Reading view

யார் எழுதியதோ

 

நீர்க்கரைகளிலே
தனிமையிலே திரிந்திருந்தேன்

மீன் வருமளவும்
முழுவதுமாய்ச் சலித்திருந்தேன்

நதிமேல் விழும் வானிலே
மிதந்தே வரும் தாரகை
அடையா உளவை உணர்ந்தேன் உணர்ந்தேன்

வான் தரையிறங்கும்
இரவுகளில்
உனை தொடர்வேன்

நான்
நடைபழகும் கவிதைகளின்
பொருள் பெறுவேன்

நிலவே விளக்கானவன்
அடியேன் தெருவாசகன்
மெதுவாய் நடந்தேன் தொடர்ந்தேன் தொடர்ந்தேன்

எதிரில் இருந்தும் கதவைத் திறவேன்
விடையை துறந்தேன் புதிரில் சுழன்றேன்

ஆண்
அறையினிலே
விடிவதில்லை சில பகல்கள்

பெண்
வரும் வரையில்
திறப்பதில்லை அதன் திரைகள்

விழியோ ஒரு சாளரம்
மனமோ சிறு தாவரம்
ஒளியாய் வளர்ந்தாய் கடந்தாய் கடந்தாய்

பின் குறிப்பு  #1 –  இதை எழுதிக் கொண்டிருக்கையில் தோன்றியது – சாதாரணமாகவே தமிழ் திரைப்பட நாயகர்களுக்கு வேலை spying தானோ?

பின் குறிப்பு #2 – பதிவின் தலைப்பை கேள்வியாகவே பாவித்தால் – பதில் – நானே தான்.

  •