Lent/தவக்காலம் என்பது கிறிஸ்தவ மதத்தின் படி ஈஸ்டர்க்கு (இயேசு உயிர்த்தெழுந்த நாள்) முந்தைய 40 நாட்கள். இந்த தவக்காலம் சாம்பல் புதனில் தொடங்கி ஈஸ்ட்டர்க்கு முந்தைய நாள் வரை இருக்கும். இந்த 40 நாளில் விரதம், prayer, ஆடம்பரமாய் வாழுறது இவை எல்லாம் தவிர்க்கப்படும். அந்த காசை சேர்த்து சர்ச் ல கொடுத்துருவாங்க. இந்த 40 நாள் எதை குறிக்கிறது என்றால் இயேசு 40 நாட்கள் பாலைவனத்தில் விரதம் இருப்பார். அப்போ சாத்தான் வந்து உனக்கு இதை தரேன் அதை தரேன் என்கூட வான்னு ஆசை காட்டும் ஆனாலும் இயேசு கட்டுப்பாடா இருப்பாரு. இதை குறிக்கும் விதமா கிறிஸ்தவர்களும் 40 நாள் temptation எல்லாம் கட்டுப்படுத்தி விரதம் இருக்கிறார்கள். ரைட்டு.
இந்த பழக்கம் எப்படி தொடங்கியது? அதே தான்!
இது ஒரு pagan பண்டிகை.
Carnival என்பது பல நாடுகளில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சாம்பல் புதனுக்கு முதல் நாள் Carnival கொண்டாடப்படும். Rio de Janeiro வில் ஆண்டுதோறும் நடக்கும் Carnival உலக பிரசித்தி பெற்றது. ஆட்டம், பாட்டம், குடி, கறி, விருந்து, public parades, masquerades ன்னு ஒரே குதூகலமாக இருக்கும்.
Carnival என்ற சொல் லத்தீன் சொல்லான Carne Levare or carnelevarium லில் இருந்து வந்தது இதற்கு பொருள் ‘farewell to the flesh’. அதாவது இனி அடுத்த 40 நாளுக்கு மாமிசம் கிடையாது. ஏன் அடுத்த 40 நாள் மாமிசம் கிடையாது? winter முடிந்து வசந்தகாலம் ஆரம்பிக்கும் நாள் தான் சாம்பல் புதனுக்கு முந்தைய நாள். winter காக முந்தைய வசந்த காலத்தில் உணவை சேமித்து வைத்து இருப்பார்கள். குளிர் காலம் முடியும் போது சேமித்த உணவுகளில் மீதி இருப்பதை எல்லாம் அந்த ஒரு நாளில் சமைத்து எல்லாரும் உண்டு காலி பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். winter க்காக November மாதமே கறியை எல்லாம் உப்பு கண்டம் போட்டு அல்லது whatever processing பண்ணி வைத்திருப்பார்கள் February, march மாதங்களில் அதன் expiry நெருங்குவதால் எல்லா சாப்பாடும் ஒரு நாளில் விருந்தாக வைக்கப்படும். அது ஒரு பெரிய விழா அதான் Carnival. அன்று நல்லா மூக்கு முட்ட சாப்பிடுவதால் அடுத்த 40 நாட்கள் no parties or celebrations, non veg, sweets.
Lent என்ற சொல் Old English word “lencten” லில் இருந்து வந்தது இதற்கு spring என்று பொருள்.
மோசஸ், எகிப்தில் இருந்து, இஸ்ரவேலர்களை மீட்டு கானானை நோக்கி அழைத்து செல்வார். எகிப்தின் பார்வோன் மன்னன், அவர்களை விட கூடாது என்று துரத்தி வரும் போது, செங்கடல் பிளந்து மோசஸ் மற்றும் இஸ்ரவேலர்கள் இக்கரையில் இருந்து அக்கரைக்கு சென்று விடுவார்கள் பார்வோன் மன்னன் அவனது படை கடலை கடக்கும் போது பிளந்திருந்த கடல் மூடி அவர்கள் மூழ்கி இறந்து விடுவார்கள்.
யாத்திராகமம் 14:16 – நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.
21 – மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
22 – இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
26 – கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.
28 – ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.
கடவுள் எப்படி மோசே மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இஸ்ரவேலர்களை பார்வோன் மன்னனிடமிருந்து காப்பாற்றினார் (ஆனால், கடவுள் தான் பார்வோன் மன்னன் மனதை மாற்றி அவர்களை பின்தொடர செய்வார். பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதை) என்பதை விளக்கும் கதை இது.
அதெப்படிங்க கடல் இரண்டாக பிளக்கும் என்று இந்த கதையை நம்பாமல் போகலாம். அல்லது என்னே கடவுளின் அற்புதம் என்று ஆச்சரியத்தில் வியக்கலாம்.
ஆனால் இப்படி நடக்க சாத்தியக்கூறு இருக்கிறதா? கடல் இரண்டாக பிளக்குமா? இதை ஆராய்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?
பைபிளில் இயேசு பிறந்தது முதலாம் நூற்றாண்டு என்று இருக்கிறது அதை அடிப்படையாக வைத்து பின்னோக்கி சென்று பைபிளில் இருக்கும் தகவல்களை வைத்து எந்தெந்த சம்பவங்கள் எந்தெந்த காலத்தில் நடந்திருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அப்படி பார்க்கையில் செங்கடல் இரண்டாக பிளந்த சம்பவம் நடந்த காலம் 1250 BCE அப்போது எகிப்தின் ராஜாவாக இருந்தவர் Ramses II.
1250 BCE, Ramses II எகிப்தின் ராஜாவாக இருந்த காலத்தில் செங்கடல் இரண்டாக பிளந்த சம்பவம் நடந்திருக்கிறதா? அறிவியல், புவியியல், தொல்பொருளியல், வரலாறு, என்ன சொல்கிறது?
இஸ்ரவேலர்கள் 430 வருடங்கள் எகிப்தில் இருந்ததாக சொல்கிறது. ஆனால் 430 வருடங்கள் எகிப்தில் இஸ்ரவேலர்கள் இருந்ததாக பைபிளை தவிர வேறு எந்த எழுத்து பூர்வ ஆதாரமும் இல்லை. இத்தனைக்கும் எகிப்தியர்கள் எல்லாவற்றையும் விவரமாக பதிவு செய்வதை வழக்கமாக கொண்டவர்கள்.
Merneptah Stele என்னும் ஒரு பழைய எகிப்திய பலகையில் (13th century BCE) இஸ்ரேல் என்னும் சொல் ஒரே ஒரு முறை இடம் பிடித்திருக்கிறது. Merneptah Stele, ராஜா Merneptah யாரை எல்லாம் போரிட்டு வென்றார் என்பதை அறிவிக்கும் ஒரு கற்பலகை ஆகும். இதில் Merneptah இஸ்ரேல் மக்களை வென்றார் என்ற குறிப்பு இருக்கிறது. இந்த Merneptah, Ramses II ன் மகன். இந்த ஒரே ஒரு கற்பலகை மட்டுமே இஸ்ரேலியர்களை பற்றிய ஒரே ஒரு external reference.
இதை தவிர்த்து இஸ்ரேல் மக்களுக்கு தொடர்புடைய இன்னொரு சொல்லும் இன்னொரு எகிப்திய கற்பலகையில் (1550-1070 BCE) காணப்படுகிறது அது Shasu of Yahweh. Shasu of Yahweh என்ற இன மக்களை பற்றிய விலாவரியாக குறிப்புகள் இல்லை என்றாலும் Shasu of Yahweh என்ற செமிட்டிக் மக்கள் கானானை சுற்றி இருந்தார்கள் என்ற குறிப்பு எகிப்திய கற்பலகையில் இருக்கிறது.
இதில் நம் கவனத்தை இழுப்பது Yahweh என்ற சொல் தான். Yahweh இஸ்ரவேல் மக்களின் கடவுள். யார் இந்த Yahweh/Jehovah? கானான் நிலம் அதை சுற்றி இருக்கும் நிலத்தில் வசிக்கும் மக்கள் செமிட்டிக் மக்கள் என்றழைக்கப்பட்டார்கள். இவர்கள் எகிப்தியர்கள் கிரேக்கர்கள் போல பல தெய்வங்களை வழிபட்டார்கள். எப்படி Zeus, Odin, இந்திரன் போன்றவர்கள் தேவர்களின் கடவுளாக அல்லது தலைமை கடவுளாக இருந்தார்களோ அப்படி இவர்களின் தலைமை கடவுள் El (father of the gods) இந்த El க்கு 70 பிள்ளைகள் எல்லாரும் கடவுள்களே. மழைக்கு ஒரு கடவுள், வெயிலுக்கு ஒரு கடவுள் இப்படி. அந்த வகையில் புயல் மற்றும் மலையின் கடவுள் Yahweh/Jehovah/YHWH. இவரது மனைவி Asherah. so செமிட்டிக் மக்கள் பல கடவுள்களை வணங்கி வந்தார்கள் அவர்களில் ஒரு சிறிய குழு Yahweh வை வழிபட்டு வந்தது. இந்துக்கள் பல கடவுள்களை வணங்கி வந்தாலும் சிலர் மாரியம்மனை முதலாவதாக வழிபடுவார்கள் இல்லையா அது போல. அந்த குழு ” Shasu “. செமிட்டிக் மக்களில் ஒரு குழு.
இஸ்ரேல் மக்களும் Yahweh வை தான் வழிபடுவதால் இந்த Shasu of Yahweh இஸ்ரேல் மக்களை குறிப்பதாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். இந்த Shasu மக்களின் குடியிருப்புகள் எகிப்தில் கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் வீட்டின் அமைப்பும் கானான் நிலத்தில் இருக்கும் வீட்டின் அமைப்பும் ஒன்று போலவே இருக்கிறது. எனவே இவர்கள் எகிப்திலிருந்து கானானுக்கு சென்று இருக்க கூடும்.
பைபிளில் ராம்செஸ் என்னும் நகரத்தில் இருந்து இஸ்ரவேலர்கள் புறப்பட்டு சென்றதாக இருக்கிறது. அந்த ராம்செஸ் நகரம் தற்போதைய Qantir என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.இப்போ ராம்செஸ் ல இருந்து கானானுக்கு நேரடி வழி east Mediterranean coast வழியாக செல்வது. ஆனால் பைபிளில் இஸ்ரேல் மக்கள் பாலைவனம் வழியாக சுற்றிக்கொண்டு செங்கடலை தாண்டி செல்வதாக இருக்கிறது.
செங்கடலில் குறுகிய அகலம் கொண்ட இடத்தில் அவர்கள் கடந்து சென்று இருப்பார்கள் என்று வைத்து கொள்வோம். அந்த குறுகிய அகலம் கொண்ட இடத்தில் ஆழம் 300 அடி, கடக்கவேண்டிய தூரம் 49 km. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் கடலை கடந்து சென்று இருக்கிறார்கள். அவ்வளவு மக்கள் கடந்து செல்ல வேண்டுமானால் குறைந்தது 1 km அகலத்திற்காவது கடல் பிரிய வேண்டும்.அப்படியானால் எவ்வளவு நீர் displace ஆகி இருக்கும்? லட்சக்கணக்கான மக்கள் 50 km தொலைவை ஒரே நாளில் எப்படி நடந்து கடந்து செல்ல முடியும்?
சாத்தியமே இல்லாதது போல் தோன்றுகிறதல்லவா? இங்கே தான் ஆய்வாளர்கள் வேறு ஒரு theory யை முன் வைக்கிறார்கள். பைபிளில் எபிரேய மொழியில் மோசஸ் நீரை இரண்டாக பிளந்த இடம் Yam Suph என்று இருக்கிறது. இந்த Yam Suph (ים סוף) என்ற எபிரேய சொல்லை ஆங்கிலத்தில் நாம் Red Sea என்று மொழியாக்கம் செய்து அது செங்கடல் என்கிறோம். ஆனால் எபிரேய மொழியில் Yam என்றால் கடல், Suph என்றால் reeds தமிழில் நாணல் செடி. ஆக Yam Suph” (ים סוף) என்றால் “Sea of Reeds” அல்லது “Reed Sea” இதன் தவறான மொழிபெயர்ப்பு தான் Red Sea செங்கடல். Reed Sea என்றால் நாணல் செடிகள் நிரம்பிய சதுப்பு நிலம்.
எகிப்தில் Luxor என்னும் ஊரில் Karnak Temple இருக்கிறது. இது Amun கடவுளுக்காக கட்டப்பட்ட கோவில். இப்போது சிதிலமடைந்து சில சுவர்கள் மட்டும் எஞ்சியிருக்கும் இந்த கோவிலில் புரட்சி செய்த Shashu மக்களை மன்னன் Seti (Ramses II ன் அப்பா) எப்படி அடக்கினார் என்ற inscriptions இருக்கிறது. ஒரு வரைபடம் போல இருக்கும் இந்த கல்வெட்டில் நைல் நதி ஆற்றினருகே நாணல் செடி அதிகமுள்ள ஒரு சதுப்பு நிலத்தில் Seti புரட்சி செய்த Shashu மக்களை அடக்கினார் என்பதாக செதுக்கப்பட்டிருக்கிறது.
பைபிளில் இஸ்ரேல் மக்கள் கடல் பிளப்பதற்கு முன்பு மிக்தோல் என்னுமிடத்தில் முகாமிட்டதாக இருக்கிறது. இந்த மிக்தோல் தற்போதைய நைல் நதி ஆற்று படுக்கையை ஒட்டி அமைந்திருக்கிறது.
யாத்திராகமம்14:2 – நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
ஆற்றுக்கு அந்தப்பக்கம் Manzaleh ஏரி இருக்கிறது. Manzaleh ஏரியை சுற்றிலும் நாணல் செடிகள் மிகுந்திருக்கின்றன.
இந்த Manzaleh ஏரி மிகப்பெரிய ஏரி பார்க்க கடல் போலவே தோற்றமளிக்கும் ஏரி.
1882 ல் Sir Alexander Bruce Tulloch என்பவர் Manzaleh ஏரிக்கு அருகே அவரது ஆட்களுடன் முகாமிட்டு இருந்தார். அவர் அங்கு கண்ட விந்தையான காட்சியை பதிவு செய்து இருக்கிறார். இரவு மிகப்பெரிய புயல் காற்று வீசி இருக்கிறது. விடிந்தபின் முகாமை விட்டு வெளியே வந்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஏரியில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.
ஆழம் குறைவான நீர் நிலைகள் மேல் அதிவேக காற்று வீசும் போது அந்த காற்று நீரை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. இதற்கு wind-induced water displacement என்று பெயர். இன்னொன்று இருக்கிறது Wind setdown. இதில் அதிவேக காற்று தொடர்ந்து வீசும் போது நீர் விலகி சென்று விடும் கடற்கரைகளில் இதை நாம் பார்க்க முடியும். காற்று ஓய்ந்த பின் நீர் இயல்பு நிலைக்கு திரும்ப வரும். ஆக கடல் நீர் அல்லது ஏரி நீர் இரண்டாக பிளப்பதோ, பின் வாங்கி செல்வதோ, வற்றி உடனே நீர் மீண்டும் வருவதோ அற்புதம் அல்ல அது ஒரு இயற்கை நிகழ்வே.
தற்போது மிக்தோலை சுற்றி ஏரி எதுவும் இல்லை வெறும் நிலம் தான் இருக்கிறது. ஆனால் 3000 வருடங்களுக்கு முன்பு அங்கு ஒரு ஏரி இருந்திருக்கிறது என்பதை Satellite imagery மூலம் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால் ஏரி எப்படி கடலானது? Kinneret ஏரியையும் பைபிளில் Galilee கடல் என்றே குறிப்பிடுவார்கள். Kinneret ஏரி மிகப்பெரிய ஏரி. மிகப்பெரிய ஏரிகளை கடல் என்று பைபிள் குறிப்பது பெரிய விஷயம் இல்லை.
சரி, ஏரியில் நீர் உள்வாங்கி விட்டது அதை சில Shasu மக்கள் கடந்து சென்று இருக்கிறார்கள். மிகைப்படுத்தி சொல்லுதல் எல்லாவகை புராணங்களிலும் இயல்பானது என்பதால் ஏரி கடலானது, 100 Shasu மக்கள் லட்சக்கணக்கான மக்கள் ஆனார்கள். ஆனால் எகிப்தியர்கள் கடலில் மூழ்கி இறந்து போனார்கள் என்ற கதை எப்படி வந்திருக்கக்கூடும்?
வாய் வழியாக பல நூறு வருடங்கள் கடத்தப்பட்ட கதை பல கிளைக்கதைகளையும் சேர்த்து கொண்டு வரும். அப்படி சேர்க்கப்பட்ட கதை தான் எகிப்தியர்கள் கடலில் மூழ்கி இறந்து கதை.
Luxor க்கு அருகில் (Shasu மக்களின் குடியிருப்புகள் இருந்ததாக சொல்லப்படும் இடம்) Valley of the Kings இருக்கிறது. இறந்த மன்னர்களை புதைக்கும் இடம். இங்கு Thutmose II மன்னனின் tomb இருக்கிறது. 1550 BCE யில் இந்த tomb அமைக்கப்பட்டது. மோசஸ் செங்கடலை பிளந்த காலத்திற்கு முன்.
இந்த tomb ல் பல கதைகள் சுவரோவியமாக வரையப்பட்டு இருக்கின்றன. அதில் எகிப்திய வீரர்கள் நீரில் மூழ்கி இறந்து போவது போல ஒரு ஓவியமும் இருக்கிறது.
exodus நடப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு Island of Santorini யில் Thera என்றொரு எரிமலை இருந்திருக்கிறது. 1550 BCE யில் இந்த எரிமலை வெடித்து சிதறி இருக்கிறது. இது அடுத்தடுத்து பல சுனாமிகளை உண்டாகி இருக்கிறது.
இந்த சுனாமிகள் எகிப்தின் கடலோர பகுதிகளை தாக்கி ஊருக்குள்ளும் புகுந்திருக்கும். இதில் பலர் மாண்டு போயிருந்திருக்க கூடும். இந்த நிகழ்வு மாபெரும் நிகழ்வு. அன்றைய காலத்தில் சுனாமி பற்றிய அறிவோ, Santorini என்ற தீவு எகிப்திலிருந்து 800 km தொலைவில் இருக்கிறதென்றோ அதில் எரிமலை வெடித்தததால் ஏற்பட்ட விளைவு இது என்றோ யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிக பெரிய அலை வந்து பலர் இறந்து போனார்கள் என்பது அன்றைய மக்களுக்கு மிகப்பெரிய அதிசயம் பல 1000 ஆண்டுகள் நினைவில் இருக்கும் அற்புதம். இது Thutmose II மன்னனின் tomb லும் ஓவியமாக இடம்பெற்று இருக்கிறது. இந்த கதை தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு இருக்கும். Shasu மக்களும் இந்த கதையால் உந்தப்பட்டு அவர்கள் தப்பிச்சென்ற கதையுடன் இதை இணைந்திருக்க கூடும்.
Source: Buried Secrets of the Bible with Albert Lin; National Geographic Documentary.
இந்த 6 முனை கொண்ட நட்சத்திரம் உலகின் மிக பழமையான symbol எல்லா மதங்களிலும் உண்டு. 6 முனை நட்சத்திரம் அதை சுற்றி வட்டம் என்பது பிரபலமான சின்னம். இதற்கு மாந்த்ரீக சக்தி உண்டு என்று உலகமெங்கும் நம்புகிறார்கள். இந்து மதத்திலும் யந்திரங்களில் இவை முக்கிய இடம் பெறுகின்றன.
hexagram என்றழைக்கப்படும் இந்த symbol தீய சக்திகளிடமிருந்து நம்மை காக்கும் என்று நம்பப்படுகிறது. இதிலிருந்து வந்ததுதான் “hex” (சூனியம் வைப்பது என்று தோராயமாக பொருள் எடுத்துக்கொள்ளலாம்).
இது போக ஆண் பெண், நீர் நெருப்பு, போன்ற opposite விஷயங்களின் balance ஐ குறிக்கவும் இந்த symbol பயன்படுகிறது. முருகனின் சரவணபவ நட்சத்திரம் சட்கோணம் என்றழைக்கப்படுகிறது. சிவன் (ஆண், மேல் நோக்கிய முக்கோணம்) சக்தியின் (பெண், கீழ் நோக்கிய முக்கோணம்) இணைப்பு முருகன்.
இந்த சட்கோணம் வரைந்து நாம் விரும்பும் தெய்வத்தின் பெயர் அல்லது அதற்கு உரித்தான மந்திரம் போன்றவற்றை இந்த சட்கோணத்தில் எழுதி வழிபட நினைத்தது நிறைவேறும் என ஒரு நம்பிக்கை இந்து மதத்தில் உண்டு இதை சித்தர்கள் எதிர்கின்றனர். மாந்த்ரீகம் தாந்த்ரீகம் போன்றவை கூடாது என்கின்றனர்.
சட்கோணத்தை சுற்றி வட்டம் வரைந்தால் அது விஷ்ணுவின் சக்கரமான சுதர்சன சக்கரத்தை குறிக்கிறது.
“Star of David” இது யூதர்களுடன் தொடர்புடைய symbol. யூதர்கள் இதை Shield of David என்று அழைப்பார்கள். இஸ்ரேல் நாட்டு தேசிய கொடியிலும் இந்த symbol காணப்படும்.
ஆரம்பத்தில் யூதர்கள் menorah எனப்படும் 7 மெழுகுவர்த்திகள் கொண்ட symbol தான் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இஸ்ரேலின் official emblem ஆக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் கிறிஸ்தவர்கள் சிலுவை அடையாளத்தை பிரபலமாக பயன்படுத்தி வந்தனர்.
அப்போது ஐரோப்பியாவில் வாழும் யூதர்கள் கிறிஸ்துவ பொருட்களிடமிருந்து (புனித புத்தகம், கொடி etc. ) தங்களது பொருட்களை வேறுபடுத்தி காட்ட இந்த 6 முனை கொண்ட நட்சத்திரத்தை அடையாளமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். menorah தூரத்தில் இருந்து பார்த்தால் சிலுவை போலவே இருக்கும். எனவே வித்தியாசம் நன்கு தெரிய சிலுவைக்கு மாற்றாக இந்த நட்சத்திரம் பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பின்னர் இதற்கு பல அர்த்தங்கள் வழங்கப்பட்டது. இந்த அடையாளம் தாவீது (David) ராஜாவின் (யூத ராஜா) படை சின்னமாக பயன்பட்டது என்றனர்.
Kabbala என்னும் யூதர்களில் ஒரு பிரிவினர் இந்த symbol க்கு magical குணங்கள் இருக்கிறது என்றார்கள். நாஜிக்கள் யூதர்களை கடுப்பேத்துவதற்காக மஞ்சள் நிற நட்சத்திரம் அணிய வற்புறுத்தினார்கள். இன்று மஞ்சள் நிற 6 முனை நட்சத்திரம் heroism தியாகத்தின் சின்னமாக யூதர்களால் பார்க்கப்படுகிறது.