Reading view

முனைவர் மு. இளங்கோவனின் இணைய ஆற்றுப்படை, தொடரும் தொல்காப்பிய மரபு நூல்கள் வெளியீட்டு விழா! தொல்காப்பிய அறிஞர்களுக்குப் பாராட்டு விழா!

 


நாள்: 18.04.2025, வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி - 8.30 மணி 

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி

தமிழ்த்தாய் வாழ்த்து:

தலைமை: முனைவர் வி. முத்து, தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

முன்னிலை: பேராசிரியர் மு.பா. இராமானுசம் I திரு. தூ. சடகோபன் I பாவலர் ஆறு. செல்வம் I I முனைவர் உரு. அசோகன் I  பேராசிரியர் இரா. கோவலன் I

நூல்கள் வெளியீடு: மாண்புமிகு பேரவைத் தலைவர் 

ஏம்பலம் திரு அரங்க. செல்வம்

நூலின் முதல்படி பெறுதல்: திரு. க. குணத்தொகையன் I “தாமரைத்திரு” வில்லியனூர் கி. முனுசாமி I திரு. அ. சக்திகுமார்  I பேராசிரியர் செ. பெரியாண்டி I திரு. மு. அருள்செல்வம் I திரு. செ. திருவாசகம்

விருதுகள் வழங்கி, அருளாசியுரை: 

தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்,

இருபதாம் பட்டம், மயிலம் பொம்மபுர ஆதீனம்

பாராட்டுப்பெறும் தொல்காப்பிய அறிஞர்கள்

“இலக்கிய மாமணி” அறிஞர் இரா. கலியபெருமாள், தஞ்சாவூர்

பேராசிரியர் ச. ஆரோக்கியநாதன், புதுச்சேரி

பேராசிரியர் பொ. நா. கமலா, சிவகாசி

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன், சிங்கப்பூர் 

நூல்கள் அறிமுகவுரை

பேராசிரியர் பா. பட்டம்மாள் I மருத்துவர் க. கலைவேந்தன்

நன்றியுரை: பேராசிரியர் வேல். கார்த்திகேயன்

அழைப்பின் மகிழ்வில்

உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரி – 605 003

தொடர்புக்கு: +9442029053






  •  

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் வெளியீடு…

 


தமிழ் அன்பர்களுக்கு! வணக்கம். தொடரும் தொல்காப்பிய மரபு என்ற தலைப்பில் என் நூல் அச்சாக்கம் கண்டு, இன்று என் கையினுக்கு வந்துள்ளது. இந்த நூலில் 15 கட்டுரைகள் உள்ளன. முதல் ஐந்து கட்டுரைகள் தொல்காப்பியம் சார்ந்தும், மற்ற கட்டுரைகள் வேறு பொருண்மைகளிலும் உள்ளன. இக்கட்டுரைகள் யாவும் பல்வேறு ஆய்வரங்குகளில் படிக்கப்பட்டவை; நண்பர்களின் நூல்களுக்கு அணிந்துரைகளாக வரையப்பட்டவை. இத்தகு ஆய்வு நோக்கிலான கட்டுரைகளை இணையத்தில் பதிவதில்லை. நூல் வடிவில் இவற்றைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சி. 

தொடரும் தொல்காப்பிய மரபு நூல் 2025 சனவரி 25, 26 (சனி, ஞாயிறு) நாள்களில் மும்பையில் திருவாளர் சு.குமணராசன் ஐயாவின் தலைமையில் இயங்கும் இலெமுரிய அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள தொல்காப்பியத் திருவிழாவில் - தொல்காப்பியக் கண்காட்சியில் அறிஞர்களின் முன்னிலையில் வெளியீடு காண உள்ளது. நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். 

நூல்: தொடரும் தொல்காப்பிய மரபு

ஆசிரியர்: முனைவர் மு. இளங்கோவன்

பக்கம்: 176

விலை 350 உருவா

தொடர்புக்கு: [email protected]

செல்பேசி, புலனம்: +91 9442029053

  •