்ள்.
அண்ணா திமுகவை ஆரம்பிக்க நிறையவே யோசித்தாராம். அய்யாவை எதிர்க்க அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாம். எல்லாரையும் அரவணைத்துக் கொண்டு போவாராம். சம்பத் கொஞ்சம் ஈகோ உள்ளவராம். என்.எஸ். கிருஷ்ணன் போதையில் ஒரு முறை அண்ணாவை கன்னாபின்னா என்று திட்டிவிட்டாராம், அதை சம்பத் அண்ணாவிடம் கோள் மூட்டிவிட்டாரம். அதற்காக என்எஸ்கே நாசூக்காக மன்னிப்பு கேட்டாராம். நெடுஞ்செழியன், மதியழகன், அன்பழகன் என்று பலரையும் பற்றி அவர் போகிற போக்கில் விவரிப்பது உண்மையாக இருக்கிறது.
ஆசைத்தம்பி ஐம்பதுகளில் போராட்டங்களுக்காக சிறை சென்ற முதல் சில திமுக்காரர்களில் ஒருவர். அவருக்கு சிறையில் மொட்டை அடிக்கப்பட்டது. அதை பத்திரிகையில் அரங்கண்ணல் பதித்து சர்ச்சை ஆகி இருக்கிறது. பின்னாளில் ஆசைத்தம்பி ஒரு முறை அண்ணாவை கடுமையாகத் தாக்கினாராம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா மீது அழுத்தம் தரப்பட்டதாம். அண்ணா எனக்கு கட்சிக்காக மொட்டை அடிக்கப்பட்ட ஆசைத்தம்பிதான் தெரிகிறான், என்னைத் தவறாகப் பேசும் ஆசைத்தம்பி அல்ல என்று எல்லாரையும் அடக்கினாராம். சம்பத் முரண்டு பிடித்தபோதெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருக்கிறார்.
பணம் அண்ணா போன்றவர்களுக்கு பெரிய பிரச்சினை. மூன்றாம் வகுப்பு ரயில் பிரயாணம்தான் அனேகமாக. அதுவும் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் சில சமயம் பணம் தராத சூழ்நிலை.
எல்லாரையும் போல இவரையும் சினிமா இழுத்திருக்கிறது. கதை வசனம் எழுதி இருக்கிறார். எம்ஜிஆர் நடித்த தாய் மகளுக்கு கட்டிய தாலி உட்பட. எதுவும் பெரிதாக ஓடவில்லை. ராசியில்லாத எழுத்தாளர் என்று கருதப்பட்டிருக்கிறார். பீம்சிங்குடன் நல்ல பழக்கம். அவரது “கதை இலாகாவில்” இருந்திருக்கிறார். பச்சை விளக்கு திரைப்படத்தில் ஓரளவு பங்களிப்பு இருந்ததாம்
1962-இல் மயிலாப்பூர் எம்எல்ஏ. நல்ல பேர் வாங்கி இருக்கிறார். குப்பத்து மக்களிடமும் படித்தவர்களிடம் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் திரைப்படத் தயாரிப்பு. பெரிய பணக்காரர் ஆக முடியவில்லை. கடன் வாங்கி வீடு வாங்கி இருக்கிறார், பிறகு விற்க வேண்டிய சூழ்நிலை. அன்றைய தொழிலமைச்சர் ஆர். வெங்கடராமன் உதவியால் மீண்டும் கொஞ்ச்ம் நிலம் வாங்கி இருக்கிறார். அதில்தான் வீடு கட்டிக் கொண்டாராம். ஊழல் செய்யாதவர் என்றுதான் தோன்றுகிறது.
1967-இல் அண்ணா முதல்வர் ஆனபோது அண்ணா நெருக்கமான பலரை மந்திரி ஆக்கத் தயங்கி இருக்கிறார். இவர், அன்பழகன், என்.வி. நடராஜன் என்று பலர். ஆனால் அண்ணாவுக்கு காரியதரிசி போல வேலை பார்த்திருக்கிறார்.
பிறகு குடிசைமாற்று வாரியத் தலைவர் பதவி. கடுமையாக உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஆட்சியில் ஊழலே இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் ம்றைக்கிறார். எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கக் கூடாது என்று அழுதாராம். கருணாநிதிக்கு எம்ஜிஆரை நீக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கொஞ்சம் தயக்கம் இருந்தது, நெடுஞ்செழியன் போன்றவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்.
நெருக்கடி நிலை காலத்தில் கொஞ்சம் பயந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அப்போதுதான் தன் உயிர் நண்பரிடம் கொஞ்சம் விலக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அதிமுகவுக்குப் போய், திமுகவுக்கு மீண்டிருக்கிறார்.
மூன்றாம் நிலை தலைவர்தான். அண்ணாவுக்கு அணுக்கமாக இருந்தவர், அவரை அருகிலிருந்து பார்த்தவர். அண்ணாவைப் பற்றி அவர் தரும் சித்திரம் அருமையாக இருக்கிறது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
என் பாட்டி காச நோயில் இறந்தவர். அப்போது காச நோய்க்கு மருந்து கிடையாது. தாம்பரம் அருகே உள்ள சானடோரியத்தில் தங்க வைப்பார்கள், நல்ல காற்று, நல்ல உணவு இருந்தால் குணமாகலாம் என்று ஒரு நம்பிக்கை. அப்போது என் தாத்தா ஓய்வு பெற்றுவிட்டார், பென்ஷனில் குடும்பம் எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது, நல்ல உணவு இருந்திருக்காது என்று நினைக்கிறேன். பற்றாக்குறைக்கு அப்போதெல்லாம் ரேஷன், அரிசி கூட சரியாகக் கிடைக்காது.
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் எப்படி கண்டுபிடித்தார்கள், எப்படி ஒழித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன். இன்றும் ஒழியவில்லை. ஆஃப்ரிக்காவில் லட்சக்கணக்கில் இன்றும் இறக்கிறார்களாம்.
புத்தகம் என் மனதைத் தொட்டது. Everything is Tuberculosis அல்ல, Everything is Money என்பதுதான் உண்மை. இன்று மேலை நாடுகளில் காசநோய் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. இந்தியாவில் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் 1950கள் வரை இதற்கு மருந்தே கிடையாதாம். (என் பாட்டி இறந்த பிறகுதான் மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்). ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் ஆறிலிருந்து ஒன்பது மாதத்தில் குணப்படுத்திவிடலாமாம். ஆனால் மருந்துக்குப் பணம்? மருந்து கம்பெனிகளுக்கு லாபம்? அதனால் இன்று ஏழை நாடுகளில் அமுலில் இருக்கும் ட்ரீட்மெண்ட் வழிமுறைகள் – WHO பரிந்துரைகள் – அத்தனை efficient ஆக இல்லை என்கிறார்.
புத்தகம் முழுக்க பல நுண்விவரங்கள்; உதாரணமாக ஒரு காலத்தில் காசநோய்க்காரர்கள் அழகிகள் என்று கருதப்பட்டனராம். இன்றும் கன்னத்தில் rouge தடவப்படுவது அந்த நினைப்பின் எச்சம்தானாம். அமெரிக்காவில் இன்றைய நியூ மெக்சிகோ மாகாணத்தில் அன்று வெள்ளையர்கள் குறைவாக இருந்தார்களாம், அதனால் அமெரிக்கா அந்த மாகாணத்தை சேர்த்துக் கொள்ள மறுத்ததாம். காசநோய்க்காரர்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை என்று பிரச்சாரம் செய்து வெள்ளையர்களை அங்கே வரவழைத்தார்களாம். காசநோயால் இறந்தவர்கள் இது வரை மனித குலத்தில் மூன்றில் ஒரு பகுதி என்கிறார்.
புத்தகம் தனிப்பட்ட முறையிலும் – சியரா லியோனி நாட்டில் ஒரு சிறுவனை முன்வைத்து – மனதைத் தொடுகிறது. ஜான் க்ரீன் அந்தப் பையனை முதலில் பார்க்கும்போது அவனுக்கு ஒன்பது வயது என்று நினைக்கிறார். 17! சரியான உணவு இல்லாமல் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. எப்படியாவது அவனுக்கு குணமாகாதா என்று நினைக்க வைக்கிறார். (குணமாகிறது)
புத்தகத்தை எழுதிய ஜான் க்ரீன் சிறுவர் நாவல்களுக்காக பிரபலமானவர்.
என் பாட்டி காச நோயில் இறந்தவர். அப்போது காச நோய்க்கு மருந்து கிடையாது. தாம்பரம் அருகே உள்ள சானடோரியத்தில் தங்க வைப்பார்கள், நல்ல காற்று, நல்ல உணவு இருந்தால் குணமாகலாம் என்று ஒரு நம்பிக்கை. அப்போது என் தாத்தா ஓய்வு பெற்றுவிட்டார், பென்ஷனில் குடும்பம் எப்படியோ ஓடிக் கொண்டிருந்தது, நல்ல உணவு இருந்திருக்காது என்று நினைக்கிறேன். பற்றாக்குறைக்கு அப்போதெல்லாம் ரேஷன், அரிசி கூட சரியாகக் கிடைக்காது.
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் எப்படி கண்டுபிடித்தார்கள், எப்படி ஒழித்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன். இன்றும் ஒழியவில்லை. ஆஃப்ரிக்காவில் லட்சக்கணக்கில் இன்றும் இறக்கிறார்களாம்.
புத்தகம் என் மனதைத் தொட்டது. Everything is Tuberculosis அல்ல, Everything is Money என்பதுதான் உண்மை. இன்று மேலை நாடுகளில் காசநோய் ஏறக்குறைய ஒழிந்துவிட்டது. இந்தியாவில் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஆனால் 1950கள் வரை இதற்கு மருந்தே கிடையாதாம். (என் பாட்டி இறந்த பிறகுதான் மருந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்). ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் ஆறிலிருந்து ஒன்பது மாதத்தில் குணப்படுத்திவிடலாமாம். ஆனால் மருந்துக்குப் பணம்? மருந்து கம்பெனிகளுக்கு லாபம்? அதனால் இன்று ஏழை நாடுகளில் அமுலில் இருக்கும் ட்ரீட்மெண்ட் வழிமுறைகள் – WHO பரிந்துரைகள் – அத்தனை efficient ஆக இல்லை என்கிறார்.
புத்தகம் முழுக்க பல நுண்விவரங்கள்; உதாரணமாக ஒரு காலத்தில் காசநோய்க்காரர்கள் அழகிகள் என்று கருதப்பட்டனராம். இன்றும் கன்னத்தில் rouge தடவப்படுவது அந்த நினைப்பின் எச்சம்தானாம். அமெரிக்காவில் இன்றைய நியூ மெக்சிகோ மாகாணத்தில் அன்று வெள்ளையர்கள் குறைவாக இருந்தார்களாம், அதனால் அமெரிக்கா அந்த மாகாணத்தை சேர்த்துக் கொள்ள மறுத்ததாம். காசநோய்க்காரர்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை என்று பிரச்சாரம் செய்து வெள்ளையர்களை அங்கே வரவழைத்தார்களாம். காசநோயால் இறந்தவர்கள் இது வரை மனித குலத்தில் மூன்றில் ஒரு பகுதி என்கிறார்.
புத்தகம் தனிப்பட்ட முறையிலும் – சியரா லியோனி நாட்டில் ஒரு சிறுவனை முன்வைத்து – மனதைத் தொடுகிறது. ஜான் க்ரீன் அந்தப் பையனை முதலில் பார்க்கும்போது அவனுக்கு ஒன்பது வயது என்று நினைக்கிறார். 17! சரியான உணவு இல்லாமல் வளர்ச்சி குறைவாக இருக்கிறது. எப்படியாவது அவனுக்கு குணமாகாதா என்று நினைக்க வைக்கிறார். (குணமாகிறது)
புத்தகத்தை எழுதிய ஜான் க்ரீன் சிறுவர் நாவல்களுக்காக பிரபலமானவர்.
ஆஸ்டின் ஃப்ரீமன் போன்ற எழுத்தாளர்கள் துப்பறியும் நாவல்களின் பரம ரசிகர்களுக்காக மட்டுமே. அந்த சிறுவட்டத்தில் அவர் ஒரு சூப்பர்ஸ்டார். ஷெர்லக் ஹோம்ஸுக்கு அடுத்த நிலையில் உள்ள எழுத்துக்கள்.
ஃப்ரீமனின் டாக்டர் தார்ண்டைக் அறிவியலின் துணை கொண்டு துப்பறிபவர். அதனால் புகைப்படங்கள், கைரேகைகள், மைக்ரோஸ்கோப் போன்றவை அடிக்கடி அடிபடும். அதுவும் தார்ண்டைக் ஒரு colorless person. அதனால் கதைகள் எப்போதும் கொஞ்சம் dry ஆகத்தான் இருக்கும். மர்மம் எப்படி அவிழ்கிறது என்பதற்காகத்தான் படிக்க வேண்டும். ஆனால் அவற்றை மீறி அவ்வப்போது தெரியும் குசும்பு (Moabite Cipher), கைரேகைகளை வைத்து விளையாடும் Red Thumb Mark (1907) போன்ற படைப்புகள் இவரது எழுத்துக்களை உயர்த்துகின்றன.
ஃப்ரீமனின் முக்கிய பங்களிப்பு Inverted Detective Story. அதாவது முதல் பகுதியில் குற்றம் விவரிக்கப்படும். குற்றவாளி யாரென்பது வாசகனுக்கு நேரடியாகவே சொல்லப்படும். இரண்டாவது பகுதியில் அவன் விட்டுச்சென்ற தடையம் என்ன, எப்படி மாட்டிக் கொள்கிறான் என்பது தெளிவாகும்.
தார்ண்டைக் கதைகள் பலவற்றிலும் ஒரு obscure உண்மையை வைத்து தார்ண்டைக் மர்மத்தை அவிழ்ப்பார். இந்த வகைப் பாசி இங்கிலாந்தில் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்கிறது, ஆனால் வேறு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிணத்தின் நுரையீரலில் அது இருந்தது, அதனால் கொல்லப்பட்ட இடம் வேறு – இந்த மாதிரி. யாருக்கும் இதெல்லாம் தெரியப் போவதில்லை. ஆனாலும் படிக்கக் கூடிய கதைகளே.
தார்ண்டைக் நாவல்களில் மிகச் சிறந்தது Red Thumb Mark (1907). திருட்டுப் போன இடத்தில் ரத்தம் பதிந்த மிகத் தெளிவான கட்டைவிரல் கைரேகை கிடைக்கிறது. ஆனால் ரேகையின் சொந்தக்காரன் திருடவில்லை. சரளமான கதை. தார்ண்டைக்கின் பாத்திரம் – அறிவியல் மற்றும் சட்டத்தில் நிபுணர், அதைத் தவிர அவர் வாழ்க்கையில் வேறு எதுவும் இல்லை – மிகத் தெளிவாக வரையப்படுகிறது.
Eye of the Osiris (1911) சுமார்தான். சொத்துக்காரர் இறந்துவிட்டார் என்று தெரிகிறது, ஆனால் அவர் பிணம் கிடைக்கவில்லை. சட்டப்படி அவர் இறந்தாரா இல்லையா? அவரது உயில்படி எப்போது சொத்தைப் பிரிக்கலாம்? ஜெல்லிகோ என்ற பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ப்ரீமனின் ராம்னி ப்ரிங்கிள் சீரிசும் படிக்கக் கூடியவை. (படித்தே ஆக வேண்டியவை அல்ல). குறிப்பாக Assyrian Rejuvenator, Submarine Boat போன்ற சிறுகதைகளில் தெரியும் மெல்லிய நகைச்சுவையை நான் ரசிப்பவன்.
தார்ண்டைக் ஹோம்ஸ் அல்லர்தான். ஆனால் துப்பறியும் கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என் கண்ணில் முக்கியமான துப்பறியும் கதை எழுத்தாளர். மற்றவர்களும் Moabite Cipher மாதிரி சிறுகதைகளை முயற்சித்துப் பார்க்கலாம். ஒரே ஒரு நாவல் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் Red Thumb Mark.
ஏறக்குறைய ஃப்ரீமனின் எல்லா படைப்புகளும் இணையத்தில் கிடைக்கின்றன.
சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.
சி.ஜே. தாமஸ்ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.
கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.
என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.
என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.
இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!
நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.
சி.ஜே. தாமஸ்ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.
கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.
என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.
என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.
இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!
நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.
அன்னி எர்னோ 2022-இல் நோபல் பரிசு வென்றவர். ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். இன்னும் படிக்க கைவரவில்லை.
அக்னிபிரவேசம் பதிவைப் படித்த பிறகு நண்பர் அமர்நாத் அன்னி எர்னோவுக்கும் அக்னிபிரவேசத்துக்கும் ஒரு சுவாரசியமான முடிச்சு போட்டிருக்கிறார். அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அமர்நாத், உங்கள் புகைப்படம் ஒன்று அனுப்புங்கள்!
அமர்நாத் தன் வாசிப்பு அனுபவங்களை விளக்குகிறார்…
பதின்பருவத்தின் முன்பாதியில் அகிலன், மு. வரதராசன் இருவரின் பல புதினங்களை வாசித்தேன். முன்னவரின் ‘பாவை விளக்கு‘, பின்னவரின் ‘அகல் விளக்கு‘, அவர்களின் பிற நாவல்களில் இருந்து தனித்து நின்றன. காரணம் பிறகு தெரிய வந்தது. இரண்டும் ஆசிரியர்களின் சுயசரிதைக் கதைகள். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் பிரபலமாக இருந்த சாமர்செட் மாம் மற்றும் ஏ. ஜே. க்ரானின் அவர்களின் படைப்புகளில் ‘Of Human Bondage‘, ‘Citadel‘ இரண்டும் மனதில் தங்கின. அவையும் கதாசிரியர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டவை.
பல படைப்பாளிகள் ஆரம்பக் காலத்திலோ, தங்கள் பெயரை நிலைநாட்டிய பிறகோ சுயசரிதை நாவல்கள் எழுதி இருக்கிறார்கள். அவை வாசகர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானவையாக இருந்தால் வியப்பதற்கு இல்லை.
மற்ற இலக்கியங்களைப் போல சுயசரிதை நாவலுக்கு இலக்கணம் என்று ஒன்றும் கிடையாது. சொல்லப் போனால் கதாசிரியரின் சொந்த எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகள் பல கதைகளில் பல அளவுகளில் விரவி இருக்கும். என்னைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் கதையின் பிரதான பாத்திரத்திற்கு படைப்பாளியின் குணநலன்களில் பாதிக்கு மேல் இருந்தால் அதை அவ்வகையில் சேர்க்கலாம். அதற்காக கதையின் எல்லா நிகழ்வுகளும் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவை என்று அர்த்தமல்ல.
நிஜமான சுயசரிதைக்கும் சுயசரிதைப் புதினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மறுபடி க்ரானின். Citadel கதையின் நாயகன் ஆன்ட்ரூ மான்சன் க்ரானினைப் போலவே ஒரு மருத்துவன். நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய ஊருக்குப் பணி புரிய வருகிறான். சுரங்கத்தின் கரித்தூளை சுவாசிப்பதால் தொழிலாளர்களுக்கு ‘கறுப்பு நுரையீரல்’ (Black lung) நோய் வருவதாகக் காட்டுகிறான். இவை க்ரானின் வாழ்வில் நிகழ்ந்தவை. மற்ற விவரங்கள் கற்பனை. மருத்துவம் மற்றும் எழுத்துத் தொழில் என்று இரண்டு துறைகளில் அவருடைய சொந்த அனுபவங்களை ‘Adventure in Two Worlds‘ என்று எழுதியிருக்கிறார். அது சுயசரிதை. அதில் அவருடன் சேர்ந்து சிரிக்கலாம், கவலைப்படலாம், பெருமிதப்படலாம், ஆனந்த அதிர்ச்சி அடையலாம்.
அன்னி எர்னோவின் கதைகள் இரண்டிற்கும் இடையில். சுயசரிதை போல நிகழ்ந்த சம்பவங்கள். புதினம் போல அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய நினைவலைகள். அதற்காக அவருக்கு நோபல் பரிசு தரப்பட்டு இருக்கிறது. வாசகருக்கும் எழுத்தாளருக்கும் நடுவே எந்தத் திரையும் இல்லை. வாசிக்கும்போது எழுத்தாளரைத் தொட்டுக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்கலாம். எதுவும் மறைக்கப்படாமல் எல்லா பலவீனங்களும் வெளிப்படுகின்றன. பல நாவல்களைப் படித்ததும் அவரை உறவு கொண்டாடலாம். அந்த இலக்கிய வகையில் எழுத விரும்பும் இளம் கலைஞர்களுக்கு அவர் புத்தகங்கள் நல்ல வழிகாட்டி. அப்படி எழுதுகிற அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சுவையான, அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் நடக்கட்டும்!
எதிர்பாராத பனிப்பொழிவால் கிளம்பாத விமானத்தில் எட்டு மணி அடைபட்டுக் கிடந்தது போன்ற வாழ்க்கையின் பல நிகழ்வுகளையும், என் கற்பனைப் பிறவி சாமிநாதனை(அவன் வாழ்க்கைத் துணைவி சரவணப்ரியாவை)யும் கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன். (மிகச் சில சிறுகதைகளைத் தவிர பிற எல்லா சிறுகதைகள் நெடுங்கதைகளில் அவன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கட்டியங்காரன், இல்லை சௌகரியத்துக்காக ஒரு சில காட்சிகளில் வந்து போகும் கௌரவ நடிகன், அவ்வளவே.) ஆனாலும், எனக்கு அன்னி எர்னோவின் எழுத்து சுவைக்கவில்லை.
ஒன்று. நம் ஞாபகசக்தி கணினியின் நினைவுத் திறன் போல நிச்சயமானது அல்ல. அதை நம்ப முடியாது. உளவியலில் சொல்லப்படும் ‘Flashbulb Memory’யே ஆனாலும் காலப்போக்கில் அந்த நிகழ்வின் பிம்பம் நினைவில் மெல்ல அழிகிறது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை மனக்கண்ணில் கொண்டுவரும்போது அதன் ஒரு பங்குதான் நிஜம். மீதி மூளை அதில் சேர்த்த சொந்தச் சரக்கு. அப்படி இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து வாசிப்பதில் சுவை சேர்த்தால் என்ன?
இரண்டு. நேரில் பார்த்த சம்பவங்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதால், “அலை ஓசை” மற்றும் “Grapes of Wrath” போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதை நிஜமாகவே நடந்திருக்குமோ, அதன் மாந்தர்கள் நிஜமான மனிதர்களோ என்ற பிரமை உண்டாகிறது. அவற்றைக் கதைச் சரித்திரம் என்று வகைப்படுத்துவது என் வழக்கம். அன்னி எர்னோவின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல.
மூன்று. ஏற்கனவே தெரிந்த வேதியியல் வினைகளைப் பயன்படுத்தி பல புதிய ரசாயனப் பொருட்களை நான் தயாரித்து இருக்கிறேன். அவற்றில் சில மருந்துகளாகப் பயன்படலாம். அது போல நடைமுறை சம்பவங்களைப் புதிய இழைகளில் கோர்த்து புதிய துணி நெய்வது (new synthesis) சாதனை. கதாசிரியர் தன்னுடைய பழைய குப்பையைக் கிளறுவதால் யாருக்கு என்ன லாபம்?
நான்கு. எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் சலவைக் குறிப்பில் மட்டுமல்ல அவருடைய தலை தீபாவளியிலும் அக்கறை இல்லை. பின்னதின் அடிப்படையில் ஆத்மாவையும் நித்யாவையும் வைத்து ஒரு விஞ்ஞானக்கதை எழுதினால் (எழுதி இருக்கிறார்) அதை நிச்சயம் வாசிப்பேன். நல்ல கதையின் இலக்கணங்களில் ஒன்று: காமராவின் கோணத்தில் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைந்து இருக்க வேண்டும். வாசிக்கும்போது யார் எழுதியதாக இருந்தால் என்ன என்கிற எண்ணத்தைத் தர வேண்டும்.
“ஒரு இளம்பெண்ணின் கதை” (A Girl’s Story) ஜெயகாந்தனின்அக்னிபிரவேசம் கதையை நினைவூட்டுகிறது. அச்சிறுகதையின் முடிவு வேறு விதமாக இருந்து அதை சில ஆண்டுகள் கழித்து அவள் திரும்பிப் பார்த்தால்? “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஜெயகாந்தன் அதைச் செய்திருக்கிறார். கதையில் நாம் சந்திப்பது ஜெயகாந்தனின் கங்கா. திரும்பிப் பார்த்த நிஜமான கங்கா தன் உணர்ச்சிகளையும் தாக்கத்தையும் எழுத்தில் பதித்திருந்தால் “ஒரு இளம்பெண்ணின் கதை” போல இருந்திருக்கும். எனக்கு “சில நேரங்களில்”தான் பிடித்திருக்கிறது.
அமர்நாத் சொல்வதைப் போல இந்தச் சிறுகதையும் அன்னி எர்னோவின் இளமைப்பருவ நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாம். அவர் லண்டனின் குழந்தைகளை, வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக (Au Pair) பணியாற்றி இருக்கிறார், அதுதான் இந்தச் சிறுகதைக்கு மூலமாம். 1958-இல் கன்னித்தன்மையை மேலை உலகில் இழப்பவளை தன்மானம் இல்லாத கோழை, ஊரார் வம்புப்பேச்சுக்கு தீனி என்றெல்லாம் விவரிப்பது ஆச்சரியப்படுத்தியது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டன என்று நினைத்திருந்தேன்…
அமர்நாத் உங்கள் சிறுகதைகள் ஏதாவது இணையத்தில் கிடைக்கிறதா?
ஓவர் டு அன்னி எர்னோ மற்றும் அமர்நாத்!
ஒரு இளம்பெண்ணின் கதை
அன்னி எர்னோ
Ernaux, Annie: A Girl’s Story, 2016
English translation: Alison L. Strayer
Seven Stories Press, 140 Watts Street, New York, NY 10013
ஒரு சிலருக்கு மற்றவர்களின் அட்டகாசப் பேச்சு, சிகரெட்டைப் பற்ற வைக்கும் அலட்சியம், கால்களை மடக்கி நிற்கும் கம்பீரம் – இவையெல்லாம் பிரமிப்பைக் கொடுக்கும். அப்போது கிணற்றில் விழுந்துவிட்டாற்போல் உடல் கூனிக் குறுகும். ஒரு நாள், சரியாகச் சொன்னால் ஓர் இரவு, யாரோ ஒருவரின் விருப்பத்துக்கு ஆளுமைக்கு அடிபணிகிறார்கள். தங்களைப் பற்றி அவர்கள் அது வரை நினைத்த எண்ணங்கள் காணாமல் போகின்றன. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இனம் தெரியாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் கரைந்துவிடுகிறார்கள். இழுத்துப் போகும் அந்த மற்றவரின் அடிச்சுவட்டில் கால் வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
அவர்களின் சம்மதத்திற்கோ வார்த்தைக்கோ அப்போது இடம் இல்லை. “எனக்கா இப்படி நிகழ்கிறது?”, “நானா இப்படிச் செய்கிறேன்?” என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்படலாம். ஆனால் ‘நான்’, ‘எனக்கு’ இரண்டும் எப்போதோ காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதில் அங்கே ‘அவன்’, ‘அவனுக்கு’, ‘அவனுக்காக’.
காரியம் முடிந்து அவளை எறிந்துவிட்டு அவன் அகன்றதும் கறை படிந்த உள்ளாடையில் யதார்த்தம். அவன் அவளுக்காக ஒதுக்கிய நேரம் அவ்வளவுதான். ஆனால், அவள் கதை முடியவில்லை. ஏற்கனவே பலவீனமான அவள் இப்போது மற்றவர்களுக்குத் தடை சொல்லாமல் பணிந்து போகும் தன்மானம் இழந்த கோழை. அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு, வெறும் வாய்க்குத் தீனி. இன்னொரு தடவை இன்னொரு தடவை என்று உடலின் ஏக்கம். திரும்ப அவளைத் தேடி வருவான் என்றொரு அசட்டு நம்பிக்கை. இவைதான் அவளுக்கு மிச்சம்.
1958-ஆம் ஆண்டின் கோடை காலம்.
ஃப்ரான்ஸில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பிரமாதமாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டி கால் பதவிக்கு வந்தார். சார்லி கால் டூர் டி ஃப்ரான்ஸ் ஜெயித்தார். டலிடாவின் ‘எ லவ் ஸ்டோரி’ வெளிவந்தது. இருபத்திஐந்து வயது வரை கோடை ஒரு நீண்ட காலம். பிறகு அது சுருங்கி வேகமாக ஓடி நினைவுகளில் மங்கிக் கடைசியில் மனதில் தங்குவது வறட்சியும் பொசுக்கும் சூடும்தான்.
முந்தைய ஆண்டுகள் போல பணக்காரக் குழந்தைகள் சோம்பேறித்தனமாக நாட்களைக் கழிக்க பெற்றோர்களுடன் ஃப்ரெஞ்ச் ரிவியெராவுக்குப் போனார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அரசாங்க மற்றும் தனியார் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்கள் அரைகுறை ஆங்கிலத்தை ரிப்பேர் செய்ய சான்னலைக் கடந்தார்கள். கையில் பணம் இல்லாத கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டின் பல இடங்களில் குழந்தைகளை மேய்க்கும் வேலை. கிளம்புவதற்கு முன் இளம்பெண்கள் ஞாபகமாக மகளிர் துண்டுகளைக் கையோடு எடுத்துக்கொண்டபோது முதல் காதல் அனுபவத்தை எதிர்பார்க்கும் ஆவல், அச்சம்.
அந்தக் கோடையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்டார்கள். திரும்பி வந்தவர்களுக்கு வீட்டுச் சுழலுடன் ஒத்துப் போக பல காலம் பிடிக்கும்.
இளம் அன்னியின் புகைப்படம் இப்போது இல்லை.
அவள் கோடை முகாமில் இருந்தபோது பதினெட்டாம் பிறந்த நாள் வந்தது. அப்போது படம் எடுக்க ஏன் யாருக்கும் தோன்றவில்லை? பார்ப்பதற்கு சுமாராக, ஃபோனோக்ராஃபும் அதில் இசைக்க தட்டுகளும் கொண்டு வராத ஏழை என்பதால் அலட்சியம். அவளைப் போல அந்த முகாமுக்கு வந்த மற்ற கௌன்சிலர்கள் யாராவது அவளை இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்களா? சந்தேகம்தான்.
செப்டெம்பர் கடைசியில் முகாம் கலைக்கப்பட்டு எல்லாரும் தங்கள் இடத்துக்குத் திரும்பியதும் அவளை முற்றிலும் மறந்து போய் இருப்பார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டதில் வந்த வருமானம் அடுத்த ஆண்டுக்கு என்கிற மனக் கணக்கில் அவளைக் கேலி செய்தது எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது?
இக்காட்சியை நேரில் காண்பது போல் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆகஸ்ட் பதினான்காம் தேதி பிற்பகல் ஆரம்பத்தில் அன்னி ரயிலில் இருந்து இறங்குகிறாள். கூந்தலை உயரத் தூக்கி முடிந்திருக்கிறாள். இடுப்புடன் ஒட்டிய ட்வீட் ஸ்கர்ட்டும் கம்பிளி அங்கியும் இரண்டு வருஷப் பழையவை. மேலே ஒரு நீல கோட். அவள் கையில் சாம்பல் நிறப் பெட்டி – ஆறு ஆண்டுகளுக்கு முன் அவள் தந்தையுடன் லூர்டு போனபோது வாங்கி பிறகு உபயோகப்படுத்தாதது. நீலமும் வெள்ளையும் கலந்த பிளாஸ்டிக் பை ஒரு வாரம் முந்தி வாங்கியது.
பயணம் முழுக்க ரயில் பெட்டியின் ஜன்னல்களில் சாரல் அடித்த மழை. அது நின்று சூரியனின் வருகையால் அங்கியிலும் ஸ்கர்ட்டிலும் அவளுக்கு சூடாக இருக்கிறது. தடியான துணிகளில் கையால் தைத்த கிழியாத ஆடைகளால், நாட்டுப்புறத்தில் இருந்து வந்த மத்தியக் குடும்பப் பெண்ணின் தோற்றம். உயரமான அவளை ஒட்டி நடுவயதைத் தாண்டிய கட்டை குட்டையான பெண். மரியாதையையும் பயத்தையும் தோற்றுவிக்கும் முகம். இறுக்கப் படிய வைத்த இளம் பழுப்பு தலைமயிர். ஆதங்கம், சந்தேகம், அதிருப்தி எல்லாம் கலந்த உணர்ச்சி. பெண்ணைக் கட்டுக்குள் வைத்திருக்கும் லகான் பார்வை.
அக்கணத்தில் அன்னியின் மனநிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. அவளுக்குப் பக்கத்தில் அவள் தாய் காவலாக நிற்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற அச்சம். அவள் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. முகாமின் பொறுப்புள்ள கௌன்சிலரை அதற்கு வரும் சின்னக் குழந்தையைப் போல அழைத்து வந்திருக்கிறாள். அவள் அக்கணமே அங்கிருந்து நழுவி வந்த வழியே ரயிலில் திரும்பிப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
முகாமுக்கு அழைத்துப் போகும் வேனின் டிரைவர் ஸ்டேஷன் ஓரத்தில் நிற்கிறான். அம்மாவுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்துவிட்டு, அவள் பின் தொடர்ந்து வருவாளோ என்கிற பயத்தில் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக ஓடி அன்னி வண்டியில் ஏறிக்கொள்கிறாள். பயணத்தினால் பௌடர் கலைந்த அம்மாவின் முகத்தில் மகள் காட்டும் அலட்சியத்தால் கசப்பு. அன்னிக்கு அக்கறை இல்லை. திரும்பிப் போக சரியான ரயில் இல்லாததால் அவள் தாய் விடுதியில் ஓர் இரவு தங்கினாள் என்று பிறகு தெரிய வந்தது. நன்றாக வேண்டும், அவளைத் தனியாகப் பயணம் செய்ய விடாததற்குத் தண்டனை.
பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முதல் தடவையாக அன்னி வெளியே வந்திருக்கிறாள். கூட்டில் இருந்து பறந்த பறவைக் குஞ்சு. தளை அவிழ்த்துவிட்ட பெண் குதிரைக் குட்டி. அங்கே வரும் வரை வீடு, செய்ன்ட்-மிகேல் (கத்தோலிக்க பெண் துறவிகள் நடத்திய) பள்ளிக்கூடம், இரண்டிற்கும் இடைப்பட்ட வெளி. இவைதான் அவள் உலகம். விடுமுறை நாட்களில் அவளுக்குத் துணை புத்தகங்கள்.
ஒரே பெண் என்பதால் போற்றி வளர்க்கப்பட்டவள். வீட்டுக்கு வெளியே என்ன நேருமோ என்று அவள் தந்தைக்கு அச்சம், அவள் தாய்க்கு சந்தேகம். தனியாக எங்கும் போனது இல்லை. வயதானவர்கள் யாராவது துணைக்கு வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு முன் திருவிழாவில் டான்ஸ் ஆடியபோது அவள் தாயின் கழுகுப் பார்வையில்.
அவளுடைய சமுதாயத் திறன்கள் மிகக்குறைவு. தொலைபேசியில் அழைக்கத் தெரியாது. அவள் அறிந்த மனிதர்கள் கிராமத்து கத்தோலிக்க உழைப்பாளிகள். மற்றவர்களிடம் எப்படி பேசிப் பழக வேண்டும்? தெரியாது. படிக்கத் தெரிந்தது முதல் புத்தகங்கள் அவள் பொழுது போக்கு. வெளி உலகைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம் பெண்கள் பத்திரிகைகள் வழியாக.
வீட்டிற்குள் அவள் ராணி. எதை வேண்டுமானாலும் எடுத்துத் தின்னலாம். விடுமுறை என்றால் மதியம் வரை படுக்கையில் படுத்தபடி படிக்கலாம். தட்டுகள் எடுத்து வைப்பது, தரையைச் சுத்தம் செய்வது என்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். பள்ளிக்கூடத்திலும் அவள் மற்றவர்களை விட ஒரு படி உசத்தி. லத்தீன், ஆங்கிலம், இலக்கிய விமரிசனம் போன்ற அவள் பாடங்கள் மற்றவர்கள் மூளைக்கு எட்டாது.
அன்னி முகாம் வளாகத்தில் நுழைகிறாள். கடந்த சில வாரங்களாக அவள் மனதில் வரைந்த சித்திரத்தை விட அது விசாலமாக இருக்கிறது. பருத்த தூண்களுடன் சாப்பாட்டுக் கூடம், உயரமான கூரைகளுடன் தங்கும் விடுதிகள். மேல் தளத்தின் இருண்ட நடைவழியில் ஒவ்வொரு கதவையும் கடந்து நடக்கிறாள். அவளுடைய அறை கோடியில். அவள் அறைத்தோழிக்கு நெளிநெளியான கூந்தல். ஜன்னலை ஒட்டிய பாதி இடத்தை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டாள்.
இரவில் அறைத்தோழி படுத்ததும் ஆழமாக சுவாசிக்கத் தொடங்கிவிட்டாள். அன்னிக்கு எண்ண அலைகள். அறைத்தோழிக்கு என்று இல்லை, அவள் அன்று சந்தித்த மற்ற எல்லா பெண்களுக்கும் அவர்களைச் சுற்றி தன்னம்பிக்கைக் கோளம். அவர்களை எதுவும் பாதிப்பதில்லை. அன்னிக்கு சாப்பாட்டில் இருந்து எல்லாமே புதிது, ஆச்சரியம். அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எதை எப்படிப் பேச வேண்டும்?
முதன்முதலாக பழக்கம் இல்லாத அறையில் தூக்கத்திற்குக் காத்திருந்தபோது… அன்னிக்குத் தெரியாது, இன்னும் மூன்று நாட்களில் அவள் அது வரை வாழ்ந்த வாழ்க்கை மூழ்கிவிடப் போகிறது.
அன்னி எர்னோ 2022-இல் நோபல் பரிசு வென்றவர். ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். இன்னும் படிக்க கைவரவில்லை.
அக்னிபிரவேசம் பதிவைப் படித்த பிறகு நண்பர் அமர்நாத் அன்னி எர்னோவுக்கும் அக்னிபிரவேசத்துக்கும் ஒரு சுவாரசியமான முடிச்சு போட்டிருக்கிறார். அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அமர்நாத், உங்கள் புகைப்படம் ஒன்று அனுப்புங்கள்!
அமர்நாத் தன் வாசிப்பு அனுபவங்களை விளக்குகிறார்…
பதின்பருவத்தின் முன்பாதியில் அகிலன், மு. வரதராசன் இருவரின் பல புதினங்களை வாசித்தேன். முன்னவரின் ‘பாவை விளக்கு‘, பின்னவரின் ‘அகல் விளக்கு‘, அவர்களின் பிற நாவல்களில் இருந்து தனித்து நின்றன. காரணம் பிறகு தெரிய வந்தது. இரண்டும் ஆசிரியர்களின் சுயசரிதைக் கதைகள். ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றதும் அக்காலத்தில் பிரபலமாக இருந்த சாமர்செட் மாம் மற்றும் ஏ. ஜே. க்ரானின் அவர்களின் படைப்புகளில் ‘Of Human Bondage‘, ‘Citadel‘ இரண்டும் மனதில் தங்கின. அவையும் கதாசிரியர்களின் வாழ்க்கையை ஒட்டி எழுதப்பட்டவை.
பல படைப்பாளிகள் ஆரம்பக் காலத்திலோ, தங்கள் பெயரை நிலைநாட்டிய பிறகோ சுயசரிதை நாவல்கள் எழுதி இருக்கிறார்கள். அவை வாசகர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும் மிகவும் பிடித்தமானவையாக இருந்தால் வியப்பதற்கு இல்லை.
மற்ற இலக்கியங்களைப் போல சுயசரிதை நாவலுக்கு இலக்கணம் என்று ஒன்றும் கிடையாது. சொல்லப் போனால் கதாசிரியரின் சொந்த எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள், வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகள் பல கதைகளில் பல அளவுகளில் விரவி இருக்கும். என்னைப் பொறுத்த வரை குறைந்தபட்சம் கதையின் பிரதான பாத்திரத்திற்கு படைப்பாளியின் குணநலன்களில் பாதிக்கு மேல் இருந்தால் அதை அவ்வகையில் சேர்க்கலாம். அதற்காக கதையின் எல்லா நிகழ்வுகளும் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையில் நடந்தவை என்று அர்த்தமல்ல.
நிஜமான சுயசரிதைக்கும் சுயசரிதைப் புதினத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்ட மறுபடி க்ரானின். Citadel கதையின் நாயகன் ஆன்ட்ரூ மான்சன் க்ரானினைப் போலவே ஒரு மருத்துவன். நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய ஊருக்குப் பணி புரிய வருகிறான். சுரங்கத்தின் கரித்தூளை சுவாசிப்பதால் தொழிலாளர்களுக்கு ‘கறுப்பு நுரையீரல்’ (Black lung) நோய் வருவதாகக் காட்டுகிறான். இவை க்ரானின் வாழ்வில் நிகழ்ந்தவை. மற்ற விவரங்கள் கற்பனை. மருத்துவம் மற்றும் எழுத்துத் தொழில் என்று இரண்டு துறைகளில் அவருடைய சொந்த அனுபவங்களை ‘Adventure in Two Worlds‘ என்று எழுதியிருக்கிறார். அது சுயசரிதை. அதில் அவருடன் சேர்ந்து சிரிக்கலாம், கவலைப்படலாம், பெருமிதப்படலாம், ஆனந்த அதிர்ச்சி அடையலாம்.
அன்னி எர்னோவின் கதைகள் இரண்டிற்கும் இடையில். சுயசரிதை போல நிகழ்ந்த சம்பவங்கள். புதினம் போல அவற்றின் சூழ்நிலைகள் பற்றிய நினைவலைகள். அதற்காக அவருக்கு நோபல் பரிசு தரப்பட்டு இருக்கிறது. வாசகருக்கும் எழுத்தாளருக்கும் நடுவே எந்தத் திரையும் இல்லை. வாசிக்கும்போது எழுத்தாளரைத் தொட்டுக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்கலாம். எதுவும் மறைக்கப்படாமல் எல்லா பலவீனங்களும் வெளிப்படுகின்றன. பல நாவல்களைப் படித்ததும் அவரை உறவு கொண்டாடலாம். அந்த இலக்கிய வகையில் எழுத விரும்பும் இளம் கலைஞர்களுக்கு அவர் புத்தகங்கள் நல்ல வழிகாட்டி. அப்படி எழுதுகிற அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் சுவையான, அதிர்ச்சி தரும் பல விஷயங்கள் நடக்கட்டும்!
எதிர்பாராத பனிப்பொழிவால் கிளம்பாத விமானத்தில் எட்டு மணி அடைபட்டுக் கிடந்தது போன்ற வாழ்க்கையின் பல நிகழ்வுகளையும், என் கற்பனைப் பிறவி சாமிநாதனை(அவன் வாழ்க்கைத் துணைவி சரவணப்ரியாவை)யும் கிட்டத்தட்ட எல்லா கதைகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன். (மிகச் சில சிறுகதைகளைத் தவிர பிற எல்லா சிறுகதைகள் நெடுங்கதைகளில் அவன் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் கட்டியங்காரன், இல்லை சௌகரியத்துக்காக ஒரு சில காட்சிகளில் வந்து போகும் கௌரவ நடிகன், அவ்வளவே.) ஆனாலும், எனக்கு அன்னி எர்னோவின் எழுத்து சுவைக்கவில்லை.
ஒன்று. நம் ஞாபகசக்தி கணினியின் நினைவுத் திறன் போல நிச்சயமானது அல்ல. அதை நம்ப முடியாது. உளவியலில் சொல்லப்படும் ‘Flashbulb Memory’யே ஆனாலும் காலப்போக்கில் அந்த நிகழ்வின் பிம்பம் நினைவில் மெல்ல அழிகிறது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை மனக்கண்ணில் கொண்டுவரும்போது அதன் ஒரு பங்குதான் நிஜம். மீதி மூளை அதில் சேர்த்த சொந்தச் சரக்கு. அப்படி இருக்கும்போது இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து வாசிப்பதில் சுவை சேர்த்தால் என்ன?
இரண்டு. நேரில் பார்த்த சம்பவங்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதால், “அலை ஓசை” மற்றும் “Grapes of Wrath” போன்ற நாவல்களை வாசிக்கும்போது கதை நிஜமாகவே நடந்திருக்குமோ, அதன் மாந்தர்கள் நிஜமான மனிதர்களோ என்ற பிரமை உண்டாகிறது. அவற்றைக் கதைச் சரித்திரம் என்று வகைப்படுத்துவது என் வழக்கம். அன்னி எர்னோவின் கதைகள் அப்படிப்பட்டவை அல்ல.
மூன்று. ஏற்கனவே தெரிந்த வேதியியல் வினைகளைப் பயன்படுத்தி பல புதிய ரசாயனப் பொருட்களை நான் தயாரித்து இருக்கிறேன். அவற்றில் சில மருந்துகளாகப் பயன்படலாம். அது போல நடைமுறை சம்பவங்களைப் புதிய இழைகளில் கோர்த்து புதிய துணி நெய்வது (new synthesis) சாதனை. கதாசிரியர் தன்னுடைய பழைய குப்பையைக் கிளறுவதால் யாருக்கு என்ன லாபம்?
நான்கு. எனக்கு எழுத்தாளர் சுஜாதாவின் சலவைக் குறிப்பில் மட்டுமல்ல அவருடைய தலை தீபாவளியிலும் அக்கறை இல்லை. பின்னதின் அடிப்படையில் ஆத்மாவையும் நித்யாவையும் வைத்து ஒரு விஞ்ஞானக்கதை எழுதினால் (எழுதி இருக்கிறார்) அதை நிச்சயம் வாசிப்பேன். நல்ல கதையின் இலக்கணங்களில் ஒன்று: காமராவின் கோணத்தில் விமர்சனங்களும் விளக்கங்களும் இல்லாமல் அமைந்து இருக்க வேண்டும். வாசிக்கும்போது யார் எழுதியதாக இருந்தால் என்ன என்கிற எண்ணத்தைத் தர வேண்டும்.
“ஒரு இளம்பெண்ணின் கதை” (A Girl’s Story) ஜெயகாந்தனின்அக்னிபிரவேசம் கதையை நினைவூட்டுகிறது. அச்சிறுகதையின் முடிவு வேறு விதமாக இருந்து அதை சில ஆண்டுகள் கழித்து அவள் திரும்பிப் பார்த்தால்? “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஜெயகாந்தன் அதைச் செய்திருக்கிறார். கதையில் நாம் சந்திப்பது ஜெயகாந்தனின் கங்கா. திரும்பிப் பார்த்த நிஜமான கங்கா தன் உணர்ச்சிகளையும் தாக்கத்தையும் எழுத்தில் பதித்திருந்தால் “ஒரு இளம்பெண்ணின் கதை” போல இருந்திருக்கும். எனக்கு “சில நேரங்களில்”தான் பிடித்திருக்கிறது.
அமர்நாத் சொல்வதைப் போல இந்தச் சிறுகதையும் அன்னி எர்னோவின் இளமைப்பருவ நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாம். அவர் லண்டனின் குழந்தைகளை, வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்ணாக (Au Pair) பணியாற்றி இருக்கிறார், அதுதான் இந்தச் சிறுகதைக்கு மூலமாம். 1958-இல் கன்னித்தன்மையை மேலை உலகில் இழப்பவளை தன்மானம் இல்லாத கோழை, ஊரார் வம்புப்பேச்சுக்கு தீனி என்றெல்லாம் விவரிப்பது ஆச்சரியப்படுத்தியது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்த எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டன என்று நினைத்திருந்தேன்…
அமர்நாத் உங்கள் சிறுகதைகள் ஏதாவது இணையத்தில் கிடைக்கிறதா?
ஓவர் டு அன்னி எர்னோ மற்றும் அமர்நாத்!
ஒரு இளம்பெண்ணின் கதை
அன்னி எர்னோ
Ernaux, Annie: A Girl’s Story, 2016
English translation: Alison L. Strayer
Seven Stories Press, 140 Watts Street, New York, NY 10013
ஒரு சிலருக்கு மற்றவர்களின் அட்டகாசப் பேச்சு, சிகரெட்டைப் பற்ற வைக்கும் அலட்சியம், கால்களை மடக்கி நிற்கும் கம்பீரம் – இவையெல்லாம் பிரமிப்பைக் கொடுக்கும். அப்போது கிணற்றில் விழுந்துவிட்டாற்போல் உடல் கூனிக் குறுகும். ஒரு நாள், சரியாகச் சொன்னால் ஓர் இரவு, யாரோ ஒருவரின் விருப்பத்துக்கு ஆளுமைக்கு அடிபணிகிறார்கள். தங்களைப் பற்றி அவர்கள் அது வரை நினைத்த எண்ணங்கள் காணாமல் போகின்றன. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இனம் தெரியாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் கரைந்துவிடுகிறார்கள். இழுத்துப் போகும் அந்த மற்றவரின் அடிச்சுவட்டில் கால் வைப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
அவர்களின் சம்மதத்திற்கோ வார்த்தைக்கோ அப்போது இடம் இல்லை. “எனக்கா இப்படி நிகழ்கிறது?”, “நானா இப்படிச் செய்கிறேன்?” என்று சொல்லி சொல்லி ஆச்சரியப்படலாம். ஆனால் ‘நான்’, ‘எனக்கு’ இரண்டும் எப்போதோ காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதில் அங்கே ‘அவன்’, ‘அவனுக்கு’, ‘அவனுக்காக’.
காரியம் முடிந்து அவளை எறிந்துவிட்டு அவன் அகன்றதும் கறை படிந்த உள்ளாடையில் யதார்த்தம். அவன் அவளுக்காக ஒதுக்கிய நேரம் அவ்வளவுதான். ஆனால், அவள் கதை முடியவில்லை. ஏற்கனவே பலவீனமான அவள் இப்போது மற்றவர்களுக்குத் தடை சொல்லாமல் பணிந்து போகும் தன்மானம் இழந்த கோழை. அவளைச் சுற்றி இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு, வெறும் வாய்க்குத் தீனி. இன்னொரு தடவை இன்னொரு தடவை என்று உடலின் ஏக்கம். திரும்ப அவளைத் தேடி வருவான் என்றொரு அசட்டு நம்பிக்கை. இவைதான் அவளுக்கு மிச்சம்.
1958-ஆம் ஆண்டின் கோடை காலம்.
ஃப்ரான்ஸில் குறிப்பிட்டுச் சொல்லும்படி பிரமாதமாக ஒன்றும் நடந்துவிடவில்லை. டி கால் பதவிக்கு வந்தார். சார்லி கால் டூர் டி ஃப்ரான்ஸ் ஜெயித்தார். டலிடாவின் ‘எ லவ் ஸ்டோரி’ வெளிவந்தது. இருபத்திஐந்து வயது வரை கோடை ஒரு நீண்ட காலம். பிறகு அது சுருங்கி வேகமாக ஓடி நினைவுகளில் மங்கிக் கடைசியில் மனதில் தங்குவது வறட்சியும் பொசுக்கும் சூடும்தான்.
முந்தைய ஆண்டுகள் போல பணக்காரக் குழந்தைகள் சோம்பேறித்தனமாக நாட்களைக் கழிக்க பெற்றோர்களுடன் ஃப்ரெஞ்ச் ரிவியெராவுக்குப் போனார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, அரசாங்க மற்றும் தனியார் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் தங்கள் அரைகுறை ஆங்கிலத்தை ரிப்பேர் செய்ய சான்னலைக் கடந்தார்கள். கையில் பணம் இல்லாத கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நாட்டின் பல இடங்களில் குழந்தைகளை மேய்க்கும் வேலை. கிளம்புவதற்கு முன் இளம்பெண்கள் ஞாபகமாக மகளிர் துண்டுகளைக் கையோடு எடுத்துக்கொண்டபோது முதல் காதல் அனுபவத்தை எதிர்பார்க்கும் ஆவல், அச்சம்.
அந்தக் கோடையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அல்ஜீரியாவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்டார்கள். திரும்பி வந்தவர்களுக்கு வீட்டுச் சுழலுடன் ஒத்துப் போக பல காலம் பிடிக்கும்.
இளம் அன்னியின் புகைப்படம் இப்போது இல்லை.
அவள் கோடை முகாமில் இருந்தபோது பதினெட்டாம் பிறந்த நாள் வந்தது. அப்போது படம் எடுக்க ஏன் யாருக்கும் தோன்றவில்லை? பார்ப்பதற்கு சுமாராக, ஃபோனோக்ராஃபும் அதில் இசைக்க தட்டுகளும் கொண்டு வராத ஏழை என்பதால் அலட்சியம். அவளைப் போல அந்த முகாமுக்கு வந்த மற்ற கௌன்சிலர்கள் யாராவது அவளை இன்னும் ஞாபகம் வைத்திருப்பார்களா? சந்தேகம்தான்.
செப்டெம்பர் கடைசியில் முகாம் கலைக்கப்பட்டு எல்லாரும் தங்கள் இடத்துக்குத் திரும்பியதும் அவளை முற்றிலும் மறந்து போய் இருப்பார்கள். குழந்தைகளைப் பார்த்துக் கொண்டதில் வந்த வருமானம் அடுத்த ஆண்டுக்கு என்கிற மனக் கணக்கில் அவளைக் கேலி செய்தது எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது?
இக்காட்சியை நேரில் காண்பது போல் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆகஸ்ட் பதினான்காம் தேதி பிற்பகல் ஆரம்பத்தில் அன்னி ரயிலில் இருந்து இறங்குகிறாள். கூந்தலை உயரத் தூக்கி முடிந்திருக்கிறாள். இடுப்புடன் ஒட்டிய ட்வீட் ஸ்கர்ட்டும் கம்பிளி அங்கியும் இரண்டு வருஷப் பழையவை. மேலே ஒரு நீல கோட். அவள் கையில் சாம்பல் நிறப் பெட்டி – ஆறு ஆண்டுகளுக்கு முன் அவள் தந்தையுடன் லூர்டு போனபோது வாங்கி பிறகு உபயோகப்படுத்தாதது. நீலமும் வெள்ளையும் கலந்த பிளாஸ்டிக் பை ஒரு வாரம் முந்தி வாங்கியது.
பயணம் முழுக்க ரயில் பெட்டியின் ஜன்னல்களில் சாரல் அடித்த மழை. அது நின்று சூரியனின் வருகையால் அங்கியிலும் ஸ்கர்ட்டிலும் அவளுக்கு சூடாக இருக்கிறது. தடியான துணிகளில் கையால் தைத்த கிழியாத ஆடைகளால், நாட்டுப்புறத்தில் இருந்து வந்த மத்தியக் குடும்பப் பெண்ணின் தோற்றம். உயரமான அவளை ஒட்டி நடுவயதைத் தாண்டிய கட்டை குட்டையான பெண். மரியாதையையும் பயத்தையும் தோற்றுவிக்கும் முகம். இறுக்கப் படிய வைத்த இளம் பழுப்பு தலைமயிர். ஆதங்கம், சந்தேகம், அதிருப்தி எல்லாம் கலந்த உணர்ச்சி. பெண்ணைக் கட்டுக்குள் வைத்திருக்கும் லகான் பார்வை.
அக்கணத்தில் அன்னியின் மனநிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. அவளுக்குப் பக்கத்தில் அவள் தாய் காவலாக நிற்பதை யாராவது பார்த்துவிடுவார்களோ என்கிற அச்சம். அவள் வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. முகாமின் பொறுப்புள்ள கௌன்சிலரை அதற்கு வரும் சின்னக் குழந்தையைப் போல அழைத்து வந்திருக்கிறாள். அவள் அக்கணமே அங்கிருந்து நழுவி வந்த வழியே ரயிலில் திரும்பிப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
முகாமுக்கு அழைத்துப் போகும் வேனின் டிரைவர் ஸ்டேஷன் ஓரத்தில் நிற்கிறான். அம்மாவுக்கு ஒரு அவசர முத்தம் கொடுத்துவிட்டு, அவள் பின் தொடர்ந்து வருவாளோ என்கிற பயத்தில் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக ஓடி அன்னி வண்டியில் ஏறிக்கொள்கிறாள். பயணத்தினால் பௌடர் கலைந்த அம்மாவின் முகத்தில் மகள் காட்டும் அலட்சியத்தால் கசப்பு. அன்னிக்கு அக்கறை இல்லை. திரும்பிப் போக சரியான ரயில் இல்லாததால் அவள் தாய் விடுதியில் ஓர் இரவு தங்கினாள் என்று பிறகு தெரிய வந்தது. நன்றாக வேண்டும், அவளைத் தனியாகப் பயணம் செய்ய விடாததற்குத் தண்டனை.
பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து முதல் தடவையாக அன்னி வெளியே வந்திருக்கிறாள். கூட்டில் இருந்து பறந்த பறவைக் குஞ்சு. தளை அவிழ்த்துவிட்ட பெண் குதிரைக் குட்டி. அங்கே வரும் வரை வீடு, செய்ன்ட்-மிகேல் (கத்தோலிக்க பெண் துறவிகள் நடத்திய) பள்ளிக்கூடம், இரண்டிற்கும் இடைப்பட்ட வெளி. இவைதான் அவள் உலகம். விடுமுறை நாட்களில் அவளுக்குத் துணை புத்தகங்கள்.
ஒரே பெண் என்பதால் போற்றி வளர்க்கப்பட்டவள். வீட்டுக்கு வெளியே என்ன நேருமோ என்று அவள் தந்தைக்கு அச்சம், அவள் தாய்க்கு சந்தேகம். தனியாக எங்கும் போனது இல்லை. வயதானவர்கள் யாராவது துணைக்கு வரவேண்டும். மூன்று மாதங்களுக்கு முன் திருவிழாவில் டான்ஸ் ஆடியபோது அவள் தாயின் கழுகுப் பார்வையில்.
அவளுடைய சமுதாயத் திறன்கள் மிகக்குறைவு. தொலைபேசியில் அழைக்கத் தெரியாது. அவள் அறிந்த மனிதர்கள் கிராமத்து கத்தோலிக்க உழைப்பாளிகள். மற்றவர்களிடம் எப்படி பேசிப் பழக வேண்டும்? தெரியாது. படிக்கத் தெரிந்தது முதல் புத்தகங்கள் அவள் பொழுது போக்கு. வெளி உலகைப் பற்றி அவளுக்குத் தெரிந்தது எல்லாம் பெண்கள் பத்திரிகைகள் வழியாக.
வீட்டிற்குள் அவள் ராணி. எதை வேண்டுமானாலும் எடுத்துத் தின்னலாம். விடுமுறை என்றால் மதியம் வரை படுக்கையில் படுத்தபடி படிக்கலாம். தட்டுகள் எடுத்து வைப்பது, தரையைச் சுத்தம் செய்வது என்று எந்த வேலையும் செய்ய வேண்டாம். பள்ளிக்கூடத்திலும் அவள் மற்றவர்களை விட ஒரு படி உசத்தி. லத்தீன், ஆங்கிலம், இலக்கிய விமரிசனம் போன்ற அவள் பாடங்கள் மற்றவர்கள் மூளைக்கு எட்டாது.
அன்னி முகாம் வளாகத்தில் நுழைகிறாள். கடந்த சில வாரங்களாக அவள் மனதில் வரைந்த சித்திரத்தை விட அது விசாலமாக இருக்கிறது. பருத்த தூண்களுடன் சாப்பாட்டுக் கூடம், உயரமான கூரைகளுடன் தங்கும் விடுதிகள். மேல் தளத்தின் இருண்ட நடைவழியில் ஒவ்வொரு கதவையும் கடந்து நடக்கிறாள். அவளுடைய அறை கோடியில். அவள் அறைத்தோழிக்கு நெளிநெளியான கூந்தல். ஜன்னலை ஒட்டிய பாதி இடத்தை ஏற்கனவே ஆக்கிரமித்து விட்டாள்.
இரவில் அறைத்தோழி படுத்ததும் ஆழமாக சுவாசிக்கத் தொடங்கிவிட்டாள். அன்னிக்கு எண்ண அலைகள். அறைத்தோழிக்கு என்று இல்லை, அவள் அன்று சந்தித்த மற்ற எல்லா பெண்களுக்கும் அவர்களைச் சுற்றி தன்னம்பிக்கைக் கோளம். அவர்களை எதுவும் பாதிப்பதில்லை. அன்னிக்கு சாப்பாட்டில் இருந்து எல்லாமே புதிது, ஆச்சரியம். அவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எதை எப்படிப் பேச வேண்டும்?
முதன்முதலாக பழக்கம் இல்லாத அறையில் தூக்கத்திற்குக் காத்திருந்தபோது… அன்னிக்குத் தெரியாது, இன்னும் மூன்று நாட்களில் அவள் அது வரை வாழ்ந்த வாழ்க்கை மூழ்கிவிடப் போகிறது.
அவனுக்குப் பெயரில்லை. விசித்திரன் என்று எல்லாரும் அழைத்தார்கள். விசித்திரன் ஒரு நாள் கடற்கரைக்குப் போனான். எங்கும் வெள்ளை மணல்வெளி. கைகளில் மணலை அள்ளினான்.
எண்ணத்தொடங்கினான்.
எண்ணி முடித்தானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் ஆற்றுக்குப் போனான். எங்கும் நீர்மை ததும்பிக் கொண்டிருந்தது. அவனும் நீராகி விட வேண்டும் என்று நீருக்குள் மூழ்கினான்.
நீராகி விட்டானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் மலைக்குப் போனான். மலையுச்சியில் பயங்கரக் காற்று. காற்றைக் கையில் பிடித்தான். பறப்பதற்காக மலையுச்சியிலிருந்து குதித்தான்.
பறந்தானா என்று தெரியவில்லை.
விசித்திரன் ஒரு நாள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கூட்டம் கூட்டமாய் மிதந்து கொண்டிருந்த மேகங்கள். மேகங்களாகி விட வேண்டுமென்று நினைத்தான்.
கையை நீட்டி மேகங்களை அழைத்தான்.
மேகமாகி மிதந்தலைந்தான் விசித்திரன்.
2.
வீட்டில் யாருமில்லை. இரவு விளக்கையணைத்துவிட்டுப் படுத்தான். திரைச்சீலைக்குப் பின்னால் ஒருவன் நின்று கொண்டிருந்தான். பதறியெழுந்து விளக்கைப் போட்டான்.
யாருமில்லை.
விளக்கையணைத்தான். யாரோ ஒருவன் நின்று கொண்டிருந்தான். விளக்கைப் போட்டான்.
யாருமில்லை.
விடிய விடிய அந்த யாரோ ஒருவனைக் கண்டுபிடிக்க விளக்கைப் போட்டு அணைத்துக் கொண்டிருந்தான்.
அவன் வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்தது.
3.
அந்த எறும்பு புற்றிலிருந்து வெளியே வந்தது. அங்குமிங்கும் அலைந்தது. அப்படியும் இப்படியும் சென்றது. சுவரில் ஏறியது. கீழே இறங்கியது.
சும்மா ஒரு இடத்தில் நின்றது. ஏன் அங்கே நின்றது? தெரியாது.
திடீரென ஒரு கால்பெருவிரல் அந்த எறும்பை நசுக்கியது.
என்ன நடந்ததென்று எறும்புக்குத் தெரியாது.
யார்? ஏன்? எதற்கு?
எறும்பு இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறது.
4.
எதையாவது தேடிக் கொண்டிருப்பது அவனுடைய வழக்கம். இன்றும் அப்படித்தான். அடையாள அட்டையைத் தேடினான்.
Jeyamohan’s classic Tamil short story ‘Pradhaman’ (பிரதமன்) was recently published in translation in a print-only little magazine called South Parade. The story is reprinted here with their permission. About South Parade: Edited by Arshia Sattar, Indira Chandrasekhar, Rahul Soni, Sohini … Continue reading →
[நன்றி: நீலி இணைய இதழ்] பகுதி – 1 தூரங்கள் 1 தமிழகத்தின் கலை வரலாறை நன்கு அறிந்தவர்களில் கூட அநேகம் பேர் அறியாத சம்பவம் இது. 1933-ஆம் ஆண்டில் சென்னையில் அப்போது தொடங்கி சில வருடங்களே ஆகியிருந்த மியூசிக் அகாடெமி என்ற சங்கீத வித்வத் சபையில் பலத்த எதிர்ப்பை மீறி ஒரு நடன நிகழ்ச்சி … Continue reading →
திலகரைப் பற்றி வ.உ.சிதம்பரம் பிள்ளை 1933-34 -ஆம் வருஷங்களில் ஒரு பத்திரிகையில் “திலக மகரிஷி” என்ற பெயரில் தொடராக எழுதி இருக்கிறார். பத்திரிகையின் பெயர் வீரகேசரி, இலங்கைப் பத்திரிகை. பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன், படிக்க வேண்டும் என்று ஆசை. இப்போது இந்தப் புத்தகம் தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது.
புத்தகத்தைப் பதித்தவர் மா.ரா. அரசு. அரசு வரலாற்று ஆய்வாளர் மா. ராஜமாணிக்கத்தின் மகன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். பல வருஷங்களாக அவரும் வீரகேசரி பிரதிகளைத் தேடி இருக்கிறார். முக்கால்வாசி இதழ்கள்தான் கிடைத்திருக்கின்றன. கிடைத்தவற்றைத் தொகுத்து புத்தகமாக (2010) வெளியிட்டிருக்கிறார்.
வ.உ.சி. திலகரின் அத்யந்த சீடர் என்பதால் புதிய தகவல்கள் எதுவும் கிடைக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஒரு வேளை கிடைக்காத வீரகேசரி இதழ்களில் இருந்திருக்கலாம். புத்தகத்தில் தெளிவாகத் தெரிவது வ்.உ.சி.க்கு திலகர் மேல் இருந்த பெரும் அபிமானம்.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் என்றும் கிழக்கு பதிப்பத்தில் கிடைக்கிறது என்றும் நண்பர்கள் சந்திரமௌலீஸ்வரன் மற்றும் ஸ்ரீனிவாஸ் தகவல் தருகின்றனர். அன்றைய விலை நூறு ரூபாயாம்.