Reading view

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான். பின்பு பல் துலக்கி, குளித்து முடித்து, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “சீக்கிரம் சாப்பிட்டு முடி அருள். இந்த இட்லியைச் சாப்பிட்டதும் வேகமாகப் பள்ளிக்குப் போகணும்” என்றார் அருளின் அம்மா. ஆனால் அருள் ஒவ்வொரு வாயாக மெதுவாக மென்று தின்று கொண்டிருந்தான்.  “பள்ளிக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு […]

Source

  •  

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான். “அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா. அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர்.  அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் […]

Source

  •  

தொலைந்து போன நரி (சிறார் கதை) – தீபா சிந்தன்

அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது. அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் […]

Source

  •  

வரலாறு உங்களுக்கு வேப்பங்காயா? – பஞ்சு மிட்டாய் பிரபு

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் பிடித்த பாடம் என்று ஒன்று இருந்தால், பிடிக்காத பாடம் என்றும் ஒன்று இருக்கும்தானே. அப்படி எனது பள்ளி நாட்களில் பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறுதான். வரலாறு பாடத்திலுள்ள வருடங்களும், வாயில் நுழையாத பெயர்களும் என்னை அதிகம் அச்சமூட்டின. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிந்ததும், நான் என் அம்மாவிடம் “அப்பாடா! இனிமேல் வரலாற்றை படிக்க தேவையில்லை. எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது” என்று கூறி மகிழ்ந்தேன். ஆனால் நான் வளர்ந்து […]
  •  

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி (சிறார் கதை) – தீபா சிந்தன்

உமருக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவன் பெற்றோரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செல்லப்பிராணி ஒன்று வாங்கிக் கேட்பதில் தவறுவதே இல்லை. “அம்மா, அம்மா, எனக்கு ஒரு நாய்க்குட்டி வாங்கித் தரீங்களா?” என்று அவன் கேட்காத நாளே இல்லை எனலாம். ஆனால், அவன் பெற்றோரோ, “நாய்க்குட்டிலாம் வேணாம், உமர். செல்லப்பிராணிகளைப் பாதுகாத்து வளக்குற அளவுக்கு நமக்கு எங்க நேரம் இருக்கு? அதுவும் நாய்க்குட்டி வளக்குறது எல்லாம் ரொம்ப சிரமம். அதுக்குத் தினமும் சாப்பாடு கொடுக்கணும், வெளிய நடக்கக் கூட்டிட்டுப் […]

Source

  •