Reading view

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் 2024

2024ஆம் ஆண்டுக்குரிய “தமுஎகச கலை இலக்கிய விருது”களுக்கான நூல்கள், ஆவணப்படங்கள் / குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் விருதுகளுடன் *தோழர் கருப்பு கருணா* பெயரால் நுண்கலைகளுக்கான விருதும்,  *தோழர் ஜனநேசன்* பெயரால் எழுத்தாளரின் முதல் நூலுக்கான விருதும் இவ்வாண்டு முதல் இணைகின்றன.  2024ஆம் ஆண்டில் வெளியானவை மட்டுமே பரிசீலனைக்குரியவை. நூலின் மூன்று பிரதிகள் 2025 மார்ச் 10ஆம்
  •  

கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவை அவமதிப்பதா? - தமுஎகச கண்டனம்

தனது இசைப்புலமைக்காகவும் துணிச்சலான எழுத்துக்காகவும் சமூகச் செயல்பாடுகளுக்காகவும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சென்னை மியூசிக் அகாடமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்குரியவர் என்ற வகையில் 2024 டிசம்பர் இறுதியில் நடைபெறவுள்ள மியூசிக் அகாடமியின் 98ஆம் ஆண்டு இசை நிகழ்வுகளுக்கு கிருஷ்ணா தலைமை வகிப்பார்.

  •  

பொன் விளைந்த பூமி

சதுப்புநிலமாக இருந்த இடம், காய்ந்து, வெடித்து, பல மாற்றங்களுக்குப் பிறகு பரந்த பாலைவனமானது. நாடோடிகள் முதலில் கூடாரம் அமைத்துப் பார்த்தார்கள். ஆனால் வாழ முடியாமல் பின்பு வேறு இடம் தேடிச் சென்றுவிட்டார்கள். இந்தப் பாலைவனத்தின் முதல் தலைமுறை மைந்தர்களாக வந்தவர்கள் பனியாஸ் மக்கள். இன்றும் துபாயை ஆண்டு கொண்டு இருப்பவர்கள் பனியாஸ் பழங்குடி இனத்தவர்கள்.

மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசியல், அக்கப்போர்கள், உள்நாட்டுப் போர்கள். துபாய் மட்டும் எப்படி எப்போதும் சொர்க்கபுரியாகவே இருக்கிறது?

வெற்றியல்ல முக்கியம். அந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள சூட்சுமங்களை அலசி ஆராய நினைத்தேன். விளைவு, மண்ணின் கதையாக ஆரம்பித்த இந்த வரலாறு ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் கதையாகிப் போனது.

வரும் சென்னைப் புத்தகக்காட்சியையொட்டி வெளியீடு காண இருக்கிறது “பொன் விளைந்த பூமி”

The post பொன் விளைந்த பூமி appeared first on Naseema Razak.

  •