Reading view

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

  •  

சொம்பு நீர்ப்பூ – நர்சிம்:

ஆசிரியர் குறிப்பு:

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும்

நர்சிம்மின் மே 2025ல் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு இது.

Lydia Davisன் குறுங்கதை ஒன்றில் குழந்தையைப் புகைப்படம் எடுக்கும் தாய், கடைசியில் தான் தெரிய வரும் அந்தக்குழந்தை இறந்துபோன குழந்தை என்பது.  தொகுப்பின் தலைப்புக்கதையில் அதே போல் குழந்தையுடன் தனித்திருக்கும் தாய்.  உயிருள்ள குழந்தை.  ஆனால் கதை அதேயளவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  சுசியின் உணர்வுகளை இவ்வளவு தத்ரூபமாக வடித்தல் ஒரு ஆணுக்கு மிகவும் கடினம்.

கடைசியில் ஒரு Change of mind (செந்தில்குமாரி) யதார்த்தமாக வந்திருக்கிறது.  செய்நேர்த்தி மிகுந்த கதை.

“நுரை” கதையில் இரண்டு Mutually exclusive events.  ஆண்பிள்ளைக்கு மார்புக்காம்பில் வலி, அடுத்தது பாம்பு கடித்தல்.  இரண்டு பிரச்சனைகளும் அந்தக் கதையில் Sync ஆவது மட்டுமல்ல, போகிற போக்கில் ஒருவர் முருகேசன் அண்ணனைப் பற்றிச் சொல்லும் ஒரு வரி, மொத்தக் கதையையும் திருப்பிப் போடுகிறது.  ‘புன்கணீர்’  கதையும் எந்த அணிகலனும் இல்லாது அழகாகத் தெரியும் யுவதியின் சாயல் கொண்ட கதை.

ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பில் பல கதைகள், கல்யாண வீட்டிற்குச் செல்வதற்கு சகல அலங்காரங்களையும் செய்தபெண்,  பட்டுப்புடவையை ஏற்றிவிட்டு அவசரமாக வாசலில் மறந்த கோலத்திற்கு நான்கு கோடுகள் கிழித்த பாவனையில் இருக்கின்றன.  நர்சிம் கதைகள் அழகாக நேரத்தைக் கொடுக்க வேண்டும், Fine tuning ஒரு எரிச்சலூட்டும் பணி ஆனால் அதில் சிரத்தை காட்ட வேண்டும்.

கதைகள் எல்லாமே ஏதோ உணர்வைத் தொட்டுத் தொடருகின்றன.  உணர்வுகளுக்கு அதிக தூண்டுதல் கொடுத்து செயற்கையாக்காமல் அளவான கலவையில் கதைகளில் கலக்கத் தெரிந்திருக்கிறது நர்சிம்முக்கு.  தொடர்ந்து எழுதுங்கள்.

பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு மே 2025

விலை ரூ. 100.

  •  

நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை


பொதுவாக நரனின் கதையுலகம் பற்றிப் பேசுவதற்கு அவரது முழுப் படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும். முழுப் படைப்புகளையும் வாசிக்கும் வாய்ப்பு இன்னும் இல்லாததால் இந்தப் புத்தகம் பேசும் கதை மாந்தர்கள், சூழல்கள், கதையுலகம் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் பற்றி விரிவாகப் பேசவே நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது மற்றும் அவசியமானது என்று நான் கருதுவது அல்லது நான் கண்டடைந்தது என்று கூறினால் நரனின் கதை மாந்தர்கள் தொண்ணூறு சதவிகிதம் அதீத மனப்பிறழ்வுத் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதன் நீட்சியாகச் சாதாரண மனிதர்களிடம் இல்லாத வித்தியாசமான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சாதாரண மக்களோடு புழங்கும் அசாதாரண மனநிலை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். மேலும் இதிலொரு அழகு என்னவென்றால் தங்கள் பிறழ்வுகளை யாருமறியாது ஒரு ரகசியமாகவே அனைவரும் வைத்திருப்பது தான்.

அந்தக் கதாபாத்திரங்கள் யாருமே தங்கள் பிறழ்வு பற்றிய பிரக்ஞை அற்று ஒடுங்கிக் கிடக்கும் மனநிலை உடையவர்களாகவே இருக்கிறார்கள். பிறழ்வுகளில் பலவகை உண்டு. பிறழ்வடைந்த பலர் தங்களுக்கு ஏற்படும் புற, சமூகத் தீங்குகளின் காரணமாக அதீதக் கோபத்தில் மற்றவருக்குச் சமுதாயத்துக்குத் தீங்கு இழைப்பவர்களாக மாறுகிறவர்கள் ஒரு ரகம். அந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழியற்று தன்னை அழித்துக் கொண்டோ ஒடுங்கிக் கொண்டோ தங்களை அழித்துக் கொள்வது ஒரு வகை. நரனின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இரண்டாவது வகையில் வந்து நிற்கின்றன.

தங்களைத் தாக்கும் ஏதோ ஒரு சூழல், அதிலிருந்து மேடேற முடியாத தன்மை அதன் நீட்சியாகத் தீவிரத்தன்மைகள் தொடரத்தொடர அத்தகைய பிறழ்வுகளை ஒரு பிரச்சினையாக எந்த கதாபாத்திரமும் யோசிக்கவில்லை.

அதை அனுபவிக்கத் துவங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எந்த வாசகனும் சொல்லவே முடியாது. அப்படி இருந்தால் அது அப்படிதான் இருக்க முடியும் என்று தோன்றவைப்பதில் கைதேர்ந்த ஆசிரியராக இருக்கிறார். ஏன் நம்மோடு கூட இருப்பவர்கள் தானே அல்லது நாம் தானே இவர்கள் என்று கூட எடுத்துக் கொண்டால் சரி தவறு என்று எந்தத் தராசுகளையும் தூக்கிக் கொண்டு இல்லாமல் வாசிக்கலாம்.

இவர்களால் தீங்கு நேருமா என்றால் எப்படி வேண்டுமானாலும் திரும்பும் என்பதைத் தவிர வேறேதும் சொல்ல முடியாது. இந்தக் குற்றங்களின் அல்லது இவர்கள் அப்படி ஆகக் காரணமானவர்களை, சூழல்களை என்று யாரை நோக்கியும் நேரடியாகக் கைநீட்டி விட முடியாத படியான சிக்கலில் விழுந்து கொண்டவர்கள், விழவைக்கப்பட்டவர்கள்.

ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியுமா (அதாவது அது போல் நம்மோடு உலாவும்) என்றால் அதைத் தான் அவர்கள் துன்பமெனக் கருதுவார்களோ என்று தோன்றுகிறது. அந்தப் பிறழ்வின் உச்சங்களையே அவர்கள் விடுதலையென நம்புகிறார்கள். எனில் அவர்களை அப்படியே விட்டு விடுவதே வழி என்ற முடிவுக்கு நாமே நகர்ந்து விடுகிறோம்.

 

மொத்தம் பதினொரு கதைகள்.

திருகுமொழி வடிவம் கொண்ட மொழியமைப்பு பெரும்பாலும் இல்லை. ஓரளவுக்கு அல்லது நன்றாகவே புரிந்து கொள்ள வாய்ப்புடைய எளிமையான மொழிநடைதான். ஆனால் வலுவான கதாப்பாத்திரத்திர வடிவமைப்பு, பழக்கவழக்க, காட்சி வடிவமைப்பு, திடீரென ஏதேனும் ஓர் இடத்தில் இறுக்கி முடிச்சிட்டு அங்கேயே அவிழ்க்கும் நுட்பமான இடங்கள் இவற்றை எப்படியேனும் கண்டு கொண்டால் நரனின் கதைகளுக்குள் பதற்றமின்றி உலாவரலாம்.

1. மானேந்தி கதையில் ஸ்தபதியாக வந்து சிலையைப் புணரும் கணபதி, அவன் வீட்டில் சிலை கண்திறக்காது அம்மா மீது விழுந்து இறந்து போவது இதை இறை நம்பிக்கை உடையோர் தண்டனையாகக்கூட எடுத்துக் கொள்ள முடியும். அவ்வளவு சிலை செய்பவனுக்கு நன்றோ தீதோ அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து யார்?

2. பெண்காது கதை அடைக்கலராஜிற்கு இருப்பது யாரேனும் தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பிரச்சினையாக மாற அவன் முதல் மனைவி ஏன் அப்படி இருக்கிறாள், இவனால்தான் விவாகரத்து வாங்கிக் கொண்டாளா.. இப்போது வந்து கேட்பவள் எவ்வளவு காலங்களுக்குக் கேட்பாள். அவளுடைய தந்தைக்கு ஏன் தான் வேலை செய்த பஞ்சு மில்லின் சத்தங்கள் கேட்கமுடியாது மரணித்துப் போனார். காதுகளும் சத்தங்களும் நம்மை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றன‌ என்கிற பல கேள்விகளை உருவாக்கிய கதை.

3. தொகுப்பில் உடனே வாசித்த என்னால் மறக்க முடியாத‌ நான் மிகவும் ரசித்த கதை  ‘கேசம்’. ஆதியப்பனின் காலில் இருந்த புண்களைக் கண்டு கட்டிய மனைவியே வெறுத்து ஒதுக்குகையில் எங்கிருந்தோ வரும் ஆவுடைத்தங்கம் அந்தப் புண்களைக் குழந்தைகள் போல பாவித்து தன் முடிகளையே இறகாக்கி அவர் இருக்கும், இறக்கும் வரை விரும்பி மருந்திடும் கதை. ஆதியப்பனின் காம உணர்வை மனைவி கணபதியம்மாளிடம் ஏற்படுத்திக் கொள்ள முற்படுகையில் எறும்புகள் கீழிறங்கி ஓடுவது போலவும், அதே காம உணர்வை ஆவுடையிடம் உணரும் போது கடிவாய் இல்லாத கறுப்பு எறும்புகள் லட்சக்கணக்கில் ஓடுவது போலவும் அழகான குறியீடு.

4. சைக்கிள் கடையில் வேலை பார்த்தபடி உடலில் இருக்கும் சிறு ஊனத்தோடு தன் மனதைத் தன்னை விட மூத்தவளான மரியத்திற்கு தந்துவிட்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இறுதியில் அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடையில் வந்து துடைத்து மனதை ஆற்றில் படுத்திக் கொள்கிறான்.

மரியமோ ‘வா, உனக்கு என்ன தேவைனு தெரியும்’ என்று பழனிக்குப் பல வருடங்கள் கழித்துத் தன்னை தந்துவிட்டு எந்தவிதத் தாங்கல்களும் இல்லாது அவள் சைக்கிளைத் தந்துவிட்டு கணவனற்ற பாலையில் கையில் குழந்தையோடு பயணிக்க தொடங்குகிறாள். கிளிஷேவோ என்று யோசிக்கையில் முடிவு நம்மை இல்லை என்று சொல்ல வைத்துவிடுகிறது ’மரியபுஷ்பத்தின் சைக்கிள்கள்’ கதை.

5.  ‘லயன் சர்க்கஸ்’ நலிந்து போன சர்க்கஸ் கூடாரங்களின் நுணுக்கமான உணர்வுகளைப் பேசும் கதை. லீலாவின் முதல் கணவன் காளி, அவனைப் பார்த்துக் கொண்டே லீசாவோடு வாழும் உதவியாளன் மாரீசன், தன் சர்க்கஸ் கூடாரத்திற்காக மாரீசன் கண்முன்னே கிழட்டு அதிகாரி அறைக்குச் செல்லும் கர்ப்பிணியான லீசா, வறுமையின் பிடியிலும் மானத்தை விடாத கணேசன், எதையேனும் செய்யத் துடிக்கும் குள்ளன், இரும்புக் கம்பிகளை விலைக்குப் போட்டு விலங்குகளுக்கு இறைச்சி வாங்கும் சிறுவன், மனம் உடைந்தவன் என்று உணரப்பட்ட காளி குரங்குக்குப் பதிலாகத் தன்னையே தின்னச்சொல்லி சிங்கங்களிடையே அமர்வது என்று மனித வாழ்வின் வெவ்வேறு சூழல்களில் அறமும், அற மீறல்களுமாய் மனதை அலைக்கழிப்பு செய்யும் கதை.

6. இதோ எனது சரீரம் கதை.

உணவகம் நடத்திய படி மூன்று ஓவியங்கள் மட்டும் வரைந்து விட்டு கடைசி ஒன்றை விற்காமல் இருப்பதற்குப் பின்புலமாக அகதி வாழ்வின் இரணங்களை அது குறிப்பதாக இறுதியில் கோர்ப்பது நல்ல இணைப்பு. பாட்டி, அம்மா, நாயகி எமி மூவரும் தோற்றமாயை துணையோடு இளைஞனின் புகைப்படத்தைக் காலங்காலமாகப் பரம்பரையாக முத்தமிட்டு ஒயின் அருந்தியபடி அவனது கவிதைகளை வாசித்துக் கிறங்கிக் கிடப்பது. பிணமாக இளைஞனைக் கண்டடைந்து ஆடைகளை அணிவிப்பது, காம உணர்வு கொள்வது. இறுதியில் எமி அவன் புகைப்படம் முன் நிர்வாணமாவது என்று நம்பமுடியாத நம்பவேண்டிய கட்டாயங்களை ஏற்படுத்தும் கதை.

7. ‘ரோமம்’ சிறுகதையில் தீயில் வெந்து கருகிப்போன தாயின் நினைவில் உழன்று அவளின் நீள முடிகளைப்பொசுக்கி நுகர்ந்து அவள் இருப்பது போலான பிரமை கணேசனை எவ்வளவு தூரம் தேடித் தூண்டுகிறது எத்தனை முடிகளைத் தேடி அலைகிறது இறுதியில் மழிக்கும் இடத்தில் முடிகளைத் திருடி அவன் மேல் கிடத்திக்கொண்டு கணேசன் என்னவானான்? குளியலறை முடிகளைத் தேடிப் பொசுக்குவது, ஓர் உணர்வு மனிதனை எவ்வாறு ஆழமாக செல்லச் செல்ல ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

8. ‘மூன்று சீலைகள்.’மூன்று சேலைகளைத் தூக்கிக் கொண்டு ஊரெங்கும் திரியும் ஆசிரியராலேயே பிறழ்வென்று ஊர் சொல்வதாகச் சொல்லப்படும் கணேசன். ஒரே வருடத்தில் குடும்பத்தின் நிகழும் மூன்று சாவு. மூன்று சேலைக்குள் ஒளிந்து நிற்கும் மூன்று உறவுகளை இழந்த வெறுமை. வேறெதுவும் செய்யத் தோன்றாது மூன்று சேலைகளையும் மறுபடி மறுபடி முடிச்சிட்டுத் தொங்கும் முடிவு நோக்கி தன்னை தள்ளிக்கொள்ளும் காசி. உச்சிவெயில் கருநாய் ஊளை என்று குறைவான மாயமும் தொடர்ச் சங்கிலியாகத் தொடர்கிறது. மனதின் புதிர்களை யாரறிவார்?

9. ‘செவ்வக வடிவப் பெண்கள்’ எனும் இறுதிக் கதையும் அதிகப் பாதிப்பைத் தந்தது. பெண்களின் வித்தியாசமான அக உலகம், அபிலாஷைகள், பொம்மையை உயிரிருப்பதாய்ப் பாவித்துத் தழுவுதல், முத்தமிடல், புணர்தல் என்று முற்றிலும் அந்தரங்கமான பெண்களின் வேறொரு உலகங்களை அலசுகிறது.

10. ‘வண்டுகள்’ காம உணர்வை புத்தப் பௌர்ணமி அன்று மலையுச்சியில் புணர்ந்து பூரணியோடு இணைந்து வெளிப்படுத்தும் வகையிலும், பிறகு ஒவ்வொரு ஜோடி வண்டுகளை நசுக்கி நாயகன் தன் உணர்வுகளைச் சொல்வதைக் குறியீடாகவும்,

11. ‘பரிராஜா’ கல்லூரிப் பேராசிரியர் ஆய்வுக்கு ஒவ்வொரு உயிரினமாகப் பயன்படுத்தி மீண்டும் அனுப்பும் விதமாகவும், வேலையில்லாதவர்கள் பணத்துக்காக, பணத்தைப் பார்க்கிற ஆர்வத்தில் ஒவ்வொரு கட்டமாக நகர்வதையும் அவர்களை நகர்த்தி தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதையும் சுருங்கச் சொல்லி நிறைய அர்த்தங்களைத் தேடவும் தரவும் செய்கின்றன.

எல்லாப் பிறழ்வுகளிலுமே ஆண்கள் பெண்கள் என்கிற வேறுபாடற்று நீதியோ போதனைகளோ அற்று அவரவர் உடல் சார்ந்த உணர்வுகளை உணர்வுகளாக மட்டுமே கையாண்டிருப்பதால் அது ஆபாசக் கதைகளுக்குரிய தோற்றத்தைத் தராமல் மடைமாறி பிறழ்வு அதற்கான காரணிகள் மூலங்கள் தற்போது நடப்பது என்ற அளவில் உருமாறி நகர்ந்து விடுகிறது.

சாதாரணமான மனநிலையில் வாசிக்க முடியாத கதைகள் நிறைய இருக்கின்றன தொகுப்பு முழுவதும். ஆழ்ந்த மனநிலையில் வாசிக்கும் போது மட்டுமே அதன் வீரியங்கள் காணக்கிடைக்கின்றன. நுண்ணுணர்வு சார்ந்த, அதுவும் பாலுறவுகளின் பிறழ்வு சார்ந்த நுட்பமான விஷயங்களை அநாயசமாகக் கையாண்டு இருக்கும் ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.!


– சுபி.

நூல் தகவல்:

நூல் :   கேசம்

ஆசிரியர் : நரன்

வகை :   சிறுகதைகள்

வெளியீடு :   சால்ட் 

வெளியான ஆண்டு :   2018

பக்கங்கள் : 127

விலை : ₹  200

நூலினைப் பெற +91 93 63 00 74 57

The post நரன் எழுதிய “கேசம்” – சிறுகதைத் தொகுப்பு – ஒரு பார்வை appeared first on Vimarsanam Web.

  •  

வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன்


பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவை ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தியனின் கதை. இரு நடு வயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேம்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீசுவரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குரியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுறும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்சை முறைகளை. புள்ளி விவரங்களை வரலாற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ் வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றைத் திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர் விழா பற்றிய நுண் விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஓர் அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமுகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீனத் தகவல்களும், இளந்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.


– மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.

நூல் தகவல்:

நூல் :  கர்ஜனை

வகை :   சிறுகதைகள்

ஆசிரியர் : வினிதா மோகன்

வெளியீடு :  எழிலினி பதிப்பகம்

 ஆண்டு :  முதல் பதிப்பு 2023

பக்கங்கள் : 160

விலை:  ₹ 300

நூலைப் பெற : https://www.emeraldpublishers.com

The post வினிதா மோகனின் “கர்ஜனை” : ஒரு பார்வை – க. கண்ணன் appeared first on Vimarsanam Web.

  •  

அமெரிக்க விருந்தாளி – தியா காண்டீபன்:

ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்தவர்.  அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஒரு கட்டுரை நூல், ஒரு நாவல், ஒரு கவிதைத் தொகுப்பிற்குப்பின் வெளிவரும் இந்த நூல், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பும், நான்காவது நூலுமாகும்.

ஆங்கிலத்தில் Percentile என்கிறோம்.  குழுவின் முதல் மதிப்பெண் எடுப்பவனை வைத்து நம் மதிப்பெண் தீர்மானிக்கப்படும்.  குழுவில் அதிகம் கெட்டிக்காரர்கள் இருந்தால் நாம் தேர்ச்சியடையாது போகவும் வாய்ப்பிருக்கிறது.  தமிழ் சிறுகதையுலகம் உலகத்தரம் வாய்ந்தது.  எனவே புதிதாகக் கதை எழுத வருபவர்கள் மிக அதிகமாக நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.

‘ உம்மாண்டி’  (தமிழ்நாட்டில் பூச்சாண்டி)

அம்மாவால் சிறுவயதில் பயமுறுத்தி வளர்க்கப்பட்டவன் காலம் அடித்த அடியில் உம்மாண்டியாக மாறுவதைச் சொல்வது.  கதையில் பல வரிகள் எடிட் செய்ய வேண்டும் என்ற போதிலும் நல்ல Presentation இந்தக்கதை.  ‘ இங்கிலிஸ் என்றொரு வேட்டையன்’  நல்லவிதமாகப் Present செய்யப்பட்ட இன்னொரு கதை.

தொகுப்பின் பல கதைகள் Flat ஆக முடிந்திருக்கின்றன.  உதாரணத்திற்குத் தலைப்புக்கதையை எடுத்துக் கொள்வோம்.  அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான யாழ்பாணத்திற்கு ஒரு

தம்பதி இரு குழந்தைகளுடன் செல்கிறார்கள்.  முதன்முறை இலங்கை செல்லும் குழந்தைகள் யாழ்ப்பாணத்தை அமெரிக்காவுடன் ஒப்பிட முடியுமா என்று பார்க்கிறார்கள்..  மனைவிக்கு நடுவில் துபாயில் சில நாட்கள் சுற்றிப்பார்த்துவிட்டு இலங்கை போகலாம் என்ற விருப்பம்.  கணவனுக்குக் குறைந்த விடுமுறை நாட்களை முழுவதும் சொந்த ஊரில் கழிக்க விருப்பம்.  இங்கே குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கில் இந்தப் பயணம் அமைய விரும்புவது யதார்த்தமும் சுவாரசியமும் நிரம்பியது.

Connecting flightக்கு தாமதமானதால் அதில் செல்ல முடியவில்லை.  அமெரிக்கக் குடிமக்கள் என்றால் துபாய்க்காரர்கள் எப்படி வழிவார்கள் என்பது சொல்லப்படுகிறது.  ஐந்து நாட்கள் துபாயில் விமானக் கம்பெனி செலவில் தங்க நேர்கிறது.  இதுவரை கதை Perfect.  ஆனால் இனிமேல் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும்.  அது ஏதும் நடக்காமல் இலங்கை செல்கிறார்கள்.  ஆங்கிலப்படங்களில் முகங்கள் நெருங்கி வருகையில் முத்தம் தான் என்று நாம் அசிரத்தையாகப் பார்க்கையில்,  ஒருவர் விலகிக் கொள்வது போல் சப்பென்று முடிகிறது.

காண்டீபனுக்கு எழுத்தில் ஆர்வம் இருக்கிறது.  இந்தத் தொகுப்பின் எல்லாக் கதைக்கருக்களும் வலிந்து உருவாக்காமல் நம்மைச் சுற்றி நடப்பதை வைத்தே உருவானவை.  இவர் செய்ய வேண்டியது கதைகளுக்கு அழுத்தத்தை உருவாக்க முயற்சிப்பது மட்டுமே.  சென்ற பத்தியில் குறிப்பிட்ட

கதையில் சிறுமி முதல் நாளே காணாமல் போய், ஐந்து நாட்களும் போலீஸ், அழுகை என்று கடைசியில் அவள் கிடைத்து தப்பித்தால் போதும் என்று கிளம்பினால் கதைக்குக் கதையுமாயிற்று.  அடுத்த முறை சிங்கப்பூரில் தங்கிச் செல்ல யோசனை சொன்ன மனைவியை அடக்கின மாதிரியுமாயிற்று.  எழுத்தாளன், குறிப்பாக சிறுகதையாசிரியன் எல்லாக் கதைகளுக்குமே பலவித சாத்தியங்களைக் குறித்து யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

பிரதிக்கு:

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650

முதல்பதிப்பு செப்டம்பர் 2024

விலை ரூ. 200.

  •  

பெருநெஞ்சன் –  ஜார்ஜ் ஜோசப்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர்.  தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

இரண்டு நாவல்களை மொழிபெயர்த்துள்ள இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.

முந்தைய தொகுப்பான எமரால்ட் கதைகள் அனைத்தும் கிறிஸ்துவப் பின்னணியைக் கொண்டவை.  இந்த நூலில் அவை அல்லாதவற்றை முதலில் பார்ப்போம்.  ‘ அச்சிறைக் கிழவன்’  நூலகவாசிகளின் தொடர்ச்சி என்றிருக்கிறார்.  ஆனால் அதன் அழுத்தம் இதில் வரவில்லை.   அதே போல் ‘ அந்தணன்’  கதை எந்த விதத்திலும் முழுமையடையாத கதை.

தலைப்புக்கதை இவரது கையெழுத்தைப் பொறித்து வந்திருக்கிறது.  ‘ உபதேசியார்’  நன்றாக வந்திருக்கிறது.  இது இப்படித்தான் என்று காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளுதல் இவருக்குக் கைவந்த கலையாகிவிட்டது.  ‘ பட்டயம்’  இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது போன்ற தோற்றமளிப்பினும்

மதங்களைத் தாண்டி, வாழ்க்கை குறித்த ஏராளமான கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.  ‘சோபி’ is another beautiful story.

கீழ்மைகளைக் குறித்து எழுதுகையில் விமர்சனத்தொனி இல்லாது இறுதி முடிவை வாசகனிடம் விட்டுவிடும் படி  கதை எழுதுபவர்கள் குறைவு.  (Not the ending of the story) இவர் அதைத் தொடர்ந்து செய்கிறார்.  ‘ நெடி’  போன்ற பக்கஅளவில் மிகச்சிறிய கதைகளுக்குக் கூடப் போதிய அழுத்தத்தைத் கொடுக்க இவரால் முடிகிறது.  Another writer to watch.

பிரதிக்கு:

சீர்மை 80721 23326

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ.120.

  •