Reading view

சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -1

சென்னை புத்தகத் திருவிழா 2025- எதிர், பரிசல், தமிழினி புதிய வெளியீடுகள்

சென்னை புத்தகத்திருவிழாவானது வருகின்ற டிசம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. புத்தகத் திருவிழாவை ஒட்டி வெளிவர இருக்கும் எதிர், பரிசல், தமிழினி ஆகிய பதிப்பகங்களின் நூற்பட்டியல் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர் வெளியீடு

 

பரிசல் வெளியீடு 

 

தமிழினி வெளியீடு

சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியாகும் புதிய வெளியீடுகள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிட இருக்கிறோம். இணைந்திருங்கள்.

The post சென்னை புத்தகத் திருவிழா – புதிய வெளியீடுகள்; பகுதி -1 appeared first on Kaanalvari.

  •  

மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா

Pa Raghavan

நண்பர்களுக்கு வணக்கம்.

மெட்ராஸ் பேப்பர் வார இதழ், மூன்று வருடங்களை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஜூ 1, 2025 – இன்று  ஆண்டுவிழா.

* இது என்ன பத்திரிகை, எப்படி இருக்கும், எத்தனை நாள் தொடர்ந்து வரும் என்று எது குறித்தும் சிந்திக்காமல், என் மீது கொண்ட நம்பிக்கையினால், கேள்விப்பட்ட மறு கணமே முதல் ஆயுள் சந்தா அளித்து ஆரம்பித்துவைத்த நண்பர்கள் ஏ.எஸ். புவனேசுவரன், மாம்பலம் சந்திரசேகர்;

* தமிழ்ப் பத்திரிகை உலகில் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் தனித்துத் தெரியவும் தரத்தினால் மட்டுமே அடையாளம் காணப்படவும் அடித்தளம் அமைத்துத் தந்து, இன்றுவரை இடைவெளியின்றித் தம் எழுத்தால் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன், எஸ். சந்திரமௌலி;

* இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அனைத்து விதங்களிலும் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கும் பத்மா அர்விந்த், தி.ந.ச. வெங்கடரங்கன்;

* சகலவிதமான நெருக்கடி நேரங்களிலும் நிபந்தனையற்று என்னோடு நிற்கும் செல்வ முரளி, நஸீமா ரஸாக்;

* மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் என்று என் மாணவர்கள் இன்று எங்கெங்கும் கொண்டாடப்பட முக்கியமான காரணம், தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் அவர்களது புத்தகங்கள். என் சொல் அன்றி வேறெதையும் கருதாமல் மெட்ராஸ் பேப்பர் பெயரிலேயே ஒரு இம்ப்ரிண்ட் தொடங்கி அவர்களுடைய முதல் புத்தகங்கள் வெளிவர வழி செய்யும் ஜீரோ டிகிரி ராம்ஜி நரசிம்மன்;

* ஆயிரத்தெட்டு பேமெண்ட் கேட்வே இம்சைகள் இருந்தாலும் சகித்துக்கொண்டு சந்தா செலுத்திப் படிக்கும் வாசக நண்பர்கள்;

* டெட்லைன் கெடுபிடிகளுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு, தமது அன்றாடப் பணிகளுக்கிடையில் தொடர்ச்சி விடுபடாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள்

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

இன்று மாலை ஆறு மணிக்கு ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் இருப்பார்கள். நானும் இருப்பேன். வாசகர்கள் அனைவருடனும் கலந்துரையாடலாம். கேள்விகள் கேட்கலாம். மெட்ராஸ் பேப்பர் தொடர்பான தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். எழுத்து-பத்திரிகை-வாசிப்பு சார்ந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம், பேசலாம், விவாதிக்கலாம்; காத்திருப்போம்.

கூகுள் மீட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 100. எனவே முதலில் வருவோருக்கு முன்னுரிமை. நிகழ்ச்சி சரியாக மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். ஐந்து மணிக்கு என் வாட்சப் சேனலில் லிங்க் தருவேன்.

வருக.

Share

All rights reserved. © Pa Raghavan - 2022

  •  

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே…...

The post களைகட்டும் வீரபாண்டித் திருவிழா first appeared on Her Stories.

  •  

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
  •  

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்படும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி 12வது வருடமாக நடைபெறவுள்ளது. 2009 - ஜூலை 3 முதல் - ஜூலை 12 வரையில் தினமும் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சியில் கலந்துகொள்ளும் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆன்மீக அமைப்புக்கள், அச்சு இதழ்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு புதிய பக்கத்தை விருபா தளத்தில் இணைத்துள்ளோம்.

நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2009
  •  

அறிவியல் புனை கதைகள்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது.


செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....


உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....

1.தமிழில் சில வரவுகள்.

தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு

இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

3.அறிவியல் புனைவின் தோற்றம்

உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.

இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.

இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.

இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.

கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.

அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.

இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.

இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.

இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.

இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.

இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.

இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.

இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.

இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.

1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.

டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.



இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.

டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.

ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.

'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.

இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.

டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.

டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.

*************************

தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.

கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?

பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.

*************************

  •  

அறிவியல் புனை கதைகள்

பதிவின் இறுதியில் பரிசுடன் கூடிய போட்டி உள்ளது.


செங்கோ அவர்கள் மொழிபெயர்த்துள்ள சில்லு மனிதனின் புன்னகை என்ற புதிய புத்தகத்தின் முன்னுரை.....


உலக அறிவியல் புனைவு இலக்கியத் தோற்றம் குறித்து இதுவரை தமிழில் பேசப்படவில்லை என்ற குறையை நீக்குமுகமாக....

1.தமிழில் சில வரவுகள்.

தமிழில் ஏற்கனவே அறிவியல் புனைவு இலக்கிய வகைகள் ஒரு சில தோன்றியுள்ளன. பெ.நா.அப்புசுவாமி ஏராளமான அறிவியல் கட்டுரைகளை எழுதியதோடு கால எந்திரம் ( Time Machine – Herbert George Wells ) என்ற மொழிபெயர்ப்பு அறிவியல் புதினத்தையும் விஞ்ஞானக் கதைகள் என்ற தாமே இயற்றிய அறிவியல் புனைகதை நூலையும் வெளியிட்டுள்ளார். சுஜாதாவின் திசைக் கண்டேன் வான் கண்டேன் ( திருமகள் நிலையம் ), 'என் இனிய இயந்திரா', 'மீண்டும் ஜீனோ', எம்.ஜி.சுரேஷின் '37' ஆகிய குறிப்பிடத்தக்க அறிவியல் புதினங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுஜாதாவின் 'விஞ்ஞானச் சிறுகதைகள்',மலையமானின் 'அறிவியல் கதைகள்', நெல்லை சு.முத்துவின் 'நான்காம் பரிமாணம்' ஜெயமோகனின் 'விசும்பு' பலர் மொழிபெயர்த்து இயற்றியும் வெளியிட்டுள்ள 'எதிர்காலம் என்று ஒன்று' ஆகிய அறிவியல் புனைகதை நூல்கள் வெளியாகியுள்ளன.

என்றாலும் உலக அறிவியல் புனைவின் தோற்றம் குறித்தோ, வளர்ச்சிக் கட்டங்கள் குறித்தோ ஏதும் தமிழில் எழுதப்படவில்லை. இந்நிலையில் மணவை முஸ்தபாவின் 'அறிவியல் படைப்பிலக்கியம்' நூலைத் தவிர அறிவியல் புனைவிலக்கியம் குறித்த நூலேதும் வெளியிடப்படவில்லை. எனவே, அறிவியல் புனைவு இலக்கியம் குறித்து எழுத வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.

2.அறிவியல் புனைவெனும் சொல்லின் நிலைபேறு

இங்கே இவ்விலக்கிய வகைக் குறித்த தமிழ்ச் சொல்லின்படி மலர்ச்சியையும் ( Evolution ) கூற விரும்புகிறேன். முதலில் விஞ்ஞானக்கதை, அறிவியல் கதை, விஞ்ஞானச் சிறுகதை, அறிவியல் படைப்பிலக்கியம் போன்ற சொற்கள் பயன்பட்டு 1994 இல் 'எந்திர நாய்க்குட்டியும் நிலாப் பையனும்' என்ற நூலில் நான் அறிமுகம் செய்த 'அறிவியல் புனைகதை', 'அறிவியல் புனைவு', 'அறிவியல் புனை இலக்கியம்' ஆகிய சொற்கள் தரமுற்று அண்மையில் வெளியிடப்பட்ட விசும்பு, எதிர்காலமென்று ஒன்று, 37 ஆகிய நூல்களில் இச்சொற்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

3.அறிவியல் புனைவின் தோற்றம்

உலக அளவில் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலம் பற்றி பொதுவான ஒருமித்த ஒப்புதலுடைய கருத்து உருவாகாமலேயே உள்ளது. சிலர் பிளாட்டோவின் 'அட்லாண்டிஸ்' கதையை, அதாவது கி.மு. 350 தொடக்கமாகக் கூறுகின்றனர். வேறு சிலர் 'கில்காமெஷ்' ( Gilgamesh ) காப்பியத்தை, அதாவது கி.மு 2400 ஐத் தொடக்கமாகக் கூற விரும்புகின்றனர்.

இவையிரண்டும் மிகவும் பொருளற்றனவாகும். அறிவியல் புனைவு புத்தறிவியலின் தோற்றத்தோடேதான் தோன்ற முடியும். ஏனெனில், அது நடப்பில் உள்ள சமூகத்தை விட உயர்நிலை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற சமூகச் சூழ்நிலை வளமார்ந்த கற்பனையோடு புனைந்துரைக்க வேண்டும். எனவே அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சமூக மாற்றமடைதல் பற்றிய உறுதிவாய்ந்த கண்ணோட்டம் தோன்றிய பிறகே அறிவியல் புனைகதை தோன்ற வாய்ப்பு ஏற்படும். இதனால் முதல் தொழில் புரட்சி காலக்கட்டத்திற்கு மிக நெருக்கமாகவே அறிவியல் புனைவின் தோற்றம் அமைய முடியும். எனவே இதற்கு முந்தைய சூரிய, நிலாப் பயணக் கற்பனையெல்லாம் அற்புத நவிற்சியேயாகும். கி.மு 150 இல் சாமோசாட்டாவால் இயற்றப்பட்ட 'லூசியனின் மெய்வரலாறு' விவரிக்கும் நிலாப்பயணமும், பாரதத் தொன்மத்தில் அனுமான் சூரியப்பழத்தை விழுங்கும் விவரிப்பும் உயர்வு நவிற்சியேயாகும்.

இந்தக் கருத்தை மதிப்பவர்கள் அறிவியல் புனைகதையின் தோற்றக் காலத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளாகக் கொள்கின்றனர். அதாவது 1818 ஆம் ஆண்டில் கவிஞர் ஷெல்லியின் துணைவியாரான மேரி ஷெல்லி இயற்றிய 'ஃபிராங்ஸ்ட்டைன்' என்ற புதின உருவாக்கத்தை அறிவியற் புனைவின் தோற்றமா கக் கொள்கின்றனர். சிலர் இதையும் 1765 இல் ''ஹொராஸ் வால்போல்'' இயற்றிய ''ஒட்ராண்டோக் கோட்டை'' போன்றவற்றையும் கோதிக் வகைப் புதினமாகவே கருதுவோரும் உண்டு. எனினும் அதற்குப் பின் வெளியான ஆலன் போ ( Edgar Allan Poe -1809.01.19 – 1849.10.07 ), ஹாத்தார்ன் ( Hawthorne July 4, 1804 – May 19, 1864 ) போன்றோரின் இலக்கியப் படைப்புக்களை, அறிவியல் புனைவின் தோற்றமாகக் கருதுவோரும் உண்டு.

இந்நிலையில் உண்மையான / சரியான அறிவியல் புனைகதையின் தோற்றமாக 'ஜூல் வெர்னே'( Jules Verne ) என்பவர் 1863 ஆம் ஆண்டில் இயற்றிய ''வளிமக் கூண்டில் ஐந்து வாரங்கள்'' ( Five Weeks in a Balloon - Download this e-book for free ) என்ற புதினத்துடன் அறிவியல் புனைகதையின் தோற்றத்தை இனங்காணலாம். இவர்தான் முதன்முதலாக கோதிக் வகை புனைவின் தாக்கமேதும் இன்றி அறிவியல் புனைகதைகளை முற்றிலும் புதிய முறையில் எழுதினார். இவர் மட்டுமே அறிவியல் புனை கதைகளை எழுதி முதன் முதலாகப் பெரும் பொருள் ஈட்டினார். புகழின் உச்சியையும் அடைந்தார். எனவே 1863 ஆம் ஆண்டே மிகத் தெளிவாக வரையறுக்க முடிந்த அறிவியல் புனைகதையின் தோற்றமாகும். இதையும் மறுக்கும் வாதமும் நடப்பில் உண்டு.

கி.மு 2400, கி.மு 350, கி.மு 150, கி.பி 1818 அல்லது 1863 ஆகிய எந்தக் காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றியதாகக் கருதினாலும் அதன் மெல்லிய இழைப்புரி நீண்டநெடுங்கால இலக்கியப் படிகளின் ஊடாகத் தோன்றி முகிழ்ந்ததெனக் கூறலாம் . 1920 களுக்கு முன்பு மிகச் சிலரே அறிவியல் புனைவு இலக்கியத்தில் ஈடுபட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜூல் வெர்னே ( Jules Gabriel Verne - 1828.02.08 – 1905.03.24 ), எச்.ஜி.வெல்ஸ், ஆகிய இருவர் மட்டுமே. வேண்டுமானால் திருமதி மேரி ஷெல்லியையும் இவர்களோடு கருதலாம்.

அப்படியென்றால், பேரளவில் அறிவியல் புனைவிலக்கியம் தோன்றிப் பரவலாக வாசிக்கப்பட்டது எப்போது? என்ற கேள்வியை இயல்பாகக் கேட்கத் தோன்றும். அறிவியல் புனைவிலக்கியம் படைப்பில் திரளான எழுத்தாளர் ஈடுபட்டது எப்போது? என்ற வினாவையும் தொடுக்கத் தோன்றலாம். மற்ற இலக்கியவினங்களைப் போன்ற விரிந்த புலவளர்ச்சி எப்போது ஏற்பட்டது? என்ற வினாவும் எழலாம். அறிவியல் புனைவிலக்கியச் செம்மல்களாக விளங்கும் ராபர்ட் ஹீன்லீன், ஆர்த்தர் சி.கிளார்க், அய்சக் அசிமோவ், அன்னி மெக்காஃபிரே, ஃபிராங்கு ஹெர்பட், ரே பிராட்பரி, உர்சுலா கே.லீ குவின் போன்றோர் உருவாகிய அறிவியற் புனைவின் பொற்காலம் அல்லது அறிவியற் புனைவின் செவ்வியற் காலம் எது? எனும் அடிப்படைக் கேள்வி எழுகிறது.

இத்தகைய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது ''அறிவியல் புனைவு இதழ்'' ( Magazine Science Fiction ) என்ற இதழின் தோற்றமே எனலாம். இதன் முதல் இதழ் 1926 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதைப் பதிப்பித்தவர் ஹியூகோ கெர்ன்ஸ்பேக் ( Hugo Gernsback) என்பவராகும். இவர் பெயரால் அறிவியல் புனைவு விருதொன்று ''ஹியூகோ கெர்ன்ஸ்பேக் '' ( Hugo Award ) என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இதையும் மறுப்பவர்களும் உண்டு. இந்த அறிவியல் இதழ் அரைகுறைப் படிப்பாளிகளுக்காக மிகமட்டமான மஞ்சள் தாளில் இலக்கியத் தரமற்ற ''குடிசைப் புகுதி'' இலக்கியத்தை ( Gheo Literature ) வெளியிட்டதெனக் கருதுவோரும் உண்டு. இதை முதன்மை இலக்கியப் போக்கினர் அருவருப்பான கண்ணோட்டத்தோடே நோக்கினர் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. அவர்கள் இவ்விலக்கிய வகையை இலக்கியமாகவே கருதவில்லை என்பதே நடப்பியல் உண்மை.

இதிலும் ஓரளவு பொருளில்லாமல் இல்லை. ஏனெனில் அ.பு.இ ( M.S.F ) வெளியிட்ட 90 விழுக்காடு கதைகள் மட்டமான பதினாட்டையாண்டு ( Teenage ) இளம் பருவக் கற்பனைகளாகவே உருவெடுத்தன என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு ஸ்டார்ஜன் எழுதிய விதி ( Law ) என்ற புனைவு அடிக்கடி எடுத்துக்காட்டாக கூறப்படுவதுண்டு. என்றாலும் அ.பு.இ ( M.S.F ) பல இளைஞர்களை தங்களது புனைவுத் திறைமைக் கூர்மைப்படுத்திக் கொள்ள உதவியது. மேலும் இந்த இதழ்தான் அவர்கள் வேறுவகை இலக்கிய வகைப் புனைவுக்குள் புகாமல் தடுத்தது. அக்காலத்தில் அறிவியல் புனைவிலக்கியம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறவில்லை, எனினும் அத்துறையில் சில எழுத்தாளர்கள் புகழ்ச்சி அடைய அ.பு.இ ( M.S.F ) இதழ் வழிவகுத்த்து. வியல் புனைபுனைகதை இலக்கியத்தைப் பாலூட்டித் தாலாட்டி வளர்த்து உலகில் தவழவிட்டது. முதலில் நாலுகால் நடைக்கும் பிறகு தத்தி நடக்கவும் பயிற்சி தந்தது.

இந்த நிலையில் அ.பு.இ ( M.S.F ) இதழைக் கண்டு முகஞ்சுழித்து வெறுத்து ஒதுக்கியவர்கள் பத்தாம்பசலி இலக்கியப் பண்டிதர்களேயாவர். இவர்களில் சிலரும் இவ்விதழில் அறிவியல் புனைகதை எழுதிப் புகழ் பெற்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிதாகிறது. எனவே இவர்கள் தாம் ஏறிய ஏணியை எட்டி உதைத் மனப்பான்கினர்.

இப்போது அ.பு.இ ( M.S.F ) இதழின் பணிகளைக் கருதுவோம். அந்த இதழ் அவ்வளவு எளிதாக உருவாகவில்லை. காரணம் அந்தக் காலத்தில் அறிவியல் புனைவு இலக்கியம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெறாமலிருந்ததே. அதில் மிகச் சிலரே எழுதினர். அவர்களிடம் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தும் அளவுக்குப் பொருள் வளமும் இல்லை. இதழைத் தொடங்கிய கெர்ன்ஸ் பேக் (Hugo Gernsback) இதழைத் தக்கவைத்திட எச்.ஜி.வெல்ஸ், ஜூல் வெர்னே ஆகிய இருவரது அறிவியல் புனைவுப் படைப்புகளை வெளியிட வேண்டியிருந்தது. எனினும் மெல்ல மெல்ல புதிய எழுத்தாளர்களைக் கவர்ந்திழுக்கலானது.

இந்த எழுத்தாளர்கள் எழுத்துத் தொழிலுக்கே முற்றிலும் புதியவர்களாகவிருந்தனர். மேலும் அவர்களது எழுத்துத் திறமையும் போதுமான அளவுக்கு அமையவில்லை. அறிவியல் புனைவிலக்கிய வரையறையைப் புரிந்துகொள்ளாத கற்றுக்குட்டிகளாகவும் 'அதியற்புதச் சாகசப்' ( Romantic ) புனைவர்களாகவுமே இருந்தனர். எனவே அர்களிடமிருந்து மிகவும் தரங்குறைந்த மஞ்சளிதழ்ப் படைப்புக்களே கிடைத்தன. எனவே 1920 களில் தரமான அறிவியல் புனைவிலக்கியம் உருவாகவில்லை என்பதே உண்மை.

இருந்தாலும், அக்காலப் படைப்புக்களே சற்றுத் தரம் வாய்ந்தனவாக அமையத் தொடங்கின. இதற்குச் சில விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. இதில் விளைந்த ஓர் அரிய படைப்பு 'விண்வெளித் துப்புரவாளன்' Amazing Stories என்ற இதழில் தொடராக வெளியாகியது.

இந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்க அறிவியல் புதினமேதும் உருவாகவில்லை. குறும்புதினங்களே குறிப்பிடத்தக்க தரத்துடன் விளங்கின. அவையும் ஒரே இதழில் வெளியிடத்தக்க அளவுடைய சிறு கதைகளாகவே அமைந்தன. எனவே மிகச் சிறந்த எழுத்தாளர்களும் இக்காலகட்டத்தில் குறும்புதினங்கள் படைப்பதிலேயே கவனம் செலுத்தினர்.

மெல்ல மெல்ல 1930களில் அறிவியல் புனைவிலக்கியம் பொதுக் கவனமீர்ப்புக்கு ஆளாகத் தொடங்கியது. எனினும் அப்போதும் அறிவியல் புனைவின் தரம் நிலைபேறடையவில்லை. மஞ்சளிதழ்த் தரமே மேலோங்கியது. எனினும் சீரிய மையக் கருக்கள் தோன்றி மலர்ந்தன, வாசகச் சிந்தனையும் விரிவடைந்திடலானது.

இதற்கிடையில் 1930களின் முன்னணி இதழாக 'அதிர்ச்சிதரும் கதைகள்'(Astounding Stories) என்ற இதழ் தோன்றியது.

1930, ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட முதல் இதழே களைகட்டத் தொடங்கிவிட்டது. முந்தைய இதழைப் புறந்தள்ளி வளரலானது. இன்னொரு காரணம் கெர்ன்ஸ்பேக்கால் முந்தைய இதழில் புறக்கணிக்கப்பட்ட ஹாரி பேட்ஸ் (Harry Bates) இந்த இதழின் ஆசிரியராகப் பதவியேற்றதேயாகும். மேலும் இந்த இதழ் எழுத்தாளர்களுக்குக் கணிசமான தொகையை வழங்கியது. அத்தோடு ஹாரி பேட்ஸ் முழுமுனைப்போடு சுறுசுறுப்பாக செய்லபட்டதும் இதழை வேகமாக முன்னேற வழிவகுத்தது. அத்தோடு இவர் கெர்ன்ஸ் பேக் பின்பற்றிய கதையில் நீதியுரைத்தல் போக்கைக் கைகழுவிவிட்டு, அறிவியல் புனைவில் ஆழமான கருக்களை விதைப்பதில் பெருங்கவனம் செலுத்தலானார். எனினும் 1933 மார்ச் இதழோடு அதன் வெளியீட்டாளரான வில்லியம் கிளேட்டன் செலவைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் மஞ்சளறிக்கை வெளியிட நேர்ந்தது.. அவர் மட்டுமா, நாடே அன்று பெரும் பொரிளாதாரச் சரிவைச் சந்தித்தது. இதற்கிடையில் அந்த இதழ் 1933 அக்டோபர் மாதத்தில் ஸ்ட்ரீட் அண்டு ஸ்மித் வெளியீட்டகத்திற்குக் கை மாறியது. எஃப்.ஓர்லின் டிரமெயின் இதழின் ஆசிரியரானார்.

டிரமெயின் இதழின் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருந்தார். அறிவியல் புனைவில் பலவகைச் சிந்தனை மாற்றங்களுக்கு வித்திட்டார். பழைய கருவிகளில் புதிய மாற்றங்களை உருவாக்கியதோடன்றி, புதிய கருபாடுகளுக்கு ( Notions ) வழிவகுத்தார். இது வாசகப் பேராதரவைத் திரட்டியது. அப்பேராதரவினால் இதழ் பிறகு அச்சுறுத்தலேதுமின்றி தொடர்ந்து நிலைபெறலானது. இதனால் 1930கள் காலகட்டம் அறிவியல் புனைவின் செவ்வியற் காலமாக ( Classical Period ) உருவெடுத்தது.



இக்காலகட்டச் சிந்தனை மாற்றப் புனைவுக்கு எடுத்துக்காட்டாக மர்ரே லீன்ஸ்ட்டரின் ( Murray Leinster ) ( புனை பெயர் வில்லியம் எஃப். ஜெர்கின்ஸ் ) 'காலத்தின் பக்கவாட்டுப் பயணம்' ( Side wise in Time) என்ற கதையைக் கூறலாம். இது 1934 ஜூன் இதழில் வெளியானது. இது புடவிகளின் ( Universes ) இணைநிலைக்கால ஓடைகள் என்ற புதிய கருதுகோளை உருவாக்கியது. ஒரே புள்ளியில் இக்காலவோடை நடப்பில் உள்ள பல பாய்வுப் போக்குகளில் எந்தவொரு பாய்வுப் போக்கையும் பின்பற்றலாம் என்ற கருத்தை வெளியிட்டது. இந்த ஸின்ஸ்ட்டீரியக் கருதுகோள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குவைய அண்டவியிலில் ( Quantum Cosmology ) கருதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வழக்கத்திற்கு மாறான டிரமெய்ன் காலக்கதை, அவ்விதழின் முந்தைய ஆசிரியரான ஹாரி பேட்ஸ் என்பவரால் படைக்கப்பட்டது. கதையின் பெயர் 'ஆ! அனைத்தும் சிந்தனைமயம்' ( Alas, All Thinking ) என்பதாகும். இது 1935 ஜூன் இதழில் வெளியாகியது. படிமலர்ச்சியின் ஒரு சீரழிவுப் போக்கைப் படம் பிடித்தது.

டிரமெய்ன் காலத்துப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஜான்.டபிள்யூ.கேம்பெல்(John W. Campbell) ஆவார். இவர் எஃப்.எஃப்.ஸ்மித்தைப் பின்பற்றி மீ அறிவியல் ( Super Science ) புனைகதைகளை எழுதத் தொடங்கினார். அத்துறையில் இவரால் ஸ்மித்தின் இடத்தைக் கைப்பற்ற முடியவில்லை. பிறகு இவர் டான்.ஏ.ஸ்டூவார்ட் என்ற புனை பெயரில் மேலும் நுட்பம் வாய்ந்த கதைகளை எழுதலானார். இக்கதைகள் இலக்கியத் தரத்தோடு உணர்ச்சித் ததும்பல் மிக்கமைந்தன. இவரது 'அந்தியொளி' ( Twilight ) என்ற கதை 1934, நவம்பர் மாதம் 'அதிர்ச்சிதரும் கதைகள்' ( Astounding Stories ) இதழில் வெளியாகியது.

ஸ்டூவர்டின் மிகச் சிறந்த நெடுங்கதை 'யார் அங்கே போகிறது?' ( Who Goes There? ) அதே இதழில் 1938 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. இது மதி நுட்பமும் அச்சுறுத்தல் திறனும் வாய்ந்திருந்தது.

'யார் அங்கே போகிறது?' வெளியான அதே வேளையில் அறிவியல் புனைவில் மற்றொரு புரட்சியும் ஏற்பட்டது. டிரமெய்ன் 'அதிர்ச்சிதரும் கதைகள்' . இதழின் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, இதழின் ஆசிரியரான ஜான்.டபிள்யூ.கேம்பெல், அறிவியல் பற்றியும் அறிவியலாளர் பற்றியும் மேலும் நம்பகமும் தரமும் வாய்ந்த புனைவாக்க திறமைசாலிகளைத் தேடலானார்.

இவர் முதலில் இப்புலத்தில் கொடிகட்டிப் பறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ஹொரேஸ் கோல்டு ( Horace Gold ) என்பவர் கிளைடு கிரேன் கேம்பல் ( Clyde Crane Cambell ) என்ற புனைபெயரில் பல சிறந்த அறிவியல் புனைகதைகளை டிரமெய்ன் தலைமையில் எழுதினார். புதிய சூழலில் அவரால் தனது புனை பெயரைத் தொடர முடியவில்லை. எனவே, அவரது கதையான 'வடிவம் என்னும் பொருண்மை' முதன்முதலாக அவரது சொந்தப் பெயரிலேயே வெளியாகியது. இது, 1938, டிசம்பர் மாத இதழில் வெளியானது. இது தனது உருவத்தால் பல மேம்பாடுகளையும் குறைபாடுகளையும் சந்தித்தவரது பட்டறிவை இயல்பான விவரிப்பால் வக்கணையோடு நவின்றது.

டிரமெய்ன் காலத்தில் எழுதத் தொடங்கி முதிர்நிலைப் பட்டறிவுற்ற மற்றோர் எழுத்தாளர் எல்.ஸ்பிரேக் டி கேம்ப் என்பவராவார். இவரது முதல் கதை 1937 செப்படம்பர் இதழில் வெளியாகியது. அதற்குப் பிறகு இவர் பல பெயர்பெற்ற கதைகளை வடித்தளித்தார். இவர் அறிவியல், வரலாறு ஆகிய இரு புலங்களில் வல்லவர். எனவே இவரது கதைகள் இருபுலத் துல்லியம் வாய்ந்தனவாக அமைந்தன். அறிவியல் புனைவை நகைச்சுவை ததும்ப எழுதிய மிகச் சிலருள் இவரும் ஒருவர். இவர் இக்காலத்தில் தானே ஒரு துணையிதழை நடத்தி, தனது முழு வல்லமையையும் வெளிக்கொணர்ந்தார்.

டி.கேம்ப் தனது இதழில் முதல் தர எழுத்தாளராக விளங்கினார். அதில்
'பிரித்து ஆள்' ( Divide and Rule ) என்ற கதையை 1939, ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டார். இது இடைக்கால வீரமும் புத்தறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைப் போக்கும் பின்னிப் பிணைந்த பேரின்பக் கிளர்வு மூட்டும் கதையாக விளங்கியது.

மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் 1930 களில் வெளியாகிய செவ்வியற்கால அறிவியல் புனைவின் ஆகச்சிறந்த ஆக்கங்களாக அமைந்தன. இவை அறிவியல் புனைவிலக்கியத்தின் தனித்தன்மையையும் புனைவாற்றலையும் பறைசாற்றியதோடு, அறிவியற் புனைவின் காத்திரமான ( காழ்திறம் வாய்ந்த ) தோற்றத்திற்கு கட்டியம் கூறின எனலாம்.

*************************

தமிழ் இணைய உலகில் அறிவியல் புனைவு என்றால் அதன் மறுபெயர் சுஜாதா என்று கூறும் பலருக்காகவும் ஒரு போட்டி, பரிசுடன் கூடிய ஒரு போட்டி.

கேள்வி - எழுத்தாளர் சுஜாதாவின் இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள விஞ்ஞானச் சிறுகதைகள் பக்கம் இரண்டில் ( Science Fictions Page - Two ) பட்டியிலிடப்பட்டுள்ள புத்தகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்கள் என்ன?

பரிசு - சரியான விடை கூறும் வாசகருக்கு விருபா தளத்தில் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புதிய புத்தகங்களில் இருந்து வாசகர் விரும்பும் ஏதாவது ஒரு புத்தகம். 2009.01.18 அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சித் திடலில் வழங்கப்படும்.

*************************

  •  

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்

ம.சோ.விக்டர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.

ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.

இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி

( அகர வரிசையில் புத்தகங்கள் )

01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் - தமிழர் சமயம் இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.

02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

03.உலகளாவிய தமிழ்
உலகளாவிய தமிழ் பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
எபிரேயத்தின் தாய்மொழி தமிழேதமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.

05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

07.ககதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.

08.குமரிக் கண்டம்குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.

09.சிந்துவெளி நாகரிகம்சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.

10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.

14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.

15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
பஃறுளி முதல் யூப்ரடீசு வரைகுமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.

16.வானியலும் தமிழரும்வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.

17.Tamil and Hebrew
Tamil and Hebrew

18.The Babylonian ThamizhThe Babylonian Thamizh

19.தமிழர் எண்ணியல்

20.தமிழர் சமயம்
  •  

ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வு நூல்கள்

ம.சோ.விக்டர்

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துக்கொடுத்த வழியில் தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சொல்லாய்வு ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் ஒருவராக ம.சோ.விக்டர் தன் ஆய்வுகளைப் புத்தகங்களாகத் தந்துள்ளார். 2009.01.03 அன்று சென்னைப் பல்கலைக்கழக பவழவிழா மண்டபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், முனைவர் மு.அனந்த கிருஷ்ணன் ( தலைவர் ஐஐடி - கான்பூர் ), பேராசிரியர் எஸ்.இராமச்சந்திரன் ( துணைவேந்தர் - சென்னைப் பல்கலைக்கழகம் ), முனைவர் ம.ராசேந்திரன் ( துணைவேந்தர் - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ), முனைவர் சபாபதி மோகன் ( துணைவேந்தர் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ) ஆகிய துணைவேந்தர்களும், செம்மொழி நிறுவனத்தின் தலமைப் பொறுப்பில் உள்ள முனைவர் க.ராமசாமி அவர்களும் ஒருங்கே கலந்துகொண்டு சிறப்பித்தமை வெளியிடப்பட்ட புத்தகங்களின் தனிச்சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

முனைவர் க.ராமசாமி அவர்கள் பேசும்போது பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை இப்புத்தகங்களை வெளியிட்டுள்ள நல்லேர் பதிப்பகம் செய்துள்ளதாகப் பாராட்டி, இப்புத்தகங்கள் அனைத்தும் உடனடியாக ஆங்கிலத்தில் எழுதப்படவும், இப்புத்தகங்கள் கூறும் விடயங்கள் பற்றி கருத்தரங்கங்கள் வைத்து விவாதிக்கப்படல் வேண்டும் என்றும், இதற்கு செம்மொழி நிறுவனம் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் கூறினார்.

ஆசிரியர் ம.சோ.விக்டர், கல்லூரிகளில் படித்திராத ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர். தன்னுடைய தனிப்பட்ட தமிழ் ஆர்வத்தன் காரணமாக வெளிநாடுகளில் மொழியியல் ஆய்வு தொடர்பில் வெளியிடப்பட்ட பல்வேறு புத்தகங்களையும் ஆராய்ச்சி முடிவுகளையும் பெற்று அவைகூறும் செய்திகளின் அடிப்படையில்தான் இந்நூல்களை எழுதியுள்ளார். ஒவ்வொரு புத்தகத்திலும், தான் கூறும் கருத்துகளுக்குப் பல்வேறு வெளிநாட்டு மொழியியல் ஆய்வுப் புத்தகங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார். உலக மொழிகள் பலவற்றிற்கும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கும் புத்தகங்களாக இவை உள்ளன.

இப்புத்தக வெளியீடு பற்றிய செய்தி

( அகர வரிசையில் புத்தகங்கள் )

01.இசுலாம் - தமிழர் சமயம்
இசுலாம் - தமிழர் சமயம் இசுலாம் தோன்றிய அரபு நாட்டைப் பற்றியும், அம்மக்களைப் பற்றியும் வரலாறு தரும் செய்திகளின் அடிப்படையில், அராபியர் தமிழ் வழியினரே என்பதற்கான சான்றுகள் வலுவாக உள்ளன. தொடக்க கால அராபியரின் சமயம், வழிபாட்டு முறைகள், சமுதாய வாழ்க்கை போன்ற கூறுகள் தமிழரோடு நெருங்கிய தொடர்புடையன. இசுலாம் சமயம், இடைக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டதாலும், அச்சமயத்தின் வேரும் மூலமும் உலகப் படைப்புக் காலத்தையே தொட்டு நிற்கின்றன. இசுலாம் தமிழச் சமயத்தோடு கொண்டுள்ள உறவை இந்நூல் ஆய்வு செய்கிறது.

02.உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்
உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள் சமற்கிருதச் சொற்களாகக் கருதப்பட்ட பல்வேறு சொற்களுக்கு, 35 தலைப்புக்களில் அவை தமிழ்ச சொற்களே என்பதற்கான விளக்கங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. டாக்டர் உ.வே.சா போன்ற தமிழறிஞர்கள் மயங்கிய பல சொற்களுக்கான வேரும் மூலமும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

03.உலகளாவிய தமிழ்
உலகளாவிய தமிழ் பொருள் இல்லாத சொற்கள் தமிழில் இல்லை எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். தமிழ் வேரின்றும் விரிந்த தமிழ்ச் சொற்கள் பற்றியும், அச்சொற்கள் உலக மொழிகளில், எவ்வாறெல்லாம் ஊடியுள்ளன என்பது பற்றியும் இந்நூல் ஆய்வு செய்கின்றது. 36 தமிழ்ச் சொற்களுக்கான வேரும் மூலமும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

04.எபிரேயத்தின் தாய்மொழி தமிழே
எபிரேயத்தின் தாய்மொழி தமிழேதமிழ், தென்னக மொழிகளுக்குத் தாயாகவும், ஆரியத்துக்கு மூலமாகவும் உள்ளதெனப் பாவாணர் கூறுவார். இந்திய எல்லைகளையும் தாண்டி, கி.மு 3000 ஆண்டுகளில், நண்ணிலக் கடற்பகுதிகளில் தமிழ் வேரூன்றியிருந்த செய்திகளை இந்நூல் விளக்குகின்றது. அக்காடியம், பாபிலோனியம், சுமேரியம், கனானியம், எபிரேயம், அறமாயிக் போன்ற மொழிகளில் தமிழின் தாக்கங்களையும் வேர்ச்சொற்களையும் ஆய்ந்து இந்நூல் அறிவிக்கின்றது.

05.எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்எபிறேய மொழியில் காணப்படும் பல்வேறு சொற்களுக்கு தமிழின் வேரும் மூலமும் விளக்கிச் சொல்லப்பட்டுள்ளன. தமிழில் வழக்கிழந்துபோன பல சொற்கள், தமிழ்ச் சொற்களாகவே எபிறேய மொழியில் காணப்படுகின்றன. சில சொற்களுக்கான பொருளின் சூழல் தமிழ்ச் சொற்களிலும் சிறப்பாக உள்ளதை இந்நூல் ஆய்வு செய்கின்றது. இருநூறுக்கும் மேற்பட்ட எபிறேய மொழிச் சொற்கள் இந்நூலில் விழக்கப்பட்டுள்ளன. தமிழர் - எபிறேயர் இன வரலாறும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

06.எல் - யாஎல், யா ஆகிய இரு சொற்களும் பழந்தமிழ்ச் சொற்களாகும். இவை இறைவனோடும் சமயத்தோடும் தொடர்பு கொண்டவை. இவ்விரு சொற்களும், பாபிலோனிய, ஃபோனீசிய, யூத சமயங்களில், தமிழ்ப் பொருளோடு வெளிப்படுகின்றன. யூதர்களின் கடவுளாக எல்லும் யாவும் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளை இந்நூல் விளக்குகின்றது.

07.ககதமிழின் முதல் உயிர்மெய் எழுத்தான க, ஒரு சொல்லுமாகும். எழுத்தில் முதன்மை பெற்றுள்ள க, எண்ணிலும் முதலானாதாகும். க என்பது முதன்மையை அல்லது ஒன்றைக் குறித்த தமிழ்ச் சொல்லாகும். இந்த ஓரெழுத்துச் சொல்லின் தாக்கங்கள் எவ்வாறெல்லாம் உலக மொழிகளில் விரவிக் கிடந்து, தமிழ்ப் பொருளையே தருகின்றன என்பதை இந்நூல் விளக்குகின்றது.

08.குமரிக் கண்டம்குமரிக் கண்டம்கடந்த நூற்றாண்டில் அணுகப்பட்ட குமரிக் கண்டம் பற்றிய நோக்கு, தற்போது புதிய கோணங்களில், புதுப்புதுத் தகவல்களைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் கற்பனைக் கண்டம் என்று கருதப்பட்ட குமரிக் கண்டம், இன்று வரலாற்று நிகழ்வாக மாறுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முற்றிலும் புதிய தகவல்களுடன் சொற்கள் தொடர்பான ஆய்வுகளையும் இணைத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்தகாலச் சிந்தனைகளை, கருதுகோள்களை இந்நூல் மேலும் விளக்கிச் செல்கிறது.

09.சிந்துவெளி நாகரிகம்சிந்துவெளி நாகரிகம்குமரிக் கண்ட அழிவிற்குப் பிறகு சிந்துவெளியில் குடியேறிய தமிழர், அங்கு வளர்த்த நகரிய நாகரிகம், வரி வடிவங்கள், சமயம் மற்றும் சமுதாய நிலைகளை இந்நூல் விளக்குகின்றது. சுமேரியர், யூதர், ஃபோனீசியர் போன்ற மேலை நாட்டு மக்களினம், சிந்து வெளியினின்றும் புலம்பெயர்ந்த தமிழினமே என்பதற்கான சான்றுகள் தரப்பட்டுள்ளன. சுமேரிய - சிந்துவெளியின் வரிவடிவங்கள் ஒன்றே என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கின்றது.

10.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 1)தூய தோமையர் காலம் தொடங்கி, வீரமாமுனிவர் காலம் வரையிலான கிறித்துவ சமய வரலாற்றை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. கிறித்துவ சமயம் பற்றித் தமிழில் எழுதப்பட்டுள்ள முதல் வரலாற்று நூல் இதுவே எனலாம். இது சமய நூலன்று, கிறித்துவம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் பலவும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.


11.தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)
தமிழ் நாட்டுக் கிறித்துவம் ( பகுதி - 2)தமிழ்நாட்டுக் கிறித்துவம் - பகுதி 1 இன் தொடர்ச்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் கிறித்துவ சமயப் பரப்பாளர்களிடையே தோன்றிய கருத்து வேறுபாடுகள், மேலாண்மை எண்ணங்கள் ஆகியவை தமிழ்நாட்டுக் கிறித்துவ சமய வரலாற்றில், கரும்புள்ளிகள் நிறைந்த பக்கங்களாகும். இச்செய்திகள் யாவும் விருப்பு வெறுப்பின்றிச் சொல்லப்பட்டுள்ளன.

12.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 1
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 1இந்தியாவின் முதன் மொழி சமற்கிருதமே என்றும், தமிழை நீச மொழியென்றும் கூறி வந்த காலத்தில் அதற்கு எதிர்புகள் தோன்றவே, சிவனின் உடுக்கையில் பக்கத்திற்கொன்றாக தோன்றியவைகளே தமிழும் சமற்கிருதமும் என்றனர். உண்மையில் தமிழின் கிளைமொழியே சமற்கிருதம் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. வரலாற்றுச் செய்திகளுடன் பல சமற்கிருதச் சொற்களுக்கான தமிழின் வேர்ச்சொற்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

13.தமிழும் சமற்கிருதமும் - பகுதி 2
தமிழும் சமற்கிருதமும்  - பகுதி 2அகர வரிசைப்படி தொடங்கப்பட்டுள்ள இந்நூலில் காணப்படும் சமற்கிருத்ச் சொற்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் தொன்மையையும் ஆழத்தையும் அறியாதவர்கள், எவ்வாறெல்லாம் தமிழ்ச்சொற்களையே பிறமொழிச் சொற்களாகக் கருதத் துணிந்தனர் என்ற செய்திகளை இந்நூல் விளக்குகிறது.

14.தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியச் சிந்தனைகள்தொல்காப்பியரின் காலம், அவர் அறிந்திருந்ததாகக் கூறப்படும் ஐந்திரம், தொல்காப்பியர் எச்சமயத்தைச் சார்ர்ந்தவர், அவர் கூறும் தெய்வங்கள் ஆகியவை பற்றிய புதிய சிந்தனைகள், தொல்காப்பியர் ஆரியரே என்ற கூற்றை இந்நூல் மறுப்பதோடு, அவர் தமிழரே என்றும், தொல்காப்பியத்தில் சமற்கிருதச் சொற்கள் ஒன்றுகூட இல்லையென்பதையும் இந்நூல் விளக்குகின்றது.

15.பஃறுளி முதல் யூப்ரடீசு வரை
பஃறுளி முதல் யூப்ரடீசு வரைகுமரிக்கண்டத்தின் தோற்றம், பொலிவு, அழிவு ஆகிய செய்திகளுடன் ஞாலத்தின் தோற்றம், மாந்தவினத் தோற்றம் ஆகிய செய்திகளை இந்நூல் தருகின்றது. குமரிக் கண்டம் அழிவுற்றபோது, நண்ணிலக் கடல் நாடுகளில் குடியேறிய தமிழர், அத்தமிழர் ஆங்கே உருவாக்கிய மொழி, பண்பாட்டு, இலக்கிய, நகரிய நாகரிகங்களை வரலாற்று அடிப்படையில் இந்நூல் விளக்குகின்றது.

16.வானியலும் தமிழரும்வானியலும் தமிழரும்வானியலைக் கண்டுபிடித்தவர்கள் ஆரியர்களே என்றும் அதனை மேலை நாடுகளில் அறிவித்தவர்கள் கிரேக்கர்களே என்றும் மேற்கத்திய கலைக்களஞ்சியங்கள் அறிவிக்கின்றன. உண்மையில் இவ் இரு இனத்தாரும் சொல்லும் செய்திகளில், தமிழ் வழக்குகளும் வழக்காறுகளும், தமிழ்ச்சொற்களுமே விஞ்சி நிற்கின்றன.

17.Tamil and Hebrew
Tamil and Hebrew

18.The Babylonian ThamizhThe Babylonian Thamizh

19.தமிழர் எண்ணியல்

20.தமிழர் சமயம்
  •  

2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு

2009 சென்னைப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், இதழ்கள், செய்தி ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரங்க ( Stall ) எண்கள் அடங்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx
  •  

2009 சென்னைப் புத்தகத்திருவிழா அரங்கு

2009 சென்னைப் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் தமிழ்ப் பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளர்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், இதழ்கள், செய்தி ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரங்க ( Stall ) எண்கள் அடங்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.viruba.com/ChennaiExpo2009Stalls.aspx
  •  

ஜெயமோகனுக்கு நன்றி!

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட வாசகர் ஒருவர் மதுரையை மையமாகக் கொண்ட நாவல்களை பரிந்துரைக்கச் சொல்ல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் தனது தளத்தில் சில பரிந்துரைகளைத் தந்துள்ளார். ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சாம்ராஜின் கொடைமடம், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் , எஸ். அர்ஷியாவின் பொய்கைக்கரைப்பட்டி, ஏழரைப்பங்காளி வகையறா நாவல்களை குறிப்பிட்டிருப்பதோடு நரசய்யாவின் ஆலவாய் கட்டுரை நூலையும் குறிப்பிட்டிருக்கிறார். இறுதியில் மதுரையைக் குறித்து எழுதிவரும் என்னைக் குறித்து எழுதியுள்ள வரிகள் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தன.

சித்திரவீதிக்காரன் என்பவர் ஓர் இணையப்பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். மதுரை பற்றி ஆர்வம் கொண்டவர்களுக்கு பிடிக்கும் எழுத்து. மதுரை பற்றிய தகவல்கள், வாசிப்புக்குறிப்புகள் என்று விரிவாக எழுதிக்கொண்டே இருக்கிறார். 

ஜெயமோகன் எழுதிய கொற்றவை, விஷ்ணுபுரம், காடு, வெள்ளையானை போன்ற நாவல்களை வாசித்திருக்கிறேன். அவரது கொற்றவை எனக்கு மிகவும் பிடித்த நாவல். வெள்ளையானை நாவல், மத்தகம் குறுநாவல் குறித்து பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய வாசித்திருக்கிறேன். சென்ற ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா குறித்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

யுவன் சந்திரசேகர் நூல் குறித்த எனது பதிவுகள், வெள்ளை யானை நாவல் குறித்த எனது பதிவுகளின் இணைப்புகளை அவரது தளத்தில் முன்னரே கொடுத்திருக்கிறார். தமிழ் விக்கியில் சில கட்டுரைகளிலும் சில பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது மதுரையின் சித்திரம் என்ற அவரது இந்தப் பதிவு பெருங்கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறது. ஜெயமோகனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

  •  

இசை சூஃபி: ஏ.ஆர்.ரஹ்மான் – மானசீகன்

திரைப்படப்பாடல்களை ஒரு காலச்சக்கரம், அருமருந்து, உணர்வூட்டி எனப் பலவாறு சொல்லலாம். அப்படி ரஹ்மானின் பாடல்களைக் கேட்டு ரசித்து அதை சிலாகித்து மானசீகன் எழுதிய கட்டுரைகளே இசை சூஃபி நூல். முகநூலில் மானசீகன் ரஹ்மான் பாடல்கள் குறித்து எழுதிய சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். சென்றாண்டு சென்னை புத்தகக் கண்காட்சி சென்றபோதே இந்நூலை வாங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழினியில் வாங்க முடிந்தது.

மானசீகன் ஒரு பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர். அதோடு சுவாரசியமான எழுதுபவர். ரஹ்மான் ரசிகர் என்பதோடு அவர் கமல் ரசிகரும்கூட. அவரது எழுத்துக்களை முகநூலில் விரும்பிவாசிப்பேன். உளவியல் ரீதியாக எளிமையாக நிறைய விசயங்களை எழுதுவார்.

இசையில் ரஹ்மானின் பரிசோதனை முயற்சிகள், பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் விதம், புல்லாங்குழல், தப்ஸ் அல்லது தாயிரா போன்ற கருவிகளை பாடல்களில் பயன்படுத்திய விதம், புதிய பாடகர்களை அறிமுகம் செய்தது எனப் பல விசயங்களை இக்கட்டுரைகளில் விரிவாக எழுதியிருக்கிறார். “ரஹ்மானின் பாடல்களை கேட்கக் கேட்க பிடிக்கும் என்பது பொய்; கேட்ட உடனேயே பிடிக்கும்; கேட்க கேட்க புரியும்; இதுவே உண்மை” என்கிறார் மானசீகன்.

இந்தியன், பம்பாய், முத்து, காதல் தேசம், இந்திரா, மெட்ராஸ் போன்ற படங்களிலுள்ள பெரும்பாலான பாடல்களைக் குறித்து எழுதியிருக்கிறார். உயிரே படப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லையே என்றொரு வருத்தமும் உள்ளது. ரஹ்மான் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை உயிரே படப்பாடல்கள்தான்.

ஊரடங்கு காலத்தில் இரண்டு பாடல்களைத்தான் பலமுறை கேட்டேன். ஒன்று மரியான் படத்திலுள்ள “இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாத்தான் என்ன?” என்ற ரஹ்மான் இசையில் வந்த பாடலும், மற்றொன்று விஸ்வாசம் படத்திலுள்ள “வானே வானே” என்ற இமான் இசையில் வந்த பாடலும்தான். இசை நிகழ்ச்சியில் இந்தப் பாடல்களைப் பாடியவர்களே மேடையில் பாடியதைப் பலமுறைப் பார்த்தேன். பம்பரம் சுழலும்போது “ரொங்குது பார்” எனச் சொல்வார்கள். அப்படித்தான் இந்தப் பாடல்கள் என்னை ரொங்க வைத்தன.

மானசீகனின் எழுத்துக்களில் நமக்குப் பிடித்த பாடல்கள் குறித்த கட்டுரைகளை வாசித்தபோது அந்தப் படங்களைப் பார்த்த நாட்களுக்கே சென்ற உணர்வு ஏற்பட்டது. மாயா மச்சீந்தரா பாடலை பற்றி வாசிக்கையில் கைகளும் கால்களும் “டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ டட்ரட்டட ரட்டட ரட்டட்டோ” என மெல்ல அசைந்தன. கண்ணாளனே பற்றி வாசிக்கும்போது திருமலை மன்னர் அரண்மனையில் நானும் ஓரிடத்தில் நின்று அந்தப் பாடலைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

அஞ்சலி அஞ்சலி என்ற டூயட் பாடலில் பிரபு கதாநாயகி வந்ததும் சாக்சபோனை வாசிக்கும்போது அந்த இசையும் அவரது முகபாவனைகளும் மிகவும் பிடிக்கும். அந்த நினைவுகளைக் கிளறியது மானசீகனின் எழுத்து. முத்து படத்தில் ரஜினிக்கு இசையமைத்தது, சுகாசினி எடுத்த இந்திரா படத்திற்கு இசையமைத்தது, கதிரின் காதல் தேசம் படத்திற்கு இசையமைத்தது குறித்தும் விரிவாக எழுதியிருக்கிறார். ரஹ்மானின் இசை படத்திற்கு எவ்வளவு உயிர் கொடுத்திருக்கிறது என்பதை அக்கட்டுரைகளை வாசிக்கையில் அறியலாம். இந்த நூலை வாசித்ததும் ஒரு நாட்குறிப்பேட்டில் எனக்குப் பிடித்த பாடல்களைக் குறித்து விரிவாக எழுதிவைக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது.

  •  

அறிவியல் திருவிழா - 3

"சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருநூறு பேர்களின் தகவல்களை எடுத்துக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தியதில்..."

பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பதினாறு வயதுதான் இருக்கும். இதென்னடா, இத்தனை சிறுவயதில், இன்சுலினிக்கு ஏதோ மாற்று மருந்து கண்டுபிடித்து விட்டாளோ என நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் பக்கத்தில் இருந்தவரோ தன் வாழ்நாள் முழுவதும் அறிவியல் ஆய்வுகளில் பொழுதைக் கழித்து இப்போது ஓய்வு பெற்றபிறகும், பெரு நிறுவனங்கள் வலிய அழைத்து ஒப்பந்த பணிகளில் ஈடுபடுத்த வைக்கும் அளவிற்கு அறிவியல் ஆர்வலரான ஸ்காட்டிஷ்காரர். அவரும் ஆர்வமானார்.

"அந்த இருநூறு பேர்களின் தகவல்களைக் கொண்டு ஐயாயிரம் பேருகளுக்கான தகவல்கள் உருவாக்கி, செயற்கை பாட்களை தொடர்ந்து சோதனை செய்ய ஒரு டேட்டா மாடலை உருவாக்கி..."

நான் ஆர்வமாக பங்கேற்கும் சிறுவர்கள் அறிவியல் போட்டிகளில், கடந்த 2-3 வருடங்களான ஆய்வுகளில் பெரும்பாலும், சுற்றி சுற்றி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளில் வந்து நின்றுவிடுகின்றன. இந்தப் பிள்ளைகள் எல்லாம் இன்னும் ஒன்றிரெண்டு ஆண்டுகளில் கல்லூரிகளுக்கு படிக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த பத்தாண்டுகளில் இவர்கள்தான் நமது மருத்துவத் துறையின் ஆய்வுகளின் போக்கை தீர்மானிக்கும் சக்தி கேந்திரங்கள். எதிர்காலத்தில் நம்முடைய நோய் நமது கவனத்திற்கு வருமுன்னரே இவர்களுடைய செயற்கை நுண்ணறிவு செயலிகள் அவற்றைக் குணப்படுத்த வல்லவையாக இருக்கும்.

இன்னொரு பையன், "நியூரோ நோய்களைக் கண்டறிய உதவும் மாடல்" என ஒரு பெரிய மாடலைப் பற்றி நுணுக்கமாக 10 நிமிடங்களில் பிரசன்டேஷன் செய்து முடித்தான். ஒரே சமயத்தில் பத்து பதினைந்து ரேடியோலஜிஸ்ட்டுகளின் பணியை செவ்வனே செய்து முடிக்கும் என்கிறான்.

"வழூ வரையறைப் பற்றி ஏதும் உன் ஆய்வில் அக்கறைக் கொண்டிருந்தாயா?" என்று கேட்டேன்.

அதெல்லாம் வெகு துல்லியமாக இருக்கும் என அடித்து சொன்னான். கோட் போட்டுக் கொண்டு கனவான் உடுப்பில் இருந்ததால், துண்டைப் போட்டு தாண்டி சத்தியம் செய்யாத குறை. அந்தப் பையன் ஒவ்வோர் ஆண்டும் புதிய கண்டுபிடிப்புகளுடன்தான் இந்த அறிவியல் போட்டிகளுக்கு வருகிறான். நானே அவனுடைய ஆய்வுகள் மூன்று நான்கினைப் பார்த்திருக்கிறேன். இதிலும் தன்னுடைய ஆய்வுகளுக்கான செயலிகளையும், அதற்கான மூலப் பிரதிகளையும் இணையவெளியில் பொதுவில் வைத்துவிடுவான். ஏதோ அவன் பிரசன்டேஷன் செய்யும் போது பார்த்துவிட்டு வந்துவிட்டீர்கள் என்றில்லாமல், ஆற அமர அந்த செயலிகளை இயக்கி எப்படி இயங்குகின்றன என்றெல்லாம் பார்த்துக் கொள்ளுங்களேன் என்கிற தன்னம்பிக்கை.




இன்னொரு பெண், "உங்கள் வீடு க்ரீனாக, அதாவது பசுமை நிலைக்கு சாதகமாக இருக்கின்றதா" என்றொரு சுவாரசியமான ஆராய்ச்சியை செய்திருந்தாள். உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தும், சூழலியலை மாசுபடுத்தும் சாத்தியங்கள் கொண்ட உபகரணங்களும், அவற்றின் சூழலியல் ஃபுட்ப்ரிண்ட்களும் (கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்கள் வெளியேற்ற அளவுகள்) கொண்டும் உங்கள் வீட்டின் பரப்பளவை கொண்டும் ஓர் எளிய சமன்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியுமாம். அந்த சமன்பாட்டின்படி நாம் நம்முடைய சூழலியலுக்கு பாதகமாக இருக்கிறோமா அல்லது அதன் வரையறைக்குள் இருக்கிறோமா எனத் தெரிந்து கொள்ள முடியும் என்றாள்.

நாடுகளுடைய அணுசக்தி கொள்கைகளை விமர்சித்து பக்கம் பக்கமாக படித்து தலை சோர்ந்து போனவர்களுக்கு மாற்றாக இப்படியொரு சிந்தனைத் தரப்பு. தம் வீடுகள் சூழலியல் மாசுபடுதலை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றனவா என்றக் கேள்வியை முன்வைக்கும் ஆய்வுகள்.

"இதன் அடிப்படையில் ஏதாவது டேட்டாக்கள் பெற முற்பட்டாயா? ஏதாவது சர்வே நடத்தி பங்கேற்பாளர்கள் எப்படி தங்கள் வீட்டின் பசுமை நிலையைப் பற்றிய நிலையைக் கண்டு கொள்ள முடியும் என்று நிறுவினாயா?"

அந்தப் பெண் சாமர்த்தியமாக அத்தகைய கணக்கெடுப்புகளைச் செய்யவில்லை. ஆனால் முழுநீளத்திற்க்கு நல்லதொரு பிரசன்டேஷன் செய்திருந்தாள். என்ன செய்வது. இது ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஃபோரம். அதனால் அப்பெண்ணிற்கு முழு மதிப்பெண்கள் அளிக்க இயலவில்லை.

"தோல் காயங்களைப் பற்றி ஆராயும் ஏ ஐ செயலி" என்றொரு பையன் விஸ்தாரமாகப் பேசினான்.

பெயர்தான் கணிணித் துறை ஆய்வறை. ஆனால் இவர்களின் ஆய்வுகளின் போக்கெல்லாம் மருத்துவத் துறையை மையமாகக் கொண்டிருந்தன என்பது புரிந்தது.

முன்னதாக, அந்நாளின் காலைப் பொழுதில் இடைநிலை பள்ளி மாணவர்களின் ஆய்வுகளில் அமர்ந்திருந்தேன். அவர்களின் நல்லூழோ, அல்லாததோ, அந்த ஆய்வறையின் ஜட்ஜ் நான் மட்டும்தான். இயற்பியலில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வுகளை பிரசண்ட் செய்தார்கள்.

"எந்த மாதிரியான மெட்டீரியல்கள் கொண்டு ஒலி மாசை வெகுவாக குறைக்க முடியும்?"

"ப்ரொபல்லர்களின் அளவைக் கொண்டு ட்ரோன்களின் பறக்கும் சக்தியை எப்படி அதிகப்படுத்துவது?"

"கவண் வில்லின் நாணின் நீளம் எப்படியாக அதன் விசையை பாதிக்கின்றது?"

"காந்தங்கள் மீதான சீதோஷ்ண நிலைகளின் பாதிப்புகள்"

"விற்களில் நாண் இழுபடும் தூரம்"

"லேசரின் பொய்யாத்தன்மை"

"கால்பந்தாட்ட காலணிகளின் முளைகளின் மெட்டீரியல் விளையாட்டுத் திறனை பாதிக்குமா?"

"எவ்வகையான டார்ட்டுகள் தூரம் அதிகமாக பாய்கின்றன"

"கை போன்களின் திரைகாக்கும் அட்டைகள் எவ்வளவு பாதுகாப்பானவை?"

"எவ்வகையான உணவுகள் ஹைட்ரஜன் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன"

இப்படி பல தலைப்புகளில் ஆய்வுகளிலும் தகவல்களிலும் என்னை மூழ்கடித்தனர்.

"ட்ரோன்களின் திறன்களை அதிகரிப்பதனால் என்ன சாதித்து விட முடியும் என நினைக்கிறாய்?"

"அடுத்த முறை என்னுடைய பிரசன்டேஷனுக்கு தோதாக ட்ரோன்கள் வழியே ஹேண்ட் அவுட்களை விநியோகிக்க முடியும்"

சமத்காரமான பதில்கள். தங்கள் ஆய்வுகளில் எந்தக் கேள்விக் கேட்கப்பட்டாலும் அதை தலைநிமிர்ந்து எதிர்கொள்ளும் திடம் மிகவும் கவர்ந்தது.

எங்கள் வீட்டு ஜூனியர், பயோ மெடிக்கல் துறையில், காய்கறிகள், பழங்களிலிருந்து மரபணுவை பிரித்தெடுத்துக் காட்டுகிறேன் என்றதொரு பிரசன்டேஷன் செய்திருந்தார். இளவரசியார், பற்களின் எனாமலை பாதிக்கும் குடிபானங்கள் பற்றி ஓர் ஆராய்ச்சி செய்திருந்தார்.

பிறகு ஒரு ரோபாட் காரை தானியங்கியாக ஓட்டிக் காண்பிக்கும் போட்டியில் ஜூனியர் பங்க்கேற்றார். கூடவே உயரத்திலிருந்து விழும் எடையின் சக்தியில் ஒரு வண்டியை ஓட்டிக் காட்ட வேண்டும் என்று மற்றுமொரு போட்டி. இதில் சவால் என்னவென்றால், வண்டியின் முனையில் ஒரு முட்டையைக் கட்டி விடுவார்கள். ஓடும் வண்டி தன் எல்லைக் கோட்டிற்குள் வந்து சரியாக நிற்க வேண்டும். எல்லைக் கோட்டின் மறுபுறம் ஒரு மதில்சுவர் இருக்கும். எல்லைக் கோட்டை சிறிது தாண்டிச் சென்றாலும் போய் முட்டிக் கொண்டு முட்டை உடைந்து தோல்விதான். இயல்பான பள்ளிக்கூட வேலைகளிடையே இந்தப் போட்டிகளுக்கு தயாராகி அதில் கலந்து கொள்வதே ஒரு தனி சவால்தான். போட்டிகளில் வெற்றி கிடைத்தால் அது போனஸ்.

இந்தப் பிள்ளைகளின் ஆர்வத்தின் வேகத்தை அணை போட்டு செழுமைப்படுத்தி பயன்படுத்தும் பொறுப்பினை இது போன்ற அறிவியல் திருவிழாக்களில் பொறுப்புணர்ந்த பெரியவர்கள்வசம் கொடுத்து விடுகிறார்கள்.

அமெரிக்கர்களிடையேயான அடிப்படை பண்புகளில் ஒன்று, அனைவருக்குமான வாய்ப்புகளை தடையில்லாமல் வழங்குவது. சிற்சில அரசியல் ஆதாயங்கள் பார்க்கும் போக்கு உண்டுதான். ஆனால் இந்தியர்கள் பொறுப்புகளில் அதிகரிக்கும்போதே, அவர்களுடைய பாரம்பர்ய அரசியலான செல்வாக்கானவர்களின் கால்களைக் கட்டிக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கும் சில்லறத்தனங்கள் இதில் அதிகமில்லை. அதுவே இந்த சிறுவர்களுக்கு சுதந்திரமாக செயல்படும் உணர்வை மேலோங்கச் செய்கிறது.

அரங்கு முடிந்து என்னுடைய தீர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் போது எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்தான்.

"பிரமாதமான கேள்விகள் கேட்டீர்கள். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? என்ன வேலை செய்கிறீர்கள்?" என்றான்.

எதிர்பாராத திசையில் இருந்து வந்த பந்தை எதிர்கொள்ள சற்றுத் தடுமாறினேன்.

"உன்னுடைய ஆய்வுகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியல் படித்திருக்கிறேன் தம்பி. இப்போது நிதி சேவைக்கான ஐடி குழுவில் பணிபுரிகிறேன்"

"ஓ, நிறைய எண்களை சமாளிக்கும் வேலை. வாழ்த்துகள் உங்களுக்கு" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

செயற்கை நுண்ணறிவு பாட்க்களின் எதிர்கால இடம் சந்தேகமானதுதான். இந்த சமத்கார சாதுர்ய சிறுவர்களுடன் அல்லவா அவை போட்டி போட வேண்டும்.




உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.sridharblogs.com/ தளத்திலோ [email protected] மெயிலுக்கோ எழுதித் தெரிவிக்கலாம்.

  •  

மும்பையில் நடைபெற்ற தொல்காப்பியத் திருவிழா!

 

முகப்புப் பதாகை

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு. இளங்கோவன்



மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் அவர்கள் தொல்காப்பியக் கண்காட்சியைப் பார்வையிடுதல். அருகில் சு. குமணராசன், மு.இளங்கோவன்

    மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தொல்காப்பியத் திருவிழா  2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெற்றது. மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பல்வேறு தமிழமைப்புகளின் பொறுப்பாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பெரிய அளவில் வருகைபுரிந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “இலெமுரியா” நிறுவுநர் சு. குமணராசன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் முதல் தளத்தில் தொல்காப்பியக் கண்காட்சியும், இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழாவும் இரண்டுநாள் நடைபெற்றன.  

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொல்காப்பியக் கண்காட்சியைத் திறந்துவைத்து, அமைப்பாளர்களைப் பாராட்டினார். மேலும் தொல்காப்பியத்தின் சிறப்புகளை எடுத்துரைத்துத் தலைமையுரை ஆற்றினார். காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் கலந்துகொண்டு மும்பையிலிருந்து வெளிவந்து, இடையில் நின்றுபோன தமிழ் இலெமுரியா இதழின் சிறப்புகளை எடுத்துரைத்து, மீண்டும் இந்த இதழைக் கொண்டவர வேண்டும் என்ற தம் விருப்பத்தைத் தெரிவித்தார். 

பொறியாளர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டன. 

மு. இளங்கோவனைச் சிறப்பிக்கும் மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் த. சிவானந்தன் அவர்கள். அருகில் சு. குமணராசன், முனைவர் சேது குமணன்.

மாணவர்களுக்குத் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டி இந்த நிகழ்வை ஒட்டி  நடைபெற்றது. மும்பையில் பயிலும் தமிழ் மாணவர்கள் அறிவார்ந்த தலைப்புகளில் உரையாற்றிப் பரிசுகளைப் பெற்றனர். மேலும் பார்வையாளர்களுக்கான தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகள் அரங்கினரை மகிழ்ச்சிப்படுத்தின. பிறமொழியைக் கலவாமல் தூய தமிழில் பேசியவர்களுக்குப் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அரங்கில் உரையாற்றியவர்கள் பயன்படுத்திய பிறமொழிச் சொற்களுக்கு உரிய தனித்தமிழ்ச் சொற்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

இந்த நிகழ்வின் ஒரு கூறாகப் பல்வேறு துறைகளில் புகழுடன் விளங்கும் மும்பைத் தமிழ்ப்பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டது.

பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன், மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), சூ. ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். 

அறிஞர் சீனிவாசன் அவர்களுக்குத் தொல்காப்பிய விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுதல்.

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் எழுத்தாளர் சீனிவாசன் அவர்களுக்கு இருபத்தைந்தாயிரம் உருவா விருதுத்தொகையுடன் தொல்காப்பிய விருது வழங்கிப் பாராட்டப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் எட்டுத்தொகை என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லைப் பைந்தமிழ், புலவர் கார்த்தியாயினி ஆகியோர் எட்டுத்தொகை நூல்களின் சிறப்புகளை மிகச் சிறப்பாகக் கவிதையில் பாடினர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து கலந்துகொண்ட முனைவர் இ. வளனறிவு தொல்காப்பியம் எழுத்ததிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் மு. இளங்கோவன் தொல்காப்பியம் - சொல்லதிகாரம் என்ற தலைப்பிலும் முனைவர் அரங்க. மல்லிகா தொல்காப்பியம் - பொருளதிகாரம் என்ற தலைப்பிலும் உரையாற்ற்றினர். 

இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சியாகப் பரிசுபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், தமிழ்த்தொண்டு, சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

கண்காட்சியைப் பார்வையிட்டோர்(குழுப்படம்)


தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி

தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி


கண்காட்சியைப் பார்வையிடுவோர்


மாணவர்களின் நாட்டியம்

தொல்காப்பியம் குறித்து உரையாற்றிய அரங்க. மல்லிகா, இ. சூசை, மு.இளங்கோவன் சிறப்பிக்கப்படுதல்


பார்வையாளர்கள்


பரிசுபெறும் மாணவர்கள்

பேச்சுப்போட்டியில் முதல் பரிசுபெற்ற மாணவி

  •  

மும்பை இலெமுரியா அறக்கட்டளை நடத்தும் தொல்காப்பியத் திருவிழா!

 

 

மும்பையில் அமைந்துள்ள இலெமுரியா அறக்கட்டளை தமிழின் முதல் இலக்கண நூலாகக் கிடைத்துள்ள தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு, தொல்காப்பியத் திருவிழாவினை 2025, சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் மும்பையில் நடத்துகின்றது. 

நவி மும்பை, வாசி, திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள  நவிமும்பைத் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அரங்கில் தொல்காப்பியத் திருவிழா நடைபெற உள்ளது. முதன்மை நிகழ்வுகளாகத் தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி, கருத்தரங்கம், கவியரங்கம், நூல்கள் வெளியீடு நடைபெறுகின்றன. தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்றிவரும் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகாராட்டிர மாநிலத்தின் மேனாள் காவல்துறைத் தலைவர் திரு. த. சிவானந்தன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் தொல்காப்பியத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் தலைமைச் செயலாளர் கோ. பாலசந்திரன் இ.ஆ.ப., மகாராட்டிர மாநிலத்தின் நிதித்துறைச் செயலாளர் டாக்டர் ந. இராமசாமி இ. ஆ. ப., மும்பை காவல்துறையின் இணைக் காவல் ஆய்வாளர் (நிர்வாகம்), திரு. சூ. ஜெயகுமார் இ. கா. ப.,  காரைக்குடி சேது பாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேது குமணன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். 

இலெமுரியா அறக்கட்டளையின் நிறுவுநர் திரு. சு. குமணராசன் தலைமையில் தொல்காப்பியக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இக்கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து முனைவர் இ. வளனறிவு, முனைவர் மு. இளங்கோவன், முனைவர் அரங்க. மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். 

முனைவர் சு. குமணராசன் எழுதிய Classical Tamil Literature: An Introduction  நூலும், முனைவர் மு. இளங்கோவன் எழுதிய தொடரும் தொல்காப்பிய மரபு என்னும் நூலும் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளன. 

எட்டுத்தொகைக் கவியரங்கத்தில் கவிஞர் இசாக் வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் மு. இளங்கோவன் தலைமையில் நடைபெறும் கவியரங்கத்தில், கவிஞர் புதிய மாதவி, கவிஞர் இறை ச. இராசேந்திரன், கவிஞர் இராசு. மாதவன், கவிஞர் பிரவீனா சேகர், கவிஞர் வெங்கட் சுப்பிரமணியன், கவிஞர். வ. ரா. தமிழ்நேசன், கவிஞர் நெல்லை பைந்தமிழ், புலவர் கார்த்தியாயிணி ஆகியோர் கவிதை பாடுகின்றனர். 

மாணவர்கள் பங்கேற்கும் தனித்தமிழ்ப் பேச்சுப்போட்டியும் நடைபெற உள்ளது. 

அனைவரையும் மும்பை, இலெமுரியா அறக்கட்டளை அன்புடன் அழைக்கின்றது.









 

  •  

‘பாரதி யார்’ @ பாஸ்டன்

பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்!அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!!டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும். மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது? அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு … Continue reading

  •  

கடிதத்திலிருந்து விருது வரை . . .

வாணி மகாலுக்குள் நுழைந்தவுடன் வாசலின் இடதுபுறத்தில் ‘எழுத்துச் சித்தர்’ பாலகுமாரனின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வலது பக்க மேசையில் வருகைப் பதிவேட்டில் பெயர் எழுதி, கையெழுத்து போட்டு, கைபேசி எண் குறித்த பின், உடல் வெப்பம் சரி பார்த்து, உள்ளங்கையில் சானிட்டைஸர் தெளித்து உள்ளே அனுப்பி வைத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு செல்லும் பொது நிகழ்ச்சி. நிறைய நாற்காலிகளில் பிளாஸ்டிக் வெண்கயிறு ஒட்டப்பட்டிருந்தது. 

‘யாரோ வர்றாங்க போல’ என்றேன்.

‘இல்ல ஸார். கோவிட்ல சீட் அரேஞ்ச்மெண்ட் இப்படித்தான் இருக்கும். நான் ஏற்கனவே தியேட்டர்ஸ்ல  பாத்தேன்’ என்றான், மனோஜ். 

அப்புறம்தான் கவனித்தேன். ஒரு நாற்காலி விட்டு ஒரு நாற்காலி கயிறால் கட்டப்பட்டிருந்தது.

வழக்கம் போல கடைசி வரிசையில் உட்காராமல் அதிக கூட்டம் இல்லாததால் ஆறாவது, ஏழாவது வரிசையில் உட்காரலாம் என்று நானும், மனோஜும் அமர்ந்தோம். அப்போதுதான் முன் பக்கக் கதவு வழியாக கவிஞர் கலாப்ரியா அரங்கத்துக்குள் நுழைவது தெரிந்தது. பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பாக விருது பெறப் போகிற கலாப்ரியாவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசி முடிக்கும்வரைக் காத்திருந்து விட்டு தன்னுடைய இருக்கையில் அமரப் போன கலாப்ரியாவின் அருகில் சென்று மாமா என்று வணங்கினேன். ‘ஆகா மருமகனே! எதிர்பார்க்கவே இல்ல’ என்று அருகிலுள்ள ஒன்று விட்ட நாற்காலியில் அமரச் செய்தார். எனக்கு ஒன்று விட்ட நாற்காலியில் வந்து அமர்ந்தார் ரங்கராஜ் பாண்டே. வழக்கமாக நாங்கள் பேசிக்கொள்ளும் அசலான தெக்கத்தி பாஷையில்  பாண்டேயும், நானும் பேசிக் கொண்டிருந்தோம். 

விழா துவங்கியது. விருது பெறுபவர், வழங்குபவர், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர். மேடையில் வந்து அமர்ந்த கவிஞர் ரவி சுப்பிரமணியத்தை முன் வரிசையில் மாஸ்குக்குள் ஒளிந்திருந்த ‘அளகிய முகம்’ சுண்டி இழுத்திருக்க வேண்டும். வணக்கம் சொன்னார். பதில் வணக்கமும் கிடைக்கப் பெற்றார். அவர்தான் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தார். நிகழ்ச்சியை பாலகுமாரனின் மகள் தொகுத்து வழங்கினார். முதலில் இல. கணேசன் பேச வந்தார். அவரது பிரத்தியேக உச்சரிப்புடன் ச் ப் த் ள் ழ் என அழுத்தம் திருத்தமாக பேசினார். பாலகுமாரனின் பிறந்த நாளை முன்னிட்டு நடக்க இருக்கும் நிகழ்வை தனது ‘பொற்றாமரை இயக்கம்’ நடத்தத் தயாராக உள்ளது என்று அறிவித்து விட்டு அமர்ந்தார். அடுத்து பாலகுமாரனின் தீவிர வாசகரான சசிக்குமார் பேசினார். ‘ஸாரோட நெறய புக்ஸ் என் வீட்டு ரேக்ல இருக்கும்’ என்று துவங்கி பாலகுமாரன் எப்படி அவருக்கு ஆசான் ஆனார் என்பதை மேடைப்பேச்சு தந்த பதற்றத்துடன் விளக்கிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து இல கணேசன் அவர்களின் அண்ணியாரும் , பாலகுமாரனின் தீவிர வாசகியுமான திருமதி சந்திரா கோபாலன் பேசினார். திருவையாற்றில் பிறந்த தன்னால் தியாக பிரும்மத்தையும், ஐயன் பாலகுமாரனையும் ஒருமுகமாகப் பார்க்க முடிவதாக உணர்ச்சிமயமாக சொன்னார்.  இந்த நேரத்தில் பின் வரிசையிலிருந்து மனோஜ் குறுஞ்செய்தி அனுப்பினான். ‘ஸார். நடேசன் பார்க் பொடி தோசக்கட இன்னும் தொறக்கலையாம். விசாரிச்சுட்டேன். வேற எங்கே சாப்பிடப் போகலாம்?’ என்று கேட்டிருந்தான். அவனுக்கு பதில் அனுப்ப முயன்றால் பேசிக்கொண்டிருக்கும் சந்திரா கோபாலன், ‘எல! இங்கெ ஒருத்தி கண்கலங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னல போன நோண்டிக்கிட்டிருக்கே?’ என்று ஏசிவிடுவாரோ என்று பயந்து அவரது பேச்சில் மட்டுமே கவனம் செலுத்தும் முகபாவத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த சமயத்தில் தனக்கிருந்த தாழ்வுணர்ச்சியைப் போக்கியது, பாலகுமாரனின் ‘கரையோர முதலைகள்’ நாவலின் ஸ்வப்னா கதாபாத்திரம்தான் என்றார் சந்திரா கோபாலன். அடுத்து கவிஞர் ரவிசுப்பிரமணியன் பேச வந்தார். பாடும் போது கவனமாக என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார். ரவி சுப்பிரமணியன் பேசும் போது அவருக்கும், பாலகுமாரனுக்கும் இடையே இருந்த உறவை, நட்பைப் பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் எனக்கு ஆச்சரியமாகவும், புதிதாகவும் இருந்தன. ரவி சுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்புக்கு பாலகுமாரன் அணிந்துரை எழுதிய செய்தி, ‘இலக்கியம்லாம் வேண்டாம்டா. வசதியான வீட்டுப் பையன் நீ. உனக்கு எதுக்கு இந்த பொழைப்பெல்லாம்? இங்கே வந்தா சாகணும்டா. சொன்னா கேளுடா’ என்று பாலகுமாரன் தன்னிடம் வாஞ்சையும், அக்கறையுமாக சொன்ன விஷயங்கள் உட்பட ரவி சுப்பிரமணியன் சொன்ன அனைத்துமே சுவாரஸ்யமான தகவல்கள். பாலகுமாரன் பற்றி விலாவாரியாகப் பேசிவிட்டு ஒருவழியாக கலாப்ரியாவுக்கு வந்து சேர்ந்தார், ரவி. கவிஞர் கலாப்ரியாவின் புகழ் பெற்ற கவிதைகளில் ஒன்றான ‘விதி’ என்னும் கவிதையை வாசித்தார். 

‘அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது.

எனக்கதன் 

கூடும் தெரியும்

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன்

பாஷை புரியவில்லை.

கூடவே கலாப்ரியாவின் மற்றொரு புகழ் பெற்ற 

‘கொலு வைக்கும் 

வீடுகளில்

ஒருகுத்து சுண்டல் 

அதிகம் கிடைக்குமென்று 

தங்கையைத் 

தூக்க முடியாமல் 

தூக்கி வரும்

அக்காக் குழந்தைகள்’ வரிகளைச் சொன்னார். நிகழ்வுக்கு வந்திருந்த கலாப்ரியா கவிதைகளை அதுவரை அறியாதோருக்கு நிச்சயம் அந்த வரிகள் அவரது கவியுலகத்துக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்திருக்கும். கலாப்ரியாவின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு புதுக்கவிதையின் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று சொன்ன ரவி சுப்பிரமணியன் அடுத்து வாசித்த கலாப்ரியாவின் கவிதையொன்றை படமாக்க வேண்டும் என்றார்.

சந்திரோதயம் நன்கு

தெரியும் விதமாய் ஒரு தோட்டம்

தோட்டத்து

நெல்லி மரத்தில் 

கயிற்றால் ஒரு ஊஞ்சல்.

‘கருக்கலாகியும்

சமஞ்ச குமரிக்கு என்ன 

விளையாட்டுடி?’யெனச்

சத்தமாய் அம்மாவின்

கூப்பாடு;

அப்படியே குதித்து இறங்கி

ஓடுவாள்.

ஊஞ்சல் மட்டும் 

தனியே ஆடிக்கொண்டிருக்கும்

கைரேகை மங்கும் கருக்கலில்’.

இந்தக் கவிதையின் கடைசி வரியை வெகுவாக சிலாகித்தார், ரவி சுப்பிரமணியன். 

அடுத்து பேச வந்த ரங்கராஜ் பாண்டே பாலகுமாரனை சந்திப்பதுதான் தன் வாழ்வின் முக்கியமான விருப்பமாக இருந்ததாகச் சொல்லி தன் உரையைத் துவக்கினார். தனது பேட்டிகளின் வாத பிரதிவாத உத்திகளை பாலகுமாரனின் எழுத்துகளிலிருந்து பயின்று கொண்டதாகச் சொன்னார், பாண்டே.  இந்த சமயத்தில் என் மனம் நான் படித்திருந்த பாலகுமாரனின் எழுத்துகளை நோக்கி பாய்ந்தது. எல்லோரும் சொல்கிற மெர்க்குரி பூக்கள், அதிகம் பேர் சொல்லாத பலாமரம், அ.தி.மு.கவின் ‘ஜெ ஜா’ பிரிவின் சமயம் எழுதப்பட்ட உயிர்ச்சுருள் என ஒரு சின்ன ரவுண்ட் அடித்து பின் பாண்டேயிடம் வந்து சேரும் போது தான் மேற்கோள் காட்டுவதற்காக எடுத்து வைத்திருந்த கவிஞர் கலாப்ரியாவின் சில கவிதைகளை ரவி சுப்பிரமணியன் சொல்லி விட்டதாகச் சொல்லி செல்ல கண்டனம் தெரிவித்தார். பிறகு கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை மற்றும் ஜெயகாந்தனின் வரிகளை கலாப்ரியாவின் கவிதைகளாக்கி சொல்லி மகிழ்ந்தார். அதற்குப் பிறகு தி.ஜானகிராமனுக்கு கலாப்ரியா சமர்ப்பித்திருந்த கவிதையொன்ற வெகுவாக சிலாகித்தார், பாண்டே.

கூட்டிலிருந்து

தவறிவிழுந்த 

குஞ்சுப் பறவை

தாயைப் போலவே

தானும் பறப்பதாய்

நினைத்தது

தரையில் மோதிச்சாகும்

வரை.

மேடையில் முழங்கி, வீதியில் கொடி பிடித்துதான் அரசியல் பேச வேண்டுமென்றில்லை. கவிதை மூலமாகவும் வலுவாக நம் அரசியல் பார்வையைச் சொல்லலாம் என்பதற்கு கலாப்ரியாவின் ‘வளர்ச்சி’ என்னும் கவிதை மிகச் சிறந்த உதாரணம் என்றார், ரங்கராஜ் பாண்டே.

எங்கள் வீடுகளையொட்டி
ஒரு வாய்க்கால்
ஒரு காலத்தில்
அதன் நீர்
எல்லோருக்கும்
பலவழிகளில்
பயன் பட்டது
நாங்கள் குழந்தைகள்
வாழை மட்டையில்
தெப்பம் செய்து
தெரிந்தவரை
அலங்கரித்து கயிறு கட்டி
படித்துறையில் இருந்தபடி
எட்டும் மட்டும் மிதக்கவிடுவோம் பின்
இழுத்துக் கொள்வோம்.
மறுபடி செல்ல அனுமதிப்போம்
மறுபடி…..மறுபடி
தெப்பம் கொஞ்சங் கொஞ்சமாய் சிதைந்து
மட்டைகளாகி நீரோடு போகும்
மனமில்லாமல்
விளையாட்டைப் பிரிவோம்.
**** **** ****
இப்போது கெட்டுப் போய்
இழுப்பற்றுத் தேங்கிய நீரில்
குப்புற மிதக்கும்
என்புதோல்ப் பிணமொன்று
வீட்டருகே
ஒதுங்கி நிற்பதாய்ச் சொல்ல
கழியெடுத்துப் போய்
தள்ளி விட்டோம்
எங்கள் எல்லையைத் தாண்டி
எங்கள் எல்லைக்குள் நின்று
தயாராய் இருந்தார்
அடுத்தடுத்த வீடுகளிலும்
அவரவர் கழிகளோடு.

இறுதியாக பேச வந்த கலாப்ரியா தனது ஏற்புரையில் உணர்ச்சிமிகுந்தவராக இருந்தார். பாலகுமாரனுக்கும் தனக்கும் 70களின் துவக்கத்தில் ஏற்பட்ட கடிதத்தொடர்பு இன்றைக்கு அவர் பெயரில் தனக்கு வழங்கப்படும் விருது வரைக்கும் வந்திருப்பதை எண்ணி நெகிழ்ந்த அவர், இதை எங்கிருந்தாவது பாலா பார்த்துக் கொண்டுதானிருப்பான் என்று கலங்கினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் கலாப்ரியாவை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் அவரது எண்ணற்ற வாசகர்கள் பலருக்கு இருந்திருக்கும். இந்த கோவிட் கெடுபிடி காலத்தின் காரணமாக அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலும் அது குறித்த எந்த சத்தமும் கொடுக்காதவர் கலாப்ரியா. அன்றைய ஏற்புரையிலும் சத்தமில்லாமல் நம் அருகில் அமர்ந்து நட்புடன் பேசிக் கொண்டிருப்பது போலத்தான் பேசினார். ‘ப்ரியா’ எனத் துவங்கி ‘பாலா’ என்று முடிந்த பாலகுமாரனின் கடிதங்கள் குறித்து கலாப்ரியா உணர்ச்சிமயமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது விருது பெற்றவரைப் போலவே அவர் இல்லை. அன்றைய மேடையில் அவருக்குச் சொல்லப்பட்ட வாழ்த்துகளை அவர் வாங்கிக் கொள்ளாதவராகவே இருந்தார். 

நானும்

எல்லாரும்

எல்லா வாழ்த்துக்களையும்

காலியாக்கிவிட்ட

நம் மனிதர்களுடன்

நாள் கடத்துகிறோம்.

இந்தக் கவிதையை எழுதியவர் அப்படித்தானே இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் கலாப்ரியாவிடம் ‘கெளம்புதேன் மாமா’ என்று விடைபெற்றுக் கொண்டேன். 

முகமூடி அணிந்திருந்த என்னை நோக்கி வந்த பாலகுமாரனின் மகன், ‘சுகா ஸார். நான் உங்க ரசிகன். அட்லீயின் கதை விவாதங்களில் உங்களைப் பற்றிப் பேசாத நாட்கள் இல்லை’ என்றார். அவரது தாயாரிடம் சென்று நான் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்து வந்தார். அவர்களும் வந்து ‘வணக்கம் சுகா’ என்று வணங்கினார்கள். பதிலுக்கு வணங்கி சில வார்த்தைகள் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு பதற்றத்தை மறைத்தபடி கிளம்பினேன். வாணி மகாலின் வாசலில் பாலகுமாரன் அறக்கட்டளையின் சார்பில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவும், யோகி ராம்சுரத்குமார் படம் அச்சிட்ட முகக்கவசமும் தந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் பாலகுமாரன் விருதை சென்ற முறை பெற்றிருந்த கவிஞரும், சிறுகதையாசிரியருமான நரனும், எழுதுவதோடு நன்றாகப் பாடவும் செய்கிற கவிஞர் வெய்யிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் சில வார்த்தைகள் பேசி விட்டு வண்டிக்குச் செல்லும் போது மனோஜ் பிளாஸ்டிக் டப்பாவைத் திறந்து ‘ஸா . . .ர்’ என்று அலறினான். டப்பாவை எட்டிப் பார்த்த போது என்னுடைய சந்தோஷ அலறலும் மனோஜின் அலறலுடன் சேர்ந்து கொண்டது. டப்பாவுக்குள் மூன்று இட்லிகள் மிளகாய்ப்பொடி நல்லெண்ணெய் தடவி பச்சைப்பிள்ளைகள் மாதிரி அழகாக இருந்தன. எடுத்துக் கொஞ்ச மனம் துடித்தது.

‘இருங்க ஸார். வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடறேன்’

சாலையைக் கடந்து சென்று மனோஜ் தண்ணீர் கொண்டு வருவதற்குள் இரண்டு டப்பாக்களில் ஒன்று காலியாகியிருந்தது. 

‘நீ சாப்பிடுடா’ என்று சொல்லிவிட்டு கைகழுவி தண்ணீர் குடிக்கும் போது வீட்டிலிருந்து அழைப்பு.

‘சாப்பிட்டுட்டேன்மா. ஒரு இலக்கிய நிகள்ச்சில இட்லி குடுக்கறதெல்லாம் அதிசயத்திலும் அதிசயம். அதுவும் நம்ம வீட்டு மொளாப்டி இட்லி. பாலகுமாரன் இருந்திருந்தாலும் இதத்தான் செஞ்சிருப்பாரு’ என்று துவங்கி ‘அத ஏன் கேக்கே? ஒலகம் பூரா ஃபேன்ஸ் இருக்கற பாலகுமாரனோட ஃபேமிலி மெம்பர்ஸ் எனக்கு ஃபேன்ஸாம். என்னத்தச் சொல்ல?!’ என்று சொல்லி முடிக்கவும் அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த, கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்த எதிர்முனைக்குரல் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டது.

‘பாலகுமாரன்னா யாரு?’

The post கடிதத்திலிருந்து விருது வரை . . . appeared first on வேணுவனம்.

  •  

பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார்.

கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை மிஷின் இருக்கான்னு பாருங்க என்றார்.

அந்த வண்டி அருகில் கடக்கும்போது பார்த்தேன். இல்லை.

எப்படி பவா?

கேட்கிறவங்களுக்கு அப்படியே கையில் அள்ளித் தருவாங்க. போதும்! என வாங்குறவங்க சொல்லும்வரை அள்ளிப் போட்டுகிட்டே இருப்பாங்க.

என்ன பவா சொல்றீங்க? நம்மாளுங்க போதும்னு சொல்லவே மாட்டாங்களே!

அதான் இந்த அக்காவின் சாதனை. தன்னோட நேர்மையால் தனது வாடிக்கையாளர்களையும் நேர்மையா மாத்தி வச்சிருக்கு என்றார்.

இது நம்பவே முடியாத நிஜம் பவா என்றேன்.

இந்த அக்காவுக்கு நான் ஒரு வீடு கட்டித் தரப் போறேன்.

அசந்து போய் நின்ற எனக்கு, மேலுமொரு அதிர்ச்சியைத் தந்தார்.

தனக்குப் பிரியமானவர்களுக்கு சொந்த வீடு இல்லையெனில், பவா அவர்களை ஊக்கப்படுத்தி வீடு கட்ட வைப்பார். கட்ட இயலாத நண்பர்களுக்கு தானே வீடு கட்டியும் தருவார்.

அவரது நண்பர் கவிஞர் ஃபீனிக்ஸ் ஓர் ஆட்டோ ஓட்டுநர். ரெண்டு பெண்களை வச்சுகிட்டு ஒண்டுக் குடித்தனத்தில் கஷ்டப்படாதேடா என அவரை அழைத்து தனது நிலத்திலேயே அவருக்குச் சொந்தமாக ஒரு மனை கொடுத்து, தானே ஒரு வீடும் கட்டித் தந்துள்ளார். அந்த வீட்டில் வாழ வாய்ப்பில்லாமல் ஃபீனிக்ஸ் அகால மரணமடைந்த போதும், அவரது மனைவி, மகளுக்கு இப்போது பவா கட்டித் தந்த வீடுதான் அடைக்கலம் என்பது அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் எனக்கு மன நிறைவை தரும்.

வீடு கட்டித் தர பவா தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளே கதைகளாக்கும் அளவுக்கு சுவாரஸ்யமானவை. தனது சொந்த நிலத்தில் ரோட்டை ஒட்டியவாறு ஒரு மனையை ஒதுக்குவார். அந்த மனையை அவர்கள் பேருக்கே பதிவும் செய்து விடுவார். பிறகு, அவரே உட்கார்ந்து அளவில் கச்சிதமாக ஒரு வீட்டு ப்ளான் வரைவார். ஒரு நூலகத்துக்கான கூடம், ஓரு படுக்கை அறை, ஒரு சமையலறை மற்றும் உணவறை. அதை கருங்கல் கட்டிடமாக வடிமைத்து, தனது நிலத்தின் இன்னொரு பகுதியில் இருந்து பாறைகளை உடைத்து அதற்கான கருங்கற்களைச் சேகரிப்பார். முதலில் கடக்கால்.

பிறகு, அவரிடம் பணம் சேரும்போதெல்லாம் அந்தக் கட்டிடம் வரி வரியாக மெல்ல எழும்பும். திடீரென ஒரு நாள் மேல் தளம் போடும் அளவுக்கு அந்தக் கட்டிடம் வந்து நிற்கும். அந்தக் கட்டத்தில் தனது நண்பர்களை அணுகுவார். ஒருத்தர் சிமெண்ட் மூட்டைகள், ஒருத்தர் கம்பி, ஒருத்தர் கான்கிரீட் செலவு என பகிர்ந்து கொள்ள, ஒரு நாள் கான்கிரீட் தளம் போடப்படும். அந்த நாள் அப்படியாக நல்ல நாள் ஆகி விடும்.

ரெண்டு பேர் வேலை செய்தாலே கோழி அடிச்சு குழம்பு வைக்கும் பவாவுக்கு கான்கிரீட் போட 15 பேர் வரும்போது சொல்லவா வேண்டும்! அன்று மதியம் அனைவருக்கும் கறிச்சோறு கட்டாயம் உண்டு.

கடைசியாக ஃபினிஷிங் ஸ்டேஜ் எனப்படும் கட்டத்தின் நிறைவின் போதுதான் என்னிடம் வருவார். கல்லூரியில் கட்டிடங்கள் கட்டியது போது மீதமிருக்கும் ஸ்விட்ச் பாக்ஸ் முதல் எலக்ட்டிகல் பைப், டைல்ஸ், கிரானைட் கல் வரை எனக்குப் பயன்படாதவைகளைத் தேர்ந்தெடுப்பார். பிறகு அவைகளைக் கொண்டு சென்று தானே இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப தரை, சுவர்களை வடிவமைத்து வீட்டை நிறைவு செய்வார்.

அப்படி தனக்கு அவ்வப்போது வந்து காரோட்டும் டிரைவர் ரமேஷுக்கு ஒரு வீடு கட்டி முடித்துள்ளார். அதை நேற்று என்னைத் திறந்து வைக்கச் சொன்னார். தோழர் எஸ்.ஏ.பி தலைமையற்க, இயக்குநர் மிஷ்கின், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், ஷைலஜா முன்னிலையில் நிறைந்த மனதுடன் அந்த வீட்டைத் திறந்து வைத்தேன்.

அந்த வீடு கட்டப்படும் போதே பல முறைப் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு பவா கட்டித் தந்த ஃபீனிக்ஸ் வீட்டுக்கு பக்கத்து வீடு. கட்டிட வேலையின் போது, காய்கறி வண்டி கஸ்தூரி அக்கா சித்தாளாக வேலை செய்ததை கவனித்தேன்.

வீட்டுத் திறப்பு விழா முடிந்து புறப்படும்போது அந்த வீட்டு பக்கத்து மனையைக் காட்டி, இந்த இடத்தில்தான் கஸ்தூரி அக்காவுக்கு வீடு கட்டப் போறோம் கருணா என்றார். நிச்சயம் கட்டுவார். அப்போது புது வீட்டுக்காரன் ரமேஷ் அந்த வீடு கட்ட பெரியாள் வேலை செய்வான்.

பவா தொடங்கி வைத்திருப்பது ஒரு மானுடப் பேரன்பின் சங்கிலி. நன்றி உணர்வுள்ளோர் அதில் ஒரு கண்ணியையும் அறுந்து போக விட மாட்டார்கள்.

பாவா காண்பதெல்லாம் எப்போதுமே பெருங்கனவுதான். அவரது நம்பிக்கையும், நல்லெண்ணமும் எப்படியோ அந்தக் கனவுகளை நினைவாக்கி விடுகின்றன.

நண்பர் பவாவின் பேச்சில், எழுத்தில், கதை சொல்லலில் எப்போதுமே தவறாமல் தட்டுப்படும் பெயர் என்னுடையது என்பதில் எனக்குப் பெருமை உண்டு.

அண்மையில் படித்த ஒரு கவிதை..
“அவன் தோளில்
ஏற்றிச் சுமந்து செல்லும்
மகளையும் சேர்த்ததுதான்
அவனது உயரம்”.
என்று ஒரு தகப்பனைச் சொல்லும்.

அதைப் போலத்தான் எங்கள் உயரத்துக்கு எங்கள் பவா.

– எஸ்கேபி. கருணா

  •