As Long as the Lemon Trees Grow
by Zoulfa Katouh:
Zoulfa கனடாவில் பிறந்து, துபாய், சுவிஸ் போன்ற நாடுகளில் வளர்ந்தவர்.
சிரியா தம்பதிகளுக்குப் பிறந்தவர். மருந்தியலில் முதுகலைக் கல்வி கற்றவர். இவருடைய முதல் நாவலான இது 2022ல் வெளியாகியது.
சிரியா Ottoman வீழ்ச்சிக்குப்பிறகான பிரஞ்சுக் காலனியாதிக்கத்திற்குப்பின் சுதந்திரமடைந்ததும் பலவித மாறுதல்களை எதிர்கொண்டது. எகிப்துடன் இணைக்கப்பட்டு சரிவராது பிரிந்தது. இஸ்ரேலுடன் இணைந்து போரிட்டிருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு மேலாக தந்தை&மகனின் சர்வாதிகாரத்திலிருந்த சிரியா, ஆஸாத்தின் ஆட்சி டிசம்பர் 2024ல் விழுந்து, மார்ச் 2025ல் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கின்றது. சிரியாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிறது.
2011ல் தொடங்கிய உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்ட நாவலிது. சிரியா ராணுவம் தன் சொந்த மக்களை எவ்வாறு சித்திரவதை செய்தது என்பதைப் புனைவின் மூலம் சொல்கிறார் Zoulfa. Salama என்ற பதினெட்டு வயதுப்பெண் கதைசொல்லி. Pharmacy படிப்பை முடிக்குமுன்பே, கலவரத்தால் பாதிக்கப்பட்டு படிப்பை நிறுத்திய சலாமா, மருத்துவமனையில் போதுமான மருத்துவர் இல்லாததால் உயிர்காக்க ஆயிரக்கணக்கில் அறுவைசிகிச்சை செய்கிறாள். பலரைக் காப்பாற்றுகிறாள். பலர் இறக்கின்றனர். நோயாளிகளுக்குக் குறைவின்றி ராணுவம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது.
மருத்துவமனையில் குண்டு போடுதல், கர்ப்பிணிப் பெண்ணை Sniper தலைக்கு ஒரு புல்லட், கர்ப்பப்பைக்கு ஒரு புல்லட் கொண்டு கொல்வது, சொந்த நாட்டினர் மீது Chemical attack செய்வது, பெண்களிடம் ராணுவத்தின் அத்துமீறல்கள் என்று வரலாற்றில் நடந்த பலவும் பதிவாகியிருக்கின்றன.
இங்கே உயிருக்குப் பாதுகாப்பில்லை, அது மட்டுமல்ல எந்தவித முகாந்திரமுமின்றி சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்பது தெரிந்த பின் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல் எப்படி Cowardice thing ஆகும்? வெளியேறுபவர்களின் தேசபக்தி, தங்கியவர்களுக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல. முக்கியமான சிலவற்றை அள்ளிக் கொண்டு, கையில் இருக்கும் பெரும்பகுதிப் பணத்தைப் புரோக்கர்களுக்கு அளித்து,
பாதுகாப்பில்லாத மீன்பிடிப்படகில் செல்ல நேரும் போதும் சலாமாவிற்கு, தாய் நாட்டையும், சிகிச்சை வேண்டுபவருக்குச் செய்யாமல் தான் மட்டும் தப்பிக்க நினைப்பதாகக் குற்றஉணர்வு.
முதல்நாவல் என்பது தெரியாத வகையில் Zoulfaவின் Flow சரளமாக உள்ளது. நாவலின் இறுதிப்பகுதிக்கு முன்னால் ஒரு டிவிஸ்டை வைத்திருக்கிறார். யாரும் எதிர்பாராதது அது. நாட்டை விட்டு வெளியேறிய குற்றஉணர்வு கொண்ட எல்லோருக்குமான Love letter இந்த நாவல்.