Reading view

கார்காலக் குறிப்புகள் - 95

 *நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி**********எழுதுவதால் அல்லது ஒரு விடயத்தைப் பதிவு செய்வதால் என்ன பயன் என அடிக்கடி கேட்கப்படுவதுண்டு. எழுத்தை விட செயற்பாட்டில் இருப்பது என்பது கடினமானது. ஆகவேதான் செயற்பாடுக் களத்தில் இருப்பவர்கள் எப்போதும் எனக்குப் பிரமிப்பைத் தருபவர்கள். என்னால் ஒருபோதும் அப்படி களச்செயற்பாட்டில் ஈடுபடமுடியாது. அதற்கு ஓர் அர்ப்பணிப்பும், தொடர் தோல்விகளைகளைத் தாங்கும்

  •  

கார்காலக் குறிப்புகள் - 94

 ராப் பாடகர் வேடன் குறித்து நானொரு பதிவை எழுதியபின் நண்பரொருவர் மாயா, வேடன், வாகீசன் இராசையா போன்றவர்களின் பாடல்களில், எப்படி  ஈழப்போராட்டம்/ தமிழ் அடையாளம் வெளிப்படுகின்றது என்பதைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமெனக் கேட்டிருந்தார். சொன்னது மட்டுமில்லாது வாகீசன் இராசையா, இரத்தி அதித்தன் போன்றவர்களின் படைப்புக்களையும் என் பார்வைக்காய் அனுப்பியிருந்தார். அப்படியொரு கட்டுரை எழுதினால் அது

  •  

கார்காலக் குறிப்புகள் - 91

 Tourist Family திரைப்படம் வந்தவுடனேயே பார்த்திருந்தேன். எந்த ஒரு படைப்பும் - அது இலக்கியமாக இருந்தாலென்ன, திரைப்படமாக இருந்தாலென்ன- அது முதலில் நம்மை உள்ளிழுக்க வேண்டுமென நினைப்பேன். அப்படி இருந்தால்தான் நாம் அந்தப் படைப்பைப் பேச எம்மை உந்தித் தள்ளும். நம்மை வெளியில் தள்ளும் திரைப்படங்களை (அண்மைய உதாரணம் Retro) எளிதாக நாம் கடந்து போய்விடுவோம்.அந்தவகையில் Tourist Family நம்மை உள்ளிழுத்து

  •  

கார்காலக் குறிப்புகள் - 90

 கனடாப் பாராளுமன்றத் தேர்தல் - 2025*******நேற்று நடந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் கனடாவில் உருவாக்கியிருக்கின்றது. கனடாவில் லிபரல், பழமைவாதக் கட்சி, புதிய ஜனநாயக் கட்சி, புளொக் குயூபெக்குவா என்பவை தேர்தலில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளாக இருக்கின்றன. அரசியல் நிலைப்பாட்டில் லிபரல் - Center, பழமைவாதக் கட்சி - Right, புதிய ஜனநாயக் கட்சி - Left என்று

  •  

கார்காலக் குறிப்புகள் - 89

 நேற்று கா.சிவத்தம்பியின் 'நவீனத்தவம் - தமிழ் - பின்நவீனத்துவம்' என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். இந்நூல் தமிழில் எப்படி நவீனத்துவம்/பின்நவீனத்துவம் இருக்கின்றது என்பது மட்டுமில்லாது, காலனித்துவ காலத்தில் எப்படி இலக்கியம்/அரசியல் முகிழ்கிறது என்பது பற்றியும் பேசுகின்றது. அதில் சிவத்தம்பி கவனப்படுத்துப்படும் ஒரு விடயம், 'பிரம்மஞான சபை' (Theosophical Society). இதிலிருந்து இரண்டு வேறு

  •  

கார்காலக் குறிப்புகள் - 88

 Paris Review,  2025-Spring Issueஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, நஸீர் றபாவின், 'போர் முடிந்துவிட்டது' (The War Is Over) கவிதைகளைக் கண்டேன். நஸீர் 1963 காஸாவில் பிறந்தவர். இந்த கவிதைகள் இப்போது பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தத்தை மட்டுமில்லை, என்னைப் போன்ற போருக்குள் வாழ்ந்த அனைவருக்கும் அதன் கொடுமைகளை நினைவுபடுத்துபவை.  இதைத் தமிழாக்குவதன் மூலம் ஒருவகையில் நானெனது யுத்தகால

  •  

கார்காலக் குறிப்புகள் - 87

 இலக்கியம் போல அரசியல் எனக்கு நெருக்கமானதில்லை. ஆனால் இலக்கியம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அரசியலுள்ளது என்கின்ற தெளிவு இருக்கின்றது. கனடாவில் தேர்தல்கள் நடைபெறுகின்றபோது, பெரும்பாலும் வாக்களித்து என் 'ஜனநாயக் கடமை'யை செய்பவன். மேலும் வெளிப்படையாக, இங்குள்ள ஒரளவு இடதுசாரி சார்புள்ள 'புதிய ஜனநாயகக்கட்சி'யை (New Democratic Party) ஆதரிப்பவன் எனச் சொல்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இருந்ததில்லை.

  •  

கார்காலக் குறிப்புகள் - 86

 கடந்த சில நாட்களாக என் பால்யகால பள்ளி நண்பர்களோடு நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன். இங்கிலாந்தில் இருந்து வந்த ஒரு நண்பனால் இது சாத்தியமாயிருந்தது. இனியதான பாடசாலை நாட்கள் இல்லாது நம் வாழ்க்கையைக் கடந்து வந்திருப்போமா என்ன? மகிழ்வும், துயரமுமான நினைவுகள் நமக்கிடையில் நுரைத்துத் ததும்பிக் கொண்டிருந்தன.அதுவும் நாம் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பாடசாலையில் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது

  •  

கார்காலக் குறிப்புகள் - 85

 ஓர் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கின்றீர்கள். அந்த எழுத்து உங்களை அப்படி வசீகரிக்கின்றது. நல்லதொரு படைப்பைத் தந்த அந்த  எழுத்தாளருக்கு நன்றி சொல்ல விரும்பும்போது நீங்கள் என்ன செய்வீர்கள். நான் சங்கரியின் நாவலை வாசித்து முடித்த மகிழ்ச்சியில், அவரின் எழுத்துக்களில் எதையாவது தமிழாக்க வேண்டுமென விரும்பினேன். அதுவே இந்தக் கட்டுரை. சங்கரி தனது நாவல்கள், தான் கட்டியமைக்க விரும்பும்

  •  

கார்காலக் குறிப்புகள் - 84

 ஒரு குடும்பத்தின் மூன்று மகன்கள் தாயின் இறுதிக்கணங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து கூடுகின்றார்கள். அதில் ஒரு மகன் இங்கிலாந்தில், 20 வருடங்களுக்கு மேலாக ஊருக்குத் திரும்பாமல் இருக்கின்றார். அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை, குடும்பத்தின் விருப்புக்கு எதிராகத் திருமணம் செய்தவர். இப்போது அவர் தனது மனைவியோடும், பிள்ளைகளோடும் முதன்முதலில் திரும்பி வந்திருக்கின்றார். அம்மா நாராயிணி உயிரோடு

  •  

கார்காலக் குறிப்புகள் - 83

 சங்கரி சந்திரனின் ' சூரியக் கடவுளின் பாடலை' (Song of the Sun God) நேற்று முழுதுமாக இருந்து வாசித்து முடித்தேன். கிட்டத்தட்ட 400 பக்கங்கள் இருக்கும். ஏற்கனவே சிலமுறை வாசிக்கத் தொடங்கி கொஞ்சப் பக்கங்களிலேயே நிறுத்திவிட்டிருந்தேன். தொடர்ச்சியாக ஒரே பின்னணியில் கதைகளை வாசிப்பது ஒருபுறம் அலுப்படைய வைக்கின்றதென்றால், இன்னொருபுறம் போரின் பின்னணியில் சொல்லப்படும் கதைகளினால் 'கடந்தகால உளவடுக்கள்'

  •  

கார்காலக் குறிப்புகள் - 82

 பால்கியின் இந்தநேர்காணலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் சிம்பொனியை மட்டுமில்லை, ஓர் இரசிகர் எப்படி ஒரு மேதையைக் கொண்டாட முடியும் என்பதற்கும் நல்லதொரு உதாரணமாக இதைச் சொல்லலாம். எவ்வளவு அழகாக இளையராஜா தனக்கு இசையினூடு தந்து கொண்டிருப்பவற்றை மட்டுமின்றி, இசையில் இருந்து வெளியே வரும்போது அவ்வப்போது பிறர் குற்றஞ்சாட்டும் அவரின் 'Arrogance' ஐ எப்படி நாம் புரிந்துகொள்வதைப் பற்றியும்

  •  

கார்காலக் குறிப்புகள் - 81

 காலம்' இதழில் மு.பொன்னம்பலம் (மு.பொ) குறித்து என்.கே.மகாலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருப்பார். 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சூழவிருந்த தீவுகளிலிருந்து மக்கள், இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் வெளியேறத் தொடங்கினார்கள். அந்தக் காலத்தில் நெடுந்தீவு,புங்குடுதீவு, நயினாதீவு போன்ற பல தீவுகளில் வயதானவர்களும், நோயுற்றவர்களும் மட்டுமே எஞ்சி நின்றார்கள். இலங்கை இராணுவம் அந்தத் தீவுகளை

  •  

கார்காலக் குறிப்புகள் - 80

 ஒருவன் ஓவியம் வரைவதில் பெருவிருப்பமுடையவனாக இருக்கின்றான். நள்ளிரவில் விழித்திருந்து நிலவையும், விடிகாலையில் துயிலெழுந்து சூரியனையும் வரைய விரும்பும் அவன் காதலை தனது 20களில் சந்திக்கின்றான். அந்தக் காதலி தற்செயலாக கர்ப்பமாக அவளையே மணம் புரிகின்றான். அவனது பெற்றோருக்கு அவன் இப்படி இளமையின் தொடக்கத்திலே குடும்ப வாழ்க்கைக்குள் நுழைகின்றான் என்பதில் கவலை இருக்கின்றது. காலம் நகர்கின்றது. இவன்

  •  

கார்காலக் குறிப்புகள் - 79

 அண்மையில் எழுதிய 'அறமெனப்படுவது யாதெனில்' என்ற கட்டுரைக்கு நண்பரொருவர் தனிப்பட்டு 'I have a mixed different perspective on the topic you've written, but it's good to read your post to have an idea of other side' என்று சொல்ல, அது குறித்து நம்மிடையே ஓர் சிறு உரையாடல் போயிருந்தது. இறுதியாக நான் சொன்னது, 'இது ஒரு சிக்கலான உரையாடல். எவரும் இதுதான் சரியான பக்கம் என்று அவ்வளவு எளிதாகத்

  •  

கார்காலக் குறிப்புகள் - 78

 சமகாலத்தில் எழுதும் முன்னோடி படைப்பாளிகளில் அனைத்துப் படைப்புக்களையும் வாசித்திருக்கின்றேன் என்றால் ரமேஷ் பிரேதன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு சிலரின் பெயர்களைச் சொல்வேன். எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், துயில் போன்ற நாவல்களுக்குப் பிறகு வந்தவை அவரின் தொடக்க கால நாவல்களுக்கு இணை வைக்கக்கூடியவை அல்ல என்பது வாசிப்பு. ரமேஷ்-பிரேம் இரட்டையர்களாக இருந்து எழுதும்போது

  •  

கார்காலக் குறிப்புகள் - 77

அறம் எனப்படுவது யாதெனில்..*********1. நேற்று ஒரு கர்நாடக இசை நிகழ்வொன்றை காணொளியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாடகர்கள் இளையராஜாவின் பாடல்களை கர்நாடக மரபுக்குள் கொண்டுவந்து பாடிக் கொண்டிருந்தார்கள். பனிக்கால குளிர் இரவில் அது வேறு மாதிரியான உணர்வைத் தர, அதை முகநூலில் பகிர்ந்துகொள்வோமென நினைத்து, 'சனாதனத்தின் கதவைத் தட்டியுதைத்த இளையராஜா' என்றெல்லாம் எழுதிக்கொண்டிருக்கையில், இந்தப்

  •  

கார்காலக் குறிப்புகள் - 76

 யுவான் ரூல்ஃபோவின் 'தங்கச் சேவல்' (The Golden Cockerel) ********************* 1. எனது சிறுவயதுகளில் எங்களின் மாமா ஆட்டுக் கிடாய்களை வளர்த்துக் கொண்டிருந்தார். அவை என்னை விட உயரமாகவும், திடமாகவும் மட்டுமின்றி, கிட்டே போனால் அதன் கொம்புகளால் என்னை முட்டி வீழ்த்திவிடும் மூர்க்கத்தோடு இருக்கும். இந்தக் கிடாய்கள் கோயில் வேள்விகளுக்கு வெட்டுவதற்கென வளர்க்கப்பட்டன என்பதை பிறகான காலங்களில்

  •  

கார்காலக் குறிப்புகள் - 75

 இசை அழைத்துச் செல்லும் பாதைகள்1.இளையராஜாவின் இசைக்கச்சேரியின் ஒரு துண்டை தற்செயலாகப் பார்த்தேன். அதில் சித்ராவும், இளையராஜாவும் 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலைப் பாடுகின்றனர். பாடலின் இடைநடுவில் இளையராஜா பாட்டைத் தவறாகப் பாடிவிடுகின்றார். அதைப் பாடி முடித்துவிட்டு, 'அனைவரும் சரியாகப் பாடிக்கொண்டிருக்கும்போது, நான் குழப்பிவிட்டேன்' என்று அவர் மன்னிப்புக் கேட்கின்றார். இரசிகர்கள் அதை ஏற்று

  •