Reading view

அமிழ்து|கவிதை|நவநீதனா ச

👑 மாநகர் மண்டபத்தின்

மாமணி வடிவுடையாய்!

 
👑 மயிலினங்கள் இடையூடே,

ஆழித்தேர் ஒப்புடையாய்!

 
👑 வர்ணத்துப் புவியூடே,

வளை மெலிந்த சுடரழகே!

 
👑 வானத்துவெளி உறைந்த, 

பூதத்து மிகையுணர்வே!!…

 
👑 நாட்டியத்துச் சபை நளிந்த, 
இடையழகே! கேளாயோ?!!

 
👑 வேலுடையான் விரலமர்ந்த,

குளிர்நிலவே! இன்னுயிரே!

 
👑 கிளியினங்கள் கொஞ்சுகின்ற,

மீனவளின் கடைக்கண்ணாய்!

 
👑 சடையேற்ற அண்ணானின்,

உடலேற்ற வெளிர்நீறாய்!

 
👑 நாணத்து மாடத்திலே,

நகைப்போங்கும் பொன்முகிலே!!…

 
👑 கன்னத்தின் குழியழகு, அது

சீனத்து இலக்கணமோ?!

 
👑 பாசுரப் பெண்ணவளே,

அவள் சிரமாடும் முத்துடையாய்!

 
👑 மார்கழிக் குளிரிடையே, 

மையலுற்ற இசையழகே!

 
👑 வெப்பத்தின் சீற்றத்தூடே, 

மைவிழியே! வனப்புற்றாய்!!…


 

👑 மசையுற்றாள் கருவுடைய,

மாசற்ற ஒளியுடையாய்!

 
👑 அம்பலத்தில் ஆடிடுவான்,

மரகதமே! முகமணிந்தாய்!!…

 
👑 பெயரிலே பூட்டி வைத்தாய்!

அடீ! இரத்தினச் சுருக்கமடீ!!

 
👑 புவியுடையார் உரைக்கையிலே!

பூங்குயிலே!! மேனியுமே சிலிர்க்குதடீ!

 
👑 விண்ணுடையார் இசைக்கையிலே!

சிற்றிதழே! குருதியுமே உருகுதடீ!!

 
👑 விழியளித்த நீரினிதாம்!

தாயளித்த பிறப்பினிதாம்! 

 
👑 நின்றன் பெயராலே,
அ
வை அமிழ்தன்றோ?!

நனிச்சுவையன்றோ?!…

 
👑ழிழ்துடையாய்! 

நீ இரத்தினச் சுருக்கமன்றோ?!

என்றன் உயிருடையாய், கேளாயோ?!…

கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

The post அமிழ்து|கவிதை|நவநீதனா ச appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •  

விருட்சத்திற்கான வித்து|சா.சிவானந்தம்

🍓முயற்சியை விதைத்தேன்


வளர்ச்சி விருட்சமானது !


 

🍓தடைகளைத் தகர்த்து விதைத்தேன்


பாதை விருட்சமானது !


 

🍓செயல்களை விதைத்தேன்


வெற்றி விருட்சமானது !


 

🍓அவிநயம் விதைத்தேன்


ஆடல் விருட்சமானது !


 

🍓யாப்பினை விதைத்தேன்


பாப்புனைதல் விருட்சமானது !


 

🍓பூவினை விதைத்தேன்


தேன் விருட்சமானது !


 

🍓நட்பினை விதைத்தேன்


அன்பு விருட்சமானது !


 

🍓அன்பினை ஆழமாக விதைத்தேன்


அளாவிய காதல் விருட்சமானது !

🍓அறிவினை விதைத்தேன்


கல்வி விருட்சமானது !


 

🍓தமிழை விதைத்தேன்


கவிதை விருட்சமானது !


 

🍓ஒளியை விதைத்தேன்


வெளிச்சம் விருட்சமானது !


 

🍓நல்லொழுக்கங்கள் விதைத்தேன்


நல்ல மானுடர்கள் விருட்சமானார்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


சா.சிவானந்தம்
எம்.ஏ, பி.எட், எம்.ஏ, சி.எல்.ஐ.எஸ்


முதுகலைத் தமிழாசிரியர்


தி யுனைடெட் பப்ளிக் பள்ளி


கோவை

 

The post விருட்சத்திற்கான வித்து|சா.சிவானந்தம் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •  

அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார்

📞 அலைபேசியின் வாக்குமூலம்

 

📞கண்களால் பார்த்து! ரசித்து,


கைகளால் தொட்டு! வருடி!


மார்போடு அனைத்து!


உன் மூச்சுக்காற்று


என் மீது பட


உன் இரு கைளால்


என்னை அணைத்தபடி


எப்போதும் உன்னுடன் இருக்கிறேன்..!


 

📞 நீ கேட்கும் ஒவ்வொன்றும்


என்னிலிருந்து நான் தருகிறேன்!


அது நன்மையாக இருக்கலாம்!

தீமையாக இருக்கலாம்!


 

📞 ஏனென்றால்!


கேட்பது நீயல்லவா!


நான் உன் கையில்


தவழும் போது


இந்த உலகமே  நான்தான்..!


 

📞 என்னுடன் பல விளையாட்டுகளை


விளையாடுகிறாய் – அவற்றில்


தோற்றும் போகிறாய் !


ஆனாலும் மீண்டும் மீண்டும்


தோற்றுப் போக ஆசைப்படுகிறாய்!


ஏன்! ஏனென்றால்


என்னில் உன்னை


மூழ்கடித்து விட்டதால்,


 

📞 இப்படி மூழ்கடித்து விட்டதால்


எத்தனையோ,

உயிர்களை  
குடித்திருக்கிறேன்.


 

📞 ஆனாலும்! உன் கைகளால்


இறுக்கிப் பிடித்து


என்னை  இறக்கி விட


முயற்சி செய்வதே இல்லை,.!


 

📞 உன்  தேவைக்கு ஏற்ப


என்னைப் பயன்படுத்தினால்


நான் உனக்கு சொர்க்கம்!


உன் ஆசைக்கு


என்னை பயன்படுத்தினால்


நானே உனக்கு நரகம்! 


 

கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்


உதவி பேராசிரியர் 

தமிழ்த்துறை


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி


பர்கூர்

கிருஷ்ணகிரி

 

The post அலைபேசியின் வாக்குமூலம்|சி.தெய்வானை  சிவகுமார் appeared first on இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்.

  •