முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் அடையாள சக்தி
எங்கும் தம்மை முண்டியடித்து முன்னிறுத்த விரும்பாத தலைமுறையின் இன்னொரு அடையாள சக்தியென குறிப்பிடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன் தமிழிலக்கியச் சூழலில் முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருபவர். அம்மன் நெசவு , மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கைவனம் எனத் தொடரும் நாவல் வரிசைகளால் தமிழின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படும் எம்.கோபாலகிருஷ்ணன், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சாத்தியமான அனைத்து வடிவங்களிலும் தன்னைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.