Reading view

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


நான் அறிவேன்

அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை

வரையறுக்கப்பட்ட வருத்தங்களை

நான் அறிவேன்.

 

ஆனால்

நான் அவர்களைக் கவனிக்கிறேன்

அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன்.

அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை

நான் விரும்புகிறேன்

அதுவே ரொம்ப.

 

அவர்கள் புகார் சொல்கின்றனர்

ஆனால் கவலைப்படுவதில்லை.

அவர்களின் மிடுக்கு நடை 

ஆச்சரியகரமான கண்ணியம்.

மனிதர்களால்

சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில்

எளிமையாக

அவர்கள் உறங்குகின்றனர்.

 

நமது கண்களை விட

பூனைகளின் கண்கள் 

அபரிதமிதமான அழகு கொண்டவை.

அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில்

உறங்கமுடியும்

எந்தத் தயக்கமும்

குற்றவுணர்வும் இன்றி.

 

நான் சோர்வாக உணரும்போதெல்லாம்

எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர

வேறெதுவும் செய்வதில்லை.

எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.

 

நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன்

அவர்களே எனது ஆசிரியர்கள்.

(சுஜாவுக்கு)

  •  

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்


ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன்

என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே

எனது கூட்டாளி நீ

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன்

மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால்

உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன்

காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன்.


தூய்மையான கரமொன்றால் 

பிரிவின்போது 

நீ எனக்கு அளிக்கப்பட்டாய்.

நேசத்தின் கடைசி

நினைவுப் பரிசு நீ…

கசந்து பிரியும்போது 

ரத்தம் அல்ல

முத்தைப் போன்ற கண்ணீர் 

துயரமாக உனது கூர்முனையில் 

விழுந்தோடியது. 


எஃகாக இருக்கையில்

நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது

நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல 

துயரம் தோய்ந்த மர்மக் கனவால்

நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும்

எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன.


சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை

ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி:

நான் ஒருபோதும் மாறப்போவதில்லை

என் ஆன்மா 

உன்னைப் போல

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட

உன்னைப் போல. 

  •  

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்


கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம்

அதன் வாசலில்

ஒருவன் 

பசி, தாகம், வறுமையின் காரணமாக

நன்கொடை

கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் யாசகன்

குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன்.


அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான்

அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை

மெலிந்து, நலிந்து

அவன் நீட்டியிருக்கும் கரத்தில்

ஒரு கூழாங்கல்.


இப்படித்தான் நான் வீணே 

உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன்

கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு.

மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள் 

இப்படித்தான் 

உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.

  •  

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

 


நான் அறிவேன்

அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை

வரையறுக்கப்பட்ட வருத்தங்களை

நான் அறிவேன்.

 

ஆனால்

நான் அவர்களைக் கவனிக்கிறேன்

அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன்.

அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை

நான் விரும்புகிறேன்

அதுவே ரொம்ப.

 

அவர்கள் புகார் சொல்கின்றனர்

ஆனால் கவலைப்படுவதில்லை.

அவர்களின் மிடுக்கு நடை 

ஆச்சரியகரமான கண்ணியம்.

மனிதர்களால்

சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில்

எளிமையாக

அவர்கள் உறங்குகின்றனர்.

 

நமது கண்களை விட

பூனைகளின் கண்கள் 

அபரிதமிதமான அழகு கொண்டவை.

அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில்

உறங்கமுடியும்

எந்தத் தயக்கமும்

குற்றவுணர்வும் இன்றி.

 

நான் சோர்வாக உணரும்போதெல்லாம்

எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர

வேறெதுவும் செய்வதில்லை.

எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.

 

நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன்

அவர்களே எனது ஆசிரியர்கள்.

(சுஜாவுக்கு)

  •  

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்


ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன்

என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே

எனது கூட்டாளி நீ

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன்

மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால்

உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன்

காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன்.


தூய்மையான கரமொன்றால் 

பிரிவின்போது 

நீ எனக்கு அளிக்கப்பட்டாய்.

நேசத்தின் கடைசி

நினைவுப் பரிசு நீ…

கசந்து பிரியும்போது 

ரத்தம் அல்ல

முத்தைப் போன்ற கண்ணீர் 

துயரமாக உனது கூர்முனையில் 

விழுந்தோடியது. 


எஃகாக இருக்கையில்

நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது

நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல 

துயரம் தோய்ந்த மர்மக் கனவால்

நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும்

எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன.


சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை

ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி:

நான் ஒருபோதும் மாறப்போவதில்லை

என் ஆன்மா 

உன்னைப் போல

உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட

உன்னைப் போல. 

  •  

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்


கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம்

அதன் வாசலில்

ஒருவன் 

பசி, தாகம், வறுமையின் காரணமாக

நன்கொடை

கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் யாசகன்

குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன்.


அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான்

அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை

மெலிந்து, நலிந்து

அவன் நீட்டியிருக்கும் கரத்தில்

ஒரு கூழாங்கல்.


இப்படித்தான் நான் வீணே 

உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன்

கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு.

மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள் 

இப்படித்தான் 

உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.

  •