Reading view

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா. அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் […]

Source

  •  

அதிகாரத்தைக் கண்டும் விலக மறுக்கும் உண்மைகள் – இ.பா.சிந்தன்

1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரான்சில் லூமியர் சகோதரர்கள் தயாரித்து இயக்கிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் ஒரு காட்சியில் இரயில் வருவதைப் பார்த்து, பார்வையாளர்கள் அஞ்சி நடுங்கியதாக சொல்லப்படுகிறது. மற்றொரு காட்சியில் ஒரு தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதைக் காட்டியபோது, அவர்கள் திரையைத் தாண்டி வந்துவிடுவார்களோ என்று ஒருவிதக் குழப்பத்துடனே பார்த்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே காலகட்டத்தில் மார்கோனி வானொலியைக் கண்டுபிடித்து ஒலிபரப்பத் தொடங்கியபோது, யாரோ நேரடியாகக் காற்று வழியாகத் தங்களுடன் பேசுவதாக மக்கள் நினைத்தனர். […]

Source

  •  

சாவிக்கொத்துகள் எழுதும் வரலாறு

யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு பதிவாகிறதல்லவா? வாசிக்கும் பழக்கம் உடையவர் எனில் நிச்சயம் ஆன் ஃபிராங்கின் நாட்குறிப்பைப் படித்திருப்போம். குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்போம். நாஜி கொடுமைகளுக்கு ஆளான பதின்ம வயது யூதப் பெண்ணின் டைரிக்...

The post சாவிக்கொத்துகள் எழுதும் வரலாறு first appeared on Her Stories.

  •  

காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளுமா?

அண்ணாகண்ணன்

காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு, பலரையும் அதிரச் செய்துள்ளது. பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்கா தானாக வந்து தலையைக் கொடுக்கிறது. புதிய எதிரிகளைச் சம்பாதிக்கிறது. இதன் மூலம் இஸ்ரேலுக்கு மிகப் பெரிய இராஜ தந்திர வெற்றி கிட்டியுள்ளது. மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மை குறித்து நான்கு வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். பெரும்பாலும் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அவர் ஆதரிக்க வாய்ப்பு உள்ளது.

எகிப்தும் ஜோர்டானும் மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். இதே அடிப்படையில் 20 இலட்சம் பாலஸ்தீனியர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது, பாலஸ்தீனத்திலேயே அவர்களைத் தங்க வைத்து, பாலஸ்தீனத்தைத் தன் 51ஆவது மாகாணமாக அறிவிக்குமா? பாலஸ்தீனப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்ப்பவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னொரு கோணத்தில் டிரம்ப்பின் காசா அறிவிப்பு, ஒரு பொறி. சீனா, ரஷ்யா, வடகொரியா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள், இதில் சிக்கும் வாய்ப்பு உண்டு. காசாவில் அமெரிக்கப் படைகள் இறங்கினால், எதிரி நாடுகள் தாக்கும். இவை இரண்டு அணிகளாகப் பிரியும். உலகப் போர் மூளும். இதைச் சாக்காக வைத்து, இந்த நாடுகளை அழிக்க, அமெரிக்கா முயலும். ஆனால், இவை அனைத்தும் அணு ஆயுத நாடுகள் என்பதால், படுநாசம் உண்டாகும்.

வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியில், பாலஸ்தீனியர்கள் சிக்கக் கூடாது. நிலத்தைக் காக்கும் போராட்டத்தில் தங்கள் உயிரை இழந்து விடக் கூடாது. பிறகு, ஒரு நினைவுச் சின்னம் வைத்துக் கதையை முடித்துவிடுவார்கள். போரினால் இவ்வளவு காலம் அவதியுற்றவர்கள், சுமூகத் தீர்வு ஏற்படும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேலைப் போலவே பாலஸ்தீனமும் இராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பாலஸ்தீனத் தலைவர்கள், சீன அதிபரைச் சந்தித்து, தங்கள் நாட்டை அடுத்த 10 ஆண்டுகளுக்குச் சீனாவிடம் குத்தகைக்கு விடுவதாக ஓர் ஒப்பந்தம் போட்டால், சரியான காய் நகர்த்தலாக இருக்கும். அப்போது சட்டப்படி சீனா, காசாவில் கால் வைக்கும். அதன் பிறகு அமெரிக்கா, அங்கே எளிதில் நுழைய முடியாது.

#gaza #westbank #palastine #israel #us #usa #trump #china

  •