Reading view

கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை” 

கானல்வரி பக்கத்தில் புத்தகத் திருவிழாக்களை ஒட்டி வகைமை வாரியான நூல் பரிந்துரைகளைத் தொடர்ந்து பதிந்து வருகிறோம். 

நாளை (06-09-2024) தொடங்கவிருக்கும் மதுரை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் முதல் நவீனம் வரையிலான நாவல், சிறுகதை, கட்டுரை நூல்கள் அடங்கிய பட்டியலை இங்கு பதிவிடுகிறோம். இப்பட்டியல் ஆரம்பகட்ட மற்றும் நடுத்தர வாசகர்கள் பயன்பெறுதற் பொருட்டு பரிந்துரைக்கப்படுகிறது.

இந்நூற்பட்டியலைப் பரிந்துரைத்து உதவிய காலச்சுவடு அய்யாசாமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

படங்களைத் தொடர்ந்து பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

நாவல்கள்

1) கிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில் – எம்.எஸ்)

2) தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் – சுந்தர ராமசாமி )

3) மஹ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

4) மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்ஞப்துல்லா, (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

5) கடல்புரத்தில் – வண்ணநிலவன்

6) ஈரம் கசிந்த நிலம் – சி.ஆர்.ரவீந்திரன்

7) தண்ணீர் – அசோகமித்திரன்

8) சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்

9) அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்

10) நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்

11) தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்

12) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்

13) நாகம்மாள் – ஆர்.ஷண்முகசுந்தரம்

14) பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்

15) பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு

16) ஜே.ஜே.சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி

17) புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

18) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்

19) புனலும் மணலும் – ஆ.மாதவன்

20) அஞ்சு வண்ணம் தெரு – தோப்பில் முஹம்மது மீரான்

21) அமிர்தம் – தி. ஜானகிராமன்

22) மாதொருபாகன் – பெருமாள்முருகன்

23) வெல்லிங்டன் – சுகுமாரன்

24) அஜ்னபி – மீரான் மைதீன்

25) சாய்வு நாற்காலி – தோப்பில் முஹம்மது மீரான்

26) காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், (தமிழில், கே.நல்லதம்பி)

27) பால்யகாலசகி – வைக்கம் முஹம்மது பஷீர், (தமிழில் -குளச்சல்.மு. யூசப்)

சிறுகதைகள்

28) சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்

29) குதிரைக்காரன் – அ. முத்துலிங்கம்

கட்டுரைகள்

30) மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்

31) கோவில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி

32) உய்யடா உய்யடா உய் – இசை

33) கெட்டவார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன்

34) பதிப்புகள் மறுபதிப்புகள் – பெருமாள் முருகன்

35) மயிர்தான் பிரச்சினையா – பெருமாள் முருகன்

36) சாதியும் நானும் – பெருமாள் முருகன் (ப. ஆ)

37) பதிப்பும் படைப்பும் – கண்ணன்

38) நகலிசைக் கலைஞன் – ஜான்சுந்தர்

39) பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்

40) நடந்தாய் வாழி காவேரி – சிட்டி, தி.ஜானகிராமன்

41) அந்தக் காலத்தில் காபி இல்லை – ஆ.இரா.வேங்கடாசலபதி

42) எனது இந்தியா – ஜிம் கார்பெட், (தமிழில் -யுவன் சந்திரசேகர்)

43) என்கதை – கமலாதாஸ், (தமிழில் – நிர்மால்யா)

44) கவர்ன்மென்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தி, (தமிழில் – பாவண்ணன் )

45) நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை, (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

46) திருடன் மணியன்பிள்ளை -ஜி.ஆர்.இந்துகோபன், (தமிழில் – குளச்சல் மு.யூசுப்)

47) ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – டி.வி.ஈச்சரவாரியர் (தமிழில்,குளச்சல் மு.யூசுப்)

48) ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும் – ஆ.சிவசுப்பிரமணியன்

49) கிழக்கும் மேற்கும் பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் – மு.இராமனாதன்

50) காலந்தோறும் பெண் – ராஜம் கிருஷ்ணன்

The post கானல்வரி பரிந்துரைகள் : “காலச்சுவடு – கிளாசிக் முதல் நவீனம் வரை”  appeared first on Kaanalvari.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 40-41 | அத்தியாயம் 42-44 அத்தியாயம்-42...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 38-39 | அத்தியாயம் 40-41 | அத்தியாயம் 42-43...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 36-37 | அத்தியாயம் 38-39 | அத்தியாயம் 40-41...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 34-35 | அத்தியாயம் 36-37 | அத்தியாயம் 38-39...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 32-33 | அத்தியாயம் 34-35 | அத்தியாயம் 36-37...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 30-31 | அத்தியாயம் 32-33 | அத்தியாயம் 34-35...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 28-29 | அத்தியாயம் 30-31 | அத்தியாயம் 32-33...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

மின்னல், மழை, மோகினி

 (1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-29 | அத்தியாயம் 30-31...

The post மின்னல், மழை, மோகினி appeared first on சிறுகதைகள்.

  •  

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை

என்னய்யா மெஸ் இது. போவும்போதுதகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.  

அவர்களோசார் செம காமெடியா பேசறாரில்லே, என விதந்து, சினிமாவுக்கு வசனமெழுதப் போனா நிச்சயமா பெரியாளா ஆகிடுவாரு என்று அவன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்டார்கள்.

இந்த அன்றாடத்தின் சலிப்பைஉள்ளார்ந்த புகைச்சலைக் கதையாக எழுதவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. சரியான சம்பவமாக மாட்டாமல் எப்படி எழுதுவது என்று பிடிபடவில்லை. இதைத்தான் ஜானகிராமன் கதை உட்காருவது என்று சொல்கிறாரோ என்று தோன்றிற்று. சலிப்பை சுவாரசியமாக எதை வைத்து எப்படி எழுதுவது என்று மனம் ஓயாமல் உருட்டிக்கொண்டே இருந்தது.

அந்த ரொட்டீனுக்கு இடையில் கொஞ்சம் ஆறுதலாகவும் சமயத்தில் எரிச்சலூட்டும்படியாகவும் இருந்தது தேவிபாரதிதான். அவன் எப்படி வந்து அறிமுகப்படுத்திக்கொண்டான் என்பதே நினைவில் பதியாதபடிக்கு சுந்தர ராமசாமி சொல்வதைப்போல 'புகைமூட்டமாகஇருந்தது.

அவன் ஆபீஸுக்குதான் தேடி வந்திருக்கவேண்டும். ராஜசேகரன் என்கிற தேவிபாரதி பாவமாய் அவனைவிடவும் ஒல்லியாய் இருந்தான். அவனை இன்னும் நோஞ்சானாய்க் காட்டியது, அவன் நிறமும் ஒட்டிய தேகமுமாய்த்தான் இருக்கவேண்டும். 

ஆபீஸ் அத்தியாயம் 55 புகை 

  •  

ராமன் வனவாசம் போன வழி - சீர்ஷேந்து முகோபாத்யாய் - தமிழில் தி. அ . ஸ்ரீனிவாசன் - வாசிப்பு குறிப்பு

 


வோல்டேரின் மைக்ரோமெகாஸ் கதையில் மைக்ரோமேகாசும் அவனது நண்பனும் வேற்று கிரக வாசிகள். மைக்ரோமெகாசின் கணுக்காலை நனைக்கும் ஆழம் தான்  பசிபிக் பெருங்கடல். திமிங்கிலங்கள் ஏதோ சிறு புழுக்கள் போல நீரில் நெளியும். மனிதர்கள் அவனோடு உரையாடுவார்கள். உலகின் அற்பத்தனங்களை, மனிதர்களின் மலினங்களை சித்தரிக்க அவனை காட்டிலும் பன்மடங்கு ஆற்றல்மிக்க கற்பனையும் லட்சியமும் உரைகல்லாக கொண்டு வந்து ஒப்பிடுகிறோம். கால- வெளி தொலைவு எல்லாவற்றையும் அற்பமாக காட்டுகிறது. 


சீர்ஷேந்து முகோபாத்யாய் ராமன் வனவாசம் சென்ற தடத்தை பின்தொடர்ந்து பயணிக்க முடிவெடுக்கிறார். புராண காலத்து ராமனை அளவுகோலாக கொண்டு நிகழ்கால இந்தியாவை மதிப்பிடுகிறார். நவீன அறிவுஜீவிக்கு புண்ணிய தலங்கள் ஒரே சமயத்தில் மதிப்பிற்குரியதாகவும் ஒவ்வாமை அளிப்பதாகவும் இருக்கிறது. காந்தி வாரணாசிக்கு சென்ற போது அதன் சீர்கேட்டால் சீண்டப்பட்டார். சீர்ஷேந்து 1981 ல் அயோத்தியும் பிரயாக்கும் சென்றிருக்க வேண்டும். நான் 2010 ல் காசிக்கு சென்றிருக்கிறேன். நம் புனித தலங்கள் ஏன் இப்படி இருக்கிறது என்றொரு கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. நூலில் அயோத்தியை விக்கிரமாதித்தன் கண்டடைந்த கதையை சுருக்கமாக சொல்கிறார். கருப்பு குதிரையில் ஆற்றில் இறங்கும் ஒருவன் மறுகரையில் ஏறும்போது வெள்ளை குதிரையாக ஆவதை அரசன் நோக்குகிறான். அவன் பிரயாக்ராஜன். பிரயாகையின் கடவுள். பாவங்களை கழுவ வரும் மக்களின் பாவங்களை ஏற்று அவன் உடல் கறுத்துவிடும். அவற்றை நீக்க சரயுவில் முங்கி எழுவதாக சொல்கிறான். காசியையும் கங்கையையும் காண தூய்மை அழுக்கு என்பதையெல்லாம் கடந்த வேறொரு கண் நமக்கு வேண்டும். ’அது அப்படித்தான் இருக்கும். நமக்கு தெரிந்த  ஒரே பதில். ஒரே சமாதானம். ராமன் வனவாசம் போன பாதையில் போகப்போக நான் ராமனின் மாபெரும் தோல்வி‌யையும் ராட்சதர்களின் வெற்றியையும்தான் கண்டேன்’என்கிறார். கணேஷ் தேவியின் மகாபாரத நூலில் சாந்தமே அதன் முக்கிய ரசம் என சொன்னதை பொருத்திக்கொள்கிறேன். நாம் எல்லாவற்றையும் ஏற்கவும் அனுசரிக்கவும் பழகியுள்ளோம். சித்திரகூடத்தில் குரங்குகளும் பிச்சைகாரர்களும் தொல்லை செய்கிறார்கள்.   குரங்குகள் சேட்டை செய்வதால் அவற்றை தாங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சைக்காரர்கள் விஷயம் அப்படியில்லை,  ‘முதலாவது அவர்கள் மனிதர்கள். இரண்டாவது அவர்கள் நடத்தையில் பார்த்து மகிழ எதுவுமில்லை’ என்கிறார். ராமனிடம் உன் தேசம் என்னவாக மாறியிருக்கிறது பார் என முறையிடுகிறார். ‘சாவிலும் துக்கத்திலும் வேதனையிலும் கஷ்டத்திலும் பஞ்சத்திலும் பெருவெள்ளத்திலும் இவர்கள் பக்கம் இருப்பதெல்லாம் ராமரோ அல்லது திருப்பதி வேங்கடாசலபதியோ அல்லது காளியோ அல்லது துர்க்கையோதான். பகுத்தறிவு இவர்களுக்கு கட்டுப்படியாகாது. அது இவர்களுக்கு பொறுப்பற்ற ஆடம்பரம்’ என்பது அவரது சொற்கள். 

   

பாபரி மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பான அயோத்தியையும், எண்பதுகளின் பிரயாகையும், சித்திரகூடத்தையும் சித்தரிக்கிறார். வால்மீகி     தனது கவிதையில் சிருஷ்டித்த மரங்கள் அடர்த்த செறிவான காடு அங்கில்லை, வெறும் மொட்டை பாறைகள் சூழ இருக்கும் அரை பாலை தான்   எஞ்சியுள்ளது.  துளசிதாசரின் ராமாயணம், இந்தியின் நடைமுறை பயன் என பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. வால்மீகி சம்பல் கொள்ளைக்காரன் என்பதால் அவனுக்கு பாதை  எல்லாம் நன்றாக தெரியும் என்கிறார். பெரும்பாலான கடவுள்கள் மக்களிடமிருந்து தோன்றியவர்கள். ஆனால்  ராமன் புத்தர் இருவரும் இளவரசர்கள். ஆகவே அவர்கள் மக்களை அறிய வேண்டும் என்பதற்காக அரண்மனையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது என்பது முக்கியமான அவதானிப்பு. ‘உண்மையில் நாம் எல்லோருமே அன்னியர்கள்தான். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு இந்த ஞான திருஷ்டிக் கைவரப் பெற்றதால்தான் அறவுணர்வு இப்போது தலை தூக்குவதே இல்லை’ என்று எழுதுகிறார். திரளில் இருந்து தன்னை அந்நியமாக உணர்கிறார். இந்த அந்நியத்தன்மை கரையாமல், திரளோடு திரளாக ஆகாமல் இந்தியாவின் ஆன்மாவை உணர முடியாது.  தன்னிலும் தாழ்வான நிலையில் இருக்கும் ரிக்ஷாக்காரரிடமும் குடிசையில் உணவு  வழங்குபவரிடமும் அற சீற்றத்துடன் நடந்துகொள்கிறார். காசு  கூட கேட்கும் ரிக்ஷா காரரிடம் மனித ரத்தம் பருகுபவர்கள் என்று சொல்லி அவரை அழவைக்கிறார். சீர்ஷேந்து அவரை தேற்ற வேண்டியிருக்கிறது. நமது அற சீற்றம் கூட மிகுந்த கவனத்துடன் வெளிப்படுகிறது. ராமராஜ்ஜியம் எனும் கனவுக்கும் நவீன இந்தியா எனும்  நிதர்சனத்திற்கும் இடையே அல்லலுறும் ஒரு ஆன்மாதான் சீர்ஷேந்து. ‘உத்தரபிரதேசத்து மக்கள் சாகவில்லை அவ்வளவுதான்’ என அவர்களின் நிலை கண்டு கொந்தளிக்கிறா்ர். ‘மனித குலத்தின் மீது எனது நேசம் அதிகரிக்கும் தோறும் தனித்த மனிதன் மீதான என் நேசம் குறைந்தபடி இருக்கிறது’ எனும் தாஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை நினைத்து கொண்டேன். கூடவே “நீங்கள் மானுடத்தின் மீது நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. மானுடம் என்பது ஒரு பெருங்கடல், அதன் சில துளிகள் அசுத்தமாக இருக்கிறது என்பதால் பெருங்கடலே அசுத்தம் என எண்ணிவிடக் கூடாது” எனும் காந்தியின் சொற்களும் நினைவில் எழுந்தன. 


  •  

சாப விமோசனம்

சிவராமனின் மனம் காயத்ரி ஜபத்தில் லயிக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் உறங்கும் யக்ஷியைச் சுற்றி வந்தது. வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்தாலும் அந்த சிறு குளத்தில் விளையாடவோ குளிக்கவோ ஒரு நாளும் அனுமதி அவனுக்கு இல்லை. அவன் மட்டும் அல்ல அப்பா சாம்பசிவம் கூட கிணற்றில் தான் நீர்  மொண்டு குளிப்பார். வருடங்களுக்கு ஒரு முறை குளத்தை சுற்றி இருக்கும் கற் படிகள் சீரமைக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். ஆனால் குளத்தின் நீர் என்னவோ எப்போதுமே மாசு படாமல் இருந்தது. அதில் தண்ணீர் குறைந்ததும் இல்லை கூடியதும் இல்லை.
  •  

மீன் தொட்டி

தான் யாருக்கும் இரையாகிவிடுவோமோ அல்லது தனக்கு உணவு கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயமே இல்லாத மீன்தொட்டியில் வாழும் மீனுக்கு என்னதான் கவலை வந்துவிடப் போகிறது?

  •  

அழையா காதல்

காதலுக்கு விதிகள் கிடையாது. அது யாருடைய விதியையும் மாற்றக்கூடும். இருவரின் வாழ்க்கையை முழுவதுமாக புரட்டிப்போட்ட ஒரு காதலைப் பற்றிய சிறுகதை இது.

  •  

அகக்கண்ணாடி

கல்லூரியில் படிக்கும் இரு நண்பர்களின் வாதமே கதையாகிறது. ஒருவனுடைய புது தயாரிப்பு அவனுக்கே நிறைய பாடம் கற்றுக்கொடுக்கிறது.

  •  

திகில் குறுங்கதைகள்

இரண்டு வரிகளுக்கு மிகாமல் எழுதிய திகில் குறுங்கதைகளின் தொகுப்பு இந்தப் பதிவு.

  •  

கசடான நினைவுகள்

இது "எதிர்கால நினைவுகள்" கதை முடிவின் நீட்சி. முதலில் கதை முழுதும் படித்திருந்தால் மட்டுமே இந்தப் படலம் புரியும். இந்தப் பதிவை நீங்கள் படிக்க பயன்படுத்திய கடுவுச்சொல்லை தயவுசெய்து யாரிடமும் பகிராதீர்கள்.

  •  

எதிர்கால நினைவுகள்

ஒரு திரைக்கதை திரையில் வருவதற்கு முன்னே ஒரு மின்னூலாக வடிவெடுத்து வெளியான கதை.

  •  

அரிசியின் கதை

உணவை வீணடிக்கக்கூடாது என்பதற்காக சிறுவர்களுக்கு சொல்ல வேண்டிய கதை. சில நேரங்களில் அகவையில் வளர்ந்தாலும் சிலருக்கு இந்தக் கதை தேவைப்படலாம்!

  •