Reading view

? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்! நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்; ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்! (திருவருட்பா- 3471) அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.   (திருக்குறள் – 226) பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது...

The post ? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 அல்ல! அல்ல! அல்ல! இந்தியாவெங்கும் சமற்கிருத எதிர்ப்பு காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. பிற மொழிகளில் உள்ள  சமற்கிருத அறிஞர்களே, சமற்கிருதத்தின் பொய்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். பிராகிருத மொழியினர் எந்த அளவிற்குச் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம். பிராகிருத காவியத்தை வணங்குவோம் ! அம்மொழியில் கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம் சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்! யார் அம்மொழியில் காவியம் படைத்தார்களோ அவர்களையும் கொளுத்துவோம்.! – பேராசிரியர் முனவைர் ப.மருதநாயகத்தின், ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும்...

The post 60.தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா? + 61.திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர். – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •  

57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன்


(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 சனாதவாதிகளால் பாராட்டப்படும் சந்தோகிய உபநிடதம், “(கடந்த பிறவியில்) இவ்வுலகில் நற்செயல்கள் செய்தவர்கள் அதற்கேற்ப நல்ல பிறப்பை அடைகிறார்கள். அவர்கள் பிராமணராகவோ, சத்திரியராகவோ அல்லது வைசியராகவோ பிறக்கிறார்கள். ஆனால், இவ்வுலகில் கெட்ட வேலைகளைச் செய்தவர்கள், நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவர்களாகவோ பிறந்து அதற்கேற்ப கெட்ட பிறப்பை அடைகிறார்கள்.” என்கிறது. செய்யும் கருமத்திற்கேற்ப உயர் பிராமணனாகவோ ‘இழி சூத்திரனாகவோ’ பிறப்பான் என்பதை இது கூறுகிறது. இத்தகைய உடநிடதத்தைத்தான் சிறப்பானதாக மதிப்பிற்குரிய மேதை கூறுகிறார். முதலில் உபநிடதம் பொருளைப் பார்ப்போம். உபநிசத்து என்னும்...

The post 57.உபநிடதங்கள் சிறப்பானவையா? + 58. உபநிடதங்கள் உயர்வானவையா? + 59.      சனாதனம் சமற்கிருதத்தில் உள்ளதால்தான் தமிழர்கள் எதிர்க்கின்றனர்? – இலக்குவனார் திருவள்ளுவன் appeared first on அகர முதல.

  •