Reading view
மீளுரு - மணல் மகுடி குழுவின் நாடகம்!
"மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்”
சிறுகதைப் போட்டி
சிறுகதைப் போட்டி

சிறுகதைத் தொகுப்பு போட்டி

க்ளிக் நாவல் வெளியீடு
சிறார் இலக்கியக் கருத்தரங்கம் 2025 – தேர்வான கட்டுரைகளின் விவரம்
வணக்கம்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த “சிறார் இலக்கியக் கருத்தரங்கம் – 2025” நிகழ்வும் வரும் ஏப்ரல் மாத இறுதியில் நெல்லையில் நடக்க இருக்கிறது. கருத்தரங்கிற்கு பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் கீழ்க்கண்ட கட்டுரைகள் தேர்வாகியுள்ளன என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம். கட்டுரையாளர்கள் அனைவரும் எங்களது வாழ்த்துகள்.
நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எங்களது நன்றி.
தேர்வான கட்டுரைகள், வரும் நெல்லையில் நடக்கவிருக்கும் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு விரைவில் அவை எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதையும் அன்புடன் தெரிவிக்கிறோம்.
நெல்லை நிகழ்விற்குத் தேர்வான கட்டுரையாளர்கள் நேரடியாகப் பங்குபெற்று கட்டுரைகளை வாசிக்க அன்புடன் அழைக்கிறோம்.
தேர்வான கட்டுரைகளின் விவரம்:
தலைப்பு: அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்
- பெ.சசிக்குமார்
- ந. பெரியசாமி
தலைப்பு: சிறார் இலக்கியத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு
- லதா அண்ணாதுரை
தலைப்பு: கலைகள்
- வசந்தன் சிவம்(கலையில் விரியும் குழந்தை மனம்)
- சிவபஞ்சவன்(அரங்கம் வழி மாற்றுக் கல்வி)
தலைப்பு: சிறார் இலக்கியம் பள்ளிக்குள் செல்வதில் உள்ள சிக்கல்கள்,
- முனைவர் அ. இந்துமதி
- வாகைசூடி.
தலைப்பு: வரலாற்றின் திசைகளில் சிறார் இலக்கியம்
- துரை. அறிவழகன்
தலைப்பு: சிறார் இலக்கியத்தில் விமர்சன இலக்கியம்
- சுகுமாரன்

நன்றி,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம்
இயற்கையை நேசியுங்கள்
1964ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற புகழ்பெற்ற அமெரிக்க மனித உரிமைப் பாதுகாப்புத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங்-இடம் ஒருமுறை "நீங்கள் நாளை இறந்துபோகப் போவதென அறிந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அவர் பதில்: "ஒரு மரம் நடுவேன்". மரம் வாழ்வின் குறியீடு. "நாம் மரங்களை நடுகிறோம், அதன் குளிர்ந்த நிழலில் அடுத்த தலைமுறை இளைப் பாறுவார்கள்" என்கிறது ஒரு பழமொழி. சீனர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: "நிழல்தர மரமில்லையா? சூரியனைக் குற்றம் சொல்லக்கூடாது, உன்னைத் தான் சொல்லவேண்டும்". மரங்கள் இயற்கையின் பகுதி, மனிதனின் ஊட்டத்தின் மூலப் பொருள். ஆனால் இயற்கை மரங்கள் மட்டுமல்ல, அதற்கு மேலும்தான். ஞாயிறு, நிலவு, நட்சத்திரங்களை உள்ளடக்கியுள்ள வானம்; கடல்கள், ஏரிகள், ஆறுகள், ஓடைகள், அருவிகள்; மலைகளும் குன்றுகளும்; நாம் வசிக்கும் இந்த மண்; நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று; நம்மிடையே வாழும் உயிரினங்கள்-இவை யாவும் நாம் வாழ்வதை அனுமதிக்கின்ற, நம் வாழ்க்கையைத் தொடரவிடுகின்ற இயற்கைக் கூறுகள். ஆகவே இயற்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் நம் மற்றும் நம் எதிர்காலச் சந்ததி களின் வாழ்க்கையை நேசிப்பதும் பாதுகாப்பதும் போன்றதுதான். ஆனால் துரதிருஷ்டவசமாக, நம்மை எவ்விதம் மாற்றிக்கொள்வது என்று அறிவதற்கு முன்னா லேயே இன்று நம்மில் பலர் மிகவேகமாக இயற்கைச் சூழலை மாற்றிவிட்டார்கள். இயற்கைக்கு அழகாக இருக்க நம் உதவி தேவையில்லை, நமக்குத்தான் இயற்கையின் உதவி தேவை. நாம் வாழும் இந்த உலகமாகிய கிரகத்தின் எதிர்காலம்தான் இன்று மனித இனத்தை எதிர்நோக்கியிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை. ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன்னால், ஒரு பறவையைப் பிடிப்பதற்கு முன்னால், ஒரு குன்றினைத் தரைமட்டமாக்குவதற்கு முன்னால் நாம் நினைவில் வைக்கவேண்டியது இது: "இயற்கை தான் நமது வாழ்க்கை".
ஒரு நாட்டின் தலைவர் ஒருமுறை கூறினார்: "மனிதன் நிலவுக்குப் போய்விட் டான், ஆனால் ஓர் எரிநிறப்பூக்கொண்ட மரத்தையோ, ஒரு பாடும் பறவையையோ எப்படி உருவாக்குவதென்று இன்னும் அவனுக்குத் தெரியாது. இதே மரங்களையும் பறவைகளையும் எதிர்காலத்தில் அவாவுவதற்குக் கொண்டுசெல்கின்ற, மாற்ற முடி யாத தவறுகளை நாம் செய்யாமல் நம் நாடுகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்".
மனித உறவுகளைப் போல, இயற்கைமீதான நமது நேசமும் ஆழமாகவும் காலங்காலத்துக்குத் தொடர்வதாகவும் இருக்கவேண்டும். இங்குதான் நாம் ஆஸ்திரே லியப் பழங்குடி இனத்தவர்களிடமிருந்து-அவர்கள்தான் உலகின் மிகப் பழமையான மிக நீண்ட கலாச்சாரத்தை உடையவர்கள்-கற்கவேண்டி யிருக்கிறது. ஞானத்திலும் ஆழ்நோக்கிலும் வளமான ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியான அவர்கள், அந்தப் பழங்குடியினர், இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலுள்ள நெருக்க மான தொடர்பின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள்-"நாங்கள் மரங்களை வெட்டுவ தில்லை, பட்ட மரங்களைத்தான் பயன்படுத்துகிறோம்."
“விண்ணுலகும் பூமியும் நானும் ஒன்றாய் வாழ்கிறோம்” என்று ஒரு டாவோ பொன் மொழி சொல்கிறது. டாவோ போதனையின்படி, இயற்கையின் எல்லாக் கூறுகளுக் கிடையிலும் ஒருங்கிசைவு வேண்டும். அதனால்தான் சீன நிலத்தோற்ற ஓவியங்களில் நாம் ஆறுகளையும் ஏரிகளையும் மலைகளையும் மட்டுமே காணமுடிகிறது, மனிதர்கள் அதற்குள் ஆதிக்கம் செய்வதில்லை.
இயற்கையை நேசி, அதனுடன் ஒருங்கிசைவுடன் வாழ், அதைப் பாழாக்கவோ அழிக்கவோ செய்யாதே.
வாழ்க்கை என்பது என்ன? அது இரவில் ஒளிரும் ஒரு மின்மினிப்பூச்சியின் ஒளிவீச்சு...குளிர்காலத்தில் ஓர் எருமை விடும் மூச்சு...சூரியமறைவின்போது புல்லின் மீது விரைந்து சென்று மறையும் ஒரு நிழல்.
-அமெரிக்க இந்தியப் போர்வீரர்.
இயற்கை
பூமியிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது, ஒவ்வொரு நோயை குணப்படுத்தவும் ஒரு மூலிகை இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது.
-அமெரிக்க இந்திய முதியவர் ஒருவர்
நீரற்ற பாலை, நோய், பனிப்பொழிவுச் சரிவுகள், இன்னும் ஆயிரம் கடுமையான, வீழ்த்தக்கூடிய புயல் வெள்ளங்களிலிருந்தும் இந்த மரங்களைக் கடவுள் பாதுகாத்திருக்ஆறார், ஆனால் முட்டாள்களிடமிருந்து அவரால் காக்க இயல வில்லை.
-ஜான் மூர்
இயற்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை; நம்மை நாம்தான் எப்போதும் ஏமாற்றிக்கொள்கிறோம்.
-ரூஸோ
காடுகளில் விலங்குகள் குறைந்துவருகின்றன. ஆனால் அவை நகரங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளன.
-மகாத்மா காந்தி
பூமியின் அழகைப் பற்றிச் சிந்திப்பவர்கள், தங்கள் உயிர் இருக்கும்வரை நீடிக்கக் கூடிய வலிமை இருப்புகளைக் கண்டறிகிறார்கள்.
-ரேச்சல் கார்சன்
தீபாவளி
“நான் சிரித்தால் தீபாவளி” ஆம், பலபேருக்கு, அவர்கள் சிரிக்கின்ற–மகிழ்ச்சியோடிருக்கின்ற ஒரு நாள் எதுவாக இருப்பினும் அதுதான் தீபாவளி.
நான் தீபாவளியைக் கொண்டாடும் வழக்கமில்லை. உண்மையில் தீப-ஆவளி, அல்லது தீப வரிசை என்றால் இன்னும் சில நாட்கள் கழித்துவரப்போகும் கார்த்திகை தீபம்தான். கார்த்திகையைச் சங்ககாலத்திலிருந்தே கொண்டாடி வருகிறோம். இடையில் “நான்தான் தீப வரிசை” என்று எந்தக்காலத்தில் இந்த வடநாட்டு தீபாவளி புகுந்தது என்று தெரியவில்லை. அநேகமாக நாயக்கர் காலத்தில்தான் நிகழ்ந்திருக்கக்கூடும்.
நரகாசுரன் என்பதையும் நான் நம்புவதில்லை. நம் கண்ணெதிரே ஆயிரம் நரகாசுரர்கள் இருக்கும்போது கற்பனையில் ஒரு நரகாசுரன் எதற்கு? நரக அசுரன் என்றால் அப்புறம் சுவர்க்க அசுரன் ஒருவன் இருந்தானா?
இதை வடநாட்டவர்கள் தாண்டிராஸ் என்று ஐந்துநாள் கொண்டாடுகிறார்கள். என்ன என்ன கட்டுக்கதைகளோ அதன் பின்னால்.
என்னைப் பொறுத்தவரை வருடத்தில் ஒருநாள் நான்கரை ஐந்து மணிக்குள் குளித்துவிட்டு ஏழரை மணிக்கு போளி வடை தோசை என்று சாப்பிடுவது நன்றாகத்தான் இருக்கிறது. இனிப்புகள் வாங்குவது பெரும்பாலும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்களுக்காக, நண்பர்கள் உறவினர்கள் வந்தால் தருவதற்காக.
என் சின்ன வயதில் எங்கப்பாவும் நாங்களும், அவர் இரு தம்பியர் குடும்பத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடிய பல தீபாவளி தினங்கள் ஞாபகம் இருக்கின்றன. அந்தக் கூடுகை, சிரிப்பு, மகிழ்ச்சி இருந்ததே, அதுதான் தீபாவளி. ஆனால் தீபாவளி என்றாலே பெரும்பாலும் மழையும் சேர்ந்தே ஞாபகம் வரும். நான் கொண்டாடிய மழையற்ற தீபாவளிகள் குறைவு. எல்லாரும் பட்டாசு வாங்கி வைத்துக் கொண்டு முழித்துக்கொண்டிருப்போம்.
ஹ்ம்…ம்…இதெல்லாம் பழைய காலம். நான் பெரியவனாகி சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு குடும்பத்தோடு, என் தம்பி தங்கையரோடு கொண்டாடிய தீபாவளிகள் மிகவும் குறைவு. காரணங்கள் பல.
தீபாவளி என்றாலே ஜாலி என்றுதான் அர்த்தம்! தீபாவளி கொண்டாடக்கூடாது என்று தமிழ்நண்பர்கள் பலர் சொல்கிறார்கள்…ஆனால் இந்தக் குதூகலம், சிரிப்பு, மகிழ்ச்சி, ஒன்று சேர்தல் இதற்காகக் கொண்டாடுங்கள் ஐயா…ஏன் நரகாசுரனை நினைக்கிறீர்கள்? என்னைப் பொறுத்தவரை ஒரு இந்துப் பண்டிகையாக தீபாளியை ஒரே ஓர் ஆண்டுகூடக் கொண்டாடியதில்லை. என் வீடும் அப்படித்தான். அது ஒரு மகிழ்ச்சித் திருநாள், அவ்வளவுதான். பிள்ளைகள் பட்டாசு வெடிக்க, மத்தாப்பு கொளுத்த, இல்லாதோர் புத்தாடை உடுத்த, ஆண்டில் ஒருநாளாவது பலபேர் இனிப்புகள் ருசிக்க…
திருச்சியில் இருந்தவரை தீபாவளிக்கு முன்னாட்களில் ஒரு நாள் சின்னக் கடைத் தெருவுக்குச் சென்று வருவோம். கூட்டம் தள்ளும். தப்பிப் பிழைத்துவருவது கடினம். (சென்னை ரங்கநாதன் தெரு அனுபவம் எனக்கு இல்லை.) ஒவ்வொன்றாக ஆண்டுகளும் அனுபவங்களும் கடந்து செல்கின்றன…
இப்போது 73 முடிந்துவிட்டது. இன்னும் எத்தனை தீபாவளிகளைப் பார்க்கப் போகிறேனோ நான்… மீண்டும் சொல்கிறேன், கட்டுக் கதைகளை, புராணங்களை விட்டு விடுங்கள்…”நாம் அனைவரும் சிரிக்கும் நாளே தீபாவளி!”
Tamil Story Telling at Manor Park Library, London (Nov 16 11am)
இலண்டனில் தமிழ்ப் பிள்ளைகள் வாசிக்கும் புத்தகங்கள் : சிறு பட்டியல்
நூல் வெளியீடு : நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம் (லண்டனில்)
அனைவரும் வாரீர்!
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், வரும் 04/01/2025(சனி) அன்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 25 சிறார் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. சென்னையிலுள்ள நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.

சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு
எழுச்சித் தமிழர் இலக்கிய விருது
எழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள்

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி - 2025
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு
ஹைக்கூ கவிதைப் போட்டி - 2025

நூல் விமர்சனப் போட்டி
நூல் விமர்சனப் போட்டி- 2025
