Reading view

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

 


ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.

விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.

 தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.

சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் நினைவுகூர்கிறார்.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் குறிப்பிடுகிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.

கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’.

சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

நாம் கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.

(நன்றி: அகழ் இணையத்தளம்)

  •  

மதாரின் குழந்தை

 


சஜ்தாவில் குழந்தை - மதார்

 

தொழத் தெரியாத குழந்தை

தொழுகையாளிகளின்

வரிசையில்

நிற்கிறது

 

தக்பீர் கட்டுகிறது

சூரா ஓதுகிறது

கேட்பதைச் சொல்லி

செய்வதைப் பார்த்து

 

தொழுகை முடிந்து

உருகி அழும்

ஈமான் தாரியின் கண்ணீரை

அதற்கு நடிக்கத் தெரியவில்லை.

-    

       அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில் (https://akazhonline.com/?p=8605) ‘சஜ்தாவில் குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

     சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது.

மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி பரவலாக கவனிக்கப் பெற்றது. 


சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள் தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம் தெரிவித்தேன். 

மதாரிடம் நான் சொன்ன அம்சங்களிலே சிறிய புதுமைகளையும் சிறிய சாதனைகளையும் படைத்துவிட்டு, தேங்கி நின்ற கவிஞர் முகுந்த் நாகராஜன் என்று, இதற்கு முன்பு  சொல்ல முடியும். ஜான்சன் பேபி சோப், ஹக்கீஸ், ஃபேரக்ஸ், செரிலாக், க்ரேயான் பென்சில் டப்பாக்கள் போன்ற குழந்தைகள் உபயோகப் பொருட்களின் விளம்பரப் படங்கள், முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இடம்பெயர்த்துவிட்டன.

‘வெயில் பறந்தது’ தொகுதிக்குப் பிறகு மதார் அடைந்திருக்கும் திருப்பம், வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் கவிதை ‘சஜ்தாவில் குழந்தை’, மதாரின்  எளிமையிலிருந்து கிளைத்து உலகின் கனத்தை வரித்துள்ளது.

தொழத் தெரியாத குழந்தை, தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது என்ற முதல் வரியிலேயே மௌனம் இறங்கிவிடுகிறது.

யுத்தம் தெரியாத குழந்தை, யுத்ததாரிகள் மோதும் களத்தில் நிற்கிறது என்று இதை வெளியிலிருந்து பிரதிபலிக்கலாம்.

உலகம் வந்து சேர்ந்திருக்கும் உச்சபட்ச அறிவு, பகை மூர்க்கம், பிளவுவாதம், வெறுப்பின் யுத்த களத்தில் பரிதாபமாக இன்று நிற்பவர்கள் குழந்தைகள் தான்.

இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் மதாரின்  ‘சஜ்தாவில் குழந்தை’ கவிதையில் தொழுகையில் பங்கேற்கிறது.

இந்த உலகம் செய்யவேண்டியதையெல்லாம் செய்யத் தேவையில்லாத குழந்தைகள், அதைத் திரும்பச் செய்வது போல பள்ளிவாசலில் எல்லாவற்றையும் செய்கிறது மதாரின் குழந்தை.

தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் அழுகையை மட்டும் அந்தக் குழந்தைக்கு நடிக்கத் தெரியவில்லை.

அழுகையை நடிக்கத் தெரியாத குழந்தையின் அந்த இயல்பு எனக்கு இப்போது இன்று இக்காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கிறது.

ஏனெனில் எந்த நியாயமுமே இல்லாமல் குழந்தைகளை பெரியவர்கள் உலகெங்கும் அழவைக்கும், அழித்தொழிக்கும் கையாலாகாத கொடுங்காலம் நம்முடையது.

மதாரின் கவிதையில் உள்ள குழந்தை, அழுகையைப் பாவனையாகக்கூடப் பழக வேண்டாம் என்பதுதான் எனது இப்போதைய ஒரே பிரார்த்தனை.

மதாரின் புதிய கவிதை நூலான ‘மாயப்பாறை’ வரும் 18ஆம் தேதி வெளியீடு காணும் தருணத்தில் அவருக்கு என்னுடைய பிரியம் நிறைந்த வாழ்த்து.

  •  

நண்பர் அரவிந்தன்


எதிர் 

பிளாட்பாரத்தில்

இறந்து

இருண்டு கிடக்கும்

எலியின்

வாலருகே 

மினுங்கிக்கொண்டிருக்கிறது

அன்பைவிடச்

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங் என்ற ஓசையோடு

சாலையில் கால் வைக்க முடியவில்லை

முன்னும் பின்னும்

முரட்டு வாகனங்கள்

இடைவேளை இன்றி

ஒரு நாள்

ஒரு நூற்றாண்டு

பல நூற்றாண்டுகள்

திடீர் இடைவெளியில்

குறுக்காக ஓடி,

ஏறினேன்.

எதிர் பிளாட்பாரத்தில்

தவறிக் கிடக்கும்

நீர்த் தாவரத்தின்

கசிவில்

மினுங்கிக் கொண்டிருக்கிறது,

அன்பை விட

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங்

என்ற ஓசையோடு. 

- தேவதச்சன்


தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார். 

அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் என்ன? அன்புக்கும் மரியாதைக்கும் இடையில் உள்ள பாலம் எது? 

நாகரிகம் என்று எனக்குப் பதில் கிடைக்கிறது. 

அன்புக்கும் நாகரிகத்துக்கும் இடையே உள்ள பாலம் அருளால்  கட்டப்படுகிறது என்று கருதுகிறேன்.

அன்பெனும் எலும்பில் இன்னும் விலங்குத் தன்மையின் ரத்தமும் நிணமும் உலராமல் இருப்பதாலேயே அன்பு எப்போதும் கொலைக்கருவியாகும் வாய்ப்புகளை நாம் பார்த்துவருகிறோம்.   

மரியாதை என்பது அதனால் எலும்பாக அன்புக்கும் தூரத்தில் உலர்ந்த மணல்பரப்பில் கிடக்கிறதென்று நினைக்கிறேன். 

மரியாதை துளியும் இல்லாத இடத்தில் அபரிமிதமான அன்பு நஞ்சுதான். அறிவாலும் அருளாலும் சலிக்கப்படாத அன்பு பேராயுதமாக மாறக்கூடிய வாய்ப்புடையது. 

அன்பு உலர்ந்தபின்னர் மனிதர்கள் சேர்ந்து ஓரளவு சமாதானத்துடன் உய்வதற்கு உயவுப்பொருளாக மரியாதையே இருக்க இயலும்.

சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வடமாநிலம் ஏதோவொன்றில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்னதானத்தில், உணவுக்காக வந்த முஸ்லிம் கிழவியிடம் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உணவளிக்க முடியுமென்று உணவுகொடுக்காமல் துரத்தும் வீடியோ ஒன்று மிகுந்த மனத்தொந்தரவை அளித்தது 

பசியைத் தவிர வேறு பிணியே இல்லை என்றும் உணவைத் தவிர வேறு கடவுளே இல்லையென்ற போதத்தையும் விதைத்த, சீவ காருண்யத்தையே ஒழுக்கமாகப் பார்த்த வள்ளலார் போன்ற ஞானிகள் பிறந்த மண்ணிலிருந்து இதுபோன்ற வெறுப்புக் குரல்கள் தேசமெங்கும் கேட்கத் தொடங்கியிருக்கும் வேளையில் அன்பென்ன? அருள் என்ன? அறிவுதான் என்ன? மரியாதை என்ன? என்பதையெல்லாம் நாம் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

ஒரு இனத்தின் மேல் கொண்ட வெறுப்பால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை சித்திரவதை முகாம்களில் பறிகொடுத்த யூத இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தேசம் ஒன்று, ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனக் குழந்தைகள் மீது கொலை பாதகத்தை ஏவிவிட்டு, ஒண்டி இருப்பதற்குக்கூட ஒரு மூலையை அனுமதிக்காமல் துரத்திக் கொன்று கொண்டிருக்கும் காட்சிகளை தினசரிப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது இந்தக் கையாலாத காலத்தில்

 அன்பென்ன? அருள் என்ன? நாம் இதுவரை வந்தடைந்திருக்கும் அறிவென்ன? தத்துவம்தான் என்ன? கற்றுக் கொண்ட மரியாதைதான் என்ன? என்பதை குற்றவுணர்வோடு பரிசீலிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

000

சுந்தர ராமசாமி நாகர்கோவில் பாம்பன் விளையில் வருடம்தோறும் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்பில், எனது 19 வயதில் கல்லூரிப் பட்டப்படிப்பின் முதலாண்டில் அரவிந்தன், அறிமுகமானார். அப்போது இந்தியா டுடே ஆசிரியர் குழுவில் இருந்தார். யோகா உடற்பயிற்சியைச் சொல்லிக் கொடுக்கும் அளவு தேர்ந்தவர் என்பதால் அரவிந்தனின் உடல்வாகும் முகமும் கூட பெரிதாக மாறவில்லை என்பதே எனது எண்ணம்.

கொஞ்சம் ஒடுங்கியிருந்த முகம் சமீப பத்தாண்டுகளில் பூசியுள்ளது மட்டும் மாற்றம் என்று நினைக்கிறேன்.

குற்றாலத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டறை தொடர்பில் அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்று இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. பெர்முடாஸ் அணிந்து இன்று வயோதிகர்களாகியிருக்கும் அன்றைய இளம் எழுத்தாளர்கள் பட்டறையில் பங்கேற்றது அதிர்ச்சிகரமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கலக உடை என்று பெர்முடாஸுக்கு நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில். சுபமங்களாவில் வந்த ஒரு சிறுகதையையும் அக்காலகட்டத்தில் படித்திருக்கிறேன். அரவிந்தனுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியும் கமலா அம்மாவும் அக்கறையுடன் அரவிந்தனது மணப்பெண் தேடல் குறித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமி ஆசிரியராகக் கொண்டுவந்த காலச்சுவடை நிறுத்தி 2,3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனும் லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் சேர்ந்து திரும்ப காலச்சுவடைக் கொண்டுவந்த போது அதன் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். காலச்சுவடு பதிப்பகமாக, வர்த்தக நிறுவனமாக கிளைவிட்ட போது, எனது இயல்பின் அடிப்படையில் நான் அங்கிருந்து படிப்படியாக விலகி வெகுதூரம் வந்துவிட்டேன். சுந்தர ராமசாமி என்ற முதல் ஆசிரியரின் மீதான அபரிமிதமான மரியாதை, அவர் எங்கள் ஆளுமைக்கு அளித்த ஊட்டம், கமலா அம்மாவும் அவர்கள் வீடும் அந்தக் காலகட்டத்தில் கொடுத்த அடைக்கலம் மட்டுமே இப்போது எனக்கு சுந்தர விலாஸுடனான ஞாபகத் தொடர்பு.

அரவிந்தன் அப்போது தொடங்கி இப்போதுவரை காலச்சுவடின் ஓர் அங்கமாக இருக்கிறார். காலச்சுவடு கண்ணனுக்கும் நண்பர்களாகிய எங்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், புகார்கள், பரஸ்பரமாகப் பகிர்ந்துகொண்ட வன்மங்கள் எல்லாவற்றையும் அரவிந்தன் அறிந்தாலும், அவற்றில் அவரது தரப்பை எங்களிடம் பகிர்ந்துகொண்டாலும் ஒருபோதும் என்னை விலக்க முயன்றதில்லை.எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அவர் எளிதில் பெரிய நிலைப்பாடுகளுக்குப் போகக்கூடியவர் அல்ல.   

000

 எனது பட்டப்படிப்பு முதலாண்டின் இறுதியிலேயே முறிந்து டிஎம்இ படிப்பதற்காக திருக்கழுகுன்றத்துக்கு வந்து படித்து முடித்து திருநெல்வேலியில் ஓராண்டு இருந்துவிட்டு வேலைக்காக தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அன்னம்மாள் மேன்ஷனுக்குக் குடியிருக்க வந்தபோதுதான் அரவிந்தன் எனக்கு நெருக்கமானார். வேலை தேடும் முகாந்திரத்தில் தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்து சென்னைக்கு வந்துவிட்டேன் என்பதைச் சொன்ன இடங்களில் ஒன்று அரவிந்தன் வேலை பார்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இந்தியா டுடே அலுவலகம்.

கவிதா முரளிதரன், முரளியோடு சேர்ந்து அரவிந்தன் எனக்கு தேநீர் வாங்கித் தந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டுக்கும் வரலாம் என்று சொன்னார்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி அயோத்தியா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் திரும்பும் வீதியில் அரவிந்தன் திருமணமாகி ஸ்ரீதேவியுடன் இருந்த வீட்டில் தளவாய், அஜயன் பாலா போன்ற நண்பர்கள் மாலைகளில் கூடுவது வாடிக்கையாக இருந்தது. சினிமா இயக்குனரும் நண்பருமான தி ஜா பாண்டியராஜன் எழுதிய சில சிறுகதைகளும் இந்தியா டுடேவில் பிரசுரமானது. ஸ்ரீதேவியின் சமையலில் சில வேளைகள் சாப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த கை அவருடையது.

அரவிந்தனின் வீட்டில் தளவாய், அஜயன் பாலா சிறுகதைகளை புத்தம்புதிதாக எழுதி கொண்டுபோய் கொடுத்து சில கதைகள் சுடச்சுட இந்தியா டுடேயில் பிரசுரமாவது நடந்திருக்கிறது. அப்போது இந்தியா டுடேயில் சிறுகதை வருவது மிகவும் பெருமிதமாக கருதப்பட்டது. ஆதிமூலம், ஆர் பி பாஸ்கரன் தொடங்கி மாரிமுத்து வரையிலான நவீன ஓவியர்களின் ஓவியத்தை பிரத்யேகமாக வாங்கி அந்தச் சிறுகதைகளைப் பிரசுரிப்பது வழக்கமாக இருந்தது. இந்தியா டுடேயில் வந்த சிறுகதைகளுக்கு ஒரு தனிமதிப்பை உருவாக்கியதிலும் இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களின் உள்ளடக்கத்திலும் அதன் ஆசிரியராக இருந்த வாஸந்தியோடு அரவிந்தனுக்கும் முக்கியப்பங்கு இருந்தது. லா.ச.ரா, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, சூடாமணி, அம்பை, கி.ரா,அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை நிறைய சிறந்த சிறுகதைகள் எனது மாணவப் பருவத்தில் அறிமுகமானது இந்தியா டுடே வழியாகத் தான்.   

ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புத் தொகையும் அப்போதைய பொருளாதாரத்தில் மிகவும் அதிகமான தொகை. நான் அந்த ஆயிரத்து 500 ரூபாய்க்காகவே சில சிறுகதைகளை எழுத மிகவும் பிரயத்தனப்பட்டு முயன்றிருக்கிறேன். இந்தியா டுடேயில் சிறுகதை வருவதைக் கனவாகவும் கண்டிருக்கிறேன். எனது கதை எதுவும் பிரசுரமாகும் தகுதியை அடையவில்லை. இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் அரவிந்தன் என்னிடம் வாங்கிப் பிரசுரமான எனது ஆரம்பகாலத்து நல்ல கவிதைகளில் ஒன்றான ‘அம்மா நீங்கிய அறையில்’ கவிதைதான் பரவலாக என்மீது கவனத்தை ஏற்படுத்தியது. 

000

என் அம்மாவிடம் சென்னைக்குப் போய் வேலை தேடிவிடலாமென்று சொல்லி வந்துவிட்டேனே தவிர ஒரு வேலை கிடைப்பது அத்தனை எளிதாக இல்லை. அரவிந்தன் மூலமாகத்தான் ஒரு டேட்டா எண்ட்ரி அலுவலகத்தில் பணி கிடைத்தது. 

அப்போதுதான் அரவிந்தனுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. 

000

டேட்டா எண்ட்ரி வேலை பறிபோனபின்னர் 1999 வாக்கில் சுட்டி விகடனில் சேர்ந்தபின்னர்…படிப்படியாக அரவிந்தனுடன் எனக்கு தொடர்பு குறைந்துவிட்டது…மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் நமது சென்னை பத்திரிகையை அவர் நடத்திக் கொண்டிருந்தபோது நானும் நிலையான வருவாய் இன்றி 50 நாட்களுக்கு மேல் ஒரு முறை சம்பளம் தரும் விசித்திர நிறுவனமான தி சன்டே இந்தியனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக அரவிந்தனுடன் மீண்டும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுபகுணராஜன் நடத்திய காட்சிப்பிழை பத்திரிகையின் பணிக்காகவும் அரவிந்தனின் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம்.

இந்தப் பருவத்தில் ஏற்பட்ட பணிரீதியான உறவுகள், உரையாடல்கள் மீண்டும் ஒரு நெருக்கத்தை எட்டிய இரண்டாண்டுகளில்தான் இந்து தமிழ் திசை பத்திரிகை தொடங்குவதைப் பற்றி என்னிடம்அரவிந்தன் சொன்னார். என் சுய விவரத்தை எனது அடுத்த தெருக்காரராக இருந்த அசோகமித்திரன் கேட்டு வாங்கி அவர் மகனிடம் கொடுத்திருந்த நிலையில் அரவிந்தன் முக்கியமான பொறுப்பேற்பதாகச் சொல்லி எனக்கு நம்பிக்கையை அளித்து, அழைத்தும் சென்றுவிட்டார்.

அரவிந்தன் ரெஃபரென்ஸ் செய்தபின்னர் ஆங்கில இந்துவைச் சேர்ந்தவர்கள் தீவிரமான நேர்காணல் செய்தபின்னரே என்னைத் தேர்ந்தார்கள் என்றாலும் அரவிந்தன் செய்த உதவியே எனது பொருட்படுத்தத்தக்க 10 ஆண்டு பத்திரிகைப் பணிக்கு ஆதாரமாக இருந்தது. கவிஞனாக என் அடையாளமே தெரியாமல் எனது கட்டுரைகளால் அடையாளம் காணும் பல வாசகர்களை நான் இந்து தமிழ் திசை வாயிலாகவே பெற்றேன.

இந்து தமிழ் திசையில் அரவிந்தன் பொறுப்பு வகித்த இணைப்பிதழ் பிரிவிலேயே தான் எனக்கு பணி. ஆனாலும், அரவிந்தனுடன் கூடுதல் உரிமையையும் அதனால் கூடுதல் விமர்சனத்தையும் சொல்லக்கூடியவனாகவே பக்குவமற்றே நடந்திருக்கிறேன். அவரது எல்லைக்குட்படாத விஷயங்களையும் அவரைப் பொறுப்பாக்கி நான் கடிந்திருக்கிறேன். ஒருநாள் கூட நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் நடவடிக்கையிலோ இறங்கியதேயில்லை. 

அவர் எடிட்டோரியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தபோது அந்த முடிவு என் நலன் தொடரபில்லாததாக இருந்தாலும் அந்த முடிவு சரியல்ல என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறினேன. அவர் என்னுடைய தரப்பைக் கேட்டாலும் அந்த முடிவில் உறுதியாக இருந்தார். பத்து நாட்கள் அதுதொடர்பில் எங்களுக்குள் உரையாடல் நடந்துகொண்டேயிருந்தது. ஆனால் அவர் வழிக்கு வரவில்லை. நான் அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் தொடர்ந்தேன். ஒருநாள் முதல் மாடியிலிருந்து படியில் அதைப்பற்றி பேசிக்கொண்டே இறங்கும்போது திட்டமேயில்லாமல ஒரு காரியத்தைச் செய்தேன். அங்கே காமிரா இல்லை என்பதை மட்டும் பார்த்து அவர் கால்களில் விழுந்தேன். தயவுசெய்து இந்த முடிவை நடைமுறைப்படுத்தாதீர்கள், சரியாக வராது என்று. அரவிந்தன் என்னப்பா என்னப்பா என்று கூறி போய்விட்டார். ஆனால் எனது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே மாட்டேன். எனது நடத்தையிலேயே இல்லாத ஒரு திருப்பம் அரவிந்தனிடம் நான் செய்த செயல். நான் ஒருவரைக் காயப்படுத்துவேன். இல்லையெனில் கசந்து விலகுவேன். ஆனால் எனது நலன் அல்லாத ஒன்றுக்காக திடுக்கென்றுதான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.

அது விஷயமும் அல்ல.

அவரது முடிவையே தொடர சகல உரிமையும் அதிகாரமும் இருந்தும் தனது அதிகாரத்தை எனக்காக அவர் செயல்படுத்தவில்லை. அரவிந்தனின் மேன்மை அதுதான்.

தனது நலனுக்காக மற்றவர்களின் வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்களை, அவர்களது கருத்துகளை துச்சமாகக் காலில் போட்டு மிதிக்கும் மேலதிகாரிகளைத் தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.

இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்புகளில் சில இணைப்புகளுக்கு பெயர் வைத்தது அரவிந்தன்தான். ஆனந்த ஜோதி அவர் வைத்த பெயர்தான். இந்தியா டுடே இலக்கிய மலர் அனுபவத்தில் சீரியசான வகையில் தீபாவளி மலர்களை கனமான உள்ளடக்கத்துடன் கொண்டுவந்ததில் அரவிந்தனின் பங்கேற்பு முக்கியமானது. புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை கிராபிக் கதையாக ஆக்கலாம் என்று போகிற போக்கில் நான் கூறியதை தொடர்ந்து சட்டகங்களுக்கு வசனங்களை எழுதச் சொல்லி ஓவியர் மருதுவிடம் பணித்து அதைக் காரியமாக்கினோம். ஒரு பெரிய கட்டமைப்பிலேயே அதுபோன்ற வேலைகளை நம்மால் சாத்தியமாக்க இயலும். 

குடி, சிகரெட் என்று எந்தப் பழக்கமும் இல்லாததாலோ என்னவோ சோர்வைக் காட்டிக் கொள்வதைக் கூடுமானவரைத் தவிர்ப்பார். யோசனைகள், திட்டங்களைக் கொட்டிக் கொண்டே இருப்பது மூச்சுமுட்டும். 

மொழிபெயர்ப்பை தட்டச்செழுத்தரின் வேகத்துடன் செய்யக்கூடியவர். எனது மொழிபெயர்ப்புத் திறன் மேம்பட உதவிய வெகுசிலரில் ஒருவர் அரவிந்தன்.  

 அரவிந்தனுடன் வேலை பார்த்த 8 ஆண்டு காலப்பகுதியும் நான் கண்ணியமாக மரியாதையோடு நடத்தப்பட்ட காலமாக நன்றியுடன் என்னால் சொல்லமுடியும்.

நட்பு மற்றும் அன்பின் இதத்தை வேறு வேறு இடங்களிலிருந்து கொண்டு பராமரிப்பது வேறு. அதிகாரத்தில், வேலை ரீதியாக உயர்நிலையில் இருந்துகொண்டு படிநிலையில், கீழேயுள்ள உயிரை – அதுவும் என்னைப் போன்ற சிக்கலான ஒரு நபரை - மதிப்போடு நடத்துவது என்பது மிக அரிதானது.  

000

இந்து தமிழ் திசை காலகட்டத்தில்தான் அவர் பயணம், பொன்னகரம் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இரண்டையும் கையெழுத்துப் படியாகவே எனக்குக் கொடுத்தார். 

நான் அந்த இரண்டு நாவல்களையுமே மிகப் பழைய ஒரு மனம் எழுதியது என்று கடுமையாக விமர்சித்தேன்.

நேர்ப்பேச்சில் என்னிடம் வெளிப்படும் கூர்மையான விமர்சனம் படைப்பையும் தாண்டி நபரைக் கீறிவிடக்கூடியது என்பது மிகத் தாமதமாக இந்த வயதிலேயே எனக்குப் புரிகிறது. அரவிந்தனையும் நான் பல சமயங்களில் கீறியிருக்கிறேன். அவர் அதைப் பெருந்தன்மையாகவே கடந்திருக்கிறார்.

முதல் நாவலை விமர்சித்த பிறகும் இரண்டாவது நாவலையும் படிக்க கொடுத்தார். 

அந்த விமர்சனங்கள் எதையும் வேலை மீது காட்டியதில்லை. 

000

எந்திரங்களால் உருவாக்கப்படும் இசை மனிதனின் ஆழமான உணர்ச்சிகளை எப்படித் தொடுகிறது என்று ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி வியக்கிறார். சத்தம் எப்போது சந்தமாகிறது? மொழியும் ஒருவகையில் அப்படித்தான். ஒரே காலகட்டத்தில் பொதுவான சொற்களனிலிருந்து எடுத்து படைக்கப்படும் மொழி ஒருவரிடம் எப்படி தற்காலத் தன்மையைப் பெறுகிறது? ஒருவரிடம் ஏன் பழையதாக இருக்கிறது?

உள்ளடக்கத்திலா? விமர்சனத்திலா? பார்வையிலா? அனுபவத்தைப் பார்க்கும் தொலைவிலா? மனத்தடையின்மையிலா? அராஜகத்திலா? கொந்தளிப்பிலா? கொதிப்பிலா? 

சத்தம் எங்கே சந்தமாகிறது?

அன்பு எங்கே அருளாகவும் மரியாதையாகவும் நீதியாகவும் மாறுகிறது?

அரவிந்தனின் நிதானத்துக்கும் பெரிதாக அதிர்வுறாமல் தோன்றும் தன்மைக்கும் அவரது படைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதாவென்று பரிசீலிக்க வேண்டும்.

பாலசரஸ்வதியின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய டக்ளஸ் நைட்டின் நூலை மொழிபெயர்த்தது, அரவிந்தனின் நினைவுகூரத்தக்க சாதனைகளில் ஒன்று. புதுமைப்பித்தனுக்கு இணையான ஒரு கலை சாதனையாளரை எனக்கு மறக்க இயலாமல் ஆக்கியதற்கு நான் அரவிந்தனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். 

000   

எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க காலவகையிலும் இடவகையிலும் தொலைவு தேவையாக உள்ளது என்ற சுந்தர ராமசாமியின் வாக்கியத்தைச் சொல்லி எனது உரையை நிறைவு செய்கிறேன். 19 வயதில் அறிமுகமான தளவாயுடன் அப்படித்தான் எனது உறவு கனிந்திருக்கிறது.

அரவிந்தனையும் அப்படிப் பார்க்க அனுமதித்த காலத்துக்கு சலாம். 

தேங்க் யூ அரவிந்தன். 

எனது கௌரவமான சென்னை வாழ்க்கையின் ஒரு அங்கம் நீங்கள். உங்களுக்கு எனது பிரியமும் அன்பும்.

இராப்பகல் இல்லாத இடத்தில் இருக்கும் வெண்ணிலா, அன்பு வெறுப்பு இரண்டுமற்ற இடத்தில் சுடரும் வெண்ணிலாதான் போல.

(டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நடத்திய அரவிந்தன் 60 நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட உரை)

  •  

ஆன்மாவும் அவரைக்காயும்

Pa Raghavan

எனக்கு பீன்ஸ் பிடிக்கும். கொத்தவரங்காய் தவிர பீன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான காய்களும் உவப்பானவையே. வேறு வழியில்லை என்றால் கொத்தவரங்காயையும் சாப்பிடுகிறேன். ஆனால் காய்கறி வாங்கக் கடைக்குச் செல்வது நானாக இருந்தால் நிச்சயமாக அதை மட்டும் வாங்க மாட்டேன்.

பொதுவாகத் தாவர உணவு மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு வேண்டுதல் வேண்டாமை கூடாது. இருக்கிற சொற்பத்தில் கிடைப்பன அதனினும் சொற்பம். இதில் தேர்வு செய்து உண்பதெல்லாம் அடாது என்று நினைப்பேன். ஆனால் நியாயங்களும் நாவும் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை.

இருக்கட்டும், சொல்ல வந்தது வேறு. எனக்குக் கொத்தவரங்காயை எப்படிப் பிடிக்காதோ, அதே போலப் பித்தகோரஸுக்கு அவரைக்காய் பிடிக்காது. பீன்ஸ் குடும்பத்தில், கொத்தவரங்காயாவது மெல்லிய கசப்புச்சுவை கொண்டது. அவரை என்ன பாவம் செய்ததென்று தெரியவில்லை. ஆனால் என்னைப் போலவே மிகத் தீவிரமான தாவர உணவுக் கொள்கை கொண்ட ஒரு மனிதர், வாழ்நாள் முழுவதும் அவரைக்காயை வெறுத்து வந்திருக்கிறார் என்றால் அதன் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன்.

படிக்கிற காலத்தில் பித்தகோரஸ் தியரம் என்ற பதம் என் வாழ்வின் குறுக்கே வந்திருக்கிறது. கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இவ்வாறு எது எதிர்ப்பட்டாலும் நகர்த்திவிட்டு நகர்ந்துவிடுபவனாக இருந்ததால் அப்போது நான் பித்தகோரஸைப் பொருட்படுத்தவில்லை. அது பெரும்பிழை என்று பின்னாள்களில் உணர்ந்தேன்.

அவர் கணித மேதை மட்டுமல்ல. தத்துவவாதி. தன்னைப் பின்பற்றவும் வழிபடவும்கூட ஆயிரக் கணக்கானவர்களைக் கொண்டிருந்தவர். பித்தகோரியம் என்று அவரது கொள்கைகளின் அடிப்படையில் அக்குறுங்குழுவினர் ஒரு மதத்தையே உருவாக்கி, பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். அப்பேற்பட்டவரின் வாழ்க்கையில் அவரைக்காய் ஏதோ விளையாடியிருக்கிறது. இல்லாவிட்டால் அவர் அதை அவ்வளவு வெறுத்து ஒதுக்கியிருக்க வேண்டியதில்லை.

கிமு 570இல் கிரேக்கத்தில் பிறந்த பித்தகோரஸ், எகிப்திலும் இராக்கிலும் தனது இளமைக்காலத்தைக் கழித்திருப்பதாகத் தெரிகிறது. கணிதம், தத்துவம், வானியல், விவசாயம் என்று ஏகப்பட்ட துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. ஆர்வம் இருந்த அனைத்துத் துறைகளிலும் தீவிரமாக இறங்கி அகழ்ந்தெடுக்கப் பார்த்திருக்கிறார். என்ன எடுத்தார் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்திலும் அவருக்கு ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்து இருந்திருக்கிறது. தனது கருத்துகளை வாழ்நாள் முழுதும் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எனவே அவருக்கு எல்லா துறைகளிலும் ஏராளமான எதிரிகளும் இருந்திருக்கிறார்கள். பித்தகோரஸ் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேச எங்கும் எப்போதும் ஒரு கூட்டம் தயாராக இருந்திருக்கிறது. எப்போது அவர் தனது சித்தாந்தங்களைத் தொகுத்து ஒரு மதமாக்கப் பார்த்தாரோ, அப்போது அந்த எதிரிகள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தொடங்கினார்கள்.

கிறிஸ்து பிறப்பதற்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்தபடி (க்ரோடொனா என்ற நகரில் குடியிருந்திருக்கிறார்) மரணம்-மறுபிறப்பு குறித்தெல்லாம் அவர் பேசியிருக்கிறார் என்பதைப் படித்தபோது வியப்பாக இருந்தது. இறந்தவரின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்கிற இந்து மதக் கொள்கைதான் பித்தகோரஸுக்கும் இருந்திருக்கிறது. அழிவற்ற ஆன்மா உடனடியாக இன்னொரு உடலைத் தேடிக்கொண்டு விடுகிறதென்று அவர் சொன்னார். அன்றைய ஐரோப்பாவில் இதையெல்லாம் யாரும் நம்பத் தயாராக இல்லை. அவரைப் பைத்தியம் என்றும் பித்தலாட்டக்காரன் என்றும் இடைவிடாமல் எதிர்ப்பிரசாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

பித்தகோரஸ் அதையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இசைக்குள்தான் கணிதம் வாழ்கிறது என்றார். எண்கள்தாம் எல்லாம்; அவற்றுக்கு மாய சக்தி உண்டு என்றார். கணிதத்தையும் இசையையும் ஒரு காக்டெய்ல் ஆக்கி வானியல் சார்ந்த தரிசனங்களைப் பெற முடியும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக அவர் நம்பியிருக்கிறார். அது சார்ந்த பல பரீட்சார்த்த முயற்சிகளையும் செய்து பார்த்திருக்கிறார். அவை என்னவென்ற விவரம் சரியாகக் கிடைப்பதில்லை.

இந்த மனிதர் ஏன் இலக்கியத்தை விட்டு வைத்தார் என்றுதான் அவரைப் பற்றிப் படிக்கும்போது தோன்றியது. ஏ ஸ்கொயரும் பி ஸ்கொயரும் எக்கேடு கெடட்டும். இவ்வளவு ஆர்வங்கள் உடைய ஒருவர், எழுதலாம் என்று நினைக்காமல் மதம் தொடங்கி போதிக்க நினைத்ததைப்  புரிந்துகொள்ளவே முடியவில்லை.

அப்புறம் அந்த அவரைக்காய்.

பித்தகோரஸுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அவரைக்காய் ஒரு கெட்ட காய். அசப்பில் அது மாமிசம் போலவே தோற்றமளிக்கிறது. என்றால், அது தாவரமே என்றாலும் உண்ணத்தகுந்ததல்ல என்று தீர்மானமாகச் சொன்னார். பித்தகோரஸுக்கு இந்து மதத்தில் உள்ளதைப் போல மேல் உலகம்-பூமி-கீழ் உலகம் என்கிற கருத்தக்கத்தில் தீவிர நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்த அவரைக்காய், பூமிக்கும் அதற்குக் கீழான உலகங்களுக்கும் வேர்களின் வழியே பாதை அமைக்கிறதென்று அவர் மனப்பூர்வமாக நம்பினார். தாம் நம்பியதைத் தமது சீடர்களுக்கும் சொல்லி, போகிற இடங்களில் பார்க்கிற அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்; யாரும் அவரைக்காயைச் சாப்பிட வேண்டாம் என்று அச்சுறுத்தி அனுப்பி வைக்கும் அளவுக்கு அதில் அவர் தீவிரம் கொண்டிருந்தார்.

அவரது மரணம் குறித்துத் தெளிவான சரித்திரத் தகவல்கள் இல்லை. ஆனால் பல்வேறு கதைகள் இருக்கின்றன. அவற்றுள் அவரைக்காய் கதையும் ஒன்று.

பித்தகோரஸின் கருத்துப்படி, அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் குறுக்கே கடந்து போகக் கூடாது. அந்த வயலைக் கடப்பது என்பது முன்னோர்களின் ஆன்மாவை மிதித்துச் செல்வது போன்றது என்று அவர் சொன்னார்.

அப்படிப்பட்டவர் ஒரு சமயம் அவரது எதிரிகளிடம் சிக்கிக்கொண்டார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு தரப்பட்ட எதிரிகளால் துரத்தப்பட்டுக்கொண்டே இருந்த பித்தகோரஸை அவரது சீடர்கள்தாம் ஆபத்தின்றி பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பம். எங்கோ ஓரிடம். சீடர்களுடன் அவர் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். கைது செய்து இழுத்துச் சென்று அடைத்து வைத்தார்கள்.

விடிந்தால் கொன்றுவிடுவார்கள். எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று சீடர்கள் முடிவு செய்து, ஏதோ ஓர் உபாயத்தைக் கண்டறிந்து பித்தகோரஸின் கட்டுகளை அவிழ்த்து, அவரைத் தப்பித்து ஓடிவிடச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி ஓடிக்கொண்டிருந்த பித்தகோரஸ், ஓரிடத்தில் மிகப்பெரிய அவரைத் தோட்டம் ஒன்றை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

அதைக் கடந்தால், உயிர் பிழைத்துவிடலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் கொள்கை என்ன ஆவது? அவரை பயிரிடப்பட்டிருக்கும் வயல்வெளியைக் கடந்தால் அது முன்னோரின் ஆன்மாவை மிதிப்பதற்குச் சமமல்லவா?

செய்வதறியாமல் பித்தகோரஸ் குழப்பத்துடன் அப்படியே நின்றுவிட்டார். இப்போது, துரத்தி வந்த எதிரிகள் தாவிப் பிடித்து அவரைக் கொன்றுவிட்டார்கள்.

இது வெறும் கதையா, உண்மையிலேயே பித்தகோரஸின் முடிவு இப்படித்தான் நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் சாகவிருக்கும் தறுவாயிலும் கொள்கையை விட்டுத்தர மனமில்லாத ஒரு மனிதன் எப்பேர்ப்பட்டவனாக இருந்திருப்பான்!

எனக்குக் கணக்கு வராது. அறிவியல் பிடிக்காது. வானியலெல்லாம் மழை வருமா வராதா என்று வெதர் ஆப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளும் அளவோடு சரி. தத்துவங்களை முற்றிலுமாக வெறுப்பவன். மதத்தின் மீது  அறவே நம்பிக்கை இல்லாதவன். எனவே, எந்த விதத்திலும் பித்தகோரஸை நினைத்துக்கொள்ள நியாயமே இல்லாதவன் ஆகிறேன். ஆயினும் இந்த ஒரு கதை என்னை அவர்பால் சுண்டி இழுத்துக்கொண்டே இருக்கிறது.

என்றைக்காவது பித்தகோரஸை அல்லது அவரைப் போன்ற ஒருவனை வைத்து ஒரு நாவல் எழுதலாம். ஆனால் எனக்கு நன்றாகத் தெரியும், ஒருவேளை அது நடக்குமானால் என் நாவலின் நாயகன் அவரைக்காயை வெறுக்க மாட்டான்.  கொத்தவரங்காயைத்தான் வெறுப்பான்.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சகுந்தலா தேவி

அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார்.

  •  

மகாத்மா காந்தி சிகரெட்

Pa Raghavan

ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம்.

ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. இது விஷயத்தில் முன்னொரு காலத்தில் அநியாய அழிச்சாட்டியமெல்லாம் நடந்திருக்கும் போலிருக்கிறது.

பெயர் தெரியாத ஒரு சிகரெட் கம்பெனி, ‘மகாத்மா காந்தி சிகரெட்’ என்றொரு பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. எந்த வருடத்திலிருந்து எப்போது வரை அது இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் 1921 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியான யங் இந்தியாவில் காந்தி இது குறித்து ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். மது, சிகரெட் இரண்டின் மீதும் தனக்குள்ள ஒவ்வாமையை விரிவாக எடுத்துச் சொல்லி, சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த பிராண்டை நிறுத்திக்கொள்ளவோ, மக்கள் அதைப் புறக்கணிக்கவோ செய்தால் மிகுந்த நன்றி சொல்வேன் என்று பணிவுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் குறிப்பில் இருந்து நான் எடுத்துக்கொண்ட விஷயங்கள் இரண்டு.

1. 1921லேயே காந்தி, மகாத்மா என்று அறியப்பட்டிருக்கிறார்.

2. காந்தியை விளம்பர மாடலாகக் கொண்டால் பொருள் விற்கும் என்று அப்போதே வியாபாரக் கணக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள காந்தியின் மறுப்பைப் பாருங்கள். மறுப்பு-எதிர்ப்பு-கண்டனம்தான் சாரம். ஆனால் சற்றும் பதறாத இயல்பும் நிதானம் தவறாத மொழியும் நிச்சயமாகத் திகைப்பூட்டும்.

யங் இந்தியா, ஜனவரி 12, 1921 இல் வெளியானது.

நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் வெற்றிமாறன் ஒரு படம் எடுக்கிறார் என்று தெரிய வந்தபோது எவ்வளவு எரிச்சலடைந்தேன் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். வெட்கத்துடன் இம்மனிதரின் தாள் பணிவதல்லாமல் செய்வதற்கு வேறொன்றுமில்லை.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

 


ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.

விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.

 தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.

சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் நினைவுகூர்கிறார்.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் குறிப்பிடுகிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.

கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’.

சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

நாம் கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.

(நன்றி: அகழ் இணையத்தளம்)

  •  

மதாரின் குழந்தை

 


சஜ்தாவில் குழந்தை - மதார்

 

தொழத் தெரியாத குழந்தை

தொழுகையாளிகளின்

வரிசையில்

நிற்கிறது

 

தக்பீர் கட்டுகிறது

சூரா ஓதுகிறது

கேட்பதைச் சொல்லி

செய்வதைப் பார்த்து

 

தொழுகை முடிந்து

உருகி அழும்

ஈமான் தாரியின் கண்ணீரை

அதற்கு நடிக்கத் தெரியவில்லை.

-    

       அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில் (https://akazhonline.com/?p=8605) ‘சஜ்தாவில் குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

     சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது.

மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி பரவலாக கவனிக்கப் பெற்றது. 


சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள் தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம் தெரிவித்தேன். 

மதாரிடம் நான் சொன்ன அம்சங்களிலே சிறிய புதுமைகளையும் சிறிய சாதனைகளையும் படைத்துவிட்டு, தேங்கி நின்ற கவிஞர் முகுந்த் நாகராஜன் என்று, இதற்கு முன்பு  சொல்ல முடியும். ஜான்சன் பேபி சோப், ஹக்கீஸ், ஃபேரக்ஸ், செரிலாக், க்ரேயான் பென்சில் டப்பாக்கள் போன்ற குழந்தைகள் உபயோகப் பொருட்களின் விளம்பரப் படங்கள், முகுந்த் நாகராஜனின் கவிதைகளை இடம்பெயர்த்துவிட்டன.

‘வெயில் பறந்தது’ தொகுதிக்குப் பிறகு மதார் அடைந்திருக்கும் திருப்பம், வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் கவிதை ‘சஜ்தாவில் குழந்தை’, மதாரின்  எளிமையிலிருந்து கிளைத்து உலகின் கனத்தை வரித்துள்ளது.

தொழத் தெரியாத குழந்தை, தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது என்ற முதல் வரியிலேயே மௌனம் இறங்கிவிடுகிறது.

யுத்தம் தெரியாத குழந்தை, யுத்ததாரிகள் மோதும் களத்தில் நிற்கிறது என்று இதை வெளியிலிருந்து பிரதிபலிக்கலாம்.

உலகம் வந்து சேர்ந்திருக்கும் உச்சபட்ச அறிவு, பகை மூர்க்கம், பிளவுவாதம், வெறுப்பின் யுத்த களத்தில் பரிதாபமாக இன்று நிற்பவர்கள் குழந்தைகள் தான்.

இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தைதான் மதாரின்  ‘சஜ்தாவில் குழந்தை’ கவிதையில் தொழுகையில் பங்கேற்கிறது.

இந்த உலகம் செய்யவேண்டியதையெல்லாம் செய்யத் தேவையில்லாத குழந்தைகள், அதைத் திரும்பச் செய்வது போல பள்ளிவாசலில் எல்லாவற்றையும் செய்கிறது மதாரின் குழந்தை.

தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் அழுகையை மட்டும் அந்தக் குழந்தைக்கு நடிக்கத் தெரியவில்லை.

அழுகையை நடிக்கத் தெரியாத குழந்தையின் அந்த இயல்பு எனக்கு இப்போது இன்று இக்காலகட்டத்தில் ஆறுதலாக இருக்கிறது.

ஏனெனில் எந்த நியாயமுமே இல்லாமல் குழந்தைகளை பெரியவர்கள் உலகெங்கும் அழவைக்கும், அழித்தொழிக்கும் கையாலாகாத கொடுங்காலம் நம்முடையது.

மதாரின் கவிதையில் உள்ள குழந்தை, அழுகையைப் பாவனையாகக்கூடப் பழக வேண்டாம் என்பதுதான் எனது இப்போதைய ஒரே பிரார்த்தனை.

மதாரின் புதிய கவிதை நூலான ‘மாயப்பாறை’ வரும் 18ஆம் தேதி வெளியீடு காணும் தருணத்தில் அவருக்கு என்னுடைய பிரியம் நிறைந்த வாழ்த்து.

  •  

நண்பர் அரவிந்தன்


எதிர் 

பிளாட்பாரத்தில்

இறந்து

இருண்டு கிடக்கும்

எலியின்

வாலருகே 

மினுங்கிக்கொண்டிருக்கிறது

அன்பைவிடச்

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங் என்ற ஓசையோடு

சாலையில் கால் வைக்க முடியவில்லை

முன்னும் பின்னும்

முரட்டு வாகனங்கள்

இடைவேளை இன்றி

ஒரு நாள்

ஒரு நூற்றாண்டு

பல நூற்றாண்டுகள்

திடீர் இடைவெளியில்

குறுக்காக ஓடி,

ஏறினேன்.

எதிர் பிளாட்பாரத்தில்

தவறிக் கிடக்கும்

நீர்த் தாவரத்தின்

கசிவில்

மினுங்கிக் கொண்டிருக்கிறது,

அன்பை விட

சிறந்த உணர்ச்சி ஒன்று

க்ளிங் ளிங்

என்ற ஓசையோடு. 

- தேவதச்சன்


தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார். 

அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது.

அன்புக்கும் மரியாதைக்கும் வித்தியாசம் என்ன? அன்புக்கும் மரியாதைக்கும் இடையில் உள்ள பாலம் எது? 

நாகரிகம் என்று எனக்குப் பதில் கிடைக்கிறது. 

அன்புக்கும் நாகரிகத்துக்கும் இடையே உள்ள பாலம் அருளால்  கட்டப்படுகிறது என்று கருதுகிறேன்.

அன்பெனும் எலும்பில் இன்னும் விலங்குத் தன்மையின் ரத்தமும் நிணமும் உலராமல் இருப்பதாலேயே அன்பு எப்போதும் கொலைக்கருவியாகும் வாய்ப்புகளை நாம் பார்த்துவருகிறோம்.   

மரியாதை என்பது அதனால் எலும்பாக அன்புக்கும் தூரத்தில் உலர்ந்த மணல்பரப்பில் கிடக்கிறதென்று நினைக்கிறேன். 

மரியாதை துளியும் இல்லாத இடத்தில் அபரிமிதமான அன்பு நஞ்சுதான். அறிவாலும் அருளாலும் சலிக்கப்படாத அன்பு பேராயுதமாக மாறக்கூடிய வாய்ப்புடையது. 

அன்பு உலர்ந்தபின்னர் மனிதர்கள் சேர்ந்து ஓரளவு சமாதானத்துடன் உய்வதற்கு உயவுப்பொருளாக மரியாதையே இருக்க இயலும்.

சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வடமாநிலம் ஏதோவொன்றில் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்னதானத்தில், உணவுக்காக வந்த முஸ்லிம் கிழவியிடம் ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உணவளிக்க முடியுமென்று உணவுகொடுக்காமல் துரத்தும் வீடியோ ஒன்று மிகுந்த மனத்தொந்தரவை அளித்தது 

பசியைத் தவிர வேறு பிணியே இல்லை என்றும் உணவைத் தவிர வேறு கடவுளே இல்லையென்ற போதத்தையும் விதைத்த, சீவ காருண்யத்தையே ஒழுக்கமாகப் பார்த்த வள்ளலார் போன்ற ஞானிகள் பிறந்த மண்ணிலிருந்து இதுபோன்ற வெறுப்புக் குரல்கள் தேசமெங்கும் கேட்கத் தொடங்கியிருக்கும் வேளையில் அன்பென்ன? அருள் என்ன? அறிவுதான் என்ன? மரியாதை என்ன? என்பதையெல்லாம் நாம் மீண்டும் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

ஒரு இனத்தின் மேல் கொண்ட வெறுப்பால் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை சித்திரவதை முகாம்களில் பறிகொடுத்த யூத இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தேசம் ஒன்று, ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனக் குழந்தைகள் மீது கொலை பாதகத்தை ஏவிவிட்டு, ஒண்டி இருப்பதற்குக்கூட ஒரு மூலையை அனுமதிக்காமல் துரத்திக் கொன்று கொண்டிருக்கும் காட்சிகளை தினசரிப் பார்த்துக் கொண்டிருக்கும் நமது இந்தக் கையாலாத காலத்தில்

 அன்பென்ன? அருள் என்ன? நாம் இதுவரை வந்தடைந்திருக்கும் அறிவென்ன? தத்துவம்தான் என்ன? கற்றுக் கொண்ட மரியாதைதான் என்ன? என்பதை குற்றவுணர்வோடு பரிசீலிக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.

000

சுந்தர ராமசாமி நாகர்கோவில் பாம்பன் விளையில் வருடம்தோறும் நடத்திவந்த நண்பர்கள் சந்திப்பில், எனது 19 வயதில் கல்லூரிப் பட்டப்படிப்பின் முதலாண்டில் அரவிந்தன், அறிமுகமானார். அப்போது இந்தியா டுடே ஆசிரியர் குழுவில் இருந்தார். யோகா உடற்பயிற்சியைச் சொல்லிக் கொடுக்கும் அளவு தேர்ந்தவர் என்பதால் அரவிந்தனின் உடல்வாகும் முகமும் கூட பெரிதாக மாறவில்லை என்பதே எனது எண்ணம்.

கொஞ்சம் ஒடுங்கியிருந்த முகம் சமீப பத்தாண்டுகளில் பூசியுள்ளது மட்டும் மாற்றம் என்று நினைக்கிறேன்.

குற்றாலத்தில் நடைபெற்ற கவிதைப் பட்டறை தொடர்பில் அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்று இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. பெர்முடாஸ் அணிந்து இன்று வயோதிகர்களாகியிருக்கும் அன்றைய இளம் எழுத்தாளர்கள் பட்டறையில் பங்கேற்றது அதிர்ச்சிகரமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கலக உடை என்று பெர்முடாஸுக்கு நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது அந்தக் கட்டுரையில். சுபமங்களாவில் வந்த ஒரு சிறுகதையையும் அக்காலகட்டத்தில் படித்திருக்கிறேன். அரவிந்தனுக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமியும் கமலா அம்மாவும் அக்கறையுடன் அரவிந்தனது மணப்பெண் தேடல் குறித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

சுந்தர ராமசாமி ஆசிரியராகக் கொண்டுவந்த காலச்சுவடை நிறுத்தி 2,3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணனும் லக்ஷ்மி மணிவண்ணனும் மனுஷ்ய புத்திரனும் சேர்ந்து திரும்ப காலச்சுவடைக் கொண்டுவந்த போது அதன் தன்னார்வத் தொண்டர்களாக இருந்தவர்களில் நானும் ஒருவன். காலச்சுவடு பதிப்பகமாக, வர்த்தக நிறுவனமாக கிளைவிட்ட போது, எனது இயல்பின் அடிப்படையில் நான் அங்கிருந்து படிப்படியாக விலகி வெகுதூரம் வந்துவிட்டேன். சுந்தர ராமசாமி என்ற முதல் ஆசிரியரின் மீதான அபரிமிதமான மரியாதை, அவர் எங்கள் ஆளுமைக்கு அளித்த ஊட்டம், கமலா அம்மாவும் அவர்கள் வீடும் அந்தக் காலகட்டத்தில் கொடுத்த அடைக்கலம் மட்டுமே இப்போது எனக்கு சுந்தர விலாஸுடனான ஞாபகத் தொடர்பு.

அரவிந்தன் அப்போது தொடங்கி இப்போதுவரை காலச்சுவடின் ஓர் அங்கமாக இருக்கிறார். காலச்சுவடு கண்ணனுக்கும் நண்பர்களாகிய எங்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், புகார்கள், பரஸ்பரமாகப் பகிர்ந்துகொண்ட வன்மங்கள் எல்லாவற்றையும் அரவிந்தன் அறிந்தாலும், அவற்றில் அவரது தரப்பை எங்களிடம் பகிர்ந்துகொண்டாலும் ஒருபோதும் என்னை விலக்க முயன்றதில்லை.எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அவர் எளிதில் பெரிய நிலைப்பாடுகளுக்குப் போகக்கூடியவர் அல்ல.   

000

 எனது பட்டப்படிப்பு முதலாண்டின் இறுதியிலேயே முறிந்து டிஎம்இ படிப்பதற்காக திருக்கழுகுன்றத்துக்கு வந்து படித்து முடித்து திருநெல்வேலியில் ஓராண்டு இருந்துவிட்டு வேலைக்காக தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அன்னம்மாள் மேன்ஷனுக்குக் குடியிருக்க வந்தபோதுதான் அரவிந்தன் எனக்கு நெருக்கமானார். வேலை தேடும் முகாந்திரத்தில் தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்து சென்னைக்கு வந்துவிட்டேன் என்பதைச் சொன்ன இடங்களில் ஒன்று அரவிந்தன் வேலை பார்த்த டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இந்தியா டுடே அலுவலகம்.

கவிதா முரளிதரன், முரளியோடு சேர்ந்து அரவிந்தன் எனக்கு தேநீர் வாங்கித் தந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள வீட்டுக்கும் வரலாம் என்று சொன்னார்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டைத் தாண்டி அயோத்தியா மண்டபம் போகும் வழியில் வலது பக்கம் திரும்பும் வீதியில் அரவிந்தன் திருமணமாகி ஸ்ரீதேவியுடன் இருந்த வீட்டில் தளவாய், அஜயன் பாலா போன்ற நண்பர்கள் மாலைகளில் கூடுவது வாடிக்கையாக இருந்தது. சினிமா இயக்குனரும் நண்பருமான தி ஜா பாண்டியராஜன் எழுதிய சில சிறுகதைகளும் இந்தியா டுடேவில் பிரசுரமானது. ஸ்ரீதேவியின் சமையலில் சில வேளைகள் சாப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த கை அவருடையது.

அரவிந்தனின் வீட்டில் தளவாய், அஜயன் பாலா சிறுகதைகளை புத்தம்புதிதாக எழுதி கொண்டுபோய் கொடுத்து சில கதைகள் சுடச்சுட இந்தியா டுடேயில் பிரசுரமாவது நடந்திருக்கிறது. அப்போது இந்தியா டுடேயில் சிறுகதை வருவது மிகவும் பெருமிதமாக கருதப்பட்டது. ஆதிமூலம், ஆர் பி பாஸ்கரன் தொடங்கி மாரிமுத்து வரையிலான நவீன ஓவியர்களின் ஓவியத்தை பிரத்யேகமாக வாங்கி அந்தச் சிறுகதைகளைப் பிரசுரிப்பது வழக்கமாக இருந்தது. இந்தியா டுடேயில் வந்த சிறுகதைகளுக்கு ஒரு தனிமதிப்பை உருவாக்கியதிலும் இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களின் உள்ளடக்கத்திலும் அதன் ஆசிரியராக இருந்த வாஸந்தியோடு அரவிந்தனுக்கும் முக்கியப்பங்கு இருந்தது. லா.ச.ரா, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, சூடாமணி, அம்பை, கி.ரா,அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை நிறைய சிறந்த சிறுகதைகள் எனது மாணவப் பருவத்தில் அறிமுகமானது இந்தியா டுடே வழியாகத் தான்.   

ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புத் தொகையும் அப்போதைய பொருளாதாரத்தில் மிகவும் அதிகமான தொகை. நான் அந்த ஆயிரத்து 500 ரூபாய்க்காகவே சில சிறுகதைகளை எழுத மிகவும் பிரயத்தனப்பட்டு முயன்றிருக்கிறேன். இந்தியா டுடேயில் சிறுகதை வருவதைக் கனவாகவும் கண்டிருக்கிறேன். எனது கதை எதுவும் பிரசுரமாகும் தகுதியை அடையவில்லை. இந்தியா டுடே இலக்கிய மலர் ஒன்றில் அரவிந்தன் என்னிடம் வாங்கிப் பிரசுரமான எனது ஆரம்பகாலத்து நல்ல கவிதைகளில் ஒன்றான ‘அம்மா நீங்கிய அறையில்’ கவிதைதான் பரவலாக என்மீது கவனத்தை ஏற்படுத்தியது. 

000

என் அம்மாவிடம் சென்னைக்குப் போய் வேலை தேடிவிடலாமென்று சொல்லி வந்துவிட்டேனே தவிர ஒரு வேலை கிடைப்பது அத்தனை எளிதாக இல்லை. அரவிந்தன் மூலமாகத்தான் ஒரு டேட்டா எண்ட்ரி அலுவலகத்தில் பணி கிடைத்தது. 

அப்போதுதான் அரவிந்தனுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. 

000

டேட்டா எண்ட்ரி வேலை பறிபோனபின்னர் 1999 வாக்கில் சுட்டி விகடனில் சேர்ந்தபின்னர்…படிப்படியாக அரவிந்தனுடன் எனக்கு தொடர்பு குறைந்துவிட்டது…மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு 2010இல் நமது சென்னை பத்திரிகையை அவர் நடத்திக் கொண்டிருந்தபோது நானும் நிலையான வருவாய் இன்றி 50 நாட்களுக்கு மேல் ஒரு முறை சம்பளம் தரும் விசித்திர நிறுவனமான தி சன்டே இந்தியனில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மொழிபெயர்ப்புப் பணிகளுக்காக அரவிந்தனுடன் மீண்டும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. சுபகுணராஜன் நடத்திய காட்சிப்பிழை பத்திரிகையின் பணிக்காகவும் அரவிந்தனின் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தோம்.

இந்தப் பருவத்தில் ஏற்பட்ட பணிரீதியான உறவுகள், உரையாடல்கள் மீண்டும் ஒரு நெருக்கத்தை எட்டிய இரண்டாண்டுகளில்தான் இந்து தமிழ் திசை பத்திரிகை தொடங்குவதைப் பற்றி என்னிடம்அரவிந்தன் சொன்னார். என் சுய விவரத்தை எனது அடுத்த தெருக்காரராக இருந்த அசோகமித்திரன் கேட்டு வாங்கி அவர் மகனிடம் கொடுத்திருந்த நிலையில் அரவிந்தன் முக்கியமான பொறுப்பேற்பதாகச் சொல்லி எனக்கு நம்பிக்கையை அளித்து, அழைத்தும் சென்றுவிட்டார்.

அரவிந்தன் ரெஃபரென்ஸ் செய்தபின்னர் ஆங்கில இந்துவைச் சேர்ந்தவர்கள் தீவிரமான நேர்காணல் செய்தபின்னரே என்னைத் தேர்ந்தார்கள் என்றாலும் அரவிந்தன் செய்த உதவியே எனது பொருட்படுத்தத்தக்க 10 ஆண்டு பத்திரிகைப் பணிக்கு ஆதாரமாக இருந்தது. கவிஞனாக என் அடையாளமே தெரியாமல் எனது கட்டுரைகளால் அடையாளம் காணும் பல வாசகர்களை நான் இந்து தமிழ் திசை வாயிலாகவே பெற்றேன.

இந்து தமிழ் திசையில் அரவிந்தன் பொறுப்பு வகித்த இணைப்பிதழ் பிரிவிலேயே தான் எனக்கு பணி. ஆனாலும், அரவிந்தனுடன் கூடுதல் உரிமையையும் அதனால் கூடுதல் விமர்சனத்தையும் சொல்லக்கூடியவனாகவே பக்குவமற்றே நடந்திருக்கிறேன். அவரது எல்லைக்குட்படாத விஷயங்களையும் அவரைப் பொறுப்பாக்கி நான் கடிந்திருக்கிறேன். ஒருநாள் கூட நீ செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என்றோ தனிப்பட்ட வகையில் பழிவாங்கும் நடவடிக்கையிலோ இறங்கியதேயில்லை. 

அவர் எடிட்டோரியல் ரீதியாக ஒரு முடிவை எடுத்தபோது அந்த முடிவு என் நலன் தொடரபில்லாததாக இருந்தாலும் அந்த முடிவு சரியல்ல என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறினேன. அவர் என்னுடைய தரப்பைக் கேட்டாலும் அந்த முடிவில் உறுதியாக இருந்தார். பத்து நாட்கள் அதுதொடர்பில் எங்களுக்குள் உரையாடல் நடந்துகொண்டேயிருந்தது. ஆனால் அவர் வழிக்கு வரவில்லை. நான் அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் தொடர்ந்தேன். ஒருநாள் முதல் மாடியிலிருந்து படியில் அதைப்பற்றி பேசிக்கொண்டே இறங்கும்போது திட்டமேயில்லாமல ஒரு காரியத்தைச் செய்தேன். அங்கே காமிரா இல்லை என்பதை மட்டும் பார்த்து அவர் கால்களில் விழுந்தேன். தயவுசெய்து இந்த முடிவை நடைமுறைப்படுத்தாதீர்கள், சரியாக வராது என்று. அரவிந்தன் என்னப்பா என்னப்பா என்று கூறி போய்விட்டார். ஆனால் எனது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டுவிட்டார்.

அந்த நிகழ்ச்சியை நான் மறக்கவே மாட்டேன். எனது நடத்தையிலேயே இல்லாத ஒரு திருப்பம் அரவிந்தனிடம் நான் செய்த செயல். நான் ஒருவரைக் காயப்படுத்துவேன். இல்லையெனில் கசந்து விலகுவேன். ஆனால் எனது நலன் அல்லாத ஒன்றுக்காக திடுக்கென்றுதான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.

அது விஷயமும் அல்ல.

அவரது முடிவையே தொடர சகல உரிமையும் அதிகாரமும் இருந்தும் தனது அதிகாரத்தை எனக்காக அவர் செயல்படுத்தவில்லை. அரவிந்தனின் மேன்மை அதுதான்.

தனது நலனுக்காக மற்றவர்களின் வாழ்க்கையையே பணயம் வைக்கும் மனிதர்களை, அவர்களது கருத்துகளை துச்சமாகக் காலில் போட்டு மிதிக்கும் மேலதிகாரிகளைத் தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.

இந்து தமிழ் திசை நாளிதழ் இணைப்புகளில் சில இணைப்புகளுக்கு பெயர் வைத்தது அரவிந்தன்தான். ஆனந்த ஜோதி அவர் வைத்த பெயர்தான். இந்தியா டுடே இலக்கிய மலர் அனுபவத்தில் சீரியசான வகையில் தீபாவளி மலர்களை கனமான உள்ளடக்கத்துடன் கொண்டுவந்ததில் அரவிந்தனின் பங்கேற்பு முக்கியமானது. புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை கிராபிக் கதையாக ஆக்கலாம் என்று போகிற போக்கில் நான் கூறியதை தொடர்ந்து சட்டகங்களுக்கு வசனங்களை எழுதச் சொல்லி ஓவியர் மருதுவிடம் பணித்து அதைக் காரியமாக்கினோம். ஒரு பெரிய கட்டமைப்பிலேயே அதுபோன்ற வேலைகளை நம்மால் சாத்தியமாக்க இயலும். 

குடி, சிகரெட் என்று எந்தப் பழக்கமும் இல்லாததாலோ என்னவோ சோர்வைக் காட்டிக் கொள்வதைக் கூடுமானவரைத் தவிர்ப்பார். யோசனைகள், திட்டங்களைக் கொட்டிக் கொண்டே இருப்பது மூச்சுமுட்டும். 

மொழிபெயர்ப்பை தட்டச்செழுத்தரின் வேகத்துடன் செய்யக்கூடியவர். எனது மொழிபெயர்ப்புத் திறன் மேம்பட உதவிய வெகுசிலரில் ஒருவர் அரவிந்தன்.  

 அரவிந்தனுடன் வேலை பார்த்த 8 ஆண்டு காலப்பகுதியும் நான் கண்ணியமாக மரியாதையோடு நடத்தப்பட்ட காலமாக நன்றியுடன் என்னால் சொல்லமுடியும்.

நட்பு மற்றும் அன்பின் இதத்தை வேறு வேறு இடங்களிலிருந்து கொண்டு பராமரிப்பது வேறு. அதிகாரத்தில், வேலை ரீதியாக உயர்நிலையில் இருந்துகொண்டு படிநிலையில், கீழேயுள்ள உயிரை – அதுவும் என்னைப் போன்ற சிக்கலான ஒரு நபரை - மதிப்போடு நடத்துவது என்பது மிக அரிதானது.  

000

இந்து தமிழ் திசை காலகட்டத்தில்தான் அவர் பயணம், பொன்னகரம் என்ற இரண்டு நாவல்களை எழுதினார். இரண்டையும் கையெழுத்துப் படியாகவே எனக்குக் கொடுத்தார். 

நான் அந்த இரண்டு நாவல்களையுமே மிகப் பழைய ஒரு மனம் எழுதியது என்று கடுமையாக விமர்சித்தேன்.

நேர்ப்பேச்சில் என்னிடம் வெளிப்படும் கூர்மையான விமர்சனம் படைப்பையும் தாண்டி நபரைக் கீறிவிடக்கூடியது என்பது மிகத் தாமதமாக இந்த வயதிலேயே எனக்குப் புரிகிறது. அரவிந்தனையும் நான் பல சமயங்களில் கீறியிருக்கிறேன். அவர் அதைப் பெருந்தன்மையாகவே கடந்திருக்கிறார்.

முதல் நாவலை விமர்சித்த பிறகும் இரண்டாவது நாவலையும் படிக்க கொடுத்தார். 

அந்த விமர்சனங்கள் எதையும் வேலை மீது காட்டியதில்லை. 

000

எந்திரங்களால் உருவாக்கப்படும் இசை மனிதனின் ஆழமான உணர்ச்சிகளை எப்படித் தொடுகிறது என்று ஆந்த்ரேய் தார்க்கோவெஸ்கி வியக்கிறார். சத்தம் எப்போது சந்தமாகிறது? மொழியும் ஒருவகையில் அப்படித்தான். ஒரே காலகட்டத்தில் பொதுவான சொற்களனிலிருந்து எடுத்து படைக்கப்படும் மொழி ஒருவரிடம் எப்படி தற்காலத் தன்மையைப் பெறுகிறது? ஒருவரிடம் ஏன் பழையதாக இருக்கிறது?

உள்ளடக்கத்திலா? விமர்சனத்திலா? பார்வையிலா? அனுபவத்தைப் பார்க்கும் தொலைவிலா? மனத்தடையின்மையிலா? அராஜகத்திலா? கொந்தளிப்பிலா? கொதிப்பிலா? 

சத்தம் எங்கே சந்தமாகிறது?

அன்பு எங்கே அருளாகவும் மரியாதையாகவும் நீதியாகவும் மாறுகிறது?

அரவிந்தனின் நிதானத்துக்கும் பெரிதாக அதிர்வுறாமல் தோன்றும் தன்மைக்கும் அவரது படைப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதாவென்று பரிசீலிக்க வேண்டும்.

பாலசரஸ்வதியின் வாழ்க்கை சரிதத்தை எழுதிய டக்ளஸ் நைட்டின் நூலை மொழிபெயர்த்தது, அரவிந்தனின் நினைவுகூரத்தக்க சாதனைகளில் ஒன்று. புதுமைப்பித்தனுக்கு இணையான ஒரு கலை சாதனையாளரை எனக்கு மறக்க இயலாமல் ஆக்கியதற்கு நான் அரவிந்தனுக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். 

000   

எல்லாவற்றையும் சரியாகப் பார்க்க காலவகையிலும் இடவகையிலும் தொலைவு தேவையாக உள்ளது என்ற சுந்தர ராமசாமியின் வாக்கியத்தைச் சொல்லி எனது உரையை நிறைவு செய்கிறேன். 19 வயதில் அறிமுகமான தளவாயுடன் அப்படித்தான் எனது உறவு கனிந்திருக்கிறது.

அரவிந்தனையும் அப்படிப் பார்க்க அனுமதித்த காலத்துக்கு சலாம். 

தேங்க் யூ அரவிந்தன். 

எனது கௌரவமான சென்னை வாழ்க்கையின் ஒரு அங்கம் நீங்கள். உங்களுக்கு எனது பிரியமும் அன்பும்.

இராப்பகல் இல்லாத இடத்தில் இருக்கும் வெண்ணிலா, அன்பு வெறுப்பு இரண்டுமற்ற இடத்தில் சுடரும் வெண்ணிலாதான் போல.

(டிஸ்கவரி புக் பேலஸும் பரிசல் புத்தக நிலையமும் இணைந்து நடத்திய அரவிந்தன் 60 நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட உரை)

  •  

ஓவியர் நடேஷ் மறைந்தார்


(நடேஷின்கோட்டுச்சித்திரங்கள் குறித்த கட்டுரைக்கான இணைப்பு https://www.shankarwritings.com/2021/10/eggu.html)

1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும்  கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகிவிட்டார். 

புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார். 

அலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை என்று ஞாபகம். எம் எப் ஹூசைன் போல பரந்த வெளிகளை கலைக்குப் பயன்படுத்தும் உத்வேகம் நடேஷ் உடையது.

இலக்கிய நண்பர்கள் பத்துபேர் மட்டுமே பங்குகொண்ட எனது  பதிவுத் திருமணத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் சீக்கிரம் குட்டி போட்டுடு ராஜா என்று ஆசீர்வாதம் செய்தார். எனது முதல் கவிதைத் தொகுப்புக்கு யார் பதிப்பாளர் என்பது தெரிவதற்கு முன்னரே அவரது ஓவியக் கித்தான்கள் மூன்றை நான் எனது பேக்கில் வைத்து ஓவியம், இலக்கியம் தெரியாத எனது உறவினர்களிடமும் விரித்து விரித்துக் காட்டியது எனக்கு இப்போது ஞாபகத்தில் உள்ளது. ந. முத்துசாமியின் மகனாக இருப்பினும் இலக்கியவாதிகளின் நண்பர்களாக இருந்தாலும் குறைவான புத்தக அட்டைகளிலேயே அவர் ஓவியம் இடம்பெற்றிருக்கிறது. அவரது சித்திரங்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் எனது பெயர் பலருக்கு ஞாபகமாக இருப்பதற்குக் காரணமான ‘சிங்கத்துக்குப் பல் துலக்குபவன்’ கவிதையைக் கொண்டாடி அவர் வரைந்து தந்த சித்திரம் அந்தப் படைப்புக்கு கூடுதல் வலுவைத் தந்தது. தீராநதி இதழில் அந்தப் படத்துடன் சேர்ந்தே வெளியானது. 2001இல் வெளிவந்த எனது முதல் தொகுப்பான மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுதியின் அட்டையும் என் கவிதைகளின் பயணமும் அவருடைய ஓவியத்திலிருந்தும் தொடங்கியது எனது பேறுதான். தமிழின் அபூர்வமான சிறுகதைத் தொகுதியான ந. முத்துசாமியின் நீர்மை தொகுதிக்கு நடேஷ் வரைந்த கோட்டோவியம் இன்றும் வலுவான உணர்வை அளிப்பது. தந்தையின் உள்குணத்தையும் சேர்த்து ந.முத்துசாமிக்கு ஆதர்சமாக தத்துவஞானி குர்ஜிஃப்பின் முகமும் உள்ளே இருக்க வரைந்திருப்பார். சாரு நிவேதிதாவின் நேனோ சிறுகதைத் தொகுதிக்கு வரைந்த அட்டைப்படமும் வலுவானது. மௌனியின் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வரைந்த அட்டைப்படமும் முக்கியமானது. 


நடேஷ் எனக்கு அறிமுகமானதற்குப் பிறகுதான் ந. முத்துசாமியும் அவர் மனைவியும் எனக்கு அவர்கள் வீட்டில் அறிமுகமானார்கள். ந. முத்துசாமி, நடேஷ், கோணங்கி, நான் நால்வரும் ஒரு மாருதி வேனில் நகரத்தில் குடித்துக் கொண்டே பேசியபடி அலைந்து திரிந்த ஒரு இரவு மறக்க இயலாதது. 2004-2005 ஆக இருக்கலாம். வள்ளுவர் கோட்டம் அருகே வேலு மிலிட்டரி ஹோட்டல் பாரில் எங்கள் சாயங்காலம் தொடங்கியது. அதற்குப் பிறகு மகாத்மா காந்தி சாலையில் உள்ள காவேரி ஒயின்ஸுக்கு வந்துசேர்ந்தோம். ந. முத்துசாமிக்கேயுரிய ஆகிருதியும் கம்பீரமும் போதையில் அதிகரித்திருந்தது. சொல்லுங்க என்பது போன்ற தொனியில் மாருதி காரின் சீட்டை ஒரு அரியணையாக அந்த இரவில் மாற்றியிருந்தார்.

வேளச்சேரியில் இயங்கிவந்த எம் டி முத்துக்குமாரசாமியின் தேசிய நாட்டார் வழக்காற்றியல் உதவி மைய வளாகத்தில், எம்டிஎம்மின் நெருங்கிய தோழர் என்பதால், நடேஷின் வருகை அடிக்கடி நிகழ்ந்ததும் அவருடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.

ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக கவிதை மொழியில் தனது அவதானிப்புகளை டைரிக் குறிப்புகளைப் போல எழுதியவர். முத்துசாமியின் நாடக மொழி உச்சம் கொண்ட, அதேநேரத்தில் நேர்கோட்டுத் தன்மையில்லாத உரைநடை அது. அவற்றில் சிலவற்றை மொழிபெயர்த்து நான் மணல் புத்தகம் இதழிலும் பிரசுரித்துள்ளேன். புலிகளைத் தொடர்ந்து ஓவிய வரிசையாக இட்டபோது புலி என்ற உருவத்தின் மீது எனக்கும் பெரிய மயக்கம் ஏற்பட்டது. அப்போது ‘புலிதான் எனது படிமம்’ என்ற கட்டுரையை மணல் புத்தகத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது கோட்டுச் சித்திரங்களை ஆங்கிலத்தில் ‘Before becoming blind’ என்ற நூலை வெளியிட்டு அது எனது கைகளுக்கு புத்தம்புதிதாக வந்து சேர்ந்தபோது அதன் தலைப்பு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நடேஷுடனான பழக்கம் குறைந்தநிலையில் எம் டி முத்துக்குமாரசாமி தான் அவருக்கு நீரிழிவால் கண் பார்வை வேகமாகக் குறைந்துவருவதைச் சொன்னார்.

அந்த நூலை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் இடம்கேட்டு சி. மோகன், எம் டி முத்துக்குமாரசாமி, ஏ எஸ் பன்னீர்செல்வம், அபராஜிதன் எல்லாரையும் ஒருங்கிணைத்து  ‘Before becoming blind’ நூலுக்கு ஒரு நண்பர்கள் சந்திப்பைக் கூட்டம்போல நான் ஏற்பாடு செய்ததுதான் எனக்குக் கடைசியாக இருக்கும் ஒரு நிறைவு. ஓவியனுக்கு கண் தெரியாமல் போகும் வேதனை எப்படியானது?

ஓவியர் நடேஷைக் கடைசிவரை எம் டி முத்துக்குமாரசாமி பார்த்துவந்தது எனக்குத் தெரியும். கூத்துப்பட்டறைக்காக தனது கவிதைகளை அக்காலகட்டத்தில் நாடகமாக்கமும் செய்துகொண்டிருந்தார் எம் டி எம். அவருக்கு நடேஷின் மறைவு பெரும் இழப்பு.

ஆதிமூலம் போல, மருது போல ஒரு பெரிய கலை ஆளுமையாக இன்னும் அதிகமாக பொதுவெளியில் அறியப்பட்டிருக்க வேண்டியவர் நடேஷ். நவீன நாடகங்களுக்கு லைட்டிங் அமைப்பதில் முக்கியமான ஆளுமையாகப் பார்க்கப்படுபவர். புதிய கலைவடிவமான இன்ஸ்டாலேஷன் என்னும் நிர்மாணக் கலையில் நடேஷ் இங்கே முன்னோடி.

நடேஷ் மற்றும் ஷங்கர். புகைப்படம் : ஸ்நேகிதன்

முத்துசாமி இறந்துபோய், அம்மாவும் இறந்துபோய் அவர்கள் ஆதரவிலேயே இருந்துவந்த நிலையில் பாதி சீவன் போன நிலையிலேயே நான் நடேஷை இரண்டு வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். ஒரு காலையும் எடுத்திருந்தார்கள். அவர் வரைந்து வைத்திருந்த சில கோட்டுச் சித்திரங்களை அனுமதி பெற்று பொறுக்கி வந்தேன். நன்றி நடேஷ். போய் வாருங்கள். 

இந்து தமிழ் திசை நாளிதழில் பணியாற்றிய போது ஆசையுடன் செய்த நேர்காணல்களில் ஒன்று நடேஷ் உடையது…அதில் அவர் தனது முழு குணம் மணத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் உள்ளது. அதுவே இன்றைய ஆறுதல்.


“எனது சித்திரம் என் வாழ்வை நடத்த நான் அனுமதித்தேன். படைப்புக் காரியத்தில் அடைக்கல உணர்வே கிடையாது. வேலை முடிந்தவுடன் அங்கே உரிமைத்துவம் போய்விடுகிறது” என்று சொன்ன நடேஷ் தனது வாழ்க்கையிலிருந்தும் உரிமையைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்.

நடேஷின் நேர்காணல் இது...

நீங்கள் எப்போது ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்?

நான் மூணுவயதில் படம் போட ஆரம்பிச்சேன். என்னோட அம்மா இல்லையில்லைன்னு சொல்றாங்க. ஐந்துவயதுன்னு சொல்றாங்க. அம்மா சொல்றதுதான் சரியாக இருக்கும்.

அந்தக் காலத்துல சாக்பீஸ் கொடுக்க மாட்டாங்க. மாக்கல் சட்டி உடைந்த சில்லை எடுத்துட்டு தரை, சுவர் எல்லாத்திலேயும் கிறுக்கிக் கொண்டே இருப்பேன். சுத்தமா இருக்கிற சுவர் எனக்கு அந்த வயசுல பிடிச்சதே இல்லை. சிதிலமா, உடைஞ்சு கிடக்கிற சுவர்கள் எனக்குப் பிடிக்கும். அதில் உள்ள வடிவங்கள் என்னை ஏதேதோ செய்துகொண்டிருக்கும்.

உங்களுக்கு ஆசிரியர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?

எனக்கு ரத்தமும் சதையுமாகத்தான் குருக்கள் இருக்க வேண்டும். என்னுடைய இயல்புக்கேற்ற குரு என்றால் அவன் லியானர்டோ டாவின்சி தான். அவன் என்னைப் போல எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறான். ஓவியம் மட்டும் இல்லாம அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அவன் ஈடுபட்டிருக்கிறான். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஐரோப்பிய ஓவிய முறைகள், நீர்வண்ண ஓவியங்களை வரைவது எல்லாவற்றையும் படிச்சிருக்கேன். இங்கே என்னுடைய குருமார்னு சொன்னால் ஆர்.பி.பாஸ்கரன், ஆதிமூலம் போன்றவங்கதான். ஆர்.பி.பாஸ்கரன் தான் கோட்டை எங்கே உடைக்கணும்னு கற்றுத்தந்தார். ஸ்டில் லைஃப் ஓவியத்தில் ஒரு தட்டை வரையும்போது, கோட்டை எங்கே தூக்கணும்னு அவர்தான் சொன்னார். தட்டோட வடிவத்தை உணர்த்துகிற கோடு எங்கே இருக்குது என்பதை அவர் சொல்லிக் கொடுத்தாரு. அதுவரை புத்தகக் கட்டோட அலைஞ்சுகிட்டிருந்த நான் பாக்கெட்ல ஒரு கரித்துண்டை போட்டுட்டு சுதந்திரமாக நடந்துவரத் தொடங்கினேன். பள்ளிக்கூடப் பருவத்தில் என் கையில் இருந்த ஓவிய வேகத்தை திரும்ப மீட்டுக்கொடுத்தார். ஆதிமூலம் ஒரு நல்ல கலரிஸ்ட்; நன்றாக கலர் வைப்பார். அவர் மூலமாகத்தானே நானும் வளர்ந்தேன். ஓவியர் சந்ரு என்னைத் திருப்பிவிட்ட மனுஷன்களில் ஒருவர். அச்சுதன் கூடலூரும் ரொம்ப முக்கியம். வசுதா தொழூர், டக்ளஸ் என்று எனக்கு பல குருமார்கள் இருக்காங்க. எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தமும் எனக்கு குருதான். அவர் எழுதவே வேண்டாம். நடமாடும் சிறுகதை அவர்.

தமிழ் சிறுபத்திரிக்கைகளில் நவீன ஓவியர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கிறது..அந்த உறவு உங்களது படைப்பை செழுமைப்படுத்தியிருக்கிறதா?

தமிழ் சிறுபத்திரிக்கைக்காரர்கள் அவர்கள் எழுதுகிற எழுத்துக்கு கோடு போடுற ஆள்தான் ஓவியன்னு நினைக்கிறாங்க. நான் கதையைப் படிச்சுட்டு கோடு போடவே மாட்டேன். நான் ஏற்கெனவே வரைந்த கோட்டோவியத்தைத் தான் கொடுப்பேன். ஒவ்வொரு கலைஞனும் எழுத்தாளன் மாதிரிதான் வாழுகிறான். நான் எழுத்தாளனுக்கு பொம்மை போடறவன் மட்டும் இல்லை. நானும் கவிதையெல்லாம் எழுதுவேன். அதை வெளியிட்டது இல்லை.

ஐயோ இந்த வார்த்தை கொலை பண்ணுதே, அந்த வார்த்தைக்கிட்ட இருந்து எப்படித் தப்பிப்பேன் என்று நினைத்த நேரம் எல்லாம் உண்டு. மரணாவஸ்தை கொடுக்கும்.

நவீன ஓவியங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா?

இயற்கை, எந்த அர்த்தத்தையும் உருவாக்குவதில்லை. சும்மா இருக்கிறது. நாம் வாழும் கலாச்சாரம் தான் எல்லாத்திலயும் அர்த்தத்தை உருவாக்கிப் பார்க்குது.

இயற்கை இரண்டாக இருக்கு. படுபயங்கரமான குளிர், படுபயங்கர வெப்பமாக இருக்கு. ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கு. இரவும் பகலுமாக இருக்கு. இதை எப்போது மனிதன் இரண்டாகப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கத் தொடங்குகிறானோ அப்போதுதான் நமக்கு ஞானம் வரும். இயற்கையை விட்டுவிட்டு மனிதன் கலாச்சாரத்துக்குள் இறங்கும்போது தகராறும் முரண்பாடும் தொடங்கிவிடுகிறது. எப்போ பார்த்தாலும் அதனால்தான் சண்டை இந்த உலகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.

என்னோட ஓவியங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு முரண்களையும் நான் வைக்கிறேன். ஆனால் இரண்டும் அடிச்சுக்காம முட்டிக்காம மோதாம இருக்கணும். பிரச்னையில்லாம வாழணும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். பச்சையையும் சிவப்பையும் பிரதான வண்ணங்கள்னு சொல்வாங்க. பச்சையையும் சிவப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும்போது கடுமையாக அடிக்கும், தொந்தரவு செய்யும். அதைப் பக்கத்திலேயே வைத்து அதை வாழவிடணும்னு நினைக்கிறேன். ஆண், பெண் இரண்டுபேரும் சண்டைபோட்டா எப்படி குழந்தை பெறும். இரண்டுபேரும் இணைந்தால்தானே குழந்தை பிறக்குது. ஆனால் மனுஷனுக்கு இரண்டு முரண்கள் தகராறு பண்ணிகிட்டே இருக்கணுங்கறது விருப்பமாக இருக்கு. அவனுடைய அவசியமாகவும் இருக்குது.

முரண்களற்ற ஆனந்தமான நிலைதான் உங்கள் படைப்புகளோட லட்சியம்னு சொல்றீங்களா?

ஆமாம். ஆனால் சந்தோஷமான நிலையில் படைப்பு வரும்னு சொல்ல முடியாது. நல்ல மனநிலையைக் கண்டுபிடித்தால் தான் நல்ல சந்தோஷத்தை படைப்பில் கொண்டுவர முடியும். ஆனால் சந்தோஷமான மனநிலையில் ஒரு படைப்பு வெளிப்பாடு சாத்தியமான்னும் தெரியவில்லை. நகைச்சுவை உணர்வுக்குள் அடக்கப்பட்ட வன்முறை இருக்கிற மாதிரியே, பிரச்னைகள் நீடிப்பதில் மனிதனுக்கு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. விழுந்து விழுந்து ஒருவன் சிரிக்கிறான் எனில் அதற்குப் பின் பதப்படுத்தப்பட்ட வன்முறை உள்ளது.

நல்ல சந்தோஷமான மனநிலையில் ஒருவன் சிரிக்கவேண்டும் என்ற அவசியமே கிடையாது.

படைப்பு என்பது இயற்கையின் ஒழுங்கைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை என்று நீங்கள் பார்க்கிறீர்களா?

சில அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருது. நான் ஒருமுறை பழைய மகாபலிபுரம் சாலையில் ஏதோ ஒன்றை நினைச்சுக்கிட்டு வேகமாகப் போய்க்கிட்டிருக்கேன். கன்னாபின்னான்னு வண்டி போகுது. ஒரு நூறு மாடு என்னை நோக்கி வந்துக்கிட்டிருக்குது. நான் வேகத்தைக் கட்டுப்படுத்தறேன். ஆனால் மோதறதைத் தவிர வேறு வழியே இல்லைன்னு தெரியுது. ஆகா செத்தேன் என்றே நினைத்துக் கொண்டேன். ப்ரேக் போட்டாலும் அடிச்சுக் கீழே தான் விழணும். ஆனால் மாடுகளை மோதுறதுக்கு பத்து அங்குலம் இருக்கும்போது, மோசஸூக்கு வழிவிட்டு கடல் பிரிஞ்சமாதிரி எல்லா மாடுகளும் பிரிஞ்சு எனக்கு வழிவிட்டுது. நான் உள்ளே போயிட்டேன். எப்படித் தப்பிச்சேன்னே எனக்குத் தெரியவில்லை. இயற்கையில் அந்த மாடுகளுக்குள் அர்த்தம் இல்லாத ஒரு தொடர்பு நடக்கிறது. என் பைக் அடிச்சா அதுக்கும் வலிக்கும். எனக்கும் வலிக்கும். ஏன் அந்த மாடுகள் வழிவிட்டன. தப்பிச்சுட்டேன். அதுபோன்ற அனுபவங்கள் வழியாகத் தான் படைப்பு வெளியே வரும்.

உங்களுக்கு சிறுவயதிலேயே கூத்துக்கலைகளைப் பார்க்கும் பின்னணி இருந்திருக்குது.. நவீன நாடகங்களுக்கு நீங்கள் ஒளியமைப்பு செய்கிறீர்கள்…இன்ஸ்டாலேசன் என்னும் நிர்மாணக் கலையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்திருக்கிறீர்கள்…இப்படிப்பட்ட பின்னணியில் உங்களை என்னவிதமான கலைஞர்னு வகைப்படுத்துவீர்கள்?

கூத்துதான் என்னோட நிறங்களை அப்பட்டமாக வைத்திருக்கிறது. கூத்துக்கலைஞர்கள் போடும் உடைகளிலிருந்து என்னோட வண்ணங்களை எடுத்துக்கிட்டேன். சோழர்கால, பல்லவர் சிற்பங்களும் என்னுடைய உருவங்களின் மீது தாக்கம் செலுத்தியுள்ளது.

இன்ஸ்டாலேசன் படைப்பைப் பொறுத்தவரைக்கும் எழுத்து, ஓவியம், புகைப்படம் எல்லாத்தையும் அதில் சேர்த்துப் போடமுடியும். பணமும் அதிகம் தேவைப்படும் வேலை அது. நான் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாலேசன் படைப்பு செய்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய சாப்பாடுத் தட்டு ஒன்று இருக்கிறது. சின்னவயதிலிருந்தே அது வீட்டில் இருக்கிறது. அந்தத் தட்டில் பொம்மைத் துப்பாக்கியை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். அதற்கு ‘‘ஃப்ரோசன் கன் ஆன் மை ஈட்டிங் ப்ளேட்’’ என்று அதற்குப் பெயர் வைத்தேன். என் சாப்பாட்டுத் தட்டில் உறைந்த துப்பாக்கி’ என்பது ஒரு படிமம். சாப்பாடுத் தட்டும் பளபளவென்று இருக்கவேண்டும். பனிக்கட்டியும் பார்த்தாலே சில்லென்று இருத்தல் வேண்டும். அதற்கு புகைப்படம் எடுப்பது அவசியம். அதை நான் புகைப்படம் எடுக்கப்போகிறேன். அந்தப் புகைப்படத்துக்குக் கீழே “TERRORISM” என்ற வார்த்தைக்கு வெப்ஸ்டர்ஸ் அகராதி கொடுத்திருக்கும் அர்த்தத்தை அச்சிடுகிறேன். அடுத்த பத்தியில் நடேஷின் அர்த்தம் இருக்கும். அதுதான் எனது சாப்பாடுத் தட்டில் துப்பாக்கி என்பது.

இன்னொரு உணவுத்தட்டில் பெட்ரோல் கன்னை வாங்கி உறையவைத்தேன். அது அடுத்த படம். இந்த இரண்டு புகைப்படங்களையும் வைத்து அதற்குக் கீழேயும் எது டெரரிசம் என்று கேள்வி இருக்கும்.

கனிம எரிபொருளுக்காக யுத்தம் செய்பவனைத்தான் பெரிய தீவிரவாதி என்று நினைக்கிறேன். ஓவியனாக என்னோட இந்தக் கேள்வி அரசியல் ரீதியானது, சுற்றுச்சூழியல் ரீதியான கேள்வி.

தமிழ்நாட்டில் நவீன ஓவியத்திற்கு ஒரு மரபு உருவாகி நூற்றாண்டுகளாகப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் புகைப்படங்களைப் போல தத்ரூப சித்திரங்களுக்குத் திரும்ப மதிப்பு வந்துள்ளதே?

பின்நவீனத்துவக் கலையைப் பொறுத்தவரை, வர்த்தக ஓவியங்கள் உட்பட எல்லாவற்றையும் கலையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே எது விற்கும் என்பதை ஓவியங்களாகப் போட்டு காசு பார்ப்பவர்களும் உண்டு. அதில் பெரிய தத்துவ உள்ளடக்கத்திற்கு எல்லாம் வேலையே இல்லை. இன்று பேஸ்புக் வந்துவிட்டது. இதற்கு என்ன அர்த்தம். கடைசியாக முகம்தான் புத்தகம் என்ற இடத்திற்கு மனிதகுலம் வந்திருக்கிறது. முகத்தைத் தவிர வேறு தனித்துவம் இல்லை என்ற தீர்மானத்திற்கு தள்ளிவிட்டார்கள்.

சென்னை ஓவியக் கல்லூரி முதலில் கைவினைத் தொழில்களுக்கு பயிற்சி கொடுக்கிற இடமாகத் தான் இருந்தது..பின்னால அது நவீன ஓவியர்களை உருவாக்கிய இடமாக அறியப்படுகிறது... இப்போது கைவினைக் கலைகள் மற்றும் தொழில்நுட்பம் அங்கே இல்லாமல் ஆகிவிட்டதே…

ஒரு அம்சம் பிரதானமாகத் தலைதூக்கிறப்போ, இன்னொரு விஷயம் நலிஞ்சு போயிடுது. நவீன ஓவியம் எவ்வளவு முக்கியமோ, கைவினைக் கலைஞர்களின் தொழில்நுட்பமும் அவசியம் என்ற நிலை வருவதற்கு 80 ஆண்டுகள் இங்கே தேவைப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா கலைகளையும், கைவினைத் தொழில்களையும் தொடர்ந்து போஷிச்சு பாதுகாத்து வைத்திருக்கிறான். எதையும் அவன் அழியவிடுவதில்லை.

நுண்கலைகளை மதிப்பதில் இந்தியா போன்ற நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இன்னும் தொடர்கிறது இல்லையா?

கடவுளை அவர்கள் வைத்திருந்த இடத்தில் கலைக்கு இடம் கொடுத்து விட்டார்கள். கோயிலுக்கு இருக்கும் மதிப்பை அருங்காட்சியகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அருங்காட்சியகங்களுக்குக் கட்டணமும் குறைவு.

ஓவியங்களில் பிராந்தியக் கூறுகளை அடையாளம் காணமுடியுமா? உதாரணத்திற்கு தமிழ் ஓவியர்னு ஒருவரை எப்படி சொல்லமுடிகிறது?

ஒரு சினிமாவை எப்படி தமிழ் சினிமா என்று அடையாளம் காண்கிறோம். நான் என்னுடைய ஓவியங்களில் அடர்த்தியாகத் தான் வண்ணங்களைப் பயன்படுத்துகிறேன். ஆதிமூலமும் அடர்த்தியாகத் தான் வைத்தார். எட்டு மாதங்கள் உஷ்ணம் தகிக்கும் இடம் இது. அந்த வெப்பம் நமது ஓவியங்களிலும் பிரதிபலிக்கும். எனது ஓவியத்தில் ஏன் பச்சை நிறம் ஆதிக்கமாக இருக்குதுன்னு, வடநாட்டு ஓவியர் ஒருவர் கேட்டாரு. நான் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக, மரங்களாக இருக்கு.

உங்கள் ஓவியங்களில் பறவைகளும், குருவிகளும் வருகின்றன. அவை காணாமல் போவது தொடர்பான துயரங்களை ஓவியமாக்குகிறீர்களா?

மனிதனும் பறவைகளைத் துரத்தியடிப்பது போலத்தான் துரத்தியடிக்கப்படுகிறான். அந்த ஓவியங்களில் ஒரு ஒப்பாரி இருக்கிறது என்று நண்பர் பன்னீர்செல்வம் சொன்னார். அது என்னுடைய ஒப்பாரியாக கூட இருக்கலாம். சில பேர் அதை இரைச்சல் என்பார்கள். நம்முடைய கலாச்சாரமே இரைச்சலானதுதானே.

உங்கள் ஓவியங்களில் தொடர்வரிசையாக புலிகளின் உருவத்தை பல்வேறு பண்புகளில் சித்திரமாக்கியுள்ளீர்கள் . அதைப்பற்றி சொல்லுங்கள்…

இயற்கை ஒரு ஒழுங்கில் இருக்கு. அதற்கான பெரிய அடையாளமாக புலியைப் பார்க்கிறேன். வரிக்குதிரையின் உடலில் உள்ள கோடுகள் கோணல்மாணலாகப் போடப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் படுபயங்கர ஒழுங்கு வடிவில் இருக்கும். வேப்பமரத்தின் கீழே படுத்துக் கொண்டு மரத்தைப் பார்த்தீர்கள் என்றால், இலைக்கூட்டம் அத்தனையும் ஒரு சீரொழுங்கில், வடிவத்தில் இருக்கும். புலி நடக்கும்போது, பார்த்தீர்கள் என்றால் அதன் கோடுகள் சேர்ந்து பிரிவதைப் பார்ப்பது அற்புதமான நிகழ்வாக இருக்கும். ஒரு போதையே வரும். அதன் அழகில் மயங்கிதான் தொடர்ந்து புலியைப் போட்டுக்கொண்டே இருந்தேன். புலிவாலைப் பிடித்தது போலத்தான். இப்போது புலி போடுவதை நிறுத்திவிட்டேன்.

சிரிக்கும் புத்தரை ஒரு ஓவியமாகப் போட்டேன். அதைத் தொடரவேண்டும் என்று ஆசை உள்ளது.

அழகுதான் படைப்பாளிகளை கடைசிவரை ஈர்த்துக்கொண்டிருக்கிறதா?

எனக்கு நிறைய அழகான பெண்கள் தோழிகள். எப்போதும் அவர்களை மனரீதியாக காதலித்துக் கொண்டே இருக்கவேண்டும். அழகுதான் காரணம். 20 வருஷம் இருக்கலாம். கோவாவில் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கியிருந்தேன். அற்புதமான இடம் அது. மழை கொட்டிமுடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு காலை நடை கிளம்புகிறேன். மழையின் காரணமாக பச்சைப் பசேலென்று புல் எல்லா இடத்திலும் கிளம்பி நிற்கிறது. சூரிய வெளிச்சம் அது மேல் அடிக்கும்போது நிலமே ஒளிருது. மூணு, நாலு மாசம் ஈரமாக இருக்கும் இடம் அது. அப்போதுதான் அட்டகாசமான காட்சி ஒன்றைப் பார்த்தேன். கருப்பு மரம் ஒண்ணு. அந்த மரத்தில் ஒரு கொடி அப்போதான் படரத்தொடங்குது. மரத்தின் இரண்டுபக்கமும் அது சமச்சீராக படர்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்தக்காட்சியைப் பார்த்தபிறகு எல்லா விஷயங்கள் மீதும் மதிப்பு போயிடுச்சு. நவீன ஓவியம் சார்ந்த என்னோட கருத்துகள் அனைத்தையும் குப்பையில் போட்டுவிட்டேன். அந்தக் கொடியின் சமச்சீர்மையை, அதன் மொழமொழப்பை நான் ஓவியத்தில் கொண்டுவரவேண்டும். ஒரு பக்கம் பெரிய இலை. இன்னொரு பக்க நுனியில் சிறிய இலை. கருப்பு மரத்தில் அழகாக அது ஏறிக்கொண்டிருக்கிறது. அந்தப் பச்சை நிறத்தை நான் இன்னும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்கிறேன்.

  •  

ஆயுர்வேதம் உள்ளவரை அவரும் இருப்பார்- டாக்டர். இல. மகாதேவனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பு



மே காலச்சுவடு இதழில் வெளியான கட்டுரை.  நான் இட்டிருந்த தலைப்பு 'மகாதேவன் எனும் எரிநட்சத்திரம்'. 




 "ஆயுர்வேத மருந்துகளுக்கும் பின்விளைவு உண்டு, சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும், கல்லீரல் பாதிப்பு நேர வாய்ப்பு உண்டு என ஏழு லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவன் எனும் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். ஆயுர்வேதம் புனிதமானது, பின்விளைவற்றது, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள். எல்லாமே இறைத்தன்மை வாய்ந்தது என்று சொல்லும் பொழுது நவீன மருத்துவத்தில் இறைத் தன்மை இல்லையா? போலியோ குணமாக்கப்பட்டதே? சின்னம்மை குணமாக்கப்பட்டதே? அப்பொழுது ரிஷிகளும் சித்தர்களும் எங்கு இருந்தார்கள்? என்ன செய்தது ஆயுர்வேத மருத்துவமும், சித்த மருத்துவமும்? ஆதலால் ஒருங்கிணைந்த சிகிச்சை முறை, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், மனிதனை மதித்தல், நோயாளி குணமாக வேண்டும் என்பதற்கு முன்னுரிமைக் கொடுத்தல், நான் என்ற அகங்காரத்தைத் தள்ளி வைத்தல், இறப்பின் உண்மையைப் புரிந்து ஏற்றுக் கொள்தல்- இவையே இந்த சிக்கலை கடக்க நம்முன் உள்ள தீர்மானமான வழியாகும். மனிதன் மாற வேண்டும், நம் கட்டுப்பாட்டில் இல்லாத புறத்தை நாம் மாற்ற இயலாது. ஆனால் நாம் மாறலாம், நம் பார்வையை மாற்றிக் கொள்ளலாம். நெளிவுசுளிவுடன் நடக்க பழகலாம்." - டாக்டர். இல. மகாதேவன், 'முதற்கால்' நூலிலிருந்து 


பாரதியை பற்றி எண்ணும்போதெல்லாம் அவனொரு எரி நட்சத்திரம் என தோன்றும். கூடவே பாரதியை எளிதாக ‘அவன்’ என உரிமைகொண்டாட முடிவதற்கு என்ன காரணம் எனும் கேள்வியும் எழும். புதுமைப்பித்தனையும் இப்படி அழைக்க முடியும். ஆனால் மௌனியையோ சுந்தரராமசாமியையோ நகுலனையோ அப்படி  ஏக வசனத்தில் அழைக்க முடிவதில்லை. முதன்மை காரணம் பாரதியும் புதுமைப்பித்தனும் இளமையான உருவத்துடனே நம் மனதில் பதிந்துவிட்டார்கள். சுராவையோ நகுலனையோ மௌனியையோ எண்ணுமாபோது அவர்களுடைய முதிர்ந்த தோற்றமே மனதில் உதிக்கும். எரிநட்சத்திரங்கள் பிரபஞ்சத்தின் அரிய நிகழ்வு. சில நொடிகளே தென்படும். ஆனால் கண்டவருக்கு அது வாழ்நாள் அனுபவம். தனது முழு ஆற்றலையும் எரிபொருளாக்கி எரிந்து அழியும். இதற்கு நேரெதிரானது அகல்விளக்கு. நின்று நிதானமாக எரியும். நெருங்கி வருபவற்றுக்கு ஒளிவழங்கும். மானுட அறிவு செயல்பாடு இவ்விரு சரடுகளால் ஆனது. இரண்டுக்குமே சம அளவு முக்கியத்துவம் உள்ளது. எரிநட்சத்திரம் கனவுகளின், இலட்சியங்களின் பிரதிநிதி. அகல்விளக்கு தற்கணத்திகற்கானது. பயன்மதிப்பு கொண்டது. அகல்விளக்கின் தன்மையும் பொருந்தும் என்றாலும் எனது ஆசிரியர் ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனை எரிநட்சத்திரம் என்றே வகைப்படுத்துவேன். ஆயுர்வேதத்திற்காக தனது ஊனையும் உயிரையும் அளித்தவர்.  கலைஞர்களுக்குரிய தத்தளிப்பும் கொந்தளிப்பும் கொண்ட ஆளுமை அவர்.  இலக்கியவாதியாக இருந்திருந்தால் பித்தும் படைப்பூக்கமும் கொண்ட பாரதி புதுமைப்பித்தன் பிரமிள் வரிசையில் இயல்பாக பொருந்தி போயிருப்பார் என தோன்றியதுண்டு. அறிஞர்களுக்குரிய அறிவு பரப்பும் கலைஞர்களுக்குரிய படைப்பூக்கமும் ஒருசேர அமைந்த அரிய ெஆளுமை. 



டாக்டர் இல. மகாதேவன், லக்ஷ்மண சர்மாவிற்கும் சந்த்ராவிற்கும் ஜனவரி 19, 1969 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவி சாரதா. ஒரே மகள் சந்த்ரா இப்போது இளநிலை ஆயுர்வேதம் பயின்று வருகிறார். இவருடைய தாத்தா ஒய். மகாதேவ ஐயர் நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் புகழ் பெற்ற மருத்துவர். நாகர்கோவில் அருகேயுள்ள தெரிசனம்கோப்பு எனும் ஊரில் உள்ள டாக்டர். ஒய். மகாதேவ ஐயரின் ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் முதன்மை மருத்துவராக இருந்தார். சென்னை வெங்கட்ரமணா கல்லூரியில் இளநிலை ஆயுர்வேத பட்டப்படிப்பை 1992 ஆம் ஆண்டு முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேத கல்லூரியில் காய சிகிச்சை பிரிவில் பட்ட மேற்படிப்பை நிறைவு செய்தார். கேரளாவில் உள்ள பங்கஜ கஸ்தூரி கல்லூரியில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.  தன்னுடைய மாணவர்களுடன் சேர்ந்து இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட ஆயுர்வேத நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறந்த அறிவியல் எழுத்துக்கான தேசிய விருதை ஆயுஷ் துறை மத்திய அமைச்சர் ஸ்ரீ பாத் யஷோ நாயக்கிடமிருந்து பெற்றுள்ளார். தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை பெற்றுள்ளார். அவருடைய ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ தமிழக அரசின் சிறந்த புத்தக பரிசை வென்றுள்ளது. காலச்சுவடு வெளியீடாக வந்த 'உணவே மருந்து' நூலுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமி விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்தாண்டு ஆயுர்வேத மருத்துவர்களுக்கான உச்ச விருதான ‘தன்வந்தரி’ விருது அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. சாரதா ஆயுர்வேத மருத்துவமனை இளம் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான பயிற்சி களமாகவும் திகழ்கிறது.  ஆயிரக்கணக்கான ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ மாணவர்களும் இளம் மருத்துவர்களும் மகாதேவனிடம் பயின்றுள்ளனர். தமிழகம் கேரளம் மட்டுமின்றி வட மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கூட அவரிடம் பயின்றுள்ளனர். ஆறுமாதம் வரை தெரிசனங்கோப்பில் இலவசமாக தங்கி பயிலலாம். அதற்கு பிறகு தொடர விரும்புபவர்களுக்கு மாதச்சம்பளம் உண்டு. இணையத்திலும் பல்வேறு தேசிய சர்வதேசிய கருத்தரங்குகளிலும் பங்கேற்று செறிவான உரைகள் ஆற்றியுள்ளார். சர்வதேச அளவில் ஆயுர்வேதத்தின் முகங்களில் ஒருவர் என சொல்லலாம். ஏப்ரல் எட்டாம் தேதி இரவு இருதய நோய் காரணமாக மரணமடைந்தார். ஃபிப்ரவரி மாத இறுதியில் அடுத்தடுத்து அவரது தந்தையையும் தாயையும் இழந்திருந்தார். மகாதேவனின் மரணம் அவரை அறிந்த அனைவருக்குமே அதிர்ச்சியை அளித்தது. தனிப்பட்ட முறையில் என்னால் அவரது மரணத்தை செரித்துக்கொள்ள இயலவில்லை. அந்த வாரத்தில் அவரை சந்திப்பதாக இருந்தேன். சரக சம்ஹிதையின் மெய்யியல் பகுதி சார்ந்த நூல் ஒன்றும் சித்த மருத்துவர் கு. சிவராமனுக்கும் மகாதேவனுக்குமிடையிலான உரையாடல் நூலொன்றும் என அவருடன் சேர்ந்து இரு நூல்களை எழுதும் திட்டமிருந்தது. அவரது தாத்தா ஒய். மகாதேவ ஐயரின் மரணத்தை பற்றி சொல்லும்போது "உடலைப் பொருட்படுத்தாமல், வெறி பிடித்த மாதிரி உழைத்ததினால் வந்த நிலை என்று சொல்லலாம்" என குறிப்பிடுகிறார். மேற்சொன்ன காரணம் மகாதேவனின் மரணத்திற்கும் பொருந்தும். அவரை நேர்காணல் செய்வதற்காக நாகர்கோயிலில் இறங்கி 5 மணிக்கு தெரிசனம்கோப்பு சென்று சேர்ந்த போது வாசல் பகுதியில் அமர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் காலை 4 மணி முதல் எட்டு மணி வரை வாசிப்பது அவரது வழக்கம். தனது வாசிப்பு முறையைப் பற்றி கூறும்போது “இப்போது ஒரு புது நோயாளி வருகிறார், புது பரிசோதனை முறை வருகிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்கிறேன். எல்லா பெரிய கருத்தரங்குகளிலும் உரையாற்ற அழைக்கிறார்கள், அதை புதியமுறையில் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தொடர் வாசிப்பு தேவை. ஆயுர்வேத பட்ட மேற்படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியுள்ளதால் அதற்காகவும் வாசிக்கிறேன். இதற்கு பிறகு இந்த நோய்க்கு சித்தமருத்துவத்தில் என்ன மருந்து?  பாரம்பரிய மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்திலும் சொல்லப்படாத சில நாட்டு மருத்துவ முறைகள்  உள்ளன. அதில் என்ன சிகிச்சை கூறப்பட்டுள்ளது? இப்படி நான் பலவற்றுடன் ஒப்பிட்டுப் படிக்கும் போது தான் அறிதல் முழுமையடைகிறது. இதில் பட்ட மேற்படிப்புக்கு மட்டும் தான் பாடம் வருகிறது. 70 % நடைமுறைக்கு பயனளிக்க கூடியதைத் தான் படிக்கிறோம். இது மருத்துவம் சார்ந்த படிப்பு. இப்போது 50 % சித்த மருத்துவம் தான் வாசிக்கிறேன். 15 % நாட்டு மருந்து சார்ந்த புத்தகங்கள், குமரி மாவட்ட மருத்துவப் புத்தகங்கள், 10% ஆயுர்வேதம், 20% ஆங்கில மருத்துவப் புத்தகங்கள், தொடக்கக் காலங்களில் நிறைய ஆயுர்வேதப் புத்தகங்கள் படித்ததினால் அதை குறைத்து கொண்டேன்.” என கூறுகிறார்.‌   ஆயுர்வேதம், சித்த மருத்துவம், குமரி மாவட்ட நாட்டு மருத்துவ முறைகள், நவீன மருத்துவம், இலக்கியம் என பலதரப்பட்ட வாசிப்பு அவருக்கு உண்டு. கருத்தரங்குகள், வகுப்புகள் என தொடர் பயணங்கள். மருத்துவ ஆலோசனைக்கு அமர்ந்தாரெனில் எப்படியும் நாளைக்கு நூறு புற நோயாளிகளை காண்பார். உள்நோயாளிகளை நாளுக்கொருமுறையோ இருமுறையோ பார்ப்பார். இத்தனைக்குமிடையே சுமார் 16000 பக்கங்கள் ஆயுர்வேதம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  


நான் மகாதேவனின் முதன்மை மாணவர்கள் போன்று அவருடன் மாதக்கணக்கிலோ வருடக்கணக்கிலோ உடனிருந்து பயின்றவனில்லை. ஆனால் எப்போதும் அவரையே எனது ஆயுர்வேத ஆசிரியராக கருதிவந்துள்ளேன். அவ்வளவாக பரிச்சயமில்லாத ஏதேனும் ஒரு புதிய நோயை எதிர்கொள்ள நேர்ந்தால் மகாதேவனின் நூல்களே முதன்மை புகலிடம். சமாளிக்க சிரமப்பட்டால் அவரிடம் அனுப்பி வைப்பேன். என் முடியும் முடியாது முயன்று பார்க்கலாம் என தெளிவாக சொல்லிவிடக்கூடிய மருத்துவர் அவர். தனது எல்லைகளை அறிந்தவரே அறிஞராக இருக்க முடியும். என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான ஆயுர்வேத மருத்துவர்கள் அவரை தங்களது ஆசிரியராக கருதுதிறார்கள். எனது தனிப்பட்ட துயரத்திற்கு பெரிய பொருளேதும் இல்லை. மகாதேவனின்  எத்தகைய ஆளுமை, அவரது பங்களிப்பு என்ன? ஆகிய கேள்விகளை எதிர்கொள்ளும் முயற்சியே இந்த கட்டுரை. 

ஆயுர்வேத உலகில் அவர் அறிமுகமான புதிதில் ஒரு கலகக்காரராகவே அறிமுகமானார். சமஸ்கிருத பாடமுறையை அடிப்படையாக கொண்டது ஆயுர்வேதம். மகாதேவன் நடைமுறை பயன்பாடை கருத்தில் கொள்ளாத பண்டித மரபை கடுமையாக விமர்சித்தார். “ஆயுர்வேதத்திற்கு சமஸ்கிருத நாட்டம் அவசியமானதுதான். ஆனால் சமஸ்கிருதத்திற்குள் ஆழ்ந்து மூழ்கி தம்மை இழந்துவிட்டால் சிகிச்சையில் நாட்டம் குறைந்து பின்தங்கி விடுவார்கள். அவர்களுக்கு புத்தக அறிவு அளிக்கும் ருசியே போதையாகிவிடும். மருந்து செய்பவர்களின் வலி, மருந்து கிடைக்காததன் வலி, நோய் குணமாகவில்லை என்பதால் வரும் ஏக்கம் என இவை எதையும் அவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் அவர்களின் பாண்டித்தியத்திற்கு கல்லூரியில் நல்ல வேலை கிடைத்து விடுகிறது. இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவார்கள். சமஸ்கிருத அறிவு ஆயுர்வேதத்திற்கு நடைமுறை பயன்பொருட்டே முக்கியமானது என்பதை மறந்துவிடுவார்கள். பதார்த்த விஞ்ஞானம் போன்ற அடிப்படை பாடங்களை நூலறிவை கொண்டு எளிதாக நடத்தியே காலம்கடத்திவிடுவார்கள். மருத்துவத்தை தொழிலாக கொண்ட நாம் அப்படி இருக்க முடியாதே.  இரவு இரண்டு மணிக்கு, நன்கு உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில்,  எழுப்பி, இரத்தம் கசிகிறது, என்ன செய்வது என கேட்பார்கள்.” மிக தெளிவாக ஆயுர்வேத கோட்பாட்டுவாதிகளுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் இடையேயான வேறுபாடை முன்வைக்கிறார். இவ்வகையான விமர்சனங்கள் தொடக்க காலத்தில் ஆயுர்வேத தூய்மைவாத தரப்பினால் அவர் தீவிரமாக எதிர்க்கப்பட காரணமானது. மேடையுரைகளில் அவர்களை கிண்டல் செய்தார். தீவிரமாக விமர்சித்தார். நேர்காணலிலிருந்து ஒரு உதாரணத்தை சுட்டுவதாக இருந்தால், இந்த பதிலை எடுத்துக்கொள்ளலாம் “சில வேதப் பாரம்பரிய பிராமணர்கள் வினோதமான சில கருத்துக்களை சொல்வார்கள். எனக்கு அவற்றில் நம்பிக்கை கிடையாது. அமெரிக்கா போய் கர்மா செய்தால், அந்த கர்மாவிற்கு பலன் கிடையாது. பஞ்சகச்சம் கட்டவில்லையென்றால் அந்த ஆற்றல் பூமிக்குப் போய்விடும். இப்படி பல கதைகள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நாம் போய்க் கடுக்காய் கொடுத்தால் எந்த நாட்டு நோயாளிக்கும்  பேதி போகும். நேர்வாளம் கொடுத்தால் பேதி போகத் தான் செய்யும். மதனபலம் (மலங்காரைக்காய்) கொடுத்தால் வாந்தி வரத் தான் செய்யும்.” மகாதேவன் என பெயர் குறிப்பிடாமல் எங்கள் வகுப்புக்களில் அவருக்கான மறுப்புகள் சில வேளைகளில் கிசுகிசுப்பாகவும் சில வேளைகளில் வெளிப்படையான எரிச்சலுடனும் சொல்லப்பட்டன. சாத்திரத்தின் மீதான நம்பிக்கையின்மையே அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்றார்கள். நவீன மருத்துவ நோக்கை ஆயுர்வேதத்திற்குள் பொருத்தி பார்ப்பது பெரும் பிழை, தேவையில்லாத குழப்பத்தையே விளைவிக்கும் என்றார்கள். மாணவர்கள் அவரை நெருங்கினால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அஞ்சினார்கள். ஆனால் இவை எங்களுக்குள் மகாதேவன் மீதான ஈர்ப்பை பெருக்கியதே அன்றி குறைக்கவில்லை. நவீன‌‌ மருத்துவம் குறித்து அவர் கொண்டுள்ள பார்வை பிற ஆயுர்வேத பட்டதாரிகளிடமிருந்து வேறானது.‌  “ஆயுர்வேதத்தை முழுமையாக, நன்றாகப் படித்த, குண சித்தாந்தங்களை புரிந்து கொண்ட ஒரு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் நான் நவீன மருத்துவத்தை ஊன்றி அறியத்தொடங்கினேன். நான் நேரடியாக நவீன மருத்துவத்தை கற்க தொடங்கி இருந்தால் குழம்பிப் போய் இருப்பேன். சமூகத்திற்குப் பெரிய தீங்கு விளைவிப்பவனாக மாறி இருப்பேன். இப்பொழுது ஸ்டேட்டின் (Statin) சாப்பிட்டால்  கல்லீரலில் சுரக்கும் நொதிகள் கூடி கெண்டைக்கால் வலி ஏற்படுகிறது. கால்சியம் சேனல் தடுப்பான்களை (calcium channel blockers) சாப்பிட்டால் கால் வீக்கம் வருகிறது. அம்லோடிஃபினோ (amlodipine), நிஃபிடிஃபினோ (Nifedipine) (உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்)  சாப்பிட்டு காலில் வீக்கத்துடன் ஒருவர் வருகிறார் என்றால் ஆயுர்வேத மருத்துவருக்கு இது பற்றி தெரிவதில்லை. சோபம் (வீக்கத்தை முதன்மை குறியாக கொண்ட நோய்)  என்று நினைத்து புனர்னவாதி கஷாயத்தில் சந்திரபிரபா சேர்த்து கொடுத்து, இரவு இரண்டு ஸ்பூன் தசமூல ஹரிதகி சாப்பிடுங்கள் என்கிறார். அவர் எழுதியது சரி; தவறல்ல; ஆனால் நோய் காரணம் ஆங்கில மருந்தில் வருவது என்று அவருக்குத் தெரியவில்லை. மருந்தை மாற்றி விட்டு வேறு ஒரு நவீன மருந்தை பரிசீலனை செய்து இருந்தால் நோயாளி குணமாகி இருப்பார். இந்த மாதிரி தவறுகள் நவீன மருத்துவமும்  படித்தவர்களுக்கு வராது” என்கிறார். ஆயுர்வேதத்தை தர்க்கப்பூர்வமான மருத்துவமுறையாக மட்டும் காணும் குறைத்தல்வாத நோக்கையும் அவர் ஏற்கவில்லை என்பதே அவரை மேலும் முக்கியமானவராக ஆக்குகிறது. “ஆயுர்வேதம் என்பது நம்முடைய மெய்யறிவு சார்ந்த ஒரு சாத்திரம். அபர வித்யையில் இருந்து பர வித்யைக்கு (பர வித்யை என்பது பிரம்மத்தை அறிவதற்கான கல்வி. அபர வித்யை என்பது உலகியல் தளத்தில் உள்ள பிற அறிவுத்துறைகள்) கொண்டு போகக் கூடிய சாத்திரம் அதாவது உலக அறிவில் இருந்து மெய்யறிவுக்கு தயாராக்கும் வகையில்  நம்  ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சீராக்குகிறது” என தெளிவாக ஆயுர்வேதத்தை வீடுபேறுக்கான மார்க்கத்தின் ஒரு பகுதியாக சுட்டுகிறார்.  முழுமையான ஆயுர்வேத வைத்தியனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு “சிவ வாக்கியர்,  தாயுமானவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் குயில்பாட்டு, வசன கவிதைகள், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றை ஏற்கனவே ஆழ்ந்நு படித்துள்ளேன். முன்பு வாசித்ததை தான் இப்பொழுது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். புராணங்களைம், ஸ்மிருதிகளைம் வாசிப்பதை  நிறுத்தி விட்டேன். ஆனால் இப்போதும் பட்டினத்து பிள்ளையார் திரட்டு, மெய்ஞான திரட்டு போன்றவை எல்லாம் வேண்டியிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு சரகம், சுஸுருதம், வாக்பட்டமும் மட்டும் தான் ஆயுர்வேதம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது. முழுமையை எய்த முடியாது” என கூறுகிறார்.  

தர்க்கப்பூர்வ மருத்துவமுறை - வீடுபேறு அடைவதற்கான சாதனை மார்க்கத்தின் ஒரு பகுதி, ஆகிய இவ்விரு துருவங்களுக்கு இடைப்பட்ட பாதையை தேர்கிறார். 



கவிஞர் போகன் சங்கர் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த அஞ்சலி குறிப்பில் மகாதேவனை இராமானுஜருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அந்த ஒப்பீடு சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எழுதப்பட்டதாக தொனிக்கலாம். ஆனால் அதில் நியாயமில்லாமல் இல்லை. சர்வநிச்சயமாக மகாதேவனை ஆயுர்வேதத்தின் வீச்சை அதிகரித்து எல்லைகளை விஸ்தரித்த சீர்திருத்தவாதியாக காண இடமுண்டு. குருகுல கல்வியில் நவீன ஜனநாயக தன்மை இருக்காது. சாதி, மதம் பாலினம் என பல்வேறு தடைகள் உண்டு. இன்று ஆயுர்வேத கல்லூரிகளில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் பயில்கிறார்கள். குருகுல கல்வியில் இது சாத்தியமாயிருக்காது. ஆனால் ஆயுர்வேதம் போன்ற மரபான அறிவு துறைகள் நவீன கல்விமுறையால் முழுமையாக கடத்தமுடியாது. இந்த இடைவெளியை மகாதேவன் நிரப்பினார். தெரிசனங்கோப்பு சாரதா மருத்துவமனை குருகுலத்தன்மையுடையது தான் ஆனால் அங்கு சாதி, மத, இன, தேசிய, பாலின பாகுபாடு என எதுவும் கிடையாது. கற்றுக்கொள்ளும் ஆர்வம் மட்டுமே ஒரே வரையறை. குருகுலங்களின் மரபு மருத்துவமுறைகளில் உள்ள இன்னோரு முக்கியமான சிக்கல் அதில் பேணப்படும் இரகசியம். ஒருவித மூடுண்டத்தன்மை உண்டு. மருந்துகளுக்கு குழுவுக்குறி பெயர்கள், செய்முறைகளுக்கு தெளிவில்லாத விளக்கங்கள் என பல தடைகள். மகாதேவனிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அனுபவம் வழி அவரடைந்த அத்தனை புரிதல்களையும் நேரிலும் புத்தகங்களிலும் வெளிப்படையாக முன்வைத்துள்ளார். அவரது கருத்தரங்கு உரைகளும் வகுப்புகளும் மிகுந்த தனித்தன்மையுடையது “காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தால் எப்படி சொக்கிப் போய்விடுவார்களோ, அப்படி  மதியம் 2.30 மணிக்கு வகுப்பு என்றால் கூட அப்படியே நன்கு விழித்துக்கொண்டு மெய்மறந்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள். இது வெறும் பேச்சல்ல, அவர்களுக்குப் புரியும் போது தான் அதனுடைய ஆழமும், நுட்பமும் தெரியும். ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று திருமூலர் சொன்னது போல படித்ததைப் பகிரும் போது அனுபவம் மேலும் பெருகத் தானே செய்யும்” என குறிப்பிடுகிறார். அவரது வகுப்புக்களில் இந்த லயிப்பை உளமார உணர்ந்திருக்கிறேன். 


“இளம் மருத்துவர்களுக்கு நான் கூறும் மிக முக்கியமான ஆலோசனை ஒன்றுண்டு. ஆர்வம் மேலிட சாஸ்திரத்தை நிரூபிக்க முயற்சி செய்யக் கூடாது” என கூறுகிறார். அப்படி நிறுவ முற்படுவது ஒருவகையில் அபத்தம். பண்டித மரபு நூல்களில் உள்ளவற்றை மாறா சொல் என கருதுகிறது. நிரூபனத்துக்கு அப்பாலானது என்று முன்வைக்கிறது. ஒருவர் ஏன் மருத்துவம் புரிய வேண்டும்? சாஸ்திரத்தை உண்மை என்று நிறுவுவதற்கா இல்லை நோயாளியின் நோயை தீர்ப்பதற்கா? நவீன மருத்துவத்தில் இந்த கேள்வியே எழாது. ஏனெனில் அவை சான்றை உருவாக்கிய பின்னரே நடைமுறைக்கு வருகின்றன. ஆனால் மரபு மருத்துவமுறைகள் களப் பயன்பாட்டிலிருந்து சான்றுகளை தொகுத்து கொள்பவை. ஆகவே மீண்டும் மீண்டும் இந்த முரண்பாடு எழும். மகாதேவனிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான தொடக்கக்கால பாடமென்பது “நான் ஆயுர்வேதத்தை காப்பதற்காக ஆயுர்வேதத்தை பின்பற்றவில்லை. நோயாளியை காப்பதற்காகவே ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறேன்.” நோயாளி மைய நோக்கை மகாதேவன் எப்படி அடைந்தார் என்பதை அவரே நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். “இது நடந்ததும் வைத்யநாதன் சாருடன் இருந்தபோது தான். ஒரு  22 வயது இளைஞன், கடும் அசதி, உடல் எடை சரசரவென குறைகிறது என  சொல்லிக்கொண்டு வந்தான். வைத்யநாதன் சார், அவனுடைய நோயை க்ஷயம் (தேகம் வற்றி போதல்) என்று கண்டறிந்து, அக்னி தீபனம் (பசியைத் தூண்டுதல்), ஸ்ரோதோ சோதனம் (நாள சுத்தி), ப்ரும்ஹணம் (உடலை தேற்றுதல்), லேசான விரேசனம் (பேதிக்கு) என சிகிச்சை அளித்தார்  சியவன பிராசம், கூஷ்மாண்டம் (வெண்பூசனி)  என ரசாயனமாக (ஆயுராவேதத்தில் ரசாயனம் என்பது ஆங்கிலத்தில் கெமிக்கல் எனும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. காயகல்பம் எனும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். ஆயுர்வேத ரீதியாக அப்பழுக்கற்ற சிகிச்சை அது. ஒவ்வொன்றையும் சரியாக செய்தார். ஆனால் ஒருநாள் மயங்கி விழுந்தான். நவீன மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சர்க்கரையின் அளவு 680 சர்க்கரை நோயின் முற்றிய நிலை (diabetic ketoacidosis- இன்சுலின் இல்லாத நிலையில் சர்க்கரை அளவு மிக அதிகமாகி கீட்டோன்களை உடல் அதிகம் உற்பத்தி செய்து ரத்தத்தில் அதன் அளவை அதிகரிக்கும் ஆபத்தான நிலை) இருந்தது இவர் கொடுத்த லேகியம் அனைத்தும் வீணாகப் போயிற்று. எவ்வளவு பெரிய மனிதர்? அவர் சிகிச்சையிலேயே தவறு நிகழ்ந்து விட்டதே. அது அவர் தவறில்லை அவருக்கு இது கற்றுக் கொடுக்கப்பட வில்லை.ஆகவே அவர் கணக்கில் கொள்ளவில்லை தவறிபோனது.  இப்படிப்பட்ட சூழல்களில் நவீன மருத்துவம் கற்றால் தான் இந்த தவறுகள் குறையும். நான் அப்போதே டேவிட்சன் பாட புத்தகத்தை  வாங்கிவிட்டேன்.” வைத்தியநாதன் அவரது ஆசிரியர். தனது குரு என செல்லுமிடத்திலெல்லாம் அவரை முன்னிறுத்துவார். குருவின் முறைமைகளின் எல்லையை கண்ணுற்று அங்கிருந்து தனக்கான தனிப்பாதையை வகுத்துக்கொள்வதற்கு அபார மனத்திண்மை வேண்டும். அப்படியான தனிப்பாதை பயணத்தை ஆசிரியரின் மீதான அவமரியாதையாகவோ வெற்றியாகவோ கருதிக்கொள்பவரும் இல்லை.   



நேர்காணலில் நோயாளி மையப் பார்வை முழுமையாக துலங்கி வரும் பகுதி என இதைச் சொல்வேன். “சரக சம்ஹிதை சூத்ர ஸ்தானம் ‘மகாசதுஸ்பாதம்’ அத்தியாயத்திலேயே இந்த கேள்வி வருகிறது. இதில் மைத்ரேயர் என்பவர் ஆத்ரேயரைப் பார்த்து “பதினாறு குணங்களும் நிரம்பிய பிஷக்,(மருத்துவன்) திரவ்யம், (மருந்து) உபஸ்தா,(செவிலி) ரோகி (நோயாளி) இருந்தும், ஒழுங்காக கற்று சரியாக மருந்து கொடுக்கிறேன் ஆனால் பலனில்லை. ஒரு போலி அளிக்கும் மருந்து பலனளித்து எழுந்து நடந்துவிட்டானே? முறைப்படி நான் கற்றதற்கும் சிகிச்சை செய்ததற்கும் என்ன மதிப்பு?"   என்று கேட்கிறார். இது 20-வது அத்தியாயத்தில் வருகிறது, “மித்யாஹாதி மைத்ரேய” (குழம்பிய புரிதல் கொண்ட மைத்ரேயா) என்று பதில் சொல்லத் தொடங்குகிறார் ஆத்ரேயர். மிக பிரமாதமான பதில் அது. “ஒருவன் கீழே விழுந்து கிடக்கிறான். அவனைத் தாண்டி செல்கிறாய். கையை கொடுக்கிறாய். அவன் எழுந்திருக்க வேண்டும் என்று தலைவிதி இருந்தால் எழுந்திருப்பான். இல்லையென்றால் அப்படியே கிடப்பான். நீ கை கொடுக்க வேண்டியது உன் கடமை. கை கொடுக்காமல் சென்றால்  அது உன் தவறு. கை கொடுப்பதுதான் சுதர்மம். 'யாவத் கண்டகதா ப்ராணா தாவத்காரியம் சிகிட்சிதம்.' பிராணன் கண்டத்தில் சென்று கொண்டிருக்கும் வரையில் சிகிச்சையை செய்ய வேண்டும் என்கிறார். வேறெந்த   மருத்துவத்தில் இப்படி சொல்லப்பட்டு  இருக்கிறது? சரகரைத் தவிர வேறு யார் இதைப் பற்றி பேசுகிறார்கள்? நீ முயற்சி செய்துக் கொண்டே இரு. இறக்கும் வரை மருந்து கொடுத்துக் கொண்டே இரு. நோய் குணமாகுகிறதோ, இல்லை குணமாகவில்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? நீ மருந்தை கொடு. அது தானே உன்னுடைய சுதர்மம். ஒரு மருந்தை கொடு அது கேட்கவில்லையா? அடுத்ததைக் கொடு, அதுவும் கேட்கவில்லையா? அதற்கு அடுத்ததைக் கொடு. இந்த வழிகாட்டலை முழுமையாக  கடைப்பிடிக்கிறேனா, என்று சொல்ல முடியாது. 70% வரை கடைப்பிடிக்கிறோம். இன்றைய வாழ்க்கை முறையில் முழுவதுமாக கடைபிடிப்பது சவாலானது. ஆனால் அடைய வேண்டிய நிலை அவர்கள் கோடிட்டு காட்டும் அந்த லட்சியம் தான். ஒரு நாள் அந்த லட்சியத்தை உறுதியாக அடைவோம். புற தேவைகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு அந்த லட்சியத்தை மட்டுமே இலக்காக கொள்ளும்போது நிச்சயம் சாத்தியமாகும்.” மகாதேவனிடம் கற்றவர்கள் இணையவழியில் அவருக்கு நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். கேரளத்தில் ஆயுர்வேந பேராசிரியராக உள்ள ஒருவர் அவரது கல்லூரி பருவத்து நினைவை பகிர்ந்துகொண்டார். மகாதேவன் அன்று மருத்துவமனைக்கு வரவில்லை. உள்ளூர் வாசியான ஒரு குடும்பம் அவரை பார்த்தே ஆக வேண்டும் என காய்ச்சலில் துவண்டு கிடக்கும் குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். இல்லத்திற்கு வரச்சொல்கிறார். மலம் வெளியேறவில்லை காய்ச்சல் அடிக்கிறது. நாடி நோக்கிவிட்டு உடனடியாக வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவரை காண பரிந்துரைக்கிறார். அருகிலிருந்த பேராசிரியருக்கு குழப்பம். வழக்கமாக காய்ச்சலுக்கு கொடுத்து பார்க்கும் சுதர்சன மாத்திரை அம்ருதாரிஷ்டம் என கொடுத்து பார்த்திருக்கலாமே என கேட்கிறார். அநேகமாக குடலில் பொத்தல் (Intestinal perforation) விழுந்துள்ளது. உடனடியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என பதில் சொல்கிறார். அவரது அனுமானம் சரி. நெடுநாளாக குடலில் டி.பி பாதிப்பு இருந்து குடல் பொத்தல் ஏற்பட்டுள்ளது. இரவு புற நோயாளிகளை பார்த்துவிட்டு நவீன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த குழந்தையை பார்த்து அவர்களது பெற்றோருக்கு நிலையை விளக்கிச்சொல்கிறார். மகாதேவன் எனும் மிகச்சிறந்த மனிதர் வெளிப்பட்ட தருணங்களில் ஒன்று. நோய் கண்டறிதலில் அல்லது சிகிச்சையில் ஏதும் பிழை ஏற்பட்டால் அவரால் அன்று உறங்க முடியாது. தனிப்பட்ட துயராக, தோல்வியாக வரிந்துகொள்வார். பல சமயங்களில் இதுவே மன அழுத்தத்தின் எல்லைவரை அவரை கொண்டு செல்லும். உள்ளுணர்வு என்பது மனச்சாய்வாக இல்லாமலிருக்க பெரும் அறிதலும் பயிற்சியும் வேண்டும். நோய் கண்டறிதலில், அதிலும் குறிப்பாக அரிய நோய்களை கண்டறிவதில் மகாதேவனுக்கு இணையான இன்னோரு ஆயுர்வேத மருத்துவரை நான் கண்டதில்லை. 

சில உள்ளூர் நண்பர்கள் மகாதேவனை விட சாரதா வைத்தியசாலையில் உள்ள மற்றொரு முத்த மருத்துவரான சிதம்பரம் அவர்களை காண்பதையே விரும்புவதாக என்னிடம் சொன்னதுண்டு.‌ தொடக்கத்தில் எனக்கிது ஆச்சரியமாக இருந்தாலும் அவர்களது பார்வையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மகாதேவன் தொடர்ந்து வெளி இடங்களில் இருந்து கைவிடப்பட்ட அரிய நோயாளிகளையே பார்த்து அவற்றில் நிபுனத்துவம் பெற்றுவிட்டதால் அவரால் எளிய சளி இருமலைக்கூட அதன் உச்ச சாத்தியத்திலிருந்தே சிந்திக்க முடியும். 


நோயாளி மைய நோக்கைப் போன்றே ஆயுர்வேதம் பயிலவரும் சாமானிய  மாணவர்கள் குறித்து அதிகம் சிந்தித்ததும் அவரே. குறிப்பாக தமிழக மாணவர்கள் குறித்து நிறைய கவலைப்பட்டார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியின் வருகைக்கு முன் பின் என தமிழக ஆயுர்வேத கல்வியை இரண்டாக பிரிக்கலாம். தமிழ்வழியில் பயின்றவர்கள் அரசு கல்லூரியின் வருகைக்கு பிறகு அதிகம் ஆயுர்வேதம் பயின்றனர். “நான் படித்த  காலத்தில் இரண்டு பேர் தமிழ் மாணவர்கள். மற்றவர்கள்  எல்லோரும் மலையாள மாணவர்கள்.  தமிழ் மாணவர்கள் எப்போதும் வருடா வருடம் தேர்வில் தோற்றுப் போய்விடுவார்கள். காரணம் சமஸ்கிருத அறிவு குறைவு என்பதே. அவர்களுக்கு நான் பாடம் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் நான் தான் குறிப்புகள் எழுதி சொல்லிக் கொடுத்தேன்; அவர்களை தேர்ச்சியடைய வைத்தேன்.  தமிழ் மொழியில் தான் நான் படித்தேன், எனக்கு வடமொழி ஆற்றல் குறைவு என முன்னரே சொன்ல்லியிருந்தேன். தமிழில் படித்து தான் நான் தேர்ச்சியடைந்தேன். தமிழ் மேல் எனக்கு தீராத பற்று உண்டு. தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆரோக்ய ரக்ஷா கல்பத்ருமம், ஸஹஸ்ரயோகம் போன்ற புத்தகங்கள் பரிச்சயம் இல்லை. மலையாளம் தெரியாதவர்கள் படிக்கட்டுமே என்று எழுதினேன். பழைய கையெழுத்து பிரதிகளை வெளியில் கொண்டு வந்தேன். எனது தமிழ் படைப்புகளில் முக்கியமானது திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம். ஆயுர்வேதத்தின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. தமிழில் புத்தகங்கள் அதிகமாக விற்கவில்லை என்றாலும் ஆங்கில புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்க தயங்குகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்க நினைக்கிறார்கள். மூன்றுக்கு ஒன்று இலவசமாக வேறு  கேட்கிறார்கள். இதுதான் நிலை.” ஆயுர்வேத அடிப்படைகள் குறித்து தமிழில் அவர் எழுதிய நூல்கள் அத்தனையும் முக்கியமானவை. ஆயுர்வேத நூல்களில் முப்பெரு நூல்கள் என சரகர், சுசுருதர், வாக்பட்டர் இயற்றிய நூல்களை குறிப்பிடுவது வழக்கம். இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை. உண்மையில் மகாதேவனின் ‘திரிதோஷ மெய்ஞான விளக்கம்’ சமகாலத்து சம்ஹிதை நூல் என துணிந்து சொல்ல முடியும். சித்த மருத்துவத்தின் மருந்துகளை முக்குற்றங்களின் பார்வையில் அணுகி பார்க்கும் நூலும் மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ சூழலுக்கு அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியது.


மகாதேவனால் நவீன மருத்துவர்களுடனும்  ஆக்கப்பூர்வமாக உரையாட முடிந்தது. எந்த அறிகுறிக்கு என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்தவர். அலோபதி மருத்துவர்களின் நன்மதிப்பை பெற்றதுடன் நல்லுறவையும் பேணினார். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என இடப்பட்ட அரசாணை குறித்து அவருக்கிருந்த பார்வை இது :- “குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என கிளம்பினால், அது ஆங்கில மருத்துவர்கள் மனதைப் புண்படுத்தும், நட்பை கெடுக்கும். இது சரி என்றால்,  ஆங்கில மருத்துவருக்கும் ஆயுர்வேத சிகிச்சை செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அவர்களும் பச்சிலை மருந்தை கொடுக்கட்டும், என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஒப்புக்கொள்வோமா?” மனதை புண்படுத்தும் நட்பை கெடுக்கும் என்பதையே முதன்மையான காரணமாக குறிப்பிடுகிறார். தமிழக சூழலில் சித்த மருத்துவர்களுக்கும் ஆயுர்வேத மருத்துவர்களுக்குமிடையே ஒருவிதமான இறுக்கம் எப்போதும் உண்டு. மகாதேவன் சித்த மருத்துவத்தை ஆழ்ந்து கற்றார். உள்ளார்ந்த மதிப்புடன் அணுகினார். இவ்விரு முறைகளுக்கிடையே முக்கியமான பாலமாக திகழ்ந்தார். இரண்டையும் இரு கண்கள் என பிரகடனம் செய்தார். சித்த மருந்துகள் ஆயுர்வேத ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு என்பது ஆசனவாய் வழி மருந்து செலுத்தும் வஸ்தி சிகிச்சை முறையை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். ஆயுர்வேத ஆராய்ச்சிகளில் சில முக்கியமான பங்களிப்பை செய்துள்ளார். எத்தகைய ஆய்வுகள் தேவை எனும் கேள்விக்கு “ஆயுர்வேதத்தினுடைய ஆராய்ச்சி என்பது நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சையை ஆவணப்படுத்துவதுதான். நோயாளிகளின் நோய் நிலையை சிகிச்சையின் வழி ஆவணப்படுத்துவது மிக முக்கியம்.  ஒவ்வொரு நோயாளிக்கும் நோய் எப்படி குணமானது என களத்தில் மேற்கொண்ட கருத்தினையும், கருதுகோளையும், செய்முறையையும், படிப்பினைகளையும் உள்ளடக்கியது ஆகும்” என பதிலளிக்கிறார். 


மகாதேவனின் தொடக்க கால மேடையுரைகளிலும் வகுப்புகளிலும் ஒருவித அவசரம் தொனிக்கும். இதோ இப்போது ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் அவசரம் கேட்பவரைத் தொற்றிக்கொள்ளும். அவரது பல்வேறு கருத்துக்கள் வலுவாக ஒலித்ததாலேயே சர்ச்சைக்குள்ளாகின. நாடி பார்த்து நோயறிதல், வர்ம சிகிச்சை போன்றவற்றை எல்லாம் முழுமையாக நிராகரித்தார். அவற்றை புறவயமாக அனுக இடமில்லை என்பதே அவரது வாதம். ஆனால் காலப்போக்கில் இவற்றில் அவரது பார்வை மாற்றமடைந்ததை காண முடிகிறது. “வைத்யநாதன் சார் இறப்பதற்கு முன்னால் என்னிடம் ‘ஐயாயிரம் நோயாளிகளுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்காத வரைக்கும் அடுத்தவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காதே’ என கூறினார். இந்த தகுதி மிக முக்கியமானதல்லவா? 97-லிருந்து 2007 வரைக்கும் நான் ஆற்றிய உரைகள், எழுதியவற்றில் எல்லாம் நிறைய பிழைகள் உள்ளன. ஒரு அமைதி ஏற்படாமல், முழு சிகிச்சை அனுபவம் ஏற்படாமல், சாத்திரத்தை மட்டும் படித்து, மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்று விட்டோம் என்ற அகங்காரத்தில் பேசிய பேச்சு தான் பெரும்பாலும்.  இப்போது அப்படி இல்லை. பேச்சில் நிதானம் கூடியிருக்கிறது. முடியும், முடியாது என்ற ஹித  அஹித விசேஷ (நன்மை தீமை பகுத்தறிவு) ஞானம் உள்ளது. என்னாலேயே என்னை நோக்க முடிகிறது. அதனால் நான் பழைய பதிவுகளை (ரெக்கார்டிங்கை) எல்லாம் அழித்துவிடுங்கள் என சொல்லிவிட்டேன். அமெரிக்காவில் ஆற்றிய உரைகள் எல்லாம் முழுவதுமே பாட புத்தகத்தில் உள்ளவை தான். இப்பொழுது மூன்று ஆண்டுகளாகப் பேசிய உரைகள் தான் உண்மை. இனிமேல் நான் அதை மாற்றிக் கொள்ள மாட்டேன். ஏனென்றால் ஆறரை லட்சம், ஏழு லட்சம் நோயாளிகளைப் பார்த்துவிட்டு ஒரு வார்த்தை சொல்கிறோம் என்றால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கிறது.” என்கிறார். தர்க்கப்பூர்வ முறைகளை மட்டுமே கறாராக நம்பியவர் நாடி வர்மம் போன்ற முறைகளை ஏற்றுக்கொண்டார். “இன்று இம்மரபை பேணுபவர்களிடம் உள்ள சிக்கல் என்னவென்றால்  எல்லா நோய்களும் குணமாகிவிடும் என்று அதீத நம்பிக்கையுடன் பேசுவது தான். தன்னைப் பெருமைப்படுத்துவதற்காக அடுத்தவர்களை இகழ்ந்து பேசுவதும், நம்மைத் தவிர மீதி எல்லாருமே அறிவிலிகள் என்று நம்புவதும், தெரியவில்லை என்று நாம் போய்க் கேட்டால் கேலி செய்வதும் என இன்று அம்மருத்துவமுறையை பின்பற்றுபவர்களின் மனப்போக்கே முதன்மை சிக்கல்.” என்றே வர்மம் குறித்து எண்ணுகிறார். இந்திய மருத்துவத்தில் பாலியல் சிக்கல்களை தீர்ப்பதாக விளம்பரம் செய்யும் மருந்துகளைப் பற்றியும் மருத்துவர்களைப் பற்றியும் அவருக்கு பெரிதாக அபிப்ராயமில்லை.  சிட்டுககுருவி லேகியத்தின் மகிமையைப் பற்றி கேட்கும்போது “லேகியத்தால் ஒன்றும் பெரிய பலன் இல்லை, வேண்டுமானால் வெளியில் இருக்கும் அட்டைப்படத்தினால் ஏதாவது பலன் என சொல்லிக்கொள்ளலாம்.” என தனக்கேயுரிய கிண்டலுடன் சொன்னார். தொடக்க காலத்தில் உடலில் இருந்து மலத்தை வெளியேற்றி சுத்திகரிக்கும் சிகிச்சை முறைகள் மீது பெரும் ஈடுபாடிருந்தது. வாந்தி எடுக்க வைக்கும் சிகிச்சை போன்றவற்றை எல்லாம் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் காலப்போக்கில் இத்தகைய கடினமான சிகிச்சை முறைகளை குறைத்துக்கொண்டு நோயாளிகளுக்கு உகந்த முறைகளுக்கு மாறினார். பஞ்சகர்ம சோதனை சிகிச்சைகள் இல்லாமல் உள் மருந்துகள் கொடுக்கும்போதும் அதே விளைவை ஏற்படுத்தமுடியும் எனும் இடத்தை வந்தடைந்தார். ஆயுர்வேத சாத்திரங்களின் மீது நன்மதிப்பும் அடிப்படை நம்பிக்கைகளும் கொண்டிருந்தாலும் எல்லாவற்றையும் அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து மதிப்பிட்டார். எவை பலனளிக்கிறது எவை பலனளிக்கவில்லை என்பதை வெளிப்படையாக பேசினார். 

மகாதேவன் தனது ஆசிரியரும் தாத்தாவும் ஆயுர்வேதத்தை முழுக்க நம்பினார்கள் என்கிறார். இறுதிவரை நவீன மருத்துவத்தை நோக்கி செல்லவே இல்லை என்பதாலேயே அவர்களுடைய வெற்றி சதவிகிதம் அதிகம் என்கிறார். உள்ளார்ந்து அவர்கள் அளவிற்கு தனக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.  ஒருவகையில் இந்த ஐயமும் தீர்மானமின்மையும்தான் மகாதேவனின் தனித்தன்மை என்று கூட சொல்லலாம். ஆயுர்வேதம் கற்க விரும்புகிறவருக்கு என்ன சொல்வீர்கள் எனும் கேள்விக்கு இப்படியான ஒரு பதிலை தருவித்தது. “ஆயுர்வேதம் படிக்காதே என்று சொல்வேன். ஆயுர்வேதத்தை கல்லூரியில் நன்றாக சொல்லிக்கொடுக்கக்கூடும், ஆனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இல்லை. ஒரு சில மருத்துவமனைகளே வெற்றிகரமாக நடக்கின்றன. பல கல்லூரிகளில் ஈ ஓட்டுகிறார்கள். பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் கற்பதில்லை, விதியே என கடனுக்கு கல்லூரி வந்து செல்வார்கள். மூலிகைச் செடிகளை அடையாளம் காணும் அறிவு கிட்டுவதில்லை, மருந்து செய்யும் கலை வளர்வதில்லை. பத்து மாணவர்களில் இருவர் தான் வெற்றியடைகிறார்கள். மீதி எட்டு பேருக்கும் தோல்விதான். இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே வேறு ஏதாவது நல்லப் படிப்பு படி என்று தான் சொல்வேன். குடும்பப் பாரம்பரியம் உள்ளது, அதை தொடர வேண்டும் என்றால் படி என்று சொல்வேன். அபரிமிதமான உற்சாகம், ஞானம், உழைப்பு உள்ளவர் வந்தால் படி என்று சொல்வேன். ஆயுர்வேதம் படிக்கவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது, படித்தால் ஒரு சில நன்மைகள் விளையும், இன்றைய காலகட்டத்தில் இது கண்டிப்பாக, இன்றியமையாத ஒரு மருத்துவ சாஸ்திரம் என்று சொல்வதற்கில்லை. நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.” நேர்காணலின் இறுதி கேள்வி இது. ஏதேனும் ஒரு உச்ச புள்ளியில் நிறைவு செய்வார் எனும் நோக்கில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் எதிர்பார்க்காத வேறொரு பதிலை கூறினார். ஆயுர்வேதத்தின் கோணத்திலிருந்து சிந்திக்காமல் சாமானிய மாணவரின் கோணத்திலிருந்து  மெய்யான கரிசனத்துடன்  சொல்லப்பட்ட பதில். அந்த பதிலில் சுடரும் அறிவார்ந்த நேர்மை காரணமாகவே அது நம்மை சுடுகிறது. 



 அவரது ஆன்மிக வாழ்வு குறித்து நேர்காணலின் போது பேசக்கிடைத்தது ஒரு அரிய வாய்ப்பு. முற்றிலும் வேறு சில திறப்புகளை அளித்தன. பரமஹம்ஸ யோகானந்தரின் மரபில் கொஞ்சகாலம் இணைந்திருந்தார். யோகானந்தரின் சுயசரிதை நூலை அவர் படித்த கதையே சுவாரசியமானது “1987 ல் ராமகிருஷ்ணா மடத்தில் இருந்து ஒய்.எம்.சி.ஏ வரைக்கும் தினமும்  நடப்பேன். அப்பொழுது அந்த வழியில் உள்ள புத்தகக்கடை அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின்  அட்டையில்  உள்ள அவரது முகம்  என்னைப் பார்த்து சிரிப்பது போல் தோன்றும். தினமும் அவரைப் பார்ப்பதற்காகவே, நடக்கத் தொடங்கினேன். தினமும் பார்க்கப் பார்க்க முகம் பெரியதாகிக் கொண்டே இருப்பது போல் தோன்றும். என்னடா இது! என்று குறுகுறுப்பு. ஒருநாள், இவர் யார்? என்ன புத்தகம்? என அப்புத்தகக் கடைக்காரரிடம் கேட்டேன், அவரும் “அது ஒரு சாமியுடைய வாழ்க்கை வரலாறு” என்று சொல்ல, அந்தப் புத்தகத்தை வாங்கினேன்.” யோகானந்தரின் நேரடி சீடரான ராய் யூஜின் டேவிஸின் நூலை மொழியாக்கம் செய்தார். ஆனால் தனக்கென நிலையான ஒரு வழியையோ குருவையோ அவர் கண்டுகொண்டாரா என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. “ஸ்ரீவித்யா மார்க்கத்தில் இருந்தேன்; யோக மார்க்கத்தில் பயணித்தேன்; பூஜைகளை செய்தேன். கோவில் கோவிலாக அலைந்திருக்கிறேன். தான தர்மங்கள் செய்தேன். ஆனால் இவை எதிலுமே நிறைவை உணர இயலவில்லை. கர்மாக்கள் சேர்ந்து இருக்கக்கூடும். அது நமக்குத் தெரியவில்லை. குருவினுடைய திருவடியைத் தவிர வேறு மோட்சமே இல்லை.” என தனது அலைச்சலைப் பற்றி எழுதுகிறார். நான் அவருடன் உரையாடியபோது காலஞ்சென்ற திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்த சுவாமிகளை குருவாக‌ கண்டுகொண்டதாக குறிப்பிட்டார். “இன்னொரு இடத்தில் எதையும் படிக்காதே, எதையும் செய்யாதே, நான் என்ன சொல்கிறேனோ அதைக் கேள், ஏற்கனவே நான் எல்லாம் படித்துவிட்டேன், கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு போய்விடுகிறேன், கூடவே வா என்கிறார். மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது, நம்பிக்கை அளிக்கிறது.  மிகவும் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த போதெல்லாம் அவருடைய அருளை உணர முடிந்தது. அனுக்கிரகம் என்பது அத்ரவியம் (புலனறிதலுக்கு அப்பாலானது) ஆயிற்றே? அதை நான் எப்படி சொல்ல முடியும்? உணர்வுகளை எப்படிச் சொல்ல முடியும்? உருவம் கொடுக்க முடியுமா? இனிப்பு, இனிப்பு என்று தான் சொல்ல முடியும். நான் ஒழுக்கமாக வாழத் தொடங்கி, சரணாகதி பாவம் கைவரும் தோறும் எனக்கு அதுவரை நிகழாதது எல்லாம் நிகழத்தொடங்கியது. வெளியில் இதைச் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. என்னைப் பொறுத்தவரை உண்மை. நீங்கள் அதனை உண்மை என்று உணர்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. எவ்விதத்திலும் நடக்கச் சாத்தியமில்லாததெல்லாம் நடந்தது இது உண்மை சத்தியம்.”  என்கிறார். ஆயுர்வேதத்தின் தர்க்கவழி மருத்துவம் எனும் எல்லையை கடந்த சில அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நாட்பட்ட தீரா நோய்களைப் பற்றி குறிப்பிடும்போது “சிகிச்சையளிக்கலாம் தான். அச்சிகிச்சை அளிப்பவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய் தீர்க்க முயல வேண்டும். டாக்டர் ஆகலாம், ஆனால் ஹீலராகி  குணப்படுத்த முடியுமா? குணப்படுத்துதல் என்பது வேறு. குணமாக்குதல் என்பதொரு வேள்வி.  முழு ஈடுபாடு வேண்டும். அதை எல்லாருக்கும் என்னால் செய்ய இயல்வதில்லை. நூறில் நான்கு பேருக்கு சாத்தியமாகிறது. பாக்கி 96 பேருக்கு நான் கற்ற பாடத்தை அடிப்படையாக கொண்ட சிகிச்சை தான் அளிக்க முடியும். சிலருக்குக் கேட்கும், சிலருக்குக் கேட்காது. சங்கல்பம் (உறுதி ஏற்றல்) செய்து கொண்டு மருந்து கொடுத்தால் பொதுவாகக் கேட்கும்.” என குறிப்பிடுகிறார். இத்தகைய அனுபவங்களை பேசும் பெரும்பாலோனோர் தர்க்கரீதியான சிகிச்சை முறைகளை கைவிட்டு முழுவதுமாக குணப்படுத்துதல் நோக்கி நகர்ந்து அதையே பிராச்சாரம் செய்வார்கள். இவை அரிய நிகழ்வு. அறிவியலின் “விளைவை மீளுருவாக்குதல்” ( repeatability of results) கோட்பாட்டுக்கு பொருந்தாதது. இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பெற்றாலும் அதை அவர் பெரிதாக முன்வைக்கவில்லை. மறைக்கவும் இல்லை. “பிரார்த்தனை செய்வது நல்லது. பிரார்த்தனையினால் ஒரு சில நோய்கள் எளிதாக குணமாகும். ஆனால் அதுவும் ஒரு சிலருக்கே நடக்கும். எல்லோருக்கும் பலனளிக்கும் என சொல்லிவிட முடியாது. ஆகவே இதை விளம்பரப்படுத்துவது தவறானது.” என இவ்வகை நம்பிக்கை சார்ந்த முறைகளின் எல்லையை வரையறை செய்கிறார். 


தொழில்முறை மருத்துவராக மகாதேவன் மருத்துவ அறங்களைப் பின்பற்றுவதில் ஒரு முன்மாதிரி. “அறத்தால் வருவதே இன்பம்- கமிஷன் வாங்க கூடாது, பரிசுப் பொருள் வாங்கக் கூடாது. கொரோனாக் காலத்தில் கொள்ளையடிக்கக் கூடாது. போடுகின்ற பில்லை முதல் நாளே சொல்லிவிட வேண்டும். ஏழைகளுக்கு இரங்க வேண்டும். அறத்தினாலேயே இன்பம் வரும், அறத்தை கைவிட்டுவிட்டு பூஜைகளை செய்து என்ன பயன்? இறைவனை வணங்குவதினால் பலன் இல்லை.” மேற்சொன்னவற்றை அவர் இறுதிவரை பின்பற்றினார். பின்பற்றுதலே எங்களுக்கு போதனை. 


‘முதற்கால்’ எனும் எங்கள் நேர்காணல் நூலை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டுரையை எழுதினேன். தனிப்பட்ட நினைவுகள் பல முட்டி மோதுகின்றன. அவரது சின்ன சின்ன உடலசைவுகள் காட்சிகளாக மனக் கண்ணில் தோன்றுகின்றன. மகாதேவன் சமகால பாரம்பரிய மருத்துவ உலகின் பேராளுமை. இன்னும் இருபதாண்டுகள் இருந்திருந்தால் அவர் பல எல்லைகளை கடந்திருப்பார். எப்படி மரணமடைந்தார் என்பதற்கு தர்க்கப்பூர்வமான பதில்கள் உள்ளன ஆனால் ஏன் இறந்தார் எனும் கேள்விக்கு எந்த பதிலும் சமாதானத்தை அளிக்கவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் மாணவர்களுடன் மகாதேவன் உரையாடிய ஒரு சிறிய பகுதி அவருடைய மரணத்தையொட்டி அதிகமாக பரப்பப்பட்டது. அதில் “மகாதேவன் எனும் இந்த வடிவத்தின் மீது பற்று கொள்ளாதீர்கள். பிரிவு துயரத்தை அளிக்கும்” என்கிறார். 55 வயதில் எது அவரை இப்படி சொல்ல வைத்தது என தெரியவில்லை. ஆயுர்வேதம் இந்த மண்ணில் இன்னும் சில ஆண்டுகள் உயிர்ப்புடனிருந்தால், அல்லது எப்போது வரை உயிர்ப்புடன் உள்ளதோ அப்போது வரை மகாதேவனும் எங்களுடன் இருப்பார். ஆசிரியருக்கு மனமார்ந்த அஞ்சலிகள். 







 




  •  

சாவித்திரிபாய் பூலே

ஜோ : வணக்கம் செல்லங்களா! சிறார்கள் : வணக்கம் ஜோ அத்தை! ஜோ : இன்னைக்கு இந்தியாவில் பெண்கல்விக்கு வித்திட்ட இந்தியாவின் முதல் பெண்...

  •  

இலட்சியவாதிகள் இன்று எங்கே?

காந்திகளிடமிருந்து ஒரு விருது

அன்புள்ள ஜெ,

கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் கையால் நீங்கள் விருது பெறும் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு இணையச் சூழலில் அடிக்கடி காதில் விழும் சொற்றொடர் ஒன்று உண்டு. அந்தக்காலத்தில் மாபெரும் தியாகவாழ்க்கை வாழ்ந்த ஆளுமைகள் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது இல்லை, இனிமேல் வரவே போவதில்லை, வாய்ப்பே இல்லை என்றெல்லாம் எழுதுகிறார்கள். இலட்சியவாதமே இல்லை என்று சொல்வது ஒரு பெரிய வழக்கமாகவே உள்ளது. ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக ஓர் இலட்சியவாத உலகையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று இருக்கிறார்களா?

ராஜி சாம்பசிவம்

அன்புள்ள ராஜி,

இந்தப் பேச்சை முன்வைப்பவர்கள் எவர் என்பதே முக்கியம். அவர்கள் உண்மையில் இலட்சியவாதத்தை பார்ப்பவர்கள் அல்ல. இருட்டை மட்டும் பார்ப்பவர்கள். இருட்டை முன்வைக்கவே அவர்கள் இலட்சியவாதத்தை இழந்தவர்களாகவும், அதை எண்ணி ஏங்குபவர்களாகவும் பாவனை செய்கிறார்கள்.

அவர்கள் ஏன் இருட்டையே பார்க்கிறார்கள். இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்களிடமுள்ள உளச்சோர்வு, சலிப்பு. இரண்டு, அவர்கள் தங்களுடைய சொந்த இருட்டை நியாயயப்படுத்த முயல்கிறார்கள். ‘இப்பல்லாம் யார் சார் யோக்கியன்’ என்பவனே உண்மையான அயோக்கியன். அவனுக்கு தன் அயோக்கியத்தனம் ஒன்றும் அரிதானதல்ல, எல்லாரும்தான் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்று நிறுவவேண்டியுள்ளது.

இலட்சியவாதம் என்பது ஓர் இயல்பான மனநிலை. எப்படி தன்னலமும், தீமைநாட்டமும் இயல்பாக மானுடரிடம் உள்ளதோ அதைப்போல இதுவும் உள்ளது. சிலரிடம் தன்னலமும் தீமைநாட்டமும் ஓங்கியிருக்கும், சிலரிடம் இலட்சியவாதமும் தியாகநோக்கும் ஓங்கியிருக்கும். அவர்கள் அதில்தான் இன்பத்தையும் நிறைவையும் கண்டடைய முடியும். அவர்களால் அப்படித்தான் இருக்கமுடியும். இரு சாராரும் என்றுமிருப்பார்கள், இரு தரப்பினிடையே போராட்டமும் என்றுமிருக்கும்.

தன்னலம் ஓங்கி இலட்சியவாதம் பின்னடைவு கொள்ளும் காலங்கள் உண்டு. இலட்சியவாதம் ஓங்கி தன்னலம் பின்னடைவு கொள்ளும் காலங்களும் உண்டு. காந்தியைப்போல ஒருவர் முன்னெழுந்து வந்து ஓர் அரசியல் – மெய்யியல் பேரியக்கத்தை முன்னெடுக்கையில் ஒட்டுமொத்தமாகவே இலட்சியவாதம் மேலோங்கியிருக்கும். ஆனால் அப்போதும் தன்னலமும் தீமையும் சற்றுக் குறைவான விசையுடன் இருந்துகொண்டேதான் இருக்கும். அதேபோல தன்னல யுகத்திலும் சற்றுக் குறைவான வீச்சுடன் இலட்சியவாதம் இருந்துகொண்டேதான் இருக்கும்.

ஆனால் மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அல்லது ஒட்டுமொத்தமாக நம் சமூகச்சூழலைப் பார்த்தால் மானுடனின் உயர்விழுமியங்களும் இலட்சியவாதமுமே ஓங்கியிருக்கின்றன என்பதைத்தான் காணமுடிகிறது. மெய்யாகவே அறங்கள் அற்றுப்போன ஒரு காலகட்டத்தில் நாம் சில நாட்கள்கூட வாழமுடியாது. ஒவ்வொரு கணமும் நாம் சகமனிதனின் அறவுணர்வை நம்பியே வாழ்கிறோம். ஒட்டுமொத்தமாகச் சமூகம் கொண்டுள்ள நீதியுணர்வை நம்பியே நாம் உயிருடனிருக்கிறோம்.

மானுடம் ஒவ்வொரு தலைமுறைக்கும் தன் அறவுணர்ச்சியை மேம்படுத்திக்கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்விலுள்ள நீதி, சுதந்திரம், நிகர்நிலை ஆகியவை செழுமைப்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. அதுதான் தன்னலம், தீமை ஆகியவற்றின்மேல் அறமும், இலட்சியவாதமும் அடைந்துகொண்டே இருக்கும் வெற்றிக்கான சான்று. மேலும் மேலும் முன்னகரும் கனவையே நாம் இலட்சியவாதமாகக் கொண்டிருக்கிறோம். இன்றைய சூழல்மேல் நமக்குள்ள மனக்குறையும் ஒவ்வாமையும்கூட மேலும் சிறந்த ஒன்றைநோக்கிச் செல்லும் விழைவின் விளைவே. அதுவும் இலட்சியவாதம்தான்.

எனில் இன்றைய சூழலில் இலட்சியவாதிகள் எங்கே? இன்று அவர்கள் ஏன் நம் கண்ணுக்குப்படவில்லை? இதைத்தான் எளிய உள்ளங்கள் அவ்வப்போது கேட்கின்றன.

அவர்கள் நம்மைச்சூழ்ந்து இன்றும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். பொதுநீதிக்காகப் போராடுபவர்கள், மக்கள் பணியாளர்கள், கொடையாளர்கள், தியாகிகள் எத்தனைபேர். கொஞ்சம் கவனித்தால் ஒவ்வொருநாளும் அவர்களைக் காணமுடியும். நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மூழ்கியிருப்பதனால் அவர்களை அறிவதில்லை. நம் அச்சங்களால் அவர்களை அறிந்தாலும் கண்களை மூடிக்கொள்கிறோம்.

சேவை மட்டுமல்ல தன்னலமே அற்று முழு அர்ப்பணிப்புடன் செய்யப்படும் அறிவுப்பணியும் இலட்சியவாதமே. கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன், பேரகராதியைத் தயாரித்த எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் இன்று உள்ளனரா? ஆம், நம்மைச்சுற்றி இன்றும் அத்தகைய அருஞ்செயல்கள் நடத்துகொண்டேதான் உள்ளன.

எனில் என்ன வேறுபாடு? சென்ற தலைமுறையினர் அறவோரை, தியாகிகளை, அறிவுத்தளத்தில் அருஞ்செயல் புரிந்தோரை மதித்தனர், அவர்களைத் தேடிச்சென்று அறிந்துகொண்டனர், அவர்களைப் போற்றினர். ஆகவே அவர்கள் அக்காலகட்டத்தின் முதன்மை ஆளுமைகளாகத் திகழ்ந்தனர். முன்னுதாரணங்களாக கருதப்பட்டனர்.

மாறாக நாம் இன்று அரசியல்வாதிகளால் தங்கள் அதிகார நோக்குடன் உருவாக்கப்படும் ஊதிப்பெரிதாக்கப்பட்ட ஆளுமைகளை மட்டுமே அறிந்திருக்கிறோம். அவர்களே சாதனையாளர்கள் என்றும் அவர்களே நம்மை காப்பாற்றியவர்கள் என்றும் நம்புகிறோம். உண்மையான பணியாளர்கள் செய்த சாதனைகளின் விளைவை எல்லாம் அதிகாரம் உருவாக்கும் பிம்பங்கள் மேல் ஏற்றுகிறோம்.

சமகாலத்தில் நாம் செல்வமும் அதிகாரமும் கொண்டவர்கள் தங்களைப் பற்றி உருவாக்கும் பிம்பங்களையே மதிக்கிறோம். ஏனென்றால் இன்றைய ஊடகங்கள் முழுமையாகவே அரசியல்வாதிகள், செல்வந்தர்களின் கைகளில் உள்ளன.

இன்று ஏன் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அறியப்படுவதில்லை? நம் கண்முன் தானே மாபெரும் மக்கள் பணியாளரான வி.ஜீவானந்தம் வாழ்ந்து மறைந்தார், வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் நாம் அவரை ஏன் அறிந்திருக்கவில்லை? கிருஷ்ணம்மாளிடமிருந்து நான் விருதுபெற்ற அந்நிகழ்விலேயே சிவராஜ், அன்புராஜ் என மக்கள்பணியாளர்கள் குறைந்தது இருபதுபேர் அரங்கு நிறைந்திருந்தனர். கிருஷ்ணம்மாளின் மகன் பூமிகுமாரும் மகள் சத்யாவும் கூட முற்றிலும் தனிவாழ்க்கையே அற்ற மாபெரும் மக்கள்பணியாளர்களே.

நேற்று வையாபுரிப்பிள்ளையும் தூரனும் இருந்தார்கள் என்றால் இன்று குடவாயில் பாலசுப்ரமணியனும் அ.கா.பெருமாளும் இருக்கிறார்கள். அத்தகைய அர்ப்பணிப்புள்ள அருஞ்செயலாளர் பலர் உள்ளனர். நாம் அவர்களைப் பற்றி அறிதலில்லாமல் இருக்கிறோம். பிரச்சினை இருப்பது நம்மிடமேநாம் அவர்களை அறியவில்லை, மதிக்கவில்லை என்பதனால் அவர்கள் சிறியவர்கள் ஆகிவிடுவதில்லை. நம் அறியாமை அவர்களை இல்லாதவர்களும் ஆக்கிவிடுவதில்லை.

அடிப்படையான பிரச்சினை ஒன்றே. சமகால அரசியல். அது அதிகாரவெறி கொண்டது. அதன்பின் ஒரு தரப்பை இன்னொரு தரப்பு கடித்துக்கிழித்துக் குதறுவது. சாதி, மதம், இனம், மொழி, வட்டாரம் என நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவது. நாம் நம்மையறியாமலேயே அந்த வெறியில் கலந்து ஏதேனும் ஒரு பக்கத்தை சார்ந்துவிடுகிறோம். நம் பக்கத்து வெற்றுவேட்டுக்களை ஏற்கவும் நம்மை ஏற்காத எவரையும் வெறுத்து இழித்துரைக்கவும் பழக்கப்படுத்தப்படுகிறோம்.

இந்தச் சமகால அதிகார அரசியலென்பது ஒரு வகை ரேபீஸ். நாம் ஒருவரை ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் நோயுற்ற கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. நம்மை மனநோயாளிகளாக்கி அதிகாரம் நோக்கிச் செல்லும் கூட்டம் நாம் என்ன சிந்திக்கவேண்டும் என சொல்கிறதோ அதை மட்டுமே சிந்திக்கிறோம். ஆகவே நமக்கு மெய்யான இலட்சியவாதிகள் தெரிவதில்லை. அந்த குருட்டுத்தனத்துடன் அவர்கள் இல்லவே இல்லை என சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நாம் இலட்சியவாதம் மேல் உண்மையான ஆர்வம்கொண்டவர்கள் என்றால் இலட்சியவாதிகளை நாமே தேடிச்சென்று அறிவோம். அவர்களையே நம் காலகட்டத்தின் முகங்கள் என முன்வைப்போம். அது மட்டுமே நாம் செய்யக்கூடுவது.

ஜெ

  •  

வேலியண்ட் – ஐரோப்பிய செவ்வியல் இசையின் புது தொடக்கம்

பல இந்திய வாத்தியங்களை தனது பாடல்களில் நல்ல முறையில் அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாது அவற்றைக் கொண்டு தேவையான உணர்வுகளை ரசிகர்களிடையே உண்டாக்க முடியும் என உணர்ந்த ஒரு ஞானவான் அவர். அடுத்தடுத்த வரும் சிம்பொனிகளில் இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ரசிகர்களாக நமது வேண்டுகோளாக இருக்க வேண்டும். இந்திய இசைக்கும், இளைஞர்களிடையே செவ்வியல் இசைக்கலையில் எதிர்காலம் பற்றி அவை பல புதிய திறப்புகளை அளிக்க முடியும். அது மட்டுமல்லாது, ஐரோப்பிய இசை வடிவங்களுக்கு அவை நமது பெரும் கொடையாக இருக்க முடியும்.
  •  

வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா

திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  •  

வினோத்குமார் சுக்லா கவிதைகள்

ஞானபீட விருதைப் பெறவிருக்கும், வினோத்குமார் சுக்லா 2024_ஆம் ஆண்டுக்கான, இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதினை தனது 88_ஆவது வயதில் பெறவிருக்கிறார் இந்தி எழுத்தாளரும், கவிஞரும், நாவலாசிரியருமான வினோத்குமார் சுக்லா (1 ஜனவரி 1937). யதார்த்தத்தில் இருந்து மாயத்தை வெளிக் கொண்டு வரும் நவீன பாணி எழுத்துக்காகப் "வினோத்குமார் சுக்லா கவிதைகள்"
  •