வாகை மனம்
வாவ மரத்தின் அடியில் புகைவதன் அடையாளமாக காற்றில் கருகல் வாடை வந்தது. வெளியே வந்து பார்த்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரார்த்தனைக்கு வந்தவர்களின் வாகனங்கள் மரத்தின் நிழலில் நிறுத்தப்பட்டு இருந்தது. தேவாலயத்தில் பிரார்த்தனைப் பாடல்கள் வேத வசனங்களுக்கு இடையில் ஒலித்துக் கொண்டு இருந்தது. கோல்டன் பாய் வந்த ஆட்களை வைத்து முட்டுக்கொடுத்ததை சரி செய்து கொண்டு இருந்தார். அவர் அவர்களை திட்டுவது புரியாமல் சத்தமாக மட்டும் கேட்டது. இந்தப் பக்கம் அவர் திரும்பினால் பேச வேண்டுமென நான் கடைக்குள் வந்துவிட்டேன்.