Reading view

நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன்

கதை சொல்லும் குடிகள்

எம்மில் கீழோர் மேலூர் இல்லை
ஏழைகள் யாரும் இல்லை
செல்வம் ஏறியோர் என்றும் இல்லை
வாழ்வினில் தாழ்வொன்றுமில்லை
என்றும் மாண்புடன் வாழ்வோமடா”

“எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓர் தரம் என்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இது ஏற்றம் என்றும் சொல்லலாமோ?
சாதிப் பிரிவுகள் சொல்லி
அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்
அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;
சாதிக் கொடுமைகள் வேண்டாம்;
அன்பு தன்னில் செழித்திடும் வையம்;”

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய சிறிய வயதில் எனது தாத்தா-பாட்டி சாதி, மதம், மொழி என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று பாடிய கனியன் பூங்குன்றனாரின் வரிகளைத்தான் எனக்குள் விதைத்தார்கள். இன்றும் இந்தப் பாடல் உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது. நமது மீது அன்பு செலுத்த வெறும் குடும்ப நபர்களோ, உறவினர்களோ, நண்பர்களோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனது வாழ்வில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு தூய்மையான அன்பைக் கொடுத்தவர்கள் நான் சொன்ன இந்தப் பட்டியலில் இல்லாதவர்கள்தான். எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியம் என்றால் எனது வாழ்வில் அது நித்தமும் சாத்தியமாகிறது என்றே கூறலாம். அப்படி எனது தேசாந்திரி பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களில் ஒருவராக என்னை நினைத்து என்னிடமிருந்து அன்பை மட்டுமே எதிர்பார்த்தார்கள், பதிலுக்கு அவர்களும் அப்படியே இருந்து வருகிறார்கள். இந்த சமூகத்தில் மக்கள் எல்லோரும் அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே யாருடனாவது போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இச்செயல்முறை காலப்போக்கில் பெரும் சீரழிவைக் கொண்டு வருவது உறுதி. எப்போதும் ஓர் அவசர நிலைப் போக்கிலேயே இருப்பது முடிவில்லா சுழற்சி வட்டத்துக்குள் நம்மைத் தள்ளிவிடும்.

எப்போதும் போல எனது ஆறுதல் மண்டலத்தை விட்டு ஒரு தேசாந்திரி பயணம்… ஆம்,”இருளர்களோடு ஒரு வாழ்க்கை”, இருளர் என்றாலே இந்த சமூகத்தில் மிகவும் ஏளனமாகத்தான் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கா நாட்டில் சதுப்பு நிலங்களில் ஒருவகை கொக்கு இனங்கள் வசிக்கின்றன. இவை உடளவில் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். என்னுடைய சிறிய வயதில் நான் கலசப்பாக்கம் என்ற ஊரில் வசிக்கும்போது இருளர்கள் தெரு வீதியில் பாம்புகளைத் தனது தோளின் மீது போட்டுக் கொண்டு செல்வார்கள். ஒரு அழகிய மாலைப் பொழுதில் எனது நண்பர்கள் பத்மப்ரியா, ராஜவிக்னேஷ் ஆகியரோடு விளையாடிக் கொண்டிருக்கும்போது, எனது தாத்தா-பாட்டி என்னை அழைத்து நமது வீட்டிற்கு, “இருளர் பாம்புகளோடு வந்திருக்கிறார்” என்று கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு வாசற்படியில் ஒரு பெரிய பாம்பை விட்டார் அந்த இருளர். பிறகு, நாங்கள் அந்த இருளரை வராண்டாவில் அமரவைத்து உணவு உபசரித்து அனுப்பினோம். அந்த இருளர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். அப்போதிருந்தே இருளர்களது வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அப்படி பல ஆண்டுகளுக்கு முன்பாக அமுதன் பச்சைமுத்து, தன்ராஜ், பாண்டு என்ற 3 நபர்கள் என்னை இருளர்கள் வாழும் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார்கள். முதலில், நான் அக்கிராமம் ஏதோ பசுமையானதாக இருக்கும் என நினைத்தே சென்றேன். முட்கள் நிறைந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தோம். போகும் வழியில் தன்ராஜ் மற்றும் பாண்டு இருவரும் நான் பேசும் ஒவ்வொன்றிற்கும் கவிதை வடிவில் பதில் கூறிக்கொண்டே வந்தார்கள். எல்லோரும் பாட்டுப் பாடிக்கொண்டே சென்றோம்.

வாழ்வின் ரகசியங்களை அறிந்துகொண்டே இன்று வரையிலும் ஒரு தேசாந்திரியாக மட்டுமே சுற்றித் திரிகிறேன். முதலில், என்னைப் பார்த்தபடியே ஒரு பாட்டி அருகினில் வந்தார். அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். பிறகு, எனக்கு, “கங்கா” என்று ஒரு பெயர் வைத்தார். “கங்கா என்றால் என்ன?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்டேன். “கங்கா என்றால் கங்கா நதி, நீ ஒரு நதி” என்றார். பள்ளிக்கூட வாசலையே மிதித்ததில்லை, ஆனால், அந்தப் பாட்டிக்கு அப்படி ஒரு ஞானம். பிறகு காட்டுக்குள்ளே செல்லும்போது, ஒரு இருளர் செம்மரி ஆடுகளை மேய்த்துக் கொண்டபடியே சென்றார். உள்ளே செல்லச் செல்ல புதிதாக ஓர் உலகத்திற்கு நுழைவது போல் தோன்றியது. வெறும் ஓலைக்கீற்று கொட்டாய்தான் முழு வீடுமே. அதனுள் ஒரு அக்கா அழகான சின்ன சின்ன ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருவதைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் ஒதுங்கி நின்றார். எனது கையை அவர் கைகளோடு இணைத்து கொண்டேன். அவரது மௌனமும், கண்ணீர்த்துளிகளும் மட்டுமே எனக்கு பதில் அளித்தன. அங்கு நடக்கவே முடியாதபடி சேரும் சகதியுமாக இருந்தது. மிக அருகிலேயே ஒரு ஓடையும் ஓடிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலும் தத்தித் தத்தி தாவிக் கொண்டே பாட்டுப் பாடிச் சென்றேன். பின்பு, ஒரு பெரிய மீசை வைத்த தாத்தா, (ஊரிலே பெரியவர்) எங்கள் நான்கு பேரையும் வரவேற்றார். அங்கிருக்கும் வயல்வெளிகளை எல்லாம் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார். பிறகு, என்னை முழுவதுமாக யாரோ  பின்னிருந்து அணைத்துக் கொண்டது போல் உணர்ந்தேன். யாரென்று பார்த்தால் இரண்டு சின்ன பெண் பூக்கள்(குழந்தைகள்). ஒருமுறை எழுத்தாளர் பிரபஞ்சன் என்னிடம் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, “எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?” என்று. பிறகு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ஒரு கவிதை. “என்னைச்சுற்றி பூக்கள் மலராவிட்டால் என்ன? பூக்கள் பூக்கும் இடத்திற்கு நான் சென்றிடுவேன்”. ஏனென்றால்,அந்த இரண்டு குழந்தைகளும் எனது விரல்களைப் பிடித்த ஆரம்பத்திலிருந்து, நான் அங்கே விடைபெற்றுப்போகும் வரையிலும் என்னை விடவேயில்லை. முகத்தில் அவ்வளவு நாணம்(வெட்கம்). “இருளர்கள் என்று ஏன் அழைக்கிறார்கள்?” என்பது என்னுள் விடையில்லா வினாவாகவே இருந்து வந்தது. இருளர்கள் தமிழ்நாட்டின் முக்கிய பழங்குடியினர் சமூகமாகும். இவர்கள் பாரம்பரியமாக காடு மற்றும் இயற்கை வளங்களின் மீது நம்பிக்கை வைத்து வேட்டையாடுதல், மூலிகை சேகரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நான் நேரடியாக அந்தக் காட்டினுள் செல்லச் செல்ல நிறைய விஷயங்கள் புரிய ஆரம்பித்தது. அடர்ந்த இருட்டான காடுகளில் வாழ்ந்து வருவதால் இவர்களை, ‘இருளர்கள்’ என்று அழைக்கின்றனர். நான் சந்தித்த அந்த இரண்டு பெண் சிறுமிகளும் என்னிடம், எங்கள் ஊரில் இருப்பவர்களை, ‘காவல்காரன்’, ‘பாம்புக்காரன்’, ‘வேடவர்’, ‘வேடுவர்’, ‘வில்லி’, ‘காட்டுக்காரன்’ என்று தான் அழைப்பார்கள் என கூறினர். பிறகு, அக்கா ரொம்ப தூரம் நடந்து வந்திருக்காங்க போல,வா அக்கா போலாம்” என்று கைப்பிடித்தபடியே அவர்கள் வசிக்கும் ஓர் சின்னஞ்சிறிய ஓலைக் குடிசைக்கு என்னை அழைத்துச் சென்று இளநீர் கொடுத்தனர். “எங்களுக்கு இதுதான் அக்கா சொர்க்கம்” என்று கூறினர். வரிவடிவமே இல்லாத அவர்களின் மொழி பேரழகு. “ஏன், இவர்களின் பேச்சு வித்தியாசமாக உள்ளது?” என்று கேட்டேன். “ஏரவல்லம், எருக்கா, இரவா, இருளிக்கா, கோரவா” என்ற பெயர்கள் இவர்கள் பேசும் மொழி எனக் கூறினர். இந்த மனிதர்கள் எல்லோரும் எனக்கு மிக தனித்துவமாகவே தெரிந்தார்கள். இச்சமூகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் பண்பாட்டையே புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். காட்டில் வாழ்கிறார்கள் என்பதற்காகவே இவர்களுக்கு நாகரிகம் தெரியாதவர்கள் என்ற பொதுப்புத்தி எவ்வளவு பொய்யாக இருக்கிறது என்பதை நான் நேரடியாக உணர்ந்துகொண்டேன். பிறகு, நானும் அவர்களோடு ஒன்றாகிவிட்டேன். தொடர்ந்து “கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், பழமொழி” போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தேறின. வெளியுலக மனிதர்களைக் காட்டிலும், இவர்களிடம் உள்ள பாலின சமத்துவம் வியக்க வைத்தது. அங்கே சில குழந்தைகள் கொம்பாட்டம், குச்சியாட்டம் போன்ற நடனங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நானும் ஆடி மகிழ்ந்தேன்.

பிறகு, மீண்டும் ஒருநாள் இருளர்களைப் பார்க்க வேறு கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும், பழங்குடியினரைச் சேர்ந்த இருளர் மக்களும் அதிகமாக வசித்து வருவதை நேரடியாகக் காண முடிந்தது. தோட்டத்தொழில் செய்யும் இருளர்கள் அங்கே பெருவாரியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எண்ணெய் படாத தலை முடி, சுத்தத்தை மறந்த துணிகள் என்று மிகவும் வறிய கோலத்தில் இருந்தனர். ஆனால், அவர்கள் எல்லோரும் மிகவும் மன மகிழ்வோடு மட்டுமே இருந்தார்கள் .இங்கே வாழும் இருளர் சமூகத்தினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவ வசதிகளின் குறைபாடு மற்றும் போதிய சுகாதார விழிப்புணர்வு இல்லாததால்,நோய் பரவல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் அதிகரிக்கின்றன. பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற நவீன வாழ்க்கை நம்முடைய உண்மையான இயல்பிலிருந்து நம்மை மேலும் மேலும் அநியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் நாம் அர்த்தமற்ற வெறுமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் சென்ற நிறைய இருளர்‌ கிராமங்களில் இன்னும் சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மற்றும் ஆதரவின் பற்றாக்குறையால் சமூக முன்னேற்றம் மந்தமாக உள்ளது என்பதை என்னால் உணர முடிந்தது. இந்த சிக்கல்களைச் சமாளிக்க, அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடரும்…

[email protected]

The post நான் – ஒரு போஹேமியன் பயணி;2 – காயத்ரி சுவாமிநாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

வாக்குகள் சீட்டாக இருந்த காலம்

வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அல்லர். அவர் அமெரிக்கர், தொழில்நுட்ப ஜாம்பவான்- எலான் மஸ்க்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும்போதோ சீர்திருத்தும்போதோ உள்ளேயிருக்கும் ‘சிப்பு’களில் நிரல்களை ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக எழுதிவிடலாம் என்பது நாள்பட்ட குற்றச்சாட்டு. கொந்தல் சாத்தியங்கள் சமீபகாலங்களில் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இப்போது எலான் மஸ்கே சொல்லுகிறார்.

1982-இல் கேரளத்தின் பரவூர் இடைத் தேர்தலில் மெல்லப் புகுந்தது இந்த இயந்திரம். அன்று முதல் நாளது வரை இதைக் குறித்த ஐயங்களுக்குக் குறைவில்லை. விளக்கங்கள், உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள்- எவையும் நின்றபாடில்லை. இதற்கிடையே, இந்த இயந்திரம் படிப்படியாகக் கால் பரப்பி, புத்தாயிரமாண்டில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

நாம் அளிக்கிற வாக்குதான் இயந்திரத்தில் பதிவாகிறதா, பதிவாகிற வாக்குதான் எண்ணப்படுகிறதா என்று அறிந்துகொள்ள இந்த இயந்திரத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. தில்லுமுல்லு நடந்தால் கண்டறிய முடியாது. ஆகவே, வழக்காடவும் முடியாது. அதனால் இதைக் கறுப்புப் பெட்டி என்று அழைப்பவர் உண்டு. இதற்காக ஒரு காகிதச் சரிபார்ப்பு (Voter Verified Paper Audit Trial- VVPAT) முறை வந்தது. ஒருவர் வாக்களித்ததும் அது ஒரு காகிதத்தில் அச்சாகி கண்ணாடிச் சில்லின் வழி வாக்காளருக்கு ஒரு சில நொடிகள் காட்சி தரும். பிறகு அதை இயந்திரம் விழுங்கி விடும். இந்தக் காகித வாக்குகளை வாக்குச் சீட்டுகளாகக் கருதி அவற்றையே எண்ணலாம். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு இயந்திரத்தில் எத்தனை காகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதையாவது எண்ணலாம். அந்த எண்ணிக்கையை இயந்திரத்தில் பதிவாகியிருக்கிற  எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கலாம். 2016 மாநிலத் தேர்தல்களில் சில தொகுதிகளில் ஆணையம் இதைச் செய்து பார்த்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரேயொரு வாக்குச் சாவடியில் மட்டும் இந்தச் சோதனை நடந்தது. இந்த மாதிரியின் அளவு நிகழ்தகவு (propablity) சித்தாந்தத்தின்படி மிகக் குறைவு என்றனர் வல்லுநர்கள். ஆனால், ஆணையம் கேட்கவில்லை. பெரும் செலவில் வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட VVPATஆல் குறிப்பிடத்தக்க பலன் என்னவென்று தெரியவில்லை. ஆட்டம் தொடர்கிறது.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லாத ஒரு காலம் இருந்தது. வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்கிற வேறுபாடில்லாமல் எல்லா நாடுகளும் பயன்படுத்துகிற வாக்குச்சீட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டில் இருந்த காலம். அப்படியான காலத்தில், ஒரு தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் நான் தலைமை அலுவலராகப் பணியாற்றினேன். இந்த இயல் அதைப் பற்றியது.

ஆர்வெல்லின் ஆண்டில் நடந்த தேர்தல்

ஆண்டு: 1984. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. அக்டோபர் மாதம் இந்திரா காந்தி சுடப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு எஞ்சி இருந்தது. என்றாலும் ராஜீவ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி. அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தமிழகத்திலும் ஆட்சிக் காலம் ஓராண்டு இருந்தது. எம்.ஜி.ஆரும் ராஜீவை அடியொற்றி  சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. எதிரணியில் திமுக- ஜனதா -கம்யூனிஸ்ட் கூட்டணி.

நான் மதுரையில் ஓர் அரசுத் துறையில் பணியாற்றினேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தேன். அரசின் பழுப்புக் காகிதத்தில் நியமன ஆணை வந்தது. ‘145- சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அதனைச் சார்ந்த 24-மதுரை பாராளுமன்றத் தொகுதி, ஆகியவைகளுக்கு 24.12.1984-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு வாக்குச் சாவடியில் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.’  (விருப்பம் தெரிவிக்காத சிலருக்கும் ஆணை வந்தது, அது வேறு.) வாக்குச் சாவடி  விவரம் பிற்பாடு இன்னொரு ஆணை  வழியாக வந்தது- ’52- சாந்தி வித்யாலயா நடுநிலைப் பள்ளி, விளாங்குடி’. வாக்குச் சாவடி எண்ணும் தொகுதி எண்களும் முக்கியமானவை. காரணம் எனக்குப் பின்னால் தெரிய வரும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு தலைமை அலுவலர் தவிர ஐந்து அலுவலர்கள். எல்லோருக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பத்து நாட்கள் நகரின் மூன்று-நான்கு இடங்களில் சாவடி எண்களின் வரிசைப்படி வகுப்புகள் நடந்தன. எங்கள் வகுப்பு கே.கே.நகர், சுந்தரம் திரையரங்கில் (இப்போது ஜாஸ் அர்ஸ் சினிமாஸ்) நடந்தது. மதுரை நகரின் வட்டாட்சி அலுவலர்களில் ஒருவர் வகுப்பை நடத்தினார். ஓர் ஆவணப்படமும் திரையிட்டார்கள்.

ஐவர் அணி

எங்கள் அணியில் முதல் அலுவலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். இரண்டாமவர் வேளாண் பொறியியல் துறையில் வரைவாளர். மூன்றாமவர் பள்ளிக் கல்வித் துறையில் கணக்காளர். நான்காமவர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியர். ஐந்தாம் அலுவலர் வனத்துறையில் எழுத்தர். எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருந்தன. அவை சற்றுப் பின்னால் வரும். என்னைத் தவிர எல்லோரும் நடுத்தர வயதினராய் இருந்தனர். எல்லோரும் ஆண்கள். ஏனெனில், வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள். அதே பள்ளியில் பெண்கள் சாவடியும் இருந்தது. அதில் அலுவலர்களும் வாக்காளர்களும் பெண்கள்.

வாக்குப் பதிவிற்கு முன்பு

தேர்தலுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை. தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களைத் தலைமை அலுவலரிடம் கையளித்தார்கள். எம் சாவடிக்கான பொருட்கள் பாத்திமா கல்லூரியில் வழங்கப்பட்டது.  பொருட்களின் பட்டியல் பெரிது. அவற்றில் முக்கியமானவை:

-வாக்குப் பெட்டிகள், அவற்றைப் பொதிய கித்தான் பைகள், முறுக்கு நூல், மென் கம்பி, நாடா, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச் சீட்டுகளைத் தள்ளிவிட மரத் தள்ளுகோல்.

-அழியாத மை, நெகிழிக் குச்சி (மை தீட்ட), கந்தைத் துணி (வாக்காளரின் கைகளில் எண்ணெய்ப் பசை இருந்தால் துடைக்க).

-வாக்குச் சீட்டுப் புத்தகங்கள். இதில் அடிச்சீட்டும் இருக்கும். வாக்குச் சீட்டைக் கீழித்தெடுக்க இரும்புச் சட்டம்.

-தாள்கள், படியெடு தாள் (Carbon Paper), பேனா, குண்டூசி, பசை, பிளேடு, மையுறி தாள்.

-அலுவலர் அடையாள அட்டைகள், முகவர் அனுமதிச் சீட்டுகள்.

-வாக்குச் சீட்டில் குறியீடு செய்வதற்கான குறுக்கை அம்புக்குறியுள்ள ரப்பர் முத்திரை, எல்லா வாக்குச் சீட்டுகளின் பின்புறமும் பதிப்பதற்கான பிரித்தறி முத்திரை (இதில் வாக்குச் சாவடியின் எண்ணும் தொகுதி எண்ணும் இருக்கும்; எங்களது முத்திரைகள் சட்டமன்றத்திற்கு 52/145, நாடாளுமன்றத்திற்கு 52/24), மையொற்றுப் பெட்டகம் (ink pad).

-சுவரொட்டிகள்

-25க்கும் மேற்பட்ட படிவங்கள், உறைகள்

எனக்கு உதவியாக முதல் அலுவலரும் வந்தார். அவரிடம் ஸ்கூட்டர் இருந்தது. என்னிடம் சைக்கிள். இருவருமாக எல்லாப் பொருட்களையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

சாவடி அமைக்கப்பட்டிருந்த நடுநிலைப் பள்ளி ஒரு ஓட்டுக் கட்டடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. துப்புரவாக இருந்தது. இரண்டு வகுப்பறைகளை இணைத்து ஒரு வாக்குச் சாவடி ஆக்கி இருந்தார்கள். அலுவலர்களுக்கான மேசை- நாற்காலி, முகவர்களுக்கான இருக்கை எல்லாம் கிரமமாக இருந்தது. இரண்டு  வாக்களிப்பு மேசைகள். அவை சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று பக்கமும் கனமான வெள்ளை அட்டையால் மறைப்பு இருந்தது. பெண்கள் சாவடியிலும் இதே விதமான ஏற்பாடுகள். இந்த வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகளை வேறு அறைகளுக்கு மாற்றியிருந்தார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் முந்தின தினமே வந்து பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ததாக எங்களை வரவேற்பதற்காகக் காத்திருந்த பள்ளி ஆசிரியர் சொன்னார்.

பெண்கள் சாவடியின் தலைமை அலுவலருக்கு உதவியாக அவரது கணவர் வந்திருந்தார். இருவரும் பொருட்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். எங்கள் அணியின் முதல் அலுவலரும் விடைபெற்றுக் கொண்டார். அவர்களுக்கு வீட்டில் பிள்ளைகள் இருந்தார்கள், வேலைகள் இருந்தன. இப்போது இரண்டு சாவடிப் பொருட்களுக்கும் நான்தான் ராக்காவல். இரண்டு சாவடிக்கும் சேர்த்து ஒரு காவலர். முன்னாள் ராணுவ வீரர். அவரும் முந்தின நாள் வந்துவிட்டார். அவரது சீருடை விரைப்பாக இருந்தது. அதிலும் விரைப்பான சல்யூட் ஒன்றை எனக்கு வழங்கினார். அதை முறையாக அவருக்குத் திருப்பித் தர எனக்குத் தெரியவில்லை. காவலரும்  என்னுடன் பள்ளியில் தங்கினார். நான் ஒரு பயணப் பொதியில் மாற்று உடை, விரிப்பு, துண்டு, சோப்பு, சீப்பு முதலானவற்றை அடைத்துக்கொண்டு போயிருந்தேன். காலைக் கடன்களுக்கு என்ன செய்ய? பள்ளியில் ஒரு கழிவறை இருந்தது. பள்ளிக்கு அருகாமையில் ஒரு பொதுத் தண்ணீர்க் குழாய் இருந்தது. காலை ஆறு மணி முதல் தண்ணீர் வரும். பெண்கள் ஆறரை மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு முன்னர் குளித்துவிடுங்கள் என்று உள்ளூர்க்காரர் ஆலோசனை வழங்கினார். நாங்கள் அவ்விதமே செய்தோம்.

வாக்குச் சாவடி, தொகுதி முதலான விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும்,  பெரிதாக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மாதிரிச் சுவரொட்டிகளையும் சாவடிக்கு வெளியே ஒட்டினோம்.

சமயநல்லூர் சட்டமன்ற இடத்திற்கு அதிமுகவும் திமுகவும் மோதின. அதிமுகவின் சார்பாக ஏ.சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். திமுக வேட்பாளார் எஸ்.செல்வராஜ். பின்னாளில் கலைஞர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், அப்போதைய எம்.பி.யான ஏ.ஜி.சுப்பராமனுக்கு டிக்கெட் கொடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் வேட்பாளர், நிறைவாழ்வு வாழ்ந்து சமீபத்தில் விடை பெற்றுக்கொண்ட என்.சங்கரய்யா. நான்கு கட்சிகளின் முகவர்களும் வாக்குப் பதிவு தொடங்கும் முன்னரே வந்தனர். வாக்குப் பதிவு  அலுவர்களும் வந்தனர்.

எல்லா வாக்குச் சீட்டின் பின்னாலும் தலைமை அலுவலர் ஒப்பமிடவேண்டும். ஒரு புத்தகத்தில் 50 சீட்டுகள் இருக்கும். நான் நான்கு புத்தகங்களில் முன்னதாக ஒப்பமிட்டு வைத்தேன். வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை முகவர்களிடம் காட்டிய பிறகு அதை மூடித் தாழிட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்களை முகவர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள் குறித்துக்கொள்ளலாம்.

வாக்குப் பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்னரே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றனர். காவலர் வரிசையை ஒழுங்குபடுத்தினார். வாக்குப் பதிவு குறித்த நேரத்தில் தொடங்கியது. போலிசார் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தனர்.

அலுவலரின் பொறுப்புகள்

வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பது முதல் அலுவலரின் பணி. வாக்காளர் அடையாள அட்டை புழக்கத்தில் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வாக்காளர்கள் பொதுவாக கட்சிகள் வழங்கும் அலுவல் சார்பற்ற அடையாளச் சீட்டைக் கொண்டு வருவார்கள். அதில் வாக்காளரது பெயர், பட்டியலில் அவரது தொடர் எண், பகுதி எண், சாவடி எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டு இல்லாமலும் வரலாம். அவர்களிடம், பெயர், முகவரி விவரங்களைக் கேட்டறிந்து பட்டியலில் அவரது பெயரைக் கண்டறிய வேண்டும். பிறகு முதல் அலுவலர் வாக்காளரின் பெயரையும் மற்ற விவரங்களையும் உரத்த குரலில் அறிவிப்பார். முகவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அப்போது தலைமை அலுவலர் இடையிட்டு விசாரிக்க வேண்டும். தலைமை அலுவலர் மனநிறைவு கொண்டால் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதில் முகவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை அதற்கான படிவத்தில் பதிவு செய்யலாம். வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை வாக்காளர் ஏற்கவில்லையென்றால் அவர் பிறிதொரு படிவத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

வருகை தந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் முதல் அலுவலர் குறித்து வைக்க வேண்டும். வாக்குப் பதிவு முடியும் முன்பு மூன்று முறை தேர்தல் அதிகாரியின் பிரதிநிதிகள் இந்த விவரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அலைபேசியும் கணினியும் இணையமும் இல்லாத காலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும்போதே பதிவான வாக்குகளின் கணக்கை ஆணையம் அறிவித்தது.

இரண்டாம் அலுவலரின் பணி அடையாள மை இடுவது. அரை நிமிடம் மை அழியாமல் இருக்கிறதா என்பதையும் இவர் கவனித்துக்கொள்வார்.

மூன்றாம் அலுவலரிடம் சட்ட மன்ற வாக்குச் சீட்டு இருக்கும். முதல் அலுவலர் பெயரையும்  விவரங்களையும் அறிவிக்கும் போது, பகுதி எண்ணையும் தொடர் எண்ணையும் அடிச்சீட்டின் பின்புறம் குறித்து வைப்பார். அதில் வாக்காளரின் ஒப்பம் அல்லது பெருவிரல் ரேகையைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் முனையில் பிரித்தறி சின்னம் (52/145) பதிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை தொடர் எண்களின் வரிசைப்படி வழங்கினால் முகவர்கள் குறிப்பிட்ட வாக்காளர் பெறும் வாக்குச் சீட்டின் தொடர் எண்ணைக் கணிக்கக் கூடும். இதைத் தடுப்பதற்குப் பயிற்சியின்போது ஒரு தந்திரம் சொல்லித்  தந்தார்கள்.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுப் புத்தகங்களை தயாராக வைத்துக்கொண்டு சீட்டுகளை வரிசை மாறி வழங்க வேண்டும்.

நான்காம் அலுவலர் இதே பணிகளைச் செய்து நாடாளுமன்றச் சீட்டை வழங்குவார்.

ஐந்தாம் அலுவலரிடம்தான் வாக்குச் சீட்டில் பதிக்க வேண்டிய குறுக்கை முத்திரை இருக்கும். இவர் மேசையின் மீதுதான் வாக்குப் பெட்டிகளும் இருக்கும். இவர் இரண்டு வாக்குச் சீட்டுகளையும் வாங்கி பிரித்தறி சின்னம் வெளித்தெரியும் விதமாக நீள வாக்கிலும் குறுக்கிலும் மடிப்பார். பிறகு சட்டமன்ற வாக்குச் சீட்டைப் பிரித்து அதனையும் முத்திரையையும் வாக்காளரிடம் கொடுப்பார். வாக்காளர் வாக்களிக்கும் அறைக்குச் சென்று முத்திரையைப் பதித்து, பிறகு சீட்டை மடித்து அலுவலரின் முன்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். அடுத்து நாடாளுமன்ற சீட்டுக்கும் இதே நடைமுறைதான்.

வாக்குப் பதிவுக்குப் பின்

அன்றைய தினம் 800 வாக்குகளுக்கு மேல் பதிவாயின. குறித்த நேரத்தில் வாக்குப் பதிவும் முடிந்தது. வாக்குப் பெட்டியைப் பூட்டி அரக்கு வைக்க வேண்டும். முகவர்கள் விரும்பினால் அதில் அவர்களது முத்திரையைப் பதிக்கலாம். நான்கு முகவர்களும். பித்தளை முத்திரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். இளகி வரும் அரக்கின் சூடு ஆறுவதற்கு முன்பு தங்கள் முத்திரையைப்  பதித்தார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முகவர்கள் இந்த முத்திரைகளைப் பரிசோதிக்கலாம்.

அடுத்து ஒரு முக்கியமான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தச் சாவடிக்காக முந்தின நாள் நான் பெற்றுக்கொண்ட  வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், நீக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்கள் (இருந்தால்) இவ்ற்றை ஒரு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து பதிவான வாக்குகளின்  எண்ணிக்கையை கணக்கிட்டு அதையும் பதிய வேண்டும்.

இது வாக்குப் பெட்டியில் காணப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையாக இருக்கும். இந்தப் படிவத்தில் தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களுக்கு வழங்க வேண்டும். இதைப் பெற்றுக்கொண்டு முகவர்கள் விடை பெற்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது இதை சரிபார்க்கலாம்.

தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட படிவங்களை நிரப்பி அவற்றுக்கான உறையில் இட வேண்டும். எல்லாப் படிவங்களிலும், உறைகளிலும் தொகுதி எண்ணையும் சாவடி எண்ணையும்  நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கான மதிப்பூதியம் ரொக்கமாக என்னிடம் தரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டனர். இப்போது  வாக்குப் பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகள், ஏராளமான உறைகள், திருப்பி அளிக்க வேண்டிய வாக்குச் சாவடிப் பொருட்கள் எல்லாவற்றையும்  முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு இரண்டு சாவடிகளின் தலைமை அலுவலர்களும் ஒரு காவலரும் காத்திருந்தோம். உள்ளுர்க்காரர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இரவு 9 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் வந்து, எங்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் முறையாகப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றிரவு தல்லாகுளம் வைத்தியலிங்கா லாட்ஜூக்கு சைக்கிளில் திரும்பியபோது நகரமெங்கும் வீட்டிற்குள்ளும் வீதிகளிலும் தேர்தல் பேச்சாகவே இருந்தது. 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பற்றி தனது ‘India After Gandhi’ நூலில் ராமசாந்திர குஹா ஓர் இயலே எழுதியிருக்கிறார். 2,24,000 வாக்குச் சாவடிகள், 20 இலட்சம் வாக்குப் பெட்டிகள், 56,000 தலைமை அலுவர்கள், 2,80,000 துணை அலுவலர்கள், 2,24,000 போலிஸ் என்று பலர் இயங்கிய தேர்தல் அது. 1984 தேர்தலில் இன்னும் அதிகமான மனித வளம் பயன்பட்டிருக்கும். அதில் எனது பங்கு ஓர் அணிலைக்கால் குறைவாக இருக்கலாம். என்றாலும் நிறைவாக இருந்தது. வாக்கு இயந்திரம் வந்த பிற்பாடு அதைக் குறித்த சர்ச்சைகள் மேலெழும்போதெல்லாம் எனக்கு சமயநல்லூர் நினைவுக்கு வரும்

2024 தேர்தலில் பதிவான வாக்குகளை ஆணையம் பல நாட்கள் தாமதமாகத்தான் அறிவித்தது. அதுவும் தொகுதி வாரியாக அறிவிக்கவில்லை. கணினி இல்லாத காலத்திலேயே பதிவான வாக்குகளின் கணக்கை தொகுதி வாரியாக அடுத்த நாளே துல்லியமாக அறிவித்தது அந்நாளைய ஆணையம்.

Association of Democratic Return (ADR) என்கிற அமைப்பு, 2024 தேர்தலில், இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணப்பட்ட வாக்குகளையும் ஒப்பிட்டது. 543 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே இவை ஒத்துப் போயின. 362 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தன. மொத்தம் கூடுதல்: 5.5 லட்சம் வாக்குகள்! 176 தொகுதிகளில் குறைவாக இருந்தது. மொத்தம் குறைவு: 38,000 வாக்குகள். ADR வழக்குத் தொடுத்திருக்கிறது.

சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் கணக்கு அடங்கிய படிவத்தை இணையதளத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரியது ADR. ஆணையம் மறுத்துவிட்டது. காகிதச் சரிபார்ப்பும் (VVPAT) முறையாக நடப்பதில்லை. இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய உரையாடல் நடந்த வண்ணம் இருக்கிறது. இவையெல்லாம் இந்த இயந்திரத்தின் மீதும் ஆணையத்தின் மீதும் நமது நம்பிக்கையைக் குறைக்கிறது.

வாக்குச் சீட்டுகள் நம்பகமானவை. ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தலைமை அலுவலரின் ஒப்பம் இருக்கும். சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளைத் தொடர் எண்களோடு சோதிக்கலாம். வாக்காளர் அளிக்கிற வாக்குதான் எண்ணப்படுகிறது என்பதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளலாம். உலகின் பல ஜனநாயகங்கள் இன்றளவும் வாக்குச் சீட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. நாம் வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்புகிற காலம் வரும். இந்த ஐயங்கள் அப்போது இல்லாமலாகும்.

(அனுபவம் தொடரும்)

[email protected]

The post காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன் appeared first on வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு .

  •  

இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, கொடூரமான வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் […]

Source

  •  

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர். இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம். பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் […]

Source

  •  

தௌஹீது பாத்திமாவும், இல்லாதுபோன அவரது புத்தம்புது இல்லமும் (கட்டுரை – 9)

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு […]

Source

  •  

பழையவரால் என்ன பயன்?

கவிதை குறித்துப் பிளேடோவில் தொடங்கி, ஆடன் வரை ஏறத்தாழ எழுபது கவிஞர்கள், விமர்சகர்களின் கருத்துகளைச் சிறிய கட்டுரைகளாக இந்த இரண்டு புத்தகங்களிலும் அளித்திருக்கிறார் பேராசிரியர். இது ஒரு பெரிய பிரயாணம் தான்.(சமஸ்கிருதத்திலுள்ள கவிதைக் கோட்பாடுகளையும் இது போல் ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அவரது மறைவு நிகழ்ந்து விட்டிருக்கிறது.)
  •  

6. ஞானங்களின் விளைநிலம்

இந்திய தொன்மத்தில்  சூரியக்கடவுளின் மகன்களான அஸ்வினி தேவர்கள் மருத்துவக்கடவுளாக குறிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதம் விஷ்ணுவிடமிருந்து பிரம்மனுக்கு, பிரம்மனிடமிருந்து தட்ச பிரஜாபதிக்கும், அவரிடமிருந்து அஸ்வினி தேவர்களுக்கும் வழங்கபட்டதாக கூறப்படுகிறது.  அஸ்வினி தேவர்களிடமிருந்து இந்திரனுக்கு கற்பிக்கப்படுகிறது.
  •  

சிக்கிக் கொண்ட இராஜகுமாரன்

சத்ர சாமரங்கள் இன்றி, இந்த அறிவிப்பு முடியும் முன்னேயே தனியாக உள்ளே வந்து விட்ட சகோதரனைக் கண்ட ஹர்ஷன் திகைத்தான்.  பல நாட்களாக பராமரிப்பின்றி விட்ட கேசமும்,  நீளமான உடையும்,  எந்த விதமான அலங்காரமோ, ஆசமனம் என்பதை விட்டவனாக,(தினசரி செயல்கள் எதுவுமே செய்யாமல் இருந்தான் என்பது சொல்லப் படுகிறது.) பல நாட்களாக நீராடலோ, சரியான உணவோ, நல்ல தூக்கமோ இல்லாமல் சிவந்த கண்களும், தன் அந்தரங்க சேவகர்கள் மட்டுமே உடன் இருக்க சாதாரண பிரஜை போல உடல் முழுவதும் பிரயாண களைப்பும் தூசி படிந்த உடலுமாக, வசுந்தரா- பூமி, ராஜ்யம்,  அதற்கு பொறுப்பான மூத்தவன், ஹூணர்களை வெற்றி கொண்டு வந்திருக்கிறான்.
  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 9

சூரியனை விட, மிகப் பெரிய நட்சத்திரங்கள், மிகப் பெரிய கருந்துளைகள், சூப்பர் நோவா என்று பல்வேறு ரட்சச அமைப்புகளை, விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால், இவை யாவும், நம்மைச் சுற்றியுள்ள அமைப்புகளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆக, மிகப் பெரிய விண்வெளி அமைப்புகள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, ஈர்ப்பு அலைகள். பிரபஞ்சத்தில், மிகப் பெரிய மோதல்கள் நிகழ்ந்தால் மட்டுமே, ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன
  •  

நமீபியாவில் வாழும் ஹிம்பா பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

ஹிம்பா: ஓர் அறிமுகம் அடர்ந்த பாலைவனங்கள் மற்றும் வறண்ட மலைப்பாங்கான நிலங்களால் சூழப்பட்ட நமீபியாவின் வடமேற்குப் பகுதியில் (குனேனே பிராந்தியம்) வாழும் ஓர் அரை நாடோடிப் பழங்குடியினர் தான் ஹிம்பா மக்கள். கிட்டத்தட்ட 50,000 மக்கள் தொகையைக் கொண்ட (2023 மதிப்பீடு) இவர்கள், தங்கள் பாரம்பரியத்தையும், தனித்துவமான வாழ்க்கை முறையையும் இன்று வரை கடைப்பிடிக்கின்ற இந்த பழங்குடியினர், உலகில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய கலாசார சமூகமாக விளங்குகின்றனர். ஹிம்பா மக்களின் பூர்வீகம் ஹிம்பா மக்கள், முதலில் ஹெரேரோ […]

Source

  •  

பொய்யாக உருவாக்கப்பட்ட கதைகளால் சஃப்தார் அலியின் வீடு பலியானது எப்படி? (கட்டுரை – 8)

தமிழில்: மணிபிரகாஷ் (தொடரின் அனைத்து கட்டுரைகளையும் வாசிக்க) சஃப்தார் அலிக்கு வயது 78. 1970-களில் கட்டப்பட்ட அவரது வீடு, அவரின் இரண்டு மகன்களான சையத் கமர் அப்பாஸ் மற்றும் சையத் ஃபராஸ் அப்பாஸ் ஆகியோருக்குச் சொந்தமானது. தங்கள் விவசாய நிலம் ஒன்றை விற்று வந்த பணத்தை வைத்து, 2002-இல் அந்த வீட்டை வாங்கினர். அப்போதிலிருந்து சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எந்தவொரு சட்டவிரோதக் கட்டுமானம் குறித்தும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (PDA) எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் […]

Source

  •  

லண்டனிலிருந்து அன்புடன் - 2

கரடிக்கு அவர்கள் உணவு வாங்கி தருகின்றனர். அப்பொழுதுதான் கரடிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, “பேடிங்டன்” எனும் ரயில் நிலையத்தின் பெயரையே கரடிக்கு வைக்கின்றனர். அதற்குள் குழந்தைகள் அங்கு வந்து சேருகின்றனர். அழகான பேசும் கரடியை பார்த்ததும், கரடியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சிறுவர்கள் விரும்புகின்றனர்.

  •  

பேசும் கடல்

” ஐயோ! பாட்டி.. விளக்கமா சொல்லுங்க ” என்று அமுதா சலிப்புடன் மணலில் உட்கார்ந்தாள். கடல்பாட்டி மெல்ல வந்து அவள் காலை நனைத்தார். அவளுக்குக் கிச்சுகிச்சு மூட்டியது போல இருந்தது

  •  

ஏன் பிறந்தோம் - 2

நாம் இப்போது நினைப்பது போல அத்தனை எளிதாக இந்தச் செயல் நடக்கவில்லை. மனிதமூளையில் சிந்தனை என்ற இரசாயனச்செயல் உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின.

  •  

பாடிக்கிட்டே படிக்கலாம்!

பாடப் புத்தகங்கள் மொழி கற்றலில் அது நேரடியாக செயல்படும். கணிதம், வரலாறு, அறிவியல் போன்ற அடிப்படை பாடங்களையும் பாடல்கள், காட்சிகள், கதைகள் என பல்வேறு இலக்கிய வகைமைகள் மூலம் கொடுக்க முடியும்.

  •  

சகுந்தலா தேவி

அவரோட அப்பா, சகுந்தலா சிறு வயதாக இருக்கும் போது சர்க்கஸில் சீட்டு கட்டடில் எண் வித்தைகள் செய்வதற்கு வீட்டில் பயிற்சி எடுக்கும் போது சகுந்தலா தேவி அதை கவனித்துக் கொண்டே இருப்பார்.

  •  

குழந்தைகளின் உரிமைகள் – 2

காரில் குழந்தைகளை உட்கார வைத்து, கார்க்கதவைப் பூட்டிக்கொண்டு போய் விட்டார் ஒரு பெண். அந்தக் குழந்தைகள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், நேரம் போகப்போக, காருக்குள் காற்றோட்டம் இல்லாமல், சுவாசிக்கக் கூட முடியாமல் இரண்டு குழநத்தைகள் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். எவ்வளவு பெரிய கொடுமை !

  •  

புல்டோசர் இடிப்புகள் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? (கட்டுரை – 7)

தமிழில் : நந்தினி கடந்த நவம்பர் மாதம், சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக, பரவலான வரவேற்பைப் பெற்ற ஒரு தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியது. இருப்பினும், அதன் நோக்கத்திலும் செயலாக்கத்திலும் அத்தீர்ப்பு குறைபாடுகளைக் கொண்டிருப்பதாகவே தோன்றியது. இக்கட்டுரையில், இத்தீர்ப்பையும், புல்டோசர் இடிப்புகள் தொடர்பாக அது முன்வைத்த கருத்துகளையும், சமூகத்தில் அது ஏற்படுத்திய மற்றும் ஏற்படுத்தத் தவறிய பாதிப்புகளையும் விரிவாக ஆராய்வோம். இந்திய நீதித்துறையில் அடிப்படைத் தூண்களாகக் கருதப்படும் சட்டத்தின் ஆட்சி , அதிகாரப் […]

Source

  •  

தென்னாப்பிரிக்க ஜூலு பழங்குடிகள் – தீபா ஜெயபாலன்

தென்னாப்பிரிக்காவின் தென்கோடியில், தங்கமென மலர்ந்த இனம், பசுமையால் புனைந்த வனம், காற்றின் அலைகளும், களிறுபோல் விரிந்து பரந்த மலைச்சரிவுகளும், மண் வாசனையால் நெஞ்சைத் துளைக்கும் பசுமை மலைகளின் வாசல் வழியாகப் பளிங்குப் போல ஓடும் சுனைகளோடும், வானளாவும் மரங்களின் நிழலோடும் வாழும் பழங்குடியாம் ஜூலு! ஆளுமைத் தன்மைக்கும் பாரம்பரியத்திற்கும் அச்சாரமாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறையை எழுதிடப் பேரவா… ஜூலு பழங்குடி அறிமுகம்: ஜூலு பழங்குடி என்பது தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பழங்குடிகளில் ஒன்றாகும். ஜூலு மக்கள், நுகுனி […]

Source

  •  

ஈர்ப்பு அலைகள் – பகுதி 8

இரண்டு அமெரிக்க தளங்கள் இந்த நிகழ்வைப் பதிவு செய்திருந்தாலும், இரண்டுமே தவறாக பதிவு செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழ வாய்ப்பிருக்கிறது. அத்துடன், அமெரிக்க தளங்கள் இரண்டும், வட துருவத்தில் இருக்கிறது. தென் துருவத்தில் இதைப் போல வேறு எந்த அமைப்பும் இல்லை. ஜப்பானில் உள்ள KAGRA இன்னும் கட்டுமான அளவில் இருந்தது. இத்தகைய நிகழ்வை, பல்வேறு தளங்கள் பதிவு செய்தால் இரண்டு விஷயங்கள் தெரிய வரும்: 1) உண்மையில் இந்த ஈர்ப்பு அலை எந்த திசையிலிருந்து வந்தது – இது triangulation என்று சொல்லப்படுகிறது. 2) பல தளங்கள் பதிவு செய்வதில், சந்தேகமின்றி, இது ஈர்ப்பு அலை என்று தெளிவாகிறது
  •