Reading view

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம்

அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – கட்டுரை இலக்கியத்தில் இன்னுமொரு படையல் – அ. குமரேசன் தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்ட தையும் சக மனிதர்களுக்குக் கடத்துகிற செயல்பாடுதான் மனிதர்களின் இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்று ஓங்கிச் சொல்லலாம். தகவல் தொடர்பு…

The post அப்பாவின் இளவரசி (Appavin Ilavarasi) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் 

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | மேரி ஷெல்லி எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’  (Frankenstein) நாவல்  19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்! அ. குமரேசன் எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட…

The post தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல்  appeared first on Book Day.

  •  

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம்

குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் “மனதில் குறுகுறுப்பு உருவாகி, இளையவர்கள் தாமாக இந்தக் கேள்வியை கேட்கும்வரை காத்திருந்து பதிலை தர வேண்டும் என்கின்றனர் குழந்தை மனநல நிபுணர்கள். கேள்வி கேட்கும் முன்னர் அறிமுகம் செய்வதோ; கேள்வியைக் கேட்ட பின்னர்…

The post குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

  •  

சுத்தம் அறியா மேற்குலகு

குளித்தல், துவைத்த உடை உடுத்துதல் ஆகிய இரண்டும் உலகெங்கும் மனிதர்கள் காலம் காலமாகச் செய்துவருவது, அது அவர்களது கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் என்று தான் நான் போன மாதம் வரை நினைத்திருந்தேன்.  ஆனால் வரலாற்றைப் படிக்கப் படிக்கத் தான் நாம் பல விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாமல், நாமாக ஒன்றைக் கற்பிதம் செய்து கொண்டு திரிகிறோம் என்பது தெரிகிறது.     Katherina Ashenburg  எழுதியிருக்கும் Clean – An Unsanitised History of Washing   ( சுத்தத்தின் அசுத்தமான வரலாறு) என்ற நூலைப் படித்த போது தான் குளித்தல், சுத்தமாக இருத்தல் பற்றிய எனது கற்பிதம் எவ்வளவு தவறு என்று தெரிந்தது.  கேதரினா கனடா நாட்டைச் சேர்ந்தவர்.  சிபிசி வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். தி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையின் ஆசிரியர். கல்லூரிப் பேராசிரியர். நிறைய அபுனைவுகளை எழுதிய பின் தனது 73வது வயதில் போனால் போகட்டும் என்று ஒரு நாவலும் எழுதி இருப்பவர்.  பொதுவாக சமூக வரலாறு தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தால் நம் நாட்டில் இப்படி இல்லையே என்ற துக்கம் எனக்கு ஏற்படும். ஒரு மாறுதலுக்கு தமிழர்களாகிய நாம் எவ்வளவோ பரவாயில்லை என்ற பெருமித உணர்வைத் தந்த புத்தகம் இது.

19ம் நூற்றாண்டின் இறுதி வரை மிக நாகரீகமானவர்கள் என்று நாம் கருதும் ஐரோப்பியர்கள் குளிப்பது, சுத்தமான ஆடைகளை அணிவது ஆகியவற்றிற்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொல்லும் புத்தகம் இது.  பொதுவாக சமூகத்தில் ஒரு வழக்கம் இருந்தால், அது மக்களது வாழ்க்கைத் தரம் உயர உயர மேம்படத் தான் செய்யும். காணாமல் போகாது. ஆனால் குளியல் விஷயத்தில் இது தலைகீழ். ஒரு காலத்தில் பொதுக் குளியலறை என்றெல்லாம்  ஏற்பாடுகள் வைத்திருந்த ஐரோப்பியர்கள் திடீரென அழுக்கு மூட்டைகளாக மாறிவிட்டார்கள்.  இருண்ட காலம் மாறி மறுமலர்ச்சிக் காலம் வந்த போதும், குளிப்பதில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படவில்லை. பைசா கோபுரத்தையும், மோனோலிசாவையும், ஈஃபிள் டவரையும், வெள்ளை மாளிகையையும்  குளிக்காமல் கொள்ளாமல்தான் உருவாக்கி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் எல்லாம் குளித்து சுத்த பத்தமாக இருந்தவர்கள் தான் என்கிறார் கேதரினா.  அங்கெல்லாம் கட்டணக் குளியலறை இருந்திருக்கிறது. ஷவர் கூட உண்டு. என்ன, பாத்ரூம் சுவருக்கு அந்தப் பக்கமாக அடிமை ஒருவர் நின்று கொண்டு மாவு ஜல்லடை வழியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்பார் !  ஜிம்னேஷியங்களில் கிரேக்கர்கள் நிர்வாணமாகத் தான் உடற்பயிற்சி  செய்வார்களாம். ஜிம்னேஷயம் என்ற சொல்லுக்கு நிர்வாண இடம் என்பதுதான் நேரடிப் பொருள் என்கிறார் கேதரினா.  உடற்பயிற்சி முடித்தவர்கள் குளித்து உடை மாற்ற அங்கு நல்ல வசதியான பாத்ரூம்கள் இருந்திருக்கின்றன.  அக்கால ஜெர்மனியில் கட்டணக் குளியலறையில் குளிப்பதற்காக சம்பளத்தில் ஒரு குளியல் அலவன்ஸ் ( பாடகெல்ட் – badegeld ) சேர்த்துத் தந்த காலமும் இருந்திருக்கிறது. ஆனால் யார் கண் பட்டதோ, திடீரென ஐரோப்பியர்கள் குளிக்காமல் , அழுக்கு ஆடைகளைப் போட்டுத் திரிபவர்களாக மாறிவிட்டார்கள்.  குளித்தல் என்பது மதரீதியான சடங்குகளில் ஒன்றாக மாறிப் போய்விட்டது.  சர்ச்சிற்கு சாமி கும்பிடப் போகும் போது குளிப்பது என்றானது. அதுவும் குறைந்து போய்,  சர்ச் வாசலில் ஒரு அண்டா நீரில் கையை மட்டும் நனைத்து குளித்ததாக பாவனை செய்து கொண்டு உள்ளே செல்லும் வழக்கம் வந்து விட்டது.

குளித்தல், சுத்தம் செய்து கொள்ளுதல் என்பது புறஉடல் சார்ந்ததாக இல்லாமல் அகம் சார்ந்ததாக மாறிவிட்டது.  குற்ற உணர்வைப் போக்கிக் கொள்ள குளிப்பது, கை கழுவிக் கொள்ளுதல் என்றானது. ஏசுவிற்கு தண்டனை வழங்கியதும், பாண்டியஸ் பைலேட்  கைகழுவிக் கொண்டாராம். கைகழுவி விடுதல் என்ற சொல்லாடல் நம்மிடம் இருப்பதற்கு இது போன்ற காரணம் ஏதேனும் இருக்குமோ? என்று  தமிழறிஞர்கள் விளக்க வேண்டும்.  லேடி மேக்பத் டங்கனை கொலை செய்யுமாறு கணவனைத் தூண்டும் போது, கொஞ்சம் தண்ணீர் இருந்தால் போதும், இந்தப் பாவத்தைத் தொலைத்து விடலாம் என்கிறாள் – A little water clears us of this deed என்பது அவளது வசனம்.  இறந்து போனவர்களின் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டுதல் கிட்டத்தட்ட உலகெங்கும் இருக்கக் கூடிய ஒரு வழக்கம். அதற்கு நடைமுறை சார்ந்து எந்தக் காரணமும் இல்லாது போனாலும், இறுதி மரியாதையில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் இருக்கிறது.

ஆனாலும் கிறிஸ்தவ உலகம் குளிக்காமல், சுத்தமான உடைகள் அணியாமல் இருக்க ஆரம்பித்தது. கிறிஸ்துமஸுக்கு முதல் நாளும், ஈஸ்டருக்கு முதல் நாளும் மட்டும்தான் நாங்கள் குளிப்போம் என்று கிபி 1075ல் உல்ரிச்சில் ஒரு கிறிஸ்துவத் துறவி எழுதி வைத்திருப்பதை ஆய்வாளர்கள் இப்போது கண்டெடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் இஸ்லாமிய உலகம் சுத்தத்திற்கு மிக மிக முக்கியத்துவம் தந்ததாக இருந்திருக்கிறது.  துருக்கியின் பொதுக் குளியலறையில் பல்வேறு வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொண்டு, ஆவி பறக்கும் வென்னீரில் குளிப்பது வழக்கமாக இருந்தது. இந்த பொதுக் குளியலறையின் பெயரைக் கேதரினா சொன்னதும் நான் அசந்து போனேன். அதற்கு ஹமாம் என்று பெயர். இன்று ஒரு பிரபலமான சோப் . இதைப் படிக்கும் சங்கிகள் இனி ஹமாம் சோப் வாங்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் !  பண்டைக்கால குளியல் பற்றிய மற்றொரு  வியப்பான விஷயம், யூத ஆண்கள் குளிக்காதவர்கள் தான் என்றாலும், மாதவிலக்கான பெண்கள் மாதவிலக்கு வந்த ஏழாம் நாள்  மிக்வெ எனப்படும் குளியல் சடங்கை நிறைவேற்றிய பின்தான் கணவனோடு இணைய முடியும். மாதவிலக்கு, தீட்டு என்ற கருத்தாக்கங்கள்  உலகின் மற்றொரு  மூலையில், ஒரு யூத சமூகத்திலும் இருந்தது விந்தைதான்.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டு வரை யாரும் தினமும் குளிக்கவில்லை. ஒரு ஆடையை அணிந்தால் அது கந்தல் கந்தலாக கிழியும் வரை அதை அப்படியே போட்டுக் கொண்டு திரிவார்கள். மிகவும் மோசமானதும் அதை கழற்றித் தூக்கி எறிந்து விட்டு அடுத்த கந்தை. இப்போதும் நாம் வெப் சீரிஸ்களின் வரலாற்றுத் தொடர்களில் கதாபாத்திரங்களின் உடையலங்காரத்தில் இதைப் பார்க்க முடியும்.   அன்றைய வழக்கத்திற்கு மாறாக நெப்போலியனும் அவரது மனைவி ஜோசஃபினும்  தினமும் குளிக்கும் வழக்கமுள்ள சுத்தமானவர்கள். எனினும், நெப்போலியன்  “நாளை மாலை நான் பாரீஸ் வந்து விடுவேன். அதனால் நீ குளிக்க வேண்டாம்,“  என்று ஜோசஃபினுக்கு எழுதிய கடிதம் இன்றும் இருக்கிறது !

தொழிற் புரட்சி வந்தது. நிலக்கரி சுரங்கங்கள். நிலக்கரி இஞ்சின்கள் என்று ஐரோப்பாவே கரிப் புகையால் சூழப்பட்டதாக மாறியது. குளித்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. தொழிற் புரட்சி ஒரு புறம் ஐரோப்பியர்களை செல்வந்தர்களாக ஆக்கியதோடு இல்லாமல், சுத்தமானவர்களாகவும் ஆக்கியது. அப்போதுதான் கிறிஸ்துவத்தில் மெதாடிஸம் என்ற பிரிவை உருவாக்கியவரான வெஸ்லி என்ற பாதிரியார் 1791ல் இன்று பள்ளி ஆசிரியைகளால் அடிக்கடி சொல்லப்படும் Clinliness is next to Godliness  என்ற புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார். மக்கள் தினமும் குளிக்க வேண்டும், துவைத்த ஆடைகளை அணிய வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலையில்தான் அன்று ஐரோப்பா இருந்தது.   சமுதாய ஒப்பந்தம் எழுதிய ரூஸோ சுத்தம், சுகாதாரம் என்பதை அறிவியல் கருத்தாகப் பார்க்காது, தனிநபர் ஒழுக்கப் பண்பாகப் பார்க்க வேண்டும் என்று எழுதினார்.

விலங்குகளின் கொழுப்பையும், எண்ணெயையும் கலந்து சோப் தயாரிக்கப்பட்டது.  பல்வேறு வகையான எண்ணெய்களைக் கலந்து புதுப்புது சோப் தயாரிக்கும் முயற்சிகள் பரவலாக நடந்தன. அப்படியான ஆராய்ச்சியில் பாமாயிலையும், ஆலிவ் எண்ணெயையும் கலந்து தயாரிக்கப்பட்ட சோப் விற்பனையில் பெரும் சாதனை படைத்தது.  அதன் மூலப்பொருட்களான பாம் மற்றும் ஆலிவ்வை சோ்த்து அதற்கு Palmolive என்று பெயரிட்டார்கள்.  இன்று அந்த நிறுவனத்தின் தயாரிப்பை வாழ்வில் ஒரு முறையேனும் பயன்படுத்தாத மனிதர் எவருமே உலகில் இல்லை எனலாம். 19ம் நூற்றாண்டில் திருமணத்திற்கான விளம்பரங்களில் நான் தினமும் குளிப்பவள் என்பதை தனது கூடுதல் தகுதியாக பெண்கள் குறிப்பிட ஆரம்பித்தார்களாம்.

கிருமிகள் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் சுத்தம் பேணுதல் அதிகரித்தது. குளிப்பது, துணி துவைப்பதைத் தாண்டி கை கழுவுதல் மிக முக்கியமானதாயிற்று. மருந்துப் பொருளான லிஸ்டரின் வாய்துர்நாற்றம் போக்கும்  முக்கியமான திரவமாயிற்று.

சுத்தமாக இருப்பதன் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் உணர ஆரம்பித்ததும் வேறு பல மாற்றங்களும் ஏற்பட்டன. வீட்டிற்குள்ளேயே கழிப்பறை, குளியலறை வந்தன.  அமெரிக்காவில் வீட்டின் கூடம் அளவிற்கு பாத்ரூம் கட்டுவது முக்கியமான நாகரீகமாயிற்று.  இன்று நம் நாட்டிலும் கூட சொந்த வீடு கட்டுவோர் பலர்  ஆளுக்கு ஒரு கழிப்பறை என்ற கணக்கில் கட்டுவதைப் பார்க்கிறோம்.  இன்று ஒரு சராசரி அமெரிக்கர் வீட்டு பாத்ரூம் நம் நாட்டின் சிறந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை கூடத்தை விட படுசுத்தமாக கிருமிகள் இல்லாது இருக்குமாம்.

மின்சாரம், தொழிற்சாலைகளில் நவீனமயம், குதிரைகளுக்குப் பதில் மோட்டார் வாகனங்கள், மண் சாலைகளுக்குப் பதில் தூசிதும்பு இல்லாத தார் சாலைகள், வீடுகளில்,  விறகு, கரி அடுப்பிற்கு பதிலாக மண்ணெண்ணெய் ஸ்டவ் என்று மாற்றங்கள் நிகழ ஆரம்பித்த போது, மீண்டும் தினமும் குளிக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நிலை உருவானது. நாம் நினைப்பதற்கு மாறாக 1920களில் ஐரோப்பா முழுவதும் சோப் விற்பனை குறைந்தது என்கிறார் கேதரினா. அப்போதுதான் சோப் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் என்ற ஒரு புது வியாபார யுக்தி உருவானது. ரேடியோ நாடகங்களுக்கு ஸ்பான்சராக சோப் கம்பெனிகள் விளம்பரம் செய்தன. அதனால், இந்த நாடகங்களுக்கே சோப் என்ற பெயர் வந்தது.  கண்மை, பௌடர், லிப்ஸ்டிக் என அழகுப் பொருட்கள் ஆயிரம் இருந்தாலும் கூட,  குறிப்பிட்ட சோப்பைப் பயன்படுத்தினால் அழகாகி விடலாம் என்ற விளம்பரங்கள் வர ஆரம்பித்தன.   பத்து சோப் உறையைக் கொடுத்தால் பரிசு என்பது போன்ற திட்டங்கள். விளம்பரம் என்ற தொழில் பாய்ச்சல் வேகத்தில் வளர சோப் என்ற ஒற்றைப் பொருள் காரணமாக அமைந்தது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் இயற்கையான உடலின் வாசனை எது என்பதே தெரியாமல் போய் எல்லோரும் மாம்பழம், செர்ரி, அன்னாசி என்று பழ வாசனையில்தான் இருக்கிறார்கள் என்கிறார் கேதரின். எனக்கு சிறுவயதில் அவள் பழவாசனையோடு இருந்தாள் என்று சுஜாதா எழுதியதைப் புரியாமல் படித்தது நினைவுக்கு வந்தது,

இத்தனை மாற்றங்கள் நடந்ததை எல்லாம் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி 1972ல் தான்   முதன்முறையாக bathroom என்பதை தன் அகராதியில் சேர்த்துக் கொண்டதாம். கல்வியாளர்கள் எல்லா நாட்டிலும் இப்படித்தான் மந்தமாக இருக்கிறார்கள்.

இன்று கொரானா காலத்தில், அதற்குப் பிறகான காலத்தில் சுத்தத்திற்கான முக்கியத்துவம் எவ்வளவு அதிகரித்து விட்டது என்று யாரும் யாருக்கும் சொல்ல வேண்டியதே இல்லை.  பெட்ரோலிய நிறுவனமான ஷெல் எந்தப் போக்குவரத்தும் அற்ற அந்த ஊரடங்குக் காலத்தில் சும்மா இருக்காமல் ஹேண்ட்வாஷ் தயாரித்து விற்றது என என் உறவினரான அதன் உயரதிகாரி ஒருவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது.

புத்தகத்தைப் படித்து முடித்த போது, வழக்கத்துக்கு மாறாக நம் முன்னோர்களை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது.  போப் ஆண்டவர்களும், எடின்பரோ கோமகன்களும், விக்டோரியா மகாராணிகளும் மாதக் கணக்கில் குளிக்காமல், அழுக்கு உடைகளோடு திரிந்த காலத்தில் நம் முன்னோர்கள் கந்தையானாலும் கசக்கிக் கட்டினார்கள். அப்படிக் கசக்கும் போது அது கிழிந்து போனாலும், இக்கலிங்கம் போனாலென்ன, ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை என்று கவி பாடினான் எங்கள் ஊர்க்காரன் ஒருவன்.  இந்த ஒரு விஷயத்தில் நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Clean – An Unsanitised History Of Washing  by Katherina Ashenburg.

நன்றி – உயிர்மை ஏப்ரல் 2025 இதழ்

  •  

பேசும் பொம்மைகள் – நூல் அறிமுகம்

பேசும் பொம்மைகள் – நூல் அறிமுகம் ஒரு அறிவியல் கருத்தாக்கத்தை அறிவியலுக்குள் ஆழமாக, அறியாத பல மருத்துவ செய்திகளை எளிமையாக அதே நேரம் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். டவுன்லோடிங் மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் பிரதி எடுத்து இயந்திரத்திற்கு பேஸ்ட் செய்தால்…

The post பேசும் பொம்மைகள் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம்

இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – ஒரு வாசிப்பு பகிர்வு ஈரோடு தமிழன்பன் அவர்களின் பெரும் உழைப்பிலான தொகுப்பு. உலகின் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலங்களில் வெளிவந்த சிறந்த கவிதைகளும் இந்திய மொழிகள் சிலவற்றின் கவிதைகளும் இத்தொகுப்பில் காணப்படுகிறது. எல்லா மொழி கவிதைகளையும்…

The post ஈரோடு தமிழன்பனின் இறக்குமதி (மொழிப்பெயர்ப்பு கவிதைகள்) – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

சமைக்கக் கற்ற குரங்குகள்

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

  •  

சமைக்கக் கற்ற குரங்குகள்

ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் எப்போதும் வலியுறுத்திச் சொல்வாரே, இந்தக் கட்டுரை அது பற்றியது அல்ல என்ற மறுப்புரையோடு இதை ஆரம்பிக்கிறேன்.

தீ எரிக. அதனிடத்தே தசை பொழின்றோம். தீ எரிக. அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம். தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக. தீயே நீ எது உயிரின் தோழன். உ்னனை வாழ்த்துகின்றோம்… என்று  பாரதி பாடியது நமக்குத் தெரியும். ஆனால் அதில் தசை பொழியவும், செந்நீர் பொழியவும் மனித சமூகம் எப்போது கற்றது? மனித குல வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமான உணவை சமைத்து உண்பது எப்போது ஆரம்பித்தது? அது ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.  ரிச்சர்ட் வ்ராங்கம் எழுதிய Catching Fire – How Cooking Made Us Human என்ற புத்தகத்தைப் படித்த போது, பாரதி போல் தீயை வணங்குவதோடு சமைக்கப்பட்ட உணவையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று தெரிந்தது.  சமைத்த உணவு என்ற மாபெரும் மாற்றம் மட்டும் ஏற்படாவிட்டால், நாம் இப்போதும் குரங்குகளாகத் தான் இருந்திருப்போம் என்று சொல்லும் வ்ராங்கம் புகழ்பெற்ற மானுடவியலாளர். சிம்பன்ஸி போன்ற மனிதக் குரங்குகளிடம் காணப்படும் மனிதன் போன்ற குணாம்சங்களை ஆராய்ந்து ஏராளமான நூல்கள் எழுதியவர்.  மனிதக் குரங்குகள் இனத்தை அழிவிலிருந்து காக்க பாடுபட்டு வருபவர்.

மனிதன் தான் உண்ணும் உணவினால் வாழவில்லை. தான் செரிமானம் செய்யும் உணவால் தான் வாழ்கிறான் என்பது அறிவியலாளர்களிடையே புழங்கும் பழமொழி. உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் அவற்றின் மூளைத் திறனைப் பொறுத்தது. அந்த மூளையின் திறன் அவை உண்ணும் உணவின் தன்மையைப் பொறுத்தது.  பொதுவாக உயிரினங்களுக்கு உணவு, நீர், உறைவிடம் வேண்டும்.  அதோடு நின்றுவிடாமல் தீயைக் கண்டுபிடித்து, பயன்படுத்தி, உணவின் தன்மையை மாற்றி, அது இன்றி வாழ  முடியாது என்ற நிலையை ஆதிமனிதன் அடைந்த போது இன்றைய நவீன் மனிதன் தோன்றினான். மனிதனுக்கும், விலங்குக்கும் எத்தனையோ வேறுபாடுகளைக் கூற முடியும் என்றாலும், சமைத்த உணவைச் சாப்பிடுவது தான் மிகப் பெரிய வேறுபாடு. மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வேறுபாடு என்கிறார் அவர்.

19ம் நூற்றாண்டில் இது போன்ற கருத்து அறிவியலாளர்களிடம் நிலவியது. 1825ல் புகழ்பெற்ற பிரெஞ்சு உணவியல் அறிவியலாளரான சாவரின்  தீயின் மூலம் தான் மனிதன் இயற்கையை வென்றான் என்றார். தீயின் மூலமாகத் தான் மனிதன் இறைச்சியை எளிதாக உண்ண முடிந்தது.  மனிதன் சமைக்க ஆரம்பித்த பிறகு தான் இறைச்சி விரும்பிச் சாப்பிடக் கூடியதாக ஆனது. இதனால் தான் வேட்டைக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வேட்டை பொதுவாக ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியதாக இருந்தது. பெண்கள் சமைக்கப் போனார்கள். இன்றைய குடும்பம் என்ற அமைப்பு, பால்ரீதியான வீட்டு வேலைப் பிரிவினைகள் எல்லாவற்றிற்கும் சமையல் தான் ஆரம்பப் புள்ளி என்றார் அவர். அவரது கருத்துகள் தொடர்பாக, விரிவான அய்வுகள் பெரிய அளவில் நடக்கவில்லை. சாவரின் இந்தக் கருத்தைச் சொன்ன காலத்தில் டார்வின் பள்ளிச் சிறுவன். டார்வின் தனது பரிணாமக் கொள்கையைக் கூறிய போதும் கூட, மொழிக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த மாபெரும் விஷயம் சமையல் என்று சொல்வதோடு நிறுததிக் கொண்டார். சமூகப் போட்டியில், வாழ்க்கைப் போராட்டத்தில்,  அறிவாற்றல் மனிதனுக்கு ஒரு கூடுதல் சாதகச் சூழலைத் தந்திருக்கலாம் என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொண்டார். மற்ற உயிரினங்களை விட அதிக அறிவாற்றல் மனித இனத்திற்கு மட்டும் வந்ததற்கான காரணம் என்ன, எது அதை சாத்தியமாக்கியது என்பது பற்றி அவருக்குத் தெளிவு பிறக்கவில்லை.  சமைத்த உணவுதான் அந்த கூடுதல் அறிவாற்றலை மனித இனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்கிறார் வ்ராங்கம்.

சமைத்த உணவை உண்பது தான் மனித இனத்தை இன்றைய மனித இனமாக மாற்றியது என்பதை மானுடவியலாளா்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அது எப்போது, ஏன், எப்படி நடந்தது என்று அவர்களால் விளக்க முடியவில்லை.

சமையலின் தோற்றம் பற்றியே அறிவியலாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவின. பழைய கற்காலத்தின் இறுதிக் கட்டம் வரை, அதாவது சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையலுக்காக தீயைப் பயன்படுத்துவது அன்றாட நிகழ்வாக இல்லை என்று சிலர் கருதினார்கள்.  ஆனால் அந்தக் காலத்தில் குகை ஓவியங்கள் வரையும்அளவிற்கு மனிதன் நாகரீகம் அடைந்திருந்தான். மற்றொரு சாரார், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான். உணவை சமைத்துச் சாப்பிடுவதும் ஏறக்குறைய அதே சமயத்தில் ஆரம்பித்து விட்டது என்று கருதினார்கள்.  வ்ராங்கம் தொல்லியல் எச்சங்களை ஆராயாமல் உயிரியல் சான்றுகளை ஆராய ஆரம்பித்தார்.  நமது மூதாதையரின் பற்கள், எலும்புகளின் அமைப்பு அவர்கள் எவ்வகையான உணவை உட்கொண்டார்கள், அது எவ்விதமாக பதப்படுத்தப்பட்டிருந்தது என்பதைக் காட்டின. ஹோமோ செப்பியன்கள் காலத்திலேயே மனிதன் நெருப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டான் என்பதை அந்த ஆதாரங்கள் காட்டின. அது சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் மனிதன் கதகதப்பிற்காக, வெளிச்சத்திற்காக,  மற்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த நெருப்பைப் பயன்படுத்தி வந்திருக்க வேண்டும்.

சரி, அறத்தீ, உயிர்த்தீ, வேள்வித்தீ, தீயே நீ எமது உயிரின் தோழன் என்றெல்லாம் பாரதி உணர்ச்சிவசப்படும் அளவு தீ என்ன செய்தது?  அவர் உணர்ச்சிவசப்பட்டது சரிதானா? என்றால் வ்ராங்கம் சரிதான் என்கிறார்.  சமையல் உணவின் மதிப்பைக் கூட்டியது. அது நமது உடலமைப்பை, மூளையை, நமது நேர நிர்வாகத்தை, நமது சமூக உறவுகளை மாற்றியது என்கிறார். மிக முக்கியமாக, ஒரு வெளிப்புற சக்தியை நுகர்வோராக நம்மை மாற்றியது,  எரிசக்தியை நம்பி இருத்தல் என்ற இயற்கையுடனான ஒரு புதிய சமூக உறவை அது ஏற்படுத்தியது என்கிறார்.

இறைச்சி உணவு உட்கொள்ள ஆரம்பித்தது நீண்ட தூரம் பயணிக்கும் பலம், வலுவான உடல், அதிகரித்து வந்த அறிவாற்றல், அதிகரித்து வந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்கனவே உருவாக்கியிருந்தது. நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மனிதனிடம் பல்வேறு மாறுதல்கள் உருவாகின. ஏனைய விலங்குளிடமிருந்து தப்பிக் கொள்ள மரத்தில் ஏறி உறங்க வேண்டிய அவசியம் இன்றி, மனிதன் தைரியமாக தரையில் தூங்க ஆரம்பித்தான். தீயை வைத்து பிற விலங்குகளை அச்சுறுத்தி விரட்டினான். மெல்ல மெல்ல மரமேறும் திறனை இழந்தான் என்பது வேறு விஷயம்.

சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்காக அவன் மாறியதும், இன்னும் இன்னும் அவனிடம் மாற்றங்கள்.  சமைத்த, பக்குவப்படுத்தப்பட்ட உணவை எளிதாக செரிமானம் செய்ய முடிந்தது.  அதுவரை உடலின் சக்தி முழுவதும் செரிமானத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இப்போது பற்களின் அமைப்பு மாறியது. செரிமான உறுப்புகளின் அளவு குறைந்தது. உடல் அவற்றிற்காக செலவிட்ட சக்தி இப்போது மூளைக்குச் சென்றது. மனிதனின் மூளை மேலும் மேலும் வளர்ச்சி பெற்றது. அளவிலும், சிந்தனைத் திறத்திலும்.  மற்றொரு முக்கிய மாற்றம் நேரம். கிட்டத்தட்ட மனிதனைப் போன்ற உடல் அமைப்பு உள்ள சிம்பன்ஸிகள்  தம் உணவைக் கடித்து, மென்று தின்பதற்கு தினமும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கு மேல் செலவிட்டன. ஒரு பகல் பொழுதின் 42 சதவிகித நேரம்.  அதாவது இன்று நாம் டீ, காப்பி, சிகரெட், அரட்டை, கடலை போடும் நேரம் போக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரம். வேறுவிதமாகச் சொன்னால், ஒரு வேலை நாள்.  சமைக்கப்பட்ட உணவு இந்த நேரத்தை மிச்சப்படுத்தின.  தீயினால் பக்குவப்பட்ட உணவு எளிதில் செரிமானமானது. உடலின் சக்தி மிச்சப்பட்டது. இப்போதும் கூட உடல் எடை குறைய பலரும் முயல் போல் கேரட், முட்டைக்கோஸ் என்று பச்சையாகச் சாப்பிடுவது,  பேலியோ டயட் போன்றவற்றிற்கெல்லாம்  இதுதான் காரணம்.  தெரு நாய், பூனைகளை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனைகள் குண்டாக இருக்கவும் இதுவே காரணம். கோவில் யானைகளுக்கு முகாம் நடத்தவும் இதுதான் காரணம்.  நாம் அவற்றிற்கு பக்குவப்படுத்தப்பட்ட, சமைத்த உணவைத்தானே தருகிறோம்.

உணவிற்கு ருசி கூடியது ஒரு கூடுதல் சாதகம். அந்தக் காலத்துக் காக்கை பாட்டியின் வடை திருடியதற்கும், இந்தக் கால காக்கைகள் காலையில் டீக்கடைக்காரர்கள் கடை வாசலில் சிதறிவிடும் மிக்சரைச் சாப்பிடுவதற்கும் இதுதான் காரணம். நிற்க,  சாப்பிடும் நேரம் கணிசமாகக் குறைந்ததால், மனிதன் வேறு பல உபயோகமான வேலைகளைச் செய்தான். குகை ஓவியம் தீட்டுவது, கவிதை எழுதுவது என்ற உபயோகமற்ற வேலைகளையும் செய்ய ஆரம்பித்து சந்தோஷமாகவும் இருக்க ஆரம்பித்தான்.  ஆனாலும் கூட, தீயினால் சுட்ட புண் உள்ளாறும் என்று எழுதுவதற்கு எத்தனையோ யுகங்கள் ஆகியிருக்கிறது ! உணவை நேரடியாக தீயில் போட்டு வாட்டியவன் தீயை வைத்து பானை சுட அறிந்தான். சமையல்கலை மேலும் முன்னேறியது. சமைத்த உணவில் சத்துகள் அதிகரித்தன. கிருமிகள் அழிந்தன. உணவை எளிதாக கடித்துத் தின்ன முடிந்தது. உணவை அடுத்த வேளைக்கு மிச்சம் வைத்துக் கொள்ள முடிந்தது. உப்புக்கண்டம், கருவாடு எல்லாம் கண்டுபிடிக்க முடிந்தது. புதிய சுவையான சமைக்கப்பட்ட உணவின் காரணமாக மனிதனின்  அறிவாற்றல் வளர்ந்ததோடு மட்டுமன்றி, அவனால் அதிக நேரம் ஓட முடிந்தது. அதிக நேரம் வேட்டையாட முடிந்தது.  ஆயுள் அதிகரித்தது.  உடல் முழுவதுமிருந்த ரோமம் உதிர்ந்து அழகாகவும் ஆனான். சமூக உறவுகள், குறிப்பாக ஆண், பெண் இடையிலான பந்தம் எல்லாம் அதிகரித்தன. அவன் வேட்டையாடிக் கொண்டு வந்ததை, அவள் சமைத்து வைக்க குடும்பம் என்ற அமைப்பும் மெல்ல மெல்லத் தோன்றியது. வெறும் மாமிசப் பட்சிணியாக இல்லாமல் மனிதன் சமைத்துச் சாப்பிடும் உயிரினமாக பரிணமித்தான்.  தீயின் குழந்தையான அவன் சமைக்கக் கற்றுக் கொண்ட குரங்கினமாக இருந்து மெல்ல, மெல்ல இன்றைய நவீன மனிதனானான்.

267 பக்க புத்தகம். அதில் 38 பக்கங்களுக்கு உதவிய நூல்களின் பட்டியல் அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.  இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்த போது, உணவில் மாற்றம் ஏற்படுத்திய தீ மனிதனின் வழிபாட்டு முறைகளில் எப்படியோ முக்கிய இடம் பிடித்தது நம் நாட்டிற்கே உரிய ஒரு தனித்துவம். அது குறித்த ஆய்வுகள் ஏதேனும் உண்டா என்று தேடி வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உயிர்த்தீ என்று சொன்ன பாரதியை அறிவுத் தீ என்றும் சொல்ல வைத்தது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க – Catching Fire – How Cooking Made Us Human by Richard Wrangham

நன்றி – உயிர்மை மார்ச் 2025

  •  

கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம்

“தமிழர் தாவரங்களும் பண்பாடும்” புத்தகத்தில் நூலாசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தாவரங்களை தெய்வத்திற்கு இணையாக கருதியதை, “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின்பகுதியோடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப என்ற தொல்காப்பியத்தின் வார்த்தைகள் நினைவூட்டியது. உலகில் தாவரங்கள் தோன்றிய பிறகு…

The post கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் *தமிழர் தாவரங்களும் பண்பாடும்* – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்

கி.அமுதா செல்வி எழுதிய  *பசி கொண்ட இரவு* – நூலிலிருந்து சிறுகதை தொகுப்பு நூல்கள் சமீப காலங்களில் ஏராளமாக தமிழில் வெளிவருகின்றன. பரவலாக தமிழ் சமூகத்தில் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர்களும் பல வார இதழ்களில் தங்களை அறிமுகப்படுத்தி இலக்கிய உலகில் நிலைத்திருக்கும்…

The post கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

அவள் நலம் – நூல் அறிமுகம்

அவள் நலம் – நூல் அறிமுகம் மூடநம்பிக்கையை தகர்த்து, மெய் நம்பிக்கையை உயர்த்துவது அவசியம். அவள் நலம் எனும் நூல் மருத்துவர் அனுரத்னா எழுதிய நூலாகும். இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். குறிப்பாக…

The post அவள் நலம் – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •  

ஆத்தா (Aatha) – ஓர் அசாதாரணத் தாயின் கதை

ஆத்தா (Aatha) – நூல் அறிமுகம் மருத்தவர் காசியால் அவரது மறைந்த அன்னையின் ஓராண்டு மறைவுதினத்தை நினைவு கூறும் வகையில் அன்னையின் வாரிசுகளால் அன்னையைப் பற்றி எழுதியதை தொகுத்துக் கூறும் நூல் ஆத்தா. இதில் சிலர் ஆங்கிலத்திலும் அன்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.…

The post ஆத்தா (Aatha) – ஓர் அசாதாரணத் தாயின் கதை appeared first on Book Day.

  •  

வானில் 146 நாட்கள்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பும் தருணத்தில் இரண்டாண்டுகளுக்கு முன் இது தொடர்பாக நான் உயிர்மையில் எழுதிய கட்டுரை…..

அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? என்று வசனம் பேசி உலகைச் சுற்றுவதற்கு பதிலாக அம்மா, அப்பாவைச் சுற்றி வந்த கதையை அறிந்தவனான எனக்கு விண்வெளியில் தங்கி146 நாட்களுக்கு  உலகை தினமும்  16 முறை சுற்றி வந்தவரான  கிரிஸ் ஹாட்ஃபீல்டின் அனுபவங்களைப் படித்த போது மனித சக்தியின், முயற்சியின், அறிவியலின், கற்பனைக்கு அப்பாற்பட்ட   வளர்ச்சியை அறிந்து வியப்பும், பெருமையுமாக இருந்தது. An Astronauts Guide To Life On Earth  என்ற Chris Harfieldன் அனுபவங்கள் உலகில் 244 சாதனையாளர்களுக்கு மட்டுமே கிடைத்தவை.

விண்வெளி வீரர் என்பவர் ஏதோ சாகசக்காரர் அல்ல. வீரதீரச் செயல் செய்வதற்காகப் பிறந்தவர் அல்ல. இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிலிருந்து ஏராளமான தேர்வுகளின் மூலம் சல்லடை போட்டு சலித்துச் சலித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான டாலர் செலவில், மிக மிகக் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு. அந்த பயிற்சியின் பலனாக கடுமையான சூழல்களில், மிக நுட்பமான, கடினமான ஆய்வுகளை அறிவியலின் பல்வேறு துறைகளிலும் செய்து, தரவுகளை, முடிவுகளை அறிவியல் உலகிற்கு அளிக்கக் கூடிய ஒரு அரசு ஊழியர்.  அரசு ஊழியர் என்பதை மிக அழுத்தமாகவே சொல்ல வேண்டும். சொகுசுப் பேர்வழிகள், ஓசிச் சம்பளம் என்ற பல்வேறு அவதூறுகளை ஒட்டு மொத்தமாகச் சுமக்க நேரிடும் ஊழியர்களின் கடின உழைப்பை, அறிவை, விடாமுயற்சியை விண்வெளியிலிருந்து உலகிற்குப் பறைசாற்றும் ஒரு அரசு ஊழியர்.

விண்வெளி வீரராக உருவாக முதலில் ஒருவர் போர் விமானியாக, ஒலியின் வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் செல்லும் போர் விமானத்தை இயக்குபவராக இருக்க வேண்டும். அசாத்திய உடல் வலிமை இருக்க வேண்டும்.  போர் விமானம் ஓட்டும் விமானி கிட்டத்தட்ட ஒரு அறிவியல் முனைவர் அளவிற்கு, ஆய்வாளர் அளவிற்கு அறிவியல் படித்தவராக இருக்க வேண்டும்.             ஹார்ஃபீல்ட் விமான அமைப்பியல் பற்றி உயர்கல்வி கற்றவர்.  32 வகை போர் விமானங்களை ஓட்ட அறிந்தவர்.   இப்படிப்பட்டவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின், ஆய கலைகள் அறுபத்தி நான்கும் கற்றுத் தரப்படும். எங்கள் அலுவலகத்தில் தீப்பிடித்து விட்டால், தீ.. தீ.. என்று கத்தியபடி, வெளியே ஓட வேண்டும் என்று ஆங்காங்கே பெரிய பெரிய போஸ்டர் ஒட்டி வைத்திருப்பார்கள். விண்கலத்தில் தீப்பிடித்தால் வெளியே எங்கே ஓட முடியும்? ஒரு தீயணைப்பு வீரருக்குத் தரப்படும் அத்தனை பயிற்சியும் தருவார்கள். பல்வலி, நெஞ்சுவலி, கை, கால் எலும்பு முறிவு என்றால் விண்வெளியில் ஏது மருத்துவர்? ஒரு மருத்துவருக்கான அத்தனை பயிற்சியும் தருவார்கள். மாக்கட்டு போட, பல் பிடுங்க கற்றுத் தருவார்கள்.  நம் அலுவலகங்களில் கணினியில் சின்ன கோளாறு என்றாலும். ஒரு முறை அணைத்து விட்டுப் போடுவோம். அப்படியும் வரவில்லை என்றால்,  ஒர்க் பண்ணல்ல என்று அடுத்தவரை உதவிக்கு அழைப்போம். இரண்டு பேர், மூன்று  பேர் மட்டுமே போகும் விண்வெளிப் பயணத்தில் கம்ப்யூட்டர் ரிப்போ், எலக்ட்ரிகல் வேலை, பிளம்பிங் எல்லாம் சொந்தமாகத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பயிற்சி. எல்லாவற்றிற்கும் ஹோம் ஒர்க். பள்ளி, கல்லூரியில் படித்து வந்த ஹாட்ஃபீல்டின் மூன்று குழந்தைகளும். “என்ன அப்பா, எங்கள விட உங்களுக்கு            ஹோம் ஒர்க் ஜாஸதியா இருக்கு?“ என்று கேலி செய்வார்கள்.  கணினி அறிவியல். நிலவியல், ரோபோடிக்ஸ்,  ஆர்பிட்டல் மெக்கானிக்ஸ், வானிலையியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பாடங்கள் ஒரு புறம் நடக்க, மறுபுறம் மிக விலை உயர்ந்த , துல்லியமான கேமரா மூலம் படம் எடுக்கக் கற்றுத் தர உலகக் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர்கள் வேறு பாடம் நடத்துவார்களாம். விண்வெளியில் யானை, குதிரை எல்லாம் கிடையாது என்பதால் யானையேற்றம், குதிரையேற்றம் மட்டும் சிலபஸில் கிடையாது. மற்றபடி, உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் கற்றுத் தந்து அனுப்புவார்கள்.  என் போன்றோர் மதுரையிலிருந்து சென்னை செல்லவே அத்தனை முன்னேற்பாடுடன் செல்லும் போது, 62 மில்லியன் மைல் பயணம் என்றால் சும்மாவா?

புவியீர்ப்பை மீறிச் செல்ல வேண்டும் என்பதால் முதல்நாளிலிருந்தே சாப்பாடு கட். போதாதற்கு எனிமா வேறு கொடுத்து விடுவார்கள்.  பேம்பர்ஸ் மாட்டிவிடுவார்கள். உடலில் சத்தே இல்லாமல், 62 மில்லியன் மைல் பயணத்தில் கண் முன் இருக்கும் ஆயிரக்கணக்கான கருவிகளை கவனமாகக் கண்காணித்தபடி பயணிக்க வேண்டும். சிறு தவறு என்றாலும் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும்.  ஓரிரு வினாடிகள் தாமதம் என்றாலும். லட்சக்கணக்கான மைல் தூரம் பாதை விலகிவிடும். போக வேண்டிய இடத்திற்கு பதிலாக நெப்ட்யூனில் போய் இறங்க வேண்டியதுதான் ! எனவே அசாத்திய உடல் பலத்திற்குத் தயாராக வேண்டும். அசாத்திய மூளை பலத்திற்கும்.  கிடைக்கும் நேரம் எல்லாம் பயிற்சி, பயிற்சி, பயிற்சி. இத்தனை பயிற்சிகளின் காரணமாக விண்வெளிப் பயணத்தில் பிரச்சனைகளே வராமல் போய்விடாது என்கிறார் ஹாட்ஃபீல்ட்.  வரும் பிரச்சனைகளைக் கண்டு, பதட்டப்படாது, உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து, சட்டென்று  செய்வதற்கான தயார் நிலையை இந்த பயிற்சிகள் அளிக்கும், அவ்வளவுதான் என்கிறார் அவர்.

புவியீர்ப்பு இல்லாத இடத்தில் நாம் அன்றாடம் மிக எளிதாகச் செய்யும் வேலைகளும் கடினமானவைகளாக இருக்குமாம்.  ஒரு போல்ட்டை குரங்கு ஸ்பானர் வைத்து கழற்றுவது பனித்தரையில், பனிச்சறுக்கு காலணிகள் அணிந்து, எலக்ட்ரீசியன் போட்டுக் கொள்ளும் பெரிய கையுறை அணிந்து கொண்டு, டிராக்டர் ஒன்றுக்கு டயர் மாற்றுவது எவ்வளவு கடினமோ, அந்த அளவிற்குக் கடினமாக இருக்குமாம். மற்றொரு புறம், ஒரு ஆளுயர பிரிட்ஜை, சுண்டுவிரலால் எளிதாக நகர்த்தி விடவும் முடியும். எந்த வேலை கடினம், எது எளிது என்பதைப் புரிந்து கொள்வதே பெரிய பிரச்சனை.

ஹாட்ஃபீல்டும், அவரது சகாக்கள் இருவரும் 146 நாட்கள் வான்வெளியில் International Space Station  எனப்படும் வான்வெளியில் மிதக்கும் ஆய்வுக் கூடத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்து திரும்பியிருக்கிறார்கள். கோடிக்கணக்கான மில்லியன் டாலர் செலவில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற சில நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அறிவியல் அற்புதம் அது. எந்த நாடு எவ்வளவு முதலீடு செய்துள்ளதோ. அதற்கு ஏற்ற எண்ணிக்கையில் அந்த நாட்டின் விண்வெளி வீரர்கள் அங்கு சென்று தங்கி ஆராய்ச்சி செய்து திரும்புவார்கள். ஹாட்ஃபீல்ட் கனடா நாட்டுக்காரர். அவர்களது நாட்டின் முதலீடு குறைவு. எனவே கனடா நாட்டினர் அதிகம் அங்கு போக முடியாது.  அது கிட்டத்தட்ட ஒரு கால்பந்த மைதானத்தின் அளவு இருக்கும். ஐந்து பிஹெச் கே வீடு போன்றது.  சுவர் முழுக்க வெல்க்ரோ வைத்திருப்பார்கள். மிதந்து செல்லும் பொருட்கள் அதில் ஒட்டிக் கொள்ளும். பல் தேய்த்தால் வாய் கொப்பளிக்கக் கூடாது. நாம் துப்புவது மிதந்து சென்று சக வி.வீரர் முகத்தில் போய் அப்பும். என் பேரன் போல் அப்படியே முழுங்கி விட வேண்டியதுதான். மூச்சா, ஆய் போவதற்கெல்லாம் தனி வகுப்பு நடத்தி சொல்லித் தந்திருப்பார்கள்.  அது எப்படி என்பதை பக்க அளவு கருதி நான் விவரிக்கவில்லை. மூல நூலில் படித்துக் கொள்ளுங்கள் ! அந்த விண்வெளி வீட்டில் எப்போதுமே  மெத்து மெத்து என்று மிதந்து கொண்டே தான் இருப்போம் என்பதால் படுக்க மெத்தை, தலையணை தேவையில்லையாம்.  படுத்தால் ஏதோ வெண்பஞ்சு மேகத்தில் படுத்திருப்பது போல் இருக்குமாம்.  புரண்டு புரண்டு படுத்து, ஒரு வசதியான பொசிஷனை தேர்வு செய்ய வேண்டிய வேலை கிடையாது.  புவியீர்ப்பு இல்லாததால் நடப்பதே சிரமம். எனவே அங்கு நடப்பதற்கு தெம்பு வேண்டும் என்பதற்காக, எலும்பு, தசைகளை வலுவாக்க, தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமாம். பூமிக்கு வந்த பிறகு பல நாட்களுக்கு இரண்டு காலில் சாதாரணமாக எழுந்து நின்றாலே கால் வலி பின்னி எடுத்துவிடுமாம்.  பூமிக்கத் திரும்பி  வந்த பிறகு,  எழுந்து நின்று நடக்கவே பல நாட்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

இத்தனை சிரமப்பட்டு விண்வெளி சென்று அங்கு செய்த ஆய்வுகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார் ஹாட்ஃபீல்ட்.  அவை எல்லாம் தேர்ந்த அறிவியலாளர்கள் படித்துப் புரிந்து கொள்ள வேண்டிய உயர் அறிவியல் என்பதால், இங்கு அவை பற்றி விவரிக்கவில்லை. வாசக சுவாரஸ்யம் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே பகிர்ந்துள்ளேன்.

சமீபத்தில், சந்திரயான் அறிவியலாளர்கள் திருப்பதி கோவில் சென்று வழிபடுவது பற்றியெல்லாம் பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன. அறிவியல் உலகில் இது போன்ற நம்பிக்கைகளுக்கு குறைவே இல்லை.  இதை கவனிக்காமல் விட்டுவிட்டதால், பிரச்சனை வந்துவிட்டது, பல ஆண்டுகள் பல பில்லியன் டாலர் செலவு செய்து உழைத்தது வீணாகி விட்டது என்று ஆகிவிடக் கூடாது என்ற அறிவியல், ஆன்மீகம், நம்பிக்கை என்று எதையும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் செய்து விடுபவர்களாகத் தான் அவர்கள் இருப்பதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  சர்வதேச விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கு இன்று வரை விண்வெளி வீரர்கள் ரஷ்யாவிலிருந்து தான் ராக்கெட்டில் கிளம்புகிறார்கள். அது தான் பக்கம் போலும் ! கிளம்பும் போது கவனிக்க வேண்டிய அறிவியல் அம்சங்களோடு  இது போன்ற நம்பிக்கை சார்ந்த விஷயங்களையும் விட்டுவிடாது இன்றளவும் கடைப்பிடிக்கிறாா்கள்.   கிளம்புவதற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விண்வெளி வீரர்களை தனிமைப்படுத்தி அறையில் அடைத்துவிடுவார்கள். ராக்கெட் ஏறும் சமயம்தான் வெளியே வரவேண்டும். வரும்போது, அந்த அறையின் கதவில் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு சடங்கு.  அந்த தங்கும் இடத்திலிருந்து ஹாட்ஃபீல்டும், மற்ற இருவரும் ஒரு வேனில் ஏறி, ராக்கெட் லாஞ்ச் மையத்திற்குச் செல்கிறார்கள். பதினைந்து நிமிடப் பயணத்திற்குப் பிறகு டிரைவர் வண்டியை ஓரம் கட்டி நிறுத்துகிறார்.  எல்லோரும் இறங்கி வேனின் பின்பக்க வலது டயரில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிறார். ஹார்பீஃல்ட் எதற்கு? என்கிறார். யூரி காகாரின் முதன்முறையாக விண்வெளி சென்ற போது, வேனில் கிளம்பிய பதினைந்தாவது நிமிடத்தில், இப்படி வண்டியை நிறுத்தி, பின்பக்க வலது டயர் மேல் மூச்சா அடித்தார். நல்லபடியாக திரும்பி வந்தார். அதிலிருந்து இந்த சம்பிரதாயம் தொடர்கிறது என்கிறார் டிரைவர் பணிவாக. பெண் விண்வெளி வீராங்கனைகள் என்ன செய்வார்கள்? என்று ஹாட்ஃபீல்ட் கேட்க,  “வரும்போது பாட்டில்ல பிடிச்சுட்டு வரச் சொல்லிடுவோம். இங்க வண்டிய நிப்பாட்டி, டயர்ல ஊத்திடுவோம்.“ என்கிறார் டிரைவர் சீரியஸாக.  சோவியத் யூனியன் என்ன, ஸ்ரீஹரிகோட்டா என்ன, எல்லாம் நல்லபடியா நடக்கணுமே என்ற கவலை ஆதார மனித குணம் தானே !

ஹாட்ஃபீல்ட் இது மாதிரி மூன்று முறை விண்வெளி சென்று தங்கியிருக்கிறார்.  அதிகபட்சமாக 146 நாட்கள்  தங்கல். அந்த முறைமட்டும் அவர் பூமியை 2336 முறை வலம் வந்திருக்கிறார். விண்வெளி பற்றி ஏராளமான தரவுகளைத் திரட்டித் தந்திருக்கிறார். அவற்றிற்கெல்லாம் உடனடிப் பயன் என்ன என்று எனது சிற்றறிவிற்குத் தெரியவில்லை. ஆனால் அறிவே ஆயுதம் என்ற பொதுவான புரிதலில் ஹாட்ஃபீல்டின்  கிடைத்தற்கரிய அனுபவம் பற்றிய இந்த புத்தகம் எனக்கு மிகப் புதிய வெளிச்சத்தைத் தந்தது.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதை ஒன்பது வயதுச் சிறுவனாக கறுப்பு வெள்ளை டிவியில் கலங்கலாகப் பார்த்து, நாமும் விண்வெளி வீரராக ஆகவேண்டும் என்று நினைத்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்த புத்தகம் எழுதும் போது படிப்பவர்களக்கு தன்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவேண்டும் என்பதற்காக இப்படி அள்ளி விட்டதாகத் தெரியவில்லை. மெய்யாகவே நினைத்திருக்கிறார். அதற்காகப் பாடுபட்டிருக்கிறார்.  15வது வயதில் கிளைடர் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்திருக்கிறார். 16வது வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி. பின்னர் கனடா விமானப் படையில் பணி. எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் அப்பா, அம்மாவுடன் வயக்காட்டு வேலை பார்த்தவர். ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி முன்னேறியவர்.  விண்வெளியிலிருந்து இந்த பூமியை 146 நாட்களுக்கு தினமும் பார்த்தது,  மிகப் பெரிய அறிவாளிகளான , பலசாலிகளான சக வீரர்கள் இருவரோடு ஒத்துழைத்து, அநத 146 நாட்களும் ஒவ்வொரு நாளிலும் ஏற்பட்ட சோதனைகளைச் சமாளித்து, எடுத்த காரியத்தை நல்லபடியாக முடித்து, பூமிக்குத் திரும்பியது அவரை ஒரு புது மனிதனாக எவ்விதம் மாற்றியது என்பதையும் புத்தகம் முழுக்கச் சொல்லிச் செல்கிறார்.   இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு விண்வெளி வீரனின்  கையேடு என்றுதான் தனது அனுபவங்களுக்குத் தலைப்பிட்டிருக்கிறார்.

பார்க்கப் போனால், இந்தத் தொடரில் நான் குறிப்பிட்ட  ஒவ்வொரு புத்தகமுமே இந்த உலக வாழ்க்கைக்கான ஒரு கையேடு என்றுதான் தோன்றுகிறது !

ஆர்வமுள்ளோர் வாசிக்க – AN ASTRONAUTS GUIDE TO LIFE ON EARTH BY CHRIS HADFIELD

யானைகளோடு பேசுபவன் ச.சுப்பாராவ் உயிர்மை பதிப்பகம் பக்கம் 165 விலை ரூ220

  •  

உதடுகள் சொல்லும் கதை

முத்தம் தர எந்த இடம்? முகத்துல எந்த இடம்?  என்ற பாடலில் நித்தியானந்தா புகழ் ரஞ்சிதாவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்ததில் கவிப்பேரரசு அடுத்த வரியில் சொல்லியிருக்கும் பெரிய அறிவியல் கருத்தை கவனிக்காமலேயே இருந்து விட்டேன். முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஷெரில் க்ரிஷெல்பாம் எழுதியிருக்கும் The Science of Kissing – What Our Lips Are Telling Us என்ற நூலைப் படித்த போதுதான் எந்திடம் சத்தம் வந்திடுமோ கண்ணா அந்த இடம் என்ற கவியின் வார்த்தையின் அறிவியல் கருத்தை அறிந்தேன். தமிழ்த் திரைப்பாடல்களில் அறிவியல் கருத்துகள் என்ற தலைப்பில் யாரேனும் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டால் மறக்காது மேற்கண்ட கருத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்கிறேன்.

நகைச்சுவை ஒருபுறம் இருக்க, மெய்யாகவே முத்தத்திற்குப் பின் ஏராளமான அறிவியல் இருக்கிறது. மனித குலவரலாறு தொடர்பான, இனவரைவியல் தொடர்பான, சமூகவியல் தொடர்பான ஏராளமான ஆய்வுக்குரிய விஷயங்கள் இருக்கின்றன என்பது ஷெரிலின் புத்தகத்தைப் படித்த போது தெரிந்தது. ஷெரில் கடல் உயிரியலில் முதுகலைப்பட்டம் பெற்ற ஆய்வறிஞர். டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞானி. அறிவியல் எழுத்தாளர். வானொலி தொகுப்பாளினி. இசையறிஞர்.   உதவிய நூல்கள் பட்டியலில்  200க்கும் மேற்பட்ட நூல்களை அவர் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே இந்த நூலுக்காக அவர் மேற்கொண்டுள்ள ஆய்வு நமக்குத் தெரிகிறது.

உலகின் 90க்கும் அதிகமான கலாச்சாரங்களில் சர்வசாதாரணமாக முத்தமிடுதல் வழக்கமாக இருக்கிறது. நாம் ஏன் முத்தமிடுகிறோம்? முத்தமிடும் போது உடலில் என்ன நடக்கிறது? எப்போதிலிருந்து மனிதன் முத்தமிட ஆரம்பித்தான்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கான தேடலில் உருவானது இந்தப் புத்தகம். ஏற்கனவே முத்தமிடுதல் பற்றிய பல ஆய்வுகளின் முடிவுகள் இருந்தாலும் கூட, அவை பெரும்பாலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளாகவே இருப்பதாக அறிந்த ஷெரின் தானே ஆய்விற்கான கேள்விகளைத் தயாரித்து,  தானே பல்வேறு விதமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அந்தக் கேள்விகளுக்கு பதில் பெற்று ஆய்வு செய்துள்ளார். அதன் வழியே அவர் சொல்லும் முடிவு பற்றிப் பின்னர் சொல்கிறேன்.

முத்தமிடும் ஆசை, அதற்கான உந்துதல் இயல்பாக நம் உள்ளுணர்வில் இருக்கிறதா இல்லை நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கில் நாம் அறிந்து கொண்ட ஒன்றா என்ற கேள்விக்கு அடுத்த பொங்கலுக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் தான் வைக்க வேண்டும். அறிவியலாளர்கள் இது பற்றி குடுமிப் பிடி சண்டை போட்டுக் கொண்டி்ருக்கிறார்கள்.  மனிதன் மட்டுமே முத்தமிடத் தெரிந்த ஒரே உயிரினம் என்றாராம் சார்லஸ் டிக்கன்ஸ். ஆனால் அது தவறாம்.  மூஸ் என்ற மான் இனமும், கிராண்ட் ஸ்குரில் என்ற ஒரு வகை பெரிய அணில்களும் எழுபதுகளின் தமிழ்ப்பட நாயக, நாயகிகளைப் போல மூக்கோடு மூக்கை உரசிக் கொள்ளுமாம். முள்ளம்பன்றிகள் முள் இல்லாத தம் ஒரே பாகமான மூக்கைத் தேய்த்து முத்தமிட்டுக் கொள்கின்றனவாம். ஒட்டகச்சிவிங்கிகள் தம் கழுத்தைப் பின்னி முத்தமிட்டுக் கொள்கின்றன என்றும், யானைகள் தம் துதிக்கையால் பார்ட்னரைத் துழாவி முத்தமிட்டுக் கொள்கின்றன என்றும் சொல்கிறார்கள். அதனால்தான் என்னவோ, டார்வின் முத்தமிடுதல் உள்ளார்ந்த உணர்வு, அது நமது மரபணுக்களில் ஊறியது என்கிறார். ஆனால், மானுடவியலாளர்கள் இது முற்றிலும் ஒரு காலச்சார செயல்பாடு, பிறர் முத்தமிடுவதைப் பார்த்து அறிந்து கொண்ட ஒரு வேலை – சாரி, ஒரு கலை என்கிறார்கள்.  மற்ற விலங்குகள் போலன்றி. மனித உதடு மட்டுமே குவிப்பதற்கு வசதியாக முகத்திலிருந்து தனியாக  இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது மரபணு ஆதரவு கோஷ்டி.  உணவை தன் வாயில் போட்டு, சிறிது மென்று அதை குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டதிலிருந்து முத்தம் தோன்றியது என்பது மானுடவியலாளரின் கருத்து. ஷெரில்  நம் பட்டிமன்ற நடுவர்கள் போல், இதுவும் தான், அதுவும் தான்யா… ஆனால் இன்றைய சூழலில் என்று வைத்துப் பார்க்கும் போது, பார்த்துக் கற்றுக் கொள்வதுதான்யா…. என்கிறார்.

கிமு 1500க்கு முன்பு வரை எந்த இலக்கியப் பிரதியிலும் முத்தமிடுதல் பற்றி குறிப்பிடப்படவில்லை. முதன்முதலில் முத்தம் பற்றி குறிப்பிட்ட இலக்கியப் பிரதிகள் தோன்றிய இடம், கலாச்சாரக் காவலர்கள் நிறைந்த நம் இந்தியாதான் என்று ஷெரில் சொல்லும் போது திகைப்பாக இருக்கிறது. மகாபாரதத்தில் முத்தம் பற்றி நிறைய சொல்கிறார்களாம். பின்னர் வாத்சாயனர் காமசூத்திரத்தில் அதற்கு தனி அத்தியாயமே எழுதிவிட்டார் ! சதபதப் பிரமாணம் மெளத் கிஸ் பற்றிச் சொல்கிறதாம். அடிமைப் பெண்ணின் உதட்டின் ஈரத்தை உறிஞ்சினால் தண்டனை தரப்படும் என்று சொல்லிவிட்டதாம் ! பின்னர் கிறிஸ்து பிறப்பதற்கு  1200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் முத்தம் பற்றிப் பேசப்பட்டுள்ளது. கிறிஸ்துவத்திற்கு முத்தம் என்றால் அலர்ஜி. முத்தம் உடல்ரீதியான அடுத்த பாவச் செயல்களுக்கு இட்டுச் செல்லும் என்ற பயம்தான் காரணம். டைபீரியஸ் என்ற பேரரசர் முத்தம் வியாதிகளைப் பரப்பும் என்று சொல்லி முத்தமிடுதலைத் தடை செய்திருந்தார். மூத்த கேட்டோ என்ற ரோமானிய வரலாற்றாசிரியர் வெளியூர் சென்று திரும்பும் கணவன் தன் மனைவியை முத்தமிடலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். காதலால் அல்ல, அவள் குடித்திருக்கிறாளா என்பதை அறிவதற்காக. எனினும்  கி மு 5ம் நூற்றாண்டில் ஹெரோடோடஸ் முத்த விதிகளைச் சொல்லிவிட்டார். சம அந்தஸ்தில் உள்ளவர்கள் உதட்டில் முத்தமிட வேண்டும். அந்தஸ்தில் சிறிது வித்தியாசம் மட்டுமே இருந்தால் கன்னத்தில் ஒத்தி எடுக்கலாம். அந்தஸ்தில் பெரிய வேறுபாடு என்றால் தாழ்ந்த அந்தஸ்துக்காரர் உயர்ந்தவர் காலில் விழ வேண்டும். நோ முத்தம்.  சுருங்கச் சொன்னால், அந்தஸ்து குறையக் குறைய முத்தமிடும் இடமும் உதட்டிலிருந்து இறங்கியது. விபரீதக் கற்பனை வேண்டாம். உதட்டிலிருந்து நேரடியாகக் காலுக்குத்தான் !

14 , 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் வர்த்தக உடன்பாடுகளை இறுதி செய்வதற்கு முத்தம் பயன்பட்டது. பலருக்கும் கையெழுத்து இடத் தெரியாத காலம். கையெழுத்து இடும் இடத்தில் ஒரு எக்ஸ்ஸைப் போட்டு அதன் மேல் முத்தமிட்டு தம் ஒப்புதலைத் தெரிவித்தார்கள். தொழிற்புரட்சி காலத்தில் முத்தமிடுதல் ஓரளவு சகஜமாகியது. அதன் ஒரு நீட்சியாக கைகுலுக்கும் வழக்கமும் உருவானது.

பொதுவாக, உலகெங்கும் முத்தமிடுதல், பொது இடத்தில் முத்தமிடுதல் ஆகியனவற்றிற்கு எதிர்ப்புதான் இருந்தது. ஜெர்மானியர்கள் மிக நெருக்கமானவர்களை மட்டுமே முத்தமிட்டார்கள்.  ஆனால் ஜெர்மன் மொழியில் முத்தமிடுதலுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் உள்ளன.  அதில் முக்கியமான ஒன்று நாக்கிரிஸம் என்ற சொல்.  வேறு ஒன்றும் செய்ய முடியாத சூழலில் சரி, இதையாவது செய்வோம் என்பதற்காக முத்தமிடுவதைக் குறிக்கும் சொல் !  இந்தியச் சூழல் பற்றி ஒன்றும் சொல்லவே வேண்டாம். அந்த நாக்கிரிஸமும் மறுக்கப்பட்ட பாவிகள் நாம்… தென்ஆப்பிரிக்காவில் 16 வயதுக்குக் குறைந்தவர்கள் உதட்டில் முத்தமிடக் கூடாது என்று சட்டம் இருந்தது. தாய்லாந்து, ஜப்பான் போன்றவையும் நம்மைப் போலத்தான். ரோடினின் தி கிஸ் என்ற சிற்பம் டோக்கியோவிற்கு ஒரு சிற்பக் கண்காட்சிக்கு வந்த போது, அந்த சிற்பத்தை  கண்காட்சி முடியும் வரை பெரிய போர்வையால் போர்த்தி காட்சிப் படுத்தினார்கள் ஜப்பானிய சங்கிகள்.  நீண்ட காலத்திற்கு, ஹாலிவுட் படங்கள் தணிக்கை செய்யப்பட்டு , முத்தக் காட்சிகள் வெட்டப்பட்டு தான் ஜப்பானில் அனுமதிக்கப்பட்டன. அமெரிக்கா கூட முத்த விஷயத்தில் சற்று கட்டுப்பெட்டியாகத் தான் இருந்தது.  முதல் உலகப் போருக்குப் பின்புதான் அமெரிக்கார்கள் முத்தத்தின் போது லேசாக நாக்கால் துளாவ ஆரம்பித்தார்களாம்.

நாடு பிடிக்கவும், மதம் பரப்பவும் உலகெங்கும் பயணித்தவர்கள், தாம் வந்த வேலையை ஒழுங்காகப் பார்த்தார்களோ, இல்லையோ, முத்தத்தை உலகெங்கும் பரப்பிவிட்டார்கள். 1864ல் மேற்குறித்த இரண்டு நோக்கங்களுக்காகவும்  ஆப்பிரிக்கா சென்ற வில்லியம் வின்வுட் ரீடர் என்ற சாகசப்பயணி அங்கு ஒரு கருப்பினப் பெண்ணொடு காதல் கொண்டு விட்டார். சற்று நெருக்கமானதும், இவர் அவளது உதட்டைக் கவ்வ, அவள் கத்தி ஊரைக் கூட்டிவிட்டாள். நரமாமிசம் உண்ணும் பழக்கம் உள்ள சமூகத்தைச் சேர்ந்த அவளுக்கு ரீடர் தன் உதட்டைக் கடித்துத் தின்னத்தான் இப்படி செய்கிறார் என்று பயம் வந்துவிட்டது. அவள் உறவினர்கள் எல்லோரும் ஓடி வந்து ரீடரைக் கட்டிப் போட்டுவிட்டு, அவரை சமைக்க மசாலா அரைக்க ஆரம்பித்து விட்டார்கள். எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி தப்பித்து, தன் அந்த அனுபவத்தை Savage Africa  என்ற புத்தகத்தில் பதிவும் செய்துவிட்டார் என்கிறார் ஷெரில். இன்று முத்தமிடுதலைப் பரப்பும் வேலையை சினிமா செய்கிறது என்கிறார் அவர்.  சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் வேளையிலும், பூக்கள் முத்தமிடுவதையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு இப்போது அடுத்த கட்ட வளர்ச்சியான வெப் சீரீஸ்கள் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துள்ளன.

இரண்டு மூன்று அத்தியாயங்கள் முத்தமிடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன்கள், ஆக்ஸிடோசின், கார்ட்டிசோல் என்று கடுமையான அறிவியல் சமாச்சாரங்கள்.  முத்தமிடும் போது நம் ஐம்புலன்களும் கூர்மையாகி, மூளைக்கு ஏகப்பட்ட செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. தொடுஉணர்வு, உடலின் உஷ்ணம், வலி என்று எல்லாவற்றைப் பற்றியும் அப்டேட் செய்கின்றன. கூடவே  இவள் வெங்காயம் சாப்பிட்டிருக்கிறாள், உதட்டில் முத்தமிடும் போது இவன் கை ஏன் அங்கே போகிறது? என்பது போன்ற  சம்பந்தமற்ற, ஆனால் அவசியமான தகவல்களையம் அனுப்புகின்றன என்கிறார் ஷெரில். இவை என் நண்பர் டாக்டர். ராமானுஜத்தின் ஏரியா என்பதால் நான் அதிகம் எதுவும் கூறவில்லை. ஆனால் இந்தப் பகுதிகளை எழுத, முத்தம் எனும் அறிவியல் குறித்து எழுத இவரைத் தூண்டியவர் விலியனூர் ராமச்சந்திரன் என்பதை அறிய வியப்பாக இருந்தது. இவரது நூல் ஒன்றை தான் தமிழில் படித்திருக்கிறேன்.. தமிழ் மொழிபெயர்ப்புத் துறையின் வீச்சு பற்றி வியப்பாகவும், பெருமையாகவும் இருந்தது.

புத்தகத்தின் இறுதியில்  முத்த அறிவியல் குறித்த வழிகாட்டுதல்களைத் தருகிறார் ஷெரில் . பொதுமக்கள் நன்மை கருதி அவற்றைக் கீழே தருகிறேன்.

ஆண்களுக்கு உதடுகள் பிடிக்கும். அதுவும் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். எனவே லிப்ஸ்டிக் போடுவது நலம். அது சுமேரிய நாகரீகக் காலத்துப் பழமையான வழக்கம்.

உதடுகள் வாசனையாக இருக்க வேண்டும்.

ஒருவரை நன்கு அறிந்த பிறகு முத்தமிடுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர உங்கள் ஆக்ஸிடோசின் உதவும்.

முத்தத்திற்காக ஏங்க விடுங்கள்.

கடைசி விதி – இதற்காக இந்த சட்டதிட்டங்கள் பற்றி ரொம்பவும் கவலைப்படாமல், மனது சரி என்று சொன்னால் முத்தமிட்டுவிடுங்கள். ஏனெனில், முத்தம் எனும் உணர்வு சார்ந்த விஷயத்தை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்வது கடினம். அறிவியல் முத்தம் பற்றி அறிந்து கொள்ள உதவலாம். ஆனால் ஒருவரின் மனதில் இடம் பிடிப்பதற்கு நீங்கள் நல்லவராக, நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்கிறார் ஷெரில். புத்தகத்தின் செய்தி இதுதான்.

இத்தனை சுவாரஸ்யமான விஷயம் தொடர்பாக நம் தமிழ்ச் சூழல் பற்றி எழுதாது, யாரோ ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி சொல்வதை எழுத வேண்டியது குறித்து எனக்கு சங்கடமாக இருக்கிறது.   சங்க காலத்தில் முத்தம், ஐங்குறுநூற்றில் ஐநூறு வகை முத்தம் என்பது போல் ஏதேனும் ஆய்வு நூல்கள் இருந்தால் தெரிவிக்குமாறு வாசக அன்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன்.

ஆர்வமுள்ளோர் வாசிக்க  – The Science Of Kissing – What Our Lips Are Telling Us by Sheril Krishenbaum

நன்றி – உயிர்மை பிப்ரவரி 2025

  •  

அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரட்டும் !

      உயர்ரக கறுப்புத் தோலில் செய்யப்பட்ட, உயர்ந்த முதுகுச் சாய்மானம் உள்ள சுழல் நாற்காலி அது.  அதற்கு முன்னால்  நூற்றாண்டுப் பழமையான ஓக் மர மேஜை.  அதன் பெயர் புசானன் மேஜை.  இதுவரை 35 பேர் மட்டுமே அமர்ந்த நாற்காலி அது.  ‘அதில் உட்காருங்கள்.  அதிபரின் நாற்காலி தரும் உணர்வை உங்கள் எழுத்தில் கொண்டு வாருங்கள்’, என்கிறார் அதிபரின் பத்திரிக்கைச் செயலாளர் பியரி சாலிங்கர்.  அமெரிக்க அதிபரின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு.  எந்த எழுத்தாளனுக்கும் கிடைக்காத உயர்ந்த மரியாதை.  மோசிகீரனாருக்கு அடுத்தபடியாக அரசுக் கட்டிலில் அமர்ந்த அந்த ஒரே படைப்பாளி இர்விங் வாலஸ். கென்னடி கவரி வீசாமல் குட்டித் தூக்கம் போடப் போய்விட்டார்.

      வாலஸ் மெல்ல அமர்கிறார்.  எதிரே பிரும்மாண்டமான மேஜை.  அதில் வலதுபுறம் பெரிய மேஜைவிளக்கு.  அதிபரின் குடும்பப் படங்கள்.  ஒன்றிரண்டு சிறு நினைவுப்பரிசுகள்.  விளக்கிற்கு அருகே ஆறு புத்தகங்கள். அதில் ஒன்று அந்த அதிபர் எழுதியது.  மேஜையின் நடுவே ஹோட்டல் மெனு அட்டை போன்ற அட்டையில் அதிபரின் அன்றைய நிகழ்ச்சிகள்.

      பக்கத்தில் அவரது கையெழுத்திற்குக் காத்திருக்கும் கோப்புகள்.  எழுதுபலகை. இடதுபக்கம் ஒரு பச்சை தொலைபேசி.  அருகே இரண்டு  சாதா கறுப்பு தொலைபேசிகள்.  அதில் ஒன்றுதான் கதைகளில் அடிக்கடி சொல்லப்படும் ஹாட்லைன்.

      நாற்காலியை மெல்ல இடப்பக்கமாகச் சுற்றுகிறார் வாலஸ்.  அதிபரின் நிகழ்ச்சி நிரல் செயலாளரின் அறை தெரிகிறது.  பக்கத்தில் திறந்த கதவு. குறுக்கே சங்கிலி கட்டப்பட்டு, அதற்கப்பால் அதிபரின் மெய்க்காப்பாளர் வாலஸைப் பார்த்துக் கொண்டு டென்ஷனாக நிற்கிறார்.  இன்னும் திரும்பினால் கனல் அடுப்பு.  அதன் மேல் இரு கப்பல்களின் மாதிரி பொம்மைகள்.  ஒரு கடற்போர் சித்திரம்.  அமெரிக்க போன்ஹோம் கப்பலும், பிரிட்டனின் செராபிஸ் கப்பலும் போரிடும் காட்சி.  அருகில் சின்னதாக அதிபரின் அந்தரங்கச் செயலாளரின் அலுவலகம்.  இன்னும் சற்றுத் திரும்பினால் மூன்று பெரும் பிரஞ்சுக் கதவுகளின் வழியே ரோஸ் தோட்டம் தெரிகிறது.

      நாற்காலிக்கு நேர் பின்னால் பெரும் மேஜை ஒன்றில் ஏழெட்டு நாளிதழ்கள், ஒரு டிக்டாஃபோன். மேஜைக்கு ஒருபுறம் அமெரிக்கக் கொடி. மறுபுறம் அதிபரின் கொடி.  அதன் பின்னால் மூன்று பெரும் ஜன்னல்கள்.  வெளியே பாதுகாவலர்கள்.  நிற்கும் அறை.  அதைத் தாண்டி ஐசனோவர் உருவாக்கிய தென்பகுதித் தோட்டம்.  அதில் அதிபரின் சிறுகுழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாற்காலி ஒரு சுற்று முடித்து நேராகிவிட்டது.

      ஒரு அசாதாரண விபத்தில், அதிபர் பதவிக்கு அடுத்தடுத்து யார் வரலாம் என்பதைக் கூறும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு வினோதமான ஷரத்தால், ஒரு எளிய கறுப்பினத்தவர் அதிபராகி விட்டால்?  அதை அமெரிக்க சமூகம், அதன் வெள்ளை மேட்டுக்குடி எப்படி ஏற்றுக் கொள்ளும்? அந்தக் கறுப்பு மனிதனுக்கு என்னென்ன சோதனைகள், வேதனைகள் வரும்? என்று யோசித்து, ஒரு நாவல் எழுத வாலஸ் முடிவு செய்ததன் பின்னணியில்தான் மேற்படி சம்பவம்.  அந்த நாள் 1963 செப்டம்பர் 16.

      அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், அங்கு கறுப்பர்களின் நிலை பற்றி ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்துவிட்டு, வெள்ளை மாளிகை ஆய்வுக்காக வந்த வாலஸின் அனுபவம்தான் இது.  இன்றும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்கும் ‘தி மேன்’ என்ற அற்புதமான, அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய அந்த நாவலை எழுதும்போது, வாலஸ் வெள்ளை மாளிகையை கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பார்வையாளனாகச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. தனது சொந்த அலுவலகத்தில் ஒரு அதிபர் எப்படி உணர்வார் என்ற அனுபவத்தைப் பெற விரும்பினார்.  பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தயங்கினார்கள்.  ஆனால் அதிபர் கென்னடி, மதியம் நான் குட்டித்தூக்கம் போடும் நேரம் என் அலுவலகம் காலியாகத்தானே இருக்கும், வாலஸ் அந்த நேரத்தில் என் நாற்காலியில் அமர்ந்து அதிபராக உணர்ந்து எழுதட்டும் என்றார்.  நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வட்டச் செயலாளர் வண்டு முருகனின் நாற்காலியில் உட்காரவாவது அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ள நிலையில் இது எத்தனை பெரிய ஆச்சரியம் !

      மற்றொரு ஆச்சரியமும் இருக்கிறது.  தனது கதாநாயகன் அதிபராகப் பதவியேற்கும்போது சொல்லப் போகும் பைபிள் வாசகத்தை, அந்த நாற்காலியில் அமர்ந்து அந்த மேஜையில் வைத்து மனதுக்குள் முடிவு செய்கிறார் வாலஸ்.  ‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா ;  கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா’ (சங்கீதம் 127 :1 , 2).

      நேரம் முடிந்துவிட்டது.  அதிபர் அலுவலக அறையிலிருந்து கீழே இறங்கும் மாடிப்படிகளை எண்ணியவாறு இறங்குகிறார் வாலஸ்.  உங்கள் நாவலில் உங்கள் வர்ணிப்புகளை எல்லாம் நாங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். உங்கள் நாவலைப் படித்து அலுவலக அமைப்பைத் தெரிந்து கொண்டு அவரைக் கொல்ல யாரும்   நுழைந்து விடாமல் இருக்க வேண்டும் என்கிறார் பாதுகாப்பு அதிகாரி சிரித்தபடி.  ஆனால் சம்பவம் வேறு இடத்தில் நடந்து விட்டது!

      நாவல் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, ஒன்பது வாரத்தில், 1963 நவம்பர் 22 அன்று கென்னடி சுட்டுக் கொல்லப்படுகிறார். வேதனையோடு தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் வாலஸ்.  டல்லஸ் சிடிசன் கவுன்சிலில் கென்னடி பேச இருந்த, அவரது  கடைசி உரையை செய்தியாளர் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கென்னடியின் வாசிக்கப்படாத அந்த உரை, ‘கர்த்தர் நகரத்தைக் காவாராகில், காவலாளர் விழித்திருக்கிறது விருதா’, என்ற பைபிள் வாசகத்தோடு முடிகிறது.  வாலஸுக்கு புல்லரித்துப் போகிறது.

      நாவல் வெளியாகிவிட்டது.  வாலஸுக்கு சர்வதேச அளவில் புகழ் சேர்க்கிறது.  கென்னடியின் முதலாண்டு நினைவு நாள் வருகிறது. தாம் கென்னடியின் நாற்காலியில் அமர்ந்த அனுபவத்தை பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புகிறார் வாலஸ்.  பத்திரிகைகளின் மேட்டுக்குடி முதலாளிகள் அதை நிராகரிக்கிறார்கள். கதையில் கூட ஒரு கறுப்பினத்தவன் அதிபராவதை விரும்பாத அமெரிக்க இனவெறி முதலாளித்துவப் பத்திரிகைகள், அந்த  நாவலை எழுதிய வாலஸை மௌனமாகப் புறக்கணித்தார்கள்.

      பல வருடங்கள் கழித்து இர்விங் வாலஸ் ‘தி சண்டே ஜெண்டில்மேன்’ என்ற தமது கட்டுரை தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்.  அதில் தமது கென்னடி நாற்காலி கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார்.  அதிபரின் நாற்காலியில் தாம் அமர்ந்தபோது ஏற்பட்ட உணர்வுகளை மிக அருமையாகப் பதிவு செய்யும் இர்விங் வாலஸ் கட்டுரையை, ‘ மிகவும் சக்தி வாய்ந்த அந்த நாற்காலியில் நல்லவர்கள் அமரவேண்டும்’, என்ற பிரார்த்தனையோடு முடிக்கிறார். அதைப் படித்த போது,

      ஒரு தட்டில்

      பழங்களும், பிரார்த்தனைகளும்

      வைக்கப்பட்டன.

      பழத்தைத் தின்றார் கடவுள்.

      பழுக்கட்டும் என்று

      விட்டு வைத்தார்

      பிரார்த்தனைகளை.

என்ற சுந்தர்ஜியின் கவிதை நினைவிற்கு வந்தது.  ஐம்பது வருடங்களாகப் பழுக்காத பிரார்த்தனை !

பின்னி​ணைப்பு

இது ஒரு நாள் சம்பவமல்ல.  பத்து நாட்கள் இது​போல் தினமும் மதியம் 2.30லிருந்து 4.30 வ​ரை ​கென்னடி ஓய்​வெடுக்கும் ​போது அவரது அலுவலக அ​றையில் இது ​போல் சுற்றித் திரிந்து ‘அதிபராக’ உணர்ந்திருக்கிறார் இர்விங் வாலஸ்.

இர்விங் வாலஸின் பு​னைவுக​ளைப் ​போல​வே அவரது கட்டு​ரை நூல்களும் மிகமிக முக்கியமான​வை.  இக்க​ட்டு​ரை அவரது சண்​டே ​ஜெண்டில்​மேன் என்ற கட்டு​ரைத் ​தொகுப்பிலிருக்கிறது – ஆம், ​வே​றெரு கட்டு​ரையில் நாம் ஏற்கன​வே பார்த்தது ​போல அவர் ஞாயிற்றுக்கிழ​மைக் கனவானாகத் திரிந்த காலத்தில் எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்பு அது.  1965ல் ​வெளிவந்த இந்தத் ​தொகுப்பில் அவர் அ​மெரிக்கா ​தொடர்பாக எழுதிய​வை, ​வெளிநாடு ​சென்று பார்த்த​தை எழுதிய​வை என இரு ​பெரும் பிரிவாகத் தந்திருக்கிறார்.  இந்தக் கட்டு​ரை மட்டும் the sunday gentleman on monday என்று தனியாக தரப்பட்டிருக்கும். Two nice old ladies என்ற சிகா​கோவின் புகழ் ​பெற்ற எவர்​​லே விடுதி​யை நடத்திய ​இரு பெண்கள் பற்றிய கட்டு​ரை பின்னாளில் the golden room என்ற நாவலுக்கு அடித்தளமானது.

இந்த the sunday gentlemanல் வாலஸ் எழுதியிருக்கும் முன்னு​ரை மிகமிக முக்கியமானது.  புகழ்​பெற்ற எழுத்தாளராவதற்கான அவரது உ​ழைப்​பைப் ​போகிற​போக்கில் ​சொல்வார்.  பத்திரி​கைகளில் ​வே​லை பார்த்துக் ​கொண்டு முதலாளி ​சொன்ன​தை எழுதிக் ​கொண்​டே ஞாயிற்றுக்கிழ​மைகளில் அவர் எழுதிய கட்டு​ரைகள், நாவல்கள் உடனடியான அங்கீகாரம் ​பெற்றுவிடவில்​லை.  அவரது புகழ் ​பெற்ற ப​டைப்புகளின் எண்ணிக்​கைக்கு சமமாக அவரது நிராகரிக்கப்பட்ட ப​டைப்புகளும் உண்டு. அவர் ​சொல்வ​தை அப்படி​யே தருகி​றேன் – பாருங்கள்.

என் பதி​னேழாவது வயதில் நான் மிகவும் மதித்த ஐந்து ஆளு​மைகள் பற்றி ( இதில் கிளாரன்ஸ் டா​ரோவும், வால்டர் ரீடும் உண்டு) ஹீ​ரோஸ் ஆஃப் டு​டே என்று ஒரு நூல் எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பதி​​​னெட்டாவது வயதில் மக்களின் ​பொதுவான மூடநம்பிக்​கைக​ளை ​வைத்து, ஸாரி யு ஆர் ராங் என்று ஒன்று எழுதி​னேன். நிராகரிக்கப்பட்டது.  பத்​தொன்பதாம் வயதில் ​ஹோண்டூராஸ் காடுகளில் நான் ​மேற்​கொண்ட சாகசப் பயணம் பற்றி ​​மை அட்​வென்சர் டி​ரெய்ல் என்று ஒன்று எழுதி​னேன்.  நிராகரிப்பு.  ​டேனியல் ​டெஃ​போவின் வாழ்க்​கை வரலாற்​றை தி சண்​டே ​ஜென்டில்​மேன் ( அதுதான் ஒரிஜினல் ​போலும்!) என்று இருபதாவது வயதில் எழுதி, அதுவும் நிராகரிக்ப்பட்டது.  இருபத்தியிரண்டாவது வயதில் முதல் பன்னிரண்டு சீசர்களின் வாழ்க்​கை வரலாற்​றை ​ரோமன் ஹாலி​டே என்று ஆரம்பித்து பாதி எழுதி நா​னே நிறுத்திவிட்​டேன்.  அப்​போது பல பத்திரி​கைகளிலும் பிரசுரமாகி இருந்த பல கட்டு​ரைக​ளை திருத்தி எழுதி புத்தகமாகத் ​தொகுத்​தேன்.  அது பிரசுரமாகவில்​லை.  இருபத்தி ஐந்தாம் வயதில் தனகா நி​னைவுச் சின்னம் பற்றி ஜப்பான்ஸ் ​மெய்ன் காம்ஃப் ​என்று ஒன்​றை எழுதி​னேன்.  நிராகரிப்புதான்.   இருபத்தி​யேழாவது வயதில் நான் ​பத்திரி​கை வாழ்வில் பேட்டி கண்ட ஆளு​மைக​ளைப் பற்றி வித் ​​தெயர் ​பேண்ட்ஸ் டவுண் என்று ஒரு நூல்.  பிறகு ​கேப்ரியல் என்று ஒரு நாவலுக்கு முதல் இரண்டு அத்தியாயங்கள். இந்தக் காலகட்டத்தி​லே​யே அ​ரைடஜன் நாவல்களுக்கு ஓரிரு அத்தியாயங்கள். எல்லாம் ​தோல்விதான். முப்பத்தி​யேழாவது வயதில் பத்திரி​​கை ​வே​லை​யை விட்டுவிட்டு சீரியஸாக முழு​நேர எழுத்தாளனாக உட்கார்ந்து எழுதிய​போதுதான் முதல் புத்தகம் வந்தது.

பிரசுரமாகாத இந்த நூல்க​ளை யாராவது ​தேடி எடுத்துப் பிரசுரித்தால் எப்படி இருக்கும்! ஆனால் என்​றேனும் ஒரு நாள் அ​வை பிரசுரமாகும் என்ற நம்பிக்​கை எனக்கு இருக்கிறது.

எப்படி எழுத​வேண்டும் என்ப​தை மட்டுமல்ல, எப்படி விடாமுயற்சி​யோடு எழுத​​வேண்டும் என்ப​தையும் நாம் இர்விங் வாலஸிடம் ​சேர்த்துக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •  

சோதனைக்குழாயில் டைனாசோர் !

இணையத்தில் சமீபத்தில் கிடைத்த ஒரு ரத்தினம் The science of Michael Crichton என்ற மின்னூல்.  அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் பத்துபேர் சேர்ந்து, மைக்கேல் கிரைட்டனின் விஞ்ஞான நாவல்களில் எத்தனை சதம்  விஞ்ஞானம் எத்தனை சதம் கதை என்று மிகக் கஷ்டப்பட்டு ஆய்வு செய்து எழுதிய நூல். பத்து கட்டுரைகள். 184 பக்கங்கள்.

      நூலைப்படித்தும், என்னையறியாமல் அப்படியே அவரது ஜுராசிக் பார்க் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.  ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் படமாக வந்து இன்றும் ஏதேனும் ஒரு சானலில்   நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே ஜுராசிக் பார்க்தான்.  ஒரு காலத்தில் மிகப்பெரிய விஞ்ஞான நாவலாக என்னைக் கவர்ந்த அதே ஜுராசிக் பார்க்.     அதில் விஞ்ஞானம் மிகவும் குறைவு,கதைதான் அதிகம் என்று 27 ஆண்டுகள் எம்பிரியானிக் ஸ்டெம் செல் துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ள டாக்டர் சான்டி பெக்கர் 40 பக்கத்திற்கு கட்டுரை எழுதிய பிறகு, கிரைட்டனின் தீவிர ரசிகன் என்றபோதிலும், அதை ஏற்பதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஆனாலும் மறுவாசிப்பில் மைக்கேல் கிரைட்டன் என்னை வேறுவிதமாக ஈர்த்தார்.

      6’9” உயர உருவத்தின் காரணமாக இருந்த கூச்சசுபாவத்தால் யாரிடமும் பேசிப் பழகாத தனிமை விரும்பியான கிரைட்டன் இயல்பாகவே ஒரு படைப்புமனம் கொண்டவராக இருந்தார்.  தொழிலால் மருத்துவர் என்றாலும் ஒருகட்டத்தில் முழுநேர எழுத்தாளரானார்.  திரைப்பட இயக்குனரானார்.  சக மருத்துவரான, சகஎழுத்தாளரான ராபின் குக் எழுதிய கோமா என்ற மருத்துவ திகில் படத்தை இயக்கினார்.  19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் கொள்ளையை வைத்து, தான் எழுதிய தி கிரேட் டிரைன் ராபரி என்ற நாவலை அதே பெயரில் படமாக எடுத்தார். இதில் சீன் கானரி நடித்திருக்கிறார். ஜுராசிக் பார்க்கில் கிழவர் ஹாமாண்ட் பாத்திரத்தில் அற்புதமாக  நடித்தவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார் கிரைட்டன்.  அதிலும் வெற்றிதான்.  1994ல் அமெரிக்காவின் டாப் திரைப்படமாக ஜுராசிக் பார்க்கும், டாப் தொலைக்காட்சி தொடராக ஈ.ஆர் தொடரும், டாப் நாவலாக டிஸ்குளோசர் நாவலும் வெகுகாலத்திற்கு இருந்தன.  மூன்றுமே கிரைட்டனின் படைப்புகள்.  இவரைத் தவிர வேறு எந்த படைப்பாளியும் இந்த சாதனையை இன்றுவரை செய்யவில்லை. ஆனாலும் அடிப்படையில் மருத்துவரான அவரது மனம் விஞ்ஞானப் புனைகதைகளில்தான் இருந்தது.

அவர் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஆய்வுகளை,  மாற்றங்களை வைத்துத் தன் நாவல்களைப் புனைந்தார்.  அவர் தமது நாவல்களில் கூறும் அறிவியல் ஆய்வுகளுக்கு, போக்குகளுக்குத் தரும் ஆதாரங்கள் அசைக்க முடியாதவையாக இருக்கும். செயற்கையாக டைனாசோர்களை உருவாக்கும் ஜுராசிக் பார்க்காக இருக்கட்டும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளின் சில அடிப்படை அம்சங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் லாஸ்ட் வேர்ல்ட்டாக் இருக்கட்டும், ( இதைத்தான் ஸ்பீல்பெர்க் டைனாசோரின் தாய்ப்பாசத்தைக் காட்டும் ஆங்கில அன்னை ஓர் ஆலயமாகக் கெடுத்தார்),காலயந்திரப் பயணத்தையும், 13ம் நூற்றாண்டு ஐரோப்பா வரலாற்றையும் அற்புதமாக இணைத்து எழுதிய ‘டைம்லைன்’, மனிதர்களைப் போல் பேசவும், சிந்திக்கவும் தெரிந்த மனிதக்குரங்கினை மையமாக வைத்து எழுதிய காங்கோ ( இது இதே பெயரில் திரைப்படமாகவும் வந்தது. நீங்கள் இதைப் படிக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு சானலில் அது ஓடிக் கொண்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது இன்று மனிதக்குரங்குக​ளை ​​வைத்து வந்துள்ள பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் தி​ரைப்பட வரி​சைக்கு இந்த காங்​கோதான் முன்​னோடி) புவி வெப்பமயம் என்பதே ஒரு ஏகாதிபத்திய சதிதான் என்ற கருத்தில் ஏகப்பட்ட வ​​ரைபடங்கள், புள்ளிவிபரங்க​ளோடு எழுதப்பட்டு ஏகப்பட்ட விமர்சனத்திற்கு ஆளான தி ஸ்டேட் ஆஃப் ஃபியர், என எல்லா நாவல்களுமே வாசகர்களுக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான தகவல்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு எழுதப்பட்டவை.  அவரவர் துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்ற, 25,30 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உள்ள அறிஞர்கள் ( இவர்களும் கிரைட்டனின் தீவிர ரசிகர்கள்தான்)  கிரைட்டனின் நாவல்களை வரிவரியாக ஆராய்ந்து மேற்கூறிய நூலை எழுதிய பிறகுதான் கிரைட்டனின் நாவல்களில் 20 சதம்தான் விஞ்ஞானம், 80 சதம் கதைதான் என்று தெரிகிறது.    நம்  நாட்டில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத ஒரு மாயக்கலவையான வசீகரஎழுத்து.

விஞ்ஞானக்கதையில் விஞ்ஞானத்தின் சதவிகிதம் குறைந்தால் என்ன?   கிரைட்டன் கதைகளில் அறிவியல் அடிப்படையில் கதை எழுதினாலும், அதையும்தாண்டி, கதையின் ஆதாரமாக அறிவியலின் நோக்கத்தை வைத்திருப்பது  இந்த மறுவாசிப்பில் தெரிந்த்து.  ஜுராசிக் பார்க்கில் கேயாஸ் கொள்கை பேசும் பேராசிரியர் டாக்டர் மால்கம் கிரைட்டன்தான். மால்கமின் குரலில் கிரைட்டன் அறிவியல் ஆராய்ச்சிகள் யாரால் செய்யப்படவேண்டும், ஆராய்ச்சிகள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதன் அவசியம், ஆராய்ச்சிகளுக்கு யார் செலவு செய்வது, ஆராய்ச்சிகளின் பலன்கள் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவா? சாதாரண மக்களின் நல்வாழ்விற்காகவா ? என்றெல்லாம் பேசுகிறார்.  ஜெனிடிக் இஞ்சினீயரிங், பரிணாமத் தத்துவம் என்றெல்லாம் போகும் கதையில் நடுநடுவே, மால்கம் குரலில்  கிரைட்டன்  ‘லேசர், டிரான்சிஸ்டர், மைக்ரோ சிப், போலியோ சொட்டு மருந்து,ஹோலோகிராம்,கணினி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், இவை எல்லாமே தனியார் ஆய்வுக்கூடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை. அரசுப் பல்கலைக்கழகங்களில் புதிய ஆய்வுகளுக்கு எவ்வித ஊக்குவிப்பும் கிடையாது,’  ‘இத்தனை முன்னேற்றத்திற்குப் பிறகும், துணி துவைக்க, பாத்திரம் கழுவ இயந்திரங்கள் வந்தபின்னும் கூட 1930களிலிருந்து இன்று வரை வீட்டுவேலைகளில் பெண்கள் செலவிடும் நேரம் குறையவே இல்லை’, விஞ்ஞானிகள் தங்களை இயற்கையை வென்றவர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் படகு செய்யலாம். ஆனால் கடலைச் செய்யமுடியாது.  அவர்களால் விமானத்தைச் செய்ய முடியலாம். ஆனால் காற்றைச் செய்யமுடியாது, என்றெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார். அவரது கோபம் விஞ்ஞானத்தின் மீதல்ல.  விஞ்ஞானத்தின் வர்த்தகமயத்தின் மீதுதான்.  அவரது நாவல்களில் விஞ்ஞானிகள் தீராத அறிவியல்தாகத்தோடு, அந்த  முயற்சியில் எத்தகைய இடையூறு வந்தாலும் ஏற்கத் தயாரானவர்களாக இருக்க, அவர்கள் ஆய்வு நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் லாபத்திற்காக எத்தகைய மோசமான செயலையும் செய்பவர்களாக  கவனமாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிவியல் புனைகதைகளை வேற்றுக்கிரக மனிதர்கள், பறக்கும் தட்டுகள், விண்வெளிப் பயணம் என்பதைத் தாண்டி முதலாளித்துவ உலகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கடும்விமர்சனமாகத் தனது  நாவல்களை எழுதியவர் என்பதால் மற்ற எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு  ஜொலிப்பவர்   கிரைட்டன். 

எது படித்தாலும் தமிழ்ச்சூழலில் என்ன நிலமை என்று யோசிக்கும் என் மனம் இப்போதும் அதேபோல் யோசித்தது.  விஞ்ஞானக்கதைகளை ஓரளவு எழுதியவர் சுஜாதா மட்டுமே. இவ்வகைக்கதைகள் தமிழில் இல்லாததற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார். ‘ஒரு தையல் இயந்திரமோ, ரேடியோவோ எப்படி வேலை செய்கிறது என்று தெரியாத நமக்கு எதற்கு வம்பு, இருக்கவே இருக்கிறது சாய்வு நாற்காலி, மத்யானத் தூக்கம், நினைவுத்திரைகள் பின்னோக்கிச் செல்வது, சமயலறைச் சண்டை, சாதிச் சண்டை, வட்டார வழக்கு, என்றும் மாறாத காதல், இது போதும் என்கிற பொன் செய் மனோபாவத்தால்தான் முக்கியமான இவ்வகைக் கதைகள் தமிழில் வரவில்லை என்கிறார் சுஜாதா.  தமிழின் ஒரே விஞ்ஞான எழுத்தாளரான சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் கதை எவ்வளவு ? விஞ்ஞானம் எவ்வளவு ? என்ற ஆய்வு இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை.  நண்பர் இரா. நடராசன் மனம் வைப்பாரா?

பின்னி​ணைப்பு

ப​டைப்புகள் பட்டியல்

Airframe

The Andromeda Strain   தி​ரைப்படமாக வந்தது

Binary

A Case of Need

Congo (novel)  தி​ரைப்படமாக வந்தது

Dealing: or the Berkeley-to-Boston Forty-Brick Lost-Bag Blues

Disclosure   தி​ரைப்படமாக வந்தது

Drug of Choice

Easy Go

Eaters of the Dead  தி​ரைப்படமாக வந்தது

Grave Descend

The Great Train Robbery  தி​ரைப்படமாக வந்தது

Jurassic Park (novel)  தி​ரைப்படமாக வந்தது

The Lost World (Crichton novel) தி​ரைப்படமாக வந்தது

        Micro

Next

Odds On

Pirate Latitudes

Prey

Rising Sun   தி​ரைப்படமாக வந்தது

Scratch One

Sphere   தி​ரைப்படமாக வந்தது

State of Fear

The Terminal Man

Timeline   தி​ரைப்படமாக வந்தது

The Venom Business

Zero Cool

Nonfiction

Electronic Life

Five Patients

Jasper Johns

Travels

​மைக்​கேல் கி​ரைட்டனின் ப​டைப்புகள் பற்றி வந்துள்ள நூல்கள்

The science of Michael crichton by Kevin R.Grazier

இது மிக முக்கியமான நூல். ​மைக்​கேல் கி​ரைட்டனின் முக்கிய நாவல்கள் அ​னைத்தும் பற்றி எழுதப்பட்ட கட்டு​ரைகளின் ​தொகுப்பு. 1) The andromeda strain, 2) Virtual reality and man-machine interface in disclosure and the terminal man, 3)Shock to the system, 4)Neanderthals and werdols, 5)Primate behaviour and misbehaviour in Michael Crichton’s congo, 6)crichton’s travel in time. 7)Artificial life in Michael Crichton’s prey, 8)Be afraid. Be very afraid : Michael Crichton’s state of fear, 9) Science comes second in next என்று ஒவ்​வொரு நாவலிலும் உள்ள விஞ்ஞான, கற்ப​னை கல​வை பற்றி ​பெரிய விஞ்ஞானிகள் எழுதியிருக்கும் இந்தக் கட்டு​ரைகளின் த​லைப்புக​ளைப் பார்த்தா​லே​யே அவர் எத்த​னை ​பெரிய விஞ்ஞான ​எழுத்தாளர் என்பது ​தெரியும்.

இடையில்தான் எத்தனை ஞாயிற்றுக் கிழமைகள் என்ற எனது கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்ற கட்டுரை. இது பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

  •  

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? – நூல் அறிமுகம்

பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? – நூல் அறிமுகம் இன்று காலையில் கனலி என்னைக் கையைப் பிடித்து இழுத்து ஜன்னலுக்கு வெளியே பறக்க விட்டார். இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஊர் பூராச் சுற்றி வந்தோம். பலமாடிக் கட்டடத்தின் உச்சித் தளத்திலேறி…

The post பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா? – நூல் அறிமுகம் appeared first on Book Day.

  •