Reading view

6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.
  •  

அறிவு அளித்த விடுதலை

பிளேட்டோ தொடங்கி கிரேக்க ரோமானிய சிந்தனையில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய மற்றொரு சிந்தனையாக “அலையும் கருப்பை” அமைந்தது. கருப்பை என்பது ஒரு விலங்கு மற்றொரு விலங்கின் உள்ளே உள்ளதாக பார்க்கப்பட்டது (Animal inside Animal).‌ ஆணின் உடல் துணை இல்லாமல் தனித்திருக்கும் பெண்ணின் கருப்பை, அதன் இயல்பான நிலையிலிருந்து வெளியேறி உடலின் வேறு இடங்களில் அமைவதால், பெண்களுக்கு மட்டுமேயான நோய்கள் தோன்றுவதாக கருதப்பட்டது. இதன் சிகிச்சை ஒரு இளமையான ஆணுடன் உறவு கொள்வது என முன் வைக்கப்பட்டது.
  •  

4. புனிதத்திலிருந்து அறிவை நோக்கி

அஸ்கிளெப்பியஸ், ஆறுதல் (soothing) அளிக்கும் கடவுளான Epione ஐ மணந்து குழந்தைகளைப் பெற்றான்.  சுத்தத்தின் கடவுளான ஹைஜியா (Hygeia), சர்வரோகநிவாரணி கடவுளாகிய பணசியா (Panacea),  நலத்திற்கு அசோ (Aceso) நோயிலிருந்து மீள லாசோ (Laso), ஒளி அல்லது ஆரோக்கிய உடல் அழகின் ஈக்ள் (Aegle) ஆகிய மகள்களையும், திறமையான மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் Machaon, Podaleirios மற்றும் நோயில் இருந்து மீண்டும் முழுமைக்கு என்ற பொருளுடைய குள்ளமான டெலஸ்போரஸ் (Telesphoros) என்று மூன்று மகன்களையும் பெற்றனர்.
  •  

3. மரணமின்மையின் முதற்துளி

நோய்களுக்கு காரணம் கடவுளர், இயற்கை போன்றவற்றிலிருந்து  உடலளவில்  நாடிகளில் ஏற்படும் சமநிலைக்குலைவு நோய்களை உருவாக்கக்கூடும் என்ற தத்துவம் எகிப்திய மருத்துவத்தில் தோன்றிவிட்டது. மேலும் நோய் வருவதற்கு முன் தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள், மருத்துவ அறிவை தொகுத்துக்கொள்ள பாப்பிரஸ் சுவடிகள் போன்ற வழிமுறைகளும் உருவாகிவிட்டன.
  •  

மனித நாகரீகத்தின் நுழைவாயிலில்

அசூர்பனிபால் (Ashurbanipal), பொ யு மு  600 களில் அசிரிய பொற்காலத்தில் வாழ்ந்த பேரரசன். இவருடைய நினிவே நூலகத்தில் இருந்து சுமார் 30000 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இவர் காலத்திற்கு முன்பிருந்து சேகரிக்கப்பட்டவை மற்றும் பிரதி எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
  •  

மருத்துவத்தில் நிலைத்தவையும், அழிந்தவையும்

நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியம் மற்றும் நோய் சம்பந்தமான ஒரு  குறிப்பைக் கூடப் பார்க்காமல், கேட்காமல்  ஒரு நாளைக் கடக்க முடியாது. தகவல் ஊடகம் சார்ந்து அல்லது தகவல் ஊடகத்தைச் சார்ந்த நமது சுற்றம் மூலம், தொடர்ந்து ஆரோக்கியம் பற்றிய ஒரு நோக்கு நம் மீது திணிக்கப்படுகிறது
  •