Reading view

சில மலையாள நாடகங்கள்

சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.

சி.ஜே. தாமஸ் ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.

கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.

என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.

என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.

இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

  •  

சில மலையாள நாடகங்கள்

சமீபத்தில் சில மலையாள நாடகங்களைப் படிக்க முடிந்தது.

சி.ஜே. தாமஸ் ஜேஜே சில குறிப்புகளின் நாயகனாக ஜேஜேயின் ரிஷிமூலமாம். தாமஸ் எழுதிய “அவன் வீண்டும் வருன்னு” சில விதங்களில் இப்சனின் பாணியை நினைவுபடுத்தியது. ஆனால் சுமாரான நாடகம்தான். 1949-இல் எழுதப்பட்டிருக்கிறது, அப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இன்று முன்னோடி நாடகம் மட்டும்தான் என்று தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போரில் பணத்தேவைகளுக்காக சிப்பாயாகச் சென்றிருக்கும் மாத்துக்குட்டி. நாலு வருஷம் பிரிவில் மாத்துக்குட்டியின் நண்பனுக்கும் மாத்துக்குட்டியின் மனைவிக்கு உறவு ஏற்படுகிறது, சாராம்மா கர்ப்பம். கண்களை இழந்து திரும்பி வரும் மாத்துக்குட்டி முதல் கோபத்துக்குப் பின் மனைவி தன் பொறுப்பு என்று உணர்கிறான், ஆனால் அவளோடு நெருங்க முடியவில்லை. ஒரு உபதேசியார் ஏசு வருகிறார் என்று பேசிக் கொண்டே இருக்கிறார், அந்தப் பாத்திரம்தான் இந்த நாடகத்தில் நினைவிருக்கப் போகிறது.

கே.டி. முகம்மது எழுதிய “இது பூமியாணு” அன்று புரட்சிகரமான நாடகமாக இருந்திருக்கும். சீர்திருத்த எண்ணம் கொண்டு காலித் ஒரு ஏழைப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து ஆதரிக்கிறான். ஊரில் – அவனது பெரியப்பா உட்பட – எல்லாரும் அவனை காறித் துப்புகிறார்கள். பெரியப்பா பாத்திரம் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. படிக்கலாம்.

என். கிருஷ்ணபிள்ளை எழுதிய “கன்யகா” (1944) நாடகத்தோடு என்னால் ஒட்ட முடியவில்லை. 1944-இல் 35 வயதுப் பெண், திருமணம் ஆகவில்லை, அவள் சம்பளத்தில் அவள் வீட்டில் எல்லாரும் வசதியாக வாழ்கிறார்கள், அவள் தம்பிக்கு வேலைக்குப் போவது இழிவு என்றுதான் எண்ணம். அவள் தங்கை கணவனுக்கு வேலை இல்லை, அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தவிர்க்கலாம்.

என்.என். பிள்ளை (ஓமசேரி) எழுதிய கோவில் ஆன ஒரு satire. பசியால் முரண்டு பிடிக்கும் யானையின் கதையை வைத்து அரசியல், அதிகாரிகள் எல்லாரையும் தாக்குகிறார். சுமார்தான்.

இவற்றைத் தவிர நிங்ஙள் என்னை கம்யூனிஸ்டாக்கி (1952) என்ற தோப்பில் பாசி நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு முக்கியமான நாடகம் என்னென்ன என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!

நான் படித்த நாலு நாடகங்களை வைத்து சொல்லிவிட முடியாதுதான். இருந்தாலும் படித்தே ஆக வேண்டிய மலையாள நாடகங்கள் குறைவுதான் என்று தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

  •