உடம்பு என்பது
சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...
The post உடம்பு என்பது appeared first on சிறுகதைகள்.
சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க...
The post உடம்பு என்பது appeared first on சிறுகதைகள்.
முகியை கல்லூரி படிப்பு முடித்து நான்கு வருடம் கடந்து இன்று தான் வேலை பார்க்கும் அலுவலகத்திலேயே சந்திக்க நேர்ந்த போது ...
The post பார்வை வரம்! appeared first on சிறுகதைகள்.
(1956ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாடக பாத்திரங்கள் மகமது ஷா –...
The post காதலர் கண்கள் appeared first on சிறுகதைகள்.
ஒரே கம்பெனியில் தன்னுடன் வேலை செய்யும் முகனைப் பார்த்து கோபித்துக் கொண்டாள் வான்மதி. அவன் எதிரில் வரும் போதும், அவனுடன்...
The post தலைக்காதல்! appeared first on சிறுகதைகள்.
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சார்… நீங்கள் பஸ்ஸில் எப்போதாவது கண்டக்டராக...
The post வைகை ஆற்றின் காதல் நினைவுகள்! appeared first on சிறுகதைகள்.
குமாரதாசும் சுமித்திராவும் இப்படி ஒருநாள் சந்திப்பார்கள் என்று நினைக்கவில்லை. சுமித்திராவுக்கு அந்த எதிர்பாரத சந்திப்பு உகப்பாய் இல்லை. அவ அதனை...
The post தடம் மாறிய காதல் appeared first on சிறுகதைகள்.
அம்மாவோடு அவள் படியிறங்கினாள். நோயை நினைவுபடுத்தும் டெட்டால் நெடியிருந்து தப்பித்தாயிற்று. வெளிக் காற்றை சுவாசித்ததுமே, விடுதலையாகிவிட்டது போன்ற உணர்வு. என்ன...
The post வெயில் மெல்லத் தாழும் appeared first on சிறுகதைகள்.
தென்னங்கீற்றுக் கூரையும் மூன்று பக்கம் அதே வித மறைப்புமாய் இருந்தது அந்த ரெஸ்டாரெண்ட். பெரும்பாலான மேஜைகளில் நாற்காலிகள் உட்புறம் தள்ளப்பட்ட...
The post மனசோட நிறம் appeared first on சிறுகதைகள்.
பேக்கரி முன்பாக ஆஸ்பெட்டாஸ் கூரை அடியில் சாமுராயை நிறுத்திப் பூட்டிவிட்டு இறங்கியபோது மூன்றாவதாக உள்ள மருந்துக் கடையில் தற்செயலாக ரோமா...
The post நண்பனின் காதலி appeared first on சிறுகதைகள்.
அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம். நிவின் அம்மா வீட்டை ஒதுங்க வைத்து கொண்டிருந்தாள். நிவின் அவனது அறையில் படுத்துக் கொண்டு போனை...
The post ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும் appeared first on சிறுகதைகள்.
காய் அரிந்துகொண்டு உள்ளே இருந்தவளிடம் பேசியபடி சியாமளா வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி. வடக்கு பார்த்த வீடு அதுவும். எரவாரத்து...
The post பூக்கள் பூக்கும் ஓசைகள் appeared first on சிறுகதைகள்.
ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை.
ஆத்திரம் அவனைப் பற்றிக்கொண்டது.
அவன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டான். அவனுடைய முகம் சிவந்து போயிருந்தது. கண்கள் இடுங்கிப் போயிருந்தன. முஷ்டியைச் சுருட்டி மேஜைமீது குத்திக்கொண்டிருந்தான். முதலில் ஒரு குத்து, மறுபடியும் ஒரு குத்து. பிறகு 'மாறியாக வேண்டும் மாறியாக வேண்டும்' என்று கத்தியபடியே மேஜைமீது கைகளால் அறையத் தொடங்கினான். அதன் பிறகு கடிகார ஒலி கேட்கவில்லை.
பெரும்பான்மையைக் கவரும்படி எழுதி, பிரபலமாகிப் பணம் பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று இருப்பதால், வணிக எழுத்தாளன் கிழடுதட்டிப் போனாலும் காதல் கத்தரிக்காய் என்று கிளுகிளுக்கவைப்பதிலேயே கிடக்கிறான். வாழ்வில் பொருள் தேடுவதைவிட வாழ்வின் பொருளைத் தேடுவதையே முதன்மையாகக் கொண்டிருப்பதால் இலக்கிய எழுத்தாளன் கிழவர்களைப் பற்றி எழுதுவபவனாக இருக்கிறான்.
‘கண்மணி அன்போடு’ பாடல் என் வாழ்வின் தாலாட்டுப்பாடல். இசைஞானி இளையராஜாவின் எத்தனையோ அருட்கொடைகளில் இப்பாடல் இன்னமும் அணுக்கமானது. உடைந்து அழும் காலங்களில் ஜானகியின் குரல் போல இருட்குகைகளில் இருந்து மீட்கும் வேறொரு கீதம் என்னளவில் இல்லை. ஒரே நேரத்தில் நெகிழ வைத்தபடியே, சிலிர்ப்பினை உடலெங்கும் தரும் பாட்டுடைச்செய்யுள். இந்த ஆண்-பெண் காதல் கீதம் அபிராமியின் கீதம் மட்டுமா? அது நம் தனிமைக் காலத்தின் உடன்வரும் உற்ற துணை. கசந்து போன வாழ்வின் கடைசி வெளிச்சம். கைகோர்த்து எம்பித்தள்ளும் கனிவின் மொழி. ‘Magical’ என்பதற்கான பொழிப்புரை இப்பாடல்.
இளையராஜாவின் இந்த கீதத்திற்கு கமல்-ஜானகி மட்டுமா உயிர் கொடுத்தார்கள்? இயக்குனர் சிதம்பரம் கேரளாவின் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மூலம் ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப்போகும்’ மாயக்கதையை நிகழ்த்தியிருக்கிறார். எத்தனையோ மலையாளத் திரைப்படங்களுக்கு சென்னைத் திரையரங்குகளில் ஆரம்ப நாட்களிலேயே பார்வையாளனாக சென்றிருக்கிறேன். ஒரு வார நாளில் அரங்கு நிறைந்த கூட்டத்தை என் நினைவுக்கெட்டிய காலத்தில் கண்டதில்லை. இப்படத்தைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. வைத்த கண் வாங்காமல் கமர்ஷியல் படங்களின் இலக்கணமெதுவும் இல்லாத இப்படத்தில் மக்கள் அமிழ்ந்து போயிருந்தார்கள்.
இத்திரைப்படம் உண்மையின் சாயலோடு இருப்பது மட்டும் இதன் வெற்றிக்குக் காரணமில்லை. அது எளிய மனிதர்களின் அசாத்திய சாதனையை திரையில் படைத்தளிப்பதில் நுணுக்கமாக வெற்றி பெற்றிருக்கிறது. வெற்றி, தோல்விக்கு இடையே சிக்கிக்கொண்ட கயிறு இழுக்கும் போட்டி 900 அடி ஆழ பள்ளத்தின் மரணப்பாதையில் அரங்கேறும் அதிசயம் இப்படம்.
இம்மனிதர்களுக்கு அரசின் துணையில்லை. மீட்பர்கள் வருவதில்லை. இறைவன் காட்சி தருவதில்லை. அவநம்பிக்கைமிக்க சொற்கள் மட்டுமே பரிசளிக்கப்படுகின்றன. சாத்தானின் சமையலறை எனக் கர்ண பரம்பரைக் கதைகள் அச்சுறுத்துகின்றன. ‘அதனால் என்ன? என்னாகும் பார்த்து விடலாம்!’, என சக நண்பனின் மீதான பேரன்போடு துச்சமென வாழ்வுக்கும், மரணத்திற்கும் இடையேயான நண்பர்களின் புத்துயிர்ப்பு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.
‘சாவைப் பாத்துட்டு வந்த இவன் தெய்வத்துக்கு சமமானவன். கும்பிட்டுக்கோ தாயி’ என்கிற ஒரு வரி மானுட யத்தனத்தை கடத்திவிடுகிறது. தேவலாயங்களும், இறை வழிபாட்டாளர்களும் கைத்தொழுது வணங்கும் தெய்வீக காதலை நிகழ்த்துபவர்கள் காதலர்கள் அல்ல, நண்பர்கள். அவர்களின் வாழ்த்துப்பாடல் இளையராஜாவின் இறவா கீதம். அவசியம் திரையரங்கத்தில் பாருங்கள். நம் காயங்களை ஆற்றும் அற்புதக்கதை இது. வாழ்வின் நறுங்கனவும் கூட.
உருவகக் கதைகள் நம்மை உண்மையான உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் அற்புதச் சாவிகள். ‘Kathal’ எனும் இந்தித்திரைப்படம் காணாமல் போன எம்.எல்.ஏ.வின் Uncle Hong ரகப் பலாக்களைத் தேடும் தலித் பெண் ஆய்வாளர் பற்றிய கதை. இது உண்மையில் பலாக்காயை திருடியவரை கண்டுபிடிக்கும் பயணமில்லை.
முதல் காட்சியே அதகளம். இந்திய சினிமா காவல்துறையின் Chase காட்சிகள் எப்படியிருக்கும் என வழமையாக விதித்து வைத்திருக்கும் விதிகளை எல்லாம் விளையாட்டாக அத்தொடர் காட்சி குலைக்கிறது. இது பிற படங்களைப் பகடி செய்யும் முயற்சியல்ல. யதார்த்தத்திற்கு நெருக்கமான காட்சியனுபவத்தைத் தரும் முயற்சியாகவே திரையில் கதை வளர்கிறது.
அதிகாரம், அரசியல், சாதி, பாலினம், ஊடகம் எனப்பலவற்றின் மீதான நகைச்சுவையால் ஆன வெளிச்சம் இப்படம். இதில் காதைக் கிழிக்கும் சண்டைக்காட்சிகள், அதிரடிக்கும் பஞ்ச் வசனங்கள், ரத்தத்தை உறைய வைக்கும் வன்முறை அறவே இல்லை. தொலைந்து போன பெண்களை விட அரசியல் தலைவரின் பலாப்பழம் ஏன் முதன்மையானதாகத் தேடப்பட வேண்டிய ஒன்றாகிறது? பதவி உயர்வே வேண்டாமென்று ஒரே ஊரில் சமையல் வேலைகளுக்கான ஆளாக ஏன் பெண்களைக் குடும்ப அமைப்பு நடத்துகிறது?
உண்மையை உரக்கச் சொல்லும் சின்னஞ்சிறிய ஊடகவியலாளர் ஒருவர் இப்படத்தில் கைது செய்யப்படுகிறார். முழுக்க, முழுக்கச் சோகமயமனதாக மாற்ற சகல வாய்ப்புகளும் உள்ள காட்சி அது. அங்கே பிளந்து கொண்டு வெளிப்படும் பகடியும், இசையும், பத்திரிகையாளராகத் தோன்றுபவரின் நடிப்பும் சமகாலத்தின் மீதான நுண்மையான கேலியாக அமைகிறது. ‘நான் ரொம்பப் பிரபலமாகிட்டேன். இவங்க அடிச்ச அடியில என் பிருஷ்டம் மட்டும் இரண்டு இன்ச் வீங்கிருச்சு’ என அவர் இறுதியாகத் தோன்றும் காட்சியில் பேசுகையில் மிதமான கற்பனையுலகினில் உண்மையின் கூர்மையான வெளிப்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.
தீவிரமான சண்டைக்காட்சியில் அடித்து நாயகிக்குக் கை வலிக்கிறது. கதவை உடைக்கப் போகும் நாயகன் அதற்கான திராணியின்றி நாயகியின் கைகளில் விழுகிறான். காணாமல் போன பலாப்பழத்திற்குப் பரிசு என்றவுடன் அதைப்போன்ற போலிப் பலாக்கள் பல வரிசையில் வந்து நிற்கின்றன. எம்.எல்.ஏ.வின் புகழ்பாடும் பேனர் பழைய பேப்பர் கடைக்குப் போவதற்காக நின்றபடியே பலாப்பழ திருட்டிற்கு உடந்தையாகிறது. இடையே மிக மென்மையான காதல் கதை ஒன்று மனதோடு உறவாடுகிறது.
இக்கதை தலித் காவல் ஆய்வாளர் உயர்சாதி காதலன் பதவி உயர்வுக்காக உழைக்கும் திரைப்படம் என்றும் அணுகப்படக்கூடும். ஆயினும், இப்படம் சாதிச்சுவரின் ஓரிரு செங்கல்களை நகைச்சுவை சுத்தியல் கொண்டு உடைக்கிறது. சாதிப்பெருமிதங்களை முன்னிறுத்தும் உலகினை கூர்வேல் கொண்டு எதிர்க்கவில்லை. அதற்கு மாறாகக் கிச்சு கிச்சு மூட்டுகிற பாவனையில் தலையில் ஒரு குட்டுக் கொட்டுகிறது. உலகை மாற்றும் வேகம் இக்கதையின் நாயகர்களிடம் இல்லை. படம் முடிகையில் தேடியது கிடைத்ததா என்பதைவிட ஏன் இதைப்போய்த் தேடினார்கள் என்கிற வினாவே கடத்தப்படுகிறது. மறக்காமல் பாருங்கள். காணாமல் போகும் எளியவர்களின் மீதான அக்கறைமிக்க நுண்மையான ஆக்கம் இத்திரைப்படம். இத்திரைப்படத்தை தமிழிலேயே நெட்பிளிக்ஸில் காணலாம்.
அந்திவேளையில் மேகம் தூறுகையில் விடைபெறல்கள் அமைந்துவிட்டால் நன்றாக இருக்கும்.
சொற்கள் அருகி விக்கி நிற்கையில் பிரிதல்கள் நிகழ்கின்றன.
அலைபேசியின் ஊடாக அழுது அயர்ந்து போன முகங்கள் உடைந்து மறைகின்றன.
புன்னகைத்தபடி கையசைத்து விலகுகையில் சன்னலோரம் பிரியமிக்க உறவொன்று எட்டிப்பார்க்கையில் கேவல்கள் மின்னி அறைகின்றன.
துயர்மிக்க காலங்களை கடக்கும் வண்ணம் விழாவொன்று நிகழ்கிறது.
உடைந்தபடி உருகி வழியும் இசைச்சரம் ஒன்றின் தொடர்பறுந்து செவி துடிக்கையில் பிரிவுக்காலத்தின் வெம்மை இளைப்பாறுகிறது.
ஒவ்வொரு பிரிதலின் கணத்தினிலும் புதிய நடுக்கங்கள் கரம் சேரும்.
ஆயினும், பிரிவைக் கடக்கும் பயணத்தில் புதிதாய் பூக்கும் தழும்பொன்றின் நேசம் மட்டும் எப்போதும் உடனிருக்கும். – பூ கொ சரவணன்