Reading view

அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது- கே.சி.நாராயணன்

May 15, 2025 அழகியல் விமர்சனத்தின் ஒரு விசேஷமான இயல்பை அல்லது எல்லையை சொல்லவேண்டியிருக்கிறது. அழகியல் விமர்சனத்தால் ஒரு படைப்பின் கலைத்தன்மையை நிறுவமுடியாது. அது தன் கலை அனுபவத்திலிருந்து சில அவதானங்களை முன்வைக்கிறது, வாசகனுக்கு அதை பகிர்கிறது. அந்த அனுபவத்தை கொஞ்சமேனும் ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே அதனால் பேசமுடியும். உதாரணமாக, நான் எம்.டி.ராமநாதன் நல்ல பாடகர் என்று சொல்லி, அவரின் தனித்தன்மைகளாக நான் உணர்ந்ததை சொல்கிறேன். நீங்கள் அந்த தனித்தன்மைகளில் சிலவற்றை ஏற்கிறீர்கள், சில தனித்தன்மைகளை மறுக்கிறீர்கள் என்றால் நாம் உரையாடலாம். மாறாக, நீங்கள் எம்.டி.ராமநாதன் பாடகரே அல்ல என்று சொன்னால் நம்மால் உரையாடவே முடியாது. உங்களிடம் எம்.டி.ராமநாதன் கலைத்தன்மைகொண்டவர்தான் என்பதை  சொல்லி நிறுவ அழகியல்விமர்சனத்தால் முடியாது.
  •  

கவிதையின் கடமைகள்- கல்பற்றா நாராயணன்

March 25, 2025 மனிதன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ”உணவு அல்லாத எதையும் நம்மால் உட்கொள்ள முடிவதில்லை” என்ற குஞ்ஞுண்ணியின் கவிதைவரி சுட்டுவது மொழி சார்ந்துதான் இன்னும் முக்கியமனாதாக ஆகிறது. நாம் உள்ளுர உணர்வதை மொழி அனுமதிக்கும் குறுகிய எல்லைக்குள் மட்டுமே நம்மால் வெளிப்படுத்த முடிகிறது. மொழியின் எல்லையால் பத்தி தாழ்த்தப்பட்ட பாம்புபோல நிறைவின்மைகொண்ட சில மனங்கள் மொழியில் நிகழ்த்தும் எல்லைமீறலாக கவிதையை நாம் யோசித்து பார்க்கலாம்.
  •