Reading view

ஆடல் 9, கம்பப்பாடல்கள்: வஜ்ரபாகு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி



சூரசம்மார நிகழ்வின் ஒரு பகுதியாக நடக்கும் கம்பம் ஏறும் சடங்கு கந்த புராணத்தின் வச்சிரபாகு பாத்திரம் ஒன்றை மையமாக்கி நிகழ்கிறது. வச்சிரபாகு என்னும் அரக்கன் தான் அந்த கம்பம், குறைந்தபட்சம் அறுபதடி உயரம் உள்ள கம்பம். இவன் இராவணனைப்போல பத்துத் தலையும் இருபது கரமும் உடையவன். வச்சிரம்பாகு என்னும் பெயருக்கு வச்சிரம் போன்ற உறுதியான தோள்களை உடையவன் என்று பொருள். 

  •  

கல்லில் எழுந்த நாயகர்கள்- தாமரைக்கண்ணன் புதுச்சேரி

தில்லை காளி கோவில்லுள்ள அரிகண்ட வீரர்- படம் வே. பார்த்திபன்

தமிழ் பண்பாட்டில், இலக்கியத்திலும் இலக்கணத்திலும் நெடிது பேசப்பட்ட ஒரு மரபு நடுகல்லுக்கானது. கல்நாட்டும் மரபு தொல்பழங்காலத்திலிருந்து துவங்குகிறது. வீர கதை மரபு அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றது. என் தலைவன் முன்பு வரவேண்டாம் பகைவர்களே அப்படி பகை நின்றவர்கள் எல்லாம் இப்போது நடுகற்களாகி நிற்கிறார்கள் என்கிறது படைச்செருக்கு அதிகாரத்தின் குறள் ஒன்று. ஆரம்ப காலத்தில் குத்துக்கற்களாக இருந்த இந்த ஈமச்சின்னங்கள் கற்களில் எழுத்துப்பொறிப்பு பெற்றன, பின்னர் இறந்த வீரனின் உருவத்தோடு வடிக்கப்பெற்றன. பல அடுக்கு சிற்பங்களாகவும் அழகியல் ரீதியாக இவை வளர்ச்சி பெற்றன.

  •  

அம்மையின் கதை: தாமரைக்கண்ணன் புதுச்சேரி


வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்

கல்லா லெறியப் பிரம்பாலடிக்க இக்காசினியில்

அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொர்  அன்னைபிதா

இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே எளிதானதுவே

காளமேகம் பின்னாளில் வசை பாடும் முன்னரே அடியார் ஒருவரை தனது அன்னையாக வரித்துக்கொண்டார் சிவபெருமான். அண்டம் முழுதும் பிறப்பித்தவர் ஆயினும் தனக்கும் அம்மை ஒருத்தி வேண்டும் என்று தோன்றியிருக்கலாம். தன்னை தரிசிக்க கயிலை வந்த காரைக்காலம்மையை 'நம்மைப் பேணும் அம்மை காண் இவள்' என்று ஈசன் உமையிடம் சொல்வதாக  பெரியபுராணம் உரைக்கிறது. உலகின் தந்தை, உலகன்னையிடம் இதோ வரும் இந்த பெண்மணி என் தாய் என்கிறார்.

  •  

ஆடல் 8, செவ்வேள் ஆடல்: கம்பப்பாடல்கள் - 2, தாமரைக்கண்ணன் புதுச்சேரி


நெட்டப்பாக்கம் சூரபத்மன்

ஆடல்- கம்பப்பாடல்கள் பகுதி- 1


1.3 சூரசம்காரம் : முத்தியால்பேட்டை

திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ

சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ

திட்டாண்மை யொடுபகைமை உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....

..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ 

முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே

  • முத்தியாலுப்பேட்டை முருகப்பெருமான் மீது வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய குமருகுருநாதன் திருவகுப்பு 

  •  

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

  •