Reading view

தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்


 
1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.

தொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும், 
ஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை
மேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு

என நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது. 

இவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, மரபார்ந்த தமிழகரவரிசையாகும்[T]

தமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில்  அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. 

2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.

1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “மேனாட்டவர் தமிழகரவரிசை[W] என்று அழைக்கலாம்.  

இம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்களைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா? 

அன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. வீரமாமுனிவர் அருளிச் செய்த சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.

3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.

  தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. 


மேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார்  சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில், 
"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது? நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து..." என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க. 

என்றவாறு கூறும் பேராசிரியர் “இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.” என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை. ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக  இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொல்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது. 

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.

4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.

தமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன்  கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் "இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்" என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள, 
"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன..." 

என்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.

5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.

1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது. 

ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.

6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.

1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர். 

1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.

ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் "ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை" என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை. 

முறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்.  

7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும். 

மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரையில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,
It is to be noted that we have seen no reason to follow the Tamil Lexicon’s idiosyncratic non-alphabetic ordering of kk before k followed by vowel, and the like: our order is strictly alphabetic.

என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.

8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.

உண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. 1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது. 

மேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது. 

தற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை  காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் நிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.

மேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம்,  நன்னூல் வழிப்படுத்திய "மொழிமுதல் எழுத்துகள்" என்பதைக்  கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.

இன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம், 
சைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்கில நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும்? தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை  வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க, 
தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே
 

"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்" என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில்  பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார். 

9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும். எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும்  மரபு உருவாக்கப்படவேண்டும்.

தமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம். 

  •  

தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும்


 
1. தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி மரபார்ந்த அகரவரிசை.

தொல்காப்பியத்தில் கூறப்படும் “எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃதென்ப” என்ற சூத்திரத்தில் தமிழ் எழுத்துகள் எவை என்பது கூறப்பட்டுள்ளது. “அ” தொடக்கம் “ஔ” வரையான உயிர் எழுத்துகள் 12ம், “க்” தொடக்கம் “ன்” வரையிலான மெய் எழுத்துகள் 18ம் தான் முதன்மை எழுத்துகள், அதாவது முதலில் தோன்றிய எழுத்துகள். மெய்யெழுத்துகளுடன் உயிரெழுத்துகள் சேர்வதால் தோன்றும் 216 உயிர்மெய்யெழுத்துகள், மற்றும் நுண்ணொலியான “ஃ” ஆய்தம் எனும் சார்பெழுத்து என்று மொத்தம் 217 சார்பெழுத்துகள் வரிவடிவமுடையவை. தமிழ் எழுத்துகளின், சார்பெழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படையில் எழுத்துகளுக்கு முதன்மை இடமும், அவற்றைத் தொடர்ந்து சார்பெழுத்துகளுக்கு இடமும் கொடுத்து இயல்பாகவே வரிசைப்படுத்திவிடமுடியும். ஆய்தவெழுத்தினை எந்த இடத்தில் வைக்கவேண்டும் என்பதைத் தொல்காப்பியம் கூறாவிடினும், 
ஆவி யகரமுத லாறிரண்டா மாய்தமிடை
மேவுங் ககரமுதன் மெய்களா - மூவாறுங்
கண்ணு முறைமையாற் காட்டியமுப் பத்தொன்று
நண்ணுமுதல் வைப்பாகு நன்கு

என நேமிநாதம் சுட்டும் வழிகாட்டலின்படி ஆய்தவெழுத்தை உயிரெழுத்திற்கும், மெய்யெழுத்திற்கும் இடையில் வைக்கவேண்டும் என்பதை அறியக்கூடியதாக உள்ளது.தமிழ் லெக்சிகன் ஆய்த எழுத்தைப் பதின்மூன்றாவது எழுத்தெனப் பதிவுசெய்துள்ளது. 

இவ்வாறு தொல்காப்பிய, நேமிநாத வழிகாட்டலின்படி உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று தமிழ் எழுத்துகளின் அகரவரிசை அமையும், இதுவே தமிழின் முறையான, மரபார்ந்த தமிழகரவரிசையாகும்[T]

தமிழில் அகராதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட நூல்களில்  அகரவரிசை என்பது ஒரு அவசியத் தேவையாக இருந்தமைக்கான பதிவுகளைக் காணமுடியவில்லை. அதாவது ஒவ்வொரு சொல்லையும் அதன் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்து அகரவரிசைப்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் எதையும் காணக்கூடியதாக இல்லை. ஔவையாரின் ஆத்திசூடி என்ற நீதிநூலில் நீதிவாசகங்கள் முதல் எழுத்து அடிப்படையில் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவணசித்தரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவிலான, ஒருசொற் பல்பொருள் விளக்கமாக அமைந்த அகராதிநிகண்டிலும் முதல் எழுத்து அடிப்படையிலான அகரவரிசையில் சூத்திரங்கள் தரப்பட்டுள்ளன. 

2. சதுரகராதியில் தவறான அகரவரிசை அறிமுகமாதல்.

1732இல் முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி, வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார்(Constanzo Beschi) என்ற மேனாட்டவரால் ஓலைச்சுவடியில் உருவாக்கப்பட்டது. 1819இல் சதுரகராதியின் ஒரு பகுதி அச்சில் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன் பின் 1824இல் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளது. சதுரகராதியில் தலைச்சொற்களை வரிசைப்படுத்தக் கைக்கொள்ளப்பட்டிருக்கும் அகரவரிசை என்பது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்று காணப்படுகிறது, மேலும் ஆய்தவெழுத்தானது உயிர்மெய் எழுத்துகளுள் ககர மெய்க்கும் ஙகர மெய்க்கும் இடையிலும் வருமாறும் உள்ளதானதொரு அகரவரிசையாகும். நாம் இதனை “மேனாட்டவர் தமிழகரவரிசை[W] என்று அழைக்கலாம்.  

இம்மேனாட்டவர் தமிழகரவரிசையானது முற்றிலுமாக தமிழ் எழுத்துகள், சார்பெழுத்துகள் உருவான தன்மைக்கு எதிரானது. “க்” என்ற எழுத்தில் இருந்து தோன்றிய “க” முதல் “கௌ” வரையிலான சார்பெழுத்துகளைக் கொண்டிருக்கும் சொற்களை முன்னராகவும், “க்” என்ற முதன்மை எழுத்தைக் கொண்டிருக்கும் சொற்களைப் பிற்பகுதியிலும் அடுக்கி வரிசைப்படுத்துவது தவறான முறையல்லவா? 

அன்றைய திண்ணைப் பள்ளிக்கூட கல்விமுறையில், தமிழில் சொல்வளத்தினை கற்றுக்கொள்வதற்கு இன்றியமையாத அடிப்படை ஆதாரநூல்களாக இருந்தவை, செய்யுள் வடிவிலான நிகண்டுகளே. நிகண்டுகளைப் பயன்படுத்தி வந்த தமிழர்களுக்குச் சொற்களின் முதல் எழுத்தில் தொடங்கி இறுதி எழுத்து வரை கணித்துச் சொற்களை அகரவரிசைப்படுத்தி அடுக்கித்தந்த அகராதிகள் பெருவிருப்பாகின. வீரமாமுனிவர் அருளிச் செய்த சதுரகராதி என்று அழைக்கப்பட்ட வரலாறும் உண்டு. ஒலியொழுங்கில் சொற்களைப் பாக்களில் அடுக்கி மனனம் செய்யும் முறையில் இருந்து விலகி, தேவையேற்படுமிடங்களில் உசாவுதலுக்குப் பயன்தரும் நோக்குநூல்களாக அகராதிகளைப் பயன்படுத்தும் முறை தொடங்கியது எனலாம்.

3. தவறான அகரவரிசையைத் தமிழறிஞர்களும் பயன்படுத்துதல்.

  தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம் வழிப்படுத்திய மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தாமல், வீரமாமுனிவர் அறிமுகப்படுத்திய மேனாட்டவர் தமிழகரவரிசையிலேயே தமிழ் அகராதிகள் உருவாக்கப்பட்டுவந்தன. ஆரம்பத்தில் முக்கியமான பல தமிழ் அகராதிகளை மேனாட்டவர்களே உருவாக்கிய காரணத்தினாலும், அவர்களைத் தொடர்ந்து தமிழில் அகராதிகளை உருவாக்க முற்பட்ட பல தமிழர்களும் எந்தவித ஆராய்வுமின்றி மேனாட்டவர் தமிழகரவரிசையினைத் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில், சொல்லடைவுகளில் பயன்படுத்தியுள்ளனர். 1679இல் புரேயன்சாவினால் உருவாக்கப்பட்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதி முதல் 1966இல் வெளியான மே.வீ.வேணுகோபாலபிள்ளையின் இளைஞர் தமிழ் அகராதி வரையிலாகப் பல அகராதிகளையும், சொல்லடைவுகளையும் பார்வையிட்டதில் இதனைத் தெரிந்துகொள்ள முடிகிறது. 


மேலே தரப்பட்ட அட்டவணையை உற்றுநோக்கினால், தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் என்று போற்றப்படுகிற பலரும் தவறான அகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளதைக் காணமுடியும். இலக்கணக்கொத்து, இலக்கணச்சுருக்கம், இலக்கணவிளக்கச் சூறாவளி, இலக்கண வினாவிடை ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியவரும், இலக்கணவழு இல்லாமல் பிழையற்ற பதிப்பை செய்தவர் என்று அறியப்படுபவருமாகிய ஆறுமுகநாவலரும் மேனாட்டவர் தமிழகரவரிசையினையே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் காணலாம். மேலும், தமிழியல்சார்  சிந்தனைத் துளிகள் என்று பெயரிடப்பட்ட, பேராசிரியர் சு.சுசீந்திரராஜா அவர்களால் எழுதப்பட்ட மொழியியல் கட்டுரைகள் அடங்கிய இரண்டாம் தொகுதியில்(2011) நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம்(பக்.157)என்ற தலைப்பிலமைந்த ஆய்வுக் கட்டுரையில், 
"உண்மையிலே, நெடுங்கணக்கில் ஆய்தத்திற்கு உரிய இடம் யாது? நாம், பொதுவாக, ஆய்தம் தமிழ் எழுத்துக்களில் ஒன்று என்றே கருதுகின்றோம். ஆனால், முதற்கண், ஆய்தம் முதல் எழுத்துக்களில் ஒன்றன்று என்பதனை நினைவுபடுத்திக் கொள்தல் வேண்டும். எனவே, அதனை முதல் எழுத்துகளோடு கலப்பது, சேர்ப்பது பொருத்தமன்று. அது, எழுத்தோரன்ன சார்பெழுத்து. அதனை, உயிர் என்றோ மெய்யென்றோ மயங்குவதற்கு இடமளித்தல் ஆகாது. அது, உயிருமன்று, மெய்யுமன்று, செயற்பாட்டில் உயிரிலும் மெய்யிலுமிருந்து வேறுபடுவது. அது, சொல்லில்வரும் குறுகிய சூழலை வரையறுத்துக் கூறலாம். அது குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வருவதாகும். எழுத்து வரிசையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவற்றிற்குப் பின்னர் வரவேண்டிய எழுத்தாகும். இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம். நாவலர் பெருமான் தம் இலக்கணச் சுருக்கத்தில்"எழுத்தாவது, சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம். அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து..." என வரிசைப்படுத்தியதை நினைவு கூர்க. 

என்றவாறு கூறும் பேராசிரியர் “இந்த ஒழுங்கைத் தொல்லாசிரியரின் நூற்பாக்களிலிருந்து அறியலாம்.” என்பதற்குச் சான்றுகளைத் தரவில்லை. ஆய்தவெழுத்தினை கடைசியாக வைக்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கூறிவரும் பேராசிரியர், நடைமுறையில் (பக்.197) இதனைக் கைக்கொள்ளவில்லை. பேராசிரியர் பல்வேறு கட்டுரைகளில் சொற்களை வரிசைப்படுத்திக் கூறுகிறார், ஆனால் எந்தவொரு இடத்திலும் மேற்கூறியவாறு ஆய்தவெழுத்தினை, உயிர்மெய்யெழுத்தின் பின்னர் வரும் நிலையில் வைத்துச் சொற்களை வரிசைப்படுத்தவில்லை. ஆறுமுகநாவலர் மீதான பற்றின் காரணமாக, ஆறுமுகநாவலரின் இலக்கணச்சுருக்க வாசகங்களை நியாயப்படுத்துவதற்காக வலிந்து எழுதப்பட்ட ஒன்றாக  இதனைக் கருதலாம், கட்டுரையில் இடம்பெறும் பெருமான் என்ற சொல்லாடல் இதனை வெளிப்படுத்துகிறது. 

தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட தமிழறிஞர்கள் பலர் ஆராய்வின்றித் தவறான அகரவரிசை முறைகளைக் கைக்கொண்ட காரணத்தினாலேயே, மேனாட்டவர் தமிழ் மொழியின் அகரவரிசையைத் தீர்மானிக்க முற்பட்டுள்ளனர்.

4. மரபார்ந்த அகரவரிசையைப் பின்பற்றிய இரு முன்னோடிகள்.

தமிழகத்தில் உ.வே.சாமிநாதையரும், யாழ்ப்பாணத்தில் கு.கதிரைவேற்பிள்ளையும் (வைமன் கதிரைவேற்பிள்ளை) மாத்திரமே மரபார்ந்த தமிழகரவரிசையைப் பயன்படுத்தியுள்ளனர். வைமன்  கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்த அகராதியின் முன்னுரையில் தமிழ் மரபார்ந்த அகரவரிசையை தொடர்பில் தெளிவுகளைத் தந்துள்ளார். வைமன் கதிரைவேற்பிள்ளையின் அகராதித்தொகுப்பில் வேலை செய்த சுன்னாகம் அ.குமாரசாமிப்புலவர் அவர்களும் தமது இலக்கியச் சொல்லகராதியில்(1914) மரபார்ந்த தமிழகரவரிசையப் பயன்படுத்தியுள்ளார். 1970இல் வெளியான குமாரசாமிப்புலவர் வரலாறு என்னும் நூலின் 65ம் பக்கத்தில் காணப்படும் "இடைக்காலச் சிறப்பும் அகராதி வேலையும்" என்ற உபதலைப்பில் அமைந்த பகுதியில் குமாரசாமிப்புலவரின் மகனான கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள, 
"...புலவர் நீதிபதியோடு கூடி வேலை செய்ததன் பலனாகப் பழந்தமிழிலக்கிய விலக்கணங்களையும், நிகண்டுகளையுந் துருவித் துருவி ஆராய்ந்து பிழைபட வழங்குஞ் சொற்களின் உண்மை உருவத்தை நிச்சயம் பண்ணும் நுட்பவறிவைப் பெற்றார். மேலும் அவர் நவீன முறையைப் பின்பற்றி அகராதி தொகுக்கும் முறையையும் அறிந்தனர். இவ்வனுபவங்கள் யாவும் அவர் தமது இலக்கியச் சொல்லகராதி இயற்றுவதற்குப் பேருதவியாகவிருந்தன..." 

என்ற வாசகங்களினூடாக மரபார்ந்த தமிழகரவரிசை முறையில் அகராதி உருவாக்கும் முறையை வைமன் கதிரைவேற்பிள்ளையவர்களிடமிருந்து அறிந்துகொண்டுள்ளார் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம்.

5. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் லெக்சிகனில் மரபார்ந்த அகரவரிசை.

1840களில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷன் நிறுவன ரீதியாகத் தமிழ் அகராதிகளைத் தொகுத்ததைப் போன்று, 1913இல் சென்னைப் பல்கலைக்கழகமும் பேரகராதி ஒன்றைத் தயாரிக்கத் தொடங்கி 1936இல் அதனை நிறைவு செய்தது. “தமிழ் லெக்சிகன்” என்ற பெயருடன் வெளியிடப்பட்ட இவ்வகராதியானது, அதற்கு முன்னர் வெளிவந்த தமிழ் அகராதிகளைவிட அதிக எண்ணிக்கையிலான சொற்களுக்குப் பொருள் தருவதாகவும், நுணுக்கமான அகராதியியல் உத்திகள் பலவற்றையும் முன்னர் வெளியான அகராதிகளில் இருந்து பெற்று இணைத்துக் கொண்டதாகவும் அமைந்தது. 

ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையில் பல தமிழறிஞர்கள் தமிழ் லெக்சிகன் உருவாக்கத்தில் பங்குபற்றினர். வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி(1862), ஜி.யு.போப்பின் அனைத்தும் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி(1905) ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தமிழ் லெக்சிகன் உருவாக்கப்பட்டதாகப் பலர் கூறினாலும், அதன் அகரவரிசைப்படுத்தல் என்பது மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலைக் கொண்டதாகவே அமைந்தது. அதாவது தமிழ் லெக்சிகனானது, முன்னர் உருவாக்கப்பட்ட பல தமிழ் அகராதிகளில் காணப்பட்ட மேனாட்டவர் தமிழகரவரிசையினைக் கைக்கொள்ளாது, மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளது. ஜே.எஸ்.சாண்டிலர் தலைமையிலான அறிஞர் குழுவின் ஆராய்வு காரணமாகவே பதினெட்டிற்கும் அதிகமான தமிழ் அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட தவறான மேனாட்டவர் தமிழகரவரிசை கைவிடப்பட்டு, இரண்டு அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட மரபார்ந்த அகரவரிசையினைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஜே.எஸ்.சாண்டிலர் அவர்கள் சில பக்கங்களுடன் தமிழ் லெக்சிகனின் முன்மாதிரிகளை அச்சிட்டு Oxford University, Cambridge University போன்ற மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிடமும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் போன்ற பல தமிழ்ச் சங்கத்துத் தமிழ் அறிஞர்களிடமும் ஆலோசனைகளைப் பெற்றுச் செயற்பட்டுள்ளார்.

6. தமிழ் லெக்சிகன் முன்னுரையில் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கவனக்குறைவு.

1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அகரவரிசைப்படுத்தல் முறைகள் புழக்கத்தில் இருந்துள்ளதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மிகமிகக் குறைவான எண்ணிக்கை அகராதிகளில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசைப்படுத்தல் ஏன் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான விளக்கத்தையும் அவர் தரவில்லை. இதற்குக் காரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தன்னளவில் ஒரு சிறு தமிழ் அகராதியையேனும் உருவாக்காதவர், அகராதியியல் உத்திகள் எதையும் அறிமுகப்படுத்தியவருமல்லர். 

1926இல் தமிழ் லெக்சிகன் திட்டத்தில் இணைவதற்கு முன்னர், 1922இல் அவர் பதிப்பித்த மனோன்மணியம் பதிப்பின் இறுதியில் தரப்பட்ட பின்னிணைப்பு IIஇல் உள்ள அரும்பதவிளக்கத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியவர், பின்னர் 1938இல் புறத்திருட்டு பதிப்பிலும், 1943இல் திருமுருகாற்றுப்படை பதிப்பிலும் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்தியுள்ளார். ஆக, தன்னளவில் ஆரம்பத்தில் அகரவரிசைப்படுத்தலில் தவறான ஒரு முறையை அவர் கையாண்டிருப்பதை உணர்ந்த காரணத்தினாலேதான், பின்னர் மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுக்கு மாறியுள்ளார்.

ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறியப்பட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்ட ஒரு தேர்விற்கு/கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் மிகப்பொருத்தமான விடையாகாதென்பதை உணர்ந்தவராகவே இருந்திருக்கவேண்டும். பலவித விடைகள் கிடைக்கின்றன அல்லது பலவித முறைகள் இருக்கின்றன என்பது தெளிவின்மையின் அடையாளம். இதனைக்கூறும் "ஒருதலை வழக்கு நூலிலும் செவ்வை" என்ற பழமொழியும் தமிழர்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு ஒரே ஒரு விடையை அறியமுடியாதவிடத்து, அவ்விடயம் தொடர்பில் துறைபோகிய பல்வேறு தரப்பினருடன் தர்க்கரீதியில் உரையாடல் செய்யப்படுமிடத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுடன் ஒரு தனித்துவமான விடையைக் கண்டறிந்திருக்கலாம். எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ் லெக்சிகனில் பயன்படுத்தப்பட்ட அகரவரிசையை அறிவியல் ரீதியாக விளக்கங்களுடன் தெளிவுபடுத்தியிருக்கவேண்டிய பதிப்பாசிரியர் பொறுப்பில் இருந்தவர், ஏனோ அவர் அதனைச் செய்யவில்லை. 

முறையான தமிழ் அகரவரிசை என்பது தரப்பாடு செய்யப்படாத காரணத்தினால் 1936இற்குப் பின்னரும் பல தமிழ் அகராதிகள் மேனாட்டவர் தமிழகரவரிசையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. நாம் அறிந்தவரையில் 30 தமிழ் அகராதிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கலாம்.  

7. தமிழ் அகரவரிசை எது சரியென்பதை தமிழக, ஈழ அறிஞர்கள்தானே தீர்மானிக்க வேண்டும். 

மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியான அகரவரிசையென்பதாக 1968இல் வெளியான A Dravidian etymological dictionary என்ற அகராதியின் முன்னுரையில் அந்நூலின் ஆசிரியர்களான T. Burrowவும் M.B. Emeneauவும்,
It is to be noted that we have seen no reason to follow the Tamil Lexicon’s idiosyncratic non-alphabetic ordering of kk before k followed by vowel, and the like: our order is strictly alphabetic.

என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்மொழியின் அகரவரிசை எது சரியானது என்பதைக் கூறுபவர்களாக மேனாட்டவர்கள் உள்ளார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத மேனாட்டவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லப்பட்ட இக்கூற்றுக்கு இன்றையவரையில் எந்தவொரு தமிழறிஞரும் பதில் தரவில்லையென்பதும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது செயற்பட்டுவரும் தமிழ் லெக்சிகன் திருத்தப்பதிப்புக் குழுவும் பதில்தராது வாய்மூடிமௌனியாக இருப்பதும் கவலைதரும் விடயமாகும்.

8. பேசாப்பொருளாக தமிழ் அகரவரிசை.

உண்மையில் தமிழ் அகரவரிசை எது சரியென்பது பேசாப்பொருளாகவே உள்ளது. 2000ஆம் ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற 908 பக்கங்களைக் கொண்ட நூலிலும் தமிழில் மரபார்ந்த அகரவரிசை, மேனாட்டவர் அகரவரிசை, மிகத் தவறான அகரவரிசை என்று ஒன்றிற்கு மேற்பட்ட அகரவரிசை முறைகள் புழக்கத்தில் உள்ளதென்பது பேசப்படவில்லை. தமிழ் அகராதிகளின் வரலாற்றைக்கூறும் நூலில், அகராதியியலின் அடிப்படையான அகரவரிசையைப் பற்றிப் பேசப்படவில்லையென்பது - கவனக்குறைவு என்று எளிமையாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல. 1936இல் தமிழ் லெக்சிகன் முன்னுரை எழுதிய எஸ்.வையாபுரிப்பிள்ளை தொடக்கம் 2000இல் தமிழ் அகராதிகளின் வரலாற்றை எழுதிய கிரகரி ஜேம்ஸ் வரையில் பலரும் தமிழ் அகரவரிசை தொடர்பில் எழுதாமல், ஆராயாமல் இருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது. 

மேனாட்டவர் தமிழ் அகராதித்துறையில் செய்துள்ள பணிகளைப் புறந்தள்ளி விடமுடியாது, ஆனால் அவற்றைத் தமிழ் என்ற வீட்டின் புறத்தோற்றத்தைப் பல வித நிறங்களால் அழகுபடுத்திக்கொள்வதைப் போன்று எடுத்துக்கொள்ளவேண்டும். அதேசமயம் தமிழ் மொழியின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளி மேனாட்டவர் தமிழகரவரிசைதான் சரியானது என்ற வாதத்தை வைப்பது, தமிழ் என்ற வீட்டின் அத்திவாரத்தில் சிதைவை ஏற்படுத்துவதாக அமையும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் இதனை அனுமதிக்கமுடியாது. 

தற்செயலாகவோ, திட்டமிட்ட ஒரு மறைநிரலிலோ, அறியாமை  காரணமாகவோ பல்வேறு இடங்களில்/பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழின் மரபார்ந்த அகரவரிசையைப் புறந்தள்ளிய செயல்கள் கடந்தகாலங்களில் நிகழ்ந்துள்ளதையும், தற்போதும் நிகழ்ந்து வருவதையும் நாம் காணலாம்.

மேனாட்டவர் தங்கள் தன்னிச்சையான எண்ணப்படி தொல்காப்பிய, வீராசோழியம்,  நன்னூல் வழிப்படுத்திய "மொழிமுதல் எழுத்துகள்" என்பதைக்  கவனத்தில் கொள்ளாது தமிழ் மொழியில் முதல் எழுத்தாக வராது என்று கூறப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களையும் இணைத்து வரிசைப்படுத்தினர். எடுத்துக்காட்டாக ட, ர, ல வரிசையில் தொடங்கும் சொற்களை ரொட்லர், வின்ஸ்லோ போன்றவர்களின் அகராதிகளில் காணலாம். நா.கதிரவேற்பிள்ளை தனது தமிழ்ப் பேரகராதியில்(1899) மொழிமுதல் வராத, “வ்” என்ற மெய்யெழுத்தில் தொடங்கும் பதினான்கு சொற்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

இணையமாநாடுகளை நடத்திவரும் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசினால் 1999ம் ஆண்டில் வெளியிடப்பட்ட “தமிழ்99” (தமிழக அரசாணை - G.O.Ms.No.17 - dated: 13 June 1999) என்ற கணினித் தமிழ்த் தட்டச்சு முறையும் தமிழ் எழுத்துகளின் சிறப்பைச் சிதைக்கும் ஒன்றாகும். இதில் அகரமேறிய உயிர்மெய்யெழுத்துகளுடன் மீண்டும் உயிரெழுத்துகள் சேர்வதன்மூலம் உயிர்மெய்யெழுத்துகள் தோற்றம் பெறுகின்றனவாகக் காட்டப்படுகின்றன.இங்கு வரிசைப்படுத்தல் இல்லையெனினும் தமிழ் எழுத்துகளின் தோற்றத்தின் அடிப்படைக் கட்டமைப்புத் திரிக்கப்படுகிறது.

இன்றைய கணினி யுகத்தில் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழ் அகரவரிசையினைச் சிதைப்பதாகவுள்ளன. தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia - https://ta.wikipedia.org), Microsoft போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் மென்பொருள்களிலும், ஈழத்தில் இயங்கிவரும் நூலகம் நிறுவனமும் (http://noolaham.org) புதியதொரு தமிழ் அகரவரிசையினைக் கைக்கொள்பவர்களாக உள்ளார்கள். இவர்கள் மேனாட்டவர் தமிழகரவரிசையில் மேலதிகமாக வடமொழி “ஜ” எழுத்து வரிசையில் தொடங்கும் சொற்களை சகர வரிசைக்கும் ஞகர வரிசைக்கும் இடையில் வைத்து வரிசைப்படுத்தும் ஒரு கலப்பு அகரவரிசைப்படுத்தலைப் பயன்படுத்துகிறார்கள்.

2017இல் இலங்கை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சைமன் காசிச் செட்டியின் தமிழ் புளூடாக் & தமிழ் நூல் விபரப்பட்டியல் என்ற மொழிபெயர்பு நூலின் முன்னுரையில் அகரவரிசை தொடர்பில் பதிப்பாசிரியர் க.இரகுபரன் தந்திருப்பதைப் பார்க்கலாம், 
சைமன் காசிச்செட்டி தாம் ஆங்கிலத்தில் எழுதிய சரித்திரத்தில் புலவர் வரிசையை ஆங்கில நெடுங்கணக்குக்கு அமைவாக நிரற்படுத்தி விபரங்களைத் தொகுத்தளித்தார். இத்தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே ஒழுங்கிலேயே புலவர் வரிசை அமைகிறது. ஆனால், தமிழ் நெடுங்கணக்கின் வரிசை, ஆங்கில நெடுங்கணக்கின் வரிசையிலிருந்து வேறுபட்டது. யாரேனும் ஒரு புலவர் பற்றி அறிய விழைபவர்கள் தமிழ் நெடுங்கணக்கின்படி தேட முற்படின், அந்த ஒழுங்கு இதில் இல்லாததால் இடர்ப்படக்கூடும். ஆதலால், பொருளடக்கத்தில் புலவர் பெயர்களை முதலில் ஆங்கில எழுத்திலும் அடுத்து தமிழ் எழுத்திலுமாகத் தந்துள்ளோம். புலவர்கள் பற்றி அறிய முற்படுபவர்கள் ஆங்கில நெடுங்கணக்கின்படி புலவர் விபரங்களைத் தேடிப் படிப்பார்களாக.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம் யாருக்கானது என்றால் உறுதியாகத் தமிழர்களுக்கானது அல்லது தமிழ்மொழி தெரிந்தவர்களுக்கானது என்று கூறலாம். தமிழர்களுக்கான தமிழ்ப் புத்தகத்தில் ஆங்கில அகரவரிசையில் ஏன் வரிசைப்படுத்தவேண்டும்? தமிழ்ப்பதிப்பு என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் க.இரகுபரன் அவர்கள் உரிய முறையில் அணுகவில்லையென்பதை  வெளிப்படுத்துவதாக இப்புத்தகம் அமைகிறது. இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள அட்டவணையில் முதலாவதாகவுள்ள புரேயன்சாவின் தமிழ்-போர்த்துகீசிய அகராதியில் போர்த்துக்கீசிய அகரவரிசையில்[P] தமிழ்ச்சொற்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வகராதியானது போர்த்துக்கீசியர்களை இலக்கு வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்டதென்பதால் அங்கு போர்த்துக்கீசிய அகரவரிசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்க, 
தொகுத்தல் வகுத்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு அன்ன மரபினவே
 

"மொழிபெயர்த்து அதர்ப்படயாத்தல்" என்று சேர்ந்துவரும் சொற்றொடர் எதனை உணர்த்துகிறதென்பதைப் புரிந்துகொள்வது நல்லது. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால் அஃது பல இடங்களில்  பொருள் பொருந்தாது விலகிப் போகும் தன்மை ஏற்படலாம், எனவே சற்று மேம்பட்டு, வருமொழியான தமிழிற்குரிய நடையையும், மரபையும் உள்ளடக்கிய தன்மையுடன் அமைத்திருத்தல் வேண்டும். அந்த வகையில் தமிழ் மொழியின் மரபில் அகரவரிசைப்படுத்தலும் அமைத்திருக்கவேண்டும், 196 தமிழ்ப் புலவர்களின் பெயர்களை தமிழ் அகரவரிசையில் தந்திருக்கவேண்டும். மொழிபெயர்ப்பாளர் திருவேணி சங்கமம் அவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்ததை, பதிப்பாசிரியர் க.இரகுபரன் அவர்கள் அதர்ப்படயாக்கத் தவறியுள்ளார். 

9. மரபார்ந்த அகரவரிசைக்கு மாற்றப்பட வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு தனிநபர்-பாமரர் தொடக்கம் அறியப்பட்ட ஆய்வாளர், கல்வி நிறுவனம், அரசு நிறுவனம், வெளிநாட்டு அமைப்புகள் என்று பல்வேறு மட்டங்களில் தமிழ் அகரவரிசை மீறல்கள் நடைபெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இவையாவும் எதிர்காலத்திலும் தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பாதிப்பவைகளாக அமையலாம். தமிழ் மொழியின் சிறப்பென்பது தொல்காப்பிய வழிகாட்டலின்படியான முதன்மை முப்பது எழுத்துகளில் இருந்து தொடங்குவதாக நாம் எண்ணுகிறோம். தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ள பனம்பாரனாரின் “மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி” எனும் தொடர் இதனை வெளிப்படுத்தப்படுவதாகக் கொள்ளலாம். செம்மொழியான தமிழ்மொழியில் தவறான அகரவரிசைப்படுத்தல் முறைகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது, தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்குமொரு செயலாகும். எனவே கடந்தகாலத்தில் மேனாட்டவர் தமிழகரவரிசையில் உருவாக்கப்பட்ட நோக்குநூல்களை மீளவும் பதிப்பிக்குமிடங்களில் மரபார்ந்த தமிழகரவரிசையினைப் பயன்படுத்துவதாகவும், கணினி சார்ந்த குறியேற்றங்கள், தமிழ் இணையத்தளங்கள் யாவற்றிலும் மரபார்ந்த தமிழகரவரிசை பயன்படுத்தப்படும்  மரபு உருவாக்கப்படவேண்டும்.

தமிழ் அகரவரிசை எது மிகச்சரியானது என்பதை துறைசார் வல்லுநர்களின் துணையுடன் ஆராய்ந்து கண்டறிந்து, அதனைத் தரப்பாடாக அறிவித்து அரசாணை ஒன்றைத் தமிழ் அரசுகள் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையினையும் இத்தால் முன்வைத்து எமது கட்டுரையை நிறைவுசெய்கிறோம். 

  •  

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)



மீள்பதிப்பின் முன்னுரை

‘‘திருட்டாந்த சங்கிரகம்” என்ற தமிழ்த் தலைப்புடனும் ‘‘A Collection of Proverbs in Tamil  with Their Translation In English” என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது. திருட்டாந்த சங்கிரகம் என்பதைச் சுருக்கமான எடுத்துக்காட்டு என்று பொருள் கொள்ளலாம்.  அதுவரை காலமும் வாய்மொழி இலக்கியமாக தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு, முதல்முறையாக அச்சுவாகனமேறி நூல்வடிவம் பெற்றுள்ளது.

பேர்சிவல் பாதிரியார் தனது மறைதிருப்பணியை 1826ம் ஆண்டில் (Findlay, George G, Holdsworth William West,  1924, The history of the Wesleyan Methodist Missionary Society) திருகோணமலையில் தொடங்கியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் 1826இல் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வந்துள்ளதாகத் தனது முன்னுரையில்(1874) குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண அமெரிக்கன் மிஷனரியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பேர்சிவல் பாதிரியார், அமெரிக்கன் மிஷனறியைச் சேர்ந்த ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் துணையுடன் நிறைவு செய்யப்பட்ட A manual dictionary of the Tamil language என்ற கையகராதித்(மானிப்பாய் அகராதி/யாழ்ப்பாண அகராதி) தொகுப்பிலும் பங்குபற்றியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் ஈழத்திற்கு வந்து பத்தாண்டுகளிற்குள்  தமிழ் மொழியில் நிறைந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவரால் கையகராதித் தொகுப்புப் பணியிலும், திருட்டாந்த சங்கிரகம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடமுடிந்துள்ளது. 

1830-1832 இடைப்பட்ட காலத்தில் கல்கத்தாவில் பணியாற்றிய மூவாண்டு காலம் தவிர்த்து, 1826-1851 வரையில் அவர் ஈழத்தியிலேயே நிலைகொண்டிருந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படக் காரணமானவர் பேர்சிவல் பாதிரியார். இக்கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களில் இவர் பற்றிய குறிப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. 1842இல் யாழ்ப்பாணத்தில் கையகராதி வெளியிடப்பட்டது. அம்முயற்சியில் பேர்சிவலின் பங்களிப்பைப் பற்றிய பதிவுகள் American Board of Commissioners for Foreign Missions மூவாண்டுக் குறிப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலை (இன்றைய யாழ்.போதனா வைத்தியசாலை) தோன்றுவதற்குக் காரணமான ஆபத்துதவிகள் சங்கத்தின் (Frind-in-need Society) தோற்றம் தொடர்பில் உதயதாரகைப் பத்திரிகைச் செய்தியிலும் பேர்சிவல் குறிப்பிடப்படுகிறார். John H Martyn அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட Notes on Jaffna என்ற நூலிலும் பேர்சிவல் பற்றிய செய்திகள் உள்ளன. இவை யாவும் பீற்றர் பேர்சிவல் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட கல்விப்பணிகளைப் பற்றி  ஜெ.இராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
“கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது, உயர்வானது எனப் பெர்சிவல் கருதினார். இதனால் தமது சபையினருடன் ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முறித்துக்கொண்டு இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த கல்விப்பணி தலைமுறை கடந்தும் பயன்தந்தது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இலங்கையில்(1948) சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையான சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில் இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும் டாக்டர் பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”  (பக்கம் - 152)  
“மதம் பரப்புவதற்காக வந்து, இந்திய-தமிழ் இலக்கியங்களில், பண்பாட்டில் தங்களைத் தொலைத்த பல்வேறு ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் டாக்டர் பீட்டர் பெர்சிவல், பல நிலைகளில் தமிழியலில் தனது இருப்பை ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் அறிந்தோ அறியாமலோ அவர் செய்த நன்மைகளில் குறிப்பிடத்தக்கது, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தமிழக வருகைக்குக் காரணமாக இருந்தமை. அவர்களிருவரின் ஆரம்பகால ஆளுமை உருவாக்கத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈழ அறிஞர்களின் மீதான மதிப்பு தமிழகத்தில் இவர் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டது. 
பிற்காலத்தில் மேற்படி இருவரின் பதிப்புப் பணிகளுக்கும், ஆறுமுகநாவலரின் சமயப்பரப்புரைக்கும் பெர்சிவலே ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளார்.”
(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு. பக்கம் - 159, 160) 

பேர்சிவல் பாதிரியாரின் கல்விப்பணிகளால் நிரந்தர நன்மைகளைப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தவர்களாவர். நாம் அவரது வழியில் தமிழியலுக்கு பணியாற்றவேண்டிய பாத்தியதையுள்ளவர்களாக இருக்கிறோம்.

1854 தொடக்கம் 1882இல் இறக்கும் வரை பீற்றர் பேர்சிவல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே  வாழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் இவரே. மாநிலக்கல்லூரியின் கீழைத்தேய மொழியியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அன்றைய சென்னை மாகாண பொதுக்கல்வித்துறையின் ஆலோசகராகப் பணியாற்றுகையில்  பொதுக்கல்வித்துறைக்கு பாடத்திட்டங்கள், வரைபடங்கள் தயாரித்துள்ளார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளையும் உருவாக்கியவர். சதுரகராதி 1860ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.  தினவர்த்தமானியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அவர் புரிந்த பணிகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் உள்ளன. 

திருட்டாந்த சங்கிரகம் தொகுத்தல் பணியை பீற்றர் பேர்சிவல் ஈழத்தில் வாழ்ந்தபோதே நிறைவேற்றினார். இதில் காணப்படும் பழமொழிகளில் பெரும்பான்மையானவை ஈழத்தில் வழக்கில் இருந்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். 1870 பழமொழிகளுடன் வெளியிடப்பட்டஇந்த முதற் பதிப்பானது அதன் பின்னர் மீளவும் அதேவடிவில் அச்சில் கொண்டுவரப்படவில்லை. 

1851இல் ஈழத்தில் இருந்து இலண்டன் திரும்பிய பேர்சிவல் பாதிரியார் 1854இல் தமிழகம் சென்று தனது மறைதிருப்பணியைத் தொடர்ந்துள்ளார். சென்னையில் 1855இல் ஆரம்பிக்கப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர்ப்பணி, மறைதிருப்பணி என்பனவற்றோடு பழமொழிகளைத் திரட்டும் வேலையை மீண்டும் தொடர்ந்துள்ளார். தினவர்த்தமானி பத்திரிகை அறிவிப்பினூடாக பொதுமக்களிடம் இருந்து பழமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.

‘‘Tamil Proverbs with their English Translation” என்ற ஆங்கிலத் தலைப்புடன்  தமிழ்ப் பழமொழித் தொகுப்பு பேர்சிவல் பாதிரியாரால் தினவர்த்தமானி வெளியீடாக 1874இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 6156 பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1843 பதிப்பிற்கும் 1874 பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் இதுவரையில் எந்தவொரு ஆய்வாளராலும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. 

பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த குறைபாடுகள், விடுபடல்கள் பற்றிய தகவல்களை அவர் முன்னுரையில் (1874) சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கில விளக்கம் சிலவிடங்களில் மூலத்தின் உண்மைக்கருக்களிற்கு மிகவும் நெருங்கி வரவில்லையென்பதை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பழமொழிகளைப் போன்றே தோற்றம் தரும் நீதிவாசகங்கள், உவமைகள், திருக்குறளின் பகுதிகள், விடுகதைகள், வழக்காறுகள் இன்னபிறவற்றையும் அவர் பழமொழிகளாகக் கருதித் தொகுப்பில் இணைத்துள்ளார். 1850களில் நிலவிய அறிவார்ந்த நிலையை(intellectual level) எண்ணிப் பார்க்கும்போது, இதனை ஒரு குறையாக இன்று நாம் சொல்லமுடியாது, இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திப் பாதுகாத்தமைக்கு பேர்சிவல் பாதிரியாருக்கு நாம் நன்றி கூறவேண்டும். 

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்தம் ஐரோப்பியர் தமிழ்ப்பணி (2003, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற நூலில் பீற்றர் பேர்சிவல் கூறியவற்றின் நீட்சியாக அமையும் மேலதிக விளக்கங்களைத் தந்துள்ளார். சி.இளங்கோவின் பழமொழித் தொகுப்புகள் 1842-2000 என்ற நூலும்(2003, பல்கலைப் பதிப்பகம்), ஜெ.இராதாகிருஷ்ணனின் டாக்டர் பீட்டர் பெர்சிவல் என்ற தலைப்பிலான கட்டுரையும்(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு) எமது கவனிப்பிற்குரியவை. இம்மூன்று ஆய்வாளர்களும் கூறியவற்றை மீளவும் கூறுவதைத் தவிர்த்து அவர்கள் மூவராலும் பேசப்படாதனவற்றையும் அவர்களுடைய தவறுகளையுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘‘Almost immediatly after my arrival in this country in 1826...”  என்று பேர்சிவல் பாதிரியார் 1874இல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுவதை, பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரமும்(2003, பக்கம் 88), சி.இளங்கோவும்(2003, பக்கம் 31) மேற்கோள் காட்டியுள்ளனர். அம்மேற்கோள் தொடரை ‘‘பேர்சிவல் பாதிரியார் 1826இல் சென்னை வந்தடைந்தார்.” என இருவரும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் பீற்றர் பேர்சிவல் ‘‘this country” எனக் குறிப்பது இலங்கையையே ஆகும். 1874இல், பிரிட்டிஷ் இந்தியாவின் பாகமாகவே இலங்கையும் கருதப்பட்டது. இதனை உணராதவர்களாய் இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர். 

மேலும், பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003) அவர்கள் 1843இல் வெளியான முதற்பதிப்பைப் பார்வையிடவில்லை என்றே நாம் கருதுகிறோம், 1874இல் வெளியான இரண்டாவது பதிப்பைத்தான் அவர் பார்வையிட்டுள்ளார். ஏனெனில் 1874 பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் குறிப்பிடும் விடயங்களையே அச்சொட்டாக மீளவும் குறிப்பிடுகிறார். 1843 பதிப்பில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் 1870, ஆனால் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘nearly nineteen hundred”  என்றே குறிப்பிடுகிறார், இதனைப்  பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003, பக். 88) ‘‘... அவர் 1900 பழமொழிகளைத் திரட்டி...” என்று கூறுகிறார்.

அடுத்ததாக மேற்கூறிய மூவரும் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசையில்(நெடுங்கணக்கு) தந்துள்ளார் என்று மட்டுமே சொல்கிறார்கள், ஆனால் அகரவரிசையின் தன்மையை இவர்கள் நுணுகிக் கவனிக்கவில்லை. 1843இல் வெளியான பதிப்பில் பழமொழிகளின் முதல் எழுத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க பின்னிணைப்பு - 2C, 2D), 1874இல் வெளியான இரண்டாம் பதிப்பில் பழமொழியின் முதற்சொல்லின் அனைத்து எழுத்துகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு அகரவரிசைப்படுத்த முயன்றுள்ளார் (பார்க்க பின்னிணைப்பு - 3C, 3D).  ஆனாலும் பல இடங்களில் வரிசைப்படுத்தலில் தவறுகள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக உள்ளது. 

மேனாட்டவர்களாற் தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழித்தொகுப்புகள் மூன்றை ஒப்பிட்டு, அவற்றின் பரிணாமவளர்ச்சியைக் காட்டும் அட்டவணை ஒன்றை ஆய்வாளர் சி.இளங்கோ தனது நூலின் 50ஆம் பக்கத்தில் தந்துள்ளார். இதில் பேர்சிவல் பாதிரியாரின் 1843பதிப்பில் இருமுறை வந்த பழமொழிகள் எதுவும் இல்லை என்பதாக அவரது அட்டவணை சொல்கிறது. ஆனால் உண்மையில் பேர்சிவல் பாதிரியார்  ‘‘ஏதாகுதல் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.(325, 409)”, ‘‘குருடனுக்கு வேண்டியது கண்.(676, 713)” ஆகிய இரண்டு பழமொழிகளைத் தனது 1843பதிப்பில் இரு இடங்களில் இணைத்துள்ளார். ஆய்வாளர் சி.இளங்கோ அவர்களினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியாமற் போனமைக்குக் காரணம் அவர் அகரவரிசைப்படுத்தலை நுணுகி ஆராயாது விட்டமையே. இவ்விரு பழமொழிகளும் அருகருகாக வரிசைப்படுத்தப்படாமல் வெவ்வேறு பக்கங்களில் இடம்பெற்றமையினால் சி.இளங்கோவின் பறவைப் பார்வைக்கு அகப்படவில்லை.  

மேலும் பேர்சிவல் பாதிரியார் பயன்படுத்திய அகரவரிசை என்பது, முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதியில் காணப்படும், வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார் என்ற மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகரவரிசை. இது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்றவாறு உள்ள ஒரு வரிசைப்படுத்தல். இது தமிழ் மொழியின் மரபான அகரவரிசையல்ல, எனவே பேர்சிவல் பாதிரியாரால் 1843இல் யாழ்ப்பாணத்திலும், 1874இல் சென்னையிலும் வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டையும் ஒன்றிணைத்து, மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுடன் (பார்க்க - தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும். பக்கம் XXIX) நாம் இப்பதிப்பினை உருவாக்கியுள்ளோம்.  

இவ்விடத்தில் பேர்சிவல் பாதிரியார் தொகுத்துப் பதிப்பித்தவற்றை, பிறிதானதொரு அகரவரிசைப்படுத்தலுடன் மீளவும் பதிப்பித்தல் மரபுமீறல் ஆகாதோ என்றும், ஏன் இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைக்கவேண்டும் எனும் கேள்வியும் சிலருக்குத் தோன்றலாம். 

இதற்கான விடை - நோக்குநூல்கள் பல வகைப்படும். அகராதிகள், ஆய்வடங்கல்கள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், தொகுப்புகள் ஆகியன நோக்குநூல்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்நோக்குநூல்களில் தரவுகள் பொருண்மையின் அடிப்படையில், காலவரிசையில், எண்வரிசையில் அல்லது அகரவரிசையில் அடுக்கப்படும். ஏன் இவ்வாறு அடுக்கப்படுகின்றன என்பதற்குக் காரணம், நோக்குநூல்களில் அடுத்தடுத்துக் காணப்படும் தரவுகள் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. 

நோக்குநூலான பழமொழித் தொகுப்பில், பழமொழிகளை அகரவரிசையில் அமைத்துத் தந்துள்ளார் பேர்சிவல் பாதிரியார். இது பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று. நூலில் அடுத்தடுத்துக் காணப்படும் பழமொழிகளும் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. இவற்றை மரபார்ந்த தமிழகரவரிசையில் அடுக்கித் தருவதில் எந்தவித பொருள் இழப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒருவரால் சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட தரவுகள் வேறொருவரால் பிறிதொரு ஒழுங்கில் வரிசைப்படுத்தியமைக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டபோது,  ஓலைச்சுவடியில் தொகுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து முன்னேற்றங்கண்டு இன்று அச்சில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. அச்சில் வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் தங்களுடைய தமிழ் அறிவின் துணைகொண்டு சதுரகராதியின் அச்சுப்பதிப்பில்  மேம்படுத்தலைச் செய்துள்ளார்கள். இதனைத் தமிழ் லெக்சிகன் முன்னுரையில் (1936) எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்
‘‘In these editions, the several meanings of a word are arranged in alphabetical order; but the manuscripts do not support this arrangement.” (பக்கம் XXXVII) 

என்று பதிவு செய்துள்ளார். தமிழ் அகராதிக்கலை(1965) என்னும் நூலில் பேராசிரியர் சுந்தரசண்முகனார்
‘‘ஆசிரியரால் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.” (பக்கம் 379) 

என்று பதிவு செய்துள்ளார்.சதுரகராதியின் ஓலைச்சுவடிப் பதிப்பு, அச்சுப் பதிப்பு ஆகியவற்றில் இருந்து தாரம், வரி என்ற இரண்டு சொற்களையும் அவற்றிற்கான பொருள்விளக்கச் சொற்களையும் எடுத்துக்காட்டாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுந்தரசண்முகனார் ஆகிய இருவரும் தந்துள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தமிழியல் ஆய்விதழின் 45வது இதழில் (June 1994) தமிழ் அகராதிகளின் அகர வரிசையும் அமைப்பும் - முதல் மூன்று ஒரு மொழி அகராதிகள் என்ற தலைப்பில் முத்துசண்முகன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில்
‘‘இதனால் அடிகளார் தொகுத்த அகராதியின் உண்மை வடிவினைக் காண இயலாமற்போயிற்று” 

என்று ஆதங்கப்படுகிறார். இவ்வாறு ஆதங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை, ஏனெனில் குறைபாடுகள் உள்ள ஒரு பதிப்பைவிட முன்னேற்றமான தவறில்லாத பதிப்பே பெரும்பயன்தரும் ஒன்றாகுமல்லவா.

மேற்கூறப்பட்டவாறு சதுரகராதி அச்சுப் பதிப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்று இப்பதிப்பில் நாம் மரபார்ந்த தமிழ் அகரவரிசையில் பழமொழிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். இது எந்தவிதத்திலும் மரபு மீறல் ஆகாது. அகரவரிசைப்படுத்தலில் பேர்சிவல் பாதிரியாரின் முதற் பதிப்பைவிட இரண்டாம் பதிப்பு முன்னேற்றமுடையது, அதுபோன்று இப்பதிப்பு 1874 பதிப்பைவிட முன்னேற்றமுடையது.

பேர்சிவல் பாதிரியாரின் பதிப்புகளில் பழமொழி ஒவ்வொன்றிற்கும்  வழங்கப்பட்ட எண்ணும், அப்பழமொழி எந்தப் பக்கத்தில் இடம்பெற்றதென்பதும், பதிப்பாண்டும் இப்பதிப்பில் பகர அடைப்பினுள் தரப்பட்டுள்ளது. பேர்சிவல் பாதிரியாரின் பதிப்பு உண்மை வடிவினைக் காண விரும்புவோர், பகர அடைப்பினுள் குறிப்பிடப்படும் எண்களின் அடிப்படையில் பழமொழிகளை வரிசையாக அடுக்குவதன்மூலம் கண்டடையலாம். 1843பதிப்பில் இருமுறை இடம்பெற்ற பழமொழிகள் இரண்டு. 1333, 1536 ஆகிய இரு எண்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, 637 என்ற எண் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது, இவ்வகையில் 1843 பதிப்பில் இடம்பெற்ற பழமொழிகள் 1870 ஆகும். 

அடுத்து,  இரண்டு பதிப்புகளையும் ஏன் ஒன்றிணைத்தோம் என்பதற்கான விளக்கம். ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874 பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற்பதிப்புகளாகவும் இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ்நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிரவும் முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார் பேர்சிவல் பாதிரியார், இதனால் இருவேறுவிதமான மொழிபெயர்ப்பையும் ஓரிடமாகப் பார்க்கலாம். 

இப்புதிய பதிப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்ற 90 விழுக்காடு பழமொழிகளுக்குப் பேர்சிவல் பாதிரியார் ஏன் மீண்டும் புதிய மொழிபெயர்ப்புகளைச் செய்தார் என்ற விடயம் எமக்குக் குழப்பம் தருவதாகவே இருந்தது. இந்நிலையில் பேர்சிவல் பாதிரியார் தொடர்பில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிந்து அவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினோம். பேர்சிவல் பாதிரியார் சேகரித்த தமிழ்ப் பழமொழிகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்திருந்ததாகவும், அவ்வோலைச் சுவடியை மதுரை இறையியல் கல்லூரியின் ஆவணக்காப்பகத்தில் இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்மூலம் அறிந்துகொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்று தமிழகம் திரும்பிய பேர்சிவல் பாதிரியாரிடம் 1843இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருட்டாந்த சங்கிரகம் புத்தக வடிவில் இருந்திருக்கவில்லைப் போலும், தமிழ் ஓலைச் சுவடியையே பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இதனாற்றான் அவரால் 1874பதிப்பு முன்னுரையில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்றிருந்த பழமொழிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லமுடியவில்லை, புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது.  

பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தந்துள்ளார், ஆனால் சென்னைப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தருகிறார். 1874 பதிப்பில் உள்ள 6156 பழமொழிகளில் இருந்து 412 பழமொழிகளுக்கு மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தந்துள்ளார், இதில் 232 பழமொழிகள் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் உள்ளவை. ஈழத்தில் அவர் முதன்முதலாக இறைபணி தொடங்கிய இடம் திருகோணமலை என்பது 1072ஆம் இலக்கப் பழமொழிக்குத் தரும் கூடுதல் விளக்கத்தில் உள்ளது.
பேர்சிவல் பாதிரியாரினால் 1874இல் வெளியிடப்பட்ட பதிப்பு இதுவரையில் 6 தடவைகள் இந்தியாவில் மீளவும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ள விபரத்தைக் கீழே தரப்பட்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. 1877  Tamil Proverbs with their English Translation. Higginbotham and Co, Madras.
2. 1996 Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) Asian Educational Services, New Delhi.
3. 2001 Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint) Asian Educational Services, New Delhi.
4. 2002 Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint) Asian Educational Services, New Delhi.
5. 2010 தமிழ்ப் பழமொழிகள் வசந்தா பதிப்பகம், சென்னை.
6. (2019) Tamil Proverbs with their English Translation. The Asian Publications,Royapettah, Chennai.

மேற்காட்டப்பட்டுள்ள பதிப்புகளில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் காணப்பட்ட வடிவத்திலான பழமொழிகள் இடம்பெறவில்லை. ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுவோம்,

சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him. 
[1874 Edition - Number:3057 / Page:287]
சங்காயிரங்கொண்டு வங்காளம்போனாலுந் தன்பாவந் தன்னோடே.
Though one freights his vessel with a thousand Chanks and sails to Bengal his own crimes will accompany him.
[1843 Edition - Number:827 / Page:116]

இது நேரடிப்பொருள் தரும் ஒரு பழமொழி. யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள ‘வங்காளம்’ என்பது சென்னைப் பதிப்பில் ‘காசி’என்பதாக மாறுகிறது. ‘வங்காளம்’ ஏன் ‘காசி’யாக மாறியதென்பதற்குப் பின்னால் சுவைமிகு சமூக வரலாறு ஒன்று உள்ளது.

உதயதாரகைப் பத்திரிகையில் 1841ம் ஆண்டு வெளியான புதினச் செய்திகளைக் கொண்டு இதனை விளக்கலாம். 

1841ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வெளியான உதயதாரகையில்
“காரதீவிலிருந்து கற்பிட்டிக்குப் போகவெண்ணின பயணக்காரர் மூன்றுபேரும் தவால்காரனுந் தோணி ஏறிப்போகையிலே காற்று எதிர்த்தடிக்க அந்த நாலுபேர்களுந் தொணியைப் பலனாகப் பிடித்திருந்தும் காற்றில் தோணி உலைவுகொண்டு அங்குமிங்கும் போகத் திரை எழும்பத் தவாற்காரன் கைவிட்டமிழ்ந்திறந்தான்.” 

என்ற புதினச் செய்தி பிரசுரமாகியுள்ளது.  அன்றைய நாட்களில் நீண்ட தூரப் பயணம் என்பது கடற்பயணம் ஆகும் என்பதை இச்செய்தியின் மூலம் நாம் ஊகிக்கலாம். இலங்கையின் கிழக்குக்கரைக் காரைதீவில் இருந்து மேற்குக்கரைக் கற்பிட்டிக்குச் செல்வதற்கான பிரயாண வழியென்பதே கடல் மார்க்கமாகவே இருந்துள்ளபோது, இந்தியாவில் உள்ள காசிக்குப் போவதென்பதும் கடற்பயணமாகவே இருந்திருக்கும். காசிக்கு அண்மித்ததான கப்பல் வழியென்பது வங்காள தேசத்தினூடகவே அமையும்.
“பருத்தித்துறைக்கு அருகான வல்லுவட்டித்துறையிற் செய்யப்பட்டும், சங்கேற்றிக்கொண்டு வங்காளத்திற்கு முதற் பயணம் போனதும், (௨௱௫௰) தொன் (Ton) பாரங்கொண்டதுமான படவொன்று சிறிதுநாட்களுக்குமுன் அடித்த புசலினாற் சென்னபட்டணத்திற் செதப்பட்டுப்போயிற்று.” 

ஈழத்தில் இருந்து வங்காளத்திற்கு கப்பல் மூலம் சங்கு வாணிபம் செய்யப்படுகிற ஒரு நிலையும் இருந்துள்ளதை 1841ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி உதயதாரகையில் வெளியான இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவ்விரு செய்திகளினூடாக யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள மேற்குறித்த பழமொழியில் ‘வங்காளம்’ என்ற சொல் இடம்பெற்றது இயல்பானதென அறிந்துகொள்ளலாம். 

முதலிரு பதிப்புகளிலும் இடம்பெற்றவாறே பழமொழிகள் இப்பதிப்பிலும் இடம்பெறுகின்றன, அதாவது முதலிரு பதிப்புகளிலும் காணப்படுகிற தவறுகள் எதையும் திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இதனை நாம் ஒரு ஆவணப் பதிப்பாகவே செய்துள்ளோம், ஆய்வுப் பதிப்பல்ல. 

பேர்சிவல் பாதிரியார் பழமொழிகளைத் தொகுத்தது வெளியிட்டது போன்று, ஈழத்தவர்கள் சிலரும் பிற்காலத்தில் பழமொழி நூல்களை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை சி.இளங்கோ தனது நூலில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் வெளியீடுகள் பின்வருமாறு, 
  1. 1914 - பழமொழிப் போதனை - சி.ஆர்.சாஸ்திரி (பாடல் வடிவில்)
  2. 1916 - பழமொழித் தீபிகை - நாவலர் அச்சுக்கூடம் - பருத்தித்துறை வே.ஆ.சிதம்பரப்பிள்ளை (160 பழமொழிகளுக்கு விளக்கம்)
  3. 1932 - விவசாயம் பற்றிய பழமொழிகள் - சபாரத்தினசிங்கம்
தமிழில் வெளியான மிக முக்கியமான சில அகராதிகளின் தொகுப்பு முயற்சிகளிலும், பதிப்பு முயற்சிகளிலும் தோன்றாத்துணையாக உடன் நின்றவர் பேர்சிவல் பாதிரியார். ஆயினும் அவர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டும் அவரது சுயமுயற்சியின் அறுவடை. எனவே அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழித் தொகுப்புகளை இணைத்து மீளவும் வெளியிடும் நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறோம். 

இம்முன்னுரையில் தொகுப்பியல், அகராதியியல் நோக்கில் எமது கருத்துக்கள் சிலவற்றைக் கூறியுள்ளோம். இம் மீள்பதிப்பு முயற்சியில் எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர் அ.சிவஞானசீலன் பழமொழிகள் தொடர்பில் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்புப் பணியில் உதவிய நண்பர் முத்தையா வெள்ளையன் அவர்களுக்கும், ஆங்கிலப் பகுதியைச் செவ்வை பார்த்து உதவிய ஹாட்லிக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான ச. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பக்க வடிவமைப்பில் உதவிய கலைச்செல்வன், சிறீனிராஜ், சடகோபன் ஆகியோருக்கும், பேர்சிவல் பாதிரியார் கோட்டோவியத்தினை வரைந்து தந்த சௌந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

விருபா குமரேசன்
13.11.2018

  •  

பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)



மீள்பதிப்பின் முன்னுரை

‘‘திருட்டாந்த சங்கிரகம்” என்ற தமிழ்த் தலைப்புடனும் ‘‘A Collection of Proverbs in Tamil  with Their Translation In English” என்ற ஆங்கிலத் தலைப்புடனும் பேர்சிவல் பாதிரியாரால், 1843இல், யாழ்ப்பாணத்தில், அமெரிக்கன் மிஷன் வெளியீடாகத் தமிழ்ப் பழமொழிகள் அச்சில் கொண்டுவரப்பட்டது. திருட்டாந்த சங்கிரகம் என்பதைச் சுருக்கமான எடுத்துக்காட்டு என்று பொருள் கொள்ளலாம்.  அதுவரை காலமும் வாய்மொழி இலக்கியமாக தமிழ் மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பழமொழிக்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டு, முதல்முறையாக அச்சுவாகனமேறி நூல்வடிவம் பெற்றுள்ளது.

பேர்சிவல் பாதிரியார் தனது மறைதிருப்பணியை 1826ம் ஆண்டில் (Findlay, George G, Holdsworth William West,  1924, The history of the Wesleyan Methodist Missionary Society) திருகோணமலையில் தொடங்கியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் 1826இல் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழியின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு வந்துள்ளதாகத் தனது முன்னுரையில்(1874) குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண அமெரிக்கன் மிஷனரியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்த பேர்சிவல் பாதிரியார், அமெரிக்கன் மிஷனறியைச் சேர்ந்த ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் ஈழத்துத் தமிழ்ப் பண்டிதர்கள் துணையுடன் நிறைவு செய்யப்பட்ட A manual dictionary of the Tamil language என்ற கையகராதித்(மானிப்பாய் அகராதி/யாழ்ப்பாண அகராதி) தொகுப்பிலும் பங்குபற்றியுள்ளார். பேர்சிவல் பாதிரியார் ஈழத்திற்கு வந்து பத்தாண்டுகளிற்குள்  தமிழ் மொழியில் நிறைந்த அறிவைப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே அவரால் கையகராதித் தொகுப்புப் பணியிலும், திருட்டாந்த சங்கிரகம் மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடமுடிந்துள்ளது. 

1830-1832 இடைப்பட்ட காலத்தில் கல்கத்தாவில் பணியாற்றிய மூவாண்டு காலம் தவிர்த்து, 1826-1851 வரையில் அவர் ஈழத்தியிலேயே நிலைகொண்டிருந்துள்ளார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்படக் காரணமானவர் பேர்சிவல் பாதிரியார். இக்கல்லூரிகள் தொடர்பான ஆவணங்களில் இவர் பற்றிய குறிப்புகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. 1842இல் யாழ்ப்பாணத்தில் கையகராதி வெளியிடப்பட்டது. அம்முயற்சியில் பேர்சிவலின் பங்களிப்பைப் பற்றிய பதிவுகள் American Board of Commissioners for Foreign Missions மூவாண்டுக் குறிப்பு ஆவணங்களில் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலை (இன்றைய யாழ்.போதனா வைத்தியசாலை) தோன்றுவதற்குக் காரணமான ஆபத்துதவிகள் சங்கத்தின் (Frind-in-need Society) தோற்றம் தொடர்பில் உதயதாரகைப் பத்திரிகைச் செய்தியிலும் பேர்சிவல் குறிப்பிடப்படுகிறார். John H Martyn அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட Notes on Jaffna என்ற நூலிலும் பேர்சிவல் பற்றிய செய்திகள் உள்ளன. இவை யாவும் பீற்றர் பேர்சிவல் 1826-1851 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 ஆண்டுகளில் 22 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணிபுரிந்துள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

யாழ்ப்பாணத்தில் பேர்சிவல் பாதிரியார் மேற்கொண்ட கல்விப்பணிகளைப் பற்றி  ஜெ.இராதாகிருஷ்ணன் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 
“கல்வி மதப்பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டது, உயர்வானது எனப் பெர்சிவல் கருதினார். இதனால் தமது சபையினருடன் ஏற்பட்ட உராய்வில் 1851இல் அச்சபையுடனான உறவை முறித்துக்கொண்டு இலண்டன் சென்றுவிட்டார். எனினும் இவர் யாழ்ப்பாணத்தில் செய்த கல்விப்பணி தலைமுறை கடந்தும் பயன்தந்தது. 19ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை இலக்கிய நிலையாலும், சமூக நிலையாலும் மேம்படுத்தியது. விடுதலைக்குப் பிந்தைய சுதந்திர இலங்கையில்(1948) சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் பெரும்பான்மையான சிங்களவர்களைவிட விரிவான கல்வியறிவும், பல்வேறு அரசு உயர்பதவிகளில் இருக்கவும் செய்தது. இந்நிலைப்பாட்டிற்கு, மேற்படி கிருத்துவ நிறுவனங்களின் பங்களிப்பும் டாக்டர் பெர்சிவலின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”  (பக்கம் - 152)  
“மதம் பரப்புவதற்காக வந்து, இந்திய-தமிழ் இலக்கியங்களில், பண்பாட்டில் தங்களைத் தொலைத்த பல்வேறு ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கும் டாக்டர் பீட்டர் பெர்சிவல், பல நிலைகளில் தமிழியலில் தனது இருப்பை ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். அவற்றில் அறிந்தோ அறியாமலோ அவர் செய்த நன்மைகளில் குறிப்பிடத்தக்கது, ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆகியோரின் தமிழக வருகைக்குக் காரணமாக இருந்தமை. அவர்களிருவரின் ஆரம்பகால ஆளுமை உருவாக்கத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. ஈழ அறிஞர்களின் மீதான மதிப்பு தமிழகத்தில் இவர் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டது. 
பிற்காலத்தில் மேற்படி இருவரின் பதிப்புப் பணிகளுக்கும், ஆறுமுகநாவலரின் சமயப்பரப்புரைக்கும் பெர்சிவலே ஒருவகையில் காரணமாக அமைந்துள்ளார்.”
(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு. பக்கம் - 159, 160) 

பேர்சிவல் பாதிரியாரின் கல்விப்பணிகளால் நிரந்தர நன்மைகளைப் பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தவர்களாவர். நாம் அவரது வழியில் தமிழியலுக்கு பணியாற்றவேண்டிய பாத்தியதையுள்ளவர்களாக இருக்கிறோம்.

1854 தொடக்கம் 1882இல் இறக்கும் வரை பீற்றர் பேர்சிவல் தமிழ்நாட்டில் நிரந்தரமாகவே  வாழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் இவரே. மாநிலக்கல்லூரியின் கீழைத்தேய மொழியியல் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அன்றைய சென்னை மாகாண பொதுக்கல்வித்துறையின் ஆலோசகராகப் பணியாற்றுகையில்  பொதுக்கல்வித்துறைக்கு பாடத்திட்டங்கள், வரைபடங்கள் தயாரித்துள்ளார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் தமிழ்-ஆங்கில, ஆங்கில-தமிழ் அகராதிகளையும் உருவாக்கியவர். சதுரகராதி 1860ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.  தினவர்த்தமானியின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவ்வாறு பல்வேறு நிலைகளில் அவர் புரிந்த பணிகளைப் பற்றிய ஆவணப் பதிவுகள் உள்ளன. 

திருட்டாந்த சங்கிரகம் தொகுத்தல் பணியை பீற்றர் பேர்சிவல் ஈழத்தில் வாழ்ந்தபோதே நிறைவேற்றினார். இதில் காணப்படும் பழமொழிகளில் பெரும்பான்மையானவை ஈழத்தில் வழக்கில் இருந்தவை என்று எடுத்துக்கொள்ளலாம். 1870 பழமொழிகளுடன் வெளியிடப்பட்டஇந்த முதற் பதிப்பானது அதன் பின்னர் மீளவும் அதேவடிவில் அச்சில் கொண்டுவரப்படவில்லை. 

1851இல் ஈழத்தில் இருந்து இலண்டன் திரும்பிய பேர்சிவல் பாதிரியார் 1854இல் தமிழகம் சென்று தனது மறைதிருப்பணியைத் தொடர்ந்துள்ளார். சென்னையில் 1855இல் ஆரம்பிக்கப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையின் ஆசிரியர்ப்பணி, மறைதிருப்பணி என்பனவற்றோடு பழமொழிகளைத் திரட்டும் வேலையை மீண்டும் தொடர்ந்துள்ளார். தினவர்த்தமானி பத்திரிகை அறிவிப்பினூடாக பொதுமக்களிடம் இருந்து பழமொழிகளைப் பெற்றுக்கொண்டார்.

‘‘Tamil Proverbs with their English Translation” என்ற ஆங்கிலத் தலைப்புடன்  தமிழ்ப் பழமொழித் தொகுப்பு பேர்சிவல் பாதிரியாரால் தினவர்த்தமானி வெளியீடாக 1874இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 6156 பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. 1843 பதிப்பிற்கும் 1874 பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகள் இதுவரையில் எந்தவொரு ஆய்வாளராலும் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. 

பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றிருந்த குறைபாடுகள், விடுபடல்கள் பற்றிய தகவல்களை அவர் முன்னுரையில் (1874) சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கில விளக்கம் சிலவிடங்களில் மூலத்தின் உண்மைக்கருக்களிற்கு மிகவும் நெருங்கி வரவில்லையென்பதை அவர் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். பழமொழிகளைப் போன்றே தோற்றம் தரும் நீதிவாசகங்கள், உவமைகள், திருக்குறளின் பகுதிகள், விடுகதைகள், வழக்காறுகள் இன்னபிறவற்றையும் அவர் பழமொழிகளாகக் கருதித் தொகுப்பில் இணைத்துள்ளார். 1850களில் நிலவிய அறிவார்ந்த நிலையை(intellectual level) எண்ணிப் பார்க்கும்போது, இதனை ஒரு குறையாக இன்று நாம் சொல்லமுடியாது, இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்திப் பாதுகாத்தமைக்கு பேர்சிவல் பாதிரியாருக்கு நாம் நன்றி கூறவேண்டும். 

பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்தம் ஐரோப்பியர் தமிழ்ப்பணி (2003, சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற நூலில் பீற்றர் பேர்சிவல் கூறியவற்றின் நீட்சியாக அமையும் மேலதிக விளக்கங்களைத் தந்துள்ளார். சி.இளங்கோவின் பழமொழித் தொகுப்புகள் 1842-2000 என்ற நூலும்(2003, பல்கலைப் பதிப்பகம்), ஜெ.இராதாகிருஷ்ணனின் டாக்டர் பீட்டர் பெர்சிவல் என்ற தலைப்பிலான கட்டுரையும்(2012, காஞ்சி:ஐரோப்பிய அமெரிக்கத் தமிழியல் அறிஞர்கள், பரிசல் வெளியீடு) எமது கவனிப்பிற்குரியவை. இம்மூன்று ஆய்வாளர்களும் கூறியவற்றை மீளவும் கூறுவதைத் தவிர்த்து அவர்கள் மூவராலும் பேசப்படாதனவற்றையும் அவர்களுடைய தவறுகளையுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘‘Almost immediatly after my arrival in this country in 1826...”  என்று பேர்சிவல் பாதிரியார் 1874இல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் கூறுவதை, பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரமும்(2003, பக்கம் 88), சி.இளங்கோவும்(2003, பக்கம் 31) மேற்கோள் காட்டியுள்ளனர். அம்மேற்கோள் தொடரை ‘‘பேர்சிவல் பாதிரியார் 1826இல் சென்னை வந்தடைந்தார்.” என இருவரும் பொருள் கொள்கிறார்கள். ஆனால் பீற்றர் பேர்சிவல் ‘‘this country” எனக் குறிப்பது இலங்கையையே ஆகும். 1874இல், பிரிட்டிஷ் இந்தியாவின் பாகமாகவே இலங்கையும் கருதப்பட்டது. இதனை உணராதவர்களாய் இவர்கள் தவறாகப் பொருள்கொண்டனர். 

மேலும், பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003) அவர்கள் 1843இல் வெளியான முதற்பதிப்பைப் பார்வையிடவில்லை என்றே நாம் கருதுகிறோம், 1874இல் வெளியான இரண்டாவது பதிப்பைத்தான் அவர் பார்வையிட்டுள்ளார். ஏனெனில் 1874 பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் குறிப்பிடும் விடயங்களையே அச்சொட்டாக மீளவும் குறிப்பிடுகிறார். 1843 பதிப்பில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் 1870, ஆனால் இரண்டாம் பதிப்பு முன்னுரையில் பேர்சிவல் பாதிரியார் ‘‘nearly nineteen hundred”  என்றே குறிப்பிடுகிறார், இதனைப்  பேராசிரியர் கா.மீனாட்சிசுந்தரம்(2003, பக். 88) ‘‘... அவர் 1900 பழமொழிகளைத் திரட்டி...” என்று கூறுகிறார்.

அடுத்ததாக மேற்கூறிய மூவரும் பேர்சிவல் பாதிரியார் அவர்கள் தமிழ்ப் பழமொழிகளை அகரவரிசையில்(நெடுங்கணக்கு) தந்துள்ளார் என்று மட்டுமே சொல்கிறார்கள், ஆனால் அகரவரிசையின் தன்மையை இவர்கள் நுணுகிக் கவனிக்கவில்லை. 1843இல் வெளியான பதிப்பில் பழமொழிகளின் முதல் எழுத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க பின்னிணைப்பு - 2C, 2D), 1874இல் வெளியான இரண்டாம் பதிப்பில் பழமொழியின் முதற்சொல்லின் அனைத்து எழுத்துகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு அகரவரிசைப்படுத்த முயன்றுள்ளார் (பார்க்க பின்னிணைப்பு - 3C, 3D).  ஆனாலும் பல இடங்களில் வரிசைப்படுத்தலில் தவறுகள் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக உள்ளது. 

மேனாட்டவர்களாற் தொகுக்கப்பட்ட தமிழ்ப் பழமொழித்தொகுப்புகள் மூன்றை ஒப்பிட்டு, அவற்றின் பரிணாமவளர்ச்சியைக் காட்டும் அட்டவணை ஒன்றை ஆய்வாளர் சி.இளங்கோ தனது நூலின் 50ஆம் பக்கத்தில் தந்துள்ளார். இதில் பேர்சிவல் பாதிரியாரின் 1843பதிப்பில் இருமுறை வந்த பழமொழிகள் எதுவும் இல்லை என்பதாக அவரது அட்டவணை சொல்கிறது. ஆனால் உண்மையில் பேர்சிவல் பாதிரியார்  ‘‘ஏதாகுதல் பேசினால் அகப்பைச் சூனியம் வைப்பேன்.(325, 409)”, ‘‘குருடனுக்கு வேண்டியது கண்.(676, 713)” ஆகிய இரண்டு பழமொழிகளைத் தனது 1843பதிப்பில் இரு இடங்களில் இணைத்துள்ளார். ஆய்வாளர் சி.இளங்கோ அவர்களினால் இதனைக் கண்டுபிடிக்கமுடியாமற் போனமைக்குக் காரணம் அவர் அகரவரிசைப்படுத்தலை நுணுகி ஆராயாது விட்டமையே. இவ்விரு பழமொழிகளும் அருகருகாக வரிசைப்படுத்தப்படாமல் வெவ்வேறு பக்கங்களில் இடம்பெற்றமையினால் சி.இளங்கோவின் பறவைப் பார்வைக்கு அகப்படவில்லை.  

மேலும் பேர்சிவல் பாதிரியார் பயன்படுத்திய அகரவரிசை என்பது, முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதியில் காணப்படும், வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெஸ்கி அடிகளார் என்ற மேனாட்டவரால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழகரவரிசை. இது உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்றவாறு உள்ள ஒரு வரிசைப்படுத்தல். இது தமிழ் மொழியின் மரபான அகரவரிசையல்ல, எனவே பேர்சிவல் பாதிரியாரால் 1843இல் யாழ்ப்பாணத்திலும், 1874இல் சென்னையிலும் வெளியிடப்பட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டையும் ஒன்றிணைத்து, மரபார்ந்த தமிழகரவரிசைப்படுத்தலுடன் (பார்க்க - தமிழ் அகரவரிசை : மரபும் தவறுகளும். பக்கம் XXIX) நாம் இப்பதிப்பினை உருவாக்கியுள்ளோம்.  

இவ்விடத்தில் பேர்சிவல் பாதிரியார் தொகுத்துப் பதிப்பித்தவற்றை, பிறிதானதொரு அகரவரிசைப்படுத்தலுடன் மீளவும் பதிப்பித்தல் மரபுமீறல் ஆகாதோ என்றும், ஏன் இரண்டு பதிப்புகளையும் ஒன்றிணைக்கவேண்டும் எனும் கேள்வியும் சிலருக்குத் தோன்றலாம். 

இதற்கான விடை - நோக்குநூல்கள் பல வகைப்படும். அகராதிகள், ஆய்வடங்கல்கள், கலைக்களஞ்சியங்கள், நூற்றொகைகள், தொகுப்புகள் ஆகியன நோக்குநூல்களில் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்நோக்குநூல்களில் தரவுகள் பொருண்மையின் அடிப்படையில், காலவரிசையில், எண்வரிசையில் அல்லது அகரவரிசையில் அடுக்கப்படும். ஏன் இவ்வாறு அடுக்கப்படுகின்றன என்பதற்குக் காரணம், நோக்குநூல்களில் அடுத்தடுத்துக் காணப்படும் தரவுகள் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. 

நோக்குநூலான பழமொழித் தொகுப்பில், பழமொழிகளை அகரவரிசையில் அமைத்துத் தந்துள்ளார் பேர்சிவல் பாதிரியார். இது பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்பட்டதன்று. நூலில் அடுத்தடுத்துக் காணப்படும் பழமொழிகளும் ஒவ்வொன்றும் தமக்குள் நேரடித் தொடர்புகளற்றவை. இவற்றை மரபார்ந்த தமிழகரவரிசையில் அடுக்கித் தருவதில் எந்தவித பொருள் இழப்பும் ஏற்படப்போவதில்லை.

ஒருவரால் சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்ட தரவுகள் வேறொருவரால் பிறிதொரு ஒழுங்கில் வரிசைப்படுத்தியமைக்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது தமிழ்-தமிழ் அகராதியான சதுரகராதி ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் பதிப்பிக்கப்பட்டபோது,  ஓலைச்சுவடியில் தொகுக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து முன்னேற்றங்கண்டு இன்று அச்சில் கிடைக்கும் நிலைக்கு வந்துள்ளது. அச்சில் வெளியிட்ட பதிப்பாசிரியர்கள் தங்களுடைய தமிழ் அறிவின் துணைகொண்டு சதுரகராதியின் அச்சுப்பதிப்பில்  மேம்படுத்தலைச் செய்துள்ளார்கள். இதனைத் தமிழ் லெக்சிகன் முன்னுரையில் (1936) எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள்
‘‘In these editions, the several meanings of a word are arranged in alphabetical order; but the manuscripts do not support this arrangement.” (பக்கம் XXXVII) 

என்று பதிவு செய்துள்ளார். தமிழ் அகராதிக்கலை(1965) என்னும் நூலில் பேராசிரியர் சுந்தரசண்முகனார்
‘‘ஆசிரியரால் ஒரு சொல்லுக்குரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.” (பக்கம் 379) 

என்று பதிவு செய்துள்ளார்.சதுரகராதியின் ஓலைச்சுவடிப் பதிப்பு, அச்சுப் பதிப்பு ஆகியவற்றில் இருந்து தாரம், வரி என்ற இரண்டு சொற்களையும் அவற்றிற்கான பொருள்விளக்கச் சொற்களையும் எடுத்துக்காட்டாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சுந்தரசண்முகனார் ஆகிய இருவரும் தந்துள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் தமிழியல் ஆய்விதழின் 45வது இதழில் (June 1994) தமிழ் அகராதிகளின் அகர வரிசையும் அமைப்பும் - முதல் மூன்று ஒரு மொழி அகராதிகள் என்ற தலைப்பில் முத்துசண்முகன் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில்
‘‘இதனால் அடிகளார் தொகுத்த அகராதியின் உண்மை வடிவினைக் காண இயலாமற்போயிற்று” 

என்று ஆதங்கப்படுகிறார். இவ்வாறு ஆதங்கப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை, ஏனெனில் குறைபாடுகள் உள்ள ஒரு பதிப்பைவிட முன்னேற்றமான தவறில்லாத பதிப்பே பெரும்பயன்தரும் ஒன்றாகுமல்லவா.

மேற்கூறப்பட்டவாறு சதுரகராதி அச்சுப் பதிப்பில் பின்பற்றப்பட்டதைப் போன்று இப்பதிப்பில் நாம் மரபார்ந்த தமிழ் அகரவரிசையில் பழமொழிகளை வரிசைப்படுத்தியுள்ளோம். இது எந்தவிதத்திலும் மரபு மீறல் ஆகாது. அகரவரிசைப்படுத்தலில் பேர்சிவல் பாதிரியாரின் முதற் பதிப்பைவிட இரண்டாம் பதிப்பு முன்னேற்றமுடையது, அதுபோன்று இப்பதிப்பு 1874 பதிப்பைவிட முன்னேற்றமுடையது.

பேர்சிவல் பாதிரியாரின் பதிப்புகளில் பழமொழி ஒவ்வொன்றிற்கும்  வழங்கப்பட்ட எண்ணும், அப்பழமொழி எந்தப் பக்கத்தில் இடம்பெற்றதென்பதும், பதிப்பாண்டும் இப்பதிப்பில் பகர அடைப்பினுள் தரப்பட்டுள்ளது. பேர்சிவல் பாதிரியாரின் பதிப்பு உண்மை வடிவினைக் காண விரும்புவோர், பகர அடைப்பினுள் குறிப்பிடப்படும் எண்களின் அடிப்படையில் பழமொழிகளை வரிசையாக அடுக்குவதன்மூலம் கண்டடையலாம். 1843பதிப்பில் இருமுறை இடம்பெற்ற பழமொழிகள் இரண்டு. 1333, 1536 ஆகிய இரு எண்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை, 637 என்ற எண் இரண்டுமுறை இடம்பெற்றுள்ளது, இவ்வகையில் 1843 பதிப்பில் இடம்பெற்ற பழமொழிகள் 1870 ஆகும். 

அடுத்து,  இரண்டு பதிப்புகளையும் ஏன் ஒன்றிணைத்தோம் என்பதற்கான விளக்கம். ஈழமும் தமிழகமும் கடலாற் பிரிக்கப்பட்டிருக்கும் இரு தமிழ் நிலங்கள். தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு வழக்காறுகளும், உச்சரிப்புகளும் காணப்படுகின்றன. பேர்சிவல் பாதிரியாரின் 1843 பதிப்பானது யாழ்ப்பாணத்துப் பதிப்பாகவும், 1874 பதிப்பானது தமிழகத்துப் பதிப்பாகவும், அந்நிலங்களின் முதற்பதிப்புகளாகவும் இருப்பதனால் இரு பதிப்புகளையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தமிழ்நிலங்களிலும் நிலவிய வழக்காறுகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிரவும் முதற்பதிப்பில் தரப்பட்டிருந்த 1870 பழமொழிகளில் இருந்து 1765 பழமொழிகளுக்கு இரண்டாம் பதிப்பில் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார் பேர்சிவல் பாதிரியார், இதனால் இருவேறுவிதமான மொழிபெயர்ப்பையும் ஓரிடமாகப் பார்க்கலாம். 

இப்புதிய பதிப்பை உருவாக்கத் தொடங்கிய காலத்தில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்ற 90 விழுக்காடு பழமொழிகளுக்குப் பேர்சிவல் பாதிரியார் ஏன் மீண்டும் புதிய மொழிபெயர்ப்புகளைச் செய்தார் என்ற விடயம் எமக்குக் குழப்பம் தருவதாகவே இருந்தது. இந்நிலையில் பேர்சிவல் பாதிரியார் தொடர்பில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பதாக அறிந்து அவரைச் சென்னையில் சந்தித்து உரையாடினோம். பேர்சிவல் பாதிரியார் சேகரித்த தமிழ்ப் பழமொழிகளை ஓலைச்சுவடியில் பதிந்து வைத்திருந்ததாகவும், அவ்வோலைச் சுவடியை மதுரை இறையியல் கல்லூரியின் ஆவணக்காப்பகத்தில் இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவர்மூலம் அறிந்துகொண்டோம். யாழ்ப்பாணத்தில் இருந்து இலண்டன் சென்று தமிழகம் திரும்பிய பேர்சிவல் பாதிரியாரிடம் 1843இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட திருட்டாந்த சங்கிரகம் புத்தக வடிவில் இருந்திருக்கவில்லைப் போலும், தமிழ் ஓலைச் சுவடியையே பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார். இதனாற்றான் அவரால் 1874பதிப்பு முன்னுரையில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் இடம் பெற்றிருந்த பழமொழிகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்லமுடியவில்லை, புதிய ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்யவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது.  

பேர்சிவல் பாதிரியார் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே தந்துள்ளார், ஆனால் சென்னைப் பதிப்பில் பழமொழிகளுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புடன் மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தருகிறார். 1874 பதிப்பில் உள்ள 6156 பழமொழிகளில் இருந்து 412 பழமொழிகளுக்கு மேலதிக விளக்கங்களையும், தொடர்புடைய நிகழ்வுகளையும் தந்துள்ளார், இதில் 232 பழமொழிகள் யாழ்ப்பாணத்துப் பதிப்பில் உள்ளவை. ஈழத்தில் அவர் முதன்முதலாக இறைபணி தொடங்கிய இடம் திருகோணமலை என்பது 1072ஆம் இலக்கப் பழமொழிக்குத் தரும் கூடுதல் விளக்கத்தில் உள்ளது.
பேர்சிவல் பாதிரியாரினால் 1874இல் வெளியிடப்பட்ட பதிப்பு இதுவரையில் 6 தடவைகள் இந்தியாவில் மீளவும் அச்சில் கொண்டுவரப்பட்டுள்ள விபரத்தைக் கீழே தரப்பட்ட அட்டவணை மூலம் அறிந்துகொள்ளலாம்.

1. 1877  Tamil Proverbs with their English Translation. Higginbotham and Co, Madras.
2. 1996 Tamil Proverbs with their English Translation.(AES First Reprint) Asian Educational Services, New Delhi.
3. 2001 Tamil Proverbs with their English Translation.(AES Second Reprint) Asian Educational Services, New Delhi.
4. 2002 Tamil Proverbs with their English Translation.(AES Third Reprint) Asian Educational Services, New Delhi.
5. 2010 தமிழ்ப் பழமொழிகள் வசந்தா பதிப்பகம், சென்னை.
6. (2019) Tamil Proverbs with their English Translation. The Asian Publications,Royapettah, Chennai.

மேற்காட்டப்பட்டுள்ள பதிப்புகளில், யாழ்ப்பாணத்துப் பதிப்பில் காணப்பட்ட வடிவத்திலான பழமொழிகள் இடம்பெறவில்லை. ஓர் எடுத்துக்காட்டினை மட்டும் பதச்சோறாக இங்கு குறிப்பிடுவோம்,

சங்கு ஆயிரம் கொண்டு காசிக்கிப் போனாலும் தன் பாவம் தன்னோடே.
Though one carries a thousand conchs to Benares, his sin sticks to him. 
[1874 Edition - Number:3057 / Page:287]
சங்காயிரங்கொண்டு வங்காளம்போனாலுந் தன்பாவந் தன்னோடே.
Though one freights his vessel with a thousand Chanks and sails to Bengal his own crimes will accompany him.
[1843 Edition - Number:827 / Page:116]

இது நேரடிப்பொருள் தரும் ஒரு பழமொழி. யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள ‘வங்காளம்’ என்பது சென்னைப் பதிப்பில் ‘காசி’என்பதாக மாறுகிறது. ‘வங்காளம்’ ஏன் ‘காசி’யாக மாறியதென்பதற்குப் பின்னால் சுவைமிகு சமூக வரலாறு ஒன்று உள்ளது.

உதயதாரகைப் பத்திரிகையில் 1841ம் ஆண்டு வெளியான புதினச் செய்திகளைக் கொண்டு இதனை விளக்கலாம். 

1841ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வெளியான உதயதாரகையில்
“காரதீவிலிருந்து கற்பிட்டிக்குப் போகவெண்ணின பயணக்காரர் மூன்றுபேரும் தவால்காரனுந் தோணி ஏறிப்போகையிலே காற்று எதிர்த்தடிக்க அந்த நாலுபேர்களுந் தொணியைப் பலனாகப் பிடித்திருந்தும் காற்றில் தோணி உலைவுகொண்டு அங்குமிங்கும் போகத் திரை எழும்பத் தவாற்காரன் கைவிட்டமிழ்ந்திறந்தான்.” 

என்ற புதினச் செய்தி பிரசுரமாகியுள்ளது.  அன்றைய நாட்களில் நீண்ட தூரப் பயணம் என்பது கடற்பயணம் ஆகும் என்பதை இச்செய்தியின் மூலம் நாம் ஊகிக்கலாம். இலங்கையின் கிழக்குக்கரைக் காரைதீவில் இருந்து மேற்குக்கரைக் கற்பிட்டிக்குச் செல்வதற்கான பிரயாண வழியென்பதே கடல் மார்க்கமாகவே இருந்துள்ளபோது, இந்தியாவில் உள்ள காசிக்குப் போவதென்பதும் கடற்பயணமாகவே இருந்திருக்கும். காசிக்கு அண்மித்ததான கப்பல் வழியென்பது வங்காள தேசத்தினூடகவே அமையும்.
“பருத்தித்துறைக்கு அருகான வல்லுவட்டித்துறையிற் செய்யப்பட்டும், சங்கேற்றிக்கொண்டு வங்காளத்திற்கு முதற் பயணம் போனதும், (௨௱௫௰) தொன் (Ton) பாரங்கொண்டதுமான படவொன்று சிறிதுநாட்களுக்குமுன் அடித்த புசலினாற் சென்னபட்டணத்திற் செதப்பட்டுப்போயிற்று.” 

ஈழத்தில் இருந்து வங்காளத்திற்கு கப்பல் மூலம் சங்கு வாணிபம் செய்யப்படுகிற ஒரு நிலையும் இருந்துள்ளதை 1841ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி உதயதாரகையில் வெளியான இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இவ்விரு செய்திகளினூடாக யாழ்ப்பாணப் பதிப்பில் உள்ள மேற்குறித்த பழமொழியில் ‘வங்காளம்’ என்ற சொல் இடம்பெற்றது இயல்பானதென அறிந்துகொள்ளலாம். 

முதலிரு பதிப்புகளிலும் இடம்பெற்றவாறே பழமொழிகள் இப்பதிப்பிலும் இடம்பெறுகின்றன, அதாவது முதலிரு பதிப்புகளிலும் காணப்படுகிற தவறுகள் எதையும் திருத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. இதனை நாம் ஒரு ஆவணப் பதிப்பாகவே செய்துள்ளோம், ஆய்வுப் பதிப்பல்ல. 

பேர்சிவல் பாதிரியார் பழமொழிகளைத் தொகுத்தது வெளியிட்டது போன்று, ஈழத்தவர்கள் சிலரும் பிற்காலத்தில் பழமொழி நூல்களை வெளியிட்டுள்ளார்கள் என்ற செய்தியை சி.இளங்கோ தனது நூலில் பதிவு செய்துள்ளார். அவ்வாறு குறிப்பிடப்படும் வெளியீடுகள் பின்வருமாறு, 
  1. 1914 - பழமொழிப் போதனை - சி.ஆர்.சாஸ்திரி (பாடல் வடிவில்)
  2. 1916 - பழமொழித் தீபிகை - நாவலர் அச்சுக்கூடம் - பருத்தித்துறை வே.ஆ.சிதம்பரப்பிள்ளை (160 பழமொழிகளுக்கு விளக்கம்)
  3. 1932 - விவசாயம் பற்றிய பழமொழிகள் - சபாரத்தினசிங்கம்
தமிழில் வெளியான மிக முக்கியமான சில அகராதிகளின் தொகுப்பு முயற்சிகளிலும், பதிப்பு முயற்சிகளிலும் தோன்றாத்துணையாக உடன் நின்றவர் பேர்சிவல் பாதிரியார். ஆயினும் அவர் வெளியிட்ட பழமொழித் தொகுப்புகள் இரண்டும் அவரது சுயமுயற்சியின் அறுவடை. எனவே அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழித் தொகுப்புகளை இணைத்து மீளவும் வெளியிடும் நல்வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியடைகிறோம். 

இம்முன்னுரையில் தொகுப்பியல், அகராதியியல் நோக்கில் எமது கருத்துக்கள் சிலவற்றைக் கூறியுள்ளோம். இம் மீள்பதிப்பு முயற்சியில் எம்முடன் இணைந்து பணியாற்றிய நண்பர் அ.சிவஞானசீலன் பழமொழிகள் தொடர்பில் நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி வழங்கியுள்ளார்கள். இத்தொகுப்புப் பணியில் உதவிய நண்பர் முத்தையா வெள்ளையன் அவர்களுக்கும், ஆங்கிலப் பகுதியைச் செவ்வை பார்த்து உதவிய ஹாட்லிக் கல்லூரியின் ஆங்கில ஆசிரியரான ச. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பக்க வடிவமைப்பில் உதவிய கலைச்செல்வன், சிறீனிராஜ், சடகோபன் ஆகியோருக்கும், பேர்சிவல் பாதிரியார் கோட்டோவியத்தினை வரைந்து தந்த சௌந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

விருபா குமரேசன்
13.11.2018

  •  

கையகராதிப் பதிப்பு வேறுபாடுகள்.

     

( நெய்தல் ஆய்வு - ஏப்ரல் 2017 )

A Manual Dictionary of the Tamil Language என்ற ஆங்கிலத் தலைப்புப் பெயருடன்  அமெரிக்க மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகராதியின் தமிழ்ப் பெயர் - பெயரகராதி ஆகும். இது 1842 இல் மானிப்பாயில் உள்ள அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டது. இவ்வகராதியைக் கையகராதி(மனுவல் அகராதி), யாழ்ப்பாண அகராதி, மானிப்பாய் அகராதி, விரிவகராதி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் வழக்கம் உள்ளது.

 

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிகள் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதிகளை உருவாக்கத் தலைப்பட்டனர். இத்தமிழ்-தமிழ் அகராதியானது,  உள்ளூர்த் தமிழ்ப் பண்டிதர்களின் துணையுடன், ஜோசப் நைற் (Joseph Knight) அவர்களால் தொடங்கப்பட்டு, லெவி ஸ்பால்டிங் (Levi Spaulding) அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. வெஸ்லியன் மிஷன் பீட்டர் பேர்சிவல் பாதிரியாரும் இவ்வகராதி உருவாக்கத்திற்கு உதவியுள்ளார். இவ்வகராதிப் பணியில் உள்ளூர்த் தமிழ்ப் புலமையாளர்கள் பலரும் பணியாற்றியுள்ளனர். கொழும்பைச் சேர்ந்த காபிரியேல் திசேரா, உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகர பண்டிதர், இருபாலையைச் சேர்ந்த சேனாதிராய முதலியார், அளவெட்டியைச் சேர்ந்த எவாட்ஸ் கனகசபாபிள்ளை, உடுவிலைச் சேர்ந்த மயில்வாகனன், நவாலியைச் சேர்ந்த  வி.வயிரமுத்துப்பிள்ளை, சுவாமிநாதர் ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். அந்நாட்களில் உடுவில் பெண்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவிகளும் அகராதிச் சொற்களைப் படியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வகராதித் திட்டத்தில் ஈடுபட்ட மிஷனறிகள் எழுதிய ஆரம்பகாலப் பதிவுகள் \ குறிப்புகள் மேற்கூறிய தகவல்களைத் தருவதாக உள்ளன.


கையகராதியின் இரு பிரதிகள்


கையகராதியின் இருவேறு பிரதிகளும் தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் மத்தியில் இன்னமும் பிரித்து உணரப்படாத நிலையே காணப்படுகிறது. உண்மையில் வேறு வேறான இரு பிரதிகள் உள்ளனவென்பதையே தமிழ் ஆய்வாளர்கள் பலரும் அறியவில்லை. 1865 முதல் 2016 வரையில் கையகராதித் தொடர்பில் காணப்படும், பதிவுகளினூடாகப் பிரதி வேறுபாடுகளைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 
தரப்பட்டுள்ள அட்டவணை கையகராதியின் இருவேறு பிரதிகளையும் பார்வையிட்டு உருவாக்கப்பட்டதாகும்.


1865 இல் John Murdoch அவர்கள் தனது Classified Catalogue of  Tamil Printed Books என்ற நூற்றொகையில் 1849 இல் வெளியான களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவில் கையகராதியினை Tamil Dictionary with additions என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மேலதிக சேர்க்கைகள் இல்லாத ஒரு தமிழ் அகராதி அதாவது கையகராதியின் பிறிதொரு பிரதி உள்ளதென்று கருதுவதற்கு இடம் தருவதாகக் கொள்ளலாம்.

1985 இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் ( பக்கம் 11 ) குறிப்பிடும் "இதில் பொருள், தொகை, தொடை அகராதிகள் இல்லை, ஆயினும் பின்னர் அச்சிட்டோர் சதுரகராதியில் உள்ளபடி அவற்றையும் அச்சிட்டுச் சேர்த்து இணைப்பாராயினர்" என்ற சொற்றொடரின் மூலம், கையகராதியில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் உள்ளதைப் பூடகமாக அறிந்துகொள்ளமுடியும். மு.சண்முகம்பிள்ளை அவர்களைத் தவிர வேறெவரும் இந்த அளவிற்குக்கூட இதனை உணரவில்லை, வெளிப்படுத்தவில்லை.


2000 ஆண்டில் வெளியான கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்களின் Col-porul - A History of Tamil Dictionaries என்ற நூலானது 908 பக்கங்களைக் கொண்டது. தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கும் கிடைக்கப்பெறாத மூலங்களை இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களிற் பெற்று நூலில் இணைத்ததன் மூலம் அதனைக் கனதியாக்கியவர். இந்நூலில் மூன்று இடங்களில் காணப்படும் குறிப்புகள், கையகராதியின் பிரதி வேறுபாடுகளைப் பக்க எண்ணிக்கையின் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.


1. page 163 - "The first edition of the dictionary has 58500 entries in three parts : பெயரகராதி ( meanings ), பொருளகராதி ( synonyms ), தொகையாகராதி ( associatives ) in 898 pages."

2. page 166 - " Spaulding also included some personal details which a bearing upon his lexicographical work : This is the short history of the two Dictionaries which have occupied my attention more or less during the last 3 years and 10 months of my missionary life. One purely Tamul of 771 pages & the other English and Tamul of about 860 pages in small type & in a large octavo size. "

3. page 186 - " Thus where finished these two dictionaries ( one purely Tamul 771 pages and about 58500 words ; and the other English words with Tamul definitions of about 860 pages, both in small type in a large octavo size ) in five years and three months"


மேலே காட்டப்பட்ட மூன்று குறிப்புகளில் முதலாவது - நூலாசிரியர் Gregory James அவர்களின் சொற்கள், மற்றைய இரண்டும் கையகராதியை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியைச் சேர்ந்த ஸ்பால்டிங், வின்ஸ்லோ ஆகியோரின் சொற்களாக உள்ளன. இதன்வழி அமெரிக்க மிஷனரிகள் தமிழ் அகராதியெனக் குறிப்பிடுவது 674 பக்கங்களில் உள்ள அகராதி என்ற பகுதியையும், 97 பக்கங்களில் உள்ள அனுபந்த அகராதி என்றபகுதியையும் சேர்த்து உள்ள 771 பக்கங்களில் அமைந்து, அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பெயரகராதியைத்தான்.

மேலும் அமெரிக்க மிஷனரிகள் தாங்கள் உருவாக்கிய தமிழ் அகராதி மூன்று பிரிவுகளைக் கொண்டது என்றவாறான குறிப்புகள் \ பதிவுகள் எதையும் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். கையகராதியின் பக்கங்களுக்கு எண் வழங்கப்பட்டுள்ள ( அகராதி முதல் அனுபந்த அகராதி முடிவு வரைக்கும் தொடர்ச்சியான எண் தமிழில் உள்ளது. ) முறையும் இதனை உறுதி செய்கிறது.


898 பக்கமுள்ள கையகராதியில் அதாவது மேலதிக பிற்சேர்க்கைகளுடன் கூடிய கையகராதியில், பிழை திருத்தத்திற்குப் பின்னரே இரண்டாவது - பொருளகராதி தொடங்குகிறது. அதன் பின்னர் மூன்றாவது - தொகையகராதி இடம்பெறுகிறது. இவ்விரண்டு பிரிவுகளுக்கும் மீண்டும் 1 முதல் பக்க எண் வழங்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. இவ்விரு பிரிவுகளுக்கும் தனித்தனியான பாயிரப் பாடல்களும் உள்ளன.


கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்கள், தமக்குக் கிடைத்த The American Board of Commissioners for Foreign Missions (ABCFM) குறிப்புகளில் காணப்படும் கையகராதி 771 பக்கங்களைக் கொண்டது என்ற தகவலைப் பார்வையிட்டபின்னரே கையகராதி 898 பக்கங்களைக் கொண்டது என்றும், 58500 சொற்களுக்குப் பொருள் கூறும் பதிவுகள் உள்ளனவென்றும் எழுதியுள்ளார்.


கிரகரி ஜேம்ஸ் (Gregory James) அவர்கள், குறித்த ஒரே கையகராதி எவ்வாறு 127 பக்கங்கள் வேறுபாடு கொள்ள முடியும் என்பதை அவதானிக்கவில்லை, ஆராயவில்லை. ஸ்பால்டிங் அவர்களும் பின்னர் ஜோன் மார்டெக் அவர்களும் கையகராதி octavo (8vo) அளவுடையது என்பதைப் பதிவு செய்துள்ளார்கள், ஆனால் கிரகரி ஜேம்ஸ் அவர்கள் கையகராதியின் அளவு தொடர்பில் எதையும் கூறவில்லை.


மேலும் அவர் தனது நூலில் 162வது பக்கத்தில் குறிப்பிடும் "... which had been begun by Knight with the assistance of A.Chandrasekar Panditar of Uduvil, Senathiraya Mudaliyar and Vedagiri Mudaliar,...." என்ற வாசகமானது சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள், கையகராதித் திட்டத்தில் ஆரம்பம் முதலே பங்கெடுத்து, உதவியுள்ளார் என்ற பொருள்படும்படி கூறுவது அபத்தமானதொன்றாகும்.


உண்மையில் அமெரிக்க மிஷனரிகள் உருவாக்கிய 771 பக்கங்கள் கொண்ட, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக அமைத்து, உயிரெழுத்து, ஆய்தவெழுத்து, உயிர்மெய்யெழுத்து, மெய்யெழுத்து என்ற வரிசையில் தலைச்சொற்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அடுக்கப்பட்டு, அதாவது அ..., அஃகல்..., அகக்காழ்...., அகோரம்..., அக்கடி... என்றவாறான வரிசைப்படுத்தல் முறையுடன், அண்ணளவாக 58500 சொற்களுக்குப் பொருள்கூறும் கையகராதி உருவாக்கத்தில், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. அவர் உதவியுடன் கையகராதி உருவாக்கப்படவில்லை.


நிகண்டுகளில் காணப்படும் பகுப்பாக்க முறையின் தொடர்ச்சியாகவே, தமிழின் முதல் அகராதியான சதுரகராதி உருவாக்கப்பட்டிருந்தது. அதில் காணப்பட்ட பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி என்ற நான்கு பிரிவுகள் காரணமாகவே சதுரகராதி என்ற பெயரும் அமைகிறது.


இவ்வாறாகப் பல பிரிவுகளைக்கொண்ட நிகண்டுகள், பின்னர் நான்கு பிரிவுகளுடனான சதுரகராதியின் பயன்பாட்டில் நிறைவு கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்கு, அ முதல் வௌ வரை முற்றிலும் ஒரே தொகுதியாக அமைந்த கையகராதி உவப்பானதாக இருந்திருக்கவில்லை, இதன் காரணமாகவே மேலதிக பிற்சேர்க்கைகள் கையகராதியில் இணைக்கப்படவேண்டிய நிலை வந்துள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு மற்றிரு பிரிவுகளும் பிற்சேர்க்கைகளாக இணைக்கப்பட்டமையும் 1865 இற்குள் நிகழ்ந்துள்ளது. 


இரண்டாவது பொருளகராதி என்பது 70 பக்கங்களுடன் கையகராதியின் மேலதிக பிற்சேர்க்கையாக உள்ளது. இது யாரால் தொகுக்கப்பட்டது என்பது பற்றிய செய்திகள் எங்கும் காணப்படவில்லை.


மூன்றாவதாகத் தொகையகராதி 31 பக்கங்களில் அமைகிறது. இதனை மதுரைக் கல்விச் சங்கத்தைச் சேர்ந்த களத்தூர் வேதகிரி முதலியார் அவர்கள் தொகுத்துள்ளார்கள். ஏற்கனவே நாம் கூறியபடி, 1865 இல் John Murdoch அவர்கள் தனது Classified Catalogue of  Tamil Printed Books என்ற நூற்றொகையில் 1849இல் வெளியான களத்தூர் வேதகிரி முதலியார் அவர்களின் தொகைப்பெயர் விளக்கம் என்ற நூலிற்கான பதிவின் மூலமும், கையகராதியில் இடம் பெற்றுள்ள உடுவை நகர் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை ( Williams Nevins ) அவர்களால் எழுதப்பட்ட இருபத்துநான்குசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் மூலமும்  உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.  


நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் ஆசிரியவிருத்தத்தின் பின்னிரு பாடல்களும், கையகராதி, அச்சடிக்கப்பட்ட பின்னர்தான், அனுபந்தமாக களத்தூர் வேதகிரி முதலியாரின் ஆக்கம் சேர்க்கப்பட்டது என்பதைப் பதிவு செய்கின்றன.

இதில், முரணான விடயமும் ஒன்றுள்ளது. மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியிலும், நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அதே ஆசிரியவிருத்தம் உள்ளது.


இது எவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்பதை ஒருவாறு ஊகித்தறியலாம்.


நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டை அமெரிக்க செமினரியின் மாணவர்களில் ஒருவர், 1838இல் கற்றுத் தேறியவர். வட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் தொகுப்பு வேலைகளில் வின்ஸ்லோ, ஸ்பாடிங்கு, ஹச்சிங்ஸ் ஆகியோர்களுக்கு உதவி செய்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சென்னைவரை சென்று இதில் ஈடுபட்டுள்ளார். வேதகிரி முதலியாரும் 1841இல், அமெரிக்க மிஷன் வெளியிட்ட உதயதாரகை இதழில் ஆக்கங்களை எழுதிய தமிழகர்களில் ஒருவர். இவ்வாறாக அமெரிக்க மிஷனரிகளுடன் நெருக்கத்தைப் பேணியவர்களாக இவர்கள் இருவரும் இருந்துள்ளார்கள். இதன் காரணமாக வேதகிரி முதலியார் அவர்களால் தொகுக்கப்பட்ட தொகையகராதி, கையகராதியுடன் அனுபந்தமாக இணைக்கபடவுள்ளதை முன் அறிந்தவராக நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே இவ்விடயம் ஆசிரியவிருத்தத்தில் இடம்பெற்றிருக்கலாம் என்று கொள்ள இடம் உள்ளது. இஃது எனது அனுமானம் மட்டுமே, தவறாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று அறுதியாகக் கூறவில்லை.


1954இல் தூரன் அவர்களாற் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் எழுதிய அகராதி என்ற தலைப்பிலான கட்டுரையிலும், பாவலர் சரித்திர தீபகத்தினை ஆராய்சிக் குறிப்புகளுடன் 1975இல் பொன் பூலோகசிங்கம் அவர்கள் பதிப்பித்தபோது, ஆதிமூலமுதலியார் பற்றிய செய்திக்கு எழுதிய குறிப்பிலும், சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தம் எழுதினார் என்ற பதிவுகள் உண்டு. 1985இல் மு.சண்முகம்பிள்ளை அவர்கள் தனது தமிழ்-தமிழ் அகரமுதலியின் முன்னுரையில் இவ்வனுபந்த அகராதியில் ஏறத்தாள 6500 சொற்கள் காணப்படுகின்றன என்று மேலதிக தகவலைத் தந்துள்ளார்.


பெயர், பொருள், தொகை என மூன்று பிரிவுகள் கொண்ட அகராதியென்றவர்கள்


· 1865, John Murdoch, Classified Catalogue of  Tamil Printed Books  (Page 209) 
          Part I - பெயரகராதி 794pp,  
          Part II - பொருளகராதி 70pp
          Part IIIதொகையகராதி 31pp

· 1978, A.Dhamotharan, Tamil Dictionaries A Bibliography (Page 55) Three Parts, viz, 
        a) peyarakarati (meanings) - 771pp, 
        b) porulakarati (synonyms) - 70pp
        c) tokaiyakarati (group-names) - 31pp

· 2000, Gregory James, Col-porul - A History of Tamil Dictionaries (page 163)

· 2004 December, எச்.சித்திரபுத்திரன் & கு.ர.சரளா, Journal of Tamil Studies, தமிழ் ஒரு மொழி அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு மாற்றமும். (Page 57)

· 2014 ராஹிலா ஷியாத் KalamInternational Journal of Faculty of Arts & Culture,  ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள் ஒரு பார்வை (Page 54)

· 2016, முனைவர் கு.ர.சரளா, தமிழ் அகராதித் தொகுப்பு நெறிமுறைகள் (குறுந்திட்ட ஆய்வு) (Page 41)



மேற்கூறப்பட்டவை யாவும், கையகராதி - மூன்று பிரிவுகளைக் கொண்டது  என்று நேரடியாக எழுதப்பட்டவையாகும். கையகராதியினை உருவாக்கிய அமெரிக்க மிஷனரியினர் வழங்கிய தமிழ்ப் பெயரான பெயரகராதி என்பதைக் கையகராதியின் ஒரு உட்பிரிவு என்பதாக ஆய்வாளர்கள் கட்டமைத்துக் கூறுவது விநோதமானது.


பெயரகராதி என ஒரு பிரிவு கொண்ட அகராதியென்றவர்கள்


· 1901, நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப்பேரகராதி ( Page 13, 14 )

· 1909, L.D.Barnett & G.U.Pope, A Catalogue of the Tamil Books in the library of The British Museum ( Page 84 ), பெயரகராதி pp 771, xxii


நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் தனது தமிழ்ப் பேரகராதியின் இரண்டாம் பதிப்பின் பதிப்புரையில், 
என்று கூறும் மேற்கண்ட சொற்பதங்கள், கையாகராதியில் சொல், பொருள், தொகை போன்ற பிரிவுகள் இல்லையென்பதைக் கூறுவதாக உள்ளன.

ஆக, ஆய்வாளர்கள், கையகராதியின் குறித்த இரண்டு பிரதிகளையும் பார்வையிட்டால் மட்டுமே, இரு வேறுவேறான பிரதிகள் உள்ளனவென்பதை அறிந்துகொள்ள முடியும் என்ற நிலை இல்லை.


காலத்தால் முந்திய தமிழ் நூற்பட்டியலான 1865 - ஜோன் மர்டக் நூற்றொகையையும், 1909 - எல்.டி.பர்னாட், ஜி.யு,போப் அவர்களின் பிருத்தானிய அருங்காட்சியகத் தமிழ் நூற்பட்டியல் என்ற இரு நூற்றொகைகளைப் பார்வையிடும் அனைவருமே கையகராதியின் இருவேறு பிரதிகள் உள்ளன என்பதைத் தெளிவாக உணர முடியும். 1865 - 2016 இடைப்பட்ட 151 ஆண்டுகளில், இன்றுவரை, இப்பிரதிகள் இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை எந்தவொரு ஆய்வாளரும் ஒப்பிட்டு எழுதவில்லை.

நான்கு பிரிவுகளைக் கொண்ட அகராதியென்றவர்கள்


· 1965, சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக்கலை (Page 392)

· 1984, தா.வே.வீராசாமி, வாழ்வியற்களஞ்சியம் தொகுதி 1, கட்டுரைத் தலைப்பு - அகராதி (Page 73)

· 2012, புலோலியூர் வேல் நந்தகுமார், ஜீவநதி 2012 கார்த்திகை இதழ், தமிழில் அகராதிகளின் தோற்ற வளர்ச்சியும் ஈழத்தவர்களின் பங்களிப்பும் (Page 169)


மேற்கூறிய மூவரும் கையகராதியின் எந்தவொரு பிரதியையும் நேரடியாகப் பார்வையிடாமல் கட்டுரைகளை வரைந்துள்ளார்கள். சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக்கலை என்ற நூலானது, தமிழ் அகராதியியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் மிகவும் அறிமுகமான ஒரு நூலாகும், இது பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இன்றும் கிடைக்கக்கூடியவாறு சென்னையில், இரண்டு பதிப்பகங்கள் இதனை வெளியிட்டு வருகின்றன. பின்னவர்கள் இருவரும் சுந்தர சண்முகனாரின் தமிழ் அகராதிக்கலையை ஆதாரமாக வைத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்று நம்புவதற்கு இடமுள்ளது.

கையகராதியின் புதிய பதிப்பு - யாழ்ப்பாண அகராதி


2005ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்மண் பதிப்பகம் கையகராதியினை யாழ்ப்பாண அகராதி என்ற தலைப்புடன் வெளியிட்டிருந்தது. புதுப்பொலிவுடன் 163 ஆண்டுகளுக்குப் பின் 2005இல் மீண்டும் வெளிவருகிறது என்ற முன்னட்டை வாசகத்துடன் வெளிவந்துள்ளது. இலங்கையில் சேமமடு பதிப்பகம் இதனை வெளிட்டுள்ளது.


2005இல் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியானது, மேலதிக பிற்சேர்க்கைகள் இல்லாத கையகராதியினை மூல ஆதாரமாகக் கொண்டுள்ளது. இப்புதிய பதிப்பில், 1842 பதிப்பில் காணப்படும் அகராதி என்ற தலைப்பிலான 674 பக்கங்களில் உள்ள பகுதியும், அனுபந்த அகராதி என்ற தலைப்பிலான 97 பக்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதாவது அனுபந்த அகராதி என்ற பகுதியில் காணப்படும் சொற்கள் யாவும், அகரவரிசைப்படி உரிய இடங்களில் சேர்க்கப்பட்டு, அ முதல் ஞொள்ளுதல் வரையிலான சொற்கள், 483 பக்கங்களில் அமைந்த பகுதி 1 இலும், த முதல் - வௌவால் வரையிலான சொற்கள்,  486 பக்கங்களில் அமைந்த பகுதி 2 இலும் அமைந்து, 1/8 தெம்மி அவளவிலான இரண்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. 1842 பதிப்பில், 22 பக்கங்களில் காணப்படும் பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று முனைவர் கி.செயக்குமார் அவர்கள் எழுதியுள்ள குறிப்பு தெரிவிக்கிறது. யாழ்ப்பாண அகராதியில் தலைச்சொற்களைத் தடித்த எழுத்துடனும், தலைச்சொல்லையும் பொருள்விளக்கச் சொற்களையும் சிறு கோடு ( - ) ஒன்றின் மூலம் வேறுபடுத்தியும் தந்துள்ளார்கள்.


புதிய யாழ்ப்பாண அகராதியில், தமிழ் அகராதியியலில் துறைபோகிய நீண்டகாலச் செயற்பாட்டாளராகிய முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களின் அறிமுகவுரையில், "வேதகிரி முதலியார் யாழ்ப்பாண அகராதிக்கு உதவினார்" என்ற வாசகமானது காணப்படுகிறது. இதனை, கிரகரி ஜேம்ஸ் அவர்களின் நூலில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் கையகராதியின் பிரதி வேறுபாடுகளைத் தெரிந்திருக்கவில்லை என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ளலாம். புதிய பதிப்பில் ஓரிரு இடங்களில் அகரவரிசை முறை மாறியுள்ளது என்பதையும் தனது அறிமுகவுரையில் கூறியுள்ளார்.

பொதுவாகத் தமிழ் அகராதித்துறையைச் சேர்ந்த அனைவரும் தமிழ் அகராதிகள் பற்றிக் கூறும் ஒரு சொல்லாடல் "சதுரகராதி மரபு" என்பதாகும். அதாவது நான்கு பிரிவுகளைக்கொண்ட அகராதிகளைச் சதுரகராதி மரபில் வந்த அகராதி எனச் சுட்டுவர். தமிழ் அகராதிகள் யாவற்றையும் இந்த அளவீடு கொண்டு பிரித்துப் பேசும், எழுதும் வழக்கமும் உள்ளது. தற்காலத் தமிழ் அகராதியியலாளர்கள் அனைவருமே, "முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்து அகரவரிசையில் சொற்களுக்குப் பொருள் தரும் அகராதி, 1904இல் வந்த தமிழ்ச் சொல்லகராதி" என்ற கருத்துடன் எழுதி வந்துள்ளதைக் காணலாம். இந்தவகையில், 1937இல் இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன் அவர்கள் வெளியிட்ட மதுரைத் தமிழ்ப் பேரகராதியை, சந்தியா பதிப்பகம் மீண்டும் 2004இல் வெளியிட்டபோது,  முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்கள் வழங்கிய முன்னுரையில், சதுரகராதி மரபில் வந்த இறுதிக் கண்ணி என்று மதுரைத் தமிழ்ப் பேராகராதியைச் சுட்டியுள்ளார். இந்நிலையில், முற்றிலும் ஒரே தொகுதியாய் அமைந்த புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியின் அச்சுக்குத் தயாரான (draft copy) பிரதியைப் பார்வையிட்டவரான முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் இந்த "சதுரகராதி மரபு" என்ற அளவீடு கொண்டு ஏன் அணுகவில்லையென்பது என்னை ஆச்சரியப்படுத்தும் விடயமாகும்.


கையகராதியின் புதிய பதிப்பு வெளிவரும்போது, கடந்தகாலத்தில் கையகராதி பற்றி எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் ஆராய்ந்து, கையகராதியில் காணப்படும் அகராதியியற் கூறுகளை ஆராய்ந்து, தமிழ் அகராதி வரலாற்றில் கையகராதி பெற்றிருந்த பெருமைகளைச் சிதைக்காது, ஒரு கனதியான முன்னுரை எழுதப்பட்டிருக்கவேண்டும், அது நிகழவில்லை. சூ.இன்னாசி அவர்கள் சதுகராதி ஆராய்ச்சி செய்தது போன்று, கையகராதி பற்றி ஆராய்ச்சிகள் செய்யப்படாமை கவலை தருவதாக அமைகிறது.


பதிப்புரையில் யாழ்ப்பாண அகராதியை வெளியிட்டவர்கள் "புதிய பொலிவோடும் மிகச்சிறந்த கட்டமைப்போடும் வெளிவருகிறது" என்று கூறினாலும், அவையாவும் யாழ்ப்பாண அகராதியை விற்பதற்கான விளம்பர வாசகமே.


உண்மையில் 2005இல் வெளியான யாழ்ப்பாண அகராதியில், அகராதியியற் கூறுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்று ஆணித்தரமாகக் கூறலாம். துறைபோகிய அகராதியியற் செயற்பாட்டாளர் எவரும் புதிய பதிப்பின் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கவில்லை.  புத்தக வடிவமைப்பாளர்களும், மெய்ப்புத் திருத்துநர்களும் இணைந்து உருவாக்கிய பிரதியாகவே இது அமைந்துள்ளது. 1842இல் வெளியான கையகராதியில் இடம்பெற்ற அகராதியியல் உத்திகள் எவை என்பது இவர்களுக்குத் தெரியாத காரணத்தினால் இது இடம்பெற்றுள்ளது.


அறிமுக உரையில் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் குறிப்பிடும் ஓரிரு இடங்களில் அகரவரிசை எவ்வாறு மாறியுள்ளது என்பதை நோக்குவோம்.


· புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில், முதல் பக்கத்தில் அகங்களித்தல் என்னும் தலைச்சொல் இரண்டு தடவைகள் இடம்பெற்று இரண்டு பொருள்விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இது 1842 பதிப்பில் அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 1), அனுபந்த அகராதி என்ற பகுதியில் ஒரு இடத்திலும் (பக்கம் 675) இடம் பெற்றிருந்தது. இதனை அகங்களித்தல் - மனமகிழ்தல், மனமதர்த்தல் என்று தருவதற்குப் பதிலாக இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகத் தந்து, பொருள்விளக்கங்களையும் தனித்தனியாகத் தந்துள்ளார்கள். இவ்வாறு சில இடங்களில் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

· 1842 பதிப்பில் அனுபந்த அகராதி பகுதியில் இடம்பெற்ற சொற்களை உரிய இடங்களில் இணைக்க முற்பட்டபோது, சில இடங்களில் தவறான இடத்தில் இணைத்ததினால் அகரவரிசை மாறி வரும் நிலை காணப்படுகிறது. எடுத்துக்காட்டு - அதிலோகம், அதிவசனம் ஆகிய இரண்டு தலைச்சொற்கள், இவ்விரு சொற்களும் அனுபந்த அகராதியில் பக்கம் 685 இல் இருந்து எடுத்துவரப்பட்டவை. இவ்விரு சொற்களும் புதிய பதிப்பில் பக்கம் 23 இல், அதிரோகம் - அதிர் ஆகிய இரண்டு சொற்களுக்கு இடையில் தவறாக இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.


அடுத்து, கையகராதியின் 1842 பதிப்பில் காணப்பட்ட அகராதியியல் உத்தி  அல்லது சிறப்புத் தன்மை, புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை நோக்குவோம்.


கையகராதியின் 1842 பதிப்பில், குறித்த ஒரு தலைச்சொல்லிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்விளக்கச் சொற்கள் வருமிடங்கள் எல்லாம், பொருள் விளக்கச்சொற்களும் அகரவரிசையில் அடுக்கப்பட்டுத் தரப்பட்டிருந்தன. அகராதிப் பகுதி, அனுபந்த அகராதிப் பகுதி ஆகிய இரண்டு இடங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு இருப்பதைக் காணலாம்.


· அகம் - இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு ( பக்கம் 1 )

· அகம் - ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 675 )


இதனைப் புதிய பதிப்பில்


· அகம் - இடம், உள், தானியம், பள்ளம், பாவம், பூமி, மரப்பொது, மனம், வீடு, ஆன்மா, உபத்திரவம், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், பாம்பு, மலை, வருத்தம் ( பக்கம் 2 )


என்று தந்துள்ளதன்மூலம், 1842இலிருந்து பேணப்பட்டுவந்த கையகராதியின் உத்தி, சிறப்புத்தன்மை சிதைக்கப்பட்டு அதன் பெருமை மழுங்கடிக்கப்படுகிறது.


இது உண்மையில், 


· அகம் - ஆன்மா, இடம், உபத்திரவம், உள், ஏழனுருபு, ஓர் மரம், குணாகுணம், சூரியன், தானியம், பள்ளம், பாம்பு, பாவம், பூமி, மரப்பொது, மலை, மனம், வருத்தம், வீடு


என்ற அகரவரிசையில் அடுக்கப்பட்டிருக்கவேண்டும். துறைபோகிய அகராதியியல் தொடர் செயற்பாட்டாளர் ஒருவர் மேற்பார்வை செய்து, யாழ்ப்பாண அகராதியின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டிருப்பின் இத்தவறுகள் நிகழ்ந்திருக்கா.


1842 பதிப்பில் அகராதி, அனுபந்த அகராதி ஆகிய இரண்டு இடங்களிலும் இடம்பெற்ற தலைச்சொற்கள் அனைத்திலுமே, புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் பொருள்விளக்கச் சொற்கள் அகரவரிசையின்றித் தரப்பட்டுள்ளன.


அடுத்து, 1842 பதிப்பில், 22 பக்கங்களில் காணப்படும் பிழை திருத்தங்கள் இப்பதிப்பில் களையப்பட்டுள்ளன என்று வெளியீட்டாளர்கள் கூறியிருந்தாலும், அது முற்றிலுமாக உணர்ந்து செய்யப்படவில்லை என்பதைப் பின்வரும் எடுக்காட்டுக்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.


1842 பதிப்பின் பிழைதிருத்தம் பக்கத்தின் முகப்பில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை. 



அக்கரவிலக்கணம், அக்கினித்தம்பம், அசுவபரிட்சை, அத்திரபரிட்சை, அதிரிசயம், அலங்காரம், அவத்தைப்பிரயோகம் ஆகிய தலைச்சொற்களுக்குரிய பொருள்விளக்கச் சொற்றொடர் "கலைஞானமறுபத்தினான்கினொன்று" என்று காணப்படும் இடங்களில் பிழை திருத்தப்படவில்லை.

1842 பதிப்பின் பிழைதிருத்தம் பகுதியில் தள்ளல் என்ற ஒரு பிரிவு உள்ளது. இது மேற்படி சொற்களை நீக்கவேண்டும் என்பதைக் கூறுவதாகும். இவ்வாறு தள்ளல் என்பதன் கீழ்த் தரப்பட்டிருக்கும் சொற்கள் யாவும் புதிய பதிப்பு யாழ்ப்பாண அகராதியில் நீக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அது முற்றிலும் நிகழவில்லை, சில  பொருள்விளக்கச்சொற்கள் நீக்கப்பட்டுள்ளன, ஆனால் அது தலைச்சொற்களைத் தள்ளல் என்று சுட்டப்பட்டபோதும், அவை நீக்கப்படவில்லை. அத், அவனூதி, அவையவம், அவையவவுருவகம், அவையவியுருவகம், அழுக்கல், அனியமவுவமை, அனியாயம், அனீதர் போன்ற தலைச்சொற்கள் நீக்கப்படவில்லை. இவ்வாறு பல சொற்கள் நீக்கப்படாமல் உள்ளன.


எடுத்துக்காட்டாக அ வரிசையில் உள்ளவற்றை நாம் பார்வையிட்டபோது இவை தென்பட்டன, இது ஒரு பதச்சோறு மட்டுமே.


தற்காலத்தில் கிடைக்காத பழைய அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிடுவது என்பது நல்லதுதான், ஆனால் அம்முயற்சியானது, கடந்த காலத்தில் குறித்த நூல் கொண்டிருந்த உட்கூறுகளையும், சிறப்புத் தன்மைகளையும் சிதைக்காது, அந்நூலின் கடந்தகாலப் பெருமை காப்பாற்றப்படும் நிலை பேணத்தக்கதாகவே அமையவேண்டும். அதிலும் உரைநடை நூல்களை விட, நோக்குநூல்களைப் புதிய பதிப்பாக வெளியிடும்போது மிக மிகக் கவனத்துடன் செய்தல் வேண்டும். பல முறை மெய்ப்புத் திருத்தங்கள் செய்யப்படல் வேண்டும். இவ்வாறு உணர்ந்து செய்யப்படும் வேலைகளைத் தமிழ்த் தொண்டாகக் கொண்டாடலாம், புகழ்ந்து போற்றலாம். அவ்வாறில்லாமல், அதிக தவறுகளுடன், பிரதியின் கடந்தகாலப் பெருமைகளைச் சிதைத்துச் செய்யப்படுபவை வியாபார நோக்கம் கொண்டவையாகவே கொள்ளப்படும்.


பிற்குறிப்பாகச் சில, மேலே கூறப்பட்டவை யாவும் 1842இல் வெளியான கையகராதி எது என்பது பற்றியே, கையாகராதியில் இருந்து பிற்காலத்தில் கிளைத்தவை பற்றியல்ல அவற்றைத் தனியாக பிறிதொரு இடத்தில் அலசலாம்.


  •  

விஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....

புதிய சொல் : 04 - 2016 Oct-Dec
1. விஞ்ஞானமும் அகராதியும் – பதிப்புகள்
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினால் நடத்தப்படும் இளங்கதிர் ஆய்விதழின் பத்தாவது ஆண்டுமலரில் ( 14.04.1958 ) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரை முதன்முதலாக இடம்பெற்றது. இம்மலரின் ஆசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். அம்மலரின் 145 – 154 பக்கங்களில் இவ்வாராய்ச்சிக் கட்டுரை இடம்பெற்றபோது, அது 27 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் காணப்பட்டது. இதனையே நாம் முதலாவது பதிப்பாக எடுத்துக்கொள்கிறோம். 

ஏப்ரல் 1962 இல், செ.கணேசலிங்கன் அவர்களின் பாரதி புத்தகசாலை வெளியீடு – 1 என்ற அடையாளத்துடனும், சென்னையில் பாரி நிலையத்தின் விற்பனை உரிமையுடனும் சென்னையில் பதிப்பிக்கப்பட்ட ஈழத்து வாழ்வும் வளமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் பதினோராவது கட்டுரையாக 106 - 116 பக்கங்களில் விஞ்ஞானமும் அகராதியும் இடம்பெற்றது. இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் என்பதை நூலின் முன்னுரை பெருமையாகச் சுட்டுகிறது. இந்நூலில் இக்கட்டுரையானது 26 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் உள்ளது. இதனை இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பாகச் சொல்லலாம். 

புதிய சொல்லின் மூன்றாவது இதழ் வரை ( 2016 ஜூலை – செப்டம்பர் ) பத்துத் தடவைகளுக்கு மேல் இவ்விரண்டாம் பதிப்புக் கட்டுரையே பல்வேறு இடங்களில் இடம் பெறுகிறது.

2. இரண்டு பதிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ? 

இளங்கதிரில் வெளியான பதிப்பின்படி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 19வது பந்தியில் உள்ள நான்கு வரிகளூடாக நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதிப்பணியினையும், அதனைத்தொடர்ந்து வரும் 20, 21 ஆகிய இரு பந்திகளிலுள்ள முப்பத்தொரு வரிகளுடாக கு.கதிரவேல்பிள்ளை அவர்களின் அகராதிப்பணியினையும் எழுதியிருந்தார். 


ஈழத்து வாழ்வும் வளமும் நூலில் மேலே படத்தில் நிறமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு குறித்த 19 வது, 20வது பந்திகள் இணைக்கப்படுவதன் மூலம் கு.கதிரவேல்பிள்ளை அவர்களும், அவரது அகராதிப்பணியும் மறைக்கப்படுகிறது, நா.கதிரைவேற்பிள்ளை வட்டுக்கோட்டைச் செமினரியின் மாணாக்கராக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்து அகராதி உருவாக்கியவராகக் காட்டப்படுகிறார். 

3. 54 ஆண்டுகளாகத் தொடரும் பதிப்பு வேறுபாடு

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் ஈழத்து வாழ்வும் வளமும் நூல் வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து குமரன் புத்தக இல்லதினால் 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. மீள் பதிப்புகளுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மீள் பதிப்புக்கான முன்னுரைகளையும் எழுதியுள்ளார். 2016 பதிப்பில் ஈழநாட்டில் விஞ்ஞானமும் அகராதியும் என்ற புதிய  தலைப்புடன்,  உப தலைப்புகளுடன், படங்களுடன் வெளியாகியுள்ளது. 

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கியவராகவும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் தோற்றுவித்த புலமைப் பாரம்பரியமே அவரின் மிகப் பெரிய சாதனையாகவும் பேசப்படும் நிலையில், பேராசிரியர் அவர்களின் மாணவர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ், தனஞ்சயராசசிங்கம் போன்ற எவருடைய பார்வைக்கும் பதிப்பு வேறுபாடு தென்படவில்லையென்பதும், திருத்தப்படவில்லையென்பதும் வியப்பானதாகவே உள்ளது. 

புதிய சொல்லில் எழுதப்பட்ட அறிமுகத்தில் சொல்லப்பட்டது போல் “ இவரிடமிருந்த புறவயமாக விடயங்களை அலசி ஆராய்கின்ற பண்பு இவர் மாணவர்களிடமும் தொடர்ந்தது ” என்பதும், பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் “ பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்” என்பதும் மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. 

ஈழத்து வாழ்வும் வளமும் ( 2001 பதிப்பு ) நூலில் இக்கட்டுரையினை 2006 இல் நான் முதன் முதலாகப் படித்து முடித்தவுடன், என் மனதில் தோன்றிய கேள்வி அகராதி தந்த ஈழத்தவர்களான வைமன் கதிரைவேற்பிள்ளையும், நா.சி.கந்தையா அவர்களும் ஏன் இடம் பெறவில்லை என்பதே, தொடர் தேடலில் கிடைத்தவைகள்தாம் இக்கட்டுரையினை எழுத உதவியவை.

4. பாடத்திட்டத்தில் விஞ்ஞானமும் அகராதியும்

2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தரம் 12 இற்கான இரண்டாம் தவணைக்குரிய கட்டுரைப் பகுதியில் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திரு து.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.யோகராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், திரு கே.இரகுபரன், திரு மொஹமட் ரமீஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பேராசிரியர் சி.தில்லைநாதனும், பேராசிரியர் அ.சண்முகதாஸும் பேராசிரியரின் புலமைப் பாரம்பரிய மாணவர்கள். 

இதன் தொடர் நிகழ்வாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வழிகாட்டி நூல்களிலும், கைநூல்களிலும் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் இரண்டாம் பதிப்பே இடம்பெற்றுள்ளது. இவ்வழிகாட்டி நூல்களின் ஆசிரியர்களின் அவசரமும், தமிழ்ப் புலமையின் தெளிவு வெளிப்படும் இடமாகவும் இது அமைகிறது.
எண் தலைப்பு ஆசிரியர் ஆண்டு
1. க.பொ.த உயர் தரம் தமிழ் தரம் – 12 புலவர் இளங்கோ 2009
2. கட்டுரை மலர் தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
3. கட்டுரைத் தொகுப்பு தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
4. க.பொ.த உயர்தரம் உரைநடைக்கோவை கட்டுரைகளும் வினாவிடைகளும் த.அஜந்தகுமார் 2011

பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவக் குழுவில் உள்ளவர்கள் கட்டுரையைப் பரிந்துரைக்கும்போது அதன் போதாமைகளை அறியவில்லை, ஆராயவில்லை ஏன் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகள் பற்றி இதனைவிட வேறு இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் இல்லையா என்பதும் உரையாடப்படவேண்டும். 

58 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதை இற்றைப்படுத்தாமல் இன்றைய தலைமுறை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் ஊடாக கொடுப்பதன் மூலம் கடந்த 58 ஆண்டுகளில் ஈழத்தின் தமிழ் அகராதித் துறை எந்த இடத்தில் / எந்த நிலையில் உள்ளது தொடர்பிலான ஆய்வுகள் / கட்டுரைகள் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ள இடமுள்ளது. இற்றைப்படுத்தப்படாத இக்கட்டுரையின் மூலம் ஞானப்பிரகாசரின் வேர்ச்சொல் அகராதிச் சேகரங்களின் துணையுடன் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 களில் வெளியிட்ட தாவீது அடிகளாரும், தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து அகராதிகளை வெளியிட்டவருமான ந. சி. கந்தையா பிள்ளை அவர்களும்  இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே விடப்பட்டுள்ளார்கள். 


5. விஞ்ஞானமும் அகராதியும் - முதற் பதிப்பை அலசுதல்...

இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்பதை 25வது பந்தியில் கட்டுரையாளரே சொல்கிறார். இளங்கதிர் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது, குறித்த இதழின் ஆசிரியர் கட்டுரையாளரின் மாணவர்  ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். இது உண்மையில் 1950 களில் நிலவிய அறிவுத்தள மட்டத்தில், அவசர கோலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. பல தவறுகளும், போதாமைகளும், விடுபடல்களும் இதன்கண் உள்ளன. தவிரவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் பெருவிருப்பிற்குரிய நாடகவியல், சாசனவியல், நாட்டாரியல் என்ற எல்லைக்கு வெளியே அமைந்த கட்டுரை. தனது விருப்பிற்குரிய பகுதியில் பேசப்படும் நிலையில் சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர், தமிழ் அகராதியியல் என்ற துறையில் போதிய கவனமும், ஆழமான அறிவும் கொண்டிருக்கவில்லை என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. 

தமிழ் அகராதியியலின் அறிவியல் கூறுகள் எதையும் பேராசிரியர் இக்கட்டுரையில் கூறவில்லை. தலைச் சொற்களை ( Head Words ) அடுக்கும் முறை, பொருள் விளக்கச் சொற்களை அடுக்கும் முறை, தமிழில் எத்தனை வகைகளில் சொற்களை அடுக்கும் முறைகள் உள்ளன, ஈழத்தில் எழுந்த அகராதிகள் அல்லது ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகளில் எந்த முறையில் சொற்களை அடுக்கியிருந்தார்கள், இது எந்த வகையில் தமிழகத்தில் எழுந்த அகராதிகளில் காணப்பட்ட சொற்களை அடுக்கும் முறையில் இருந்து வேறுபட்டிருந்தது, சொற்களை அடுக்குவதற்கு எது சிறந்த முறை, ஐரோப்பியர்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில் எந்த அடுக்குமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள், அவை தமிழ் எழுத்துக் கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்றனவா போன்ற அலசல்கள் எதுவும் இதில் இல்லை. 

உண்மையில் கடந்த காலத்தில் ஈழத்தில் எழுந்த அகராதிகள் \ ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அகராதிகலைக்கூறுகள் பலவுண்டு. அவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் எடுத்துக்கூறாமலும் அலசாமலும், அகராதித்துறையில் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது என்று எழுதுவது பலவீனமான ஒன்றாகவே நான் கருகிறேன். 

தவிரவும் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல மூல அகராதிகளை, புத்தகங்களை நேரடியாகப் பேராசிரியர் பார்வையிடவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

  • 5வது பந்தியில் சாமுவேல் பிஷ் கிறீன் ( Dr Samuel Fish Green ) என்பதாகக் குறிப்பிடுகிறார். Dr Samuel Fisk Green என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரை, அதுவும் மீன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒருமுறையாவது ஏதாவது ஒரு புத்தகத்தில் டாக்டர் கிறீன் அவர்களின் ஆங்கிலப் பெயரைப் பார்வையிட்டிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. ( இன்றும்,  பேராசிரியரின் இக்கட்டுரையை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஈழத்து அகராதி தொடர்பில் கட்டுரைகள் எழுதும் சிலர்  Dr Samuel Fish Green என்றே எழுதிவருகிறார்கள்.
    Book about Samuel Fisk Green 
  • 10வது பந்தியில் ஞானச் சகோதரர் பிலிப்பு 1905 ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 10வது பந்தியின் இறுதியில் சின்னத்தம்பி என்பார் நில அளவை சாத்திரத்தைப் பழைய இலக்கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூலை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 13வது பந்தியில் பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கையகராதியை ஆக்கினார். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை. அட்டையில் உள்ள A Manual Dictionary of the Tamil language என்பதையோ உட்புறத்தில் தமிழில் குறிப்பிடப்படும் பெயரகராதி என்பதையோ குறிப்பிடவில்லை. 
  • 14வது பந்தியில் உள்ள அவர் அதனை வரிசைப்படுத்தி நூல் ஆக்கினார் அது 1842ம் ஆண்டு வண எம்.வின்சிலோவால் வெளியிடப்பட்டது. - இதிலும் குறித்த நூலின் தலைப்பான English and Tamil Dictionary : contains all the more important words in Dr Webster's dictionary of the English Language என்பதைத் தரவில்லை.
  • 15வது பந்தியில் குறிப்பிடும் தமிழ்-ஆங்கில அகராதியின் தலைப்பான A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil என்பது தரப்படவில்லை.
  • 19வது பந்தியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஓர் அகராதியை 1905ம் ஆண்டு வெளியிட்டனர். - இதிலும் குறித்த அகராதியின் தலைப்பைத் தரவில்லை, இவ்வகராதியையும் பேராசிரியர் பார்வையிடவில்லை என்றே நினைக்க இடமுண்டு. தவிரவும் சதாவதானியின் தமிழ்ப்பேரகராதியானது 1899 இல் வெளியாகியுள்ளது, ஆனால் பேராசிரியர் 1905 என்பதாகக் குறிப்பிடுகிறார். அகராதியின் தலைப்பையும் தராது, வெளியான ஆண்டும் சரியாகக் குறிப்பிடாமல், ஆனால் அது பிழையில்லாது தூயதாய் வெளிவந்தது என்ற சான்றிதழை எங்ஙனம் வழங்கிடமுடியும் ?
    தமிழ்ப்பேரகராதி
  • 24வது பந்தியின் பிற்பகுதியில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ்-ஆங்கில அகராதியை ஆக்க முயன்றார். -  இங்கும் குறித்த அகராதியின் தலைப்புத் தரப்படவில்லை, மேலும் An Etymological and Comparative Lexicon of the Tamil Language என்ற தலைப்புடைய இவ்வகராதியின் 6 பகுதிகள் முறையே 1938, 1940, 1941, 1943, 1944, 1946 ஆகிய ஆண்டுகளில், சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர் சில பாகங்களை 1935 ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினார் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.
    An Etymological and Comparative Lexicon of the Tamil Language
  • 23வது பந்தியில் நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் ஆங்கில ஆங்கில தமிழ் அகராதியின் பதிப்பு ஆண்டு 1911 என்று தவறாகக் கொடுத்துள்ளார், உண்மையில் அவ்வகராதி 1907 இல் வெளியாகியுள்ளது. 
இதுகாறும் பேராசிரியர் குறிப்பிடாதுவிட்ட அகராதித் தலைப்புகளையும், வெளியான ஆண்டு விபரங்களில் உள்ள மாறுதல்களையும்  நோக்கினோம். 

15, 16வது பந்திகள் வண எம்.வின்சிலோ அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி பற்றியது. அதில் “இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன” என்பதாக மட்டுமே கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை.
16வது பந்தியினூடாக 

  1. ”நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள், தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன” , 
  2. ”தமிழரின் சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்” 
என்று கூறிவிட்டு, 17வது பந்தியில் “ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவி நூலாக எழுந்தபோதும் ஈற்றில் யாவருக்கும் பயன்படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது என்றவாறு கூறுகிறார். இதில் எவ்வளவு இரு துருவ வேறுபாடு ? கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கருவி நூலென்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்டும்போது, அதற்கான ஆதார உள்ளடக்கப் பதிவுகளைக் எடுத்துக் கூறவேண்டாமா ? 


C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி

வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இதில் அ தொடக்கம் அனோர் வரையிலான 7967 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள்  உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியானதாகும். 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதியில் வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய முன்னுரையின்படி அவர் இதனை 6 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளதாக அறியமுடிகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் அகராதித் தொகுப்புச் சேகரங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம், வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் மகன் க.பாலசிங்கம் அவர்களாற் கொடுக்கப்பட்டு, அன்றைய காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பிலிருந்த தமிழ் வித்துவான்களின் துணையுடன் 1910, 1912, 1923 ஆகிய ஆண்டுகளில் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேயே மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனை வெளியிட்டிருந்த காரணத்தினால், இது பலராலும் தமிழ்ச்சங்க அகராதி என்று அழைக்கப்பட்டுள்ளது. ( தகவலுக்காக -  1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் மூன்று பாகங்களும் மீள் அச்சுச் செய்யப்பட்டபோதும், தொடர்ந்தும் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்ற பெயரிலேதான் வெளியிடப்பட்டுள்ளது. )
தமிழ்ச் சொல்லகராதி மீள் அச்சு 1998
விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் 20, 21 வது பந்திகளூடாக வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி பற்றிய விபரிப்புகள் உள்ளன. ஆனால் பல தவறுகளும் விடுபடல்களும் உள்ளதாகவே அதுவும் உள்ளது. 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட அகராதி பற்றிய செய்தி இல்லை. அது சங்க அகராதி என்ற பெயரோடு வெளிவந்தது என்று தவறான தகவலையே பதிவு செய்கிறார். தவிரவும் 1910 இல் முதற் பாகமும், 1923 இல் மற்றைய இரண்டு பாகங்களும் வெளிவந்தனவென்று, பதிப்பு ஆண்டையும் தவறாகவே குறிப்பிடுகிறார். இதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த அகராதியைப் பார்வையிடவில்லை என்ற ஒரு தோற்றப்படாடு ஏற்பட்டாலும், 1904 இல் வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் தனது முன்னுரையிற் குறிப்பிட்ட அதே வாசகங்களை உள்ளடக்கி “மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியிலுள்ள சொற்களை உள்ளடக்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய வகையிற் சிறந்து விளங்கிற்று“ என்றும் குறிப்பிடுவதனூடாக அவர் குறித்த அகராதியைப் பார்வையிட்டுள்ளார் என்ற முடிவிற்கும் வர இடமுள்ளது. தவிரவும் ஈழத்துக் குழூஉ இறையனாராக அறிவியலும் அகரமுதலியும் என்ற தலைப்பிலான கட்டுரையெனில் இக்குறைபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், ஆனால் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் இவ்வாறான குறைபாடு கூறுவது முரண்நகையாகும். ( விஞ்ஞானம் என்பது தமிழ்ச்சொல்லல்ல. | ஈழத்துக் குழுஉ இறையனார் என்பது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் புனைபெயர், தனித்தமிழ் எண்ணக்கருவில் அமைந்த பெயர். )

வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி ( முதலாம் பாகம் ) என்ற பெயரில், 1904 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அகராதி வெளிவந்ததென்பதை மறைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்க்குமாறு செயற்படவேண்டிய காரணம் என்னவென்றும் ஆராயவேண்டிய ஒன்றாகும். 

26வது பந்தியில் காணப்படும் “தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன” என்ற வாசகமானது, ஈழநாட்டில் எழுந்த நிகண்டுகளான, 
  1. 1876 சிந்தாமணி நிகண்டு - வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை,
  2. 1889 நேர்ச்சொல் நிகண்டு - புலோலி சதாசிவம்பிள்ளை
ஆகியவற்றை பேராசிரியர் அறிந்திருக்கவில்லை, அதாவது ஈழத்தில் நிகண்டுகள் தோன்றியுள்ளவென அறிந்திருக்கவில்லை என்பதனாலேயே அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். 

6. ஈழத்தில் அகராதித்துறையின் இன்றைய நிலை

இலங்கைத் தீவில் பேசப்படும் மற்றொரு மொழியான சிங்கள மொழியின் அகராதித்துறை எவ்வாறு தோற்றம் பெற்றது, இன்று எவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta இணைப்பினூடாகத் தமிழில் பார்வையிட முடிகிறது. 1845 இல் ஆரம்பிக்கப்பட்ட றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக்கிளையில் இருந்து இன்றைய சிங்கள அகராதி அலுவலகம், அதன் படிமுறை வளர்ச்சி, அண்மைக்கால அவர்களது அகராதி வெளியீடுகள் வரை அறிந்துகொள்ள முடிகிறது. 

இதே நிலையில் தமிழில் அகராதித்துறைக்காக எந்தவொரு நிறுவனமும் தோற்றம் பெற்றதாகவோ செயற்பட்டதாகவோ தகவல்களில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அகராதியியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு களம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மொழியியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் என்று ஒரு சிலரைக்குறிப்பிட முடியும். ஆனால் lexicography என்ற அகராதியியல் துறையில் துறைபோகிய தொடர் செயற்பாட்டாளர், அறிஞர் என்று பெயர் குறிப்பிடும்படி எவரும் இல்லை என்ற உண்மையை கசப்புடன் ஒத்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. ஈழத்தில் கடந்த காலங்களில் கோலோச்சிச் சாதனை படைத்த கல்வித்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் அகராதித்துறையை கவனத்தில் கொள்ளாதுவிட்டது கவலைக்குரிய விடயமே. 2005 இல் வெளியான ஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள் என்ற அகராதியைத் தந்த பேராசிரியர் சுபதினி ரமேஷ் அவர்கள் நீங்கலாக இன்றளவும் ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் யாவும் கல்வித்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 

நானறிந்தவரையில் 200 இற்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நூல் ஈழத்து வாழ்வும் வளமும். இன்றும் அதன் தேவை இருக்கிற காரணத்தினாற்றான் நான்காவது பதிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தின் அகராதி முயற்சிகள் தொடர்பில் கட்டுரை வரையும் எவருமே இக்கட்டுரையை மேற்கோள் காட்டத்தவறுவதில்லை. ஆனால் யாருமே இக்கட்டுரையின் போதாமைகளை, தவறுகளைப் பொதுவெளியில் சுட்டி எழுதவில்லை. 
பாடத்திட்டத்தில் கட்டுரை இணைக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை முழுவதும் உள்ள தமிழாசிரியர்கள், குறிப்பாக தரம் 12-13 இற்குப் பாடம் சொல்லித்தரும் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையைக் கற்பிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை ஆசிரியர்கள் கட்டுரையின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டார்கள் ? பொதுவெளியில் அல்லது தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்கள் ? என்பதும் அறியமுடியவில்லை. 

மேலும் இக்கட்டுரையினைப் பாடத்திட்டத்திற் பரிந்துரைத்த பெருந்தகை யாரென்பதைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவை மின்-அஞ்சலில் 2016 ஜனவரியில் தொடர்புகொண்டபோதும், இன்றுவரை பதில் இல்லை. 

இந்நிலையில் புதிய சொல் மீள் உரையாடல்களுக்குக் களம் அமைத்துள்ளதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறாக கடந்த காலங்களில் வரையப்பட்ட பல விடயங்கள் மீள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையின் மீள் உரையாடல் என்ற நிலையில் இருந்து ஈழத்தின் அகராதித்துறைச் செயற்பாடுகள், பதிவுகள் நோக்கிய மீள் உரையாடலாக மாற்றப்படுமாயின் சிறப்பானதாக அமையும் என்ற என் பெருவிருப்பையும் இத்தால் பதிவு செய்கிறேன். 

எங்கடை புறெபசர் என்ற அன்பிழையினைவிட எங்கள் மொழி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்பது ஆழமனது, அகலமானது. எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார் என்ற வீண் தற்பெருமைகளைத் தவிர்த்து களநிலையறிந்து, யதார்த்த உண்மைகளுடன் உரையாடுவதே, தொடர்வதே சிறப்பானதாகும். 

- விருபா குமரேசன் ( [email protected] )

  •  

விஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....

புதிய சொல் : 04 - 2016 Oct-Dec
1. விஞ்ஞானமும் அகராதியும் – பதிப்புகள்
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினால் நடத்தப்படும் இளங்கதிர் ஆய்விதழின் பத்தாவது ஆண்டுமலரில் ( 14.04.1958 ) பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான ஆராய்ச்சிக் கட்டுரை முதன்முதலாக இடம்பெற்றது. இம்மலரின் ஆசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். அம்மலரின் 145 – 154 பக்கங்களில் இவ்வாராய்ச்சிக் கட்டுரை இடம்பெற்றபோது, அது 27 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் காணப்பட்டது. இதனையே நாம் முதலாவது பதிப்பாக எடுத்துக்கொள்கிறோம். 

ஏப்ரல் 1962 இல், செ.கணேசலிங்கன் அவர்களின் பாரதி புத்தகசாலை வெளியீடு – 1 என்ற அடையாளத்துடனும், சென்னையில் பாரி நிலையத்தின் விற்பனை உரிமையுடனும் சென்னையில் பதிப்பிக்கப்பட்ட ஈழத்து வாழ்வும் வளமும் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலில் பதினோராவது கட்டுரையாக 106 - 116 பக்கங்களில் விஞ்ஞானமும் அகராதியும் இடம்பெற்றது. இந்நூலிற்கான கட்டுரைகளைத் தொகுத்தவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் என்பதை நூலின் முன்னுரை பெருமையாகச் சுட்டுகிறது. இந்நூலில் இக்கட்டுரையானது 26 பந்திகளுடனும் ஒரு அட்டவணையுடனும் உள்ளது. இதனை இக்கட்டுரையின் இரண்டாம் பதிப்பாகச் சொல்லலாம். 

புதிய சொல்லின் மூன்றாவது இதழ் வரை ( 2016 ஜூலை – செப்டம்பர் ) பத்துத் தடவைகளுக்கு மேல் இவ்விரண்டாம் பதிப்புக் கட்டுரையே பல்வேறு இடங்களில் இடம் பெறுகிறது.

2. இரண்டு பதிப்புகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன ? 

இளங்கதிரில் வெளியான பதிப்பின்படி, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் 19வது பந்தியில் உள்ள நான்கு வரிகளூடாக நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் தமிழ் அகராதிப்பணியினையும், அதனைத்தொடர்ந்து வரும் 20, 21 ஆகிய இரு பந்திகளிலுள்ள முப்பத்தொரு வரிகளுடாக கு.கதிரவேல்பிள்ளை அவர்களின் அகராதிப்பணியினையும் எழுதியிருந்தார். 


ஈழத்து வாழ்வும் வளமும் நூலில் மேலே படத்தில் நிறமிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டு குறித்த 19 வது, 20வது பந்திகள் இணைக்கப்படுவதன் மூலம் கு.கதிரவேல்பிள்ளை அவர்களும், அவரது அகராதிப்பணியும் மறைக்கப்படுகிறது, நா.கதிரைவேற்பிள்ளை வட்டுக்கோட்டைச் செமினரியின் மாணாக்கராக்கப்பட்டு, ஆராய்ச்சி செய்து அகராதி உருவாக்கியவராகக் காட்டப்படுகிறார். 

3. 54 ஆண்டுகளாகத் தொடரும் பதிப்பு வேறுபாடு

பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில்தான் ஈழத்து வாழ்வும் வளமும் நூல் வடிவம் பெற்றுள்ளது. தொடர்ந்து குமரன் புத்தக இல்லதினால் 1996, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் மீள்பதிப்பும் செய்யப்பட்டுள்ளது. மீள் பதிப்புகளுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மீள் பதிப்புக்கான முன்னுரைகளையும் எழுதியுள்ளார். 2016 பதிப்பில் ஈழநாட்டில் விஞ்ஞானமும் அகராதியும் என்ற புதிய  தலைப்புடன்,  உப தலைப்புகளுடன், படங்களுடன் வெளியாகியுள்ளது. 

இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கியவராகவும், பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் தோற்றுவித்த புலமைப் பாரம்பரியமே அவரின் மிகப் பெரிய சாதனையாகவும் பேசப்படும் நிலையில், பேராசிரியர் அவர்களின் மாணவர்களான வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, பூலோகசிங்கம், தில்லைநாதன், சண்முகதாஸ், தனஞ்சயராசசிங்கம் போன்ற எவருடைய பார்வைக்கும் பதிப்பு வேறுபாடு தென்படவில்லையென்பதும், திருத்தப்படவில்லையென்பதும் வியப்பானதாகவே உள்ளது. 

புதிய சொல்லில் எழுதப்பட்ட அறிமுகத்தில் சொல்லப்பட்டது போல் “ இவரிடமிருந்த புறவயமாக விடயங்களை அலசி ஆராய்கின்ற பண்பு இவர் மாணவர்களிடமும் தொடர்ந்தது ” என்பதும், பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் குறிப்பிடும் “ பல்கலைக்கழக ஆசிரியர் என்ற முறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும், புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்” என்பதும் மீள் உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. 

ஈழத்து வாழ்வும் வளமும் ( 2001 பதிப்பு ) நூலில் இக்கட்டுரையினை 2006 இல் நான் முதன் முதலாகப் படித்து முடித்தவுடன், என் மனதில் தோன்றிய கேள்வி அகராதி தந்த ஈழத்தவர்களான வைமன் கதிரைவேற்பிள்ளையும், நா.சி.கந்தையா அவர்களும் ஏன் இடம் பெறவில்லை என்பதே, தொடர் தேடலில் கிடைத்தவைகள்தாம் இக்கட்டுரையினை எழுத உதவியவை.

4. பாடத்திட்டத்தில் விஞ்ஞானமும் அகராதியும்

2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தரம் 12 இற்கான இரண்டாம் தவணைக்குரிய கட்டுரைப் பகுதியில் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. இதனை பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவ குழுவில் பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திரு து.இராஜேந்திரம், கலாநிதி எஸ்.யோகராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், திரு கே.இரகுபரன், திரு மொஹமட் ரமீஸ் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பேராசிரியர் சி.தில்லைநாதனும், பேராசிரியர் அ.சண்முகதாஸும் பேராசிரியரின் புலமைப் பாரம்பரிய மாணவர்கள். 

இதன் தொடர் நிகழ்வாக க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வழிகாட்டி நூல்களிலும், கைநூல்களிலும் விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் இரண்டாம் பதிப்பே இடம்பெற்றுள்ளது. இவ்வழிகாட்டி நூல்களின் ஆசிரியர்களின் அவசரமும், தமிழ்ப் புலமையின் தெளிவு வெளிப்படும் இடமாகவும் இது அமைகிறது.
எண் தலைப்பு ஆசிரியர் ஆண்டு
1. க.பொ.த உயர் தரம் தமிழ் தரம் – 12 புலவர் இளங்கோ 2009
2. கட்டுரை மலர் தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
3. கட்டுரைத் தொகுப்பு தரம் 12 – 13 கவிஞர் த.துரைசிங்கம் 2010
4. க.பொ.த உயர்தரம் உரைநடைக்கோவை கட்டுரைகளும் வினாவிடைகளும் த.அஜந்தகுமார் 2011

பாடத்திட்டத்தில் இணைத்த பாட நிபுணத்துவக் குழுவில் உள்ளவர்கள் கட்டுரையைப் பரிந்துரைக்கும்போது அதன் போதாமைகளை அறியவில்லை, ஆராயவில்லை ஏன் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக ஈழத்தவர்களின் அகராதி முயற்சிகள் பற்றி இதனைவிட வேறு இற்றைப்படுத்தப்பட்ட கட்டுரைகள் இல்லையா என்பதும் உரையாடப்படவேண்டும். 

58 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதை இற்றைப்படுத்தாமல் இன்றைய தலைமுறை மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தின் ஊடாக கொடுப்பதன் மூலம் கடந்த 58 ஆண்டுகளில் ஈழத்தின் தமிழ் அகராதித் துறை எந்த இடத்தில் / எந்த நிலையில் உள்ளது தொடர்பிலான ஆய்வுகள் / கட்டுரைகள் இல்லை என்பதை மறைமுகமாகச் சொல்லும் ஒன்று எனவும் எடுத்துக்கொள்ள இடமுள்ளது. இற்றைப்படுத்தப்படாத இக்கட்டுரையின் மூலம் ஞானப்பிரகாசரின் வேர்ச்சொல் அகராதிச் சேகரங்களின் துணையுடன் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 களில் வெளியிட்ட தாவீது அடிகளாரும், தமிழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து அகராதிகளை வெளியிட்டவருமான ந. சி. கந்தையா பிள்ளை அவர்களும்  இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமலே விடப்பட்டுள்ளார்கள். 


5. விஞ்ஞானமும் அகராதியும் - முதற் பதிப்பை அலசுதல்...

இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை என்பதை 25வது பந்தியில் கட்டுரையாளரே சொல்கிறார். இளங்கதிர் என்ற ஆய்விதழில் இது வெளியாகி உள்ளது, குறித்த இதழின் ஆசிரியர் கட்டுரையாளரின் மாணவர்  ஆ.வேலுப்பிள்ளை அவர்கள். இது உண்மையில் 1950 களில் நிலவிய அறிவுத்தள மட்டத்தில், அவசர கோலத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. பல தவறுகளும், போதாமைகளும், விடுபடல்களும் இதன்கண் உள்ளன. தவிரவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் பெருவிருப்பிற்குரிய நாடகவியல், சாசனவியல், நாட்டாரியல் என்ற எல்லைக்கு வெளியே அமைந்த கட்டுரை. தனது விருப்பிற்குரிய பகுதியில் பேசப்படும் நிலையில் சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர், தமிழ் அகராதியியல் என்ற துறையில் போதிய கவனமும், ஆழமான அறிவும் கொண்டிருக்கவில்லை என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. 

தமிழ் அகராதியியலின் அறிவியல் கூறுகள் எதையும் பேராசிரியர் இக்கட்டுரையில் கூறவில்லை. தலைச் சொற்களை ( Head Words ) அடுக்கும் முறை, பொருள் விளக்கச் சொற்களை அடுக்கும் முறை, தமிழில் எத்தனை வகைகளில் சொற்களை அடுக்கும் முறைகள் உள்ளன, ஈழத்தில் எழுந்த அகராதிகள் அல்லது ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகளில் எந்த முறையில் சொற்களை அடுக்கியிருந்தார்கள், இது எந்த வகையில் தமிழகத்தில் எழுந்த அகராதிகளில் காணப்பட்ட சொற்களை அடுக்கும் முறையில் இருந்து வேறுபட்டிருந்தது, சொற்களை அடுக்குவதற்கு எது சிறந்த முறை, ஐரோப்பியர்கள் உருவாக்கிய தமிழ் அகராதிகளில் எந்த அடுக்குமுறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள், அவை தமிழ் எழுத்துக் கட்டமைப்பின் தன்மைக்கு ஏற்றனவா போன்ற அலசல்கள் எதுவும் இதில் இல்லை. 

உண்மையில் கடந்த காலத்தில் ஈழத்தில் எழுந்த அகராதிகள் \ ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட அகராதிகலைக்கூறுகள் பலவுண்டு. அவற்றையெல்லாம் அறிவியல் ரீதியில் எடுத்துக்கூறாமலும் அலசாமலும், அகராதித்துறையில் ஈழநாடே தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியாய் நின்றது என்று எழுதுவது பலவீனமான ஒன்றாகவே நான் கருகிறேன். 

தவிரவும் கட்டுரையில் குறிப்பிடப்படும் பல மூல அகராதிகளை, புத்தகங்களை நேரடியாகப் பேராசிரியர் பார்வையிடவில்லை என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. 

  • 5வது பந்தியில் சாமுவேல் பிஷ் கிறீன் ( Dr Samuel Fish Green ) என்பதாகக் குறிப்பிடுகிறார். Dr Samuel Fisk Green என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஒரு பெயரை, அதுவும் மீன் என்ற தமிழ்ச்சொல்லிற்கு நிகரான ஆங்கிலப் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். ஒரே ஒருமுறையாவது ஏதாவது ஒரு புத்தகத்தில் டாக்டர் கிறீன் அவர்களின் ஆங்கிலப் பெயரைப் பார்வையிட்டிருந்தால் இது நிகழ்ந்திருக்காது. ( இன்றும்,  பேராசிரியரின் இக்கட்டுரையை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஈழத்து அகராதி தொடர்பில் கட்டுரைகள் எழுதும் சிலர்  Dr Samuel Fish Green என்றே எழுதிவருகிறார்கள்.
    Book about Samuel Fisk Green 
  • 10வது பந்தியில் ஞானச் சகோதரர் பிலிப்பு 1905 ம் ஆண்டு அளவை நூலொன்றை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 10வது பந்தியின் இறுதியில் சின்னத்தம்பி என்பார் நில அளவை சாத்திரத்தைப் பழைய இலக்கண முறைப்படி சூத்திரங்களால் யாத்து ஒரு நூலை வெளியிட்டனர். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை.
  • 13வது பந்தியில் பண்டிதர் சந்திரசேகரம் என்பார் ஒரு கையகராதியை ஆக்கினார். - இதிலும் குறித்த நூலின் தலைப்பைத் தரவில்லை. அட்டையில் உள்ள A Manual Dictionary of the Tamil language என்பதையோ உட்புறத்தில் தமிழில் குறிப்பிடப்படும் பெயரகராதி என்பதையோ குறிப்பிடவில்லை. 
  • 14வது பந்தியில் உள்ள அவர் அதனை வரிசைப்படுத்தி நூல் ஆக்கினார் அது 1842ம் ஆண்டு வண எம்.வின்சிலோவால் வெளியிடப்பட்டது. - இதிலும் குறித்த நூலின் தலைப்பான English and Tamil Dictionary : contains all the more important words in Dr Webster's dictionary of the English Language என்பதைத் தரவில்லை.
  • 15வது பந்தியில் குறிப்பிடும் தமிழ்-ஆங்கில அகராதியின் தலைப்பான A Comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil என்பது தரப்படவில்லை.
  • 19வது பந்தியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் ஓர் அகராதியை 1905ம் ஆண்டு வெளியிட்டனர். - இதிலும் குறித்த அகராதியின் தலைப்பைத் தரவில்லை, இவ்வகராதியையும் பேராசிரியர் பார்வையிடவில்லை என்றே நினைக்க இடமுண்டு. தவிரவும் சதாவதானியின் தமிழ்ப்பேரகராதியானது 1899 இல் வெளியாகியுள்ளது, ஆனால் பேராசிரியர் 1905 என்பதாகக் குறிப்பிடுகிறார். அகராதியின் தலைப்பையும் தராது, வெளியான ஆண்டும் சரியாகக் குறிப்பிடாமல், ஆனால் அது பிழையில்லாது தூயதாய் வெளிவந்தது என்ற சான்றிதழை எங்ஙனம் வழங்கிடமுடியும் ?
    தமிழ்ப்பேரகராதி
  • 24வது பந்தியின் பிற்பகுதியில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இதுகாறும் தமிழ் அகராதி ஆக்குவோர் கைக்கொள்ளாத முறையில் ஓர் தமிழ்-ஆங்கில அகராதியை ஆக்க முயன்றார். -  இங்கும் குறித்த அகராதியின் தலைப்புத் தரப்படவில்லை, மேலும் An Etymological and Comparative Lexicon of the Tamil Language என்ற தலைப்புடைய இவ்வகராதியின் 6 பகுதிகள் முறையே 1938, 1940, 1941, 1943, 1944, 1946 ஆகிய ஆண்டுகளில், சுண்ணாகம் திருமகள் அழுத்தகம் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பேராசிரியர் சில பாகங்களை 1935 ம் ஆண்டு அச்சிட்டும் வெளியாக்கினார் என்று மட்டும் குறிப்பிடுகிறார்.
    An Etymological and Comparative Lexicon of the Tamil Language
  • 23வது பந்தியில் நாவலர் கோட்டம் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் ஆங்கில ஆங்கில தமிழ் அகராதியின் பதிப்பு ஆண்டு 1911 என்று தவறாகக் கொடுத்துள்ளார், உண்மையில் அவ்வகராதி 1907 இல் வெளியாகியுள்ளது. 
இதுகாறும் பேராசிரியர் குறிப்பிடாதுவிட்ட அகராதித் தலைப்புகளையும், வெளியான ஆண்டு விபரங்களில் உள்ள மாறுதல்களையும்  நோக்கினோம். 

15, 16வது பந்திகள் வண எம்.வின்சிலோ அவர்களால் வெளியிடப்பட்ட தமிழ்-ஆங்கில அகராதி பற்றியது. அதில் “இதுகாறும் வெளிவந்த அகராதிகளில் வெளிவராத பல முறைகள் அங்குள்ளன” என்பதாக மட்டுமே கூறியுள்ளார். அவை என்ன என்பதைப் பற்றிய விளக்கம் இல்லை.
16வது பந்தியினூடாக 

  1. ”நூலாசிரியர், புலவர், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்கள், தேவர் ஆகியோரின் பெயர் முதலியவையும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன” , 
  2. ”தமிழரின் சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் ஆகியன பற்றியுள்ள செய்திகளையும் அறிந்துகொள்ளலாம்” 
என்று கூறிவிட்டு, 17வது பந்தியில் “ஆகவே கிறிஸ்து சமயத்தைப் பரப்புவதற்கு ஒரு கருவி நூலாக எழுந்தபோதும் ஈற்றில் யாவருக்கும் பயன்படும் ஒரு பெருநூலாக அது முடிந்தது என்றவாறு கூறுகிறார். இதில் எவ்வளவு இரு துருவ வேறுபாடு ? கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்கான கருவி நூலென்று குறிப்பிட்டுக் குற்றம் சாட்டும்போது, அதற்கான ஆதார உள்ளடக்கப் பதிவுகளைக் எடுத்துக் கூறவேண்டாமா ? 


C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி

வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்னும் பெயரில், 1904 இல், வண்ணார்பண்ணை மகாசோதிடராகிய வி.சபாபதியையர்க்கும் பிறர்க்கும் உடைய அச்சியந்திரசாலையில் அச்சிட்டு வெளியிட்டிருந்தார். இதில் அ தொடக்கம் அனோர் வரையிலான 7967 சொற்களுக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்கள்  உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியானதாகும். 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியான வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதியில் வைமன் கதிரைவேற்பிள்ளையவர்கள் எழுதிய முன்னுரையின்படி அவர் இதனை 6 தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டிருந்துள்ளதாக அறியமுடிகிறது. அவரது மறைவிற்குப் பின்னர் அகராதித் தொகுப்புச் சேகரங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திடம், வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களின் மகன் க.பாலசிங்கம் அவர்களாற் கொடுக்கப்பட்டு, அன்றைய காலத்தில் தமிழ்ச்சங்கத்தின் பொறுப்பிலிருந்த தமிழ் வித்துவான்களின் துணையுடன் 1910, 1912, 1923 ஆகிய ஆண்டுகளில் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி என்ற பெயரிலேயே மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. மதுரைத் தமிழ்ச் சங்கம் இதனை வெளியிட்டிருந்த காரணத்தினால், இது பலராலும் தமிழ்ச்சங்க அகராதி என்று அழைக்கப்பட்டுள்ளது. ( தகவலுக்காக -  1998 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் மூன்று பாகங்களும் மீள் அச்சுச் செய்யப்பட்டபோதும், தொடர்ந்தும் C.W.Kathiravelpillai’s Tamil Dictionary - தமிழ்ச் சொல்லகராதி  என்ற பெயரிலேதான் வெளியிடப்பட்டுள்ளது. )
தமிழ்ச் சொல்லகராதி மீள் அச்சு 1998
விஞ்ஞானமும் அகராதியும் கட்டுரையின் 20, 21 வது பந்திகளூடாக வைமன் கதிரைவேற்பிள்ளை அவர்களின் அகராதி பற்றிய விபரிப்புகள் உள்ளன. ஆனால் பல தவறுகளும் விடுபடல்களும் உள்ளதாகவே அதுவும் உள்ளது. 1904 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட அகராதி பற்றிய செய்தி இல்லை. அது சங்க அகராதி என்ற பெயரோடு வெளிவந்தது என்று தவறான தகவலையே பதிவு செய்கிறார். தவிரவும் 1910 இல் முதற் பாகமும், 1923 இல் மற்றைய இரண்டு பாகங்களும் வெளிவந்தனவென்று, பதிப்பு ஆண்டையும் தவறாகவே குறிப்பிடுகிறார். இதனால் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையவர்கள் குறித்த அகராதியைப் பார்வையிடவில்லை என்ற ஒரு தோற்றப்படாடு ஏற்பட்டாலும், 1904 இல் வைமன் கதிரவேற்பிள்ளையவர்கள் தனது முன்னுரையிற் குறிப்பிட்ட அதே வாசகங்களை உள்ளடக்கி “மிகச் சிறந்த தமிழ் அகராதி எதுவும் தற்பவமாகவோ, தற்சமமாகவோ சங்கத மொழியிலுள்ள சொற்களை உள்ளடக்கவேண்டும் என்பதே அவரின் நோக்கமாகும். இக்குறைபாட்டைத் தவிர அவர் அகராதி ஏனைய வகையிற் சிறந்து விளங்கிற்று“ என்றும் குறிப்பிடுவதனூடாக அவர் குறித்த அகராதியைப் பார்வையிட்டுள்ளார் என்ற முடிவிற்கும் வர இடமுள்ளது. தவிரவும் ஈழத்துக் குழூஉ இறையனாராக அறிவியலும் அகரமுதலியும் என்ற தலைப்பிலான கட்டுரையெனில் இக்குறைபாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும், ஆனால் விஞ்ஞானமும் அகராதியும் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் இவ்வாறான குறைபாடு கூறுவது முரண்நகையாகும். ( விஞ்ஞானம் என்பது தமிழ்ச்சொல்லல்ல. | ஈழத்துக் குழுஉ இறையனார் என்பது பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்களின் புனைபெயர், தனித்தமிழ் எண்ணக்கருவில் அமைந்த பெயர். )

வைமன் கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ச் சொல்லகராதி ( முதலாம் பாகம் ) என்ற பெயரில், 1904 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு அகராதி வெளிவந்ததென்பதை மறைத்து, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்க்குமாறு செயற்படவேண்டிய காரணம் என்னவென்றும் ஆராயவேண்டிய ஒன்றாகும். 

26வது பந்தியில் காணப்படும் “தமிழ் நாட்டில் நிகண்டுகள் எழுந்தன” என்ற வாசகமானது, ஈழநாட்டில் எழுந்த நிகண்டுகளான, 
  1. 1876 சிந்தாமணி நிகண்டு - வல்வை வைத்தியலிங்கம்பிள்ளை,
  2. 1889 நேர்ச்சொல் நிகண்டு - புலோலி சதாசிவம்பிள்ளை
ஆகியவற்றை பேராசிரியர் அறிந்திருக்கவில்லை, அதாவது ஈழத்தில் நிகண்டுகள் தோன்றியுள்ளவென அறிந்திருக்கவில்லை என்பதனாலேயே அவர் மேற்கண்டவாறு எழுதியுள்ளார். 

6. ஈழத்தில் அகராதித்துறையின் இன்றைய நிலை

இலங்கைத் தீவில் பேசப்படும் மற்றொரு மொழியான சிங்கள மொழியின் அகராதித்துறை எவ்வாறு தோற்றம் பெற்றது, இன்று எவ்வாறு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை http://www.dictionary.gov.lk/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta இணைப்பினூடாகத் தமிழில் பார்வையிட முடிகிறது. 1845 இல் ஆரம்பிக்கப்பட்ட றோயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக்கிளையில் இருந்து இன்றைய சிங்கள அகராதி அலுவலகம், அதன் படிமுறை வளர்ச்சி, அண்மைக்கால அவர்களது அகராதி வெளியீடுகள் வரை அறிந்துகொள்ள முடிகிறது. 

இதே நிலையில் தமிழில் அகராதித்துறைக்காக எந்தவொரு நிறுவனமும் தோற்றம் பெற்றதாகவோ செயற்பட்டதாகவோ தகவல்களில்லை. பல்கலைக்கழக மட்டத்தில் அகராதியியல் சார்ந்த செயற்பாடுகளுக்கு களம் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழ் மொழியியல் அறிஞர்கள், பேராசிரியப் பெருந்தகைகள் என்று ஒரு சிலரைக்குறிப்பிட முடியும். ஆனால் lexicography என்ற அகராதியியல் துறையில் துறைபோகிய தொடர் செயற்பாட்டாளர், அறிஞர் என்று பெயர் குறிப்பிடும்படி எவரும் இல்லை என்ற உண்மையை கசப்புடன் ஒத்துக்கொள்ளும் நிலைதான் உள்ளது. ஈழத்தில் கடந்த காலங்களில் கோலோச்சிச் சாதனை படைத்த கல்வித்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் அகராதித்துறையை கவனத்தில் கொள்ளாதுவிட்டது கவலைக்குரிய விடயமே. 2005 இல் வெளியான ஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள் என்ற அகராதியைத் தந்த பேராசிரியர் சுபதினி ரமேஷ் அவர்கள் நீங்கலாக இன்றளவும் ஈழத்தவர்களால் செய்யப்பட்ட அகராதிகள் யாவும் கல்வித்துறைக்கு வெளியில் உள்ளவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 

நானறிந்தவரையில் 200 இற்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நூல் ஈழத்து வாழ்வும் வளமும். இன்றும் அதன் தேவை இருக்கிற காரணத்தினாற்றான் நான்காவது பதிப்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளது. ஈழத்தின் அகராதி முயற்சிகள் தொடர்பில் கட்டுரை வரையும் எவருமே இக்கட்டுரையை மேற்கோள் காட்டத்தவறுவதில்லை. ஆனால் யாருமே இக்கட்டுரையின் போதாமைகளை, தவறுகளைப் பொதுவெளியில் சுட்டி எழுதவில்லை. 
பாடத்திட்டத்தில் கட்டுரை இணைக்கப்பட்ட காரணத்தினால் இலங்கை முழுவதும் உள்ள தமிழாசிரியர்கள், குறிப்பாக தரம் 12-13 இற்குப் பாடம் சொல்லித்தரும் தமிழாசிரியர்கள் அனைவருக்கும் விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையைக் கற்பிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் எத்தனை ஆசிரியர்கள் கட்டுரையின் குறைபாடுகளைத் தெரிந்துகொண்டார்கள் ? பொதுவெளியில் அல்லது தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்கள் ? என்பதும் அறியமுடியவில்லை. 

மேலும் இக்கட்டுரையினைப் பாடத்திட்டத்திற் பரிந்துரைத்த பெருந்தகை யாரென்பதைத் தெரிந்து கொள்வதற்காக தேசிய கல்வியியல் நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவை மின்-அஞ்சலில் 2016 ஜனவரியில் தொடர்புகொண்டபோதும், இன்றுவரை பதில் இல்லை. 

இந்நிலையில் புதிய சொல் மீள் உரையாடல்களுக்குக் களம் அமைத்துள்ளதை நான் வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இவ்வாறாக கடந்த காலங்களில் வரையப்பட்ட பல விடயங்கள் மீள் உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியவை. விஞ்ஞானமும் அகராதியும் என்ற கட்டுரையின் மீள் உரையாடல் என்ற நிலையில் இருந்து ஈழத்தின் அகராதித்துறைச் செயற்பாடுகள், பதிவுகள் நோக்கிய மீள் உரையாடலாக மாற்றப்படுமாயின் சிறப்பானதாக அமையும் என்ற என் பெருவிருப்பையும் இத்தால் பதிவு செய்கிறேன். 

எங்கடை புறெபசர் என்ற அன்பிழையினைவிட எங்கள் மொழி, அறிவியல்பூர்வமான அணுகுமுறை என்பது ஆழமனது, அகலமானது. எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார் என்ற வீண் தற்பெருமைகளைத் தவிர்த்து களநிலையறிந்து, யதார்த்த உண்மைகளுடன் உரையாடுவதே, தொடர்வதே சிறப்பானதாகும். 

- விருபா குமரேசன் ( [email protected] )

  •  

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன ?

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன என்பதில் தனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உட்பெட்டியூடாகத் தெரிவித்திருந்தார்.

அவரது குழப்பத்திற்கான காரணம் தமிழ் விக்கிப்பீடியாவில் https://ta.wikipedia.org/s/18sq இணையமுகவரியில் காணப்படும்  // அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.... //  என்ற வசனத் தொடரின் மூலம் 1465 சொற்கள், அதே நேரம் விருபா தளத்தில் உள்ள // ...வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும்... // பதிவின்படி 1461 சொற்களும், இதை மேலும் குழப்பமாக்கும் நிலையில் விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையில் 82 வது பக்கத்தைப் பார்த்தால் 1464 சொற்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதே !



விருபா தளத்தில் 1461, 1464 என்ற இரண்டு எண்ணிக்கைகளைத் தந்துள்ளவன் என்ற வகையில் நான் இதற்குப் பதில் தரவேண்டியவனானேன்.



தமிழ் விக்கியில் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதி வடிவில் இல்லை. கட்டுரையைத் தொடங்கிய, தொகுத்த, புதுப்பித்த, மேம்படுத்திய தவிக்கியர்கள் குறித்த அகராதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைப் பக்கம் பக்கமாக எண்ணியே அறிந்திருப்பார்கள் அல்லது அச்சில் வெளியான ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையில் இருந்து குறித்த எண்ணிக்கையைப் பெற்றிருப்பார்கள். அங்கு எண்ணிம நிலையில் தலைச்சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான பொறிமுறை இல்லை. 

விருபாவில், நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் காணப்படும் ஒவ்வொரு சொற்களையும் எண்ணிமத் தரவுதள முறையில் பதிவு செய்துள்ளோம். அவ்வாறு பதிவு செய்யும் போது எவ்வாறு 1641, 1644 என்ற இரண்டு எண்ணிக்கைகள் கிடைக்கும் என்பதை அலசினோம். 

விடை கிடைத்தது. 

உண்மையில் இவ்வாறான இரண்டு எண்ணிக்கைகள் வருவதற்கான அடிப்படைக் காரணம் 1938 இல் குறித்த அகராதியைத் தொகுத்த நீலாவதி அம்மையார் அவர்களின் வரிசைப்படுத்தல் முறையில் உள்ள சிறு வழு ஆகும்.

1. சிருட்டி

அக்குறித்த அகராதியின் 14வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg ) சிருட்டி என்ற சொல்லானது இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகக் காணப்படுகிறது.  14 பக்கத்தில் 4வது சொல்லாகவும்,  18வது சொல்லாகவும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது. 

2. தயை

அக்குறித்த அகராதியில் 15வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15 ) தயை என்ற சொல் 47வது சொல்லாகவும், 16வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16 )  6வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

3. விகிதம்

அக்குறித்த அகராதியில் 23வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23 ) விகிதம் என்ற சொல் 68வது சொல்லாகவும், 24வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24 )  52வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

எனவே விருபா தளத்தில் நாம் குறிப்பட்ட இரண்டு எண்ணிக்கையிலும் தவறு இல்லை. 
1641 சொற்கள்,  1644 தடவைகள் தலைச்சொற்களாக இடம் பெற்றுள்ளன என்பதே சரியானதாகும்.  

விருபா தளத்தின் பின்னணியில் இயங்கும் தரவுதளத்தில் பின்வரும் படிமுறைகளினூடாக, எண்ணிம நிரலாக்க ஆணைகளைக்கொண்டு இதனைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு பக்கமாக இருந்து எண்ணிக் கூட்டிக் காண்பது அல்ல. தரவுதளம் என்பதன் பலமே இதுதான். 

1. சொற்குவியல் தரவுதளத்தை அணுகுதல்
2. அகராதிகளைப் பட்டியலிடுதல்
3. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்னும் அகராதியைத் தெரிவு செய்தல்
4. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் தலைச்சொற்கள் பட்டியலிற்குச் செல்தல்
5. தலைச் சொற்களாக எத்தனை சொற்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுதல் >> 1464
6. ஒரு தடவைக்கு மேல் வரும் தலைச்சொற்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுதல் >> 3
7. 5 இல் கிடைத்த தொகையில் இருந்து 6 இல் கிடைத்த தொகையைக் கழித்தல் >> 1461

இப்படிமுறைகளினூடாகவே  "நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்"  அகராதியில் 1461 தலைச்சொற்கள் உள்ளன என்பதைப் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம். 

விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையின்,

பக்கம் 38 இல் 678வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 04 : 01
பக்கம் 39 இல் 692வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 18 : 01

பக்கம் 45 இல் 796வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 15 : 47 : 01
பக்கம் 46 இல் 822வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 16 : 06 : 01

பக்கம் 77 இல் 1380வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 23 : 68 : 01
பக்கம் 81 இல் 1444வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 24 : 52 : 01

மேலதிகமாக,

வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியானது தலைச்சொற்களாக வடசொற்களையும், பொருள் விளக்கச் சொற்களாகத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளது. 

ஒரு சொல் வட சொல்லா ?   இல்லை தம்ழச் சொல்லா ? என்பதில் பலருக்கும் மயக்கம் உள்ளது. அது இவ்வகராதியை உருவாக்கிய திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே உச்சி, ஏனம், குணம், சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை ஆகிய 8 சொற்கள் தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளன. 

இறுதியாக, 

இவ்விடயத்தில் எனது விளக்கத்தினைக் கேட்ட நண்பருக்கு,  வட சொல் அகரவரிசைச் சுருக்கம் என்னும் இச்சிறு அகராதியை, மின்-அகராதியாக மாற்றியதன் மகிழ்வை அந்த நண்பர் எனக்குத் தந்துள்ளார் என்பதை இத்தால் பதிவு செய்கிறேன். அந் நல்லாருக்கு என் நன்றிகள். 

  •  

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன ?

வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன என்பதில் தனக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் தனிப்பட்ட முறையில் உட்பெட்டியூடாகத் தெரிவித்திருந்தார்.

அவரது குழப்பத்திற்கான காரணம் தமிழ் விக்கிப்பீடியாவில் https://ta.wikipedia.org/s/18sq இணையமுகவரியில் காணப்படும்  // அகங்காரம் முதல் வைராக்கியம் வரையான ஏறத்தாழ 1465 வட சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.... //  என்ற வசனத் தொடரின் மூலம் 1465 சொற்கள், அதே நேரம் விருபா தளத்தில் உள்ள // ...வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும்... // பதிவின்படி 1461 சொற்களும், இதை மேலும் குழப்பமாக்கும் நிலையில் விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையில் 82 வது பக்கத்தைப் பார்த்தால் 1464 சொற்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆக இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதே !



விருபா தளத்தில் 1461, 1464 என்ற இரண்டு எண்ணிக்கைகளைத் தந்துள்ளவன் என்ற வகையில் நான் இதற்குப் பதில் தரவேண்டியவனானேன்.



தமிழ் விக்கியில் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் மின்-அகராதி வடிவில் இல்லை. கட்டுரையைத் தொடங்கிய, தொகுத்த, புதுப்பித்த, மேம்படுத்திய தவிக்கியர்கள் குறித்த அகராதியில் எத்தனை சொற்கள் உள்ளன என்பதைப் பக்கம் பக்கமாக எண்ணியே அறிந்திருப்பார்கள் அல்லது அச்சில் வெளியான ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையில் இருந்து குறித்த எண்ணிக்கையைப் பெற்றிருப்பார்கள். அங்கு எண்ணிம நிலையில் தலைச்சொற்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான பொறிமுறை இல்லை. 

விருபாவில், நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் காணப்படும் ஒவ்வொரு சொற்களையும் எண்ணிமத் தரவுதள முறையில் பதிவு செய்துள்ளோம். அவ்வாறு பதிவு செய்யும் போது எவ்வாறு 1641, 1644 என்ற இரண்டு எண்ணிக்கைகள் கிடைக்கும் என்பதை அலசினோம். 

விடை கிடைத்தது. 

உண்மையில் இவ்வாறான இரண்டு எண்ணிக்கைகள் வருவதற்கான அடிப்படைக் காரணம் 1938 இல் குறித்த அகராதியைத் தொகுத்த நீலாவதி அம்மையார் அவர்களின் வரிசைப்படுத்தல் முறையில் உள்ள சிறு வழு ஆகும்.

1. சிருட்டி

அக்குறித்த அகராதியின் 14வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/SourceImage/STD_0014.jpg ) சிருட்டி என்ற சொல்லானது இரண்டு இடங்களில் தலைச்சொல்லாகக் காணப்படுகிறது.  14 பக்கத்தில் 4வது சொல்லாகவும்,  18வது சொல்லாகவும் இரு தடவைகள் இடம்பெற்றுள்ளது. 

2. தயை

அக்குறித்த அகராதியில் 15வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=15 ) தயை என்ற சொல் 47வது சொல்லாகவும், 16வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=16 )  6வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

3. விகிதம்

அக்குறித்த அகராதியில் 23வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23 ) விகிதம் என்ற சொல் 68வது சொல்லாகவும், 24வது பக்கத்தில் ( http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=24 )  52வது சொல்லாகவும் இரு தடவைகள் தலைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது. 

எனவே விருபா தளத்தில் நாம் குறிப்பட்ட இரண்டு எண்ணிக்கையிலும் தவறு இல்லை. 
1641 சொற்கள்,  1644 தடவைகள் தலைச்சொற்களாக இடம் பெற்றுள்ளன என்பதே சரியானதாகும்.  

விருபா தளத்தின் பின்னணியில் இயங்கும் தரவுதளத்தில் பின்வரும் படிமுறைகளினூடாக, எண்ணிம நிரலாக்க ஆணைகளைக்கொண்டு இதனைப் பெற்றுள்ளோம். ஒவ்வொரு பக்கமாக இருந்து எண்ணிக் கூட்டிக் காண்பது அல்ல. தரவுதளம் என்பதன் பலமே இதுதான். 

1. சொற்குவியல் தரவுதளத்தை அணுகுதல்
2. அகராதிகளைப் பட்டியலிடுதல்
3. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்னும் அகராதியைத் தெரிவு செய்தல்
4. வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் தலைச்சொற்கள் பட்டியலிற்குச் செல்தல்
5. தலைச் சொற்களாக எத்தனை சொற்கள் உள்ளன என்பதைக் கணக்கிடுதல் >> 1464
6. ஒரு தடவைக்கு மேல் வரும் தலைச்சொற்கள் எத்தனை என்பதைக் கணக்கிடுதல் >> 3
7. 5 இல் கிடைத்த தொகையில் இருந்து 6 இல் கிடைத்த தொகையைக் கழித்தல் >> 1461

இப்படிமுறைகளினூடாகவே  "நாம் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்"  அகராதியில் 1461 தலைச்சொற்கள் உள்ளன என்பதைப் கண்டறிந்து பதிவு செய்துள்ளோம். 

விருபா தளத்தில் http://www.viruba.com/Dictionaries/Vatasol_Tamil_Akaravarisaich_Surukkam.aspx முகவரியில் உள்ள பக்கத்தின் வலது பக்க அட்டவணையின்,

பக்கம் 38 இல் 678வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 04 : 01
பக்கம் 39 இல் 692வது சொல்லாக சிருட்டி என்ற சொல் காணப்படும் இடம் 14 : 18 : 01

பக்கம் 45 இல் 796வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 15 : 47 : 01
பக்கம் 46 இல் 822வது சொல்லாக தயை என்ற சொல் காணப்படும் இடம் 16 : 06 : 01

பக்கம் 77 இல் 1380வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 23 : 68 : 01
பக்கம் 81 இல் 1444வது சொல்லாக விகிதம் என்ற சொல் காணப்படும் இடம் 24 : 52 : 01

மேலதிகமாக,

வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் என்னும் அகராதியானது தலைச்சொற்களாக வடசொற்களையும், பொருள் விளக்கச் சொற்களாகத் தமிழ்ச் சொற்களையும் கொண்டிருக்கும் நிலையில் செய்யப்பட்டுள்ளது. 

ஒரு சொல் வட சொல்லா ?   இல்லை தம்ழச் சொல்லா ? என்பதில் பலருக்கும் மயக்கம் உள்ளது. அது இவ்வகராதியை உருவாக்கிய திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களுக்கும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே உச்சி, ஏனம், குணம், சமயம், நயம், பதி, பரம்பரை, பூசை ஆகிய 8 சொற்கள் தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளன. 

இறுதியாக, 

இவ்விடயத்தில் எனது விளக்கத்தினைக் கேட்ட நண்பருக்கு,  வட சொல் அகரவரிசைச் சுருக்கம் என்னும் இச்சிறு அகராதியை, மின்-அகராதியாக மாற்றியதன் மகிழ்வை அந்த நண்பர் எனக்குத் தந்துள்ளார் என்பதை இத்தால் பதிவு செய்கிறேன். அந் நல்லாருக்கு என் நன்றிகள். 

  •