Reading view

நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம்.


சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின், ‘தொலைவான காலத்திலும்கூட நம்பிக்கையூட்டும் எதுவும் தென்படவில்லை’ என்னும் நடராஜா சுசீந்திரனின் மேற்கோளுடன் தொடங்கும், மிகச் சிறந்த அணிந்துரை.

நாடிலி – நாடற்றவன்;  ஏதிலி – அகதி.

இந்த சொற்களின் பொருள் எவ்வளவு வலியுடையது. கவிதைத் தொகுப்பு முழுக்க வலி, வலி, வலி…!

இத்தகைய வலியை சொற்களால் கடத்தியிருக்கிறார் கவிஞர். சொந்த நாட்டைவிட்டு வந்தால், வந்த நாட்டிலும் வலியே தொடர்வது எவ்வளவு பெரிய சோகம்..!

‘அவல முகாம்’ கவிதை இப்படி முடிகிறது:

“உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல
யாழினிகள் தெரியவில்லை!
அகதிகள் வீடடைதல் கவிதை நெஞ்சை உலுக்கும் அவலம்:
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
….
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்”

  ‘அகதி வாழ்வு’ கவிதை அதிர்வு:

மஞ்சள் கனியொன்றின்
பற்குறியில்
உறைந்து கிடக்கும்
குருதியென வீச்சமடிக்கிறது
இந்த வாழ்வு”

‘நட்சத்திரங்களினூடே…’கவிதை சோகம்:

“அவனுக்குத் தெரிகிறது
எண்ண எண்ண
நட்சத்திரங்கள் மறைந்துகொண்டே வருவது”

‘இரவு’ கவிதையில் சிறப்பான படிமம்:

”தேவையற்று வளர்ந்துகிடக்கும்
புற்றுக்கட்டியைப் போல்
துருத்திக்கொண்டிருக்கிறது
என் விருப்பத்துக்கு மாறாய்
நிர்பந்தப்பட்டிருக்கும் இன்றைக்கான இரவு”

‘கொடிய நிழல்’ கவிதை நிதர்சனத்தின் வலி:

“சீவல் தொழிலற்று
சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை
பனை நிழலும் அற்றுப் போனான் ”

இந்த கவிதைத் தொகுப்பின் மொத்த செய்தியையும், ‘எம் வாழ்வின் மிச்சமாய்…’ கவிதை கடத்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட:

”காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்கு குழி தாண்டியும்
பரவிக் கிடந்தன பறவையின் இறகுகள்
முறிந்த மரக்கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகெடுத்து
எத்தனை கதைதான் நானெழுத
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?”

கவிதையின் தலைப்பும் கடைசி வரிகளுமான விடையற்ற இக்கேள்வியை எல்லாக் குழந்தைகளும் தனது தந்தைகளிடம் கேட்பார்கள் தானே?

‘ஊமைக்காற்று’ கவிதை தகப்பனின் மற்றொரு வலி:

“மகள்
இப்போது
என் தாய்நாடு பற்றி வினவுகிறாள்
நான்
பிரபஞ்சத்தின் மேலிருந்து
ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன் ”

‘நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்’ கவிதையின் கோபத்தணலை யாராலும் தணிக்கவே இயலாது:

“நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவு மில்லை”

‘உதிரிகளின் வாழ்வு’ கவிதை அகதிகள் உதிரிகளாகிப் போன அவலத்தைப் பேசுகிறது:

“நிச்சயமற்ற வாழ்வில்
பொய்த்துப் போகும் சொற்களுக்காக
ஒருபோதும் சபித்துவிடாதீர்கள்
கிளிகளை”

‘செவ்வரி பூத்த வானம்’ குறுங்கவிதைகளில், கீழ்க்கண்ட கவிதையின் கடைசி வரிகள் கன்னத்தில் அறைகின்றன:

“முன்னொரு
மழைநாளில்
வானம் செந்நிறமானது
தரையெங்கும்
சிதறிக் கிடந்தன
செங்காந்தளைச் சுமந்த உடல்கள்”

‘அகதி முகாமில் தீபாவளி’ கவிதை முகாம்களின் அவல நிலையை தெரிவிக்கிறது. எவ்வளவு கொடுமை:

“கந்து வட்டியில்தான் இந்த வருடமும்
எமக்கான தீபாவளி
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது ”

‘புனித அப்பங்கள்’ கவிதை அதிகாரங்களின் துரோகங்களைப் பேசுகிறது:

“உங்களுக்கும் சேர்த்தே ஏற்றுக்கொண்டது பணிகளை
ஆணிகொண்டு அறையப்பட்ட குருதிக்கரங்கள்
இப்போது உங்களுக்கான
புனித அப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
யூதாஸின் கரங்களால்”

‘மஞ்சள் நெருப்பு’ கவிதை துயரத்தின் நிறத்தைச் சொல்கிறது.

“நாடற்றவனுக்கு மஞ்சள் என்றும் துயரம்.
ஏனெனில் எரியும் நெருப்பு மஞ்சள்.”

‘கார்ட்டூன்களுக்குள் உலவும் அரசியல்’ கவிதை தகப்பனின் வலி:

“மகளிடத்து இன்னும் சொல்லாமல் வைத்திருக்கிறேன்
பிஸ்கெட்டை சுவைப்பதற்குள்
சுடப்பட்ட சிறுவனையும்
வனங்களுக்குள் கொன்றொழிக்கப்பட்ட சனத்தையும்
நினைவுகளில் சுமந்தபடிக்கு
நாடற்று அலையும் நாடோடியான
என் கதையை”

‘நவதிசை’ கவிதை அகதிகளின் தினசரி அவஸ்தை:

“எண்திசைகள் குறித்து
யாரும் அலட்டிக்கொள்வதில்லை
இடதுபக்கம் கருவேலங்காடும்
வலதுபக்கம் தைலமரக்காடும்
ஆண்டுகளுக்கும் பெண்களுக்குமான
வெளித்திசை என்பது
முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை”

மழையைப் பார்க்கையிலும் தங்களின் கண்ணீர் தான் நினைவுக்கு வருகிறது கவிஞருக்கு:

“இப்படிப்
பொங்கி வழிந்தோடுகிறதே
நிலமெங்கும் வெள்ளமென
அகதிகளின் கண்ணீராய்”

 ‘அகதியின் பாதம்’ எப்போதும் தனது நிலத்தையே தேடுகிறது:

“கடல்மீதும்
சிறுதுண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்”

‘புலம்பெயராது இறந்திருக்கலாம்’ கவிதை நல்ல நாட்களை நம்பி வந்தவனின் ஏமாற்றம்:

“தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்
போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தேபோயிருக்கலாம்
புலம்பெயராது”

‘காலப்பெருவெளியில்’ கவிதை அகதிகளின் நம்பிக்கை இழப்பு:

“இலையுதிர் காலத்தின்
மரங்களைப் போல்
என் நம்பிக்கைகள்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன”

‘அதிகாரத்தின் கசையடித் தழும்புகள்’ கவிதை, கவிஞரின் கவிதை மொழியின் கண்ணீர்ப் பிண்ணனி:

“பலநூறு கசையடித் தழும்புகளில்
எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்
என் மொழியை”

இப்படி 96 பக்கங்களில் ஒரு சமூகத்தின் வலி. படித்தபின் கண்கள் கலங்குவதை நிறுத்த இயலவில்லை. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் எவ்வளவு மதிப்புடையது என்று நமக்குத் தெரியவில்லை. படித்ததும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிறப்பான வாசிப்பு அனுபவம்..!


நூல் தகவல்:

நூல் : நாடிலி

வகை :  கவிதைகள்

ஆசிரியர் : சுகன்யா ஞானசூரி

வெளியீடு : கடற்காகம்

வெளியான ஆண்டு:  ஜூன் 2021

பக்கங்கள் : 96

விலை:  ₹  110

 

  •  “நாடிலி” கவிதைத் தொகுப்பிற்கு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதிய முன்னுரை வாசிக்க  Click Here

 

The post நாடிலி- கவிதைத் தொகுப்பு வாசிப்பு அனுபவம். appeared first on Vimarsanam Web.

  •  

தனலெட்சுமியின் இரு கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சியைச் சேர்ந்தவர். கவிஞர்.  மேடைப் பேச்சாளர்.  இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.  இதில் ‘பெருவெளி கடக்கும் சிறு துளி’ And ‘சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்’

ஆகிய இருநூல்களிலிருந்து கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்னுடன் பழகியவர்கள் பொதுவாகச் சொல்வது ‘ உங்களுக்குப் பொறுமை அதிகம்’.  அதையே தனலட்சுமியைப் பார்த்து என்றாவது நான் நேரில் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் சமீபத்தில் கூறினார் ‘ உங்களுடன் பேசுகையில் எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதேயில்லை’.   ஒருவேளை புத்திசாலித்தனமாக நான் கத்தியை மறைத்து வைத்திருக்கலாம்.

”  பதில்தரும் உன் வார்த்தைகளில்

பாசம் கூடுவதை உணர்கிறேன்

பதற்றத்தோடு சேர்ந்து கொள்ளும்

எச்சரிக்கை என்னுள் புகுந்துவிட

முன்பிருந்த இயல்பை இழக்கிறேன்

அதற்குப் பின்னான பேச்சுகளில்”

நெருக்கமானவர் மரித்த பின்னும் அவர்கள் எண்ணை, சமூக ஊடகத் தொடர்பை அழிப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று நம்மில் பலர் நம்புவதால் தான் மழையே பெய்கிறது.

“உறவுகள் நட்புகள் எண்களாய்

அடுக்கப்பட்ட அலைபேசியில்

மரித்தோரின் தொடர்புகள்

அறுபடாத சங்கிலிகளாய்

சரம் கோர்த்து நிற்கும்

நீக்கு என்ற பொத்தானை

அறவே தவிர்க்கும் விரல்

நீக்கினால் வலிக்குமென்று

சுழற்றுகிறேன் அவ்வப்போது”

சிறுதுளி தொகுப்பில் மூன்று வரிகளில் முடிக்க வேண்டிய அவசரத்திலும் பளிச்சென்று வந்திருக்கின்றன பல.

” பேச முடியாத பொம்மையிடம்

கேட்க நிறைய இருக்கிறது

குழந்தைகட்கு”

” எவருமில்லை நூலகத்தில்

புத்தகத்தைப் புரட்டியது

காற்று”

” கோர்த்த கொலுசுமணி

கொடிக்கம்பியில் அணிவகுப்பு

மழைத்துளி”

“உறங்கும் தறியில்

நெய்கிறது சிலந்தி

வலையை”

சிறுதுளித் தொகுப்பில் ஒன்றைச் சொல்லி உள்ளர்த்தமாய் மற்றொன்றைச் சொல்லும் கவிதைகள் பல வந்திருக்கின்றன.

எளிமையான கவிதைகள்.  எளிமையான Presentation.  அசாத்தியமான உற்சாகம். இவையே  இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்த உடனேயே மனதில் தோன்றியது.

நீள் கவிதைகளை விட சிறுதுளி சிறப்பாக வந்துள்ளதாக நினைக்கிறேன். காரணம்,  கடைசியாக வந்த தொகுப்பு என்பதை விட வடிவம் இவர் அகத்திற்கு நெருங்கியது என்று கருதுகிறேன்.

கவிதைகளில் நல்லாள்,இல்லாள் போன்ற சொற்கள் கவிதைத் தன்மையைக் கூட்டுவதான நம்பிக்கையை தனலெட்சுமி அவசரமாகக் கைவிட வேண்டும்.  சிறு துளிகளில் வார்த்தைகளை விடக் கற்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அவை கூர்மையாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.  தொடர்ந்து வாசியுங்கள்.  இலக்கியத்தோடு எப்போதும் பயணியுங்கள்.  உங்கள் பொறுமையைச் சோதிப்பவர்களையேனும் சின்னதாகக் கடிந்து கொள்ளுங்கள்.

சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்

மலர்க்கண்ணன் பதிப்பகம்

73055 00990

முதல்பதிப்பு ஏப்ரல் 2021

விலை ரூ.110.

பெருவெளிகடக்கும் சிறுதுளி

வாலி பதிப்பகம் 99405 08595

முதல்பதிப்பு நவம்பர் 2021

விலை ரூ.100.

  •  

தனலெட்சுமியின் இரு கவிதை நூல்கள்:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சியைச் சேர்ந்தவர். கவிஞர்.  மேடைப் பேச்சாளர்.  இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.  இதில் ‘பெருவெளி கடக்கும் சிறு துளி’ And ‘சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்’

ஆகிய இருநூல்களிலிருந்து கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்னுடன் பழகியவர்கள் பொதுவாகச் சொல்வது ‘ உங்களுக்குப் பொறுமை அதிகம்’.  அதையே தனலட்சுமியைப் பார்த்து என்றாவது நான் நேரில் சொல்ல வேண்டும்.

ஒரு பெண் சமீபத்தில் கூறினார் ‘ உங்களுடன் பேசுகையில் எங்களுக்கு எச்சரிக்கை மணி அடிப்பதேயில்லை’.   ஒருவேளை புத்திசாலித்தனமாக நான் கத்தியை மறைத்து வைத்திருக்கலாம்.

”  பதில்தரும் உன் வார்த்தைகளில்

பாசம் கூடுவதை உணர்கிறேன்

பதற்றத்தோடு சேர்ந்து கொள்ளும்

எச்சரிக்கை என்னுள் புகுந்துவிட

முன்பிருந்த இயல்பை இழக்கிறேன்

அதற்குப் பின்னான பேச்சுகளில்”

நெருக்கமானவர் மரித்த பின்னும் அவர்கள் எண்ணை, சமூக ஊடகத் தொடர்பை அழிப்பது அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று நம்மில் பலர் நம்புவதால் தான் மழையே பெய்கிறது.

“உறவுகள் நட்புகள் எண்களாய்

அடுக்கப்பட்ட அலைபேசியில்

மரித்தோரின் தொடர்புகள்

அறுபடாத சங்கிலிகளாய்

சரம் கோர்த்து நிற்கும்

நீக்கு என்ற பொத்தானை

அறவே தவிர்க்கும் விரல்

நீக்கினால் வலிக்குமென்று

சுழற்றுகிறேன் அவ்வப்போது”

சிறுதுளி தொகுப்பில் மூன்று வரிகளில் முடிக்க வேண்டிய அவசரத்திலும் பளிச்சென்று வந்திருக்கின்றன பல.

” பேச முடியாத பொம்மையிடம்

கேட்க நிறைய இருக்கிறது

குழந்தைகட்கு”

” எவருமில்லை நூலகத்தில்

புத்தகத்தைப் புரட்டியது

காற்று”

” கோர்த்த கொலுசுமணி

கொடிக்கம்பியில் அணிவகுப்பு

மழைத்துளி”

“உறங்கும் தறியில்

நெய்கிறது சிலந்தி

வலையை”

சிறுதுளித் தொகுப்பில் ஒன்றைச் சொல்லி உள்ளர்த்தமாய் மற்றொன்றைச் சொல்லும் கவிதைகள் பல வந்திருக்கின்றன.

எளிமையான கவிதைகள்.  எளிமையான Presentation.  அசாத்தியமான உற்சாகம். இவையே  இந்த இரண்டு கவிதைத் தொகுப்புகளை வாசித்த உடனேயே மனதில் தோன்றியது.

நீள் கவிதைகளை விட சிறுதுளி சிறப்பாக வந்துள்ளதாக நினைக்கிறேன். காரணம்,  கடைசியாக வந்த தொகுப்பு என்பதை விட வடிவம் இவர் அகத்திற்கு நெருங்கியது என்று கருதுகிறேன்.

கவிதைகளில் நல்லாள்,இல்லாள் போன்ற சொற்கள் கவிதைத் தன்மையைக் கூட்டுவதான நம்பிக்கையை தனலெட்சுமி அவசரமாகக் கைவிட வேண்டும்.  சிறு துளிகளில் வார்த்தைகளை விடக் கற்பனைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அவை கூர்மையாக வந்திருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.  தொடர்ந்து வாசியுங்கள்.  இலக்கியத்தோடு எப்போதும் பயணியுங்கள்.  உங்கள் பொறுமையைச் சோதிப்பவர்களையேனும் சின்னதாகக் கடிந்து கொள்ளுங்கள்.

சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும்

மலர்க்கண்ணன் பதிப்பகம்

73055 00990

முதல்பதிப்பு ஏப்ரல் 2021

விலை ரூ.110.

பெருவெளிகடக்கும் சிறுதுளி

வாலி பதிப்பகம் 99405 08595

முதல்பதிப்பு நவம்பர் 2021

விலை ரூ.100.

  •  

துடிநிலை – பவித்ரா:

ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.  பெரம்பலூரில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  எட்டு வருடங்களாகக் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவரும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.

Windowவை Widow என்று வாசித்தீர்களென்றால் அது தோற்றமயக்கமல்ல, ஆழ்மனத்தின் தடுமாற்றம்.  ஆழப்பதிந்தவை எப்படியேனும் எழுத்தில் வந்தே தீரும்.

”  காட்டுமல்லியைப் போல் அவ்வளவு

வாசனை இந்த இரவுக்கும் இருந்தது

முகம் முழுவதும் விகசித்தபடி

நாசிதுளைத்துச் சென்ற

விடியல்கள் இருந்தது

ஊடுபயிராக வளர்ந்த 

தோட்டத்து மஞ்சள் வாசனையும்

தண்ணீர்விட்டு வளர்ந்த

இளநீரின் குளிரில் அந்த

ஈரவானம் படர்ந்து இருந்தது”

கவிதையோ சிறுகதையோ பவித்ராவின் மொழிக்கு எல்லைக்கோடுகள் கிடையாது.  இந்தக்கவிதை வாசித்தவுடன் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.  வாழ்க்கைச்சுழற்சியை மட்டும் சொல்லவில்லை,  ஒரு Black humourஐ ஆரவாரமின்றிச் சொல்கிறது.

‘  முன்பெல்லாம்

தொடையிடுக்கில் அமுதூறும்

நாட்களை டயரியில் குறிப்பதுண்டு

இப்போது

வெற்றுக்காகிதமாய் நிரம்பிக்கிடக்கும்

டயரியில்

மகள் கோலம் வரைந்து பழகுகிறாள்”

அவல நகைச்சுவை இந்தக் கவிதையிலும் வந்திருக்கிறது.  தற்கொலைக்குக் காரணம் இந்தக் கவிதைக்குத் தேவையில்லை.  அது போலவே கடைசி ஆசை என்றாலும் பாரம்பரியச் சடங்குகளை மாற்றுவதற்கில்லை.

“பிணம் தின்பதால் தான் கடல்மீன்

சுவைப்பதாகக் கூறியிருந்தார்கள்

சில மீன்குஞ்சுகள்

எங்கள் கிணற்றில்

வளர்ந்து வந்தன

அழுக்கையும் பாசானையும்

தின்று வளர்ந்த

எங்கள் தோடத்துக்கிணற்று

மீன்களுக்கு சுவைகூட்ட

தனிமை அழுத்திய நன்நாளில்

தலைகுப்புறக் கிணற்றுக்குள்

விழுந்தேன்.

மூன்றாம் நாள்

அழுகிக்கிடந்த உடலை

எரிக்கவேண்டாம்

புதைத்துவிடுங்கள்

என்ற கடிதம் என்னோடு

சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது

பிணத்தை எரியூட்டும் தாத்தா

குவாட்டரை வாயில் சரித்தபடி

என்னுடலின் அழுகல் வாடை

தாங்காமல்

‘நார முண்ட’  என்றார்”

பவித்ராவின் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வரும் விஷயங்கள் இறப்பு, அப்பா.  மரணம் என்பது ஆசுவாசம் என்றொரு வரி வருகிறது.  இறந்த அப்பா நாற்காலியில் வந்தமர்ந்து சிகரெட் கேட்கிறார்.  வேப்பமரத்து நிழலில் பலருடன் கலவி செய்தவளின் உயிரை அந்த வேப்பமரத்துக் கிளையே வாங்கிக் கொள்கிறது.

பல கவிஞர்களின் கருப்பொருளான பிரிவின் துயரம் பவித்ராவின் சில கவிதைகளில் வந்திருக்கின்றது.  ஆனால் இந்தப் பிரிவுகள் மற்றவர்களைப் போலன்றி நிணவாடையும், மாறாப்பிணியும் கொண்டிருக்கின்றன.  அறுவைசிகிச்சை மருத்துவரின் சலனமின்மையுடன் பவித்ராவின் கவிதைகள் உடலை உற்று நோக்குகின்றன.  கிண்டல்கள், கேலிகளுக்குப் பின்னால் மெல்லிய வேதனை முகம்காட்டாது ஒளிந்திருக்கிறது.  சிறுகதைத் தொகுப்பைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள் பவித்ரா.

பிரதிக்கு:

சால்ட் 9363098933

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை. ரூ.120

  •  

துடிநிலை – பவித்ரா:

ஆசிரியர் குறிப்பு:

சென்னையில் பிறந்து, வளர்ந்தவர்.  பெரம்பலூரில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  எட்டு வருடங்களாகக் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதிவரும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது.

Windowவை Widow என்று வாசித்தீர்களென்றால் அது தோற்றமயக்கமல்ல, ஆழ்மனத்தின் தடுமாற்றம்.  ஆழப்பதிந்தவை எப்படியேனும் எழுத்தில் வந்தே தீரும்.

”  காட்டுமல்லியைப் போல் அவ்வளவு

வாசனை இந்த இரவுக்கும் இருந்தது

முகம் முழுவதும் விகசித்தபடி

நாசிதுளைத்துச் சென்ற

விடியல்கள் இருந்தது

ஊடுபயிராக வளர்ந்த 

தோட்டத்து மஞ்சள் வாசனையும்

தண்ணீர்விட்டு வளர்ந்த

இளநீரின் குளிரில் அந்த

ஈரவானம் படர்ந்து இருந்தது”

கவிதையோ சிறுகதையோ பவித்ராவின் மொழிக்கு எல்லைக்கோடுகள் கிடையாது.  இந்தக்கவிதை வாசித்தவுடன் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.  வாழ்க்கைச்சுழற்சியை மட்டும் சொல்லவில்லை,  ஒரு Black humourஐ ஆரவாரமின்றிச் சொல்கிறது.

‘  முன்பெல்லாம்

தொடையிடுக்கில் அமுதூறும்

நாட்களை டயரியில் குறிப்பதுண்டு

இப்போது

வெற்றுக்காகிதமாய் நிரம்பிக்கிடக்கும்

டயரியில்

மகள் கோலம் வரைந்து பழகுகிறாள்”

அவல நகைச்சுவை இந்தக் கவிதையிலும் வந்திருக்கிறது.  தற்கொலைக்குக் காரணம் இந்தக் கவிதைக்குத் தேவையில்லை.  அது போலவே கடைசி ஆசை என்றாலும் பாரம்பரியச் சடங்குகளை மாற்றுவதற்கில்லை.

“பிணம் தின்பதால் தான் கடல்மீன்

சுவைப்பதாகக் கூறியிருந்தார்கள்

சில மீன்குஞ்சுகள்

எங்கள் கிணற்றில்

வளர்ந்து வந்தன

அழுக்கையும் பாசானையும்

தின்று வளர்ந்த

எங்கள் தோடத்துக்கிணற்று

மீன்களுக்கு சுவைகூட்ட

தனிமை அழுத்திய நன்நாளில்

தலைகுப்புறக் கிணற்றுக்குள்

விழுந்தேன்.

மூன்றாம் நாள்

அழுகிக்கிடந்த உடலை

எரிக்கவேண்டாம்

புதைத்துவிடுங்கள்

என்ற கடிதம் என்னோடு

சேர்ந்து எரிந்து கொண்டிருந்தது

பிணத்தை எரியூட்டும் தாத்தா

குவாட்டரை வாயில் சரித்தபடி

என்னுடலின் அழுகல் வாடை

தாங்காமல்

‘நார முண்ட’  என்றார்”

பவித்ராவின் இந்தத் தொகுப்பில் அடிக்கடி வரும் விஷயங்கள் இறப்பு, அப்பா.  மரணம் என்பது ஆசுவாசம் என்றொரு வரி வருகிறது.  இறந்த அப்பா நாற்காலியில் வந்தமர்ந்து சிகரெட் கேட்கிறார்.  வேப்பமரத்து நிழலில் பலருடன் கலவி செய்தவளின் உயிரை அந்த வேப்பமரத்துக் கிளையே வாங்கிக் கொள்கிறது.

பல கவிஞர்களின் கருப்பொருளான பிரிவின் துயரம் பவித்ராவின் சில கவிதைகளில் வந்திருக்கின்றது.  ஆனால் இந்தப் பிரிவுகள் மற்றவர்களைப் போலன்றி நிணவாடையும், மாறாப்பிணியும் கொண்டிருக்கின்றன.  அறுவைசிகிச்சை மருத்துவரின் சலனமின்மையுடன் பவித்ராவின் கவிதைகள் உடலை உற்று நோக்குகின்றன.  கிண்டல்கள், கேலிகளுக்குப் பின்னால் மெல்லிய வேதனை முகம்காட்டாது ஒளிந்திருக்கிறது.  சிறுகதைத் தொகுப்பைச் சீக்கிரம் கொண்டு வாருங்கள் பவித்ரா.

பிரதிக்கு:

சால்ட் 9363098933

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை. ரூ.120

  •  

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் –  அருள்ஜோதி முரளிதரன்:

ஆசிரியர் குறிப்பு:

கோவையைச் சேர்ந்தவர்.  முனைவர் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது அமெரிக்கப் பல்கலையில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இலக்கியம், தமிழ்சங்கப் பணிகளுடன், அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.

பெண்ணோ, ஆணோ எதிர்பாலினத்தின் மீதான அன்பு, புறக்கணிப்பின் வலி, பிரிவு இன்னபிறவற்றைக் குறித்து எழுதாமல் இருக்க முடியாது.  நம்மை அதிகம் பாதிப்பவற்றைத் தான் நம் மொழியில் எழுதுகிறோம்.  அருள்ஜோதி,  அமெரிக்கா வரை ஜாதியைக் கொண்டு சென்றிருப்பது, பள்ளி மாணவனின் உளச்சிக்கல், போரின் குரூரம், அமெரிக்கக்கனவுக்குள் சிறைபட்ட 

பெண் என்பது போல பலவற்றைக் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முழுக்கவிதையல்ல இது.  கவிதை சொல்லும் பொருளும் வேறு.  ஆனால் இந்த வரிகளை மொத்தக் கவிதையில் இருந்து துண்டித்தால் இது தனியாகத் தரும் பொருள் வேறு.  நிழலைச் சுமப்பதென்பது பெரும்பாரம்.

“எனக்கும் காலத்துக்குமான

இடைவெளியின் கணத்தில்

நுழைந்து கொள்கின்றன

அரூப நிழலின் கரங்கள்

சதாசர்வ காலமும் கூடவே

அலைகிறது என் நிழலின் சுமை”.

பெண்கள் வேலைக்கு சென்றால் அந்நிய ஆணால் கவரப்பட்டு விடுவார்கள் என்ற ஆதிகாலத்து பயம் அகலாமலிருக்கிறது.  தன் பெண்ணில் தொலைந்து போன தன்னைத் தேடும் பெண்கள் ஏராளம்.

‘  ஊரை உறவை கனவைத்

தொலைத்த இறுக்கம்

மனநோயான பின்பு

மாடுலர் கிட்சனில்

இன்ஸ்டாரீல்களுக்குள்

அடக்கப்பட்டுவிடுகிறது

டிபன்டெண்ட் விசாவில்

வந்தவளின்

கோல்ட் மெடல்களும்

ஒரு கோப்பைக் கனவுகளும்”

வீடு, கொல்லை, புங்கைமரம் எல்லாமே போன பிறவியில் பார்த்தது போல் இருக்கிறது.  இதில் வரும் பெண்ணையும் தான்.  முத்தத்தை  எதற்குப் புதைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். மரத்தின் கீழ் புதைத்ததால் ஊதாப்பூ, வானத்தில் ஒளித்திருந்தால் நட்சத்திரம்.

“நுதல் முத்தங்கள் ஒவ்வொன்றாய்

ஒற்றியெடுத்து என்வீட்டின் கொல்லையில்

புங்கை மரத்தடியில் புதைத்து

வைத்திருந்தேன் நான்

காலத்தைக் கொஞ்சம் சிறையிலெடுத்து

நம் அந்தரங்கத்தைச் சுமந்தலைகிறது

கொல்லைப்புறத்துப் புங்கை

தனித்திருக்கும் இரவுகள்

சலனமின்றிக் கடக்க

நடுநிசியில் முளைக்கிறது

தினமொரு புங்கைமர முத்தம்”.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள்.  காதலை வெளிச்சொல்லத்தெரியாத அப்பாவி புங்கைமரப்பெண்.  அந்நியமாதல் கோட்பாடு எழுதும், உணர்ச்சியை உதிர்த்து அறிவால் விடைதேடும் அடுத்த பெண்.  கடைசியாகத் தீராக்கோபத்தைக் கவிதையெழுதி அணைக்கும் மற்றொரு பெண்.

அருள்ஜோதியின் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.  சில எடிட்டிங்கைக் கோருபவை.  எல்லாக் கவிதைகளிலும் ஒரு முதிர்ச்சியைக் காண முடிவது முக்கியமான விஷயம்.  சதுரங்க விளையாட்டை நிகழ்த்தும் பெண், பவளமல்லி மரம் வரைந்தவளின் பெண், என்று சில பெண்கள் கவிதைக்குள் கதைகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.  நல்ல வாசிப்பனுபவத்தை அளித்த தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அருள்ஜோதி.

பிரதிக்கு:

 யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472

முதல் பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ. 150.

  •  

பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம் –  அருள்ஜோதி முரளிதரன்:

ஆசிரியர் குறிப்பு:

கோவையைச் சேர்ந்தவர்.  முனைவர் பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது அமெரிக்கப் பல்கலையில் ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இலக்கியம், தமிழ்சங்கப் பணிகளுடன், அறிவியல் கட்டுரைகளை எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது.

பெண்ணோ, ஆணோ எதிர்பாலினத்தின் மீதான அன்பு, புறக்கணிப்பின் வலி, பிரிவு இன்னபிறவற்றைக் குறித்து எழுதாமல் இருக்க முடியாது.  நம்மை அதிகம் பாதிப்பவற்றைத் தான் நம் மொழியில் எழுதுகிறோம்.  அருள்ஜோதி,  அமெரிக்கா வரை ஜாதியைக் கொண்டு சென்றிருப்பது, பள்ளி மாணவனின் உளச்சிக்கல், போரின் குரூரம், அமெரிக்கக்கனவுக்குள் சிறைபட்ட 

பெண் என்பது போல பலவற்றைக் கவிதைக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

முழுக்கவிதையல்ல இது.  கவிதை சொல்லும் பொருளும் வேறு.  ஆனால் இந்த வரிகளை மொத்தக் கவிதையில் இருந்து துண்டித்தால் இது தனியாகத் தரும் பொருள் வேறு.  நிழலைச் சுமப்பதென்பது பெரும்பாரம்.

“எனக்கும் காலத்துக்குமான

இடைவெளியின் கணத்தில்

நுழைந்து கொள்கின்றன

அரூப நிழலின் கரங்கள்

சதாசர்வ காலமும் கூடவே

அலைகிறது என் நிழலின் சுமை”.

பெண்கள் வேலைக்கு சென்றால் அந்நிய ஆணால் கவரப்பட்டு விடுவார்கள் என்ற ஆதிகாலத்து பயம் அகலாமலிருக்கிறது.  தன் பெண்ணில் தொலைந்து போன தன்னைத் தேடும் பெண்கள் ஏராளம்.

‘  ஊரை உறவை கனவைத்

தொலைத்த இறுக்கம்

மனநோயான பின்பு

மாடுலர் கிட்சனில்

இன்ஸ்டாரீல்களுக்குள்

அடக்கப்பட்டுவிடுகிறது

டிபன்டெண்ட் விசாவில்

வந்தவளின்

கோல்ட் மெடல்களும்

ஒரு கோப்பைக் கனவுகளும்”

வீடு, கொல்லை, புங்கைமரம் எல்லாமே போன பிறவியில் பார்த்தது போல் இருக்கிறது.  இதில் வரும் பெண்ணையும் தான்.  முத்தத்தை  எதற்குப் புதைக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். மரத்தின் கீழ் புதைத்ததால் ஊதாப்பூ, வானத்தில் ஒளித்திருந்தால் நட்சத்திரம்.

“நுதல் முத்தங்கள் ஒவ்வொன்றாய்

ஒற்றியெடுத்து என்வீட்டின் கொல்லையில்

புங்கை மரத்தடியில் புதைத்து

வைத்திருந்தேன் நான்

காலத்தைக் கொஞ்சம் சிறையிலெடுத்து

நம் அந்தரங்கத்தைச் சுமந்தலைகிறது

கொல்லைப்புறத்துப் புங்கை

தனித்திருக்கும் இரவுகள்

சலனமின்றிக் கடக்க

நடுநிசியில் முளைக்கிறது

தினமொரு புங்கைமர முத்தம்”.

இந்தத் தொகுப்பின் கவிதைகளில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள்.  காதலை வெளிச்சொல்லத்தெரியாத அப்பாவி புங்கைமரப்பெண்.  அந்நியமாதல் கோட்பாடு எழுதும், உணர்ச்சியை உதிர்த்து அறிவால் விடைதேடும் அடுத்த பெண்.  கடைசியாகத் தீராக்கோபத்தைக் கவிதையெழுதி அணைக்கும் மற்றொரு பெண்.

அருள்ஜோதியின் இந்தத் தொகுப்பில் பல கவிதைகள் நன்றாக வந்திருக்கின்றன.  சில எடிட்டிங்கைக் கோருபவை.  எல்லாக் கவிதைகளிலும் ஒரு முதிர்ச்சியைக் காண முடிவது முக்கியமான விஷயம்.  சதுரங்க விளையாட்டை நிகழ்த்தும் பெண், பவளமல்லி மரம் வரைந்தவளின் பெண், என்று சில பெண்கள் கவிதைக்குள் கதைகளை ஒளித்து வைத்திருக்கிறார்கள்.  நல்ல வாசிப்பனுபவத்தை அளித்த தொகுப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அருள்ஜோதி.

பிரதிக்கு:

 யாவரும் பப்ளிஷர்ஸ் 90424 61472

முதல் பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ. 150.

  •  

நினைவாலணையும் முகம் – க.மோகனரங்கன்:

ஆசிரியர் குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டு என்ற கிராமத்தில் பிறந்தவர்.  பொறியியல் பட்டதாரி.  கவிதைகள் எழுதுவதைத் தவிர, விமர்சனம், மொழிபெயர்ப்பு போன்ற துறைகளிலும் இயங்கி வருகிறார்.

பிணியும் பேறும் எப்படி ஒருவரே இருக்கமுடியாதோ அப்படி ஒரு வார்த்தைக் கோர்வை நினைவாலணையும் முகம்.  நெஞ்சினிலே நினைவுமுகம்.   காதலும், கனவும், பிரமையும் கலந்த கவிதைகள் காற்றுவெளியில் அந்த முகத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன. சகல தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் பின்,  வெற்றி தேவதையாக வீட்டிலிருக்குமவள்.

‘  இந்த இரவு தான்

எவ்வளவு ஆறுதலானது.

உந்தன் கண்மைக் கருப்பிலிருந்து

பிறந்து,

கார்குழல் சுருளுக்குள்

வளரும் இருள் தான்

என் மருள் நீக்கும் மருந்து”

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலில்லை. 

எல்லாக் கேள்வி கேட்பவருக்கும் பதிலில்லை.  சில நேரங்களில் பதிலிருந்தும் சொல்வதற்கு ஏதுமில்லை.

” கேட்கவும் சொல்லவுமாகத்தான்

எரியும் நினைவுகளைக்

கரிந்தடங்கச் செய்கிறோம்

இன்மையின் கருந்துளை ஒன்று

மீதமில்லாமல் உறிஞ்சிக் கொள்கிறது

சொல்வதற்கும் முந்தைய சொற்களை”

நாளை ஏதாவது நல்லது நடக்கலாம் என்ற ஆழ்மன நம்பிக்கையே இவ்வாழ்வின் ஆதாரம்.  எல்லாம் சரியாகி விடும் என்பது அசட்டு நம்பிக்கை என்று அறிவுக்குப் புலப்படாதவரை எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது.

” எல்லாவற்றின் மீதும் பட்சமின்றிப்

படர்கிறதொரு பற்றின்மை

இருப்பினும்

இன்னும் பிரிக்கப்படாததொரு

பரிசுப்பொதியைப் போலவே

ஒவ்வொரு நாளையையும்

அனுமானம் எதுவும் கொள்ளாமல்

அவிழ்க்க முயல்கிறேன்”

நம் வாழ்வின் மகிழ்ச்சியும், திருப்தியும் எதிரிருப்பவரின் நிலையிலிருந்தே எடுத்துக் கொள்கிறோம்.  எல்லாமே வெளியிலிருந்து எடுப்பது என்றான பின் நம் நிம்மதி என்பது நாம் இரக்கப்படும் நிலையிலிருக்கும் அயலாரிடமிருந்து கிடைப்பது.  இந்த நத்தையும், முள்ளெலியும் நாம் தான்.

” ஓடு உடைந்த நத்தை ஒன்று

தான் ஊர்ந்து செல்லும் தடத்தில்

முள்ளெலி ஒன்றை

எதேச்சையாக எதிரிடுகிறது

ஒரு கணம் நின்று ஒன்றையொன்று

உற்றுப் பார்த்தபின் இரண்டும்

தத்தமது திசையில் தொடந்தேகின

அன்றைய உறக்கத்தில்

மிருதுவான சருமத்தோடு

மெத்தென்ற கட்டிலில்

முள்ளெலி படுத்திருக்க

நத்தையின் கனவையோ

முட்கள் கிழித்தன”

அனுபவத்தின் கனம் கவிஞர்களுக்கு வார்த்தையின் மேல் படிகிறது.  ‘உள்ளத்தில் கிளைத்திருந்த வலியை துளி இலையெனக் கிள்ளி வைத்தேன்’  என்ற வரி போல் நூலெங்கிலும் அனுபவச்சாரம் வார்த்தைச் சிதறல்களாக மாறியிருக்கின்றது.  அதிக நாள் வாழ்பவர்களுக்கு அதிகத் தவறுகள் சேகரமாயிருக்கும்.  கவிஞர்கள் வரிகளின் வழி வலியைக் குறைக்க முயலலாம்.

எதையேனும் செய்து கடந்தகாலத்தை மாற்ற நினைப்பதும்,  வார்த்தைகளைத் தூதாக அனுப்பி வராதவளை வரவைக்க முயல்வதும்,  முடிவில்லா விளையாட்டு.  கவிதைகளை நினைவுகூரல்கள் என்கிறார் முன்னுரையில் மோகனரங்கன்.  மகிழ்வாக இருப்பதாக நினைப்பதும், துக்கமாக உணர்வதும் உண்மையில் வேறுவேறில்லை, நம் மனநிலைதான்.

பழகிய ஆற்றில் குளித்தெழுந்த உணர்வு.

பிரதிக்கு:

தமிழினி 86672 55103

முதல்பதிப்பு டிசம்பர் 2024

விலை ரூ.110.

  •