Reading view

நினைவுகள் நெய்திடும் மௌனம் : சியாம்

June 01, 2025 ஆனந்தி நினைவுகளில் கூட நிச்சயமின்மையின் சாயல் படிந்தவளாகவே இருக்கிறாள். நினைவுகளில் ஆனந்தியும் பிறரும் மௌனம் பூணுகிறார்கள். அவர்கள் மௌனம் பூணும் இடங்களை ஆனந்தி மொழிபெயர்த்துவிட்டால் அவளது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா? நிச்சயமின்மையிலிருந்து மௌனமும், மௌனத்திலிருந்து நிச்சயமின்மையும் சதா பிறந்துகொண்டே இருக்கிறதா?
  •  

தெரியாமையில் மலரும் மலர் : சியாம்

April 26, 2025 ராத்கோவின் ஓவியங்களில் பிராத்தனையும் தியானமும் கூடிய சரணடைதல் வெளிப்படுகிறது. கீஃப் தியானம் கூடிய சங்கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். தேவாலயத்தில் பிராத்தனையின்போது பலகுரல் இணைந்து உருவாக்கும் சங்கீதம் அது. அவர் வரைந்த மலரின் பல்லடுக்குகளும் சுழிவும் முயக்கமும் மத்திய கால தேவாலய கூட்டிசையை நினைவூட்டுகின்றன. அதில் உள்ளும் புறமும் ஆற்றலின் நடனம் வியாபிக்கிறது. சிவப்பு கன்னா மலர் ஆற்றலின் அடவுகளை நிகழ்த்துகிறது. ஒருவேளை ராத்கோ எதை உறைய வைத்தாரோ அதையே சிவப்பு கன்னா ஓவியம் கொட்டி வழியவைக்கிறதா? வரலாறும் சமூகமும் அக்காலக்கட்ட கலைஞர்கள் மேல் செலுத்திய தாக்கம் ஒன்றுதான். இருத்தலிய நெருக்கடி. அச்சூழலில் பொலாக் அலறலாக வெளிப்படுகையில், ராத்கோ மௌனம் பூணுகையில், கீஃப் மலராக மலர்கிறார்.
  •